Pages - Menu

Wednesday 28 June 2017

அறிஞர் வாய்ச் சொல், உழைப்பு

அறிஞர் வாய்ச் சொல்
உழைப்பு

கடின உழைப்பு மூன்று தீமைகளிலிருந்து  நம்மை காப்பாற்றுகின்றது.
வறுமை, சோர்வு, தீயயாழுக்கம்     - வால்டர்.

எல்லா செல்வங்களும் உழைப்பினால் பிறந்தவையே.
  - ஜான் லாக்.

 உழைக்க விரும்புகிறவர்கள் எல்லா விதத்திலும் வெற்றி பெறுவார்கள். -  மார்ட்டின் லூத்தர்.

 சிக்கல்கள் மனதை உறுதிபடுத்துகின்றன
 உழைப்பு உடலை பலப்படுத்துகிறது.                                                                          - செனேக்கா.

உழைப்பு போன்ற செல்வம் மனிதரிடத்தில் வேறு இல்லை.                          - பெர்சி பைஸ் ய­ல்லி.

 உலகத்தில் உள்ளது எல்லாம் உழைப்பினால் வாங்கப்பட்டதுதான்.      - டேவிட் ஹேனு.

உழைப்பின் பயன்தான் இனிமையானது, அனைத்திலும் இனிமையானது.
- லூக் தெ கிளாமியர்.

அடுத்தவனின்  சிந்தனையால் கூட உயரலாம்
 உழைப்பு  நிச்சயம் உன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும்

மடிமை குடிமைக்கண் தங்கின் ஒன்னார்க்கு
அடிமை பகுத்திவிடும் (குறள்)

இளையோரும் இன்றைய கல்வியும்

இளையோரும் இன்றைய கல்வியும்

- அருட்சகோ. விமலிFIHM, 
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
உண்மையான கல்வி
 மனிதனுக்குள் இருக்கும்
 மனிதத்தைத் தட்டி எழுப்புவதாக
இருக்க வேண்டும்.           - சுவாமி விவேகானந்தர்.
 
2017-2018-ஆம் இக்கல்வியாண்டு இனிதே  அமைய இறைவன் அருள்புரிவாராக. தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. எதைப்படிக்கலாம், எங்குப் படிக்கலாம் எந்தப் பள்ளியில், கல்லூரியில் எந்தப் பாடப் பிரிவில் பயின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது இன்றைய, மாணாக்கர் மற்றும் பெற்றோரின் ஏக்கம். “உலகை மாற்றக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த கருவி”  என்று கல்வியைப் போற்றுகிறார் நெல்சன் மண்டேலா. அந்தக் கருவியைப் பயன்படுத்தும் முன் அதைக் கூர்மையாக்கும் முயற்சிதான் இந்தக் கருத்துப் பரிமாற்றம்.  ஜீன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பலருக்கு புதிய இடம், புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள், புதிய சூழமைவுகளைப் பார்த்தால் அவர்களின் பலவிதமான உணர்வுகளை நம்மால் கண்டுணர முடிகிறது. சிலர் வருத்தத்துடன், மேலும் சிலர் புத்துணர்வு கலந்த நம்பிக்கையுடன், இப்படிப்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு உரிமையாளர்களாக மாணாக்கர்கள் காட்சி அளிக்கின்றனர்.  

          கல்வி இன்றியமையாதது என்பதை வளரிளம் பருவத்துப் பள்ளி மாணாக்கர்கள் உணர வேண்டும். வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கி வைத்து அது செரிக்காமல், அழுகிப் போகவிடுவது கல்வி அல்ல! வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதாகவும் இருப்பதே உண்மையான கல்வி! வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற மாணவர்களுக்குக் கற்றுத் தராத, அவர்களின் குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, தூய்மையான துணிச்சலைக் கற்றுத்தராத கல்வி  கல்வியும் அல்ல!. சமூக வாழ்விலும் சந்திக்கும் சவால்களைச் சமாளித்து சாதனை படைக்கும் கல்வித் திறனும், உடல் மற்றும் மனபலம் கொண்டவர்களாக இன்றைய மாணாக்கர்களை உருவாக     அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே மாணாக்கர்களே! அப்போதே நீ ஜெயித்தாய். கோடிக்கனக்கான விந்தனுக்களில் வீரியம் உள்ள விந்தணுவே கருவாகின்றது. பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் வெற்றி பெற்றனவே. பிறப்பிலேயே வென்ற உயிர் நீ. பிறந்த பின் ஏற்படும் தோல்விகள் அந்த வெற்றிக்கு முன் சாதாரணமானவையே என்ற பொருளைத் தருகின்றது இப்பாடல் இன்றைய இளையோரை இன்னும் சிறப்பானவர்களாக்கும் உந்து சக்தியும் இதுவே.

விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்குத்   தெரியாது
அது  மரமாய் வளரும் காலம்வரும்
 மண்ணுக்குள் உறங்காது.”

  கடந்த ஆண்டில் சென்னையில் மட்டும் பல மாணவர்கள் உயிரை  ஒடுக்கிக் கொண்டனர். இவர்களில் சிலர் படிப்பு சம்பந்தமாகவும், பெற்றோர்களிமிருந்துள்ள மனசம்பதமான கொடுமை மூலமாகவும் உயிர் நீத்தனர் என்று சமூக வளைய தளம் தெரிவிக்கின்றது. தற்கொலை செய்த  நபர்களில் அதிகமானவர்கள் கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் உள்ளடங்கியுள்ளனர். படிப்பில் பின் தங்கி ‡யிருக்கிறார்கள் என்னும் காரணத்தால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பதில் மனம் உடைந்துதான் பலரும் தற்கொலை வழியைப் பின்பற்றுகின்றனர் என்ற செய்திகளை ஊடகம் உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

கல்வி என்பது 
திணிக்கத் திணிக்கத் திசைமாறிப் போகும்
வற்புறுத்த வற்புறுத்த வழிநழுவிச் செல்லும்
அது இயல்பாக நிகழவேண்டும்”  - இறையன்பு
          
  உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களை நேசியுங்கள். உங்களின் வாழ்வின் மீது பற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் எத்தனை முறை வீழ்ந்தாலும், எழுந்து நிற்கும் சக்தியும் தெம்பும் தானாகவே உங்களுக்கு வந்து சேரும். எந்த முடிவெடுக்கும் முன்னும் உங்களின் வளர்ச்சியின் பின்னே இருக்கும் நபர்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த முகங்களின் பின்னே தெரியும் உழைப்பும், களைப்பும், வலியும், உற்சாகமும், ஆர்வமும் உங்களுக்கு எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட பிணைப்புக்களின் மூலம்தான் உங்களை நீங்கள் தோல்விகளிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள முடியும்.

      மனித வாழ்வுக்குப் பட்டறிவும், படிப்பறிவும் மிக உறுதுணையாக இருக்கின்றன. படிப்பறிவு என்பது கல்வி கற்பதின் மூலமாகவும், பட்டறிவு என்பது மனித அனுபவம் மூலமாகவும் நமக்குக் கிடைக்கின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பார்க்கும்போது பாரதூர வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றையச் சூழலில் கல்வியும், பணமும்  கைகோர்த்தே செல்கின்றன. பணம் இருப்பவர் மட்டுமே படிக்க முடிகிறது. இப்போது பணம் கட்டினால் படிப்பு (றீeயிக்ஷூ-க்ஷூஷ்ஐழிஐஉed உலிற்rவிeவி)  என்ற நிலை எல்லா கல்லூரிகளிலும் உருவாகியுள்ளன. இன்றைய நிலையில், பெரும்பாலும் படித்த படிப்பு வேறு, பார்க்கும் தொழில் வேறு என்றுதான் இருக்கிறது. எத்தனை உயர்கல்வி  நிறுவனங்கள் இருந்தும் ஆண்டுதோறும் எண்ணற்ற இளையோர் பட்டம் பெற்று வேலை தேடி அலைகின்றனர். படிக்கும் கல்வி மூளைக்கு மட்டும் தாக்கம் கொடுத்தால் போதாது. இதயத்திற்கும் தாக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வுக் கல்வி
     விழிப்புணர்வுக் கல்வி என்பது வழக்கமாக மாணவ - மாணவியர் பெறுகின்ற கல்வியில்  இருந்து மாறுபட்டது. ஏனெனில் இக்கல்வி நாம் வாழும் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, சமய, கல்வி மற்றும் நலவாழ்வு ரீதியாக  பகுப்பாய்வு செய்து பார்க்க உதவுகிறது. இத்தகைய பகுப்பாய்வு சமூக உண்மை நிலைகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதோடு, சமூக மாற்றத்திற்கு நாம் என்னென்ன முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும் என்பதையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இன்றைய நம் நாட்டுச் சூழலில் விழிப்புணர்வுக் கல்வி எல்லா மாணவ‡மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டிய இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

ஒரு மனிதரிடம் தேங்கிக் கிடக்கின்ற
ஆற்றல்கள், திறமைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் உணரவைத்து வெளிக் கொணர்வதே  உண்மையான கல்வியாகும் ”
 -இறையன்பு

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்...

19. இயேசு காவியம்  வெளியீட்டு விழா!

அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இயேசு காவியத்தை வெளியிட வேண்டும் என்பது கண்ணதாசனின் விருப்பம். ய்r.ஜார்ஜ் சென்னைக்குப் போய், எம்.ஜி.ஆரைச் சந்தித்து, கண்ணதாசனின் விருப்பத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். வர சம்மதித்தார்.

       அப்போது  எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பு இருந்தது. அவர் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு வருவதாகப் பேச்சு. ஆனால், அவர் பிளேன் ஏறி திருச்சிக்கு வந்து விட்டார். உறையூர் வழியாக செயின்ட் ஜோசப்ஸ் காலேஜிக்கு வருவதாக வதந்தி. ஆனால், அவர் சர்க்யூட் ஹவுசிலிருந்து காரில் ஜோசப் கல்லூரிக்கு ஆளுக்கு முன்னால் வந்து உட்கார்ந்திருந்தார்.

       வெளியீட்டு விழா ஆரம்பமானது. எம்.ஜி.ஆர். பக்கம் பக்கமாக வாசித்து விமர்சனம் செய்தார். மெமெண்டோ பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் எம்.ஜி.ஆரைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்றேன். இந்தப் பக்கம் வந்து நில்லுங்க. உங்கள எல்லோரும் பார்க்க வேண்டாமா? என்று சொல்லி எம்.ஜி.ஆர். என்னை இந்தப் பக்கம் நிற்க வைத்து மெமெண்டோவைக் கொடுத்தார். விழாவில் வலம்புரிஜான் போன்றோர் வாழ்த்திப் பேசினார்கள்.

      நான் மாலை முரசில் இருக்கும்போது ஒரு வேடிக்கை நடந்தது. எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் என்ற படத்தின் சிறப்பு மலர் ஒன்று வெளியிட்டோம். சிறப்பு மலர் வெளியிடும்போது கவிதை ஒன்று வெளியிடுவோம். கருணைதாசன் என்றொருவர் இருந்தார். அவர் மரபுக் கவிதைகள் எழுதுவார். அவரைக் கூப்பிட்டு ஆசிரியர் கவிதை ஒன்று எழுதச் சொன்னார். அவர் மரபுக் கவிதைகளாக எழுதிக் கொண்டு போய் காண்பித்தார்.

       இது இல்லிங்க... இப்படி இல்லிங்க என்று சொன்னாரே தவிர ய்லியிவவிலிஐஆ என்று சொல்ல வரவில்லை. நான் சும்மா இருக்கக் கூடாதா?
   வண்டியிலே ஏறுவாரு நம்ம வாத்தியாரு
  கிண்டி குதிரப் போல அது பறந்து போகும் பாரு
  வாயுவேகம் மனோ வேகம் என்பதெல்லாம் வேறு
  வாத்தியாரு ஓட்டுறத பார்க்கிறதே ஜோரு...

 என்று எழுதிக் கொண்டு போய் காண்பித்தேன்.
இதுதாங்க, இப்படித்தாங்க இருக்கணும். நீங்க எழுதுங்க’ என்றார். நான் அதுவரை ரிக்ஷாக்காரன் படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த பையன்கள் சொன்னதை வைத்து எழுதினேன்.

         பாரட்டு காப்பிக்கு மேல் காப்பியாக வருகிறதே பார்க்கலாம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். முதலாளி திரு.இராமச்சந்திர ஆதித்தன் கூட கேட்டாராம், கவிதை யார் எழுதியது? என்று.

         ஆரம்பத்தில் ‘சாந்தோம் கம்யூனிகே­ன்’,  இறையியல் எப்படி எழுதுவது என்பது பற்றி கொடைக்கானல் சென்பகனுVர் செமினரியில் எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப் பாசறை நடத்தியது. மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி அவர்களிடம் பேசி, பணம் வாங்கி கவிஞர் அமலன் எங்களை அழைத்து வந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

 நாகர் கோவிலைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் சொன்னார்: 
இந்தப் பக்கம் லெயோ ஜோசப், அந்தப் பக்கம் முல்லை பெர்க்மான்ஸ். நான் என்னத்தச் சொல்றது? என்றார். ஒரே சிரிப்பு!

         அந்தப் பயிற்சிப் பாசறை முடிந்ததும் வேளாங்கண்ணியில் மூன்று நாள் மாநாடு. அதற்கும் அமலன்தான் செலவு செய்தார். அதில் ஊட்டி ய்r. மாத்யூ, மதுரை ய்r. தம்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்குதான் வாரப்பத்திரிக்கை தொடர்பாகப் பேசப்பட்டது. கவிஞர் அமலனும் தம்பி கபிஸ்தலம் ஆசாவும் ஆயர் பேரவையில் பேசி நம் வாழ்வு பத்திரிக்கை உருவானது. மரியஅருள் தம்புராஜ் முதல் ஆசிரியரானார்.

         அதன் பிறகு புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியில் மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு என்னைத் தலைவனாக்கினார்கள். பின்னர் பேராசிரியர் ஆல்பர்ட் வந்தார்.   அமுதனை ஆணைப் பேராளராக நியமித்தார். நல்லாயன் நிலையத்தில் கூட்டம் நடந்தது.

           ‘கிறிஸ்தவ எழுத்தாளர் பேரவை’  என்று பெயர் வைத்து விட்டு, பிற சமய எழுத்தாளர்களும் எழுத அனுமதிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவர் பதவியையும், உறுப்பினர்  பதவியையும் ராஜினாமா செய்தேன்.
 ( இன்னும் சொல்வேன்)  

மன்னிப்பு

 மன்னிப்பு

 மன்னிப்பு என்பது மருந்து.
மனப்புண்களை ஆற்றும்,
 மன்னிப்பு என்பது  உறவின் உயிர்.
உறவுகளை வளர்க்கும்.
மன்னிப்பு என்பது  மனிதத்தை புரிந்து கொள்வது.
அது நம்மையே புரிந்து கொள்ள உதவுவது.
மன்னிப்பு என்பது  துரோகத்திற்கு
கொடுக்கப்படும் அறுவைசிகிச்சை.

Thursday 22 June 2017

திருப்பலி விளக்கம் நற்கருணை மன்றாட்டு

திருப்பலி விளக்கம்
நற்கருணை மன்றாட்டு
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இதுவரை நற்கருணை மன்றாட்டுகளுக்கு பின்புலமாக இருப்பவைப் பற்றியும், அவற்றின் தோற்றம், வளர்ச்சியைப் பற்றி விளக்கினோம். இங்கு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பு, அவற்றின் பொருள் போன்றவைப் பற்றிய விளக்கம் கொடுக்க முயற்சிப்போம்.
        நற்கருணை மன்றாட்டு “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்ற தொடக்க உரையாடலில் ஆரம்பித்து இறுதி புகழுரைக்குப் (Doxology) பின் நம்பிக்கையாளர்களால் சொல்லப்படும் “ஆமென்”  என்ற பதிலோடு நிறைவடைகிறது.

3.  நற்கருணை மன்றாட்டின் அமைப்பும் பொருளும்

3.1  தொடக்க உரையாடல்

தொடக்கவுரை (Preface) திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருப்பலிக்குக்  குழுமி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களிடையே இடம் பெறும் உரையாடலோடு தொடங்குகிறது. “நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்” என்று அருள்பணியாளர்  விடும் அழைப்பு அவர் தொடங்கியிருக்கும் இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறும் தொடர் செயலில் திருக்குழுமத்தையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த அழைப்பு அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் சேர்ந்துதான் இறைவனுக்கு நன்றி கூறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

3.2  தொடக்கவுரை ( Preface)

  “ பிரிப்பேஸ் ” என்பது “ப்ரேபாசியும் ”
(Prefatium) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. இது ஒரு நூலுக்கு முன்னுரை போல் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் இருக்கிறது என்று பொருளல்ல. மாறாக இந்த இலத்தீன் சொல்லுக்கு “முன்மொழிதல், பறைசாற்றுதல், எடுத்துரைத்தல்” போன்ற பொருள் உண்டு.

இத்தொடக்கவுரை கடவுளை போற்றுவது ஏன் “தகுதியும் நீதியும் ஆகும்”  என விளக்குகிறது. இது யூதர்களின் பெராக்கா (இறை புகழ்ச்சிப்) பாணியில் தொடங்குகிறது. இறைவனின் திருப்பெயரைக் கூவியழைத்து, மீட்பின் வரலாற்றில் படைப்பு, மனுவுருவாதல், மீட்பு ஆகிய மாபெறும் செயல்களுக்காக வாழ்த்தும், நன்றியும் கூறப்படுகிறது. இறைவன் புரிந்த அருஞ்செயலுக்காக இறைபுகழ் கூறுவதே  யூதர்களின் இறைபுகழ்ச்சியிலும், கிறிஸ்தவர்களின்  இறைபுகழ்ச்சியிலும் காணப்படும் சிறப்புமிக்க ஓர் அம்சமாகும். விண்ணக தந்தை தம் மக்கள் மீது பொழிந்திருக்கும் அன்பிற்கு, அவர்களின் பதில் அன்பும், நன்றியுணர்வும் நிறைந்த ‘பதிலாகவும்’ இது அமைகிறது. இறைபுகழும், நன்றியும் நிறைந்த இவ்வழிபாடு இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. எனவேதான் எல்லா கிறிஸ்தவர்களும் இடைவிடாது செபிக்க வேண்டுமென புனித பவுல் அழைக்கின்றார்.

        இரண்டாவது நான்காவது நற்கருணை மன்றாட்டுகளுக்குச் சிறப்பான தொடக்கவுரைகள் உள்ளன. இரண்டாவதுக்கான தொடக்கவுரையில் முக்கிய நிகழ்ச்சிகளான படைப்பு, மனிதராதல், மீட்பு ஆகியவற்றின் வழியாக மீட்பின் வரலாறு  சுருக்கமாக நினைவு கூறப்படுகிறது. நான்காவது நற்கருணை மன்றாட்டு  தொடக்கவுரையிலிருந்து தூய ஆவியாருக்குரிய முதல் மன்றாட்டு   (First Epiclesis) வரையில் நீண்டதொரு வாழ்த்துரையைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு வழிபாட்டு வல்லுநர் ஜேலினோ கருத்துப்படி இதன் முதல் பகுதி விண்ணகத் தந்தைக்குரிய  நன்றி மன்றாட்டாகும். இது அவருடைய உள்ளியல்புகளை நினைத்து வாழ்த்துவதாகவும் அவருடைய படைப்புக்காக குறிப்பாக, மனிதரின் படைப்புக்காகவும் வீழ்ச்சிக்காகவும் அவர் தொடங்கிய மீட்புசெயலுக்காகவும், மெசியாவாகிய இறைமகன் மனிதராகி, பாடுபட்டு, இறந்து உயிர்த்து ஆற்றிய மீட்பு  பணிகளுக்காகவும், திருஅவையின் அருள்அடையாள வாழ்விலே  தூய ஆவியார் புரியும் திருப்பணிக்காகவும் நன்றியறிதலாக அமைந்துள்ளது.

முதலாவது நற்கருணை மன்றாட்டுக்கும் மூன்றாவது நற்கருணை மன்றாட்டுக்கும் தொடக்கவுரை கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மறைபொருளுக்கும், விழாவிற்கும் ஏற்றாற்போல் மாறுபடலாம். இன்று திருப்பலி நூலில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், பெருவிழாக்கள், விழாக்களுக்கும், புனிதர் விழாக்களுக்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூற்றுக்கு மேற்பட்ட  தொடக்கவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 3.3  புகழ்பாடல் ( Sanctus)     
         
        இது வானதூதர் எழுப்பிய வாழ்த்தொலி  ( எசா 6:3) நமதாண்டவர் எருசலேமுக்கு நுழைந்த போது மக்கள் கூட்டம் அவரை வரவேற்று எழுப்பிய ஆர்ப்பரிப்பு ( மத் 23: 1 ;  21:9) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.  சேராபீன்கள்  என எபிரேயத்தில் அழைக்கப்படும் பக்தி சுவாலகர் என்னும்  வானதூதர்கள் விண்ணகக் கோயிலைத் தம் பிரசன்னத்தால் நிறைத்தெழுந்து இறைவனுக்கு இப்பாடலைப் பாடியதாக வாசிக்கிறோம். அவர் அனைத்து உலகிற்கும் ‘ஆண்டவர்’ ஆவார். அவர் வானகச் சேனைகளுக்கும் வானின் வல்லமைகளுக்கும், அதாவது தேவதூதர் அணிகளுக்கும், விண்மீன்களின் கூட்டங்களுக்கும் ஆண்டவராகப் புகழ்ந்தேத்தினர் இஸ்ரேயல் மக்கள் ( திப 103; 148:1‡4; 1 அரச 22:19 காண்க.) திருவெளிப்பாட்டிலும் புனித யோவான் கண்ட காட்சியில் “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்” என்று  இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகிறதைக் குறிப்பிடுகிறார்.  மூன்று முறை ‘தூயவர்’  என்பது மூவொரு கடவுளைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய அறிஞர்.

இவ்வார்ப்பரிப்பின் இறுதிபகுதி நம் ஆண்டவர் மகிமையோடு எருசலேம் நுழைந்த குருத்தோலை விழாவை நினைவு கூறுகிறது. இச்சொற்களை திருப்பாடல்கள் 118:26 இல் காண்கிறோம்.          இவ்வார்ப்பரிப்பு இரண்டும் தொடக்கவுரையில் கூறப்பட்ட அனைத்திற்கும் இறைமக்கள் இயல்பாகவே கொடுக்கின்ற ஒரு பதிலாகவும் அமைந்துள்ளன.

3.4   ‘நீர் மெய்யாகவே  தூயவர்’  ( Vere Sanctus) 

இது புகழ்பாடலின் விரிவாகவும், அதனை பின் பகுதியோடு இணைப்பதாகவும் அமைந்துள்ளது. இது புகழ்பாடலோடு இணைந்து நன்றி மன்றாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இதை  ‘நிலைமாற்றச் செபம்’  
(Transition Prayer) என்று கூட சொல்லலாம். இந்த மன்றாட்டு வேறு முறையில் விரிவாகலாம் என்பதற்கு முதல் நற்கருணை மன்றாட்டும், நான்காவது நற்கருணை மன்றாட்டும் தெளிவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஒன்றில் பரிந்துரை மன்றாட்டுகளும், புனிதர்களை நினைவு கூறும் செபமும், மன்றொன்றில் மீட்பு வரலாற்றின்  விரிவுரையும் இருக்கின்றன.

3.5  காணிக்கைகளை புனிதபடுத்த மன்றாட்டு

மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அர்ச்சிக்கப்படவும், அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் தூய ஆவியாரை அனுப்பும்படி இங்கு  மன்றாடப்படுகிறது. இம்மன்றாட்டு (Epiclesis) தொன்றுத்தொட்டு நற்கருணை மன்றாட்டின் வழக்கில் உள்ளது.  முதல் நற்கருணை மன்றாட்டில் இது நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது. “இரக்கம் மிகுந்த தந்தையே இக்கொடைகளையும், காணிக்கைகளையும்” ( ஞற்ழிது நுணுயிழிமிஷ்லிஐeது) என்று தொடங்கும் மன்றாட்டு பின்பு சேர்க்கப்பட்டது. ஆனால் தூய ஆவியாரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்போது இருக்கும் எல்லா புதிய  நற்கருணை மன்றாட்டுகளில் தூய ஆவியாருக்குரிய மன்றாட்டைத் தெளிவாகக் காணலாம். நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்குமுன் இம்மன்றாட்டை அமைத்திருப்பதால், மேற்கு திருஅவை மரபின் நற்கருணை வழிபாட்டு இயலுக்கு மதிப்புக் கொடுக்கிறது.

3.6  நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதி

          நற்கருணையை ஏற்படுத்துதலை விவரிக்கும் இப்பகுதியில் விசுவாசமும் பக்தியும் நிறைந்த சூழ்நிலையில் அருள்பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் கைகளிலேந்தி அர்ச்சிக்கும் வார்த்தைகளை, அதாவது கிறிஸ்து சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் கூறி இயேசுகிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்றுகின்றார். படைப்பிலும், மீட்பின் வரலாற்றிலும் மனிதரின் நலன்கருதி இறைவன் செய்த அனைத்தும் இதில் மீண்டும் நினைவுகூறப்படுகின்றன, உடனிருக்கச் செய்யப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன.

3.7  எழுந்தேற்றம்

     வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கி மக்களுக்குக் காட்டுதல் தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மரபு அன்று. திருப்பலியில் இது முக்கியமானதோ, உச்சக்கட்டமான செயலோ அன்று . இரண்டாம் வத்திக்காம் சங்கம் வரை பலிபீடம் திருப்பலி பீட முற்றத்தில் பின்புறம் சுவரோடு ஒட்டியதாக இருந்தது. சுவற்றின் மேல் பகுதியில் பாடுபட்ட சுருபமுடைய சிலுவைத் தொங்கியது. அருள் பணியாளர் தமது முதுகை மக்கள் பக்கம் காட்டிச் சுவரை நோக்கிய வண்ணமாக பலியை ஒப்புக் கொடுத்தார். வழிபாடும் இலத்தீன் மொழியில் இருந்தது.

மக்களுக்கு வழிபாட்டு மொழி புரியாததாலும், எப்பொழுது இயேசுகிறிஸ்து அப்பத்தையும் இரசத்தையும் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி பலிபீடத்தில் பிரசன்னமாகிறார் என்று தெரியாததாலும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் ஆனதும் தங்களுக்குத் தூக்கி காட்ட வருந்திக் கேட்டதால் உண்டான பழக்கம் எழுந்தேற்றம். இது 9‡ஆம் நூற்றாண்டில்  உண்டான ஒரு பழக்கம். அருள்பணியாளர் தொடர்ந்து சுவரைப் பார்த்து நின்றதால், தமது தலைக்குமேல் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. இயல்பாக மக்கள் தலைவணங்கி ஆராதிக்கத் தொடங்கினார்கள். இது திருப்பலியில் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது விதிவிலக்காக வந்த ஒரு தவிர்க்க முடியாத வழக்கம் என்று சொல்ல வேண்டும்.

         இப்பொழுது மக்களைப் பார்த்து திருப்பலி நிகழ்த்தும் முறை கையாளப்பட்டாலும், வழிபாடு  அவரவர் தாய் மொழியில் நிகழ்ந்த போதிலும் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும் இரசக்கிண்ணத்தையும் மக்களுக்கு தூக்கிக் காட்டும் நீண்டநாள் மரபு நிறுத்தப்படவில்லை.

         அருள்பணியாளர்கள் இப்பொழுது தலைக்கும் மேல் தூக்கிக் காட்ட வேண்டியதில்லை. தங்கள் முகத்துக்கு முன்வரை தூக்கி காட்டினால் போதும். மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தூக்கிபிடிப்பது சரியல்ல. மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தலை வணங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்களுடைய பக்திக்கும், கவனத்திற்கும் ஊறு விளைவிக்கும். மற்றும் புதியதோர் தவறுதலான கேட்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.
                - தொடரும்... 

Tuesday 20 June 2017

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒர் அதிர்ஷ்டசாலி. அவர் எதை விரும்பினாரோ அதைச் செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு 20 வயதாகும் போது கிடைத்தது. அவருடைய நண்பரான நிலிகு வோடு சேர்ந்து  “ஆப்பிள்”  நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர்கள் கடினமாக உழைத்ததால் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு பேராக இருந்த நிலையிலிருந்து நான்காயிரம் பேராகவும், இரண்டு பில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட நிறுவனமாகவும் வளர்ச்சி அடைந்தார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் அவர்களது ஒப்பற்ற படைப்பான  “மெக்கின்டாஷ்ஐ”  சந்தையில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த  நேரத்தில்தான் அவர் நிறுவிய நிறுவனமே எதிர்மறையாக அவரை வெளியேற்றியது.
          
அவர் வெளியேற்றப்பட்டவுடன் சில மாதங்கள் அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் டேவிட்  பாக்கார்டையும், பாப் நோயிஸையும் சந்தித்து மன்னிப்பு கேட்க முயற்சித்தார். சமூகத்தில் அவர் தோல்வி அடைந்தவராகப் பார்க்கப்பட்டார். சிலிக்கன்வேலியை விட்டே ஓடிப்போய்விடலாமா என்று கூட நினைத்தார். ஆனால் ஏதோவொன்று அதையயல்லாம் செய்யவிடாமல் அவரை தடுத்தது. நடந்த நிகழ்வுகள் ஆப்பிளில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால், அவருக்குள் இருந்த  உத்வேகம் அப்படியே இருந்தது. எனவே புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம் என நினைத்தார். வெற்றி என்கிற உக்கிரத்தை, ஆரம்பம் என்கிற  மென்மை மாற்றி அமைத்தது. 

அவர் இதை அப்போது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டது அவரை அதிக படைப்பாற்றல் கொண்டவராக மாற்றியது. அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் “ ஹிeமுமி”   என்கிற நிறுவனத்தையும்“Pஷ்முழிr” என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். “வீலிதீ விமிலிrதீ”  என்கிற பெயரில் உலகத்திலேயே முதன் முறையாக, கம்ப்யூட்டர் அனிமேட்டர் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடப்பட்டது. அதற்கு  அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் ஆப்பிள் நிறுவனமே  “ ஹிeமுமி” ஐயும் வாங்கியது. அவரும் ஆப்பிளுக்குத் திரும்பினார். “ ஹிeமுமி” நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய தொழில் நுட்பம்தான் ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய மறுமலர்ச்சிக்கான இதயமாக இருக்கிறது.
          
   ஸ்டீவ் ஜாப்ஸ் நமக்கு சொல்லும் வார்த்தைகள், நான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்படவில்லை எனில் மேலே சொன்ன எதுவும் நடந்திருக்காது. மருந்து கசப்பாகத்தான்  இருக்கும். ஆனால் நோயாளி குணம்பெற அது தேவை. சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் சம்மட்டியால் அடிக்கும். அதற்காக நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் எதை செய்தேனோ, அதை நேசித்தேன். அதுதான் என்னை முன்னோக்கி இட்டுச் சென்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை உங்கள் வேலை எடுத்துக் கொள்ளும். எனவே அதில் முழு திருப்தி அடைவதற்கு நீங்கள் உங்கள் வேலையை நேசியுங்கள். அப்படி எதுவும் உங்களுக்கு இதுவரை அமையவில்லை என்றால் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள். அது வரை          “செட்டில்”  ஆகாதீர்கள். நீங்கள் எப்போது அதை கண்டடைவீர்கள் என்பதை உங்கள் இதயம் காட்டிக் கொடுக்கும். எந்தவொரு உறவுமுறையும் ஆண்டுகள் செல்லச் செல்ல சிறப்பாக அமையும். எனவே நீங்கள் தேடுவது கிடைக்கும் வரை ஓய்ந்துவிடாதீர்கள். தேடிக் கொண்டே இருங்கள்.

அன்பான வாசகர்களே, ஸ்டீவ் ஜாப்ஸின் இரண்டாவது அனுபவத்தை வாசித்தோம். ய்னி ரேடியோவில் சொல்லப்படுவது “கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க” . ஆனால் நமக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது “தேடுங்க, தேடுங்க, தேடிக்கிட்டே இருங்க”. இயேசுவின் வார்த்தைகளை ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்வாக்கினார் எனலாம்.  ‘தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்’ ( மத்தேயு 7: 7). சாதிக்கத் துடிக்கும் சாதனையாளர்களே! வெற்றிக்கான வேட்கையில் ஓடும் வேந்தர்களே! வாய்ப்புகளைத் தேடி, சிக்கெனப் பிடித்து வெற்றிகள் பல பெற்று சரித்திரம் படைத்திட வாழ்த்துகிறேன்.
வெற்றி நமதே!
                      வெற்றி என்பது நிரந்தரமல்ல;
                      தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 
                                                                  - பில்கேட்ஸ்.

இன்றைய கல்வியின் இலக்கு

இன்றைய கல்வியின் இலக்கு
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

கற்கை நன்றே, கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
எப்பாடு பட்டாவது கல்வி கற்றல்
வேண்டும் என்னும் ஒளவைப்
பாட்டியின் அமுத மொழிகள் இவை.

அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர்  ஏழைக்கு எழுத்தறிவித்தல்

சமூகத்தில் செய்யப்படும் அனைத்துத் தர்மக் காரியங்களிலும் ஓர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் மாபெரும் புண்ணிய காரியமாகும். ஏழ்மையினால் ஒரு தமிழன் படிக்க இயலவில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் என்கின்றார் பாரதி தாசன்.

கல்வி என்பது என்ன? 

         இவ்வுலகில் ஒருவர் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற் றின் தொகுப்பே கல்வி. ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்புறச் செய்திட வழி வகுக்கின்றது.

கல்விக் களம் காண்போர்:

                  கல்வி பெறுவோர் யாவர் என்னும் கேள்வி எழுப்புகின்ற  போது நமது நினைவுக்கு வருவோர் குழந்தைகளே. நலமான குழந்தைகள் நலமான சமூகம் படைத்திடுவர். இந்தியா போன்ற வளரும் நாடுகளிலேயே உலகின் மொத்தக் குழந்தைகளில் 82 விழுக்காடு  உள்ளனர். 18 வயதுக்குட்பட்ட சுமார் 440 கோடி குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர். எனவே தான் 2030 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கணித்துள்ளது. இவ்வாறு உலகின் இளமையான நாடாக இந்தியா திகழ்கின்றது. 
விவிலியம் கூறும் ஞானம்:

            கல்வி மூலம் கிடைப்பது ஞானம். ஞானம் ஒளிமிக்கது. மங்காதது. அதன்பால் அன்பு கூறுவோர் அதை எளிதில்  கண்டு கொள்வார். அதைத் தேடுவோர் கண்டடைவர் (சாஞா 6:12). ஞானம் என்றுமுள ஒளியின் சுடர். கடவுளது செயல் திறனின் கறைபடியாக் கண்ணாடி. அவருடைய நன்மையின் சாயல் (சாஞா 7:26). 

          ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும். தன்னைத் தேடுவோர்க்குத் துணை நிற்கும் (சா.ஞா 4:11). மனித  ஞானத்தை விட, கடவுளின் மடமை, ஞானம் மிக்கது. மனித வலிமையை விட இறை வலுவின்மை வலிமை மிக்கது (1கொரி 1:25). ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை. அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை (சீரா 24:29). மண்ணுலகு சார்ந்தவை பற்றி மட்டும் போதிப்பது கல்வி அல்ல. விண்ணுலகு சார்ந்தவை பற்றியும் போதிப்பதே கல்வி (யோவா 3: 1-21)

திரு அவையின் போதனைகள், மரபுகள்:

        இரண்டாம் வத்திக்கான் பேரவைக்கு முன் திருஅவையில் பெரும்பாலும் குழந்தைகளின் மறைக்கல்வி, திருவருட்சாதனங்களை  பெறுவதற் கான முன் தயாரிப்புகள் சாரந்ததாகவே இருந்தது. வத்திக்கான் பேரவையின் 16  ஏடுகளில் பொது நிலையினரின் திருத்தூதுப்பணி. இன்றைய உலகில் திருச்சபை மற்றும் கிறிஸ்தவக் கல்வி போன்ற பகுதிகளில் கல்வி கற்கும் குழந்தைகளின் மாண்பு, மதிப்பு, உரிமைகள், இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி ஆகிய கருத்துகள் இழையோடுகின்றன.

 அ,ஆ,இ,ஈ அணுகு முறை:  அது என்ன அ,ஆ,இ,ஈ?

அனுபவம்: அனுபவமே அனைத்துக்கும் அடித்தளம். குழந்தைகள் அனுபவிக்கும் அன்பு, பாசம், ஆற்றல், சாதனைகள், கசப்பான உணர்வுகள், சிக்கல்கள், அநீதிகள், வன்முறைகள் போன்றவை இனம் காணப்படல் வேண்டும். 
ஆய்வு: 60 வயசுக்கு மேலே அப்பா, அம்மா வேலைக்குப் போனா குழந்தைகள் சரியில்லன்னு அர்த்தம். 14 வயசுக்குக் கீழே பிள்ளைகள் வேலைக்கு போனா பெற்றோர் சரியில்லன்னு அர்த்தம். குழந்தைகளின் நல வாழ்வைப் பாதிக்கின்ற அனைத்து அனுபவங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படனும்.
இறையியல்: குழந்தைகளின் வாழ்வு அனுபவங் களின் பின்னணியில் மேற்கொள்ளும் பகுப்பாய்வு இறையியலாக்கம் புரிந்திட  உதவிடும்.  

ஈடுபாடு: குழந்தைச் செல்வங்களின் உரிமைகள், மாண்புகள் ஆகியவற்றினை ஈடுபாட்டோடு அணுகி இவர்களின் மதிப்புமிக்க  கல்வியினுக்கு வழிகாட்டுதல் காலத்தின் கட்டாயமாகும்.
இந்தியக் கல்வி: பண்டைய இந்தியாவில் நாளந்தா பல்கலைக் கழகம் போன்ற கல்விக் கூடங்கள் செயல்பட்டதனை அறிகின்றோம். இவையனைத்தும் வர்ணா சிரம தர்மத்தின் அடிப்படையிலான குருக்குலக் கல்வி முறையில் உருவானவையாகும். அரசிளாங்குமாதர்கள் பெரும் செல்வத்தின் பிள்ளைகளே இங்கு பயின்று வந்தனர். வில், வேல் வித்தை போன்ற ஆயக்கலைகள் பதினாறும் கற்றுக் கொடுக்கப்பட்டன.

        கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் நாடு பிடித்த வெள்ளையர்கள் தங்களின் எடுபிடிகளாக வேலை செய்வதற்காக லார்ட் மெக்காலே என்பவரால் கொண்டு வரப்பட்ட குமாஸ்தா வேலை செய்யும் கல்வி முறையே இன்னும் செயல்பட்டு வருகிறது.

          விடுதலைக்குப் பின் 1950 ஆம் ஆண்டு 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளுக்குள் கல்வி அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அது கானல் நீராகிப் போனது. அதன்பின் சர்வசிக்ஷா அபியான் எனப்படும் ‘அனைவருக்கும் கல்வி’ முறை  1990 முதல் நடைமுறையில் உள்ளது. இம்முறையில் நேர் மறை விளைவுகளை விட எதிர் மறை விளைவுகளே அதிகம் உள்ளது.

தமிழ் வழிக் கல்வியைப் பின் தள்ளும் ஆங்கிலக் கல்வி மோகம்:

தாய் மொழிக் கல்வியே சிறப்பான கல்வி என்று ஆட்சியாளர்கள் பேசினாலும், செயல்பாட்டில் சுயநிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையினால் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் அனைத்தும் கல்வி நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. டை கட்டி சீருடையணிந்து, காலுக்கு ஒவ்வாத U அணிந்து தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது கண்டும். மம்மி, டாடி என்று ஆங்கில வார்த்தைகள் பேசுவதைக் கேட்டும், புளகாங்கிதம் அடைந்து, பெற்றோர்களின் மாயையயனும் சந்தோ­த்தில் மிதக்கின்றார்கள். ஆங்கிலமும் தெரியாது. தமிழும் தெரியாது. தமிங்கிளிஷ் பேசுகின்ற இந்தக் குழந்தைகளின் நிலையோ பரிதாபம்.

 உண்மையான கல்வி வளர்ச்சி என்ன? 

             சமீபக் காலமாக 10,12 வகுப்புப் பொதுத் தேர்வு எழுதுவோரின் தேர்ச்சி  எண்ணிக்கை பெருகி வருகிறது. மதிப்பெண்களும் அதிகம் பெற்று வருகின்றனர். அரசும் தனது அறிக்கையில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகப் பீற்றிக் கொள்கிறது. எது பூஜ்ஜியம்?  எண்ணிக்கையா? தரமா? Quantity? Quality?  என்றால் தரமே முக்கியம்.

அதிக மதிப்பெண்கள் பெற்றோர் அனைவரும் அதிபுத்திசாலிகள் அல்ல. குறைந்த மதிப்பெண்கள் பெற்றோர் அனைவரும் அடி முட்டாள்களும் அல்ல. மதிப்பெண் என்பது ஓர் அளவுகோல். அவ்வளவுதான்.

முழு மனித ஆளுமை வளர்ச்சியை மையமாகக் கொண்டே கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். வாழ்வின் எதார்த்தங்களாகிய வெற்றி, தோல்விகளை திறந்த மனத்தோடு எதிர் கொண்டு சென்று வாழ்க்கையை எளிமையாக, இனிதாக வாழப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். வசதி படைத்தோர்க்கு மட்டுமே உயர்கல்வி. இல்லாதாருக்குக் கல்வி இல்லை என்ற ஏற்றத் தாழ்வு அறவே அகற்றப்படல் வேண்டும். இதுவே இன்றைய நாளின் 

கல்வியின் இலக்காகிடல் வேண்டும்.
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிருவாள் அருஞ்சமம் முடுக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
                                                         - பொன்முடியார்.

கல்வியே வெல்லும்.


கல்வியே வெல்லும்

2002 ஆம் ஆண்டு எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் அன் ஆர்பர் என்ற பங்கில் மூன்று மாதங்கள் பணிசெய்தேன். அவ்வூரில் ஐந்து பல்கலைகழகங்கள் உள்ளன. அப்பங்கிலுள்ள நடுநிலைப்பள்ளியில் சில நாட்கள், மறைகல்வி வகுப்புக்கள் எடுத்தேன். இளம் மாணவர்கள் நிறையக் கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான் கொடுத்த பதில்களே பாடமாக அமைந்தன. அதேபோல பெண்களுக்கு விவிலிய வகுப்புக்கள் எடுத்தேன். அங்கும் கேள்வி‡பதில் முறையில்தான் விளக்கங்கள் அமைந்திருந்தன. 
பவலோ பார்ரே என்பவர் கூறுவார், ‘கேள்வி எழுப்பதே கற்றலின் தொடக்கம்’ என்பார். 12 ஆம் வகுப்பு மாணவரைப் பார்த்து ‘டெல்லியின் முக்கயத்துவம் என்ன?’ என்று கேட்டதற்கு, அவனுக்கு பதில் தெரியவில்லை. ஆனால் ‘இந்தியாவின் தலைநகர் எது?’ என்று கேட்டதற்கு டெல்லி என்று பதில் கொடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சி மாணவர் மனப்பாடம் செய்கின்றனர்,  ஆனால் புரிந்து படிப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.
மாணவர்களின் மனநிலைப் போக்கினை மனதில்கொண்டு மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும். பதின்ம வயதினரின் மனப்போக்கு சற்று வித்தியாசமானது. அவர்கள்தான் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பயில்கிறார்கள். நம்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மாணவர்கள் புதியவைகளை உருவாக்குகிறார்கள். மாணவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. 

தானியார்ப் பள்ளி நிறுவனங்கள், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை முன்வைத்து, தங்களை பெருமைக்கரிய நிறுவனங்களாக காட்சிப் படுத்துகின்றன. பொதுவாக,  பணம் இருக்கும் இடத்தில் பண்புகள் வளர்வதில்லை. பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்,  வசதி உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். பணத்தினால் ஆடம்பரங்கள், சொகுசுகள் பெருகுகின்றன. உழைப்பு, பணிவு, உறவு ஆகிய பண்புகள் அங்கு மறைகின்றன.  அண்மையில் ஒரு மாவட்ட ஆட்சியர் தன் பிள்ளையை அரசினர் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்திருக்கிறார். தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள்.
கல்வி என்பது பண்புகளின் வளர்ப்புத் தாய்’ என்கிறார் வில்லியம் பர்ரோஸ்.

சான்றிதழ் பெறுவதற்காக கற்பது கலவி அல்ல. முழு மனிதராக வளர்வதற்கே கற்பது கல்வியாகும்.

திருச்சபை கல்விப்பணியை நற்செய்திப் பணியாக செய்து வருகிறது. தற்போது ஆங்கில வழிகல்வி பள்ளிகளுகளுக்கே  தங்கள் பிள்ளைகளை தமிழக மக்கள் அனுப்பிக்கொண்டிருக்கறார்கள். திருச்சபை நடத்தும் பள்ளிகளில் பிள்ளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. குடந்தை மறைமாவட்டத்தில், மறைமாவட்டம் நடத்தும் பள்ளிகள் 123. இவைகளில் 1506 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவைத் தவிர துறவர சபைகள் நடத்தும் பள்ளிகள் உள்ளன. சுமார் 30000 மாணவ மாணவியர் நம் பள்ளிகளில் பயில்கின்றனர்.

கல்லாதவரின் கண்கள் வெரும் புண்களே என்கிறார் வள்ளுவர். இவ்விதழில் கல்வியைப் பற்றிய பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கல்வியைப் பலக் கோணங்களில் இவை விளக்குகின்றன. பிள்ளைகளின் முழுவளர்ச்சியை மனதில் வைத்து கல்வியின் ஒளி தரப்பட வேண்டும்.

குழம்பியுள்ள தமிழக அரசியலைத் தனக்கு சாதகமாக மத்தியஅரசு முயல்கிறது. வெளிப்படையாக பொதுக்கூட்டங்களில் தமிழக அரசை சாடுவதும் , பல வழிகளில் அரசை பயமுறுத்தியும் மத்திய அரசு செயல்படுவதை காணமுடிகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே ஏரிகள் துVர்வாரப்படுவதை பார்க்கும்போது ஆறுதலா -யிருக்கிறது. ஆனால் மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இயற்கையின் கொடை அழிக்கப்படுவதை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. எம் மணல் என்ற புதிய வழிகளைப் பயன்படுத்தி  

ஆறுகளில் மணல் அள்ளப்படுவது சுத்தமாக நிறுத்தப்பட வேண்டும். கருவவேலி மரங்கள் அகற்றப்படுவதும் சிறந்தப் பணி. தற்போது தமிழக மக்கள் விழிப்பாயிருந்து நல்லத் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

Ads Inside Post