Pages - Menu

Tuesday 1 December 2015

தீட்டினால் நிறைய வெட்டும், அவசரப்பட்டு சொல்லக்கூடாது, இன்னும் உள்ளே போ!

தீட்டினால் நிறைய வெட்டும்
ஒரு விறகு வெட்டி புதிய கோடாரி வாங்கினான். அதனால் முதல்நாள் ஒன்பது மரங்கள் வெட்டினான். அடுத்தநாள் எட்டு மரங்கள் வெட்டினான். அதற்கு அடுத்த நாள் ஏழு மரங்கள் வெட்டினான். இவ்வாறாக குறைந்து கொண்டே போனது. ஒரு பெரியவரிடம் அவன் கேட்டான் “ஒரே கோடாரியால் தான் வெட்டுகிறேன். ஏன் நாளுக்கு நாள் அதன் பலம் குறைந்து கொண்டு போகிறது” என்றான். பெரியவர் கேட்டார் “அதே கோடறிதான். ஆனால் அதை தீட்டினாயா?” என்றார்.

 அவசரப்பட்டு சொல்லக்கூடாது
இரயில் பெட்டியில் ஒரு சில பிள்ளைகள் சப்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் “பிள்ளையை அடக்கி வைக்கக் கூடாதா” என்றார்கள். அதற்கு பிள்ளையுடன் இருந்தவர்கள் கூறினர் “அந்த பிள்ளையின் தாய் இறந்துவிட்டாள். அவளின் அடக்க சடங்கிற்காகத்தான் அந்த பிள்ளையை அழைத்து செல்கிறேன். இது அவளுக்குத் தெரியாது. அங்கு சென்ற பிறகு சோகத்தில் மூழ்கிவிடுவாள். அதுவரை மகிழ்ச்சியாய் இருக்கட்டும்” என்றார்.
 இன்னும் உள்ளே போ!
ஒருவர் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றார். காட்டில் ஒரு முனிவர் தவம் செய்துக் கொண்டிருந்தார். அவரை விறகு வெட்டி வணங்கினான். அவர் கூறினார், “காட்டின் உள்ளே போ, ஒரு வாரத்திற்கான வருமானம் கிடைக்கும்” என்றார். அதுபோல் தேக்குமரம் கிடைத்தது. சில நாள்கள் கழித்து முனிவரிடம் சென்றான். “இன்னும் சற்று காட்டின் உள்ளே போ” என்றார். அப்படியே செய்தான் தாமிரம் கிடைத்தது. மீண்டும் பல நாள்கள் கழித்து முனிவரிடம் சென்றான். “இன்னும் சற்று காட்டின் உள்ளே போ” என்றார். அவ்வாறே செய்தான். தங்கம் கிடைத்தது. இன்னும் சிலநாள்கள் சென்று துறவியிடம் சென்றபோது அதேபோல், “இன்னும் சற்று உள்ளே செல்” என்றார். வைரம் கிடைத்தது. கடைசியாக விறகு வெட்டி முனிவரிடம் கேட்டான் “நீர் இவ்வளவு தெரிந்திருந்தும், ஏன் பொருள்களை எடுத்து வாழவில்லை?” என்றான். “அவை எனக்கு மகிழ்ச்சியை தருபவை அல்ல. தியானம்தான் மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

No comments:

Post a Comment

Ads Inside Post