Pages - Menu

Sunday 27 December 2015

1.2. பள்ளிப் பிள்ளைகள் நடினம், 3. கெபிக்கு முன்னால் பிள்ளைகள் செபம். 4. பெஸ்கி கலைகுழுவினரின் பெண்கள் பரத நாட்டிய நடினம் . 5. பெஸ்கி குழுவினரின் ஆண்கள் நடினம் 6. 7. பிள்ளைகளின் மாறுவேட போட்டி. 8. குலமாணிக்கம் கோவில் புதுபிக்கப்பட்ட பீடம். 9. மறைகல்வி வகுப்பில் பரிசுபெற்றப் பிள்ளைகள் 10.11. ஞாயிறு மறை கல்வி குமிழங்குழி பங்கு 12. டிசம்பர் 26 இல் நடந்த கிருஸ்துவ ஒன்றிப்பு விழா பெண்கள் நடினம்

பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 1. Vailankanni church, 2. Line of palm trees near Lalgudi, 3. church tower at Pudukottai village in Kumbakonam diocese, 4. Statue of our Lady at Vadugarpet

குடந்தை மறை மாவட்ட மேய்ப்புப்பணி மையம் முகப்பு

மறை கல்வி - குடந்தை மறைமாவட்ட பள்ளிகள் சந்திப்பு

Monday 21 December 2015

இயேசுவின் குடில்களாவோம்!

ஆசிரியர் பேனா

இயேசுவின் குடில்களாவோம்!

இயேசுவின் பிறப்பு, அது பாவத்திற்கும், சாபத்திற்கும் மறுப்பானது. ஒவ்வொரு பிறப்பும் அற்புதமாகும். பல ஆண்டுகள் கழித்து பிள்ளை பெரும் பெண்களின் உள்ள மகிழ்ச்சிக்கு ஒப்புவமை சொல்லமுடியாது. தாய்மை மானிடத்தின் விளை நிலம். ஒவ்வொரு குழந்தையையும் அவ்வளவு கவனத்துடன் வளர்த்து உலகிற்கு தருகிறார். அவ்வளவு அவள் செய்யவில்லையயனில் அவளுக்கு உள்ளம் நிறைவதில்லை. பிள்ளை தரும் சங்கடங்கள் அவளுக்கு மகிழ்வின் விதைகள். ஒரு தாயை போலவே மக்களுக்கு புதிய வாழ்வை பெற்று தருவதில் இறைவன் மிக்க ஆர்வம் கொண்டார். எனவேதான் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். நம் மக்களிடத்தில் செய்வினை, மாந்தரீகம் ஆகியவற்றில் அவ்வளவு நம்பிக்கை. குடித்து குடித்து குடல் வெந்தவனின் துயரம், செய்வினையால் வந்தது என்றுகூட நம்புகிறார்கள். இந்த சாபமான அவநம்பிக்கையை மாற்ற, மாற்று மருந்து கொடுக்கிறது இயேசுவின் பிறப்பு. தம்மையே வெறுமையாக்கினார், அடிமையின் வடிவை ஏற்றார். மனிதருக்கு ஒப்பானார் (பிலி 2 : 7). இதுதான் இயேசுவின் பிறப்பு நமக்கு கொடுக்கும் மாற்று மருந்து. தியாகம், பணிவு ஆகியவைதான், சாபத்தின் மாற்று மருந்து. நம் தீய பழக்கமெல்லாம் தியாகம், பணிவு ஆகியவைகள் வழியாக அகலும். மறைக்கல்வி பணிக்குழுவிலிருந்து குடந்தை, மறைமாவட்ட கிறிஸ்துவ பள்ளிகளை வேதியர்களும், நானும் சந்தித்து வருகிறோம். அங்குதான் கிறிஸ்துவர் எவ்வளவு சிறுபான்மையினர் என்பதை உணரமுடிகிறது. 3000 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சுமார் 100 பிள்ளைகள்கூட கிறிஸ்துவ பிள்ளைகள் இல்லை. இயேசுவின் வார்த்தைகள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்; உங்கள் தந்தை உங்களை தங்கள் ஆட்சிக்கு உட்படுத்த திருவுளம் கொண்டுள்ளார் (லூக் 12 : 32). எளியவர்களில் தான் இறைவன் செயல்படுகிறார். எளியவர்கள் வலிமை பெற முடியும், இயேசுவின் எளிமையில் ஒன்றிணைந்தால் குடந்தை மறைமாவட்ட பல பங்குகளில் தங்கள் ஆலயங்களை சீர்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதை காணமுடிகிறது. மிகவும் பாராட்டுக்குரியது. கோவில் கட்டப்பட வேண்டும் என்ற ஆர்வம் சமுதாயம் கட்டப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் இருப்பதில்லை. கொண்டாட்டத்தில் காட்டும் ஆர்வம் பண்புகளைக் காட்டுவதில் கொஞ்சமும் இருப்பதில்லை. தற்பெருமை, பெயர், புகழ் ஆகிய அழுகிய பண்புகளிலிருந்து விடுபட வேண்டும். எளிமை, இரக்கம் பகிர்வில் வளர வேண்டும். இதுதான் கிறிஸ்து பிறப்பு காட்டும் அழைப்பு.

மத்தியில் அமைந்திருக்கும் பா.ஜ.க.அரசு, பல விதங்களில் தங்களின் அடிப்படைவாத இந்துத்துவ கொள்கைகளை திணிக்கப்பார்க்கிறது. சென்ற ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவன்று அரசு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தது. தலித்து குழந்தைகள் ஹரியானாவில் எரிக்கப்பட்ட போது, ஏதோ தற்செயலாக நடந்த செயலாக வர்ணித்தார் பா.ஜ.க. அமைச்சர். மாட்டுக்கறி சாப்பிட்டவர்களை கொலை செய்திருக்கிறார்கள். 

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் சற்று பயத்துடன் வாழ வேண்டிய சூழல் சூழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டு ஆயர் பேரவையின் தலைமை ஆயர் பேரருள்திரு. பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை பா.ஜ.க. அரசின் போக்கினைக் கண்டித்து  அறிக்கை விட்டிருக்கிறார். இயேசு தீய உலகில் பிறந்து, தீமைகளை அழிக்கும் வழியை காண்பித்தார். குடியின் கெடுதலுக்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல, துணிவும், தியாக சிந்தனையும் கொண்டு வாழுவோம். இயேசுவின் விழுமியங்கள் உலகில் பிறக்க, நாம் இயேசுவின் குடில்களாவோம்.

சிரிப்பும் கருத்தும்

 சிரிப்பு

 ஆர்வ கோளாறு

தியானத்திற்கு சென்றுவந்த ஒரு பெண்மணி, சென்றவிட மேல்லாம்   Praise the Lord என்றாள். மீன் கடைக்கு சென்றபோது  Praise the Lord என்றாள். மீன் கடைக்Vரர்,, அப்படியயாரு மீன் வரவில்லையே என்றார். கோழி கடைக்கு சென்றாள். கோழி வெட்டும் போதெல்லாம்,  Praise the Lord,  Praise the Lord என்றாள். கோழி கடைக்காரர், அம்மா இதுவரை நல்லாதானே இருந்தீங்க. இப்ப என்ன ஆச்சு என்றார். வீட்டிற்கு வந்து கோழி குழம்பு வைத்தாள். குழம்கை மகன் தூக்கி வரும்போது குழம்பு பாத்திரத்தை கீழே போட்டுவிட்டான். அப்பா, Praise the Lord என்றார். மனைவி, இனி யாரும்  Praise the Lord என்று யாரும் சொல்லக்கூடாது என்று சட்டம் போட்டார்.

 புரிந்து கொள்ளுதல் :

முனிவர் ஒருவர் பிச்சையயடுக்கச் சென்றார். அப்போது ஒரு பெண்மணி கோபம் கொண்டு முனிவர்மேல் துப்பிவிட்டார். முனிவர் கோபம் கொள்ளாது, வீடு வந்து அந்த அம்மாளின் எச்சில்பட்ட துணியை துவைத்து, அதிலிருந்த நூல்களை பிரித்து, அதனால் திரிசெய்து, விளக்கில் அத்திரியை பயன்படுத்தி, விளக்கை ஏற்றி, இறைவா அந்த அம்மையார் ஏதோ பிரச்சனைகள் காரணமாக, கோபத்துடன் துப்பிவிட்டார்கள். அவ்வளவு பிரச்சனைகளால் போராடுகிறார்கள். அவர்களை ஆசீர்வதித்து, அவர்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபட துணை செய்யும் என்று வேண்டினார்.

 பிள்ளை மொழி :

11 வயது பெண் அடியில் சிக்கி அவளுக்கு ஒரு கால் போய்விட்டது. இரயிலில் அடியில் கிடந்த அப்பெண்ணை மீட்க படைவீரர் இரயிலுக்கடியில் படுத்து சென்று அப்பெண்ணின் அருகில் சென்றார். அப்பெண் பயப்படாமல் இருக்க வீரர் பேச்சுக் கொடுத்தார். அப்பெண் சொன்ன முதல் வார்த்தை, இதபத்தி எங்க அப்பாகிட்ட சொல்லிடாதீங்க.

 சமர்த்தான பதில் :

ஜோசியகாரனை ஒரு நாத்திகன் மடக்க விரும்பினான்.
எனக்கு எத்தனை பிள்ளைகள் சொல்லமுடியுமா?
நான்கு பிள்ளைகள்.
சரியான ஜோசியருய்யா நீ! எனக்கு மூன்று பிள்ளைகள்தான்ய்யா.
உங்களுக்கு தெரிஞ்சது மூன்று பிள்ளைகள்தான்.

 கண்ணும், காதும் தொடர்பு :

ஒருவர் காது டாக்டரிடம் சென்றார்.
பேச்சுவாக்கில், உன் இரண்டு காதையும் எடுத்துவிட்டால் என்ன செய்வாய்? என்றார்.
என்னால் நன்றாக பார்க்க முடியாது.
டாக்டருக்கு ஆச்சிரியம். வாய்தவறி அப்படி சொல்கிறாரா?
காதுகளை எடுத்துவிட்டால் எப்படி கண்ணால் பார்க்கமுடியாது.
தெரிந்துதான் சொல்கிறேன். காதுகளை எடுத்துவிட்டால் எப்படி கண்ணாடி போட்டுக் கொள்ள முடியும்? எனவே தான் காதுகளை எடுத்துவிட்டால் பார்க்க முடியாது என்றேன் என்றார்.

படிங்க... சிரிங்க

படிங்க... சிரிங்க
ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவிகள் மற்றவர்களுக்குக் கொடுத்துள்ள பட்டப்பெயர்கள்
சீனிவடை, ஒட்டகசிவிங்கி, சோடாபுட்டி, கட்டை, உலக்கை, கொசு, பாம்பு, ஓட்டதக்காளி, செம்மறி, டார்சான், தயிர்சாதம், பாம்புதலை, கொரில்லா, திருஷ்டிபூசணிக்காய், ஆப்பிள், சப்பாத்தி கட்டை, காட்ஸில்லா, மிஸ்டர் புளு டிரிங்க்சாக்பீஸ், குண்டச்சி, அரிசி மூட்டை, ஒட்டடக்குச்சி, ஆஃப்பாய்ஸ், ஊசிபோன சொலானேசி, சோனி, ஓட்டவாய், புளிக்கொலம்பு, நெட்டை, குண்டூஸ், ஜாங்கிரி, திருசிற்றம்பலம், சேமியா, வின்ஜர் மங்கி, பிதுங்கின வாய், கரண்ட்ல அடிப்பட்ட காக்கா, எருமை கட்டா.

Wednesday 16 December 2015

மனம் செம்மையாக

ஆசிரியர் பேனா
செபம் நம் அன்றாட உணவு

காலையும் மாலையும் நன்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும்; பதரே
 - வெற்றி வேற்கை

செபம், வாழ்வின் நங்கூரம். எனவேதான் காந்தியடிகள், ஒவ்வொரு நாளையும் திறக்கும் திறவுகோளும், நாளின் இறுதியில், அந்நாளை நிறைவு செய்வதும் செபம் என்கிறார்.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்தி அடிகளின் பெரிய ஆயுதம் செபம். தியானம், பஜன் என்று அவர/து ஆசிரம வாழ்வு செபத்தின் வல்லமையால் நிறைந்திருந்தது. அக்டோபர் மாதம் ஜெபமாலை மாதா, மாதம் என்று செபத்திற்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடுகிறோம். ஒருவர், பகுத்தறிவாளர், அவர் கேட்டார். திரும்ப, திரும்ப ஒரு செபத்தை சொல்வதால் கடவுள் நம் செபங்களை கேட்டிடுவாரா? என்றார். அவருக்கு கிர்கோர் என்ற புகா;பெற்ற தத்துவ அறிஞர் கூறுவார். நாம் செய்யும் செபம் கடவுளை மாற்றுவதில்லை. ஆனால் நாம் செய்யும் செயல்கள் நம்மை மாற்றுகின்றன என்கிறார்.

நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களும் செபத்தின் வல்லமையைப் பற்றி பேசுகிறார். நம்மை படைத்தக் டவுள், பலவிதமான திறமைகளையும், வல்லமைகளையும் நம்மில் புதைத்து வைத்திருக்கிறார். செபம் அவைகளை வெளிக்கொணரும் பெரிய கருவி என்கிறார். இப்பொழுது பல வீடுகளில் பூஜை அறை என்று அமைத்திருக்கிறார்கள். அங்கு வெகுநேரம் தியானமும் செய்கிறார்கள். நமக்கு நல்ல கோவில்கள் உண்டு. வார்த்தைகளை சுருக்கி செபம் செய்தல் எனக்கு தெரியாது என்பர் சிலர். அவிலா தெரசம்மாள் கூறுவார்கள். இறைவனுடன் நட்பில் இணைந்து நிற்கிற நேரம்தான் செபம் என்பார்கள்.

மார்ட்டின் லூத்தர், செபம் செய்யாத கிறிஸ்தவன் மூச்சில்லாத மனிதருக்கு சமம் என்பார். என்னை பொறுத்தவரை, செபம் என்ற அனுபவத்தில் புகுந்தவர் மாறிய மனிதராகத்தான் வெளிவருவார். இராம்குமார். சிங்காரம் என்பவர் வெற்றிக்கான வழிகளின் ஒன்றினை குறிப்பிடுகிறார். மனிதர் மனதிற்குள்ளேயே அதிகமாக பேசிக் கொள்கின்றனர். அவர்கள் நேர்மறையாக பேசினால் வாழ்வு நேர்மறையாக அமையும். நேர் எதிராக பேசினால் வாழ்வும் நேர் எதிராக அமையும். எனவே உள்ளத்திற்கு நேர்மறை தொடர்புடன் வாழுங்கள் என்கிறார். செபம், இந்த உள்ளாந்திர நேர்மை உணர்வு பெற பெரிதும் உதவும். செபம் வழியாக, இறைவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் உணர முடியும். இரண்டாவதாக மனதில் குழப்பங்கள், கசப்புக்கள், பழிவாங்கும் வெறிகுணம், பொருளை பெருக்க வேண்டும் என்ற பேராசை ஆகியவையயல்லாம் மாறும். மூன்றாவதாக, புதியதெளிவும், வெளிச்சமும் நமக்குக் கிடைக்கும். ஜெபமாலை, திரும்ப திரும்ப சொல்லி ஆன்மாவின் அடிநிலைக்கு நம்மை அழைத்து செல்லும் பாரம்பரிய செபம்.

ஒரு பெரிய விவிலிய வல்லுநர், நான் சொல்லும் செபம் ஜெபமாலைதான் என்று சொல்லுவார். சிலர் திருப்பலி நேரங்களிலும் ஜெபமாலை சொல்லுவார்கள். அது தேவையில்லாதது. திருப்பலி, பெரிய அடையாள வழிபாடு. வழிபாட்டின் நிகழ்வுகளில் பொருளடன் பங்குபெறுதல்தான் சிறந்தது. ஜெபமாலையில் விவிலியம் பொதிந்திருக்கிறது என்பதை குறிப்புகளுடன் ஒரு கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. விலைவில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க போகிறது. அரசியல் கட்சிகள் மக்களை எப்படி ஏமாற்றி ஓட்டுகள் பெறலாம் என்பதில் பலவித திட்டங்கள் செய்து செயல்பட்டு வருகிந்ளன. நமக்கு அதியம் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு வேண்டும். அரசியல்; சாக்கடை, அதன் நாற்றம் நம்மில் பட வேண்டாம் என்று ஒதுங்கிவிடக்கூடாது. நம் வாழ்க்கையை மிகவும் பாதிப்பது அரசியல். ஒன்று கூடி, நல்லவைகளுக்கு ஒத்துழைப்பும், தவறானவைகளுக்கு எதிர்ப்பும் காட்ட கடமைப்பட்டிருச்சிறோம். செபம், வெறுமையான ஆன்மீக அனுபவம் அல்ல. வாழ்க்கையை செம்மைப்படுத்தும், வாழ்வில் இறைவனை சந்தித்து அவருக்கு சாட்சியம் அளித்து வாழ நம்மை உறுதியுள்ளவராக்குவது. தினமும் செபத்திற்கு நேரங்களை அர்ப்பணிப்போம். செபத்தினால் என்றும் புத்துணர்வு பெறுவோம்.

திருத்தந்தை பக்கம், இறை இரக்கத்தின் ஆண்டு

திருத்தந்தை பக்கம், இறை இரக்கத்தின் ஆண்டு

இறைவனின் இரக்கத்தினை உணர்ந்து புனித வாழ்வு வாழ்வதற்கான திருத்தந்தையின் அழைப்பு.
குடந்தை அ.பிரா

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் சமத்துவமும், நீதியும் நிலவிட ஒவ்வொரு 50ஆம் ஆண்டும் யூபில் ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வந்தது. லேவியர் 25 : 8 - 13ஆம் பகுதியே இதற்கு அடித்தளமாயமைந்தது. அவரவர் காணியாட்சித் திரும்பி மக்கள் மனநிறைவோடு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நிலவிட இந்த யூபிலி ஆஔ;டுக் கொண்டாட்டம் பெரும் பங்காற்றியது. இத்தகைய எபிரேய, யூத மரபில் மலர்ததுவே கிறிஸ்தவ சமயத்தின் யூபிலிக் கொண்டாட்டங்கள்.
ஒவ்வொரு தலைமுறையும் யூபிலி ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு 1300 அடி ஆண்டு அன்றைய திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் அவர்கள் இந்தச் சிறப்பு யூபிலி விழாக் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தார். 1983, 2000 ஆண்டுகளில் சிறப்பு யூபிலி விழாக்களைக் கொண்டாடிய நாம் 2015ஆம் ஆண்டும் சிறப்பு யூபிலி விழாவைத் தொடங்கிடட இருக்கின்றோம்.
இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டும் கொண்டாட்ட காலம் : 
நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 11, 2015ஆம் நாளில் இரக்கத்தின் முகம் என்னும் அதிகாரப்பூர்வ ஆணைத் திருமடல் மூலம் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு பற்றிய மகிழ்ச்சி செய்தியினை வெளிப்படுத்தினார். இந்த யூபிலி ஆண்டு 2015 டிசம்பர் 8 அமல உற்பவ அன்னையின் விழாவன்று தொடங்கி 2016 நவம்பர் 20 கிறிஸ்து அரசர் விழா அன்று நிறைவுறும். கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வில் பத்தெழுச்சியையும், புதிய மறையிலான நற்செய்தியறிவிப்பு பணியினையும், ஆன்மீக வாழ்வின் உள்ளார்ந்த அனுபவத்தினையும் உலகினுக்களித்த இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் 52ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக இந்த யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரக்க முகம் :

28 பக்கங்களைக் கொண்ட இத்திருமடல் இயேசுவே விண்ணகத்தந்தையின் முகம் என விளித்து கிறிஸ்தவ விசுவாச வாழ்வின் மறைபொருளை இரத்தினச் சுருக்கமாக அறிவிக்கின்றது. உங்கள் விண்ணகத்தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள் (லூக் 6 : 36) என்னும் இறைவார்த்தையே இம்மடலின் சாரமாகும். விண்ணகத் தந்தையின் ஒரே பேறான இயேசு மன்னிக்கும் பண்பு கொண்டவர். அவரது சீடர்களாகிய நாமும் நமது தினசரி வாV;வில் மன்னிக்கும் பண்பாளர்களாக வாழ்ந்திட இம்மடல் இறை மக்களை அழைக்கின்றது.

இரக்கத்தின் வாயில் திறப்பு :

இறை இரக்கத்தின் ஆண்டு தொடக்க நிகா;வாக டிசம்பர் 8ஆம் நாள் உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை இரக்கத்தின் வாயிலைத் திறந்து வைப்பார். உரோமை நகரின் பிற ஆலய்ங்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு மறைமாவட்டத் தலைமையகத்திலும் மறைமாவட்டப் பேராலயத்தின் இரக்க வாயில் திறக்கப்படும். இந்நிகழ்வுதான் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருங்கிணைவினை வெளிப்படுத்தும் விதமாக அமையும். இம்மடல் கீழ்க்காணும் மூன்று முக்கியக் கருத்துக்களை வலியுறுத்திக் கூறுகிறது.

1. இரக்கத்தின் செல்வர் :

விண்ணகத் தந்தை இரக்கத்தில் செல்வராகத் திகழ்கின்றார். இரக்கத்தின் ஊற்றும் இவரே. தந்தை கடவுள் தன்னை இரக்கமும், பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்கு உரியவர் (வி.ப.34 : 6) என்று மோசேக்கு வெளிப்படுத்துகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். (கலா 4 : 4 - 5)

மடலின் எண் : 1 இவ்வாறு கூறுகிறது. நாசரேத்தூர் இயேசு தமது சொல்லாலும், செயலாலும், தமது முழு சொல்லாலும், செயலாலும், தமது முழு ஆள்தன்மையாலும் கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துகின்றார். இரக்கம் உடையோர் போறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத் 14 : 14) எனப் போதித்த .யேசு இரக்கத்தின் வெளிப்பாடாகவே நோய்களைக் குணப்படுத்தினார். ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் (யோவான் 6 : 1 - 13) ஏழு அப்பங்களையும், சில மீன் துண்டுகளைக் கொண்டு நாலாயிரம் பேருக்கும் (மத் 15 : 32 - 38) உணவளித்ததே மக்கள்மீது கொண்ட இரக்கத்தின் பொருட்டே ஆகும்.

இறை இரக்கம் என்பது புரிந்து கொள்ளப்பட முடியாத புதிர் அல்ல. மாறாக ஒரு தாய், தந்தை தங்களது குழந்தை மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பது போன்றே விண்ணகத்தந்தையின் இரக்கமும். இரக்கம் திருச்சபையின் அடித்தளம். திருச்சபை வெளிப்படுத்தும் இரக்கம் மற்றும் காருண்யச் செயல்களே திருச்சபையின் நம்பிக்கைக்குரிய செயல்களாகும். எனவேதான் இந்த யூபிலி ஆண்டின் மையமே தந்தையைப் போல் இரக்கம் மிகுந்திருத்தல் என்பதாக அமைந்துள்ளது.

திருச்சபை விண்ணக இறைவனின் அடையாளமாகும். மேலும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இரக்கத்தின் கடலாகத் திகழ வேண்டும்.

2. மனமாற்றத்திற்கான அழைப்பு :

இந்தப் புனித ஆண்டில் கடைபிடிக்கக்கூடிய ஒரு சில வாமுறைகளும் தரப்பட்டுள்ளன. மனமாற்றத்திற்கான ல்வேறு செயல்பாடாக திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும். எவரையும் தீர்ப்பிடாதே. எவரையும் கீV;த்தரமாக எண்ணாதே மன்னிப்பை அள்ளிக்கொடு. பிறரின்; நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்காதே. திறந்த மனத்தோடு இன்றைய சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் தீயனவற்றைக் களைந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆன்மீக மற்றும்; சமூக இரக்கச் செயல்களில் ஈடுபாட்டோடும், மகிழ்வோடும் செயல்படுத்திடல் வேண்டும்.

24 மணி நேரமும் இறை இயேசுவோடு இணைந்திட நற்கருணை ஆராதனை நடைபெற வேண்டும். மேலும் எந்த நேரத்திலும் ஒப்புரவு அருட்சாதனம் அளித்திட அருள்பணியாளர்கள் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.  இரக்கமிகு தந்தையின் எழில்மிகு சான்றாளர்களாக ஆன்மீக ஆலோசகர்கள் திகழ வேண்டும். இந்த யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் இரக்கத்தின் மி­னர்கள் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் இறை இரக்கத்தினை மக்கள் உணர்ந்து பாவ வழியை விட்டு விலகி வாழ்ந்திட ஆன்மீக ஆலோசனைகள் வாங்கப்படும். இவ்வாறு இறைவனின் மன்னிப்பை தேடும் அனைவரும் மனம் திருந்திப் புனித வாழ்வு வாழ வழிகாட்டப்படும்.


3. நீதியும், இரக்கமும் ஒரே உண்மையின் இரு பரிமாணங்கள் :

சமூகத்தில் வாழும் மக்களுக்கு சமமான நீதி வழங்கிடல் காலத்தின் கட்டாயமாகும். சமூகக் கட்டமைப்பின் அடிப்படைக்கூறு நீதி. சட்டத்தின் சட்டங்களால் சமுதாயம் ஆளப்படுகிறது. ஆனால் கடவுளின் இரக்கம் நீதிமிக்கவர்களாக மக்களை வாழ செய்கிறது.

குற்றப் பின்னணியுள்ள குழுக்கள் மற்றும் ஊழலில் திளைப்போர், இரக்கம் மிகு இறைவனின் கருணை மிகு கரங்களில்; தங்களை அர்ப்பணித்து தீய வழியகற்றி, தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றனர். யூதம் மற்றும் இஸ்லாம் சமயத்திலும் இரக்கமே இறைவனின் தலையாய பண்பு என்று உணர்த்தப்பட்டிருக்கிறது.  சமயங்களுக்குள் ஒருமைப்பாடு, ஒருங்கிணைவு போன்றவற்றினை ஏற்படுத்த பல்சமய உரையாடல் மூலம் இறை இரக்கம் பற்றிய கருத்துத் தெளிவு, ஆழ்ந்த இறைஞானம் உருவாகிடல் வேண்டும். ஆங்Vங்கே நிலவும் வன்முறை, கசப்புணர்வு, குறுகிய மனப்பான்மை மற்றும் பிறரை மதிக்காத நிலை. இந்த ஆண்டில் உருவாகிடும் என்று திருத்தந்தை நம்பிக்கை கொண்டுள்ளார்.

அன்பின் முழுமையே நீதியும், இரக்கமும். கடவுள் நீதியை மறுப்பவரல்ல. மாறாக, தமது இரக்கத்தின் மூலம் உண்மையான நீதியின் அடித்தளமாகிய அன்பினை அனுபவமாக்குதல் மூலம் நீதியுன் கூறுகளை எங்கும் பரப்பிட முடியும். இறை இரக்கத்தின் சாட்சியாகிய அன்னை மரியா மற்றும் இறை இரக்கத்தின் பக்தியினை உலகுக்குப் பறைசாற்றிய போலந்து நாட்டுப் புனிதை அருட்சகோதரி பாஸ்டினா போவல்ஸ்கா ஆகியோரின் பரிந்துரையினை வேண்டித் தமது சுற்று மடலை நிறைவு செய்கின்றார்.

பைந்தமிழ்ப் பழமொழிகளும், விளக்கங்களும்

பைந்தமிழ்ப் பழமொழிகளும், விளக்கங்களும்

எம்.சி.குமார் எம்.ஏ., பி.எட்., எம்.பில்., விரகாலூர்.

கெட்ட காலத்துக்கு நாரை, கெளிற்றை எடுத்து விழுங்கினது போல :

ஆகாயத்தில் பறக்கக்கூடிய பறவையினத்திற்கும் நீரில் நீந்துக் கொண்டிருக்கும் கெளிறு மீனிற்கும் என்ன உறவென்று நினைக்க தோன்றுகிறதல்லவா! பொதுவாக இவ்வகை மீன்கள் சேற்றுப்பகுதியில் வளைந்து நெளிந்து உந்திச் செல்வதால் கெளிறு என்ற பெறர் பெற்றிருக்கக் கூடும். சங்க காலத்தில் இம்மீனை சிறப்பற்ற மீனாகக் கருதினர் என்பதற்கு அவற்றில் காணப்பட்ட முட்களே ஆகும் என்பதனை
“முள்ளெறிற்றுப் பாண் மகளின் கெடிது சொரிந்த
அகல் பெருவட்டி நிறைய மனையோள்” (ஐங்குறு நூறு : 40)
என்ற பாடலிலிருந்து அறிவதால் இம்மீனின் சிறப்புப் பண்பே இதற்கு முட்கள் இருப்பதேயாகும்.
இம்மீனை நாம் கையில் எடுக்கும் போது அதனுடைய அடிப்புறத்தைப் பிடித்துத்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு கையில் எடுக்கும் பொழுது நம் விரல்களானது இம்முட்களுக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம். நம் விரலை வைத்து தலையிலிருந்து வால் நோக்கித் தடவும் பொழுது, இம்முட்களானது மிகவும் மென்மை உள்ளதை நாம் உணர முடியும். அதே நேரம் மாற்றி தடவ நேர்ந்தால் நம் விரலில் குத்திவிடும். இம்மீனை நாரையானது விழுங்க நேர்ந்தால், வாய்க்குள் நுழையும் போது மேற்புற முள்ளானது நாரையின் தொண்டையில் சிக்கி கொண்டு விடும். மீனை வெளியே எடுக்க நினைத்தாலும் பக்கவாட்டில்  உள்ள முட்கள் வாயின் உட்பக்கத்தில் துறைத்து உயிர் போகும் அளவிற்கு வலியை உண்டாக்குவதால், நாரை இறக்க நேரிடும் என்பதைத்தான் இப்பழமொழி உணர்த்துகிறது.
வழக்கமாக ஒருவர் பேருந்தில்தான்; செல்வார். அன்று, அவர் பேருந்திற்காக காத்திருந்தபோது, அவருடைய நண்பர் மோட்டார் வண்டியில் வாங்க உங்களை உங்கள் அலுவலகத்தில் விடுகிறேன் என்றார். எனவே அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஒரு இடத்தில் மெதுவாக சென்றபோது பின்னால்வந்த பேருந்து மோதி விபத்துக்கு உள்ளாகி மருத்துசமனையில் சேர்ந்தார். இதுதான் கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினதுபோல் என்பதன் பொருள்.

நத்தை வயிற்றில் முத்து பிறந்த மாதிரி :

சில நேரங்களில் எளியவர்களிடமிருந்து உயர்ந்தது தோன்றிவிடும். அதை குறிக்கத்தான் இப்பழமொழி எனலாம். எலியிடமிருந்து எலியும், புலியிடமிருந்து புலியும், முயலிடமிருந்து முயலும் அல்லவா பிறக்க முடியும்! ஆனால் நாம் அணியும் மதிக்க முடியாத முத்து எப்படி நத்தை என்ற உயிரினத்திலிருந்து உருவாக முடியும்?
நம்மில் ஏராளமானோர் மஐVத்துளியானது முத்துச்சிப்பிக்குள் விழுந்து முத்துவாக மாற்றம் அடைகிறதென்று நினைக்கிறோம். முத்து எவ்வாறு உருவாகின்றது என்று தெரிந்து கொண்டீர்களானால் சற்று வியப்பளிக்கக் கூடியதாகத் தான் தோன்றும். முத்து ஒரு வகை பிங்க்ட்டா வால் காரிஸ் என்ற சிப்பியிலிருந்து உருவாகிறது. நத்தை, சிப்பி ஆகிய இரண்டுமே ஒரே இனத்தைச் சார்ந்தாகும். இவைகளின் உடம்பினைச் சுற்றித் தடித்த சுண்ணாம்பு உடம்பிற்கும் ஓடுக்கும் இடையே மெல்லிய மடிப்பாலான சவ்வு போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இவைதான் முத்து உருவாக காரணமாயிருக்கின்றது.
ஓர் ஆயர் திறம்பட படித்தவர், மிகவும் திறமைசாலி. ஞானத்துடன் எந்த பிரச்சனையும் தீர்த்துவிடுவார். ஆனால் அவரின் தந்தை, ஒரு குருவானவரிடம் சமைப்பவராக இருந்த ஏழை. இதுதான் நத்தையில் வந்த முத்து எனலாம்.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும் :

நம் நாடு வளர்ந்து வருகின்ற இந்நாள்களில், தங்களுக்கென்று நல்ல வீட்டை கட்டிக்கொள்ள பெரும் முயற்சிக்கிறார்கள். கடன் பட்டாலும் பரவாயில்லை. தனி வீடு வேண்டும். வாடகை வீடு தான் லாபம். அதை உணர்வதில்லை. எனவேதான் ரியல் எஸ்டேட் தொழில் இப்போது கொடி கட்டி பறக்கிறது. எலி வளையானாலும், தனி வளை வேண்டும் என்ற பழமொழி உண்மையாகி வருகிறது.
இரும்பும், குரும்பும் இருக்க இருக்க கெடும் :

முறுக்கி வளர்க்காத மீசையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் சிறப்படையா என்பர். பிள்ளைகள் இயற்கையாக விபரம் தெரியாமல் விளையாடுவார்கள். வளர வளர விபரம் தெரியும். சிறுபிள்ளை ஒன்று, பிள்ளைகளின் கபடற்ற நிலை ஒன்று. குறும்பு என்பது விபரம் அறிந்தும், பொறுப்பில்லாமல்; நடக்கிற நிலை. வநதியுள்ளவர்களின் பிள்ளைகள், பெற்றோர் கொடுக்கும் கடடுக்கடங்காத செல்லத்தினால் கெடடுவிடுவர். இது ஓரளவு குறும்பு பண்பு எனலாம்.

ஞானத்தின் வார்த்தைகள்

வலையில் பிடித்தது

 ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும்போது... இன்னையருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், அந்த உறவை விட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை...


 சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல...
அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.


எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும்...எல்லாம் உள்ளபோது நீ நடந்து கொள்ளும் முறையும்...வெற்றியை தீர்மானிக்கிறது.


தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்... சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்... பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தயங்கள்... இவர்களுடன் நான் இருப்பதைவிட, நான் அனாதையாக வாழ்வது மேல்.

ஆத்தாவும், தாத்தாவும். 2

ஆத்தாவும், தாத்தாவும். 2
வாயாடி வண்ணக்கிளி

என்னடியம்மா இவ்வளவு சீக்கிரமா, மகவீட்டிலிருந்து திரும்பிட்ட?
வயசானபிறகு வாய பொத்திக்கிட்டு நம்ம இடத்திலேயே இருக்கிறதுதான் மரியாதங்க. பெத்த மனசு பித்துனு மகள பாக்க அப்படி கஷ்டப்பட்டு சென்னைக்கு ஓடுன, உன்முகமே சரியில்லையே என்ன ஆச்சு?

அத ஏன் கேக்கிறிங்க. நான் போனதும், நம்ம மகள் துள்ளிகுதுச்சு ரொம்ப சந்தோ­மா கவனிச்சிக்கிட்டா. சும்மா சொல்லக்கூடாதுங்க. பொம்பள பிள்ளைகளை பெத்துகிட்டது கடவுள் தந்த பெரிய வரம்ங்கிறது இப்பத்தான் புரியுது. ஆனா, நம்ப மக காட்டிய ஆர்வம் அரைநாளிலேயே முடிஞ்சுபோச்சு.
என்ன ஆச்சு, மகளுக்கு ஏதாவது குணமில்லாம போயிடுச்சா?

அது இல்லைங்க, மாப்பிள்ளையினுடைய அப்பாவும், அம்மாவும் திடீர்னு, பிள்ளைய பார்க்குனும்னு வந்திட்டாங்க. சம்மந்திகள பார்த்ததும் ரொம்ப சந்தோ­மா இருந்திருக்குமே?

அங்கதான் பிரச்சனை. அதென்னடியம்மா பிரச்சனை? அவங்கள பார்த்ததும் மகளுக்கு அப்படியே முகம் செத்து போச்சு. மாமனார், மாமியார பார்த்ததும் இந்த பிசாசுகள் ஏன் இன்னைக்கு வந்துச்சுனு என் காதுபடவே சொல்றா. அதில்லாம, உடனே புறப்படுங்கன்னு என்ன அனுப்பி வைச்சுட்டா.

இது மோசந்தாண்டி. அவள நாம பெத்த மாதிரி தானே மாப்பிள்ளையையும் பெத்து, வளர்த்து படிக்க வைச்சு அவளுக்கு வாழ்க்கை கொடுக்க வைச்சிருக்காங்க. பொம்பள பிள்ளைகளுக்கிட்ட இருக்கிற பெரிய கெட்ட குணம் இதாண்டியம்மா. நம்ம மக, என்ன போக சொல்றதுக்கு முன்னாலேயே எனக்கு இரண்டு நாளிலேயே சென்னை சளிச்சு போச்சு.

என்னடியம்மா, சிங்கார சென்னைனு எல்லாரும் சொல்றாங்க, நீ வேறு மாதிரி சொல்ற? கூவம், கூவம்னு சொல்றாங்களே, கருப்பு நதி, என்ன நாத்தம்? குடல பிடிங்கிகிட்டு வருது. வாந்தி எடுத்துட்டேன். கொசு, குருவி அளவுள நம்ம கொத்துது. பாரீஸ் பக்கம் என்னை அழைச்சிட்டு போனா என்ன அசிங்கம். குப்பையும், சகதியுமா இருக்கு. சுத்தங்கிறத பற்றியே நம்ம மக்கள் கவலைப்படுகிறதே இல்லை. இப்படியிருந்தா எப்படி வெளிநாட்டுக்காரங்க நம்ம இடத்துக்கு வருவாங்க? ஒரு வெளிநாட்டு வெள்ளைகாரங்கள பார்த்தேன். துணியால மூக்கபிடிச்சிட்டு போறாங்க. பாரிஸ்ல இருக்கிற அந்தோணியார் கோவிலுக்கு போனேன். செப்டம்பர் எட்டாம் தேதி, அப்பா! அவ்வளவு கூட்டம். பிச்சையயடுப்பவர் கூட்டமும் ஏராளம். மக்களிடம் தெய்வீகபக்தி நிறைய  இருக்கு. நாம எந்த நிலையில் வாழ்ந்தாலும், கடவுள் உதவி கொடுக்குனும்னுதான் மக்கள் நினைக்கிறாங்க. நம் வாழ்வை பற்றியும், முயற்சியை பற்றியும் கவலைபடுருதில்லை. 

நமது கத்தோலிக்கர், சகாயம், இறைவாக்கினரை போலவே செயல்பட்டிருக்காரு. அதெல்லாம் படிச்சியா?

டிவி சீரியல்தான் நான் பார்கிறதுன்னு உங்களுக்குத் தெரியாதா? மதுரையில நரபலி கொடுத்திருகிறாங்க ஒருவர் புகார் கொடுத்திருக்காரு. கிரணைட் கல் சம்மந்தமா நடந்த ஊழலைப் பற்றி சகாயம் தீவிரமா விசாரிச்சுகிட்டு இருக்காரு. அதுல, நரபலி செய்திருக்காங்க என்ற புகார் வந்திருக்கு. அத விசாரிக்க போகும்போது, போலீஸ் பெரிய அதிகாரி எஸ்.பியே ஒத்துழைப்பு கொடுக்கலையாம். அதனால சுடுகாட்டிலேயே கட்டில் போட்டு போர்வை தலையணையயல்லாம் இல்லாம அங்கே படுத்திருக்காரு. இடத்தை தோண்டி பார்த்ததில நாலு எலம்புக்கூடு இருந்திருக்கு.

அடேங்கப்பா, என்ன துணிச்சல் அந்த ஆளக்கு? மனிதன்னு பிறந்தா இதே போலதான் உண்டையுடன் வாழனும். நீங்களும், நானும் ஏதோ இரண்டு பிள்ளைகளை பெத்திட்டு, வாழ்க்கையை முடிச்சிட்டோம். 

உலக செய்திகள்ல முக்கியமா வரது சிரியா நாட்டுல, மக்கள் அகதிகளா வேறு நாடுகளுக்கு ஓடுறதுதான். ஐரோப்பிய நாடுகள்ல இவங்ள ஏத்துக்காம, கப்பல் கவிழ்ந்து நிறைய பேர் இறந்திட்டாங்க. ஒரு இரண்டு வயது குழந்தை இறந்து கடல் கறையில் ஒதுங்கினதுதான் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திடுச்சு.
நம் திருத்தந்தை, இம்மக்களை ஏற்று கொண்டு உதவுங்கள் என்று வேண்டுகோள் கொடுக்க, பல நாடுகளும் உதவ முன் வந்திருச்சு. நம் திருத்தந்தை பிரான்சிஸ் புரட்சிகாரருனு உலகமே பாராட்டுது. நம்ம தமிழ்நாட்டுல, அடுத்த வருடம் தேர்தல் வர போகுதில்ல. ஆமா.. ஓட்டுக்கு நோட்டு என்ற தத்துவம்தான் தமிழ்நாட்டில ஜெயிச்சுகிட்டு இருக்கு.
எல்லா கட்சிகாரங்களும், மக்களை எப்படி ஏமாத்தி ஓட்டுவாங்கலாம் என்று ஊர் ஊரா சுத்தி வாராங்க. ஏமாற்றும் காலம் ஓடுது. ஏமாறும் காலம் பின்னால் கூரும்.

இன்னொருவி­யம் தெரியுமா? தன் கண்ணாடியை மாத்தரத்துக்கு கண்ணாடி கடைக்கு திருத்தந்தை சென்றிருக்கிறார். எவ்வளவு எளிமை. ஏன் பிரதமர் மோடி நம் அம்மாவை சந்திக்க அவரு வீட்டுக்கே போகலையா?

ஆதாயமில்லாமலா செட்டி ஆத்துல போவான்?

அதைபற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் ஏடாகூடமா பேச, விளக்கமாறு, செருப்பெல்லாம் இளங்கோவன் படத்துமேல பூஜை போட்டுகிட்டு இருக்கு.

ஊழல் செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மேலே இப்படிப்பட்ட பூஜை நடத்தினால் ஊழல் பிசாசு ஓடிடும். அதை நம்ம மக்கள் செய்ய மாட்டாங்க.

திருச்சபை செய்தியை கொஞ்சம் சொல்லுங்க.
செப்டம்பர் மாதம்னா வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருநாள்தான் பிரபல்லியம்.

இந்த வரு­மும் ஏராளமான மக்கள் வேளாங்கண்ணிக்கு குவிந்திருக்கிறார்கள். அரசும், வேளை நகர் தந்தையர்களும் சிறப்பாக ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்திருக்கிறார்கள். மாதா மழையை கொடுத்து வாழ வைக்கனும். கர்நாடகாவிலும் மழையில்லையாம். கர்நாடக்காவில் அப்படியயாரு மின்வெட்டாம். தமிழ்நாட்டிலிருந்து மின்சாரம் கேட்கிறார்களாம்.

நல்லாயிருக்கு. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல், மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து கேடகும் கர்நாடகா தந்திரசாலிதான். நமது அலசல் போதும். நம்ம கச்சேரிய வாசகர்கள் கேட்கிறது குறைவு போல இருக்கு. யாரும் இதுபற்றி விமர்சனம் எழுத காணோமே. பரவாயில்லை. கச்சேரியை தொடர்வோம்.

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 5

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 5
- நல்லை ஆனந்தன்
திரு.ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் :
நான் தனியாரில் வேலை செய்கிறேன். கடந்த ஆண்டுகளில் என் முதலாளி தீபாவளிக்கோ, கிறிஸ்மஸ்க்கோ, புதுவருசத்துக்கோ, பொங்கலுக்கோ போனசு எதுவுமே தரவில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கும் போதெல்லாம் 12 மாதங்கள் வேலை செய்தாய், 12 மாதமும் தந்தேன். நீ என்ன 13 மாதங்களா வேலை செய்தாய்? என்று கேட்கிறார். நான் இந்த ஆண்டு என் முதலாளியிடம் போனசு வாங்க தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.

பதில் :
தாசண்ணே, வருடம் முழுதும் உண்மையாக உழைத்தும், உங்களை மதிக்காத, போனசு தராத முதலாளியிடம் நீதி கேட்டுப் போராடியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் என்கிறார் இயேசுசாமி. எனவே கவலைப்படாதீர்கள், நிறைவடைவீர்கள்.
ஞாயிறு தொடங்கி சனி வரை வாரத்திற்கு 7 நாட்கள். ஒரு மாதத்திற்கு 4 வாரங்கள். அப்போது நாலேழு இருபத்தியயட்டு நாட்கள் ஒரு மாதம். ஆண்டிற்கு 12 மாதங்கள். அப்போது 12 $ 28 ஆகமொத்தம் 336 நாட்கள். ஆனால் காலண்டர் பிரகாரம் ஓர் ஆண்டிற்கு 365 நாட்கள். ஆக நீங்கள் 30 நாட்கள் அதிகமாக உழைத்திருக்கிறீர்கள். எனவே பண்டிகையின்போது ஒரு மாத சம்பளத்திற்கு ஈடாக அல்லது அதற்கு அதிகமாகக் கொடுப்பதுதான் உங்கள் முதலாளிக்கு தகுதியும் நீதியுமாகும். அவரது கடமையும் மனித நேயச் செயலுமாகும். எனவே, உங்களுக்குரிய நியாயமான பங்கை அஞ்சி, கெஞ்சி கேட்காதீர்கள். அஞ்சாமல், தயங்காமல் கேளுங்கள். உங்கள் உழைப்பைச் சுரண்டும் அவர் கடவுளிடம் கண்டிப்பாகக் கணக்கு கொடுக்க வேண்டும்.
மத்தேயு நற்;செய்தி 20ஆம் அதிகாரத்திலே வேலையாட்கள் மட்டில் முதலாளி எப்படி நடக்க வேண்டும் என்பதை ஓர் உவமை வழியாக இயேசு சுட்டிக் காட்டுகிறார். திராட்சைத் தோட்ட முதலாளி விடியற்காலையிலும் 9 மணி, 12 மணி, பிற்பகல் 3 மணி, 5 மணி என்று பலமுறை அலைந்து வேலையாட்களை அழைத்து வருகிறார்; ஏனெனில் திராட்சை பழுத்தவுடன் வெட்டிவிட வேண்டும். மழை விழுந்தால் பழங்கள் வெடிக்கும், அழுகிவிடும், துர்நாற்றம் கிளம்பும், பயனற்றதாகிவிடும். எனவே அந்த முதலாளி நாள் முழுவதும் அலைகிறார்.
மாலை 5 மணிக்கு வேலையாட்களைச் சந்திக்கும்போது அவர்கள், எவரும் தங்களை வேலைக்கு அமர்த்தவில்லை என்கிறார்கள். முதலாளிகள் யாரை வேலைக்கு அமர்த்துவதில்லை? முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டு மெலிந்து கிடப்போர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஏழைச் சிறுவர்கள் இவர்களை முதலாளிகள் கழித்து விடுவார்கள். ஆனால் இயேசு காட்டும் முதலாளி அனைவரையும் தம் தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார். ஆறுமணிக்கு வேலை முடிகிறது.
கடைசியாய் வந்து ஒரு மணி நேரம் வேலை செய்தவர்க்கு ஒருநாள் சம்பளம். காலையிலே வந்து நாள் முழுவதும் வேலை செய்ததற்கு ஒருநாள் சம்பளம். ஏனெனில் அந்த முதலாளி உழைப்பைப் பார்க்கவில்லை. அந்த ஒதுக்கப்பட்ட மக்களின் பிழைப்பையும் பார்த்தார். மணிக்கணக்கை அவர் பார்க்கவில்லை. மனிதத்தை பார்த்தார்.
தாசண்ணே, உங்கள் முதலாளியும் விரைவிலே மனந்திருந்துவார். இந்த ஆண்டு நிச்சயம் உங்களுக்கு போனசு கிடைக்கும் என்று நம்புகிறேன். கவலை வேண்டாம். கடவுள் செயலாற்றுவார். வாழ்த்துக்கள்!

செல்வி. அருள்மேரி, தஞ்சாவூர் :

எனக்கு 20 வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்கும் எதிலும் உலகத்தில் எப்போதும் காதல் என்ற பேச்சுத்தான். இந்த காதலில் அப்படி என்னதான் இருக்கிறது.? ஏன் காதலுக்காக தற்கொலை செய்கிறார்கள்? அல்லது பிறரைக் கொலை செய்கிறார்கள்? கடவுள் இந்த காதலை உலகத்திலே ஒழித்துவிட்டால் எவ்வளவு நல்லது?

பதில் :

அருளக்கா, சமூகப் பொறுப்புணர்வோடு தாங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். காதலுக்காகத் தற்கொலைகள், கெளரவக் கொலைகள் என்ற செய்திகளைப் படித்து கவலை கொண்ட தங்கள் உள்ளத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.
கடவுள் உலகப் படைப்புகள் அனைத்தையும் ஆண் ‡ பெண் என்று பிரித்துப் படைத்து அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்புசக்தியை வைத்தார். அந்த ஈர்பபினால்தான் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அதனால் இந்த உலகம் தொடர்ந்து இயங்குகிறது. அந்த ஈர்ப்பு சக்தியே காதல் என்று கொள்க. கடவுள் இந்த காதலை உலகிலே ஒழித்துவிட்டால், ஈர்ப்பு சக்தி இழந்த படைப்புகள், இனவிருத்தி அடையாமல் அழிந்து கொண்டே போய் அடுத்த நூற்றாண்டிலேயே இந்த பூமி ஒரு வெற்று மண் உருண்டையாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
இந்த உலகத்திலே காதல் முதன்முதலில் எப்போது தோன்றியது தெரியுமா? விவிலியத்தில் தொடக்கநூல் 2 : 22இல் ஆரம்பமாகிறது. ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதரிடமிருந்து (ஆதாம்) எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார் (ஏவாள்). இப்போது காதல் வயப்பட்டு முதல் காதல் கவிதையை வடிவமைத்தான். “இவள் என் எலும்பின் எலும்பும் சதையின் சதையுமானவள்”. (இதற்கு என்ன அர்த்தம்?) ஆதாம் ஏவாளால் ஈர்க்கப்படுகிறான். காதல் வயப்படுகிறான் என்பதைக் கடவுள் புரிந்துக்கொண்டார். இதைத்தான் அவர் எதிர்பார்த்தார். அது அன்று அப்படியே “ஒர்க்அவுட்” ஆகிவிட்டது.
இந்த உலகில் ஆண்களுக்கு ரோல் மாடல் அப்பாதான். அப்பா போலவே நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்களை மகன் பின்பற்றுவான். ஆனால் மகனின் லவ் ஆப்ஜெக்ட் அம்மாதான். அவன் அதிகம் அன்பு செய்வது அம்மாவைத்தான். அதேபோல் பெண்களுக்கு ரோல் மாடல் அம்மாதான். லவ் ஆப்ஜெக்ட் அப்பாதான். இதுதான் உளவியல் பாடம்.
தனது லவ் ஆப்ஜெக்ட் போல யார் செயல்படுகிறார்களோ, அவர்கள் மேல்தான் சட்டென்று காதல் முளைத்துவிடுகிறது. அருளக்கா, உங்கள் அப்பாவைப்போல தோற்றத்தில், பேச்சில், கவனிப்பில், உபசரிப்பில், அன்பில், பழகுவதில், செயல்படுவதில் ஒப்புமை உள்ள ஒருவர் உங்கள் வாழ்வில் வரும்போது நீங்கள் அவர்மேல் காதல் வயப்படுவீர்கள். அப்படி ஒரு நிகழ்வை இயற்கையும் இறைவனும் நிகழ்த்துவார். ஏனெனில் இந்த உலகம் தொடர்ந்து இயங்க வேண்டும் அல்லவா?
“காதல் போயின் சாதல்” என்பது போன நூற்றாண்டின் காலாவதியான தத்துவம். காதல் போயின் வாழ்தல் என்பதே என் ஆலோசனை. ஏனெனில் வாழ்க்கை என்னும் புத்தகத்தில் காதல் ஒருபக்கம் மட்டுமே. காதலைத்தவிர வேறு எதுவுமே வாழ்க்கையில் இல்லை என்று உயிர்களைக் கொல்லவும், தம் உயிரை மாய்க்கவும் முன்வருவது இறைவன் விரும்பும் செயல் அல்ல! இயற்கையின் நோக்கமும் அதுவல்ல! எனவே உலகத்தை வாழவைக்கும் காதலை வரவேற்பு செய்யுங்கள். கண்மூடித்தனமான காதல் செயல்பாடுகளை மண்மூடிப் போகவிட்டு, வாழ்வை அழகாக்குங்கள். காதல் மிக அழகானது. வாழ்தல் மிகமிக அருமையானது. எனவே வாழுங்கள், என் வாழ்த்துக்கள்.

Sunday 13 December 2015

திகைப்பூட்டும் திருமருந்து திரிபாலா

திகைப்பூட்டும் திருமருந்து திரிபாலா

சகோ.வ. யூஜின் அமலா, முனைவர் ம.ஜெயராஜ், உயிர் வேதியியல் துறை.
அரசினர் கலைக்கல்லுVரி (தன்னாட்சி), கும்பகோணம் - 612 001

(நம் நாட்டின் பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளை, அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, அதன் பலன்களை கண்டுபிடிக்கும் முயற்சியை தனது முனைவர் படிப்பில் செய்து வருகிறார் சகோதரி. யூஜின் அமலா)
விஞ்ஞானம் விண்ணை முட்டி வளர்ந்தாலும், ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாசமிகுதியால், அனைத்து உணவுகளையும் வகைவகையாய் செய்து கொடுத்து குழந்தையின் வயிற்றைக் கெடுத்து விடுவாள். ஆனால் திரிபாலாவோ வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பிறவிப்பயனை நீட்டிக்கும்.
திரிபாலா என்பது அமிர்தா அல்லது அமிர்தம் எனப்படும் கடுக்காய், ஆயுர்வேதத்தில் அனைத்து மருந்துகளிலும் பயன்படும் நெல்லிக்காய், அகசம், அக்கம் என பெயர்பெறும் தான்றிக்காய் ஆகிய மூன்றும் சமஅளவு கலந்த அற்புதமான மருந்து. மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப ஆயுர்வேத மருத்துவர்களால் உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாக பயன்படும் இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் பயன்படுகிறது. சர்வ சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் திரிபாலாவைப் பற்றி ஆச்சரியமாக எந்த வியாதியையும் தீர்க்கும் அற்புதமான சக்தி இதில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேதிப்பொருட்கள் :
திரிபாலா சூரணத்தில் கேலிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், செபுலினிக் அமிலம், எலார்ஜிக் அமிலம், பாலிபீனால், லினோலியிக் அமிலம், டேனின், பிளேவனாய்ட், கிளைக்கோசைட், வைட்டமின் சி, கரோட்டின், அல்கலாலய்ட், பிளேவனாய்ட், எத்தில் கேலேட், மேனிட்டால், குளுக்கோஸ், பிரக்டோஸ், கேலக்டோஸ், ரேம்னோஸ் மற்றும் பல உயிர் சத்துக்களும் உள்ளன.
பயன்கள் :
திரிபாலா சூரணம் நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க, உடல் கழிவுகளை வெளியேற்றி செரிமானக் கோளாறுகளை சீர்படுத்த, கொழுப்பைக் கரைக்க, மூல நோய்க்கு மருந்தாக, இருதயத்தை பலப்படுத்த, இரத்தத்தை சுத்திகரிக்க, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க தடுப்பு அரண்களைத் தாண்டி உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபயாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய, உடலுக்கு புத்துணர்வு அளிக்க, உடல் எடையை குறைக்க, என்றும் இளமையாக இருக்கச் செய்ய, தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற, பசியைத் தூண்ட மற்றும் நோய் வராமல் காக்க, உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கேற்ப உணவாகவும், மருந்தாகவும் இம்மூலிகைக் கலவை பயன்படுகிறது.
விவசாயத்தில் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளில் டீ.டீ.டி.பென்சீன் யஹக்ஸா குளோரைட் மற்றும் இமிடகுளோபிரிட் போன்ற மருந்துகளின் பாதிப்பு விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பாக இல்லாமல் இருக்க அதன் நச்சுத்தன்மையை இழக்கச் செய்து உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது என்பது எமது ஆய்விலிருந்து புலனாகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் 

விவசாயிகள் தங்களது உடலுக்கு தகுந்த பாதுகாப்போடு குறிப்பாக முகமூடி அணிந்து, கைகளுக்கு கையுறை, கால்களுக்கு காலுறை அணிந்து தங்களது வேலைகளைச் செய்வது நல்லது. பூச்சிக் கொல்லி மருந்து அல்லது குடிநோயால் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் திரிபாலா சூரணம் உட்கொள்ள தங்களது உடலுறுப்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யலாம். ஆங்கில மருந்து அதிகம் உண்பவர்கள் இதனை உணவாகவோ, மருந்தாகவோ காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இது ஒரு சர்வரோக 
இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இது ஒரு சர்வரோக நிவாரணியாக பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
ஒரு தேக்கரண்டி அளவு சூரணத்தை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்தலாம். தேனில் கலந்து ஒரு சிறு உருண்டையாக உருட்டி உட்கொள்ளலாம். இரவு உணவுக்குப்பின் முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் முன் உட்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தவிர மற்ற அனைவரும் இதை உட்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து உட்கொள்ள வாதம், பித்தம், கபம் போன்ற திரிகண தோ­ங்கள் நீங்கி முழு நலத்தோடு வாழலாம். இருப்பினும் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றால் அவர்களின் அனுபவப்படி,
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நேடிதுய்க்கு மாறு” - (குறள் 943)
என்ற குறளுக்கேற்ப நோய்வரக் காரணத்தையும், அதனை பயன்படுத்தும் அளவினையும் அறிந்து கொள்ளலாம். மேலும் மலச்சிக்கலை சீர்செய்ய திரிபாலா மலமிளக்கியாக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தருகிறது. ஆகவே இயற்கை மருத்துவ முறையினையும், மருத்துவத்தின் மேன்மையையும் முறையாக அறிந்து எந்த பக்க விளைவுகளும் இன்றி தேகத்தை தெம்பாக்கிட, பிணியின்றி பயணித்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வாழ்க்கையாக்கிட தொடர்ந்து பயிற்சி செய்வீர் மூலிகை மருத்துவத்தை.
என் நண்பர்களை 

துணுக்குகள் 2


எல்லாம் பயனுடைத்து

முனிவர் ஒருவர் தன் சீடரிடம் “பயனற்ற பொருள் ஒன்றை எடுத்துவா” என்றார். தேடி, தேடி பார்த்தார் சீடர். எல்லாமே ஒருவிதத்தில் பயனுள்ளதாய் இருந்தது. காய்ந்த சருகைக் கண்டான். அதுகூட எரும்பு தண்ணீரில் மிதக்க உதவிசெய்தது. “பயனற்ற பொருள் ஒன்றும் காணமுடியவில்லை” என்று சொன்னான் சீடன். “பயனற்றது எதுவும் இல்லை. எனவே அனைத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்” என்றார் முனிவர்.

நீங்க லவ் லெட்டர் கொடுத்தது வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு.
உங்க தங்கச்சிக்குமா?

 அஜீரணம் என்பது ஆதிநோய்.
மற்றதெல்லாம் மீதிநோய்.

 அடுத்தவர்மீது அக்கறை கொண்டால் வாழ்வில் குறைகள் குறையும்.

 மனவெறுமையில் தோன்றுவது வெறுப்பு, அது அன்பின் குறைவு - ச. இ. அ

 பணிவு
கனிவைத் தரும்
துணிவைத் தரும்
மகிழ்வைத் தரும்
துறவில் பிறப்பது பணிவு - ச. இ. அ

.
ஏழ்மைக்கு வாழ்த்துக் கூறு
அது உன்னை வாழவைக்கும்.


 காதல் போதையில் சொல்கிற வி­யங்களை நம்பினால் நாம் பேதைகளாகிவிடுவோம்.

 இறை அழைத்தலின் விழுதுகள்
அழைத்தலின் இலை - இழத்தல்
அதனின் விளைவு - கலத்தல்
அது தருவது - கொடுத்தல்

 மாணவர்களின் புதுவிளக்கம்

தேர்வு - அறிந்தும் அறியாததும்
சேர்மன் - வசூல்ராஜா
வகுப்பு - புரியாத புதிர்

 ஆற்றாமை
மணல் லாரியில் விழுந்தவனும். பெண் சாரியில் விழுந்தவனும் பொழச்சதில்லை.

 இறைவன் கீழே இறங்கிவர ஏழ்மை என்ற ஏணியைத்தான் பயன்படுத்துகிறார். அந்த படியில்தான் விடியலைக் காணமுடியும்.

சேர்த்து வைக்கும் இருப்பில், உண்மையின் இல்லாமை காணப்படும்.

 பிறர் முகம்பார்த்துச் சிரிப்பவர்களை விட தன் மொபைலைப் பார்த்துச் சிரிப்பவர்கள் அதிகம்.

 வாழ்க்கையில் தோற்றவர்கள் இருவகை :
ஒன்று, யார் பேச்சையும் கேட்காதவர்கள்.
இரண்டு, எல்லோர் பேச்சையும் கேட்பவர்கள்.


 எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும். அது போல்தான் சில உறவும். எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்.

 அங்கீகாரமும், அகங்காரமும்....
ஏழைக்கு கிடைக்காத எள்ளுருண்டைகள்..

 எல்லா சாமிகளை விடவும் “ஆமாம் சாமி” நிறைய வரம் தருது...

 சிரிப்பை மலிவானதாகவும், கோபத்தை விலை உயர்ந்ததாகவும் மாற்று. வாழ்க்கை எளிதாகி விடும்.

 தூக்கி எறியப்படும் தருணங்களில்தான்,
சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.

 அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அதற்கு பல தோல்விகளும், சில துரோகிகளும் தேவை.

 கல்யாணம் ஆன ஆண்கள் எல்லாருமே சிங்கங்கள் தான்!
ஆனால், வீட்டுக்கு போன உடனே தான் சிங்கத்து மேல காளி அம்மன் உட்கார்ந்து இருக்கும்!

 இமைகள் திறந்து நேசிப்பதை விட, இதயம் திறந்து நேசித்துப் பாருங்கள். உயிர் பிரிந்தாலும் உறவுகள் நீடிக்கும்...

 மோடி ஆட்சியின் 300 நாட்கள்
600 மத கலவரங்கள்
49 பேர் மரணம்
மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் அதிர்ச்சி அறிக்கை.

 ஜாதியின் பெயரில், மதத்தின் பெயரில் கொலை செய்யும் இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி!
ஆம், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடகரை கிராமத்தில் உள்ள தலீத் இனத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து தன் குடும்பத்தை வழிநடத்தும் சுப்ரன் சகுந்தளா தம்பதியின் மகளான, காயத்திரி சுப்ரன் நாட்டில் முதன் முதலாக தலீத் சமூகத்தை சேர்ந்த இவர் விமான ஓட்டியாக தேர்வு பெற்றிருக்கிறார்.

30. Don’t Compare yourself with anyone in this world...
if you do so, you are insulting yourself.


துணுக்குகள் 1

வலையில் பிடித்தது
1. ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும்போது... இன்னையருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், அந்த உறவை விட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை...

2. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல...
அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

3. எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும்...எல்லாம் உள்ளபோது நீ நடந்து கொள்ளும் 
முறையும்...வெற்றியை தீர்மானிக்கிறது.

4. தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்... சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்... பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தயங்கள்... இவர்களுடன் நான் இருப்பதைவிட, நான் அனாதையாக வாழ்வது மேல்.

நம் நாட்டு அநாகரிக சவுடால்

5. ஜப்பானுக்கு சுற்றுலா சென்ற நம் நாட்டுக்காரர் ரயிலில் பாக்க தோ­த்தில் எதிரே உள்ள சீட்டின் மேல் கால்போட்டு சொகுசாக அமர்ந்தபடி பயணம் செய்தார். இதை கண்ட ஒரு ஜப்பானியர் அவர் சீட்டைவிட்டு எழுந்துவந்து, நம்ம ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன் மடி மேல் வைத்துக் கொண்டார். நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே நம்ம ஆள் ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு ஜப்பானியர் சொன்னார், நீங்கள் சீட்டின்மேல் கால் போட்டு வந்தது எங்கள் நாட்டின் சொத்தை அவமதிப்பது போல் இருந்தது. இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினர். அதனால் உங்கள் செளகரியத்துக்காக என் மடி மேல் உங்கள் காலை வைத்துக் கொண்டேன் என்று சொன்னார். நம்ம ஆள் கூனிக்குறுகி, அவரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். அதற்கு அந்த ஜப்பானியர், இங்கு மடடுமல்ல, உங்கள் நாட்டிற்கு சென்றாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும் நடந்து கொள்ளுங்கள் என்று சிரித்த முகத்துடன் அறிவுறுத்தினார்.
நீதி : இந்த தேசத்தை சுத்தமாக வைத்திருப்பதோ அல்லது அலங்கோலப்படுத்துவதோ நம்முடைய கையில் மட்டுமே உள்ளது.

6. பெற்றோரை வணங்குவோம் :
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக் முடியாத நிலைக்கு வந்தவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிடடு வந்துவிடுவார்கள். எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில், ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். தாய் ‡ மகன் இருவருமே எதுவும் பேசவில்லை! ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார், ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்? என்று கேட்டான்.
அதற்கு தாயார், மகனே நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது, வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன் என்றாள். வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டச் சென்றாலும், மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் இந்த தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான்.
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்...நீ நல்லவனா, கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய். எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே.
எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், அசிங்கங்கள், அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொண்டு, குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறெதுவுமில்லை.
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். அவர்களை கண் போன்று பாதுகாப்போம்.

குற்றம் புரிந்தவன், சிறுகதை

சிறுகதை
குற்றம் புரிந்தவன்
- மகிழம்பாடி அந்தோணிசாமி

அந்த வீட்டில் ஒரே கூட்டம். எல்லாரும் அழுதுகொண்டிருந்தனர். அந்த வீட்டின் சொந்தக்காரர் உலகநாதன் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்து போனார். அவசர அவசரமாக அடுத்தடுத்த வேலைகளில் அங்கிருந்தவர்கள் ஈடுபடத் தொடங்கினார். கட்டிலில் கிடந்த அந்த சடலத்தை சரிபடுத்தும் போது, தலையணையின் உறை உள்ளிருந்து ஒரு கடித கவர் கீழே விழுந்தது. அது என்னவாக இருக்கும் என்று அதனைப் பிரித்துப் படிக்கும் பொழுது, அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.
‘நோயுடன் போராடும் நான் ஒருவேளை சாக நேர்ந்தால் அதற்காக யாரும் அழக்கூடாது. நான் சாக வேண்டியவந்தான். இந்த நோய் கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. அந்தத் தண்டனையை நான் வேண்டியவந்தான். இந்த நோய் கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. அந்தத் தண்டனையை நான் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
எனது மகன் சேகர் ஒரு நல்ல அரசு வேலையில் இருக்கிறான். தக்கத் தருணத்தில் அவனுக்குத் திருமணம் செய்விக்கக் கடவுளிடம் வரம் கேட்டேன். அவரும் என் குடும்பத்துக்கு ஏற்ற குணவதியை மருமகளாகக் கொடுத்தார். பெயர் அமுதா!
குடும்பத்தை நடத்துவதற்கு ஏற்ப எங்களுக்குப் போதிய வசதிகள் இருந்தும், ஏனோ என் மனைவி ‘காசு’ ‘காசு’ என்று அலைந்தவண்ணமே இருந்தாள். என் மகனும், மருமகளும் நல்ல அரசு வேலையில் இருந்ததனால் மாதந்தோறும் அவர்களின் ஊதியத்திலேயே குறியாய் இருந்தாள்.
அம்மா எது சொன்னாலும் மறுபேச்சே பேச மாட்டான் என் மகன். மகனைக் கைக்குள் போட்டுக் கொண்டு தன் மருமகளை அடிமைபோல் ஆட்டிப்படைப்பாள்.
அமுதாவுக்குத் தலைப்பிரசவம். அழகான ஆண் குழந்தை. அதில் என் மனைவிக்கு கொஞ்சம்கூட சந்தோ­மே இல்லை. அமுதா, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துவிட்டு, குழந்தையையும் பராமரித்து விட்டுத்தான். அலுவலகம் புறப்படுவாள். பம்பரமாய்ச் சுழலும் அவளுக்கு என் மனைவி ஓர் ஒத்தாசைகூட செய்யமாட்டாள்.
அலுவலகம் சென்றபிறகு, என் மனைவி என் பேரக்குழந்தையைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அது பசிக்காக அழுதாலும் சரி, மலம் கழித்தாலும் சரி. சண்டைக்காரர்களிடம் பேசுவதைப் போலவே அந்த பச்சிலங் குழந்தையையும் பேசி பாவத்தை சுமந்து கொள்வாள்.
எனக்கு மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் உள்ளூரிலேயே ஒருவனோடு ஓடிப்போனாள். அது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. என் வீட்டுச் சொத்துக்களை எனக்குத் தெரிந்தும், தெரியாமலும் திருட்டுத்தனமாக மகளுக்குச் சேர்த்து வந்தாள். என் மனைவி என் மகளுக்கு அடுத்தடுத்து ஆண் ஒன்றும், பெண் ஒன்றும் இறந்தே பிறந்தது.
அமுதாவைப் பற்றி என் மகனிடம், என் மனைவி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கோள் மூட்டி வந்தாள். ஒருநாள் அமுதாவை, என் மனைவி விளக்குமாற்றால் அடித்ததைக்கூட நான் தடுக்காத கோழையாய் இருந்தேன்.
இப்படி வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும். ஒருநாள் ......பைசா கூட பொறாத காரணத்துக்காக அமுதாவை என் மகன் நடத்தை கெட்டவள் என முத்திரை குத்தி வீட்டை விட்டே துரத்தி விட்டான்.
புகலிடமில்லா அவள், தன் தாய்வீடு சென்று விட்டாள். அடுத்த இரண்டொரு நாள் கழித்து என் மருமகளின் பெற்றோர்கள் என் வீடு வந்து வம்பு ஒன்றும் பேசாது “சந்தோ­மாக இருங்கள்” எனச் சொல்லி தன் மகளை என் வீட்டில் விட்டுச் சென்றார்கள்.
அன்றிரவே அவளைக் காயம்பட அடித்துத் துன்புறுத்தி, என் மகன் மீண்டும் விரட்டி விட்டான். அடுத்த நாளிலேயே அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டொரு நாள் கழித்து என் சம்மந்தி எங்கள் வீட்டுக்கு வந்து, ஏன் இப்படி என கண் கலங்கிப் போனார்.
அடுத்த ஒரு வாரத்திற்குள், “நான் என் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்” என்று அமுதாவிடமிருந்து எங்களுக்கு பதில் நோட்டீஸ் வந்தது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை எங்கள் குடும்பம் மதிக்கவில்லை. இதுதான் தலைவிதி என தன் பெற்றோருடனேயே தன் பிள்ளையுடன் வாழத் தலைப்பட்டால் அமுதா.
கடந்த மாதத்தோடு என் மகனுக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் பேரனுக்கு 22 வயது என நினைக்கிறேன். அவன் னி.ய.ய.றீ.இரண்டாமாண்டு படிப்பதாகக் கோள்வி.
என் மருமகள் ஒரு உத்தமி. அவளை மகளைப் போல் காத்து வரவேண்டிய நான், அந்தக் கடமையிலிருந்து தவறிய குற்ற உணர்வு என்னை இப்போது உறுத்துகிறது. ஒரு நல்ல மருமகளாக வைத்துப் பராமரிக்கக் கூடிய நிலையிலிருந்து நழுவிய தன்மை, என்னைக் கண் கலங்க வைக்கிறது. ஒரு நாளிலாவது மருமகள், பேரனுக்கு பரிந்து பேச இயலாத, மனைவிக்குப் பயந்தவனாக, தைரியமும் துணிச்சலுமில்லாதவனாக நான் இருந்தேன். ஒருநாளாவது நான் போய் என் பேரனை எட்டி நின்று பார்த்திருக்கிறேனா? ஆசையாக பேசி வேண்டியதை வாங்கிக் கொடுத்திருக்கிறேனா? அவனை அஞ்சாதே! பயப்படாதே! என ஆறுதல் சொல்லி இருக்கிறேனா?
கடவுள் எவ்வளவு தான் பொறுப்பார்?
அன்றொரு நாள் ...
வயலைச் சுற்றிப் பார்க்கச் சென்ற நான் பள்ளம் எனத் தெரியாது தடுமாறி கீழே விழுந்தது தான். இடுப்பின் பின்பக்கம் படக்கென்றது. வலியால் புழுபோல் துடித்த என்னை கட்டிலில் வீட்டிற்குத் தூக்கி வந்தனர்.
நல்ல மருத்துவர்களைப் பார்த்தோம். தண்டுவடம் முறிந்து விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கை விரித்து விட்டனர். அன்று இந்தக் கட்டிலில் மல்லாந்து படுத்தவன் தான். அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பமுடியாது.
வீட்டிலுள்ள என் மனைவி உட்பட எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை. நாளடைவில் படுக்கைப் புண் ஏற்பட்டு புழுக்கள் நெளியத் தொடங்கின. சகிக்க முடியாத துர்நாற்றம். நான் இப்போது அழுது என்ன பயன்? இவ்வாறு அவனது மகன் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களது வீட்டின்முன் கார் நிற்கும் சத்தம் கேட்டது. அனைவரும் வாசலையே திரும்பிப் பார்த்தனர்.
காரிலிருந்து ஒரு குருவானவரும், அவரையடுத்து ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணியும் , கூடவே ஒரு பையனும் இறங்கி அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதுதான் அவுங்க மருமக.. இந்தப் பையன்தான் பேரனாய் இருக்குமென்று ஜனங்ள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்குள்ள நிலைமையை ஒருவாறு யூகித்துக் கொண்டனர்.
முடிவு? ( அவரவர் மனநிலைக்கே விட்டுவிடுகிறேன் )

கல்புர்கி அவர்களின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

என்ன செய்யப் போகிறோம்?
- குறிஞ்சி
16.9.2015 அன்று மாலை 6 மணிக்கு குடந்தை காந்தி பூங்காவுக்கு முன்பாக ஓர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் குடந்தை கிளை, அம்மாச்சத்திரம் கிளை, திருபுவனம் கிளை, திருநாகேஸ்வரம் கிளை ஆகியன ஒன்று சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டம். கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கல்புர்கி அவர்களின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. முற்போக்குச் சிந்தனையாளன் என்ற அடிப்படையில் நானும் அவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றேன். மாலை 6 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது. தொடக்கத்தில் பத்து நிமிடம் முழக்கங்கள், பின்னர் உரைவீச்சுகள், நிறைவாக பத்து நிமிடம் முழக்கங்கள் என்று அந்நிகழ்ச்சி ஓழுங்கு செய்யப்பட்டடிருந்தது.

குடந்தை காந்தி பூங்காவுக்கு அருகில் எந்த நாளும் மாலை நேரத்தில் ஓரளவு கூட்டம்; இருக்கும். நடைப்பயிற்சி செய்வோர், பொருள்கள் வாங்குவோர் பணிமுடித்து வீடு திரும்புவோர், சிறு வணிகர் என அந்த இடத்தில் அசைந்து கொண்டே இருக்கும். மக்கள் திரளுக்கு முன்பு, தத்தம் கருத்துக்களை எடுத்துரைக்க கூடியிருந்தனர் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும். ஆனால் எனக்குள் ஓர் ஐயம் இருந்து கொண்டே இருந்தது. கூர்மையாக சிந்தித்து உள்வாங்க வேண்டிய செய்திகள் சமூக அக்கறையோடு முன்வைக்கப்படும் வரலாற்றுத் தரவுகள் போன்றவற்றை நம்முடைய மக்கள், எந்த அளவுக்குக் கேட்பார்கள் என்ற ஐயம்தான் அது. எனக்குள்ளே ஓர் அவநம்பிக்கை அசைந்து கொண்டே இருந்தது. முதல் ஆளாக பேசுவதற்கு அழைக்கப்பட்ட நான் என்னுடைய உரையை ஐந்து நிமிடங்களுக்குள் முடித்துக் கொண்டேன். இறை நம்பிக்கையின் தோற்றத்தையும், அவசியத்தையும் விளக்கி இன்று அந்நம்பிக்கை அரசியல் ஆக்கப்படும் அபாயத்தை மக்கள் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செய்திகளை விளக்கி பகுத்தறிவாளரும் பேராசிரியருமான கல்புர்கியின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து என் உரையை முடித்திருந்தேன். என்னைத் தொடர்ந்து பேச வந்த பல்வேறு தோழமை அமைப்பினரும் எழுத்தளர்களும் கலைஞர்களும் மாலை நேர பல்கலைக்கழகம் என்று நினைக்கத்தக்க விதத்தில் அரிய உரைகளை வழங்கினர். அசைந்து கொண்டிருந்த மக்கள் திரளில் பலர் ஆங்காங்கே அப்படியே நின்று உரைகளைக் கேட்டனர். மக்களின் ஆர்வம் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தியோருக்கு பன்மடங்கு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. நகைச்சுவை இல்லாத விரசமில்லாத கூர்மையான சமூக, அரசியல் கருத்துகளைக் கேட்க மக்கள் தயாராக உள்ளனர் என்பதை அந்நிகழ்வு எனக்கு உணர்த்தியது. சமூக அக்கறையோடு தொண்டு செய்யும் அமைப்புகள் தான் இன்றைய தேவை என்பதை உணர்ந்தேன்.

சரி, ஆர்ப்பாட்ட உரைகளில் இருந்து ஒருசில செய்திகளையாவது நாம் பகிர்ந்து கொள்ளலாமே. அண்மையில் நர்நாடக மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைகவர்நராக இருந்து ஓய்வு பெற்ற முற்போக்குச் சிந்தனையாளர் கலபுர்கி மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்து மத வெறி தூண்டப்படுவதையும், புராணக் கதைகளின் வழி மூட நம்பிக்கைகள் வளர்க்கப்படுவதையும் பேராசிரியர் கல்புர்கி கண்டித்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் பசவண்ணா என்பவரால் தொடங்கப்பட்ட பார்ப்பனரயல்லாதோர் இயக்கம் ‡ சாதி மறுப்பு இயக்கம் வீர சைவம் என்று வளர்ந்தது. ஆனால் காலப்போக்கில் அவ்வீர சைவம் தன்னுடைய முற்போக்குத் தன்மைகளை இழந்து ‘லிங்காயத்’ என்னும் ஒரு சாதியாக மாறிப் போனது. இன்னும் சொல்லப் போனால் இந்துத்துவத்துக்கு சேவை செய்யும் ஓர் ஆதிக்க சாதியாக வீரசைவ மரபு திசைமாறிப் போனது. இந்த வரலாற்று அவலத்தை அதே லிங்காயத் சாதியில் பிறந்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கல்புர்கி சுட்டிக்காட்டினார். இந்துத்துவம் ஆபத்தானது என்று விளக்கினார். மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று பரப்புரை செய்தார். இவற்றையயல்லாம் இந்து மத வெறியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத கோழைகள், அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர். இன்று வரை கொலையாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை. இந்நிகழ்வுக்கு பிறகு கர்நாடகத்திலேயே பகவான் என்ற முற்போக்கு எழுத்தாளர், இந்து மதவெறியர்களால் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

கல்புர்கி படுகொலைக்கு முன்பே, மராட்டியத்தில் முற்போக்குச் சிந்தனையாளர் நரேந்திர தபோஸ்கர் இந்து மதவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான கொடூரம் அதே மராட்டிய மாநிலத்திலேயே இடது சாரி சிந்தனையாளரும் தலைவருமான கோவிந்த பன்சாரே இந்து மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கொடுமை. இந்த படுகொலைகளுக்குக் காரணமானவர்களை இன்னும் காவல்துறை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. நரேந்திர மோடி தரும் நல்லாட்சியின் இலட்சணம் இது. தமிழகத்தில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் எப்படி நெருக்கடிக்கு உள்ளானார் என்பது நாம் அறிந்ததே.
இப்படி முற்போக்குச் சிந்தனையாளர்கள் கொல்லப்படுவது இன்று நேற்றல்ல. காலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்கூட இத்தகையதுதானே. நம் தமிழ்நாட்டில் நடந்த நந்தன் எதிர்ப்பும், வள்ளலார் மறைவும் ஆதிக்க சக்திகளின் படுகொலைகளே. முற்போக்காளர்கள் சிந்தித்து ஒன்று சேர வேண்டிய தருணம் இது. இத்தகைய கருத்துகள் ‡ இன்னும் பல வரலாற்று நிகழ்வுகள் ‡ தரவுகள் என ஆர்ப்பாட்ட உரைவீச்சுகள் அமைந்திருந்தன. இரவு வீடு திரும்புகையில் பல்கலைக்கழக வகுப்பறையில் இருந்து வெளியே வந்த உணர்வு. ஆர்ப்பாட்த்தின் தொடக்கத்தில் இருற்த அவநம்பிக்கை மறைந்து நம்பிக்கை ஒளி என்னுள் பரவியிருந்தது. அந்த நம்பிக்கையை உங்களோடு பகிர்ந்து கொண்ட மனநிறைவுடன் விடைபெறுகிறேன். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

தமிழரின் அறிவியல் சரித்திர சிறப்பு

தமிழரின் அறிவியல் சரித்திர சிறப்பு

பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள்
அருட்சகோ. விமலி
அறிவியல் என்ற சொல்லைக் கேட்கும்போதெல்லாம் மேலைநாடுகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. அறிவியல் அறிஞர்கள் என்றால் கலிலியேவும், நியூட்டனுமே நம் கண்முன் வந்து நிற்கின்றனர். ஆனால் இவர்கள் கண்டனவாகப் பேசப்படும் பல உண்மைகளை, இன்றையத் தலைமுறையினர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தமிழர்கள் அறிந்தனர் என்ற உண்மையை உலகம் அறிந்ததாகும். இவ்வகையில் பண்டையத்தமிழர் உணர்ந்த அறிவியல் களங்கள் பல.
வானவூர்தியல் :
பறவையைப்போல் பறக்க முடியுமா? என முதலில் கற்பனை செய்த மனிதன், அக்கற்பனை உண்மையானபோது விமானமாகப் பிறந்தது. இவ்வாறு பிறந்த வானவூர்தியைப் பற்றிய செய்தியைத் தமிழ் இலக்கியத்தில் புறநானூறும், சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும் எடுத்தியம்புகின்றன.
“கோநகர் பிழைத்த கோவலன் தன்னொரு
வானவூர்தி ஏறினள் மாதோ” (சிலம்பு ‡ மதுரை காண்டம் 2‡28‡198)
என்று கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் கூறுகின்றது. மலைக்குறவர்களின் கண்ணெதிரில் ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய ஊர்தியில், கண்ணகி ஏறி தெய்வமாகிறாள் என்றும், 
வல்வன ஏவா வானவூர்தி
எய்துய என்பதஞ் செய்வினை முடித்தெனக் (புறம் ‡ 27)
என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட புறநானூற்று வரியும் மற்றும் சீவக சிந்தாமணியின் திருத்தக்கத்தேவரும் வானவூர்தியைக் கட்டமைத்த விதம், பற்றி கூறுகின்றனர். ஏமாங்காத மன்னன் சச்சந்தன் தன் மனைவி விசயை, தற்காத்துத் தப்பிச் செல்வதற்கான வேந்திறலான் பெருந்தச்சனைக் கூவியோர் எந்திரவூர்தி இயற்றிடின் என்றனராம். அதனால் அன்றைய கட்டமைப்பு வித்தகர் ஏழு நாட்களில் மயிற்பொறிஉருவாக்கிய விதத்தை இன்றைய பொறியாளரையும் வியப்பில் ஆழ்த்தும் என்பதை,
“பல்கிழியும் பயிலும் துகில் நுலோடு
நல்லரக்கும் மெழுகும், நலஞ் சான்றன
வல்லனவும் அமைத்தாங்கு ஏழு நாளிடை
செல்வதோர் மாமயில் செய்தனன் அன்றே”
என்ற பாடல் வரிகளும், பலவகைச் சீலைத் துணிகளும் பற்றுதற்குரிய பயின, இனப்பசை, சரிகை முதலான வெள்ளி இழைகளும் நல்ல அரக்கு வகைகளும், மெழுகு போன்ற கொழுப்பு வஸ்துக்களும் கொண்டு வானவூர்தி அமைக்கப்பட்டது என்பதை 
“பண்தவழ் விரலில் பாவை
பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் பொழிந்து
விசும்புடைப் பறக்கும் வெய்ய”
சீவக சிந்தாமணி 239 என்ற பாடல் வரிகளும் வெளிப்படுத்துகின்றன.
நீரியல் :
ஒருபடிப் பாலையோ (அ) நீரையோ குறைத்து அளந்து காட்டமுடியாது. அழுத்தினால் நீர்ப்பொருட்கள் அளவில் சுருங்குவதில்லை. இவ்வியல்பை நீர்ப் பொருளின் சுருங்கா இயல்பு என்று அறிஞர் பாஸ்கல் கூறியுள்ளார். அதையே 12- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் அழகாகக் கூறுகிறார். காட்டாக,
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி தொழி”
என்பதாகும். நீருக்கு அழுத்தம் உண்டு என்பதை, “ஆழ்கடல் நீர் ஆழ அமுக்கி முகக்கீனும்” என்ற தொடர் வெளிப்படுத்துகிறது. வேளாண்மைத் தொழிலுக்கு ஏரிகளிலிருந்து நீரினைப் பெற நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு தேவையான பொழுது வாரி, மதகு, மடை, வாய்க்கால், மடு போன்றவற்றைக் கட்டி தமிழர்கள் நீரைப் பயன்படுத்தினர் என்பதை
“தேவரின்றி வாடும் மரமெல்லாம்
நீர் பாய் மடையின்றி
நீள் நெய்தல் வாடும்”
என்ற வரிகள் உணர்த்துகின்றன. மேலும் நீரின் இன்றியமையாமையை
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு”
என்ற குறள்வழி உலகத்திலுள்ள உயிர்களனைத்தும் நீரில்லாமல் வாழமுடியாது என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அணுவியல் :
அறிவியல் துறையின் முக்கியப் பிரிவாக இருப்பது அணுவியல், அணு மிகச்சிறிய துகளாகும். அணுக்களை உடைக்க முடியும் என மெய்ப்பித்துக் காட்டியவர் ரூதர்போர்டு. இருவருக்கு முன்னரே அணுவை பிளக்க முடியும் எனக் கூறியவர் ஒளவையார்,
“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்” (திரு.பா.- 2)
எனக் கூறியுள்ளார். இதனையே கி.பி.6-8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரும்
“அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே” (திருமந்திரம் - 2008)
என்று கூறியுள்ளார். கண்ணுக்குப் புலப்படாத நுண்பொருளே அணுவாகும். இத்தகைய அணுவுக்கு அணுவாக உள்ள பொருளை ஆயிரமாயிரமாகக் கூறுசெய்து, அந்த ஒரு கூறை ஆராய்ந்து காண வல்லவருக்கு உயிராகிய அணுவில் நுட்பாக மறைந்திருப்பவன் இறைவனாவான் என்றார். இவ்வாறு அணுவைப் பற்றிய சிந்தனைகளைப் பண்டையப் புலவர்கள் மக்களிடையே வேரூன்றச் செய்தனர்.
உலகம், அணுக்களின் பிணைப்பால் வெவ்வேறு வடிவமாக மாறியுள்ளது. இந்த அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது பல்வேறு வடிவங்களைப் பெற்று மாற்றமடைகின்றன. காட்டாக, “வைத்தறு கலாதி எல மண்ணினால் வருமாபோல்” என்று மண்ணை எடுத்துக் குடமாக, சட்டியாக, செம்பாக அழகான வெவ்வேறு பொம்மைகளாகச் செய்கிறோம் என்றாலும், மூலப்பொருள் மண்தான். அணுக்கள் சேரும்போது சேர்க்கையின் அளவினைப் பொறுத்து புல்லாய், புழுவாய், மரமாய், கல்லாய், யூரேனியமாய், விறைநிலமாய், மனிதனாய் என்றெல்லாம் விளங்குகின்றன. அணுவின்றி ஒருபொருளும் அசையாது என்பது உண்மையாகும்.

அண்டவியியல் :
வெட்டவெளியும், அதனுள் அடங்கியிருக்கும் பொருள்களும் அண்டமாகும். இதைத்தான் பிரபஞ்சம், அகிலம் என்று கூறுவார்கள். இதில் கோடிக்கணக்கான மீன்மண்டலங்களும் வால்மீன்களும், எரிமீன்களும் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை கி.பி.6‡8 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாணிக்கவாசகர் அழகாகக் கூறுகிறார்.
“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி”
என்னும் வரிகளில் அழகாக இயம்புகிறார்.
“பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனை, அன்றாட வாழ்வில்
பயன்பாட்டிற்குரிய வாழ்வியல் சிந்தனை”
என்ற கருத்திற்கிணங்க பழந்தமிழர்களின் அறிவியல் அறிவு வளர்ச்சிப் பெற்று, இன்று நம் மக்களிடம் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. வானவூர்தியின் விஞ்ஞான பரிணாம வளர்ச்சி, நீர்மப் பொருட்கள் அளவில் சுருங்குவதில்லை. உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களின் பிணைப்பாலானது. விண்மீன்கள் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று வலம் வருகின்றன. இந்த உலகமே அண்டத்திற்குள் அடக்கம் என்பதையும் இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருட்களிலும் அறிவியல் தொடர்பான செய்தியை கூறியுள்ளனர். இவை பின்வரும் சந்ததியினருக்கு வழிக்காட்டியாகவும் கருத்துப்புலப்படுத்தும் ஊடகமாகவும் இருந்தார்கள். இவைகளை வீழ்த்திய தொடர்பு ஊடகங்கள் உலகில் இல்லை என்பதை நாம் அறியமுடிகிறது.
அறிவியலில் சிறந்திருந்த தமிழகம், மீண்டும் அறிவியலில் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது எனலாம். மேல்படிப்பு படிக்கின்ற ஆராய்ச்சியாளர்கள், புதியவைகளை கண்டுபிடிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்ட வேண்டும். அறிவியல் சார்ந்த கருவிகளுக்கு மேல்நாடுகளையே சார்ந்து நிற்கிறோம். அதனால் பெரும் தொகையை மேல்நாடுகளுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அறிவியலில் ஆர்வம் காட்டுவோம். நம் அறிவியல் பாரம்பரியத்தினை வளர்த்திடுவோம்.

ஜெபமாலை ஜெபிக்கப்படும் விவிலிய வார்த்தைகள்


திருவிவிலியத்தில் ஜெபமாலையின் குறிப்புகள் இல்லை. 
ஆனால் திருவிவிலியத்தால்தான் ஜெபமாலை கோர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெபமாலை ஜெபிக்கப்படும் விவிலிய வார்த்தைகள்

மகிழ்ச்சி மறையுண்மைகள்

மங்கள வார்த்தை (லூக் 1 : 26 - 38)
2. அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச சந்தித்தல் லூக் (1 : 40 - 56)
3. இயேசு பிறந்தது (லூக் 2 : 6 - 20)
4. இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் (லூக் 2 : 21 - 29)
5. இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்தது (லூக் 2 : 41 - 51)

ஒளியின் மறையுண்மைகள்

1. இயேசு திருமுழுக்கு பெற்றது (மத் 3 : 13 - 17)
2. கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது (யோவா 2 : 1 ‡ 11)
3. இயேசுவின் மலை போதனை (மாற் 4 : 13 - 17)
4. இயேசு உருமாற்றமானது (மாற் 17 : 1 - 8)
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது (லூக் 22 : 14 - 20)

துக்க மறையுண்மைகள்

1. கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்தது (மத் 26 : 38 - 48)
2. கல்தூணில் கட்டி அடித்தது (மத் 27 :26)
3. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டியது (மத் 27 : 29)
4. இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவா 19 : 17)
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தது (லூக் 23 : 33 - 46)

மகிமை மறையுண்மைகள்
1. இயேசு உயிர்த்தது (லூக் 24 : 1 - 12)
2. இயேசு விண்ணகத்திற்கு சென்றது (லூக் 24 : 50 - 51)
3. தூய ஆவி பொழியப்பட்டது (தி. பா. 2 : 1 - 4)
4. அன்னை மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. (தி.வெ 12 : 1 -17)
5. விண்ணக, மண்ணக அரசியாக அன்னை மரியா முடிசூட்டப்பட்டது.

விவிலிய வார்த்தைகளாலான அருள்நிறைமரியே செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே
அருள்மிக பெற்ற மரியே (லூக் 1 : 28)
ஆண்டவர் உம்முடனே (லூக் 1 : 28)
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே (லூக் 1 : 41)
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே (லூக் 1 : 42)
தூய மரியே இறைவனின் தாயே (லூக் 1 : 43)
பாவிகளாயிருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் 
வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென். (யாக் 5 : 16)

அக்டோபர் மாத புனிதர்கள் வரலாறு

புனிதர்கள் வரலாறு

அக்டோபர் 1 : குழந்தை இயேசுவின் புனித தெரசாள்.
பிறப்பு : பிரான்சு நாடு, அலென்சோவில் 1873 ஜன 2 பிறந்தார்.
பெற்றோர் மற்றும் குடும்பம் : தந்தை லூயிஸ் ஜோசப், தாய் செலீகெரின். 9வது கடைக்குட்டி பிள்ளை. அனைவரின் அன்பைப் பெற்று வளர்ந்தவர் சிறு வயதிலேயே சிறு தவறுக்கும் மன்னிப்பு கேட்பார்.
வாழ்வில் வந்த சோதனை : அன்னையின் இறப்பு 1877 ஆகஸ்ட் 28. அக்கா பெளலின் துறவறம் சென்றதால் பாதிப்பு. 1882 அக்டோபர் 15, கடும் நோயால் தாக்கப்பட்டார். 1884இல் புன்னகை அன்னையின் காட்சியால் புத்துயிர் பெற்றார்.
புதுநன்மை : 1884 மே 8, இயேசுவின் முதல் முத்தம் என்கிறார்.
துறவற அழைப்பு : 16 வயதில் திருத்தந்தையின் சிறப்பு அனுமதியுடன் கர்மேல் மடம் சென்றார்.
திருவுளம் : 1889 ஜன 10 ; துறவற வார்த்தைப்பாடு 1890 செப் 8.
கிறிஸ்துவே என் அன்பு ; அவரே என் நிறை வாழ்வு என்று வாழ்ந்தார்.
சிறப்பு குணங்கள் : எளிதில் வளைந்து இறைவனிடம் தன்னை முழுவதும் கையளித்தார்
இறப்பு : 1897 செப் 30இல் இறைவா உம்மை அன்பு செய்கிறேன் என்று கூறி இறந்தார்.

அக்டோபர் 2 : காவல் துVதர்கள்
விழா : 1582 பிப்ரவர் முதல் கொண்டாடப்படுகிறது.
பணி : 1. இறைவனை துதிப்பது (தூயவர, தூயவர்)
2. இறைவனின் செய்தி தொடர்பாளர்கள் வி. ப. 23: 20, 21.
3. மனிதர்களை கண்காணிப்பது மத் 18 : 10
தி.பா. 91 : 11
நமது பணி : தூதர்களை மதிப்புடன் காண்பது, நம்பிக்கை வை, அன்பு செய், ஆபத்து, துன்பம், சோதனை நேரம் பாதுகாப்பு வேண்டி அவர்பக்கம் திரும்பு ‡ புனித பெர்னார்து. 
  
அக்டோபர் 4 : புனித பிரான்சிஸ் அசிசி
பிறப்பு : இத்தாலி அசிசி நகர். தந்தை : பீட்டர் பெர்னார்டோன், துணி வியாபாரி. தாய் : பீக்கா.
இளமைப்பருவம் : ஆடம்பர வாழ்வு, நடை உடை பாவனையில் பெருமிதம். ஆனால் ஏழை எளியவர்கள்மீது பரிவு காட்டினார். கையேந்தி கேட்ட பிச்சைகாரருக்கு, தந்தை உதவி செய்யாததால் தேடி சென்று அன்றைய 
வருமானம் முழுவதும் கொடுத்தார். மக்கள் பாராட்டினர். பெற்றோர் திட்டினர்.
1201இல் போர் வீரரானார். கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின் விடுதலை. 1204இல் நோயுற்றார்.
துறவற அழைப்பு : உள்ளத்தில் ஆன்மீக தேடலினால் தனிமையை நாடினார். செபித்தார். காட்சியில் என் ஆலயத்தைப் பழுதுபார் என்று இயேசு கூறினார்.
மத் 10 : 9 மறையுரையில் தெளிவு பெற்று, பிச்சை எடுத்து, ஏழைகளுக்கு உதவினார்.
புதிய சபை உருவாக்கம் : இடிந்து விழும் ஆலயத்தை தாங்கி நிற்பது போன்று கனவுக்கண்டார். ஒரு சபையை நிறுவி திருத்தந்தை 3ஆம் இன்சென்ட்டால் அனுமதி பெற்றார்.
அசிசியில் பிரான்சிஸ் ஆற்றிய உரையால் கவரப்பட்டு பின்தொடர்ந்த கிளாராம்மாள் துணையுடன் கிளாரம்மாள் ஏழை மகளிர் சபையை பெண்களுக்குத் தொடங்கினார். அவர் செபித்த முறையை பார்த்த அநேகர் பின்பற்றினர்.
இறப்பு : தொடர்ந்து ஏழையாக  வாழ்ந்து எளிமையை போதித்து, இயற்கையை நேசித்து 1226 அக் 3 இல் இறந்தார்.
புனிதர் நிலை : 1228, ஜீலை 16இல் திருத்தந்தை 9ஆம் கிரகோரி புனிதராக்கினார்.

அக்டோபர் 5 : புனித பவுஸ்தினா கோவாஸ்கா
பிறப்பு : போலந்து 1905, ஆகஸ்ட் 25.
பெற்றோர் : ஸ்தனிஸ்லாஸ், மரியன்னா.
தொழில் : தச்சுத் தொழில், விவசாயி, அன்பும், பக்தியும் , இரண்டு கண்கள்.
அழைப்பு : 7 வயதில் நற்கருணை ஆண்டவர் அழைப்பதை உணர்ந்தார். 16 வயதிலும் அனுமதி கிடைக்கவில்லை. இயேசு, காட்சியில் மடத்தில் சேருமாறு கட்டளையிட்டார். தெரியாமல் தொடர்வண்டி ஏறி வார்சா வந்தார். போதிய கல்வியறிவு இல்லை. நிபந்தனையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்.
பணி : சமைப்பது, தூய்மைப்படுத்துவது, தோட்டங்களைப் பராமரிப்பது.
திருவுடை : 1926 , ஏப்ரல் 30.
பெயர் மாற்றம் : பவுஸ்தினா ‡ ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பொருள்.
சிறப்பு : 1931, பிப்ரவரி 22இல் இயேசு இறை இரக்கத்தின் அரசராக காட்சி அளித்தார். வெள்ளை உடை இதயத்திலிருந்து வெள்ளை, சிவப்பு நிற ஒளி பாய்ந்து வந்தது.
இறப்பு : 1938 அக்டோபர் 5இல் இறந்தார். 2000 ஏப்ரல் 30இல் புனிதர் பட்டம் 21ஆம் நூற்றாண்டின் முதல் புனிதர்.

அக்டோபர் 6 : புனித புருனோ
பிறப்பு : ஜெர்மனி கோலோன் நகர். சிறுவயதில் அன்பு செயலில் ஈடுபட்டு இறைவனின் மகனாக வாழ்ந்தார்.
அழைப்பு : 25 வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தனது பேச்சாற்றலால், மெய்யியல் கருத்துக்கள், இறையியல் கருத்துகளால் மாணவர்கள் மனதை கவர்ந்தார்.
பணி : நீம்ஸ் மறைமாவட்டத்தின் தலைமை செயலராக செயல்பட்டார்.
இவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒரு சிறிய வீடு அமைத்து தங்களை எந்நேரமும் செபத்தில் ஈடுபடுத்தி எளிமையாக வாழ்ந்தவர். இவரது மாணவர் 2ஆம் அர்பன் என்ற பெயரில் திருத்தந்தையானார். அவருக்கு ஆலோசகராகவும், திருப்பாடல், பவுலின் கடிதங்களுக்கு விளக்கவுரை எழுதினார்.
இறப்பு : 1101 அக்டோபர் 6இல் இணைவனில் இணைந்தார்.
புனிதர் பட்டம் : 1621 பிப்ரவரி 7 திருத்தந்தை 15ஆம் கிரகோரியால் கொடுக்கப்பட்டது.

அக்டோபர் 7 : தூய செபமாலை அன்னை
கூடி செபிக்கும் வழக்கம் தொடக்கத் திருச்சபையில் இருந்தது. திருப்பாடல்கள் ஒருபகுதி ஒருவர், மற்றொரு பகுதி மற்றொருவர் என மாறி மாறி சொல்லி செபித்தார்கள். இறந்தவர்களுக்காக 150 திருப்பாடல்கள், படிக்காத துறவிகள் 50 முறை பரலோக மந்திரம் செபித்தார்கள்.
அன்னையை போற்ற, இடையிடையே விண்ணப்ப இணைப்புடன், கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொன்னதை ஒரு செபமாலையாக செபித்தனர்.
செபமாலையின் திருத்தந்தை என்று 13ஆம் சிங்கராயர் அழைக்கப்படுகிறார்.
பாவிகள் மனம் திரும்புதல், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மீது இரக்கம் காட்டுதல்,
மீட்பு வரலாற்றை மூன்று கட்டமாக பிரித்தார். இஸ்ராயல் மக்கள் காலம், இயேசுவின் காலம், திருச்சபையின் காலம்.
இறப்பு : கி.பி.74.

அக்டோபர் 19 : புனித சிலுவை பவுல்
பிறப்பு : இத்தாலி, ஓவாதாவில் 1694 ஜனவரி 3இல் பிறந்தார்.
தந்தை, தாய் : லூக் டேனனி, அன்னா மரியா மாசாரி.
சிறப்பு : சிலுவையே புத்தகம், சிலுவையே முன்மாதிரியாக வைத்து வாழ்வது. அதிக நேரம் நற்கருணை ஆண்டவர் முன் அமர்ந்து செபித்தல்.
துறவற சபை உருவாக்குதல் : இயேசுவின் பாடுகள் மூலமே இறைவன் அன்பை முழுமையாக சுவைக்க முடியும் என்றுணர்ந்து புதிய சபையை உருவாக்கினார்.
இறப்பு : 1775இல் அக்டோபர் 18.

அக்டோபர் 22 : புனித இரண்டாம் யோவான் பவுல்.
பிறப்பு : போலந்து நாடு வோடா நகர் 1920, மே 18.
பெற்றோர் : கரோல், எமிலியா.
இளமைப்பருவம் : அன்னை மரியாள் பக்தி நற்கருணை மீது பக்தி அதிகம்.
1929, ஏப்ரல் 13இல் தாயின் இறப்பு.அண்ணன் மருத்துவம் படித்தார். தொற்றுநோயால் உயிர் நீத்தார்.
படிப்பு மற்றும் திறமைகள் : 1938இல் மெய்யியல் படித்தார். கிரேக்கம், இலத்தீன், ஜெர்மனி மொழிகளை கற்றார். சிறந்த அறிவுடையவராய் இருந்தார். கால்பந்தாட்டம், பனிசறுக்கு, நீச்சல், நாடகம் எழுதுதல், நடிப்பில் சிறந்து விளங்கினார். இறைவனால் ஈர்க்கப்பட்டு குருமடம் சென்றார்.
குருத்துவ அழைப்பு : 1942இல்
அருட்பொழிவு : 1946, நவம்பர் 1
முனைவர் பட்டம் : 1948இல்
சிறந்த மறையுரையால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தார்.
துணை ஆயர்நிலை : 1958, செப் 28இல்
திருத்தந்தை பட்டம் : 1978, அக்டோபர் 16
1985, மே 13இல் சுடப்பட்டார். பிழைத்துக் கொண்டார்.இறப்பு : 2005,, ஏப்ரல் 2இல் இறந்தார்.

அக்டோபர் 24 : புனித மரிய கிளாரட்
பிறப்பு : ஸ்பெயின், கட்ட போனியா என்ற இடம். 1807 டிசம்பர் 23இல் பிறந்தார். நெசவு தொழிலாளியின் மகன்.
அழைப்பு : 1829இல் விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் சேர்ந்தார்.
அருட்பொழிவு : 1835
இறையியல் பட்டம் : 1839
சிறப்பு : ஏழைகளின் மனம் கவர்ந்தவர்.
பணி : 1849இல் கிளரிசியன் சபையை தொடங்கினார்.
சமயம் சார்ந்த நூலகம் அமைத்தார். ஸ்பெயின் அரசியின் பரிந்துரையால் பேராயரானார். குருமடத்தை சீர்செய்தார். குருக்களின் ஒழுக்க முறைமைகளை சரிசெய்தார்.
இறப்பு : 1915இல் அக்டோபர் 24இல்.


Ads Inside Post