Pages - Menu

Tuesday 1 December 2015

திருவருகைக்காலம் 3ஆம் ஞாயிறு
13/12/2015
செப் 3 : 14 - 17
பிலிப் 4 : 4 - 7
லூக் 3 : 10 -18
மகிழ்விப்போம் மகிழ்வோம்
‘சந்தோ­ம் பொங்குதே, சந்தோ­ம் பொங்குதே, சந்தோ­ம் என்னில் பொங்குதே’ என்ற பாடலை நண்பர் ஒருவர் இசைத்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் மகிழ்வரசன். பெயரில் மட்டும்தான் மகிழ்ச்சி. வாழ்வில் அவருக்கு எப்போதும் வியாகுலம்தான். எனவே அவருடைய நண்பர்கள் அவருக்கு செப் 15இல் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள். ஏனெனில் அன்றுதான் வியாகுல அன்னையின் திருநாள்.

அவரைச் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான செயல். ஆனாலும், அவர் ஒருநாள் கலகலப்பாக இருந்தார். அவருடைய முகம் மலர்ந்திருந்தது. மேலே காணும் பாடல் வரிகளை மனதுக்குள்ளே அவர் ரம்மியமாக்கிக் கொண்டு இருந்தார். அதைக்காண நேர்ந்த அவருடைய நண்பருக்கு ஒரே வியப்பு. அவரிடம் என்ன இன்றைக்கு ஒரு வினோதமான காட்சியைக் காணுகின்றேனே. இன்று மகிழ்வின் ஞாயிறு என்பதாலா? மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாய்? என்று கேட்டார். முன்னவர் சொன்ன காரணம் நண்பரை மகிழ்வில் ஆழ்த்தியது. அவர், நான் எவருக்கும் சாதாரணமாக கடன் கொடுப்பதில்லை. ஒரு நபர் என்னிடம் கடனாக ஒரு தொகையை கேட்டார். என்னை மிகவும் வற்புறுத்தினார். குறிப்பிட்ட நாளில் திருப்பிக் கொடுத்து விடுவதாக வாக்குக் கொடுத்தார். அவர் வரவா போகிறார்? திருப்பித் தரவாப் போகிறார்? என்ற சந்தேகம் எழுந்தது. எனவே அவர் கேட்டதில் நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து அவரை அப்புறப்படுத்தி விட்டேன். ஆனால் என்ன ஆச்சரியம்? என்ன அற்புதம்? அவர் சொன்னது போலவே இன்று மகிழ்வின் ஞாயிறன்று கொண்டுவந்து முழுத்தொகையையும் மொத்தமாகக் கொடுத்து ஏமாந்து போனத் தொகையயல்லாம் சேர்ந்து வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனவே எனக்கு மகிழ்ச்சி பொங்காமலா இருக்கும்? என்று பதிலுரைத்தார். அவரவர் வாய்மையாக வாழ்ந்தால் பிறருக்கு எவ்வளவு மகிழ்ச்சிப் பார்த்தீர்களா? நேர்மையாக நடந்துக் கொண்டால் பிறர் முகத்தில் மகிழ்ச்சி நடனம் புரிவதைக் கண்டீர்களா?

இந்த நேர்மையையும் வாய்மையையும் இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் வலியுறுத்துகிறார். திருநூல் மகிழ்வின் நூல். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செப்போனியா யூதா நாட்டு மக்களை மகிழ்வுறச் சொன்னார். காரணம் சமாரியாவுக்கு வந்த வீழ்ச்சி, கி.மு 722இல் இஸ்ரயேல் தலைநகர் சமாரியா அசீரியரின் கையில் வீழ்ந்தது அது யூதாவுக்கு நேரிடவில்லை. ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளி வைத்து விட்டார். பகைவர்களை அப்புறப்படுத்தி விட்டார். அவர் உன் நடுவில் இருக்கிறார். எனவே மகிழ்ச்சியால் ஆர்ப்பரி (செப் 3 : 14 ‡ 17) என்று மகிழ்வின் விதைகளை இறைவாக்கினர் தூவினார். இறைவனோடு இணைந்து என்றும் மகிழ்ந்திருங்கள் என்று இரண்டாம் வாசகத்தில் பிலிப்பியருக்கு ஊக்க மருந்துக் கொடுத்தார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் போதனையைக் கேட்ட மக்கள் மனமாறினர். மனமாற்றம் மகிழ்வின் செய்தியாக நற்செய்தி  நூல் நவில்கிறது. மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து இறைவனின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15 : 10)
மனமாற்றத்தின் அடையாளங்களாக யோவான் அறிவித்த செயல்முறைகள் :

1. பகிர்வு : இரண்டு அங்கி வைத்திருப்பவர் இல்லாதவரோடு பகிரட்டும். உணவு உடையவரும் அவ்வாறே செய்யட்டும் (லூக் 3 : 11).

2. நேர்மை : குறிப்பிட்ட தொகைக்கு மேல் எதையும் தண்டாதீர்கள்.  இது வரிதண்டுவோருக்கு வழங்கப்பட்ட செய்தி. எவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்க வேண்டாம். இது படைவீரருக்கான எச்சரிக்கை (லுக் 3 : 12,14).

3. மீட்பரின் வருகை : மீட்பரின் வருகைதான் மகிழ்ச்சிக்கு எல்லாம் மகிழ்வான செய்தி. மீட்பர் வருவார். மீட்பைத் தருவார். மீட்பரின் செயல்கள் நீதியும் நேர்மையும் நிறைந்தவை. மீட்பைப் பெற்ற மக்களனைவரும் மகிழ்ச்சியின் மக்களே. நாம் மீட்பைப் பெற்றுள்ளோம். எனவே மகிழ்வாக வாழ்வோம். பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post