Pages - Menu

Wednesday 1 June 2016

ஆலோசனை நேரம். வேதியரிடம் கேளுங்கள் - 12


ஆலோசனை நேரம்.
வேதியரிடம் கேளுங்கள் - 12

- நல்லை.இ. ஆனந்தன்

இயேசு புதுமைகள் எதுவும் செய்யத் தொடங்காத நிலையில், கானாவூர் திருமணத்தில் மரியா எப்படி இயேசு புதுமை செய்வார் என்று நம்பினார்?


- திருமதி. மலர்செல்வி, தஞ்சாவூர்

ரொம்ப சிம்பிள், கபிரியேல் தூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னபோதே ‘இயேசு பெரியவராயிருப்பார், கடவுளின் மகன் எனப்படுவார்’ என்று இயேசுவைப் பற்றிய இரகசியங்களைச் சொல்லியிருந்தார். சிமியோன்கூட ’உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும்’ என்று எச்சரித்திருந்தார். ஆக, இயேசுவைப் பற்றிய உண்மைகளும் மரியாவுக்குச் சொல்லப்பட்டது. மரியா கேட்டார், கேட்டதை நம்பினார். அதனால்தான் சிலுவையடியில் நின்றபோதும் நம்பிக்கையில் உயர்ந்திருந்தார். அந்த நம்பிக்கைதான் கானாவூரிலும் வெளிப்பட்டது. தண்ணீர் இரசமான மகா அற்புதத்தைப் பெற்றுத்தந்தது. ஏனெனில் இயேசுவின் திரு இருதயமும், மரியாவின் மாசற்ற இதயமும் இரக்கம் என்னும் தீயால் பற்றி எரிந்தது. இப்போது புரிந்ததா மலர்செல்வி அக்கா?

2. நமது நாட்டில் கல்வித்திட்டம் எந்த அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது?

- திரு. சேவியர், ஆசிரியர், மாணாமதுரை

வாத்தியாரய்யா, உலக அறிவைவிட ஒழுக்க அறிவே மேல் என்பதை இபபோதைய கல்வியாளர்கள் வலியுறுத்துகிற அளவுக்கு கல்வித்திட்டம் மாறியுள்ளது. நன்னெறி வகுப்புகள் இல்லையயன்றால், ஆசிரியர்களைக் கொல்லும் மாணவர்களையும், நேர்மையான அதிகாரிகளைக் கொல்லும் ரவுடிகளையும், கோடிகளில் ஊழல் செய்யும் அரசியலார்களையும் கல்வித்திட்டம் உருவாக்கும்நிலை வரக் கூடும் என்று அஞ்சுகின்றனர். நமது கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் நன்னெறிக்கும், மறைக்கல்விக்கும் ஆதிமுதல் முக்கியத்துவம் அளிப்பதால், தங்கள் பிள்ளைகளை நமது பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் பெரிதும் முயற்சிக்கின்றனர்.

3. தம்பி, எனக்கு வயது 63, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இன்னும் சில காலம் நலமுடன் வாழ ஆலோசனை கூறவும்?

- திரு. ராஜ், கொடைரோடு.

அன்புள்ள ராஜ் அப்பா, சில காலம் அல்ல, பல காலம் நீங்கள் நலமுடன் வாழ, எளிமையான ஒரே வழி, நடைப்பயிற்சி (வாக்கிங்) மேற்கொள்வது தான். காற்றோட்டமான இடத்திலே, காலையோ / மாலையோ 5 மணி முதல் 7 மணி வரை தினமும் நடைப்பயிற்சி செய்யவும். வெறுங்காலோடு ஒருபோதும் நடக்காதீர்கள். காலணி அவசியம். வெறும் வயிற்றில் நடக்காதீர்கள். பாலோ அல்லது பழச்சாறோ ஒரு டம்ளர் அருந்திவிட்டு நடக்கவும், சுவாசிக்க சிரமம், உடலின் சில பகுதிகளில் வலி, அதிக வியர்வை, படபடப்பு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் உடனே சென்று ஆலோசனை கேட்கவும். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

4. என் மகனுக்கு மூன்று வயதாகிறது. எந்த வயதிலிருந்து அவனுக்கு மறைக்கல்வி ஆரம்பிக்கலாம்?

- திருமதி. ஜெயக்கொடி, தஞ்சாவூர்

என்ன? எந்த வயதிலா? ஏற்கனவே மூன்றுவருடம் லேட்டாக்கி விட்டீர்கள் ஜெயக்கொடியம்மா. தாயின் கருவறையிலே கற்றல் ஆரம்பித்துவிடுகிறது என்கிறார்கள் அறிஞர்கள். மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது, “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததுமே என் வயிற்றுனுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” என்றார் எலிசபெத்தம்மாள். ஆறு மாதக் கருக்குழந்தை யோவான் துள்ளிக் குதித்தார். மரியா கருத்தரித்த உடனே அவர் பாடிய இறைபுகழ்ச்சிப் பாடல் மிக உயர்ந்தது, உன்னதமானது. எனவே, கருத்தாங்கிய தாயின் பக்தி, செப ஆர்வம், இறைபுகழ்ச்சிப் பாடல்கள் பாடுவது வயிற்றுக் குழந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. எனவே, இன்றே, இப்போதே, உடனே, வீட்டிலே அவனுக்கு மறைக்கல்வியை ஆரம்பித்துவிடுங்கள்.

5. பசுமையான மலை, நீர் நிரம்பியோடும் ஆறுகள், பாடும் பறவைகள், மாதம் மூன்று மழை, அதிக விளைச்சல் இதுவெல்லாம் இனி உலகில் எப்போது சாத்தியமாகும் அய்யா?

- திருமதி. தமிழரசி, கன்னியாகுமரி.

கதை சொல்ல வைத்துவிட்டீர்களே தமிழரசியம்மா. ஒரு பக்தர் உங்கள் கேள்வியையே கடவுளிடம் கேட்டுவிட்டு உறங்கச் சென்றார். அவர் கனவில் வந்த கடவுள் பக்தர், ஆசைப்பட்ட மாதிரியான பசுமையான உலகத்தைக் காட்டினார். ஆண்டவரே, இதுவா மோட்சம்? என்றார் பக்தர். அதற்கு கடவுள் சொன்னார், “படைப்பின் தொடக்கத்திலேயே பூமியை இப்படித்தான் உருவாக்கினேன். உங்கள் கையில் அதைக் கொடுத்தேன். நீங்கள்தான் இப்படி ஆக்கிவிட்டீர்கள். வறண்ட ஓடைகள், கடும் வறட்சி, அதிக வெப்பம், குடிநீர் பிரச்சனை, வெள்ளப் பெருக்கு, பனிச் சரிவுகள், சுனாமி அதிர்வுகள், உலகத்தில் ஏற்படுத்தியதுதான் உங்கள் சாதனை” என்றாராம் கடவுள்.

6. இந்த ஆண்டாவது நமக்கு நல்ல மழைபெய்யுமா?

- திரு. செல்வமணி, திருச்சி.

நிச்சயமாக, இறை இரக்க ஆண்டைக் கொண்டாடுகிறோம். அவரின் அளவற்ற இரக்கத்தால் நமக்கு நல்ல மழை உறுதியாகக் கிடைக்கும். கடந்த ஆண்டும் அவர் நமக்கு மழைதான் தந்தார். சென்னையில் பெய்த மழைநீரை மட்டும், நாம் சேமித்து வைத்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் சப்ளை செய்திருக்க முடியும் அய்யா. கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத்தான் தந்துகொண்டு இருக்கிறார். நாம்தான் அவற்றை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். இனியாவது விழித்துக் கொள்வோம். அப்போது பிழைத்துக் கொள்வோம்.

அமெரிக்கக் கடிதம், இயற்கையைப் போற்றுவோம்

அமெரிக்கக் கடிதம்
இயற்கையைப் போற்றுவோம்
- சவரி,
கேரி, வடகரோலினா

(இயற்கையை தெய்வமாக வழிபடுகிற மரபு இந்திய நாட்டில் உள்ளது. மரம், மலை, இடி, மின்னல், மழை, நீர் இவைகளெல்லாம் தெய்வநிலையில் போற்றப்படுகின்றன. ‘தாயை பழித்தாலும் பழிக்கலாம். தண்ணீரை பழிக்கக் கூடாது’ என்ற பழமொழி உண்டு. ஆனால், இப்போது இயற்கையை, பேணிகாக்காது, அதனை பொருட்படுத்தாது நம் மக்கள் நடப்பது எதார்த்தமாகிறது. நதி நீரில் கழிவு நீரை எவ்வித தயக்கமுமின்றி கலக்க செய்கிறார்கள். காவிரி நதி வரும் வழியிலுள்ள நகரங்களின் சாக்கடைகள் காவிரியில் விடப்படுகின்றன. திருப்பூரில் சாயப்பட்டறையின் கழிவு நீர் அப்பகுதியின் நிலத்தடி நீரையே பாதித்திருக்கிறது. எழிலான சந்தனமரம், செம்மரங்கள் அரசியல்வாதிகளின் துணையுடன் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இச்சூழலில் வாழ்கின்ற நாம், அமெரிக்காவில் எவ்வாறு இயற்கை பேணப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறார் கட்டுரையாளர் ).

அமெரிக்காவில் மக்கள் இயற்கையை மதிக்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலும் அந்த நகரத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற ஏரிகளை அமைத்து, மழை தண்ணீரை சேமிக்கின்றனர். ஏரில் உள்ள நீரை நாம் அறிவியல் பாடங்களில் படித்துள்ளதுபோல, பாறைகளில், மணலில் வடிகட்டி தூய்மைபடுத்தி குடிநீராக மாற்றுகின்றனர். அந்த தண்ணீரை குழாய்களின் மூலம் வீட்டிற்கு அனுப்புகின்றனர். உலகில் வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை வரவிருப்பதை உணர்த்தி, தண்ணீரை வீணாக்காமல் எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பதை ஆய்ந்து கண்டுபிடித்து அதை நடைமுறைபடுத்தி வருகின்றனர். உதாரணமாக துணி துவைக்கும் (Washing Machine) இயந்திரங்கள், பாத்திரம் கழுவும் (Dish Wash) போன்ற கருவிகள் மனிதன் வேலை பழுவை மட்டும் குறைப்பது மட்டும் இல்லாமல், அவ்வியந்திரங்களை கச்சிதமாக வடிவமைத்து, மனிதர்கள் பயன்படுத்துவதைவிட, இந்த இயந்திரங்கள் மிக மிக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. மேலும் விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசனம் மூலம் செடிகளுக்கு தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
நமது ஊரில் குறிப்பிட்ட நேரத்தில் இலவசமாக அரசாங்கம் தண்ணீர் விடுகிறது என்று தண்ணீரை சும்மா திறந்து விட்டு செடிகளுக்கு விடுவதையும், சும்மா ஓடினாலும் அடைக்காமல் இருப்பதையும், விவசாயிகள் தண்ணீரை வீணடிப்பதையும் பார்த்திருக்கிறேன். நமது நாட்டில் தண்ணீருக்காக உள்ள தட்டுபாட்டை உணர்ந்து, மழை நீரை சேமிக்க நமது அரசு புதிய ஏரிகளை அமைக்க வேண்டும். இருக்கும் ஏரிகளை தூர்வாரி அவைகளின் கொள்ளளவை அதிகரிக்க  வேண்டும். மக்களாகிய நாமும் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து புத்திசாலி தனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, நல்ல உணவு மட்டும் போதாது. நல்ல, தூய்மையான சுற்று புற சூழல் வேண்டும். தூய்மையான காற்று வேண்டும். தூய்மையான காற்றுக்கு நிறைய மரங்கள் அவசியம். நல்ல மரங்கள் நமக்கு நல்ல கனியையும், மழையையும், நிழலையும், நம் அசுத்த காற்றை அவை சுவாசித்து, நாம் சுவாசிக்க நல்ல காற்றை கொடுக்கும் கொடை வள்ளல்களாக விளங்குகின்றன. மரங்களின் அருமையை இங்குள்ள மக்கள் உணர்ந்து உள்ளார்கள். சட்டம் இயற்றி காடுகளையும், வன விலங்குகளையும் மனித ஆக்கிரமிப்பில் இருந்து காத்து வருகின்றார்கள். மனிதர்கள் நடப்பதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் மரங்கள் நிறைந்த, மலர்கள் நிறைந்த கண்கவர் பூங்காக்களை உருவாக்கி வைத்துள்ளார்கள். வீட்டை சுற்றி மரங்களையும், பூக்களையும் வளர்த்து சுற்றுபுறத்தை பேணுகிறார்கள். நாமும் மரம் வளர்ப்போம். நம் சுற்றுபுறம் காப்போம். மரங்களை வளர்க்கவில்லையானாலும், இருக்கும் மரங்களை வெட்டாமல் காப்போம்.

கிளி வளர்த்தேன், பறந்து விட்டது 
அணில் வளர்த்தேன், ஓடி விட்டது 
மரம் வளர்த்தேன், இரண்டும் திரும்பி வந்து விட்டது.
                                                                     A.P.J. அப்துல் கலாம்.

பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு, 19 - 06 - 2016

பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு    19 - 06 - 2016

- அருள்பணி. ச.இ.அருள்சாமி,
செக் 12 : 10 - 11  கலா 3 : 26 - 29    லூக் 9 : 18 - 24

தான் பிறருக்கு உரியவர் என்று உணர்த்துவதே உயர்ந்த வாழ்வு.

ஓர் அலுவலகத்தில் கடைநிலை பணியாளர் ஒருவருக்கு, பணி ஓய்வு விழா எடுத்தனர். இவ்விழாவில், அவருடைய சிறப்பு, உழைப்பு ஆகியவைப் பற்றி எல்லோரும் அழகாக எடுத்துரைத்தனர். ஏற்புரையில் அப்பணியாளர் “இந்த நல்லவைகளையயல்லாம் முன்பே கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக, ஆர்வமாக பணியாற்றியிருப்பேன்” என்றார்.

“சுய விமர்சனம் மிகவும் உதவியானது. மற்றவர்கள் தரும் விமர்சனம் நாம் வளர வைக்கப்படும் உரம்” என்று சொல்லலாம். 100 நண்பர்கள் கற்றுத்தராததை ஓர் எதிரி கற்றுத் தந்து விடுவான் என்று கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் கலிலேயா பணியின் இறுதியில் (லூக் 4 : 14 ‡ 9 : 50) எருசலேம் செல்வதற்குமுன் (9 : 51 ‡ 19 : 27) தான் செபத்தில் தனித்திருந்த போது, சீடரிடம் தன்னைப் பற்றிய மக்களின் கருத்து என்ன? என்று கேட்கிறார். இதற்குமுன் திருமுழுக்கு யோவான், “அவர் யார்?” என்று தன் சீடர்களை அனுப்பி கேட்கிறார் (லூக் 6 : 20). ஏரோது, இயேசு யார்? என்று குழம்பி போகிறார் (லூக் 9 : 7 ‡ 9). லூக் 4 : 16 ‡ 9 : 6 என்ற பகுதியில் இயேசு பலவித எதிர்ப்புகளை சந்திக்கிறார். “இயேசு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் (லூக் 5 : 21). இயேசு பாவிகளோடு விருந்துண்பதற்கும் (லூக் 5 : 30), சீடர்கள் வழக்கப்படி நோன்பு c

அவர், தன் தந்தை. இறந்தபிறகு வருவதாக கூறுகிறார். அதாவது “பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டு சீடராக மாறுகிறேன்” என்கிறார். இறந்தவர்களை இறந்தவர் அடக்கம் செய்யட்டும் என்ற பழமொழியைக் கூறி, மீண்டும் முழு அர்ப்பணத்துடன் தன் சீடராக வாழ வேண்டும் என்கிறார். முதல் வாசகத்தில், எலியா, எலிசாவை தன் சீடராக அழைத்தபோது, எலிசா முதலில் தயங்கினார். ஆனால் தனது ஏர்மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு பரிமாறிவிட்டு எலியாவை பின்பற்றுகிறார். இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் என்கிறார்.

இயேசு தன் சீடர்களை அழைத்தபோது, பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா அனைவரும் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினர் (லூக் 5 : 11). லேவி அனைத்தையும் விட்டு இயேசுவை பின்பற்றினார் என்றும் பார்க்கிறோம் (லூக் 5 : 28).
அரசன் தனக்குபின் தன் மகன் ஒருவனுக்கு மகுடம் சூட்ட விரும்பினார். வழக்கம்போல் மூத்தவனுக்கு கொடுக்க விரும்பவில்லை. எனவே ஒருவனை அழைத்தார். அவனிடம் “நீ செய்த ஒரு நல்ல செயல் சொல்” என்றான். “ஒருவர் என்னிடம் ரத்தினமாலையை கொடுத்துவிட்டு சென்றார். அதை பத்திரமாக வைத்திருந்து கொடுத்தேன்” என்றான். “இது எப்படி நல்லது?” என்றான் அரசன். “நான் ஒரு இரத்தினக்கல்லை திருடியிருக்கலாமில்லையா, திருடினால் என்ன, மக்கள் என்னை பிடித்து தண்டித்திருப்பார்களா?” என்றான். “அப்படியயன்றால் மற்றவர்களுக்கு பயந்துக் கொண்டு நல்லது செய்தாய். நீ போகலாம்” என்றார். அடுத்தவனைக் கூப்பிட்டு, “நீ என்ன நல்லது செய்தாய்?” என்றான் அரசன். “ஒருவன் தண்ணீரில் விழுந்துவிட்டான். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. நான் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றினேன்” என்றான். “ஏன் அப்படி செய்தாய்?” “அப்படி செய்யவில்லை எனில், என்னை கோழை என மக்கள் நினைப்பார்கள்” என்றான். “வீரத்தை காட்டுவதற்காக உதவி செய்தாய்” என்றார் அரசன். மூன்றாமவனைக் கூப்பிட்டான். “நீ என்ன நல்லது செய்தாய்?” என்றார்.
அவன், “நான் நல்லது செய்ததாகத் தெரியவில்லை” என்றான். “ஒரு நல்லதும் செய்யவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது” என்று மக்களை விசாரித்தான் அரசன். ஒரு முதியவர் கூறினார், “எங்களுக்கு பணம் இல்லை என்றால் பணம் கொடுப்பார், சோகத்தில் ஆறுதல் கூறுவார், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். ஆனால் மற்றவர்களுக்கு தெரிய கூடாது, சொல்லக் கூடாது” என்பார். அரசன் அவனுக்கு மகுடம் சூட்டினான்.         

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு, 12 - 06 - 2016

பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு 12 - 06 - 2016

1 சாமு 12 : 7 - 10, 13                         கலா 2 : 16, 19 - 21                    லூக் 7 : 36 - 8 : 3

இன்றைய நற்செய்தி, மன்னிப்பில் இருக்கின்ற சுதந்திர தன்மையை விளக்கி கூறுகின்ற படமாக அமைகின்றது. இது சீமோனுக்கும், இந்த பாவியான பெண்ணிற்கும் இடையில் நடக்கும் காட்சிகள் அல்ல. மாறாக, நமக்கும், இயேசுவுக்கும் இடையே நடக்கின்ற மன்னிப்பு போராட்டத்தில், நாம் சீமோனாக இருக்கின்றோமோ அல்லது பாவியான பெண்ணாக இருக்கின்றோமோ என்பதை சீர்தூக்கி பார்க்க விடுக்கப்படும் அழைப்பு.

நம்முடைய வாழ்க்கை - குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்போதும், மனிதர்களைவிட சட்டதிட்டங்களுக்கு அதிக மதிப்பளிக்கும் போதும், நம்மை போல இயேசுவையும் மாற, சிந்திக்க, எதிர்ப்பார்க்கின்ற போதும், நாம் நாமாக இல்லாமல் நடிக்கின்றபோதும், பிறர் நம்மை பார்க்க வேண்டும் என்கின்ற வாழ்க்கை வாழ்கின்ற போதும், பிறரை ஒதுக்கி ஓரம் கட்டி தீர்ப்பிடுகின்ற போதும், நாம் சரியானவர்கள் என்றும், பிறர் தவறானவர்கள் என்றும் நம்மை நாமே நியாயப்படுத்தும் போதும், நம்முடைய பதவி, இடம் குறித்து அதீத அகங்காரத்தில் பிறரை பூச்சிகளாக பார்க்கின்ற போதும் நாம் ‡ சீமோன்களாகவே இருக்கின்றோம். சீமோனாக வாழ்கின்ற போது ‡ நம்முடைய வாழ்க்கை கடினமானதாகவும், மூடிய வாழ்வாகவும் இருக்கும்.  அப்போது நாம் நமக்கு முன் இருக்கின்ற முழுமையான வாழ்வை பெற்றுக்கொள்ள போவதில்லை.

அடுத்தவர்களால் நம்முடைய வாழ்க்கை நிச்சயிக்கப்படுவதை அனுமதிக்காத போதும், இயேசு கிறிஸ்துவை போல பார்க்க, சிந்திக்க, நடக்க கற்று கொள்கின்ற போதும், பிறருக்காக நடிக்காமல், முகமூடி அணியாமல் வாழ கற்று கொள்கின்ற போதும், இயேசுவின் மன்னிப்பை நம்பி அவரிடம் நாம் சரணடைகின்றபோதும், நம்மை, நம் தவறான வாழ்க்கை பாதையை திருத்திக் கொள்ள மனம் உள்ளவராக இருக்கின்ற போதும், தெரிந்த கண்ணோட்டத்தோடு ஒளிவு மறைவு இல்லா வாழ்க்கையை கையாளுகின்ற போதும்,நாம் அனைவரும் பாவியான பெண்ணை ஒத்த வாழ்க்கை வாழ்ந்து இயேசுவின் மன்னிப்பை பரிசாக பெற்று கொள்கிறோம்.

பாவியான பெண்ணைப்போல வாழ்கின்ற போது நம்முடைய வாழ்வு ஒளிவு மறைவற்றதாகவும், நேர்மையானதாகவும், கண்ணீர் நம் பாவங்களை கழுவுகிற, புதுவாழ்வு தருகின்ற ஜீவ ஞானஸ்நான தண்ணீராகவும் மாறுகின்றது. பழைய வாழ்க்கையை கட்டி புரள அவசியமில்லை. மன்னிப்பு என்பது எதிர்காலத்தை காட்ட கூடிய, வசந்தத்தை வாழ்வில் சேர்க்க கூடிய ஒரு விந்தையான வீட்டிற்கான வாயில் என்றே சொல்லலாம்.

இத்தகைய இருவரில் நாம் யாராக இருக்க விரும்புகின்றோம் என்பதை சிந்திப்போம், புதுவாழ்வை பரிசாக பெறுவோம்.
மற்றவர்களை தீயவர் என தீர்ப்பிடாதீர்கள்
அவர்கள் நாம் செய்யும் தீமைகளைத்தான் வேற்று வடிவில் செய்கிறார்கள் ‡ ஒரு பழமொழி
வாழ்க்கையில் மற்றவர்கள் முன் நடித்து காட்டிக் கொள்வதை அப்படியே வாழ்ந்து விட்டால் அதுதான் உண்மையான பெருமையாகும் ‡ சான் ரடிஸ்
நேர்மையைப் போன்ற சிறந்த செல்வமில்லை ‡ வில்லியம் ஷ


ஞாயிறு தரும் இறைவார்த்தை, பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு, 05 - 06 - 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை

                      பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு                   05 - 06 - 2016

-அருட்பணி. கிருபாகரன்,
1 அர 17 : 17 ‡ 24,  கலா 1 : 11 - 19 ,  லூக் 7 : 11 - 17                 உதவி அதிபர், இளங்குருமடம்



இருவகையான மக்கள் கூட்டம், அதில் இருவகையான பயணங்கள், இருவகையான வேறுபட்ட, மாறுபட்ட இலக்கிற்காக பயணிக்கின்றார்கள். முதல் வகை இயேசுவோடு இணைந்து பயணித்தவர்கள். அவர்கள் அப்போதுதான் நூற்றுவர் தலைவனுடைய பணியாளன் பயன் பெற்றதை பார்த்து வியந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருந்தவர்கள் (லூக் 7 : 1 ‡ 10). கடவுளுடைய மகிமையான வெளிப்பாடுகள், மனிதனுடைய துன்ப நேரங்களில் ஆசீர்வாதமாக பொழியப்படுவதை கண்டு களிகூர்ந்தவர்கள். வாழ்வு முழுவதும் ஆச்சரியம், அதிசயம், அருள் எப்போது வேண்டுமானாலும் வாழ்வை புரட்டி போடும் என்கின்ற நற்செய்தியை இயேசுவிடமிருந்து பெற்று, இயேசுவை சுற்றி பயணித்தவர்கள்.

இரண்டாவது மக்கள் கூட்டம், ஒரு விதவையின் கண்ணீரை சுற்றி பயணிக்கின்ற கூட்டம் (இன்றைய நற்செய்திப் பகுதி). தனக்கு மதிப்பு கொடுக்க கூடிய, வாழ்வின் அனைத்து விதமான காரணிகளையும் இழந்து தவிக்கின்ற பெண்மணியை சுற்றி பயணிக்கின்ற கூட்டம். முதலில் கணவனை இழந்தாள், இப்போது மரணம் அவளது மகனையும் கவ்வி கொண்டது. அவளின் இல்லாமையின் வலி அழுகையாகவும், ஒப்பாரியாகவும் இருக்கின்றது. அவளோடு இணைந்து அவள் துன்பத்தில் பங்கு கொண்டு கல்லறை நோக்கி நடப்பதை தவிர வேறு எதையும் விந்தையாக செய்யமுடியாத பயணம் இரண்டாவது பயணம்.

இந்த இரண்டு மக்கள் கூட்டம், தனது இருவகையான பயணங்களில் இரு மாறுபட்ட இலக்கை நோக்கி பயணித்தவர்கள், நயீன் என்னும் ஊருக்கு வெளியே சந்தித்து கொள்கிறார்கள். இதில் மிகவும் பரிதாபமாக லூக்கா நற்செய்தியாளரால் வர்ணிக்கப்படுபவர் அந்த விதவை. ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில் கணவன் என்ற துணையை இழந்து, மகன் என்ற வாழ்வின் ஆதாரத்தை இழந்து, வாரிசை இழந்து நிற்கின்ற பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கைம்பெண்ணாக சித்தரிக்கப்படுகின்றாள். அந்த அபளை பெண்மீது இயேசு பரிவு கொள்கிறார். அப்பெண்மணி கேட்காமலேயே, அவளின் மகனை உயிர்ப்பிக்கிறார். இறைவன் நாம் கேட்காமலும், நமக்கு தேவையானதை கொடுக்க வல்லவர்.

மரணம் என்பது நமது நம்பிக்கையை குலைக்கக்கூடியது. பணம், அந்தஸ்து, பதவி இதில் மாறறம் ஏற்படுத்த போவதில்லை. சந்திப்புக்களும், அழைப்புகளும், இரக்கம் காட்டுகின்ற கடிதங்களும் மாற்றம் ஏற்படுத்த முடியாது. கோவில்கள், குருக்கள், ஆடம்பர மரண ஊர்வலங்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மாற்றம் ஏற்படுத்த முடியாத மரணத்திற்கு கூட முற்றுபுள்ளி வைத்து, மரணத்திற்கும் மாற்றத்தை கொடுக்கின்றார் இயேசு. இயேசுவினுடைய வார்த்தைகள் விந்தையானவை. அழாதீர்கள் என்று சொல்லி சவபெட்டியை தொட்டு இளைஞனே! எழுந்திரு என்கிறார். யூதரின் தீட்டு வழக்கத்தையும் கணக்கில் கொள்ளாத இயேசு இவ்வாறு செய்கிறார். எண் 19 : 11 - 16 இறந்தவரின் உடல் தீட்டானது. அதை தொடக்கூடாது என்ற சட்டம் இருந்தது.
இறுதி ஊர்வலம், தாயையும், பிள்ளையையும் இணைக்கின்ற இணைப்பு ஊர்வலமாக மாறுகின்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கை பற்றிய விளக்கம் இல்லை, செபங்கள் எழுப்பப்படவில்லை, விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இயேசு முன்சென்று உயிரிப்பிக்கின்றார். இயேசு சிறிய மக்களை பெரிய அளவில் ஆசீர்வதிக்கின்றார் என்பதுதான் லூக்கா நற்செய்தியாளரின் செய்தியாக இருக்கின்றது. கடவுளின் பரிவு பார்வைகள் நம்மீது வீசுகின்ற போது கலக்கம் கொள்ள தேவையில்லை.

மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டுமா?
பரிவு காட்டுங்கள்
நீங்கள் மகிழ்வாயிருக்க வேண்டுமா?
பரிவு காட்டுங்கள்      -   தலாய் லாமா.

பரிவு பண்பு நம் தீமைகளை மன்னிக்கும் வல்லமை வாய்ந்ததது. மற்றவர்களை கண்டனம் செய்யும் பண்பிற்கு இந்த வல்லமை கிடையாது -  யஹன்றி வார்ட் பெக்கர்.

Ads Inside Post