Pages - Menu

Tuesday 26 December 2017

கந்து வட்டி மோசடிகள்

கந்து வட்டி மோசடிகள்

கந்து வட்டி மோசடிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக் கொண்டிருக் கிருக்கின்றன. நாள் வட்டி, மீட்டர் வட்டி, குதிரை வட்டி என்று அநியாயமாக ஏழை மக்களின் பணத்தை சுரண்டி பணக்காரர் ஆகின்றனர். கடன் வாங்கியவர் பணம் கட்ட முடியாமல் தீக்குளிப்பதும், தற்கொலை செய்துக் கொள்வதும் நடைபெறுகின்றன. எல்லாம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பால் நடை பெறுகின்றன.
நான் கோவையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஓர் அம்மையார் காய்கறி வியாபாரம் செய்தார். 50 ரூபாயை கடனாக வாங்கி காய்கறி வாங்கி வீதிகளில் சுற்றித் திரிந்து காய் கறி விற்று, அன்றைய தினம் வாங்கிய கடனுக்கு 50 ரூபாய் வட்டியும், 50 ரூபாய் முதலும் கட்டுவார். இந்த அநியாயத்தை கேள்விபட்டு பேங்க் முதல்வரிடம் அப்பெண்ணுக்கு சிபாரிசு செய்தேன். 500 ரூபாய் கடனாக அப்பெண்ணுக்கு குறைந்த வட்டியில் கொடுத்தார். அந்த பெண் அந்த 500 ரூபாயை தம் மகளின் காதணிவிழாவிற்கு செலவழித்த பிறகு மீண்டும் 50 ரூபாய் கந்து வட்டிக்கு

இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா

இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா
புத்தாண்டு  விழா  ஜனவரி - 1, 2018
எண் 6:22-27, கலா 4,4-7, லுVக் 2,16-21

அருட்பணி.  பு. சிரில் ரிசர்ட் கிருபாகரன்

இன்று அன்னையாம் திருச்சபை கன்னிமரியாள் இறைவனின் தாய் என்கின்ற மறைப்பொருளையும், புத்தாண்டு தினத்தையும் சிறப்பிக்கின்றது. கன்னி மரியாள் இறைவனின் தாய் என்கின்ற நம்பிக்கைக் கோட்பாடு கி.பி.451 இல் எபேசு பொதுச்சங்கத்தில் கிறிஸ்துவின் மனித இயல்பிலும், இறையியல்பிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்டது. இந்த நம்பிக்கைக் கோட்பாட்டின் வழியாக தப்பறை கொள்கைகளை அகற்றி திருச்சபையின் வாழ்வை வளமையாக்கிய தினம் இன்று. ‘இலையுதிர் காலம் என்பது மரணமல்ல. இன்னொரு தயாரிப்புக்கான தொடக்கம்.  அஸ்தமனம் என்பது மறைவு அல்ல. இன்னொரு உதயத்திற்கான பதுக்கம்,’ என்ற வைரமுத்துவின் வார்த்தைகளைப் போல, இலையுதிர் காலம் போலவும், அஸ்தமனம் போலவும் 2017 ஆம் ஆண்டில் நடந்த நன்மை, தீமை அனைத்தும் மறைந்து, புதிதாக துளிர்த்துள்ள, புதிய உதயமாகிய 2018 ஆம் ஆண்டில் இறைவன் நமக்குக் கொடுக்கும் இன்னொரு வாய்ப்பை இரு கரத்தோடு வரவேற்போம்.

ஏவாள் என்கின்ற முதல் பெண்ணின் வழியாக பாவம் ஆட்சி செய்யத் தொடங்கினாலும், அன்னை மரியாள் என்கின்ற புதிய ஏவாள் வழியாக அருள் ஆட்சி செய்ய கடவுள் வழி வகுத்தார். இத்தகைய அளப்பெரிய அன்னையின் உதவியினால்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கலா 4.7இல் வாசிப்பது போல ‘நாம் அனைவரும் கடவுளுக்குரிய பிள்ளைகள் என்கின்ற அருள்நிலையை பெறுகிறோம்.’இத்தகைய பிள்ளைகளின் வாழ்வு எப்பொழுதும் பிறருக்கு வாழ்வு கொடுகின்ற, வெளிச்சம் கொடுக்கின்ற அற்புத ஜோதியாக மிளிர வேண்டும். நம் வாழ்நாளில் பல புத்தாண்டு கொண்டாட்டங்கள் வந்து போகலாம். பல சூளுரைகளுடனும், உறுதிமொழி களுடனும், உத்வேகத்துடனும் ஆரம்பிக்கும் புதுவருடம் சில  ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தளரா மனத்துடன் ஓடினோம் என்கின்ற எண்ணம் மேலோங்கும் பொழுதுதான் வெற்றி பரிசை சுவைக்க முடியும்.

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில் பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கின்றார்கள். அவற்றைத் தங்களுடைய அசாத்திய மனப்பாங்காலும், திடமான தன்னம்பிக் கையாலும் அயராத முயற்சியினாலும் தோல்விகளை முறியடித்து தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியை சுவைத்திருக்கிறார்கள். நிறைய சிந்தனை செய்து, குறைவாகப் பேசி, துல்லியமாகத் திட்டமிட்டு, கவனத்தோடு செயல்படுகின்ற மனப்பக்குவம் நமக்கு வேண்டும். தமிழருவி மணியன் அழகாக சொல்வார், ‘மரணமில்லா பெருவாழ்வு, நோயின் நிழல், தீண்டாத உடல் நலம், கட்டுப் பாடற்ற சுதந்திரம், துன்பமில்லாத இன்பம் முரணும் மோதலுமற்ற சமுகச்சூழல் அமைய வேண்டும் என்பது எல்லா மனிதர்களின் ஆசை. நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை.’ எந்த சூழ்நிலையிலும் நிறைவான மனம், கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை, பிறர் நலம் பேணும் செயல்கள் இவையே நம் சந்தோசத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. பூத்திருக்கும் புத்தாண்டில் புதிய முயற்சிகள், புதிய உறுதிமொழிகள், புதிய வாழ்க்கை, புதிய பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

Tuesday 5 December 2017

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

சகோ. விமலி FHIM. இதயா கல்லுVரி, குடந்தை

வானதூதர்கள் வாழ்த்துப் பாட
வாஞ்சையோடு வந்த நிலவே
எளிய வாழ்வை எடுத்தியம்ப
இடையர்கள் இதயம் நனைய
இனம்புரியா இன்பம் அடைய
மரியின் மடியில் தவழ்ந்தாயே
மாசேதும் இன்றி மிளிர்ந்தாயே

மகிழ்ச்சி பிறக்க, அமைதி பிறக்க, மனித இதயங்களின் இயேசு ஆண்டவர் நமது இல்லக் கோவிலுக்குள் பிறக்கப்போகிறேன் என்றார். வலிமை பிறக்கும் ‡ இறைவலிமை பிறக்கும் (எசா 9:6) அருள் பிறக்கும் ‡ மீட்பரின் அருள் பிறக்கும் என்று எத்தனை ஆண்டுகளாக நாம் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிறோம். உலகில் பிறப்புகள் அத்தனையும் இறைவனின் கை வண்ணமாகத் திகழ்கின்றன. சிலரின் பிறப்பு  உலகிற்கு அழிவைத் தருகிறது. எனவேதான் நாம் சிலரைப் பார்த்து, ‘இம்மனிதர்  பிறவாமல் இருந்தால் நலமாய் இருக்குமே’ என்று சொல்கின்றோம் (கிட்லர், யூதாஸ், இன்றைய அரசியல் தலைவர்கள்).  சிலரது  பிறப்பு இவ்வுலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கியதால் ( ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, புனித அன்னை தெரசா, அருளாளர் இராணி மரியா...) நாம்   “இவர்களைப் போல் எல்லோரும் இருந்தால் இவ்வுலகம் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்” என்றும் சொல்கிறோம். ஆக, மனிதரின் பிறப்பு அவர்கள் வாழும் வாழ்வின் அர்த்தத்தைக் கொண்டுதான் புகழவோ அல்லது இகழவோப்படுகிறது. இவ்வுலகில் கடவுளாக வணங்கப்படுகிறவர்களில், இயேசு பெருமானின் பிறப்பு மட்டுமே மனித  குலம் முழுவதும் அமைதியின் அரசரை எதிர்நோக்கியிருந்தது என்று விவிலியம் சுட்டுகிறது.

  உயிரானார்

காலம் காலமாய் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் உழல்வதை அறிந்த  இறைவன் அவர்களின் கூக்குரலுக்குச் செவிகொடுத்து, மனித உருவில் தோன்றினார் (பிலி 2:7).  நன்மையே நிறைந்த இறைவன் பாவிகளின் உடல் எடுத்தார். நம்மைப் போலவே வாழ்ந்தார். எனவே அவருக்கு மனிதரின் பசி தெரியும். மனிதர்களின் வேதனையும் துன்பமும் தெரியும். அன்புள்ள மனிதராக எப்போதும் வாழ்வது கடினம் என்று நினைக்கின்ற நமக்கு, அவர் வாழ்ந்து காட்டினார். பாவமில்லாமல் பிறந்து, பாவம் செய்யாமலே  வாழ்ந்து, பரிவோடு மனித உயிரானவர். உயிரை இழந்தவர்களுக்கு உயிரளித்தார். (லாசர், நயின் நகர் கைம்பெண் மகன்). இவ்வாறு மனிதர்களின் மாண்பை உயர்த்தினார். அனைத்திலும் நன்மையையே நிறைந்து அனைத்திலும் முழுமையாய் விளங்கிய கடவுள், மனித உயிரெடுப்பது இவ்வுலக மக்கள் அனைவரின் சிறப்பே. அவர்  மண்ணில் மனிதராக  உயிரெடுத்தது மனித குலத்திற்குப் பெருமை  சேர்த்தது.

 உணவானார்

முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் விழாக்காலங்களில் சிறப்பான உணவை நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டாடுவதை விவிலிய வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. உணவு இஸ்ரயேல் மக்களின் பழக்க வழக்கத்தையும், விடுதலை வாழ்வையும் எடுத்தியம்புகிறது. இச்சூழலில் இயேசுவின் பிறப்பு இஸ்ரயேல் குலத்தில் நிகழ்ந்தேறுகிறது. அது மாட்டுக் கொட்டகையில் நிகழ்கிறது. மீட்பின் வரலாற்று நாயகனின் பிறப்பு விலங்குகளின் மத்தியில் நிகழ்கிறது (லூக் 2:12). ஆடு மாடுகள் தங்களுக்கான இரையை உட்கொள்ளும் தீவனத் தொட்டியில் இயேசு கிடத்தப்படுகின்றார். அவர் வாழ்ந்தபோதும் மக்களுக்கு உணவை வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இறைவார்த்தை கேட்க வந்த மக்கள் திரும்பிச் செல்லுகின்றபோது பசியோடு செல்வார்களே என்று அவர்கள் மீது பரிவு கொண்டு உணவு வழங்கினார் என்று நற்செய்தி நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. அவர் ஆன்மீகப் பசியையும் ஆற்றினார். உடல் பசியையும் ஆற்றினார். இவ்வாறு எல்லோருக்கும் உணவானார். “மரம் கனியால் அறியப்படுவது போல ஓர் ஆள் அவருடைய செயல்களால் விளங்குவார்”. நல்ல செயல் எதுவும் வீணாகாது. நமது வாழ்வில் மனித நேயச் செயல்களால் பிறரின் வாழ்வு சிறப்படைய வேண்டும். இந்தியாவில் 30 கோடி மக்கள் ஒருவேளை உணவில்லாமல் அன்றாடம் உறங்கச் செல்கிறார்கள் என்பது தெரிவதில்லை. உடல் பசி கொண்டவர்களுக்கு உடல்பசியைப் போக்கும் கருவியாகவும், சாதியக் கொடுமைகளை அனுபவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு விடுதலை பசி போக்கும் கருவியாகவும், உரிமைக்காகப் போராடும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிமை வழங்கும் கருவியாகவும், இயேசுவின் பிறப்பு என்ற இவ்வுணவு அமைய வேண்டும். எனவே உணவான இயேசுவை நம்பிக்கையையும், அமைதியையும், விடுதலையையும் வழங்கும் உணவாகப் பகிர்வோம். அப்போது இவ்வுலகில் இறைவன் பிறர் பசிப்போக்கும் உணவாவார்.

 உறவானார்

வரலாற்றின் தொடக்க காலத்தில் வலியோர் சிந்தனை ஓங்கிய காலக்கட்டத்தில் இயேசுவின் பிறப்பு, உறவும், உரிமையும், நீதியும் இல்லாமல் தவித்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு நம்பிக்கையைக் கொடுத்தது. காரணம் அவரின் பிறப்பைக் கண்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சினார்கள். அச்சூழலே ஒதுக்கப்பட்ட மக்களுக்கு விடியலாக இருந்தது. “எங்கள் சார்பாக எவரும் இல்லையே” என்று வாழ்வு கசந்து இருந்த  மக்களுக்கு அவரின்  பிறப்பு புதிய  உத்வேகத்தைக் கொடுத்தது. பாவிகளோடும், ஏழைகளோடும் உறவானார். யாரை உலகம் தேவையற்றவர்கள் என்று ஒதுக்கியதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கடவுளின் பிறப்பு, அவர் மகன் இயேசுவில் நிகழ்ந்தேறியது. அது உறவை முன்னிலைப்படுத்தியது. கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு ஒற்றுமையைத் தர வேண்டும். முழுமையான உறவு மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். நமது செயல்கள் உறவை உருவாக்க வேண்டும். பழைய உறவுகளைப் புதுப்பிக்க வேண்டும். பிளவுகளில் இருக்கும் உறவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகிலும், நமது சமூகத்திலும், இல்லத்திலும் சிறப்பானதாக அமையும்.

மானிட வரலாறு முழுவதும் கடவுள் உடனிருப்பவராக, நெருக்கமானவராக, அருள்பவராக, தூயவராக, இரக்கமுடையவராக எப்பொழுதும் இருந்து வருகிறார். அந்த இயேசுவை நம் வாழ்விலே உள்ளத்திலே, இல்லத்திலே ஏற்கும்போதும் நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியால் துள்ளும். அன்னை மரியா இயேசுவை ஈன்றெடுத்ததைப்போல, இயேசுவைப் பிறருக்கு ஒவ்வொருவரும் நமது மனித வாழ்வில் இப்புதிய (2018) ஆண்டில் பிறருக்கு அன்பின் உயிராய், உணவாய், உறவாகி நம்பிக்கையின் உரைவிடமாக இருப்போம்.

முடிவாக

மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும், பாலியல் பலவினமானவர்களிலும், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரிலும், சிறப்புப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் ஏராளமான மக்கள் அன்பிற்காகத் தவிக்கின்றார்கள். மனிதரின் மாண்பை உயர்த்த அவர்களை அரவணைப்போம். உரையாட, கவலைகளை கண்ணீர்களைப் பகிர்ந்து கொள்ள, ஆறுதல் கூற மனிதர்கள் இல்லையே என்று ஏங்குகிறார்கள். அவர்களின் வாழ்வில் நாம் நம்பிக்கை ஒளியேற்றுகின்ற போது, அம்மக்கள் புது உயிர்பெறுகின்றார்கள். “நல்ல வார்த்தைகளால் நல்ல உறவு மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்”. குழந்தை இயேசுவின் வழியாய் இவ்வாண்டு ஆண்டவரின் அன்பு, உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் என்றும் தங்குவதாக.

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள் 
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

திருத்தூதர் பணினள் இயல் 15 முதல் 28 முடிய

1. பூங்காற்று வந்தது. திடீரென அது
பேய்க் காற்றாய் மாறியது
கலக்கம் வந்தது. நடுக்கம் வந்தது.
    பவுல் வந்தக் கப்பலையும் உடைத்துப்போட்டது.
அது என்னக் காற்று ?

2. தீவு ஒன்று வந்தது.
      நல்ல மனம் கொண்டது.
     நன்கொடைகள் தந்தது
      பாச மழைப் பொழிந்தது
      பவுலை தெய்வம் என்றது.
      அது எந்தத் தீவு?

3.  நிலநடுக்கம் வந்தது
      சிறைக்கூடம் அதிர்ந்தது
     சிறைக் கதவுத் திறந்தது
     தற்கொலைக்கு துணிந்தது
      அவன் யார்?

4. அடிமைப் பெண்ணவள்
குறிசொல்லி வருமானத்தைக் கொடுப்பவள்
    கூவி உண்மையைச் சொன்னாள்
     வரால் ஆவி நீங்கப்பட்டவள்
     அவர் யார்? அவள் யார்?

5. மூன்றெழுத்து உடையவர்
      வியாபாரத்தில் கெட்டி
      நம்பிக்கையுள்ள மகராசி
      ஊழியர்களை  உபசரித்த சேவகி
      உள்ளம் திறந்த உத்தமி
இவள் யார்?

6. நம்பிக்கையின் தாய் யூதப் பெண்
    நம்பிக்கையின் தந்தை கிரேக்கம்
நம்பிக்கையின் பிள்ளை இவர்
இவர்க்கு விருத்தசேதனம் செய்து
நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றவர்

7. எல்லாம் தெரியும் கடவுளுக்கு
      கண் தெரியாத நேரம்
      அவர்களை பொருட்படுத்தவில்லை
      எவர்களை ? எப்போது ?

8. கண்ணிருந்தும் காணாததால்
    காதிருந்தும் கேளாததால்
    உள்ளத்தாலும் உணராததால்
    நீங்கள் தள்ளியப் பரிசை
    அடுத்த  இனத்தார்க்கு அளித்துள்ளார்
    அது என்ன? கூறியது யார்? பரிசு என்ன? யாருக்கு?

9. சண்டையிது சண்டையிது
விவாதத்தின் சண்டையிது
      உண்டென்றது ஒரு கூட்டம்
இல்லை என்றது மறுக் கூட்டம்
மத்தளத்துக்கு இருப்பக்கமும் அடி
     மாட்டிக்கொண்டார் இவர்?
இவர் யார்? அவர்கள் யார்?

 10.எனது ஊர் அலக்சாந்திரியா
நான் ஒரு யூதன், சொல்வன்மை மிக்கவன்
மறைநூல் புலமை உடையவன்
யோவானின் திருமுழுக்கை மட்டும் அறிந்தவன்
நான் யார்?

11. உங்களைப் பார்க்க வந்தேன்
உங்கள் சமயப்பற்றைக் கண்டேன்.
உங்கள் தொழுகையைக் கண்டேன்
சூப்பரான தலைப்பு ஒன்று   கண்டேன்
அது சும்மா கிடந்தது. அது என்ன?
சொன்னது யார்?

 12. இறைப் புகழ் பாட
சிறைக் கதவு திறக்க
கைதிகள் ஓடியிருப்பர் என்று நினைக்க
பட்டயத்தை உருவி மாய்த்துக்கொள்ளப் பார்த்தானே இவன் யார்?

13. ஆசை வந்தது முன்னே
பவுல் வணங்கும் இயேசுவின் பெயரை
சொன்னார் பின்னே
ஆவி தாக்கியது பின்னே
அலரி ஆடையின்றி ஓடினர் அண்ணே.
யார் இவர்கள்?

 14.பள்ளியில் தூங்கியவன்
படிப்பை இழந்தான்
கடையில் தூங்கியவன்
காசை இழந்தான்
ஜன்னலில் தூங்கியவன்
உயிரை இழந்தான்
இவன் யார்? 

15. நான் மூன்றெழுத்து உடையவன்
மூன்றெழுத்து ஊரைச் சார்ந்தவன்
     பவுலின் கச்சையைக் கட்டிக் கொண்டு
கணப்பொழுதில் இறைவாக்குரைத்தேன்.

பொதுக்காலம் 4ஆம் வாரம் B

பொதுக்காலம் 4ஆம் வாரம்
 அருள்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ், குடந்தை.
 28-01-2018
இச 18: 15-20;1கொரி 7: 32-35; மாற்கு 1: 21 - 28
பணிவின் அர்த்தமே அதிகாரம்

அமெரிக்காவில், கருப்பின மக்கள், வெள்ளையின மக்கள் என இருபிரிவுகள் இருக்கின்றன. ஒரு நாள், வெள்ளையினத்தை சார்ந்த மனிதன் ஒரு உணவு விடுதிக்கு சென்றான். அங்கே, ஒரு கருப்பினத்தை சேர்ந்தவனும் அமர்ந்திருந்தான். ஆகவே, இந்த கருப்பினத்தை சார்ந்தவனை வெறுப்பூட்ட வேண்டும் என்பதற்காக, மற்றவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவரிடம் இன்று எனது பிறந்தநாள். உயர்தர உணவு வகைகளை, இந்த கருப்பின மனிதனைத் தவிர மற்றனைவருக்கும் கொடுங்கள் என்று பலமுறை கூறி வெறுப்பேற்றி கொண்டிருந்தான். ஆனால் அவன் எவற்றிற்கும் கலங்காமல் இருப்பதைக் கண்டு, உணவு பரிமாறுபவரிடம் அவன் யார் என்று கேட்ட பொழுது, அவர்தான் இந்த உணவு விடுதிக்கு சொந்தக்காரர், முதலாளி என்று கூறியதைக் கேட்டதும் வெள்ளையின் மனிதன் மிகவும் மனம் நொந்துப் போனான்.

பணிவில்தான் பெருமையும், அதிகாரமும் அடங்கியிருக்கிறது என்பதை மையமாக வைத்து சிந்திக்க பொதுக்காலத்தின் 4வது வாரமாகிய இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. சிறப்பாக கடவுளாட்சியில் அதிகாரம் என்ற சொல்லிற்கு அர்த்தம் பணிவு என்பதே என்று இன்றைய வாசகங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் வந்து செல்கின்றன. யாரையேனும் யார் இந்த இயேசு என்று வினவினால், நமது பதில்கள் அவருடனான அனுபவங்களைப் பொறுத்தே அமையும். விவிலியத்திலும் கூட பவ்வேறு இடங்களில், மக்கள் தாங்கள் கண்ட புதுமைகளையும், பெற்ற நன்மைகளையும் அனுபவங்களின் வாயிலாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். உதாரணமாக, யோவான் 1:45இல் பிலிப்பு தான் கண்டு அனுபவித்த ஆண்டவரை நத்தனியேலுக்கு தெரிவித்து, நீரும் வந்து பாரும், பார்த்து அனுபவித்து மகிழும் என்றும் கூறுகிறார். அதுபோலவே, மத் 16: 13‡20, என்னை யாரென்று மக்கள் சொல்லுகிறார்கள்? என்று இயேசு கேட்டபோது, தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக இயேசுவை மக்கள் அறிந்து கொண்டர்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் மக்கள் வியந்து பார்ப்பது, இதுவரை நோயாளர்களை குணப்படுத்தியவர், ஏழைகளை அரவணைத்தவர் இன்று, பேய்களை அதிகாரத்தோடு விரட்டுகிறாரே என்பதுதான். எங்கிருந்து வந்தது இந்த  அதிகாரம். இயேசுவை பொறுத்த வரையில் அதிகாரம் என்பது பணிவோடு தொடர்புடையது.  இறைவிருப்பத்தை  ஏற்று நடக்க திருவுளமானதால், அந்த பணிவே அதிகாரம் என்ற தொணியில் பார்க்கிறார். இறையாட்சியில் அதிகாரமோ, பணிசெய்தலும், சுதந்திர உணர்வோடு  செயல்படுவதுமாகும். பணிசெய்தலே அதிகாரத்தின் உட்பொருளாக அமைகின்றது. ஆகவேதான் மத் 20: 16இல் முதலானனோர் கடைசியாவார், கடைசியாவோர் முதலாவார்  என்றும் உங்களுள் முதல்வராய் இருக்க விரும்புகிறவர் முதலில் தொண்டராய் இருக்கட்டும் என்கிறார். ஆக இந்த  அதிகாரத்தோடு இயேசு பேயினை ஓட்டியது மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதன் மூலம் அவர் மீது இருந்த இறைநம்பிக்கையும், இறைப்பற்றும் மக்களின் மனிதல் ஆழமாக பதிகிறது. மேலுமாக பேய்களும் கூட இயேசுவை யாரென்று அறிந்திருப்பதாக நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிகின்றோம். மாற் 1: 24இல் நாசரேத்தூர் இயேசுவே உமக்கு இங்கு என்ன வேலை? நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்  என்று தீய ஆவிகளும் அறிக்கையிட்டன. இதனால் மக்கள் வியப்புற்று இதென்ன புதிய போதனையாக இருக்கின்றது என்கின்றனர். அப்படிப்பட்ட  இயேசுவுடனான நமது அனுபவங்கள் என்ன? புனித ஜெரோம் அவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள் இறைவனை அறியாதவர்கள் என்று கூறுகிறார். அதுபோல இறைவனை அறியாதவர்கள் தன்னையே முழுமையாக அறியாதவர்கள். இறைவனை அறிய வேண்டுமெனில், அவர் பாதம் அமர்ந்து அவரது விருப்பத்தின்படி, படிப்பினைகளின் படி வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நடக்கின்றபோது, நாமும் கூட இயேசுவின் பெயரால் பணிவு நிறைந்த அதிகாரத்தோடு எந்த வல்ல செயல்களையும் செய்ய முடியும். அதனை தான் யோவா 14: 12, என்னில் நம்பிக்கை கொள்வோர் நான் செய்யும் செயலை விட பெரியனவற்றையும் செய்வார் என்று இயேசு கூறுகிறார்.

ஆகவே, இயேசுவை பற்றிய நமது அனுபவங்கள் என்ன? அவரை அறிந்திருக்கிறோ மென்றால், பணிவில்தான் அதிகாரம் அமைந்தி ருக்கின்றது என்பதை ஆழமாக உணர்வோம்.
  

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு
 21 - 01 - 2018
யோனா 3: 1,5-10;  1 கொரி 7: 29 - 31;  மாற் 14-20;   
        
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நீயா? நானா? என்ற தொடரில், ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அமெரிக்காவில் கணினி பிரிவில், மாதத்திற்கு 4 லட்சம் சம்பாதித்த ஒருவர், அந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்து விவசாயம் செய்து, பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறார். ஏன் நல்ல வருமானம் தரும் வேலையை விட்டு  விட்டார் என்றால், பணம் நிறைய சேர சேர, ஆசைகள் பெருகுகின்றன. தேடுகிறோம், இறுதியில் உடல் நலத்தை இழந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்கிறோம். விவசாயத்தில் மனநிறைவு கிடைக்கிறது என்று அவர் விளக்கினார்.

இன்றைய நற்செய்தி ப் பகுதியில், இயேசு முதல் நான்கு சீடர்களை (சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான்) அழைக்கும் நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்கிறோம். நால்வரும் மீனவர்கள். இயேசு அழைத்ததும் அவர்கள் தங்களின் படகுகளை, தங்களின்  தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப்  பின்தொடர்கின்றனர். இயேசுவை பின்தொடர்ந்த அந்த நால்வரும், மிக ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு படகுகள், வலைகள், வேலையாட்கள்  இருந்தன. எனவே அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார்கள் என்றால் அவர்களின் அர்ப்பணத்தையும், தியாகத்தையும் அது குறிக்கிறது.  மீன் பிடிப்பவர்களை மனிதரை பிடிப்பவராக்குகின்றார் இயேசு. (எரே 16:16)  இல்  இது போன்ற குறிப்பு வருகிறது.

முதல் வாசகத்தில் கடவுளின் அழைப்பை முதலில் மறுத்து ஓடிச் சென்ற யோனா, இரண்டாவது முறை அழைத்தபோது, அந்த அழைப்பினை ஏற்று, நினிவே மக்கள் மனமாற போதிக்கிறார். அவரின் அறைக் கூவலை ஏற்று நினிவே மக்கள் மனந்திரும்புகின்றனர்.

பல காதல் திருமணங்கள் தோல்வி யடைகின்றன.  முதலில் காதல் மயக்கத்தில் ஒன்று சேருகின்றனர். ஆனால் ஒன்றித்து வாழும்போது அவர்களின் சுயநல உருவம் வெளிப்படுகிறது.  உன்அப்பா வீட்டில் அதை வாங்கிவா, இதை வாங்கி வா என்று கொடுமைபடுத்த மாப்பிள்ளை முற்படுகிறார். திருமணத்திற்கு முன்பாக. தாங்கள் நுழையப் போகும் குடும்ப வாழ்வின் பொறுப்பையும், தியாகத்தையும் உணர்ந்து அதில் நுழைவதில்லை.   
மனிதர் வாழ்வு, மற்றவருக்காக செய்யும் தியாகத்தில் நிறைவு பெறுகிறது. தியாகம், இறைவனிடம் அழைத்துச் செல்லும் படகாக விளங்குகிறது.

பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு
  14 - 01 - 2018
1 சாமு 3: 3, 10-19;  1கொரி 6: 13-15; 17- 20;  யோவா 1: 35 - 42;

தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 7:7).
‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று ஒளவையும் கூறுகிறார். நடைமுறை வாழ்க்கையிலும், நாம் தேடலில்தான் வாழ்கிறோம். நல்ல வேலைக்காக தேடுகிறோம். நல்ல வரனுக்காக தேடுகிறோம். நல்ல வீட்டிற்காக தேடுகிறோம்.

இன்றைய நற்செய்திப்  பகுதியில் இயேசுவை சிலர் தேடுகிறார்கள். அதனால் இயேசுவை கண்டுக்கொள்கிறார்கள். கண்டுகொள்ளலின் தொடர்ச்சியாக அவரோடு தங்குகிறார்கள். தாங்கள் பெற்ற இந்த காணலின் அனுபவத்தை மற்றவரும் காண செய்கிறார்கள்.

திருமுழுக்கு யோவான்,  திருமுழுக்கு யோவானின் சீடருக்கு ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று இயேசுவை அடையாளம் காட்டுகிறார். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இருவர் இயேசுவை பின்தொடர்கின்றனர். இயேசு, அவர்களைப் பார்த்து என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்கிறார். தாங்கள் தேடியதை கண்டுகொண்டு விட்டோம் என்று சொல்லாமல் சொல்லி, தாங்கள் கண்டடைந்தவர் தங்களின் ஆசிரியர் (ரபி) என்று ஏற்றுக் கொண்டு, உங்களோடு தங்க விரும்புகிறோம் என்று எங்கே தங்கியிருக்கிறீர்? என்று கேட்கிறார்கள். யோவான் நற்செய்தியில் மெனோ (னிeஐலி) என்ற வார்த்தை தனித்த பொருள் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘இருத்தல்’ என்னும் ஆழ்ந்த பொருளைத்  தரும். உதாரணமாக யோவா 14:10 இல் ‘நான் தந்தையினுள்ளம் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?’ என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘இருத்தல்’ என்ற வார்த்தைதான் தங்கியிருத்தல் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேடியவர் கண்டார்கள், அதிலே ஒன்றானார்கள். இந்த ஒப்பற்ற அனுபவத்தை இயேசுவை பின் சென்ற திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களில் ஒருவர் அந்திரேயா, தன் சகோதரர் சீமோனை, நாங்கள் மெசியாவை (கடவுளால் அருள் பொழிவு பெற்றவரை) கண்டு கொண்டு விட்டோம். நீயும் வந்து கண்டு அந்த அற்புத அனுபவத்தில் இணைந்துக் கொள் என்று அழைத்து வருகிறார். இயேசுவும் அவரை வரவேற்று அவருக்கு ‘பாறை’ என்று பொருள்படும் ‘கேபா’ என்று அழைக்கப் படுவாய் என்கிறார்.

  முதல் வாசகத்தில் சிறுவன் சாமுவேல் கடவுளால் அழைக்கப்படுகிறார். முதலில் சாமுவேலால் அது கடவுளின் அழைத்தல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. குரு ஏலி அவனுக்கு கற்றுக் கொடுக்கிறார். ‘ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் மொழி கூற கற்று கொடுக்கிறார்.

இறைவன் தரும் அழைப்பினைக் கண்டுக் கொள்பவர்கள் விண்ணகத்தை மண்ணகத்திற்கு அழைத்து வருபவர்கள்.

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
 07 - 01 - 2018

Fr.  M.A. சூசைமாணிக்கம், திரு இருதய குருமடம்.
 எசா 60 : 1-6; எபே 3: 2- 3, 5-6;  மத் 2: 1 - 12;

ஒரு கிராமவாசி ஒரு முனிவரிடம் சென்று, இறைவனை அடைய என்ன வழி? என்று கேட்டார். அதற்கு முனிவர், இடைவிடாமல் தேடு என்றார். கேட்டவன் ஒரு சாதாரண மீனவன், எழுத்தறிவு, படிப்பறிவு மற்றும் உலக ஞானம் இல்லாதவன். அப்பாவி என்று கூட சொல்லலாம். இதைப்பற்றி அந்த கிராமவாசி மீண்டும் முனிவரிடம் கேட்டபோது, திணறி திணறித் தேடு என்ற பதில் கிடைத்தது. கிராமவாசிக்கு ஒன்றுமே புரியவில்லை. திணறி திணறி எப்படி தேடுவது என்றான். முனிவர் அவனை நதிக்கரையிலுள்ள படியில் இறங்கச் சொல்லி, தனது இரு கைகளாலும் அவனை நீரில் அமுக்கிப் பிடித்தார். பின் கையை விட்டார். இப்படித்தான் தேடவேண்டும் என்று சொல்லி,  நடையைக் கட்டினார்.

நாட்கள் உருண்டோடின. அவனது தேடல் மிக வேகமாக இருந்தது. இறைவனையும் கண்டான். மகிழ்ந்தான். தனது தேடலின் விளைவாக கிடைத்த தெய்வதரிசனம் பற்றி சொல்ல முனிவரை தேடிச் சென்று சொன்னான். இதைக் கேட்ட துறவி உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? நம்மைப்போன்ற சாதாராண மனிதர்களுக்கெல்லாம் கடவுள், அவ்வளவு சுலபத்தில் காட்சி தந்துவிடமாட்டார். அதை முதலில் புரிந்துகொள் என்றார்.

ஆன்மீகவாதிகளின் ஆன்மீக தேடலின் இலட்சணம் இதுதான். எனது தெய்வீகத்தின் வெளிப்பாட்டை சுட்டிக்காட்டும் திருக்காட்சி விழாவை திருச்சபைக் கொண்டாடுகிறது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் தங்களின் தேடலாக இறைமகன் இயேசுவைக் கண்டு கொள்கின்றனர். பிற இனத்தாரின் பிரதிநிதிகளாக இந்த மூன்று ஞானிகளின் வருகை அமைந்தது. பிறந்த மண்ணில் ஞானிகள், அரசர்கள், குடிமக்கள் என எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தெய்வ தரிசனம் ஊர், பெயர் தெரியாத ஞானிகள் மூவருக்கு கிடைக்கின்றது.

மெசியாவைக் காண்பதே வாழ்வின் நிறைவு என்று நினைத்த இந்த மூன்று அரசர்களின் தேடலில் ஏரோதுடைய தேடல் வித்தியாசமானது. யூதர்களுடைய அரசன் பிறந்திருக்கின்றார் என்ற செய்தியை கேட்டு மனக்கலக்கம் அடைந்த ஏரோதும் இயேசுவைக் காணத் துடிக்கின்றான். இது இவனுடைய அன்பின் தேடல் அல்ல. மெசியாவைக் கொல்ல வேண்டும் என்ற நயவஞ்சகத் தேடல். தனது ஆட்சிக்கு போட்டி வந்துவிட்டது. சுயநலத்தோடு மக்களை சுரண்டி வாழ இனி வாழ முடியாது என்ற தீய சிந்தனையோடு ஏரோது கலக்கம் அடைகிறான்.

இறைவனின் திட்டத்தின்படி, வாழ்வின் நிலையறியாது, இருளாகிய பாவத்தில் வீழ்ந்து உலன்று கொண்டிருக்கும் மனிதர்களை காக்க, மனித அவதாரம் எடுத்த மெசியாவின் இறைவெளிப்பாடு தீயவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் விண்மீன் மறைந்து போனது. இந்நிகழ்வு தீமையைக் கண்டு ஒவ்வொரு மனிதனும் விலக வேண்டும் என்ற அடையாளத்தைக் குறிக்கின்றது. நன்மைகளுக்கு தீமை வழிவிட்டது. மூன்று அரசர்கள் மெசியாவைக் கண்டனர். மகிழ்ச்சி கொண்டனர். அவர்கள் தேடிய மெசியா தனிப்பட்ட இனத்துக்கோ, மதத்திற்கோ, அமைப்பிற்கோ உரியவர் அல்ல. இவ்வுலகத்திற்கே உரித்தானவர். மெசியாவின் பிறப்பு எல்லோருக்கும் சொந்தமானது என்பதை ஞானிகளின் வருகை குறித்துக் காட்டுகிறது.

புலர்ந்திருக்கின்ற புதிய ஆண்டில் பிறந்திருக்கின்ற மெசியாவை, நம்மோடு வாழும் சக மனிதர்களில் தினம் கண்டுகொள்ளும் தேடலில் இறங்குவோம். 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா,

கிறிஸ்து பிறப்பு பெருவிழா
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வெஸ்டர் 
 வலுவின்மையே  வல்லமை

அப்பாடா! ஒரு வழியா எப்படா வரும்னு நாம் எதிர் பார்த்த கிறிஸ்துமஸ் வந்தாச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் விருந்து, வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் , இந்த விழா நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பதை மட்டும், எல்லோருமே மறந்து விடுகிறோம்.
    இந்த உலகம்  Promotion  உலகம்.  அதாவது பதவி உயர்வை மட்டுமே விரும்புகின்ற உலகம்.
சிறு விவசாயி - பண்ணைக்கு உரிமையாளராகவும்
கவுன்சிலர்      - MLA வாகவும்
MLA வுக்கு            -அமைச்சராகவும்
தொண்டனுக்கு - தலைவனாகவும்
மக்களுக்கு         - குருவாகவும் 
குருவுக்கு                 - ஆயராகவும்  ஆசை / விருப்பம்   

 இப்படி எல்லோரும் கீழிருந்து மேலே  மேலே செல்ல ஆசைப்பட, ஆண்டவருக்கு ஒரு விநோதமான விசித்திரமான ஆசை. மேலிருந்து கீழே வரனும்னு ஆசை. ஆம் கடவுளுக்கு மனிதனாக ஆசை. ஆம் கடவுள் தன்னையே தாழ்த்திக் கொண்ட தாழ்ச்சியின் விழாதான் கிறிஸ்துமஸ். இதைத்தான் திருத்தூதர் பவுல் பிலி 2:6‡9இல் சொல்லுகிறார். கடவுள் தன்மையில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். அவ்வளவுதான் கிறிஸ்துமஸ். அடிமையின் வடிவை ஏற்ற நாள்தான் கிறிஸ்துமஸ்.

இயேசுவின் பிறப்பு கதையோ,கற்பனையோ இல்லை. மாறாக வரலாற்று நிகழ்ச்சி என்பதை வலியுறுத்தவே, இயேசு யாருடைய ஆட்சியில், எங்கு, எப்படி  பிறந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செய்தியும் இயேசுவின் எளிமையையும், அவரது தாழ்ச்சியையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

முதலாவதாக, இயேசு பிறந்ததாகச் சொல்லப்படும் ஊர் பெத்லகேம் யூதாவின் ஊர்களில் சிறிய ஊராக இருந்தாலும், இவ்வுலகை படைத்த மாபரன் உதிக்க திருவுளம் கொண்ட ஊர். யாரும் எதிர்பார்க்காதவைகளை தமது விருப்பமாகக் கருதுபவர் இறைவன். மேலும் அப்பத்தின் வீடு என்னும் பொருளுடைய பெத்லகேமில் பிறப்பதால், இவ்வுலகிற்கு தன் உடலை உணவாக கொடுக்க உள்ளத்தை முன்னறிவிக்கிறார்.

இரண்டாவதாக, உலகத்தை உருவாக்கிய வருக்கு இவ்வுலகம் ஒதுக்கிய இடம் மாட்டுத் தொழுவம். இறைவனின் எளிமைக்கு இதை விடவா சான்று தேவை. பிறந்தவுடன் துணிகளில் சுற்றப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கு உணவிடும் இடம். இயேசுவும் இவ்வுலகிற்கு உணவாகப் போகிறார் என்பதற்கு முன் அடையாளமே இத்தீவனத் தொட்டி.

மூன்றாவதாக அவர் தாழ்ச்சிக்கு இன்னுமொரு உதாரணம், அவரின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்பட்ட இடையர்கள். இறைமகன் இயேசு தன்னை ஆயனென்று ‡ நல்லாயன் என்று அழைத்தவர். இன்று ஆயர்களின் தலைமகன் குடிலில் குழந்தையாகப் பிறந்துள்ளார். எருசலேமில், படித்தவர்கள், அரசர்கள், அறிஞர்கள், குருக்கள் என பல மேட்டுக்குடிகள் இருந்தும் படிப்பறிவற்ற, ஏழை, எளிய இடையர்களுக்கு  இயேசுவின் பிறப்பு முதன் முறையாக அறிவிக்கப்படுகிறது. இறை செய்தியை கேட்டதும், அவர்கள் கேள்விகள் கேட்கவில்லை. சென்றார்கள், கண்டார்கள் இறைவனை மகிமைப்படுத்தினர்.  

சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்துமஸ் விழாவின் மையச் செய்தியே இதுதான். மனிதன் பலமற்றதாக கருதுவதை கடவுள் தன் பலமாகக் கொண்டார். மனித பிறப்பு பலவீனமானது, பாவ இயல்புடையது. ஆனால் கடவுள் அந்த பலவீனத்தை பலமாக மாற்றுகிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? வல்லமையான கடவுள் தேடிச் சென்றது. வலிமையானதை அல்ல. மாறாக, சிறியது என எல்லோரும் நினைத்த பெத்லகேமும், ஆடு, மாடுகளின் தஞ்சமிடமான மாட்டுக் குடிலும், கந்தைத் துணியும், கிடத்தப்பட தீவனத் தொட்டியும், கண்டு மகிழ ஏழை இடையர்களும்தான். இறைவன் பலமற்றதை, ஞான சூனியங்களை தம் நற்பணி தூதுவர்களாக மாற்றினார் என்பதற்கு அவரின் பிறப்பு ஒரு சான்று. ஆக நம்முடைய கடவுள் கடந்து நிற்பவர் (Transscendent) அல்ல. நம்மில் ஒன்றோடு ஒன்றாக கலந்து நிற்பவர் (Immanent). அதாவது இம்மானுவேல்  இந்த கடவுள் சிறியவற்றை, தரித்திரம் என ஒதுக்கியவற்றை, ஏழை, எளிய  மக்களை, பாவிகளை தேர்ந்து கொண்டு, அவர்களோடு ஒன்றாக கலந்து நிற்பவர்.

எனவே, இந்த கிறிஸ்துமஸ் விழா நம்மில் மாற்றத்தைக் கொண்டு வரட்டும். எல்லாம் இழந்து நிற்கும் மனிதர்களில், சாதியால், மொழியால், சமூக பாகுப்பாட்டால் வெறுக்கப்பட்ட மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களோடு நாம் உரையாடி, உறவாடும் போது அங்கே கிறிஸ்து பிறக்கின்றார், இருக்கின்றார்.

ஆம் கிறிஸ்து நம்மோடு இல்லாத கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் ஆக இருக்க முடியாது. அந்த இயேசுவை நம்மோடு வாழ வைப்போம். நம் இல்லத்தில், நண்பர்கள், அயலாரின், அநாதைகளின், அந்நியர்களின் உள்ளங்களில் வாழ வைப்போம். அப்பொழுதுதான் ‘கடவுள் நம்மோடு’ என்பதற்கு பொருள் கிடைக்கும்.

வலுவற்றைவைகளில் வல்லமையுள்ள  தேவனைத் தேடுவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பார்வையில் பலகீனமே பலம்.

விடியும் நேரம், (இன்றைய சூழலை பிரதிபலிக்கும் சிறுகதை)

விடியும் நேரம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி 

(இன்றைய சூழலை பிரதிபலிக்கும் சிறுகதை)

‘தாமு, விரசா பார்சலை எல்லாம் லாரியில் ஏத்து, மழை தூறிக்கிட்டு இருக்கு, வேகமா வர்றத்துக்குள்ளார பார்சலை ஏத்திட்டு தார்பாயை போட்டிடு, விடியிறதுக்குள்ளார விழுப்புரம் போகனும்,’
சரி அண்ணே...
‘ஒரு வாரமா செம மழை பேஞ்சதால அங்க தண்ணி தேங்கிட்டு வெள்ளம் மாதிரி லாரி போக முடியாம தத்தளிச்சிக்கிட்டு இருந்தது. இந்த ஜனங்க வேற புரளியை கிளப்பிவிட்டு, ஏரி உடைஞ்சிடுச்சி, ஊர்  மூழ்கப்போவுது, அப்படி இப்படின்னு சொல்லி கலங்கடிச்சி க்கிட்டு இருக்காங்க. ஒரு வாரமா மழை பேஞ்சதால லோடு ஏத்துற வேலை இல்லை. லாரிகளும் ஓடல இன்னைக்குத்தான் கொஞ்சம் பரவாயில்லை. விழுப்புரம் இசக்கி அண்ணாச்சி வீட்டு கல்யாணத்துக்கு போற சீர் சாமான் பார்சல் விடியரதுக்குள்ளார போயிடனும். மழை வராம இருக்கனும், பெரிய இடம், சரக்கு போலனா பொல்லாப்பா ஆயிடும்’ என்று லாரி டிரைவர் புலம்பிக் கொண்டே கடிகாரத்தை பார்த்தார்.

‘அண்ணன் பார்சலை எல்லாம் ஏத்தியாச்சி. தார்பாயும் போட்டாச்சி, மணி பத்துதான் ஆச்சி. ஆறுமுகம் அண்ணன் கடையில புரோட்டாவும் டீயும் சாப்பிட்டு கிளம்பினா இரண்டாம் சாமத்துக்கே போயிடலாம்.’

‘சரி, தாமு நான் கிளம்புறேன் போற வழியில நீயும் ஏங்கூட சாப்பிட்டு இறங்கி வீட்டுக்கு போ. நாளையிலேயிருந்து குமரன் பர்னிச்சர் கடைக்கு வேலைக்குப் போயிடு, மாதம் பத்தாயிரம் கிடைக்கும், ரொம்ப வரு­த்துக்கு அப்புறம் உன்னை பார்த்தேன். நம்ப ஊர் பையன் கஷ்டப்படுறத பார்க்க சங்கடமா இருந்திச்சு. நல்லவேலை கிடைக்காம லோடு ஏத்திக்கிட்டு நிக்கிறது படிச்ச புள்ளைக்கு அழகில்ல. முதலாளி நல்லவரு, இந்த கடைக்குத்தான் பத்து வரு­மா லாரி ஓட்டிக்கிட்டு இருக்கேன். விழுப்புரம் போயிட்டு வந்தப்பிறகு முதலாளிக்கிட்ட சொல்லி கொஞ்சம் முன்பணம் வாங்கித்தரேன். நீ வாங்கின கடனை அடைச்சிட்டு, இனிமே கந்து வட்டிக்கு பணம் வாங்கிற வேலையை விட்டுடிடு, அது நம்ம வாழ்க்கையையே அழிச்சிடும். சரி லாரியில ஏறு வழியில இறக்கிவிடுறேன்.’

டிரைவர் சொன்னத கேட்டப்ப எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருந்தது. நேற்று கந்து வட்டி வேலுஅண்ணன் திட்டின வார்த்தைகளை நினைச்சி பார்த்தேன். இப்படி கீழ்த்தரமா பேசுறவங்க முன்னால டிரைவர் அண்ணன் மாதிரி கணிவா ஆதரவா பேசுறவங்களும் இருக்கிறதுனாலத்தான் இந்த உலகம் அழியாம இருக்கு போல, மனசுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே டிரைவர் அண்ணன்,

‘தாமு, இறங்கு வேளச்சேரியிலதானே உன் வீடு இருக்கு, பக்கம்தான் இறங்கி போ. தண்ணி நிக்கிது பார்த்துப்போ,’ டிரைவர் அண்ணன் சொன்னவுடன் இறங்கி தண்ணீரில் நடக்க ஆரம்பித்தேன்.

நானும் செல்வியும் ஊரை பகைச்சிகிட்டு சாதிமறுப்பு திருமணம் செஞ்சிக்கிட்டு சென்னைக்கு ஓடிவந்து கஷ்டப்படுற கதைய கேட்ட டிரைவர் எனக்கு ஒரு வேலைக்கு வழி  செஞ்சிட்டாரு. நான் இனி கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த வி­யத்தை உடனே செல்விகிட்ட சொல்லுனும். ஓட்டமும் நடையும்மா வீட்டைத் தேடி ஓடினேன் என்று சொல்ல முடியாது தண்ணீரில் நீஞ்சி கரைச்சேர்ந்தேன்னு சொல்லலாம்.

இது என்ன? ஏன் வீட்டுக்கிட்ட ஒரே கும்பல்?, என்ன ஆச்சி செல்விக்கு? நான் ஓட முற்பட எதிர்வீட்டு காளியக்கா என்னை நோக்கி ஓடி வந்தாங்க.

‘தாமு, சீக்கிரம் வாப்பா, நம்ப செல்வி மருந்து குடிச்சிட்டாப்பா, உன் வீட்டுக்கு வந்து செல்விக்கிட்ட பேசலாம்ன்னு வந்தப்ப. அவ மயங்கி கிடந்தாப்பா. எலி மருந்த குடிச்சியிருக்கா, ரொம்ப பயம் ஒண்ணும் இல்ல. வாந்தி எடுக்க வெச்சிட்டோம், இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போலாம். விரசா வா’ என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினார் காளியக்கா.

இது என்ன விபரீதம்? நல்லநேரம் கூடி வர்ரப்ப, இது என்ன சோதனை? செல்வி ஏன் இப்படி செஞ்சா? ஆயிரம் கேள்விகளுடன் செல்வியை நெருங்கினான் தாமு.

லேசான மயக்கத்தோடு செல்வி முனுமுனுப்பது அவனது காதில் விழுந்தது. ‘பணம் இல்லன்னா வாழ்க்கை இல்லை. கடன் வாங்கக் கூடாது, அதவிட கந்து வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. கடனை திருப்பி கொடுக்க முடியாதவங்க, கடன் வாங்கக்கூடாது. மானம்தான் பெரிசு, மாமா என்னை மன்னிச்சிடுங்க....’

‘என்ன செல்வி என்ன என்னம்மோ சொல்ற? நான்தான் வேலு அண்ணன்கிட்ட அடுத்த வாரம் வட்டியும் முதலுமா கொடுத்திடுறேன்னு சொன்னேனே. அதுக்குள்ள என்ன நடந்துச்சின்னு தெரியலியே? காளியக்கா காலையில வேலு அண்ணன் வந்தாரா?’

‘தெரியிலப்பா... பக்கத்து வீட்டு தனத்தை கேட்டாத் தெரியும் அவதான்  வேலைக்கு போவாம வீட்டுல இருந்தா, தனம் காலையில வேலு அண்ணன் செல்வி வீட்டுக்கு வந்தாங்களா?’

‘ஆமாம்க்கா... வேலு அண்ணன் தாமு போனதுக்கு அப்புறம் மழையோட வந்துச்சி. எனக்கு ரொம்ப முடையா இருக்கு பணத்தை நாளைக்கு குடுத்திடுங்க, வாங்கும்போது சந்தோ­மா வாங்குறீங்க, குடுக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களுக்கு. பத்து வட்டின்னாலும் பரவாயில்ல குடுங்கண்ணேன்னு கெஞ்சி வாங்குறீங்க. அப்புறம் கந்துவட்டி வாங்குறேன். முதலுக்கு மேல வட்டி குடுத்துட்தோம்ன்னு போலீஸ்ல சொல்லி எங்கள ஜெயில்ல போட வைப்பீங்க. இந்த அல்லதொல்லையே வேண்டாம். காலம் கெட்டு கிடக்குது. வாங்கின பணத்தை திரும்பகுடுக்க முடியிலன்னா, ஏன் கடன் வாங்குறீங்க?. நாங்க என்ன முட்டாளா?, இளிச்ச வாயன்னு முகத்துல எழுதி ஒட்டிருக்கா?, அப்டீன்னு கத்துனாருக்கா.’

‘அப்படியா... நீ ஏன் ஏங்கிட்ட சொல்லல’

‘நீதான் வேலைக்கு போயிட்டு, இப்பத்தான வந்த அக்கா. அது மட்டும் இல்லக்கா மானம் ரோசம் இருந்த , நாளைக்குள்ளார எம் பணத்தை கீழே வைங்கன்னு சொன்னாரு, உடனே செல்வி அழுதுகிட்டே உள்ளுக்குப்போய் கதவை சாத்திடுச்சி.’

‘சரி... இதை எல்லாம் நீ வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தியா?’

‘வேற என்ன பேச முடியும்?, நானும் கடன் வாங்கியிருக்கேன் நேத்துதான் வட்டியைக் கொடுத்தேன். என்னையும் ஏடாகோடமா பேசியிருந்தா, என் வீட்டுக்காரன் அறுவாள தூக்குவான். தேவையா இது?.’
‘எல்லாரும் சுயநலமாகத்தான் இருக்கீங்க, இப்பபார் செல்வி, மருந்த குடிச்சிட்டா. ஏதாச்சி ஒண்ணுன்னா நம்ம எல்லாரையும்தான் போலீஸ் கேள்வி கேட்கும்.’

‘ஆமாம்..... இந்த போலீஸ்காரங்களே திருடனை விட்டிடுவாங்க ஏமாளியை புடிச்சி உதைப் பாங்க.’

‘போதும் உங்க பேச்சு, உடனே செல்வியை தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரி போற வழியப்பாருங்க.’

‘காளியக்கா, தனம் அக்கா செல்வியை ஒரு கை புடிங்க, முருகன் அண்ணாச்சி தட்டு வண்டியில ஏத்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம். நீங்க ரெண்டு பேரும் கூட வாங்கக்கா, எனக்கு பதருது.’

‘சரி தம்பி தட்டு வண்டியலயே நாங்களும் வர்ரோம். இந்த முழங்கால் தண்ணியில ஆட்டோ வராது. ஓட்டவும் முடியாது, நீ முன்னாடி உக்காந்துக்கிட்டு வா.’

‘சரிக்கா, சீக்கிரம் முருகன் அண்ணே விரசா ஓட்டுங்க.’ தம்பி விரசா ஓட்ட முடியாது. தண்ணியில தடமாறிடும் நிதானம்மத்தான்  போக முடியும்.

‘அக்கா, செல்விய பார்த்துக்குங்க ஸ்டெச்சர எடுத்துக்கிட்டு வந்திடுறேன்’ தாமு, ஆஸ்பத்திரி உள்ளேப் போய் ஸ்டெச்சரை தேட, வார்ட்பாயும், ஆயா அம்மாக்களும் ஸ்டெச்சர்ல டெங்கு காய்ச்சல் பே­ண்டுக்களை தூக்கிக் கொண்டு பரபரப்புடன் பறந்து கொண்டிருந்தனர். தாமுக்கு ஸ்டெச்சரும் கிடைக்கவில்லை. வீல் சேரும் கிடைக்கல. என்ன செய்யிறது தாமதிக்கக்கூடாதுன்னு செல்வியை தன்னுடைய தோள்ளேயே தூக்கிக்கிட்டு கேஸ்வாலி யட்டிக்குள் ஓடினான்.

தாமு செல்வியை தூக்கிக் கொண்டு ஓடுவதை பார்த்த எல்லோரும் இது என்ன கொடுமை. பெரிய ஆஸ்பத்திரின்னாலே இப்படித்தான் கவனிப்பு கிடையாது. காசு குடுத்தாதான் ஸ்டெக்சர் கிடைக்கும், கவனிப்பு கிடைக்கும். இவுங்கள சொல்லி குத்தம் இல்ல. கீழே இருந்து மேல்மட்டம் வரைக்கும் லஞ்சம்தான் பேசுது.  நம்ம மந்திரிங்களையும், எம்.ஏல்.ஏக்களையும் பத்தி சொல்லத் தேவையில்லை. கோடியிலத்தான் மிதக்குராங்க.  நம்மள காம்பிச்சு ஏழ்மையை சாதகமாக்கிக்கிட்டு எப்படி சம்பாதிக்கலாம்ன்னு திட்டம் போடுறதுல கில்லாடியா இருக்காங்க.

அம்மா டாக்டரம்மா, எம் பொண்டாட்டி எலி மருந்த சாப்பிட்டுட்டா அவளை காப்பாத்துங்க அம்மா. தாமு கதற, சாகாவாசமா டாக்டரம்மா வந்து செக் பண்ணிட்டு நர்சம்மாவை கூப்பிட்டு இவுங்க வயித்துல இருக்கற வி­த்தை வெளியில எடுத்துட்டு டிரிப்ஸ் ஏத்துங்க. பிரச்சினை ஏதும் இருந்தா, ஐசிவுக்கு அனுப்பிடுங்கன்னு சொல்லிட்டு அவுங்க டெங்கு காய்ச்சல் பே­ண்டுக்களை பார்க்க வந்த துஷ்ஐஷ்விமிer ஸஷ்விஷ்மி க்கு கிளம்பிட்டாங்க.

நர்சம்மா டாக்டர் சொன்னதை எல்லாம் செஞ்சிட்டு தாமுவை கூப்பிட்டு மேஜையில இருக்கிற பிளாஸ்க்கை எடுத்துட்டுப் போய் நாலு காப்பி, நாலு வடை வாங்கிட்டு வரச்சொன்னப்ப செல்விக்கா காப்பியும், வடையும், என்ற எண்ணத்தோடு டீக்கடைக்கு ஓடினாள்.

  லஞ்சம் காப்பியிலும் வடையிலும் ஆரம்பிப்பது தாமுவுக்கு தெரியாது. ஆனால், ஆஸ்பத்திரிலுள்ள பே­ண்டுகளின் சொந்தங் களுக்கு நன்றாகவே தெரியும்.

லஞ்சம் இதோட நின்னா சரி, மேல காசு கேட்டா அவன் எங்கப்போவான்.

செல்வியோட தற்கொலை முயற்சியை கேள்விப்பட்டு கந்துவட்டி வேலு அண்ணன் பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து விட்டார்.

‘தாமு, கேள்விப்பட்டேன். என்னை இதுல சிக்க வெக்காத. போலீஸ்ல காரணம் கேட்டா குடும்ப சண்டைன்னு சொல்லிவிடு.

ஐயோ! போலீஸ் வருதே, நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். நான் கேண்டீன்ல உட்கார்ந்து இருக்கிறேன். போலீஸ் போனோன்ன வந்து பார்க்கிறேன்.’

எப்போதும் போல போலீஸ்காரர்கள் தடாலடி விசாரிப்பில் இறங்கினர். ‘இங்க யார்யா தாமு? செல்வியோட வீட்டுக்காரன்?‘நான்தான்சார், ’‘என்ன பிரச்சனை? தண்ணி போட்டு கலாட்டா பண்ணி பொண்டாட்டிய அடிச்சியா?.. இல்ல வரதட்சணை கொடுமையா?’

‘இல்ல சார், செல்விக்கு அடிக்கடி வயித்துவலி வரும். வயித்துல கட்டி வரும். அதான் தாங்காம தப்பு செஞ்சிடுச்சி. நான் நைட்  வீட்டுக்கு வந்தப்பதான் தெரியும் சார்.’

‘சரி... சரி... நர்சம்மா செல்வி முழிச்சிட்டாங்களா? இல்லை சார்.... மயக்கமா இருக்கு, கொஞ்ச நேரத்துல முழிச்சிடும். சரி வாய்யா, நீ எந்த  ஊரு? அந்தப்பொண்ணு எந்த ஊரு? விவரம் முழுசா சொல்லு.’

தாமு விவரம் முழுவதும் சொல்ல போலீஸ் ஏட்டு, எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு, ‘ஓடி வந்த கேசா? எதுக்குய்யா இப்படி பண்றீங்க? ஒரு வேகத்துல வந்திடுறீங்க. காசில்லாம கஷ்டப்படும்போது இந்த மாதிரி முடிவெடுக்குறீங்க. பெத்தவங்க பேச்சகேட்டிருந்தா இந்த கதி இல்லீல்ல.. சரி நர்சம்மா அந்த பொண்ணு முழிச்சிடுச்சா, ஏன் வி­ம் சாப்பிட்டிருக்கு? ’

‘வயிர சுத்தம் பண்ணதுல ஒண்ணும் இல்ல, பித்தமாத்தான் வருது.’

என்னப்பா உன்ன பயமுறுத்த பொய் சொல்லியிருக்குப்போல. வி­ம் இல்லேன்னா நான் என்ன கேஸ் எழுதுறது. முழிச்சோன பொண்டாட்டிய கூப்பிப்பிட்டுப் போ.’

‘அப்புறம் ஏட்டய்யா, இந்த பொண்ணு மாசமா இருக்கிற அறிகுறிதான் டெஸ்ட்ல இருக்கு, வாந்தி எடுத்து மயக்கமானதும் பயந்திட்டாங்க போல இருக்கு. நல்ல சேதிதாப்பா உனக்கு, சரி எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன்.’

‘செல்வி நல்லா இருக்கியா? எங்களை பயமுறுத்திட்டீயேம்மா. காளியக்கா, எலி வி­ம் குடிச்சிட்டன்னு சொன்னதால பயந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்துட்டேன். வேலு அண்ணன் திட்டினாருன்னு தனம் அக்கா சொன்னாங்க. அதனாலதான் இப்படி செஞ்சிட்டியோன்னு நினைச்சோம். காளியக்கா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க’
‘காளியக்கா, தனம் அக்கா, உள்ளே வாங்க செல்வி நல்லா இருக்கு,’ தாமு அழைக்க இருவரும் உள்ளே ஓடி வந்தனர். ‘செல்வி நல்லா இருக்கியா? இப்ப ஒண்ணும் ஆபத்து இல்லியே.’ 

‘ஒண்ணும் இல்லக்கா, நான் ஒண்ணும் வி­ம் சாப்பிடல. அப்ப வாசல்ல எலி மருந்து டப்பா இருந்துதே?’

‘அக்கா அவ நல்லா இருக்கா  உங்களுக்கு நல்ல செய்திதான் செல்வி மாசமா இருக்கா, அதுக்குத்தான் இந்த வாந்தியும் மயக்கமும்.’

‘செல்வி ரொம்ப சந்தோ­ம்’ என்று உரக்க கத்த, நர்ஸ் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு தாமுவை மட்டும் உள்ளே இருக்க சொல்லிவிட்டு வேற பே­ண்டை பார்க்க போய்விட்டார்.

‘செல்வி நம்ம கஷ்டம் எல்லாம் போயிடுச்சி. நம்ம ஊர் லாரி டிரைவர் அண்ணன், என்ன பர்னிச்சர் கடையில பத்தாயிரம் ரூபாய்க்கு சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். டெய்லி பேட்டாவும் கிடைக்குமாம். அட்வான்ஸ்சும் வாங்கித்தரேன்னு சொல்லியிருக்கார். நம்ம கடனை அடைச்சிட்டு சந்தோ­மா வாழலாம். எல்லாம் பிறக்கப்போற குழந்தையோட யோகம். நம்ம கஷ்டத்திற்கு விடியும் நேரம் வந்திடுச்சி.’

  இதோ கந்து வட்டி வேலு அண்ணன் பயந்து போய் வர்ரார். ‘அண்ணன் ஒண்ணும் பிரச்சனை இல்லன்னே, போலீசு கேஸ் பதிவு பண்ணல. சந்தோ­மா போங்கண்ணே.’

‘அப்பா, இப்பத்தான் எனக்கு உயிரே வந்துச்சி. நீ வட்டியே இனிமே தரவேண்டாம். முதல மட்டும் மூணு மாசத்துல குடுக்கப்பாரு.’

  ‘அண்ணே உங்க கடனை அடைச்சிடுவேன், எனக்கு வேலை கிடைச்சிடுச்சி.’

‘அப்பாடா நான் வர்ரேன், தாமு வர்ரேன், செல்வி தங்கச்சி. நான் பேசுனத மனசுல வெச்சிக்காத.’ தப்பித்த தைரியத்துல பாசத்தோட தங்கச்சின்னு அழைச்சிட்டுப் போனாரு வேலு.

‘இப்ப ஒண்ணு நல்லா புரியுதுங்க, இனிமே கடனே வாங்கக் கூடாது. அதுவும் கந்து வட்டிக்கு வாங்கவே கூடாது. கஷ்ட நேரத்துல யோசிக்காம அதிக வட்டிக்கு கடன்  வாங்கிட்டு நாமலும் திண்டாடுறோம். குடுத்தவங்களுக்கு பொல்லப்பா ஆகிடுரோம். அதிக வட்டிக்கு வாங்கக் கூடாது, தப்புன்னு அவுங்க உணர்ந்து வேலு அண்ணன் மாதிரி நடந்துக்கிட்டா, பிரச்சினையே வராது.’

பிரச்சனைகளை சுமூகமா முடிக்க உதவுனது காற்றில் எங்கிருந்தோ பறந்துவந்த எலி வி­ டப்பாதான் என்று காளியக்காவுக்கு தெரியவும் வேண்டாம், வேலு அண்ணனுக்கும் தெரிய வேண்டாம். தாமுவுக்கும் செல்விக்கும் விடியலை தந்ததும் எது என்று தெரிய வேண்டாம், விடியும் நேரம் அவர்களுக்கு வந்துவிட்டது.

Monday 4 December 2017

பொருளுள்ள வெள்ளி விழா

பொருளுள்ள வெள்ளி விழா

கேரளாவில் சகோதரி ஜோஸ் ஆன்டோ ஆலப்புழை அருகே இரிஞ்சலக்குடாவில் சைக்கிள் கடை வைத்திருந்த திலகன் என்பவருக்கு தன் சிறுநீரகம் ஒன்றைத் தானமாகத் தந்துள்ளார். திலகனுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த  நிலையில் அவரின் குடும்பத்தவர் எவருக்கும் அவரின் சிறுநீரகத்திற்கு ஒத்து வரவில்லை. அவர் ஏழ்மையாய் இருந்ததால்  சிறுநீரகம் பெற்றுக் கொள்ள வழியில்லை. எனவே சகோதரி ஜோஸ் ஆன்டோ தன் சிறுநீரகத்தை தந்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் தனது துறவறத்தின் வெள்ளிவிழா நினைவாக இத்தியாகத்தை செய்திருக்கிறார். இது சிறப்பான வெள்ளி விழா கொண்டாட்டம்.

தேம்பாவணியில் இயேசு பிறப்பு

தேம்பாவணியில்  இயேசு  பிறப்பு

 பேராசிரியர் முனைவர் ச.சாமிமுத்து, திருச்சி

கற்புக்கு அரசராகிய தூய வளனாரும் புண்ணியத்தின் திருவுருவான கன்னிமரியும் இடையறாது வேண்டிய வேண்டுதலைக் கேட்ட இறைவன் இப்பூவுலகில், தாம் ஆதாம் ஏவாளுக்கு வாக்களித்தவாறு மனிதனாகப் பிறக்க விருப்பம் கொண்டார். எனவே வளனாரையும் கன்னி மரியாவையும் திருமணத்தில் ஈடுபடுத்தி, பழுதில்லா வகையில் பாரில் பிறந்து மனுக்குலத்தின் பாவத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார். ஆகவே, கன்னிமரியிடத்துக் கபிரியேல் தேவ தூதரை அனுப்பி தம் திருவுளத் திட்டத்தை எடுத்துரைக்கச் சொன்னார். அத்தேவதூதரும் ஜெருசலேம் தேவாலயத்துள் விரைந்து நுழைந்து, கன்னிமரிக்கு காட்சியளித்து, கடவுள் திருவுளத் திட்டத்தை எடுத்துரைத்தார். அந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தம் தேம்பாவணிக் காப்பியத்தில் இனிய தம் பாடல் மூலம் நமக்கு எடுத்துரைக்கின்றார். அப்பாடல்,

“வான்செய்த சுடர்ஏய்க்கும் வடிவொடு
வானவன் சடுதி வந்தக் கன்னி
கான் செய்த மலர்ப்பதத்தைக் கண்டிறைஞ்சிக்
கடவுள் அருள் கருதுந் தன்மை
தான்செய்த ஏவலெனத் தவறாதோர்
மணத்து அமைதல் தருமம் என்னத் 
தேன்செய்த கனிச்சொல்லால்  சீர்த்தபல
உறுதிகளும் செப்பினானே”   (பாடல் 317)

என்று நம் செவியில் இன்பத்தேன் பாய்ச்சுகின்றது.

கன்னிமரியிடம் சென்ற கபிரியேல் வானவர் வானத்தை அலங்கரிப்பதற்குரிய சூரியனது வடிவைப்போல் விளங்கினார் என்றும் மரியின் மணம் வீசும் தாமரைத் திருவடிகளை வணங்கினார் என்றும் வீரமாமுனிவர் தம் பாடலில் இலக்கியச்சுவை சொட்டச் சொல்லு கிறார். அவ்வாறு சென்ற தேவதூதர், தேனைப் பொழியும் இன்பமான சொற்களினால் இறைவனுடைய கருத்துப்படி நீங்கள் திருமணம் புரிந்து கொள்ள ஒப்ப வேண்டும் என்றார்! மேலும் உறுதி பயக்கும் நல்லுரைகள் பலவற்றை நவின்றார்.

மணம் என்ற வார்த்தையைக் கேட்கும் முன்னே கன்னிமரியாவின் முகம் வாடிற்று! கண்களில் துன்பநீர் குளமாகப் பெருக வழிய ஆரம்பித்தது. கன்னிமரியோ மூன்று வயது  முற்றுப்பெறா முன்னமேயே திருமணம் புரியாது எப்பொழுதும் கன்னியாய் இருந்து இறைவனுக்குப் பணிபுரியத் தம்மையே ஒப்புக் கொடுத்தவர்கள்.  மனம் கலங்கிய கன்னிமரிக்கு அத்தேவதூதர் இறைவனின் திருவுளத் திட்டத்தை உறுதிபட எடுத்துக் கூறவே, மரியும் மனம் தேறி கல்லினும் வலிய தம் கன்னித் தன்மை என்றும் அழியாத அத்திருமணத்திற்கு இசைவளித்தார். உடனே அவ்வானவர், இறைவனுடைய கட்டளையின்மேல், சமயத் தலைவராக இருந்த சிமியோனுக்குக் காட்சியளித்து மரியயன்னும் பெயர்பூண்ட கன்னிக்குரிய துணைவரை மரியின் குலத்திலேயே தேடித் திருமணம் செய்விப்பாயாக என்றார். அவ்வாறே, தாவீது அரச குலத்தினராகிய இளைஞர் வளனாருக்கும் அதே குலத்து இளம் பெண் மரியாவுக்கும் சமய முறைப்படி திருமணம் நிறைவேறிற்று, எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த வியத்தகு இல்லற ‡ துறவற திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரும் வழுவிலாக் கன்னிமரியாவையும் பழுதிலா வளனாரையும் பலவாறு புகழ்ந்து வாழ்த்தினார் என்று வீரமாமுனிவர் பாடிப் பரவுகின்றார். அறத்தின் -- வேதத்தின் - செல்வத்தின் வடிவங்களைப் போன்றவர்களே வாழக் கடவீர்! எங்கள் உயிரையும், உலகத்தின் உயிரையும், உயிர்களின் உயிர்களையும் போன்றவர்களே! வாழக் கடவீர் என்று வாழ்த்தியதை, 

“வாழி அறவுரு வாழி மறையுரு
  வாழி திருவுரு மானுவீர்
வாழி எமதுயிர் வாழி உலகுயிர்
வாழி உயிருயிர் போலுவீர்”

 என்று இசைக்கின்றார் வீரமாமுனிவர்.

திருமணம் நிறைவேறிய சில நாட்களுக்குப் பிறகு, சிமியோன் வளனாரை அழைத்து, உமது சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் செல்வீர் என்றார். இருவரும் இசைந்து இறைவனை வணங்கிப் புறப்பட்டார்கள்.

மரியம்மாள் மற்றைய கன்னி யர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, இல்லறத் துறவியாகிய வளனாருடன் நாசரேத்து நோக்கி நடந்தார். அச்சிற்றூருக்குச் சென்றபொழுது அங்கிருந்த அனைவரும் அன்புடன் அத்தெய்வ இணையரை வரவேற்றார்கள். அறம் தழைக்க, உலகமீட்பர் உதிக்க, இல்லறமாகிய நல்லறத்தை அக்கன்னியும் கற்பரசும் தொடங்கினர்!

இருவரும் இளமையிலேயே மேற்கொண்ட துறவற ஒழுக்கத்திற்குப் பழுது நேராவண்ணம் இல்லறத்தில் இணைக்கப்பட்டதால் இறைவனுடைய அருட்செயலை எண்ணி மகிழ்ந்தனர். கன்னிமரியின் கன்னித் தன்மை காப்பாற்றப்பட கற்பரசு காவலாயும், அவரின் கற்புக் காக்கப்பட கன்னியரசி காவலாகவும் அமைந்தார்கள் என்பதை வீரமாமுனிவர் கவின்மிக்க கவிதைகளில் பாடும் திறம் போற்றற்குரியது. துறவறம் மேற்கொண்டு இல்லறம் புரிந்த இருவரும் தூய வாழ்வு வாழ்ந்து வருங்கால், அவர்களின் உள்ளங்கள் பளிங்கிபோல் ஒளிர்ந்தன!. பொங்கி வழிந்த பேரார்வத்தால் வளனார் பலவாறு தந்தையாம் கடவுளை வணங்கி வாழ்த்திப் போற்றியதை,

“அறக்கடல் நீயே, அருட்கடல் நீயே,
அருங்கரு ணாகரன் நீயே,
திறக்கடல் நீயே, திருக்கடல் நீயே,
திருந்துளம் ஒளிபட ஞானம்
நிறக்கடல் நீயே, நிகர்கடந் துலகில்
நிலையும் நீ உயிரும் நீ, நிலை நான்
பெறக்கடல் நீயே, தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ யனைத்தும் நீ யன்றோ!”

என்னும் கன்னல் சுவைப்பாடலில் கவிஞர் பாடி இன்புறுகின்றார்.

இறைதிட்டம் ஈடேறும் நாள் நெருங்கிற்று. கன்னி மரியின் திருவயிற்றில் மீட்பர் கர்ப்பமாக உருப் பெற விரும்பி, அச்செய்தியைக் கன்னிமரியிடம் தெரிவிக்க கபிரியேல் தூதரை அனுப்பினார். வான் தூதரும் மாசில்லா மரியாவை அணுகி, தேவ வரங்கள் நிரம்ப பெற்றவர் என்றும் இறைவன் வாழும் எழில்மிக்க உளத்தை உடையவர் என்றும் பூவுலக மகளிர்களிலெல்லாம் அளவில்லாத இறையருளைப் பெற்றவர் என்றும் தேம்பாத் தெய்வீக அழகு பெற்றவர் என்றும் இன்னுரைகளால் அவரை வாழ்த்தினார். தேவதூதரின் புகழ்மொழிகளைக் கேட்ட பிதாமகள் நாணமுற்று சித்திரப்பாவை போல் தாழ்ச்சியுடன் இருந்த மாட்சி குறித்து வீரமாமுனிவர்

“தனக்கள வகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கள வுளைந்து நாணி வரைந்த ஓவியமே யயாத்தாள்”

என்று பாடுகின்றார்.

தேவதூதர் மீண்டும் எக்காலத்தும் கன்னித் தன்மை கெடாது விளங்கும் மாதே! இவ்வுலகத்தில் உள்ள பொதுவான முறையினின்று மாறுபட்டு, வியப்புற்குரிய வழியில் இறையருளால் ஒப்பற்ற ஒரு கர்ப்பத்தைத் தாங்கி, பொன்னொளியைப் பழிக்க கூடிய உடலழகுபடைத்த ஒரு மகனைப் பெற்றெடுத்து அம்மகனுக்கு இயேசு என்னும் பெயரிடுவாய் என்றார். அதைக் கேட்டு மரியா பெரிதும் மனம் கலங்கி அழியாத கன்னித் தன்மையுள்ள ஒரு பெண் எவ்வாறு ஒரு பிள்ளையைப் பெறுதல் கூடும் என்று ஐயத்துடன் வினவினார். அதனை,

“மய்யலற் றழிவில் கன்னி
மைந்தனைப் பெறுத லேதென்(று)
ஐய்யமுற் றிவள் வினாவ” 

என்று முனிவர் பாடுகின்றார்.

உள்ளத்தைத் தெரிவிக்க வேண்டி, இறைவனுடைய பேராற்றலைத் தேவதூதர்க்கு விளக்கிக் கூறினார். ஒன்றுமில்லாமையிலிருந்து  இவ்வுலகத் தையும், இவ்வுலகில் உள்ள பொருட்களையும் உண்டா க்கிய இறைவனுக்கு இச்செயல் செய்ய முடியாததோ என்றார். மேலும் கன்னியயாருவர் துன்பமில்லாமல் ஒரு மகனைப் பெறுவார் என்று  இசையாசு இறைவாக்கினர் முன்னுரைத்தது உண்மையாகப் போகிறதென்றும், தூய ஆவியாருடைய அருளால் கருவுற்ற இரண்டாம் ஆளாகிய உலக மீட்பரைப் பெற்றெடுப்பாயாக வென்றும் சொல்லி கன்னிமரியைக் கபிரியேல் தேவதூதர் வணங்கினார். 

நாட்கள் மாதங்களாகி நகர்ந்தன. வளனாருக்கு ஏற்பட்ட உள்ளக்கலக்கங்களையயல்லாம் இறைவன் வானதூதர் மூலம் அகற்றவே, வளனாரும் தம் துணைவி இறைவனையே மனிதனாகப் பெற்றெடுக்கும் மேலான  இறையருள் வரத்தை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து இறைவனின் தாயை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி தாம் ஐயம் கொண்டவர்களாய் அழுது புலம்பினார்! அவருற்ற அளப்பரும் வேதனையைப் பல துன்பச் சுவைமிக்க பாடல்களில் பாடும் வீரமாமுனிவர் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வேண்டியதை, 

“எழுந்திரு அடியை வேண்டினான்.
தொழுந்திரு அடிமிசை மழைக்கண் தூவியே,” 

என்று பக்திச் சுவை  நனி சொட்டப் பாடுகின்றார்.

இறைமகன் பிறப்பதற்கு முன்பு, உரோமைப் பேரரசன் அகஸ்டசு சீசர் என்பவரின் ஆட்சிக் காலத்தில், அரசக் கட்டளை ஏற்றுக் குடிக்கணக்குத் தர நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணாகிய கன்னிமரியும் இறைவனின் வரபலன்களால் நிரம்பப்பெற்ற மாதவ முனிவராகிய வளனாரும் நாசரேத்தூரிலிருந்து பெத்தலேகம் என்னும் தாவீதரசனின் பேரூருக்குப் புறப்பட்டுப் பயணம் போனார்கள்.

இன்ப துன்பங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றையும் கடந்து, நாசரேத்தைவிட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில் வளனாரும், கன்னிமரியும் பெத்லேகம் நகர்போய்ச் சேர்ந்தார்கள். இரவில் தங்குவதற்கு அத்தாவீதன் நகரத்தில் இறைவனைத் தம் மாணிக்கத் திருவயிற்றில் தாங்கிச் சுமந்த நம் தாய்க்கு அங்கு இடம் இல்லை! நம் தவமா முனிவராம் வளனாருக்கு அங்கு இடமில்லை. இந்நிலையில், பெத்லேகம் நகர்க்கு வெளியில் இருந்த மாட்டுத் தொழுவம் அமைந்த குகையில் இருவரும் சென்று தங்கினர். அக்குகையில்தான், மார்கழிமாதம் 25 ஆம் நாள் நடுச்சாம வேளையில், மூன்று உலகங்களிலும் தமக்கு ஒப்பு யாரும் இல்லாத, மூன்று காலங்களிலும் அழிவில்லாத கன்னிகை, வல்லமையில் அளவில்லாத மூன்று ஆட்களில் இரண்டாம் ஆளாகிய திருச்சுதனை, மூன்று சுடர்களைப் பார்க்கிலும் மிகுந்து விளங்குமாறு பெற்றெடுத்தார்கள் என்கிறார் வீரமாமுனிவர்.

பேரருள் பிறந்தது! பேய்கள் மறைந்தன! பேரின்பம் பூமியில் பெருக்கெடுத்து ஓடிற்று! தேவதூதர்கள் இசைமுழங்கி, மண்ணில் பிறந்த மாதேவக் கொழுந்தைத் தேவதாயின் கரத்திலிட்டு வணங்கினர். கன்னிமரி அன்னையோ தாம் பெற்றெடுத்த கடவுள் மகனைப் பேரன்போடு அரவணைத்து, முத்தமாரி பொழிந்து வாழ்த்தி வணங்கினார்கள். கற்புக்கரசராகிய தூய வளனாரும் பேரின்பப் பெருக்கில் தேவபாலனின் திருவடிகளை வணங்கினார். மரியன்னை, தேவாதி தேவனைத் தம் செந்தாமரைக் கரங்களிலே தூக்கி அரவணைத்த நேரத்தில் கன்னி அன்னையின் கரங்களையே தேன் துளிர்க்கும் மலர்ப்படுக்கையாகக் கருதி உயிர்களின் தலைவர் உறங்கினார். அப்போது தாளாத ஆசையால் வளனார் தாலாட்டிய காட்சியை வீரமுனிவர் பின்வரும் பாடலால் உணர்த்துகின்றார்.

“களித்த நாளில் அரும்பும்தென் காலே
இனிதீங் கரும்புதியே,
துளித்த நானம் தேனரும்பத்துணர் நாள்
மலர்காள் அரும்புதிரே,
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் 
பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான்கனிய அன்பு
துயிலாத் துயில்கின்றான்.”

இவ்வாறு வளனார் இனிமையாகத் தாலாட்டவும், எல்லாவற்றையும் கேட்டு இன்புற்றார்போல் தேவபாலன் தன் திருவிழி மலர்ந்து அவரைப் பார்க்க, அவரும் எல்லையற்ற இன்பக்கடலில் மூழ்கினாராம்!.

அமைதிக் காண உன்னையே நீ கண்டுக்கொள்.

அமைதிக் காண உன்னையே நீ கண்டுக்கொள்.

ஒரு முனிவரிடம் ஒருவர் சென்று ‘அமைதிக் காண என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர்,‘ மூன்று மலைகளைத் தாண்டி மலை உச்சியில் ஒரு கோவில் இருக்கிறது. அக்கோவிலில் ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தைப்  படித்தால் அமைதியின் வழித் தெரியும்’ என்றார். அவரும் மூன்று மலைகளத் தாண்டி மலை உச்சியிலிருந்த  கோவிலுக்குச் சென்று, அங்கிருந்த புத்தகத்தையும் கண்டுபிடித்தார். புத்தகத்தைத் திறந்து பார்த்தால் எல்லா பக்கங்களும் முகம் பார்க்கும் கண்ணாடி. அதில் அவரின் முகம்தான் தெரிந்தது. கோபத்துடன் முனிவரிடம் திரும்பி வந்தார்.  ‘என்ன முகம் பார்க்கும் கண்ணாடிகள் உள்ள  புத்தகத்தை  பார்க்கவா அனுப்பி வைத்தீர்கள்?  என்றான். ‘உன்னையே நீ அறிந்துக்கொண்டால் அமைதியைக் காண்பாய் என்பதுதான் உன் பயணத்தின் பொருள்’ என்றார் முனிவர்.

காப்பாற்றும் கடவுள்

காப்பாற்றும் கடவுள்

முனிவர். ஓர் அரசன் வேட்டைக்குச் சென்றான். அப்போது ஒரு பெண்ணின் போராடும்  அழுகுரல் கேட்டது. அரசன் அங்கு ஓடினான். நான்கு முரடர்கள் அவளை கற்கழிக்க முயன்றுக் கொண்டிருந்தனர். அரசன் அவர்களை விரட்டியடித்து அப்பெண்ணைக் காப்பாற்றினான். பிறகு அவளைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து அழகிய ஆபரணங்களை உடுத்தினான். இப்போது அவள் மிக அழகாகத் தோன்றினாள். அரசருக்கே அவள் மீது கவர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  எனவே அரசன்‘நான் உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றான். அதற்கு அவள் நான் ‘ஏன்  உங்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்றாள். ஆச்சரிய ப்பட்ட அரசன் ‘நான் விரும்புகிறேன் என்பதால் என்னைத் திருமணம் செய்துக்கொள்ள வேண்டாம். நான் உன்னைக் காப்பாற்றினேன் என்பற்காவது என்னைத் திருமணம் செய்துக்கொள்’ என்றான் அரசன். இறைவன் நம்மை பாவங்களி லிருந்து மன்னித்துக் காப்பாற்றுகிறவர்

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர்  உலகம்  செய்வோம்

நல்லை இ. ஆனந்தன், வேதியர்

சென்ற மாதம் அன்பியக் கூட்டம் நடத்த ஒரு வீட்டிற்குச் சென்றேன். ஏற்கனவே அன்பிய ஆட்கள் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் தலைவரும் தலைவியும் வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களின் ஒரே மகன் எழுந்து வெளியே கிளம்பினான். ‘தம்பி, அன்பியக் கூட்டம் துவங்கலாம். உட்காருங்கள்’ என்றேன். அதற்கு அவன் சொன்னது, ‘ஐ டோன்ட் லைக் அன்பியம்’.

அவனது அம்மா அவனுக்கு அன்பியம்னா பிடிக்காது என்று அதை தமிழில் மொழி பெயர்த்தார்கள். ஞாயிறு திருப்பலிக்கு, மறைக்கல்விக்கோ அவன் வருவதில்லை. எட்டாவது படிக்கிறான். வற்புறுத்த தயக்கமாயிருக்கிறது. கண்டிக்கவும் பயமாயிருக்கு. எங்களையே சில சமயம் மிரட்டுகிறான். ஏதாவது செய்து விடுவானோ என்று பயப்படுகிறோம். சில மாதங்களுக்கு முன் ஒர் ஆசிரியருடைய மகன் செல்போன் வாங்கித் தரலைன்னு தூக்குப் போட்டுக் கொண்டது உங்களுக்குத் தெரியுமல்லவா. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அவனை எப்படி கோவிலுக்குக் கூட்டி வருவது என்பதும் புரியவில்லை.

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், திருச்சபை எண்:41 / 5 இல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.   ‘கிறிஸ்தவத் தம்பதிகளும், பெற்றோர்களும், தங்களுக்குரிய பாதையில் வழி நடந்து, உண்மையான அன்பினால், தங்கள் வாழ்நாள் முழுவதும், ஒருவரையயாருவர் அருளிலே ஆதரிக்க வேண்டும். இறைவனிடமிருந்து அன்புடன் பெற்றுக் கொண்ட தங்கள் குழந்தைகளுக்குக் கிறிஸ்துவ படிப்பினைகளையும், நற்செய்தியின் நற்பண்புகளையும்  ஊட்ட வேண்டும். ஏனெனில்  இவ்வாறு செய்வதால் அவர்கள் மனிதர் அனைவருக்கும் தளர்வற்ற,  தாராள அன்பின் மாதிரிகளாகத் திகழ்கின்றனர். சகோதர அன்பை வளர்ச்சியுறச் செய்கின்றனர். திருச்சபைத் தாயின் வளமைக்குச் சாட்சிகளாகவும், அவர்களோடு ஒத்துழைப்பவர்களாகவும் அமைகின்றனர்.’

பங்குத் தந்தை ஒருவர் வருத்தத்தோடு கூறியது,  ‘எனது பங்கில் நாலாயிரம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஞாயிறு திருப்பலிக்கு வருவது 200 பேர் மட்டுமே. நாள்தோறும் திருப்பலிக்கு வருவது ஐம்பதுபேர் கூட இருக்காது. தேர்த்திருவிழாவில் மட்டுமே ஆலயம் நிரம்பும். மற்ற நாட்களில் ஆலயத்தில் பாதி இடம் காலியாகத் தான் இருக்கும்.’

அருட்சகோதரி ஒருவர் ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டது,  ‘ஞாயிறு மறைக்கல்விக்கு பிள்ளைகள் வருவதேயில்லை. திருப்பலிக்கு முன் ஞாயிறு  மறைக்கல்வி வகுப்பு நடத்தியபோது தாமதமாகக் கடைசி நேரத்தில் வந்தார்கள். திருப்பலிக்குப் பின் வகுப்பை மாற்றியபோது பலர் நன்மை வாங்கியதுமே ஓடிப்போவார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.’ஏன் இந்த மாற்றம்? எப்படி பக்தியில் இந்த தளர்ச்சி ஏற்பட்டது? யாரால் இப்படி மாறியது? மறுமலர்ச்சிக்கு என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? இப்படியே நடக்கட்டும் என்று விட்டுவிடக் கூடுமா? அல்லது ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிக்க வேண்டாமா?

நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிற, விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற சில காரியங்களைப் பற்றி கடந்த மாதங்களில் சிந்தித்தோம். ஆனால், ஆன்மீக தளர்ச்சி, பக்தியில் வறட்சி என்ற நிலை உலகளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. 

  ‘ஒளியான  அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை’ (யோவா 1: 11) என்ற நற்செய்தி வசனம் இப்போதும் தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அயல்நாட்டில், யாருமே வராத ஓர் ஆலயத்தின் பொருட்களை, விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த சிலமணி நேரங்களில் அனைத்துப் பொருட்களும் விற்றுப் போய்விட்டன. இதைக் கூறிய குருவானவர் ஒருவர், அவர்கள் பொருட்களை மட்டுமல்ல ஆண்டவரையே ஆலயத்தை விட்டு வெளியேற்றி விட்டனர். சிக்கியிருந்தால் அவரையும் விற்றிருப்பார்கள் என்று வருந்தினார்.

இது கத்தோலிக்க மதத்தில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலுமே இந்த ஆன்மீக வறட்சியும், பக்தியில் ஒரு தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்.

‘தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சியடை மாட்டார்கள். ஞானத்தின் பொருட்டு விழிப்பாய் இருப்போர் கவலையிலிருந்து விரைவில் விலகுவர் என்கிறது விவிலியம் (சாஞா 6: 12-16)

‘கடவுள் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் கடவுள் எனக்கு இப்போது தேவை இல்லை என்ற சித்தாந்தம் எல்லார் மனதிலும் அரும்பிக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது.

‘சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக் குரியதை கடவுளுக்கும் கொடுங்கள்’ என்றார் இயேசு. அரசுக்குரியதைக் கவனமாகக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்குரியதை ஆண்டவருக்கு கொடுக்க தயங்கும், மறுக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், வாழ்வில் அதற்கான கணக்கை கடவுளுக்கு கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

ஆன்மீகத் தளர்ச்சிக்கு, பக்தியின் வறட்சி நிலைக்கு காரணங்களைப் பட்டியலிட ஆசைதான். ஆனால் கட்டுரை நீண்டு விடும் என்று கவலையாய் இருக்கிறது. ‘குறைகளைச் சொல்வதால் உறவு சிதைகிறது. நிறைகளைச் சொல்வதால் அன்பும் உறவும் வளர்கிறது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கட்டுரையில் அதை தவிர்த்து விடுகிறேன்.

எனவே உலக அளவில் பேராபத்தை ஏற்படுத்தப் போகிற இந்த ஆன்மீக வறட்சியைப் போக்கி, பக்தி வளம் பெருக நான் என்ன செய்ய  முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசரமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

குருக்களும், துறவியரும் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள். அவரால் அபிசேகம் செய்யப்பட்டவர்கள். நற்செய்தி அறிவிப்பதே அவர்களின் முதன்மையான பணியாகும். சில விதிவிலக்குகளை விட்டுத் தள்ளிவிட்டுப் பார்த்தால் அவர்களின் உழைப்பு உன்னதமானது. அழைப்பு அற்புதமானது. திருச்சபையில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட அவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலமாக இது திகழ்கிறது.

பொது நிலையினரும் திருஆட்சி நிலையின ரோடு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களின் கடமை களையும் உரிமைகளையும் செயல்படுத்த முன் வருமாறு தாய் திருச்சபை அழைக்கிறது. 

புலருகின்ற புத்தாண்டில், புதியதோர் உலகம் மலர்வதற்கு, உழைக்க முற்படுவோம் என்று கைகூப்பி வேண்டிக்கொண்டு இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும், அனைத்திற்கும், பெரிய எழுத்துக்களில் நன்றி. கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒரு தாயின் தியாகப் பயணம் (நடந்த நிகழ்வு)

ஒரு தாயின் தியாகப் பயணம் (நடந்த நிகழ்வு)

- ஆரோக்கியமேரி , கல்லக்குடி.

பல ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பங்கள் பல குழந்தைகளுடன் எதிரொலிக்கும். அத்தகைய பெரிய குடும்பம் ஒன்றில் மூன்று ஆண்பிள்ளைகள், ஐந்து பெண்பிள்ளைகள்.  பெற்றோர்  மூன்று பையன்களுக்கும் நான்கு பெண்களுக்கும் திருமணம் முடித்தார்கள். கடைசி பெண்ணையாவது  படிக்க வைக்கலாம் என்று, அவளை  எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். அப்பெண்ணுக்கும், பெற்றோருக்கும் அவள் ஓர் அருள்சகோதரி ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. மற்ற  சகோதர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே இரகசியமாக திருவையாறு மடத்தில் அவரைச் சேர்த்து வைத்து படிக்க வைத்தார்கள். ஆனால் அவளின் மூத்த சகோதரன் ஊர் நாட்டாண்மைக்காரர். தங்கையை கண்டுபிடித்து அழைத்து வந்து அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

இங்குதான் ஆரம்பமானது,  இந்த பெண்ணின் தியாகப் பயணம். திருமணமானவுடன் முதலில் ஆண் குழந்தைப் பிறந்தது.  அடுத்து பெண் குழந்தை. இந்நேரத்தில்,  வளர்ந்து வந்த ஆண்குழந்தை மூளைக் காய்ச்சலால் இறந்து போக, சோகத்திலும் சோகமாக குடும்பம் நின்றது. அடுத்து கர்ப்பமாகி இரண்டாவது பெண் குழந்தையை ஈன்றாள். இந்நேரத்தில் கணவன் அடுத்து ஆண் குழந்தை வேண்டுமென்று பெரும் வேட்கைக் கொண்டான். ஆண்வாரிசிற்காக அவ்வளவு ஏக்கம். மனைவி கருவுற்றார். ஆண் குழந்தை பிறக்கும் என்று வேண்டுதல் வைத்து செபித்தார்கள். ஆனால் மீண்டும் பெண் குழந்தை. இதைப் பார்த்த கணவன் கவலைகளால்  எப்படி இந்த பெண் குழந்தைகளை வளர்ப்பது?  எப்படி மாப்பிள்ளை கண்டு பிடித்து வாழ்க்கையில் சேர்ப்பது?  என்ற நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இப்போது அந்த  சோகத்தில் விதவைத் தாய் மூன்று குழந்தையுடன் வாழ்க்கையில் போராடினாள். கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தாள். இதற்குமுன் கூலி வேலைக்கு சென்றதில்லை. பல நேரங்களில் பிள்ளைகள் பசியோடு உறங்க சென்று விடுவார்கள். அவர்களை எழுப்பி சோறு ஊட்டி விட்டு மீண்டும் படுக்க வைப்பாள். மூன்று பெண் பிள்ளைகளில் இரண்டு பேருக்கு எப்படியோ  திருமணம் செய்து வைத்து விட்டாள். அப்போது வரதட்சணைக் கொடுமை இப்போது இருப்பது போல் இல்லை. இந்நிலையில் கஷ்டப்பட்டு மூன்றாவது பெண்ணை ஆசிரியை வேலைக்கு படிக்க வைத்து விட்டாள். ஆனால் 12 ஆண்டுகளாக மகளுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. இந்நேரத்தில் பலவிதமாக பக்தி முயற்சிகளை மேற்கொண்டு மகளுக்கு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டுமென்று மன்றாடினார். விரதம் இருத்தல்,  மண்சோறு சாப்பிடுதல் போன்று மகளுக்காக மன்றாடினாள். அற்புதமாக திருச்சிலுவை சகோதரிகள் வீடு தேடி வந்து அவளின்  மகளை ஆசிரியை வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து  அந்த தாயின்  சோக வாழ்க்கை  களைந்தது. ஆசிரியையான  மகள்,  திருமணம் செய்து கொள்ளாமல்  தன்  தாய் பட்ட துன்பங்களுக்கு எதிராக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாத்தாள். தாய் இறந்த பிறகும், தாய், தங்களுக்காகப்பட்ட தியாகங்களை தினமும் நினைந்து நினைந்து உருகிப் போனாள் ஆசிரியையான மகள்.
ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா?


பணிவு என்னும் இனிய பாதை, 18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!

பணிவு என்னும் இனிய பாதை
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!

அநேகமாக அனைத்துக் கலாச்சாரங்களிலும் நன்றி விழா இருப்பதை நாம் காணலாம். அதாங்க  நம் பொங்கல் விழா. நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு. எனவே மழைக்காலம், குளிர்காலம் முடிந்த பிறகு விவசாயம் நன்முறையில் நடைபெற்றதற்காக ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். அமெரிக்கா போன்ற குளிர் மிகுந்த நாடுகளில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நன்றிவிழாவை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் நன்றிவிழா  (
Thanksgiving Day) நவம்பர் மாதத்தில் வரும் 4 வது வியாழக்கிழமை ஆகும். அந்த விழாவை கொண்டாடும் போது அவர்கள் விருந்தில் கட்டாயம் ஓர் உணவு வகை இருக்கும். வான்கோழி இல்லாமல் நன்றி விழா இருக்காது. அதற்கு ஒரு காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிய போது அவர்கள் உண்ணுவதற்கு பெரிதும் துணைபுரிந்தது காட்டு வான்கோழிகள் தானாம். எனவே அதற்கு ஒரு நன்றியாக நன்றி விழாவின் போது வான்கோழி கட்டாயம் இடம் பெறுகிறது.

நன்றி விழா உணவை உண்ணுவதற்கு முன்பு வழக்கமாக தொடக்க செபம் (Grace) செய்வது வழக்கம். அந்தக் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பாக ஜான் என்ற 8 வயது சிறுபிள்ளை செபம் செய்ய சொல்லி பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவனுக்கு திடீரென எதுவும் மனதில் தோன்றவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தான். பிறகு சொன்னான். ‘ஆண்டவரே, என்னை இது போன்று ஒரு வான்கோழியாக படைக்காததற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். அல்லது நானும் இது போன்று இறந்திருப்பேன்’ என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். இறைவன் நமக்கு வழங்கியுள்ள முதன்மையான கொடை, முக்கியமான கொடை நம் வாழ்க்கை.  வாழ்க்கை என்பது இறைவனின் இனிய அழைப்பு. இன்னொரு விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது இறைவனின் இலவசக் கொடை. நாம் வாழ்க்கையைக்  கொண்டாடும்போது அதனை பரிசாக வழங்கிய இறைவனையே கொண்டாடுகிறோம். நாம் வாழ்க்கையை  சிறப்பிக்கும்போது அதனை வழங்கிய இறைவனையே பெருமைப்படுத்துகிறோம். நம் வாழ்க்கை  மட்டுமல்ல, மற்றவர்கள் வாழ்க்கையும் இறைவனின் இனிய கொடைகளே! அவற்றை நாம் மதிக்கும் போது அதன் கொடையாளியாகிய இறைவனையே மகிமைப்படுத்துகிறோம். நமக்கு வாழ்க்கையை அளித்து அதனை பலரால், பல விதங்களில் சிறப்பாக்கிய இறைவனை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்வது நம் கடமையாகும். நன்றி என்னும் ராகம் இல்லாமல் உலகம் என்னும் பாடல் இனிமை பெறாது. நன்றி என்னும் வண்ணம் இல்லாமல் வாழ்க்கை என்னும் ஓவியம் நிறைவு பெறாது.
உங்களின் வாழ்க்கை வரவு செலவு அட்டவணையை (யழியிழிஐஉe றீஜுeeமி) கொஞ்சம் பார்ப்போமா? உங்கள் பிறப்பு தான் உங்களின் தொடக்க இருப்பு. (Balance Sheet) உங்களிடம் வந்து சேருபவை வரவு. உங்களிடம் இருந்து செல்பவை செலவு. உங்கள் இறப்பு இறுதி இருப்பு. உங்கள் நல்லப் பண்புகள் உங்களின் சொத்துக்கள். உங்களின் தீய பழக்க வழக்கங்கள் உங்களின் தேய்மானம். உங்கள் மகிழ்ச்சியே உங்களின் இலாபம். உங்கள் கவலைகளே உங்களின் நஷ்டம். உங்கள் நல் வாழ்வே உங்களின் மூலதனம். உங்கள் பணிவே நீங்கள் பெறுகின்ற வட்டி. உங்கள் ஆணவமே நீங்கள் செலுத்துகின்ற வட்டி. இறுதியில் நினைவில் கொள்ளுங்கள். இறைவனே உங்கள் தணிக்கையாளர் (Auditor).

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு என்பதையும் கவனித்தீர்களா? 15 வயது வரையில் பாராட்டையும், பராமரிப்பையும் அதிகமாக பெறுவீர்கள். 15 வயது முதல் 25 வயது வரை எல்லோருடைய கவனத்தையும் உற்சாகப்படுத்துதலையும் பெறுவீர்கள். 25 வயது முதல் 35 வயது வரை குடும்ப மகிழ்ச்சியையும், குழந்தை மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். 35 வயது முதல் 45 வயது வரை உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஆசானாய் சிறந்த தலைவராய்  (Hero)  தெரிவீர்கள். 45 வயது முதல் 60 வயது வரை பொறுப்பின் சிகரமாய், தியாகத்தின் உருவமாய் திகழ்வீர்கள். 60 வயதிற்கு மேல் மீண்டும் குழந்தையாய் ஆனால் சிறந்த மாதிரியாக  (Model) இருப்பீர்கள். எல்லா காலக்கட்டத்திலும் சில கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால் எல்லா  வயதிலும் பல சிறப்புகளை கொண்டிருப்பீர்கள். முடி கருப்பாக இருந்தால் அதற்கு சில மரியாதைகள் உண்டு. ஆனால் முடி வெள்ளையாகும் போதும் சில மரியாதைகள் உண்டு. தலை வழக்கையாக இருந்தால் வணக்கம் சொல்ல மட்டும்தான் தோன்றும். ஆனால் சில முகங்களுக்கு  தலை வழுக்கையாக இருந்தால் வணங்கி மகிழத் தோன்றும். எல்லா உருவங்களும், எல்லா வயதினரும், எல்லா நிறத்தினரும் சிறப்பு மிக்கவர்களே? நான் இளைஞனாக இருந்த போது கொஞ்சம் கலராக இருப்பேன். ஆனால் ஒல்லியாக இருப்பேன். இப்போது கலர் மங்கி விட்டது. ஆனால் சதை போட்டுவிட்டது. அந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள்  இருக்கிறார்கள்.   

அன்பிற்கினியவர்களே! நாம் வாழ்வை நினைத்துப் பார்த்து மகிழ்வின் பாதையில் எப்போதும்  அதை அமைத்துக்கொள்ள முன் வர வேண்டும். ஒவ்வொரு பகலும் இனிய நாளாக அமைய இயலாது. ஆனால் ஒவ்வொரு நாளிலும் சில இனிய தருணங்களை நாம் ஏற்படுத்தலாம். ஒரு கடைக்கு எழுதுப்பொருட்கள் வாங்குவதற்காக சென்றேன். பேசிக்கொண்டிருக்கும் போது கடைக்காரர் சொன்னார். சார் ஒவ்வொரு நாளும்  சராசரியாக 200 பேர் என் கடைக்கு வருகிறார்கள். ஆனால் சராசரியாக இரண்டு பேராவது எனக்கு எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் நான் அதனை பொருட்படுத்துவதில்லை. அந்த 198 பேரை நினைக்காமல்  வெறும் 2 பேரை மனதில் கொள்வது முட்டாள்தனம் என்றார். ஒவ்வொரு நாளும் நாம் பணிவோடு இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது வாழ்க்கைக் கணக்கில் மகிழ்ச்சி என்னும் சொத்து அதிகமாகும். நாம் தாழ்ச்சியோடு பிறருடைய குறைகளை பெரிதுபடுத்தாமல் இனிய தருணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கைக் கணக்கில் வட்டியோடு நாம் பலன் பெறலாம்.

புனித அன்னை தெரசாவின் படத்தை போட்டு அதன் கீழே இந்த வசனங்கள் இருப்பதை நான் ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். ‘வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை’ அந்த வார்த்தைகள் அவருக்கு நூறு சதவீதம் பொருந்தும். நாம் வாழ்க்கை என்னும் கொடையை பயன்படுத்தி இறைவனை மகிமைப்படுத்த புலரும் புத்தாண்டில் உறுதி எடுப்போமா? (தொடரும்)

திருப்பலி விளக்கம், 22. சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

திருப்பலி விளக்கம்

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

22.  சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

முந்திய சிந்தனையில் பொது நற்கருணை மன்றாட்டுகள் நான்கும் தோன்றிய விதம், அவற்றின் அமைப்பு கூறுகள் அவற்றிக்குரித்தான சிறப்பு அம்சங்கள், காணும் சில குறைபாடுகள் பற்றி விளக்கம் கண்டோம்.  இப்பொழுது மற்றும் சில  சிறப்பு,  அதாவது குறிப்பிட்ட காலத்திற்கும், குறிப்பிட்ட நபர்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள நற்கருணை மன்றாட்டுகள் பற்றிய விளக்கம் காண்போம்.

பின்புலம்:

மூன்று புதிய நற்கருணை மன்றாட்டுகளை உருவாக்கி கொடுத்தபின் வேறு நற்கருணை மன்றாட்டுகளை வேறு யாரும் உருவாக்கக் கூடாது என்று திருவழிபாட்டு பேராயம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி ஒரு சுற்று மடலை அகில உலக ஆயர்களுக்கு அனுப்பியது.  ஆனால் பல ஆயர்களின் பேரவையும், தனிப்பட்ட ஆயர்களும் கேட்டுக் கொண்டதின் பெரில் ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவர்களுக்கான திருப்பலியில் பயன்படுத்த நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டு திருத்தந்தை ஆறாம் பாலினுடைய ஒப்புதல் பெற்று மூன்று ஆண்டுகளுக்குச் சோதனைக்காக  1974 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் வெளியிடப்பட்டன. இவை 1977 ஆம் ஆண்டோடு முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஆயர்களின் பேரவைகள் பல கேட்டுக்கொண்டதின் பேரில் இவற்றை தொடர்ந்துப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கும்,  நபர்களுக்குமன்றி மற்றநேரங்களிலும் பொது நற்கருணை மன்றாட்டுகள் போல் விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இவற்றைப் பயன்படுத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது. என்றாலும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த உரோமை திருப்பலி நூலின் மூன்றாவது மாதிரி படிவத்திலும், 2008 ஆம் ஆண்டு வெளி வந்த திருத்தப்பட்ட மறுபதிப்பிலும்  இந்த ஐந்து நற்கருணை மன்றாட்டுகளும் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தேவைகளுக்கென்று புதிதாக  நான்கு  நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இன்று சிறப்பு நற்கருணை மன்றாட்டுகளாக ஒன்பதை  நாம் பெற்றுள்ளோம்.

அ.ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுக்களை ஒப்புரவின் மறைபொருளை நம்பிக்கையாளர்களுக்குச் சிறப்பான விதத்தில் எடுத்துரைக்கப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக மானிடரிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, ஒப்புரவுக்காக, அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட, போர் கலகம் போன்ற காலங்களில் மன்னிப்புக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, திருச் சிலுவையின் மறைபொருள், தூய்மைமிகு நற்கருணை,  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தம் ஆகிய திருப்பலிகளிலும், தவக்காலத் திருப்பலிகளிலும் பயன்படுத்தலாம். இந்த இரு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பும் பண்பு கூறுகளும் பொது நற்கருணை மன்றாட்டுகள் 2,3,4 இல் காணப்படுவது போலவே இருக்கின்றன.

 1. ஒப்புரவு ஒன்று

ஒப்புரவுக்கான முதல்  நற்கருணை மன்றாட்டு கடவுளோடு ஒப்புரவு ஆவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. நாம் மனந்திரும்பி அவரிடம் வர அழைக்கப்பட்டாலும், அதற்குரிய முயற்சியை எடுப்பவர் கடவுளே. இதற்காக அவர் புனித ஆண்டையும், வருகை, தவக் காலங்களையும் வாய்ப்பாக அமைத்து அளிக்கிறார். இம்மன்றாட்டின் சிறப்பு அம்சமாக பின்வருவதைக் கூறலாம். உடன்படிக்கையின் வழியாக புதியதொரு உறவால் மக்களைத்  தம்மோடு கடவுள் இறுக்கமாக பிணைத்துக் கொள்கிறார். அருள்மிகு காலத்தை வகுத்துக் கொடுத்து மக்கள் தம்மிடம் மனந்திரும்பி வரச் செய்கிறார். இத்தகைய சிறப்புரிமையை நமக்கு மட்டும்  அருளாமல் மாந்தர் அனைவருக்கும் நம் வழியாக அருளுகின்றார்.

நான்காவது நற்கருணை மன்றாட்டில் இருப்பது போல், ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்கருணையை நிறுவியதை விவரிக்கும் பகுதிக்கு முன் இந்த நற்கருணை மன்றாட்டும், ஆண்டவர் தம்மை கடவுளுக்குக் கையளித்ததின் வழியாக இறைதந்தையின் அன்பு விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ளது. மேலும் இரசக்கிண்ணம் வசீகரத்துக்கு முன், “அவ்வண்ணமே, சிலுவையில் சிந்தப்படவிருந்த தமது இரத்தத்தால் அனைத்தும் தம்மில் ஒப்புரவாக்கப்படும் என்பதை அறிந்த அவர்” என்ற வார்த்தைகள்  புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் வசீகரங்களுக்கு அடுத்து வரும் நினைவாக்கத்தில் “எங்கள் பாஸ்காவும் உண்மையான அமைதியுமாகிய உம் திருமகன் இயேசுகிறிஸ்துவை நாங்கள் நினைவுகூர்ந்து” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 2. ஒப்புரவு இரண்டு

இந்த நற்கருணை மன்றாட்டு மனிதன் தம்மோடு ஒப்புரவாக கடவுள் எடுக்கும் முதல் முயற்சிக்கும் பாவ மன்னிப்புக்கும் இடம் கொடுப்பதோடு மனிதர் ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு ஆவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.  

“பகைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வந்து உரையாடவும், எதிரிகள் கைகோர்த்து ஒன்று சேரவும், மக்களினங்கள் ஒருவர் மற்றவரைச் சந்திக்க தேடவும்... தூண்டுகின்றீர்” என தொடக்கவுரையில் வருவது இதை உறுதிப்படுத்துகிறது. இது மத்தேயு நற்செய்தி 6: 14 - 15 இன் அறிவுரையின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

மனிதர் ஒருவர் மற் றொருவருடன் ஒப்புரவாவது  தூய ஆவியாரின் செயலாகத் தொடக்கவுரையில் காட்டப்பட்டுள்ளது. கடவுள் மக்களைத்  தம்மோடு ஒப்புரவாக்கும் செயல்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் செயல்களால் நிறைவேறுவதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

வசீகரங்களுக்குப் பின்வரும் நினைவாக்கம், தூய ஆவியாரால் வரும் ஒருமைப்பாடு, பரிந்துரை மன்றாட்டுக்கள் அனைத்திலும் ஒப்புரவு பன்முகத்தில் அழுத்தம் பெறுகிறது. தூய ஆவியார் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்துவதை அகற்றுவதின் வழியாக ஒப்புரவையும், ஒருமைபாட்டையும் செயலாக்கம் செய்கிறார்.

ஆ. சிறுவர் திருப்பலிகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

திருஅவை அன்புள்ள ஓர் அன்னையாகச் செயலாற்றுவதைச் சிறுவர்களுக்கான திருப்பலியில் சிறப்பாக நாம் காணலாம். புகுமுக அருள் அடையாளங்களால் கிறிஸ்தவ வாழ்வில் புகுத்தப்பட்ட சிறுவர் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவராக மாறுவதற்கு மறைக்கல்வியுடன் வழிபாடு துணைபுரிய வேண்டும். பல்வேறு குழுவினரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் முறையான  வேறுபாடுகளைப் புகுத்தவும் தழுவி யமைக்கவும் கவனம் செலுத்த வேண்டுமென இரண்டாவது வத்திக்கான் சங்கம் தனது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது (காண் தி.வ. 38,50)
.     
இதைத் தொடர் ந்து சிறுவர்களுக்கான திருப்பலி வழிகாட்டி என்ற ஆவணத்தைத் திருவழிபாட்டு பேராயத்தால் 1973 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டது. அடுத்து பல ஆயர்கள் பேரவையின் விண்ணப்பத்திற்கேற்ப சிறுவர்களுக்கான திருப்பலியில்  பயன்படுத்த மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு 1975 இல் வெளியிடப்பட்டன.

1. இம்மன்றாட்டுகளின் நோக்கம்

இம்மன்றாட்டுகள் மிக எளிய நடையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் ஆக்கபூர்வமாக பங்குபெற்று  பயனடையப் பழகிக் கொண்டவர்கள், பிற்காலத்தில் பெரியோர்க்காக கொண்டாடப்படும் திருப்பலியில் பயனுள்ள முறையில் சுலபமாக பங்கு பெறும் தகுதியைப் பெற்றிருப்பார்கள் என்ற எதிர்நோக்கே இவற்றின் நோக்கமாகும்.

 2. இம்மன்றாட்டுகளின் சிறப்பியல்புகள்

சிறுவர்கள் வளர்ச்சியடைந்தபோது பங்கு பெறப்  போகும் திருப்பலியின் அமைப்பு அவர்களுக்கு வினோதமாகத் தோன்றக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுக்களில் பெரும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த நற்கருணை மன்றாட்டுகள் இவர்களைப் பொறுத்த மட்டில் தற்காலிகமானவை. எனவே பொது நற்கருணை மன்றாட்டுகளின் அடிப்படை அமைப்பு இவற்றிலும் பாதுக்காப்பட்டுள்ளது. வசீகரத்தில் அப்பத்தின் மீதும், இரசத்தின் மீதும் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும், கொண்டா ட்டத்தின் தொடர்ச்சியைத் தெளிவாகச் சிறுவர்களுக்கு எடுத்துரைக்கவும் “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்ற வார்த்தைகளுக்கு முன், “பின் இயேசு அவர்களிடம் கூறியதாவது” என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. 

நற்கருணை மன்றாட் டுகளின் மொழி எளிய நடையில் உள்ளது. அதனால் சிறுவர்கள் என்ன நடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்து  கொள்வார்கள். இருந்தாலும் திருப்பலியின் மாண்பு சிதைந்திடா வண்ணம் சிறுப்பிள்ளைத்தனமான மொழியும் வார்த்தைகளும் (Childish Language) தவிர்க்கப்பட்டுள்ளன. 

சிறுவர்கள் செயல்முறையிலும் பொருளுள்ள விதத்திலும் பங்கு பெறும் விதமாக ‘ஆர்ப்பரிப்புகள்’ இந்த நற்கருணை மன்றாட்டுகளில்  அதிகமாக்க ப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டும் அதற்குரிய தனிப்பட்ட அமைப்பும் இயல்பும் உடையதாய் இருப்பதாலும், தொடக்கவுரையைக் கொண்டிருப்பதாலும் மற்றொரு தொடக்கவுரையோடு மாற்றிக் கொள்ள முடியாது. 
முதல் நற்கருணை மன்றாட்டில் வசீகரத்தின் இறுதியில் உள்ள நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்பு வழக்கத்தைவிடச் சில வரிகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. பயிற்றுவிக்கும் காரணங் களுக்காக  இது இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற  ஆண்டவரின் வார்த்தைகளுக்கும், அருள் பணியாளரால் சொல்லப் படும் நினைவுகூர்தல், அதன் பின்வரும் நினைவு ஆர்ப்பரிப்பு அல்லது மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு ஆகியவற்றிக்கும் இடையே உள்ளத்தொடர்பை சிறுவர் தெளிவாகப் புரிந்து கொள்வர். 

இந்த மன்றாட்டுகளில் நினைவு ஆர்ப் பரிப்பின் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இது நினைவுகூர்தல் மன்றாட்டுக்குப் பின் (புதுழிதுஐeவிஷ்வி) வருகிறது. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கட்டளைக்கும் அருள்பணியாளர் அதற்கு அடிபணிந்து சொல்லும் நினைவுகூர்தல் மன்றாட்டுக்குமிடையே உள்ள நெருக்கமானத் தொடர்பை சிறுவர் புரிந்துக்கொள்ள இம்மாற்றம் உதவுகிறது. சிறுவர்களுக்கான மூன்று நற்கருணை மன்றாட்டு களுக்குள் ஒவ்வொன்றுக்கும்  ஒரு சில சிறப்பியல்பு உண்டு. அவையாவன:

  முதல் நற்கருணை மன்றாட்டு எளிமையான நடையுடையது. ‘தூயவர்’ பகுதியில் சிறுவரைப் பழக்கப்படுத்தும் பொருட்டு இம்மன்றாட்டு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உன்னதங்களில் ஓசான்னா ஒரு பாடகரால் அல்லது சிறுவரை வழிநடத்தும் ஒருவரால் பாடப்படலாம். அல்லது சொல்லப்படலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டு சிறுவர்களின் ஈடுபாட்டிற்கு அதிக வாய்ப்பளித்துள்ளது. இதில் ‘தூயவர்’ பகுதியும் நினைவு ஆர்ப்பரிப்புகளும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் சொல்லப்படும் ஆண்டவரின் வார்த்தைக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள ஆர்ப்பரிப்புகள் நற்கருணை மறைபொருள் எனும் அடிப்படையில் பாடப்படலாம்.

மூன்றாவது நற்கருணை மன்றாட்டு   பாஸ்கா காலத்திற்குப் புறம்பே பயன்படுத்தத் தனியாகவும், பாஸ்கா காலத்தில் பயன்படுத்தத் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வசீகரத்திற்குப் பிறகு அதே ஆர்ப்பரிப்பு மூன்று முறையும் நடைபெறுகின்றது. இதனால் முழுமையான மன்றாட்டின் புகழ், நன்றி இவற்றின் இயல்பு சிறுவருக்கு வெளிப்படுத்தப்படும்.

 இ. பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

2002 ஆம் ஆண்டு வெளி வந்த உரோமை திருப்பலி நூலில் மூன்றாம் மாதிரி படிவத்தில் பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கு வெளியிடப்பட்டன. அவை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தியமைக்கப்பட்ட உரோமை திருப்பலி நூலிலும் இடம் பெற்றுள்ளன. இவை  தமிழ்த்  திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நாம் இப்பொழுது பயன்படுத்தலாம்.

1. முதல் நற்கருணை மன்றாட்டு

“இது ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் திருஅவை” என்ற கருத்து கோள் கொண்டுள்ளது. இந்த நற்கருணை மன்றாட்டைத் திருஅவைக்காக, திருத்தந்தைக்காக, ஆயருக்காக, திருத்தந்தை ஆயர் தேர்வுக்காக, திருச்சங்கம், ஆயர் மாமன்றம் ஆகியவற்றிக்காக, அருள்பணியாளர்களுக்காக, அருள்பணியாளர் தமக்காக, திருஅவையின் பணியாளர் களுக்காக, ஆன்மீக அருள்பணிக் கூடுகை போன்ற வற்றிற்காக ஒப்புக் கொடுக்கப்படும் பலியில் பயன் படுத்தலாம்.

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு

இது “மீட்பின் வழியில் கடவுள் தமது திரு அவையை வழிநடத்துகின்றார்” என்ற கருத்துக்கோளைக் கொண்டுள்ளது. இதை திருஅவைக்காக, திருப்பட்டங்களுக்கான இறை அழைத்தலுக்காக, பொது நிலையினருக்காக, குடும்பங்களுக்காக, துறவுநிலை இறையழைத்தலுக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, உறவினர், நண்பர்களுக்காக, கடவுளுக்கு நன்றி செலுத்த ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு

இது “தந்தையை அடையும் வழி இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை நற்செய்தி அறிவிக்க, நம்பிக்கையை முன்னிட்டு துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, நாடுக்களுக்காக, நாட்டை ஆள்வோருக்காக, புத்தாண்டு நாளில், மக்களின் முன்னேற்றத்துக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

4. நான்காவது நற்கருணை மன்றாட்டு

இது “நன்மை செய்யும் இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை அகதிகள் மற்றும் நாடு கடத்தப்பட்டோருக்காக, பஞ்சம் பசியால் வாடுவோருக்காக, நம்மை துன்புறுத்துவோர், கைது செய்யப்பட்டோர், சிறையில் இருப்போர், நோயுற்றோர், இறக்கும் நிலையில் இருப்போர் ஆகியோருக்காகவும், நல்மரண அருளுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

இந்த நான்கு நற்கருணை மன்றாட்டுகளுக்கும் தனித்தனி சிறப்பு தொடக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சிப்புக்குப் பின் வாழ்வோருக்காக சொல்லப்படும் மன்றாட்டு அந்தந்த கருத்துக்கோளுக்கு ஏற்றவாறு வெவ்வேறாக உள்ளது. இவைத்தவிர மற்ற எல்லா மன்றாட்டுகளும் ஒரே மாதிரியானவை.
( முற்றும்)

திருப்பலியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கங்களை வாசகர்களுக்கு அழகாகத் தந்த அருட்பணி. முனைவர் றீ.அருள்சாமி அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. தொடர்ந்து மற்ற திருவருட் சாதனங்களின்  விளக்கங்களைப்  பற்றியும் எழத இசைந்துள்ளார்.

Ads Inside Post