Pages - Menu

Tuesday 31 May 2016

வாழ்வின் வேர், கல்வி, அருள்பணி. ச. இ. அருள்சாமி

வாழ்வின் வேர், கல்வி

நீரும், உரமும் இல்லையயன்றால் தாவரங்கள் வளரச்சிக் காணமுடியாது. முயற்சியும், உறுதியும் இல்லையயன்றால் வாழ்வில் உயர்வு இல்லை. மனிதர் வளர்பவர்கள். அவர்கள் வளர்க்கப்பட வேண்டியவர்கள். அறிவியல் வல்லுனர்கள், பெரும் தலைவர்கள், மற்ற அறிஞர்கள் அனைவரும் கல்வியால் வளர்ந்தவர்கள். அனுபவத்தால் தனிமுயற்சியால் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள். திரு. அபதுல்கலாம் கல்லூரிகளில் கல்வி கற்கவில்லையயனில், அறிவியல் மேதையாக வளர்ந்திருக்க முடியாது. அறிவியல் அறிஞர் திரு. அண்ணாதுரை அவர்கள், இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக முடியாது. 
ஒரு காவல் அதிகாரி மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றும்போது கூறினார். ‘படிக்கவில்லை யயன்றால் உடல் உழைப்பையே நம்பி ஒருவர் மாடாக உழைத்து ஓடாக தேய வேண்டியதுதான். பணக்காரர்களின் மாளிகையில் பிறக்கின்றகுழந்தைகளின் கால்களைக்கூட தாங்குவதற்கு தோள்கள் காத்திருக்கின்றன. ஆனால் ஏழைகளின் குடிசையில் பிறக்கின்ற  குழந்தைகளின் தோள்களுக்கோ சுமைகள் காத்திருக்கின்றன. பணக்கார வீட்டிலே பிள்ளைகள் வளர்ந்து பிறக்கிறார்கள். ஏழைகளுடைய குடிசையிலே பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்து, பிறப்பது வாரிசுரிமை, பிறந்து வளர்வதே பிறப்பின் பெருமை’.
கல்வியை, சான்றிதழுக்காக, படித்தால் அது பயனற்றது. தியோடர் ரூஸ்வெல்ட் கூறுவார், ‘அறநெறியின்றி  கல்வி கற்பிக்கப்படும் என்றால், அது, சமுதாயத்திற்கு பேராபத்துக்களை உருவாககும் பயிற்சியாகும்’ என்றார். ‘உண்மையான கல்வியின் நோக்கம் அறிவின் வளர்ச்சி அல்ல, ஒருவரை செயல்பாட்டில் உருவாக்குவது’ என்கிறார் யஹர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர்.
ஜீன் மாத தொடக்கத்திலிருந்து கல்வி ஆண்டு தொடங்குகிறது. கோடைக்கால விடுமுறைக்கு பிறகு பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பிப்பர். தனியார் பள்ளிகள், தேர்வில் பெரும் மதிப்பெண்களை பெற்றுதரும் நிறுவனம் எங்களது என்று விளம்பரம் செய்கிறார்கள். வளரும் பிள்ளைகளில் அவர்களுடைய மனநிலைகள் மாறும். பிள்ளைகளில் விளையாட்டுக் குணம், இளைஞர்களுக்கு பாலியல் குழப்பங்கள், குறும்பு எண்ணங்கள் ஆகியவை எழுந்துவரும். இந்த மனநிலைகளை ஆசிரியர், பெற்றோர் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்க்கை பயிற்சி அளிக்க வேண்டும். ‘கல்வி என்பது ஒருவரின் அறியாமையை அதிகம் அதிகமாக தெரிந்து கொள்வதாகும்’ என்கிறார் வில் புரான்ட் என்பவர்.
இவ்விதழில் கல்வியை மையமாக வைத்து பல கட்டுரைகள் அமைந்துள்ளன. பூண்டியில் அன்னை தெரசாவைப் போல பணியாற்றிய அருள்பணி. லூர்து சேவியர் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதற்கு முறையான செயல்பாடுகளை குடந்தை மறைமாவட்டம் ஆரம்பித்திருக்கிறது. பூண்டியில், நவநாள் செபங்களில், ‘அருள்பணி. லூர்து சேவியருக்கு புனிதர் பட்டம் கிடைக்க வேண்டுமென்றும்’ இணைத்து சொல்லப்பட்டது. இன்று அது நனவாக மாறும் காலம் வந்திருக்கிறது. இயேசுவின் போதனைகளை வாழ்வாக்கி சாட்சியம் அளித்தவர்களின் வாழ்வை பரிசோதித்தே. அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இப்போது அருள்பணி. லூர்து சேவியர், இறை அடியார் என்று அழைக்க திருச்சபை அனுமதித்திருக்கிறது. இனி அவரது வாழ்வும், அவரின் பரிந்துரையால் பெறப்பட்ட அற்புதங்களும் சோதிக்கப்பட்டு, வணக்கத்திற்குரியவர் நிலைக்கும், பிறகு அருளாளர் நிலைக்கும், பிறகு புனிதர் நிலைக்கும் உயர்த்தப்படுவார். ‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் அம்மா, பூண்டிக்கு என்னை அழைத்து சென்றார். அருள்பணி. லூர்து சேவியர் அவர்கள்  ஆலோசனைகள் கூறியதையும், மாதாவின்முன் ஆசீர்வதித்ததையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். புனித வாழ்வு வாழ்ந்த அருள்பணி. லூர்து சேவியர் அவர்களுக்கு விரைவில் திருச்சபை புனிதர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்யும் என்பதில் சந்தேகமில்லை’.
தமிழ்நாட்டிலும், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டன. அம்மாவின் ஆட்சி தமிழத்தில் மீண்டும் தொடர இருக்கிறது. தரமான கல்வி மக்கள் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் திட்டங்களை உருவாக்கவும், விவசாய மக்களின் தேவைகளை அறிந்து ஆவன செய்யவும், மது மோகத்தை மக்களிடமிருந்து அகற்றவும், கிறிஸ்தவர்களில் தாழ்த்தப்பட்டவர். பின்தங்கியவர் ஆகியவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுதரவும், மதசுதந்திரத்தை காக்கவும், கிறிஸ்துவ பள்ளிகளை அங்கீகரித்து அவைகளுக்கு அரசின் முழு உதவிகள் கிடைக்கவும், அம்மாவின் அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம். வளமான ஆட்சி அமைய அம்மாவின் ஆட்சியை வாழ்த்துக்கிறோம். 

அருள்பணி. ச. இ. அருள்சாமி

நற்கருணை நம் வாழ்வின் நடுநாயகம் (ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தரும் அனுபவம்)

நற்கருணை நம் வாழ்வின் நடுநாயகம்
(ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தரும் அனுபவம்)

 அருள்பணி. ரா. ரஞ்சித் குமார்,

நற்கருணை இயேசுவில் அன்பிற்குரியவர்களே!

நற்கருணை வழியாக நம் வாழ்வில் தம்முடைய விலை மதிக்க முடியாத “இருத்தலால்” நம்மீது கொண்டிருக்கும் பற்றையும், பாசத்தையும் கிறிஸ்து வெளிபடுத்துகிறார். அவரது உடனிருப்பு நமக்கு மகிழ்வையும், மனநிறைவையும் அளிக்கிறது. தனது பிறப்பு வழியாக கடவுள் நம்மோடு இருக்கிறார். தனது இறப்பு (சிலுவை) வழியாக கடவுள் நமக்காக இருக்கிறார். ஆனால் நற்கருணை வழியாக கடவுள் நம்முள் இருக்கின்றார். இதுதான் நற்கருணையின் உடனிருப்பின் உச்சம். ஆகவேதான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகின்றது. நற்கருணை, கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், மையமுமாக இருக்கின்றது. (திருச்சபை எண் ‡ 11). மற்ற திருவருட்சாதனங்கள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில்தான் இறைவன் அருள்  பொழிகின்றது. ஆனால் நற்கருணை என்னும் திருவருட்சாதனம் மட்டுமே, எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும், தனது ஊற்றில் இருந்து அருள் பொழியும் தன்மையுள்ளது - என்று திரிதெந்தின் சங்கம் 1551 கூறுகின்றது.

நற்கருணை நாதர், மேலெழுந்த வாரியான அழைப்பு விடுத்துவிட்டு அகன்று நிற்பதில்லை. ஏனையோரைப் போன்று அல்லாது உரிமையோடு, உவகையோடு உளமாற ஏற்று நம்மோடு உறவுகொண்டு நம்மை நற்கருணை மைய வாழ்வு வாழ அழைக்கின்றார்.

ஐந்து அப்பம், இரண்டு மீன் :

யோவான் நற்செய்தி 6 : 1- 15 என்ற இறைவசனங்களில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றோம். தம்மைத் தேடி வந்த மக்களின் பசியை ஆற்ற ஒரு சிறுவனிடம் இருந்து பெற்ற, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். இந்த நற்செய்திப் பகுதியில் பார்க்கின்ற, அப்பம் பலுக செய்யும் நிகழ்வு, நற்கருணை திருவிருந்தின் ஒரு முன்சுவை எனலாம். இந்த ஐந்து அப்பங்கள் வழியாகவும், இரண்டு மீன்கள் வழியாகவும், ஐந்து வகை நற்கருணை மைய வாழ்விற்கான பயிற்சிகளையும்,  இரண்டு மீன்கள் வழியாக இரண்டு வகை நற்கருணை மைய வாழ்விற்கான அழைப்பையும் ஆண்டவர் இயேசு நமக்கு விடுக்கின்றார் என்று பொருள் விரித்துக் காணலாம்.

நற்கருணை தரும் பயிற்சி :

இயேசுவின் இலட்சிய வாழ்வில் பின்வரும் பரிமானங்களை நற்கருணையில் நாம் நினைவு கூர்கின்றோம். இந்தப் பரிமாண படிநிலைகளை நமதாக்க இக்கருத்துகளை விரிவாக்குகின்றேன் ...

முதல் அப்பம் : பற்றுறுதிமிக்க வாழ்வு :

இறைவன் மனிதரோடு செய்து கொண்ட உடன்படிக்கை இயேசுவின் வழியாக நிறைவேறியது. இயேசுவின் புதிய உடன்படிக்கை பழைய சீனாய் மலை உடன்படிக்கையின் அடிப்படைகளையே மீண்டும் வலியுறுத்தியது. இஸ்ராயேல் மக்கள் இறைவனோடு ஏற்படுத்திக் கொண்ட வாக்குறுதிகளை மறந்து, ஏழைகளையும், அடிமைகளையும் கவனிக்காத ஆதிக்க சக்திகளாக உருபெற்று, பணம், பதவி, அதிகாரம், ஆடம்பரம் போன்ற சிலைகளை வணங்கி, உடன்படிக்கையின் இறைவனையும் மறந்து தங்களின் பற்றுறுதியில் பலமிழந்தார்கள்.

இந்நிலையில்தான் புதிய உடன்படிக்கையின் சின்னமாக இயேசு வருகிறார். புரட்சிகரமாக வரலாற்று மாற்றத்தையும், ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், சிறைபட்டோருக்கும் விடுதலை கீதத்தை முழக்கமிடவும், (லூக் 4 : 18 ‡ 19) இயேசு தன் பணிவாழ்வை அர்ப்பணிக்கின்றார். அவர் வழி வாழ அழைக்கப்பட்டோர் அனைவரையும் இந்தப் புதிய உடன்படிக்கையில் பற்றுறுதிமிக்க சீடராக வாழ அழைக்கின்றார். ஆகவே ஒவ்வொரு நற்கருணை கொண்டாட்டத்திலும் இயேசுவின் உண்மையான, பற்றுறுதிமிக்க வாழ்வுக்கான அழைப்பு நினைவு கூறப்பட்டு, நிகழ்வாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆண்டவர் இயேசு இறுதிவரை தந்தையின் திருவுளப்படி வாழ்ந்து, தனக்கும் தந்தைக்கும் உள்ள பற்றுறுதிமிக்க வாழ்வை மெய்ப்பித்தார் (யோவான் 4 : 34). ‘தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே என் உணவு’ என்று கூறுவதன் மூலம் தந்தையோடு இருந்த பற்றுறுதிமிக்க வாழ்வின் ஆழத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

இரண்டாம் அப்பம் : பந்தியமரும் வாழ்வு :

மற்றவர்களுக்கு விருந்து அளித்தலும், பிறர்தரும் விருந்தில் பங்கேற்பதும் மிகுந்த ஆழமான உறவின் வெளிப்பாடாகும். இதைத்தான் நமது கலாச்சாரங்களில் பார்க்கின்றோம். திருமண காரியங்கள் குறித்து பேச பெண் வீட்டிற்குச் செல்லும்போது இறுதியில் கை நனைத்து செல்லுங்கள் என்பார்கள். காரணம் விருந்தில் பங்கேற்று செல்வதன் மூலம் அந்த  இரு குடும்பங்களுக்கும் இடையே புதிய உறவு மலர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. அதுபோல ... இறைவனும் தன் மக்களோடு தனக்கிருக்கும் உறவின் நெருக்கத்தைதான் அளிக்கவிருக்கும் விருந்தின் வடிவில் வெளிபடுத்துகின்றார்.

பழைய ஏற்பாட்டில் கூட இதை நாம் காண முடிகிறது (எசாயா 25 : 6 - 7). ‘படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார், அதில் சுவைமிக்கப் பண்டங்களும், பழரச பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்’ என்று புதிய வாழ்வை குறித்து வாக்களிக்கும்போது விருந்தை அடையாளப்படுத்துகின்றார்.

இதே போல புதிய ஏற்பாட்டில் பார்க்கின்ற போது இயேசு பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் விருந்து உண்டு மகிழ்வதன் வழியாக, புதிய வாழ்வை வாக்களிக்கின்றார். மேலும் திருப்பாடல் 23 : 5இல் “என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்” என்ற பகுதி எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட புதிய விடுதலை வாழ்வை மையப்படுத்துவதாக அமைகின்றது.

மூன்றாவது அப்பம் : பணிபுரியும் வாழ்வு :

நற்கருணை, இயேசுவின் பணி வாழ்வை நினைவு கூர்கின்றது. இயேசு இறைமகனாக இருந்தும் தம்மையே வெறுமையாக்கி, பணிபுரியும் அடிமையாக, மனிதர்களின் இன்ப துன்பத்தில் பங்கேற்கும் மனித பிறப்பாக உருவெடுத்தார். தன்னை முழுவதும் பணிவாழ்வுக்காக கையளித்து “பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே வந்தேன்” என்று கூறி இதுவே என்னைப் பின்பற்றும் சீடர்களின் தனித் தன்மை என்பதை “நான் செய்தது போலவே நீங்களும் ஒருவர் மற்றவர்களுக்குப் பணிபுரிந்து வாழுங்கள்” (யோவா 13 : 14 ‡ 16) என்ற அன்புக் கட்டளையை விடுத்தார். தான் இறைமகன் என்று அறிந்தும் 30 ஆண்டுகள் தச்சுப்பட்டறையில் பணியாற்றினார். ஒவ்வொரு நற்கருணை பலியும் இயேசுவின் பணிவாழ்வை ஆணித்தரமாக அறிக்கையிடுகின்றது. எனவே, இயேசுவின் பணிவுடைமையையும், பணியாளராகிய பாங்கையும் நினைவு கூறாமல் நற்கருணையைக் கொண்டாட இயலாது. எனவே, நற்கருணை, உறவை வளர்க்கும் விருந்து என்ற கருத்தை இங்கு நினைவு கூறலாம்.

நான்காவது அப்பம் : பகிர்ந்தளிக்கும் வாழ்வு :

நேரம், காலம் பாராமல் உழைத்த இயேசுவின் வாழ்வு, ஒரு பகிர்வின் வாழ்வாகும். நற்கருணை வழியாக தன்னைப் பகிர்ந்தளிக்கிறார். நற்கருணை என்பது இயேசுவின் அளவு கடந்த பகிர்வின் வெளிப்பாடு. மேலும் தன்னை முழுவதுமாக வெறுமையாக்கி கொண்டதின் அடையாளம். (லுeஐலிவிஷ்வி). புனித அகுஸ்தினார் கூறுவார்,  “றூலிd உழிஐ’மி eதுஸ்ரீமிதீ ஜுஷ்துவிeயிக்ஷூ லிஸer ழிஐd ழிணுலிஸe. சிஐஉஜுழிrஷ்விமி ஷ்வி மிஜுe ஜுஷ்ஆஜுeவிமி க்ஷூலிrது லிக்ஷூ சிதுஸ்ரீமிஷ்ஐeவிவி லிக்ஷூ றூலிd”, என்று அதாவது ‘நற்கருணையில் தன்னை வெறுமையாக்கியதைவிட வேறு சிறந்த ஒன்றை கடவுளால் கொடுக்க இயலாது. காரணம் நற்கருணையில் தன்னை வெறுமையாக்கியது, இயேசு தன்னை வெறுமையாக்கியதன் உச்சக்கட்டம்’.

உலகில் ஏற்றத் தாழ்வு நீங்கி, பஞ்சம், பட்டினி, பற்றாக்குறை போன்ற தீய சக்திகள் அகற்றப்பட வேண்டுமானால் பகிர்வு இன்றியமையாதது என்பதை ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு (யோவா 6 : 1 ‡ 13) நமக்கு நினைவூட்டுகிறது. இந்தப் பகிர்ந்தளிக்கும் உள்ளத்தோடு இயேசு அப்பத்தைப் பிட்டு பகிர்ந்தளித்தார். தன் உடலைப்பிட்டு பகிர்ந்தளித்தார். இயேசுவின் பெயரால் ஒன்று கூடிய ஆதிக்கிறிஸ்தவர்கள் இப்பகிர்தலின் மேன்மையை வாழ்வாக்கினார்கள். ஆகவே ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டமும் பகிர்வின் கொண்டாட்டம் என்பதை உணர்ந்து பகிர்ந்தளிக்கும் வாழ்வுக்கு அழைக்கப்படுகிறோம்.

ஐந்தாவது அப்பம் : பலியாகும் வாழ்வு :

இயேசுவின் மனுவுருவான வாழ்வு ஒரு தியாக வாழ்வு, தன்னை இழத்தலும், சிலுவை சுமத்தலும், கல்வாரியில் தியாகப் பலியாக தன் உயிரையே தருதலும் இல்லாமல் சீடத்துவ வாழ்வு இல்லை என்பதை வாழ்ந்து காட்டிய தியாக வாழ்வு. எந்த ஒர் உறவும் முன்வந்து செய்யாத தியாக பலியை இயேசு மனுகுலத்தின் மீது வைத்திருந்த அன்பால் செய்தார். இதன் வெளிப்பாடுதான் ஒவ்வொரு நற்கருணை பலியும், பிரசன்னமும், பலியாக்கும் வாழ்வு இல்லாமல் நற்கருணை கொண்டாட்டம் இல்லை. “வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” என்று கூறிய புனித பவுலடிகளாரைப் போலவும், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்காக தண்டனை தீர்ப்புக்கு கையளிக்கபட்டபோது “வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன், இறந்தால் கிறிஸ்துவோடு வாழ்வேன்” என்று கூறிய சவுதி அரேபியாவை சேர்ந்த முகமது போலவும், கிறிஸ்துவுக்காக பலியாகும் வாழ்வு வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

அழைப்பு :
இதுவரை நற்கருணை மைய வாழ்வின் பொருளை ஐந்து அப்பங்களை அடையாளமாக வைத்து பார்த்தோம். அடுத்து இரண்டு மீன்கள் வழியாக நற்கருணையின் பொருள் காண சுருக்கமாக முயலுவோம்.

முதல் மீன் : அவராக மாற அழைப்பு :

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலிப்பியர் 2 : 5).

இரண்டாம் மீன் : அவராக வாழ அழைப்பு :

இதை என் நினைவாகச் செய்யுங்கள் (லூக் 22 ‡ 19).
பிறரன்பு பணியில் வளர ...
பிறர் துன்பத்தில் தோள் கொடுக்க ...
சாதியம் தாண்டிய சமத்துவ வாழ்வு வாழ ...
நற்கருணை இறைவனின் உடனிருப்பின் ஒப்பற்றக் கொடை.
அதனை வாழ்ந்து மகிழ்வோம்.  

பணிவு என்னும் இனிய பாதை 2. பணிவும் செபமும்

பணிவு என்னும் இனிய பாதை
2. பணிவும் செபமும்

அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.


நம் அன்றாட வாழ்வில் நமக்கு எவ்வளவு பணிவும், தாழ்ச்சியும் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வதற்கு ஓர்   எளிய வழி இருக்கிறது. தினமும் நாம் எவ்வளவு நேரம் செபம் செய்கிறோம் என்பதுதான் அது. நாம் செபம் செய்யும்போது    நம் இயலாமையையும், இறைவனைச் சார்ந்து வாழ்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறோம். எனவே, அதிக  நேரம் நாம் செபிப்பதற்கு ஒதுக்கினால் அதிக பணிவு நம்மிடம் உள்ளது என்று அர்த்தம். ஆனால், செபம் செய்வது அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. செபத்திற்கு இலக்கணம் வகுத்த புனிதர்கள்கூட தங்கள் வாழ்வில் ஒரு சில நேரங்களில் இறைநம்பிக்கையைக் கடைப்பிடிப்பதும், இறைவனிடம் வேண்டுவதும் கடினமாக இருந்ததாக சொல்கிறார்கள். செபம் செய்ய கற்றுக் கொள்வதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. அதுதான் தினமும் செபிப்பது. செபிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவது. தினமும் செபிக்காமல் நம்மால் செபிக்கக் கற்றுக் கொள்ள முடியாது.

வயலின் வாசிப்பதில் வல்லவர் அவர். அவரைப் போல யாராலும் வயலின் வாசிக்க முடியாது. ஒருமுறை அவரை    பேட்டி எடுத்த ஒரு நிருபர், பயிற்சி இல்லாமல் உங்களால் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? என்று கேட்டார். அவர் சொன்னார்,  ஒரு நாள் நான் பயிற்சியை நிறுத்தினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. என்னால் மட்டும்தான் நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லமுடியும். ஒரு வாரம் நான் பயிற்சியை நிறுத்தினால் ஒரு பத்துப்பேராவது அதைக் கண்டுபிடித்து விடுவர். ஒரு மாதம் நிறுத்தினால் மக்கள் அனைவருமே நான் என் அளவிற்கு வயலின் வாசிக்கவில்லை என்பதைச் சொல்லி விடுவார்கள்.

ஒரு பறவைக்கு சிறகுகள் எவ்வளவு முக்கியமோ, ஒரு படகுக்கு துடுப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே ஓர் ஆன்மாவிற்கு செபம் முக்கியம். மனம் உடைந்த நிலையில் நாம் இருந்தால் அதனை சரியாக்குவதற்கு உடைந்த துணுக்குகளை கடவுளிடம் தருவதே சிறந்த வழியாகும். சரி, செபத்தைப்பற்றி 5 கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

1. நாம் செபிக்கும்போது கடவுள் அதனை அளித்தால் நம் விசுவாசம் அதிகமாகும். நாம் செபிக்கும்போது அதனைத் தருவதற்கு கடவுள் காலம் கடத்தினால் நம் பொறுமை அதிகமாகும். நாம் செபிக்கும் போது கடவுள் அதனை அளிக்கவில்லை என்றால், அதைவிட சிறந்ததொன்றை கடவுள் நமக்குத் தயார் செய்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்.

2. நாம் நமக்காக செபிப்பதோடு நின்றுவிடாமல் பிறருக்காகவும் செபிப்போம். நாம் மகிழ்வோடும், நிறைவோடும் இருக்கிறோமா? நினைவில் கொள்வோம். நமக்காக வேறு யாரோ செபிக்கிறார்கள்!

3. நம் தேவைகளைமட்டும் முன்னிறுத்தி செபிப்பதோடு நின்றுவிடாமல், நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கும் நன்றி கூறுவோம். ஆண்டவர் இயேசு, திரும்பி வராத தொழுநோயாளர்களை குறித்து, “மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்று கேட்டார்.

4. நம் இன்ப, துன்பங்களை இறைவனிடம் பகிர்ந்து கொள்வது ஒரு சிறந்த செபம். ஒருமுறை ஒரு குழந்தையிடம், “நீ என்னசெபம் செய்வாய்?” என்று கேட்டார்கள். அப்போது அந்தக் குழந்தை கூறியது,  ‘கடவுள் என் நண்பர். பொதுவாக நண்பர்கள் சேர்ந்தால் என்ன செய்வார்கள்? அந்த நாள் எப்படி இருந்தது  என்று பகிர்ந்து கொள்வார்கள். நானும் இறைவனிடத்தில் என் இன்ப, துன்பங்களை சொல்வேன்’ என்றது. 

5. புனித லெயோலா இஞ்ஞாசியார், புனித  பிரான்சிஸ் அசிசியார், புனித அவிலா தெரசாள் போன்றவர் செய்த சிறந்த செபத்தை சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?  அவர்கள் தினமும் கடவுளிடத்தில் , “கடவுளே நான் இன்று என்னசெய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கேட்பார்களாம்.                                                                                             
(தொடரும்)

புதுமையான தாய்மை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை
புதுமையான தாய்மை

புலவர் இ. அந்தோணி, ஆசிரியர் (ஓய்வு)

ஆண்டவனின் ஒப்பற்ற புதுமைப் படைப்பு தாய்மை இதயம். ஒரு பெண் பிள்ளையை பெறும்போது இயல்பாக உதயமாகும் பேராறு அது. எனவேதான் அன்னையை புகழாத அறிஞர்கள் இல்லை, கவிஞர்கள் இல்லை. ‘அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் கவிதை’ என்கிறது ஒரு புதுக்கவிதை. ‘அம்மாவுக்கு என்று தனியாக கவிதை வேண்டாம். அன்பாக பழகிப்பார், அம்மாவே கவிதைதான்’ என்கிறது மற்றொரு கவிதை. பட்டினத்தார் என்ற சித்தர், இல்லாமையைப் பற்றி பாடுகிறவர் அவர் தன் தாயின் பிரிவை உள்ளுருகிப் பாடுகிறார். ‘பட்டியிலும், தொட்டியிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து ‡ முட்டச் சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ மூட்டுவேன்?’

விவாகரத்து பெற்று விட்ட அன்னையர், பெறும் பெரிய மன உளைச்சல், பெற்ற தன் பிள்ளையை பிரிந்து வாழ்கின்ற கொடுமைதான். எனவேதான், மேல்நாடுகளில், விவாகரத்து பெருகிவிட்ட நிலையில், அன்னையர் பெரும்பாலும் பெரிய மன நோய்களுக்கு உள்ளாகிறார்கள். வெள்ளமாக ஓடிவரும் தாய்பாசத்தை கணவன் - மனைவி பிரிவு என்ற வி­த்தால் உருவமற்றதாக மாற்றி விடுகிறார்கள். பாரதிதாசன் அவர்களும் தாயின் அன்பை உருக்கமுடன் பாடுகிறார்.

ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
ஒருக்கணித்து மார்பணைத்து மேனியயல்லாம்
கைபுறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்
கண் மறைக்கும் கரிகுழலை மேலொ துக்கி
மலர் வாயால் குளிர் தமிழால் கண்ணே
என்று செப்பி முத்தமிட்டாளே
அன்புள்ளாளின் செந்தாமரை
முகத்தை மறப்பேனோ நான்
என்கிறார்.

அன்னையின் பாசம் காயப்படுத்தப்படும் காலமும் உண்டு. பிள்ளைகள் வளர்ந்த பின்பும், அவர்கள் தனி குடும்பமாக மாறிய பின்பும், தாயின் அன்பு மாறுவதில்லை. முதியவர் இல்லத்தில் தாய் தள்ளப்படும்போதும், பெற்ற பிள்ளைகள், வளர்ந்த வயதில் தன்னை கண்டுக்கொள்ளாத போதும், அன்னையரின் பாசம் காயப்படுத்தப்படுகிறது. பிள்ளைகளை வளர்த்து, அவர்களைத் தனித்துவிட்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதுதான் சிறப்பு. தாயிடம் ஏன் இத்தகைய அன்பு ஏற்படுகிறது என்று கேட்டால், அது தொப்புள் கொடி உறவு. தாயின் இரத்தம்தான் பிள்ளையிடம் முதலில் ஓடியது. அதனின் வளர்ச்சிதான் இப்போது இருப்பது. சனோபர்கான் என்பவர் கூறுகிறார். ‘என் அன்னை ஒளிதரும் கதிரவன். அந்த சூரியனை, நான், தீய்ந்துபோகாமல் தொட முடியும், முத்தமிட முடியும்’ என்கிறார். கபியாரினிமனா என்பவர் கூறுகிறார் ‘அன்னையின் இதயத்தைப் போன்ற விண்ணகம் ஒன்று இல்லை’ என்கிறார். ஓர் அன்னையிடமிருந்து பிறந்தவர்தாம் நாம் அனைவரும். வானத்திலிருந்து நேரடியாக குதித்தவர்கள் அல்ல. நம் அன்னையை வணங்குவோம், அன்பு வழியும் அன்னையின் இதயத்தை போல், நம் உள்ளங்களையும் அன்பாலும், தியாகத்தாலும் நிரப்புவோம்.

திருப்பலி விளக்கம், 5. திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும், Sanctuary

திருப்பலி விளக்கம்
5. திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
Sanctuary
- அருள்பணி. எஸ்.அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

முன்னுரை 
நற்கருணைக் கொண்டாட்டத்திற்காக இறைமக்கள் பொதுவாக கோவிலில் கூடுவார்கள்; கோவில்கள் இல்லாதபோது அல்லது அது மிகச் சிறியதாக இருக்கும்போது, மாண்பு மிகுந்த இம்மறை நிகழ்ச்சிக்குத் தகுதியான வேறொரு மதிப்புக்குரிய இடத்தில் கூடி நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம் (காண் பொது பாடம் எண் 288). நற்கருணைப் பலியைக் கொண்டாடும் கோவிலில் திருப்பீட முற்றம் (Sanctuary) முக்கிய இடம் வகிக்கிறது. எனவே இத்திருப்பீட முற்றத்தின் அமைப்புப் பற்றி ஈண்டு விளக்கம் காண்போம்.

1. திருப்பீட முற்றம் (Sanctuary) :

திருப்பீட முற்றம் கோவிலில் மக்கள் அமரும் இடத்தைவிடச் சிறிது உயர்ந்திருக்கும். அது தனிப்பட்ட வடிவமைப்புடன் அழகு செய்யப்பட்டு மற்ற இடத்தில் இருந்து வேறுபட்டிருக்கும். நற்கருணைக் கொண்டாட்டம் வசதியாக நடைபெறுவதற்கும், மக்கள் பார்ப்பதற்கும் ஏதுவாகப் பெரிதாக அமைந்திருக்கலாம் (காண்  inter oecumenici 26  செப்டம்பர்1964,no.91).).

இந்த திருப்பீட முற்றத்தில் முக்கியமாக அமைக்கப்பட வேண்டியவை திருப்பீடம், வாசக மேடை, திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர்(கள்), இருக்கை(கள்) ஆகியவையாகும்.

2. பலிபீடம் (Altar) :

கோவிலில் அமைக்கப்படும் பலிபீடம் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதே சமயம் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து வெகுதூரத்திலும், அவர்கள் அணுகமுடியாத விதத்திலும் அமைக்கப்பட கூடாது.

பீடம் ஆண்டவரின் திருவிருந்து மேசையும், தம்மை அடையாளங்கள் வழியாகப் பலியாக ஒப்புக்கொடுக்கும் பலிபீடமும் ஆகும். இறைமகன் இயேசுகிறிஸ்து அடையாளங்கள் வழியாக இதில் தம்மை பலியாக்குவதால், தகுதிக்கேற்றாற்போல் திருப்பீடம் என்று அழைக்கப்படுகிறது. இதை விவரிக்கும் உரோமை திருநூலின் பொது பாடம் பின்வருமாறு குறிப்பிடுகிறது :    
       
“பீடத்தின்மீது அடையாளக்குறிகள் வழியாகச் சிலுவைப்பலி நிறைவேற்றப்படுகின்றது; பீடம் ஆண்டவரின் திருவிருந்து மேசையும் ஆகும். திருப்பலியில் பங்கேற்க இறைமக்கள் இந்த மேசையைச் சுற்றி ஒன்றுகூட்டப்படுகிறார்கள்; மேலும் நற்கருணை வழியாக நிகழும் நன்றியறிதலின் மையமாகவும் அது அமைகிறது” (எண் 296).ஒவ்வொரு கோவிலிலும் பலிபீடம் அசையா பீடமாக இருப்பது நல்லது. ஏனெனில் அது உயிருள்ள கல்லாகிய (1 பேது 2 : 4; காண்க எபே 2 : 20) இயேசு கிறிஸ்துவை மிகத் தெளிவாகவும், நிரந்தரமாகவும் குறிக்கின்றது. இந்த அசையா பீடத்தின் மேல் பாலம் (Slab) இயற்கைக் கல்லால் ஆனதாக இருக்க வேண்டும். பீடத்தின் தூண்களும், அவற்றின் ஆதாரங்களும் தகுதியும், உறுதியும் உள்ள எவ்வகைப் பொருளாலும் அமைக்கப்படலாம். இந்த அசையா பீடம் நேர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்  (consecrated). .இந்தப் பீடம் பலி செலுத்தப்பட வேண்டிய இடமாக இருப்பதால், இது அளவுக்கு மிஞ்சி அலங்கரிக்கப்பட்டிராமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புனிதர்களின் திருப்பண்டங்களை (Relics) நேர்ந்தளிக்கப் பெறும் பீடத்திற்கு அடியில் வைக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெறும்; அப்பண்டங்கள் மறைச்சாட்சியருடையனவாய் இல்லாவிட்டாலும்கூட அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். உண்மையாகவே புனிதர்களுடையனவாய் இருப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.

அசையா பீடம் அமைக்க முடியாத கோவில்களில், அசையும், அதாவது வேறொரு இடத்திற்கு நகர்த்தக்கூடிய பீடத்தைப் பயன்படுத்தலாம். இதைப் புனிதப்படுத்தினால் மட்டும் போதும் (Simple Blessing).

இது பலிபீடமாகையால் காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பது முதல் நற்கருணையை உட்கொள்ளும் வரையுள்ள திருநிகழ்ச்சிகள் மட்டும் இதில் நடைபெற வேண்டும். தொடக்கச் சடங்குகளும், திருப்பலியை முடித்து வைக்கும் இறுதி சடங்குகளும், பலி பீடத்தில் நிகழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும். இது மறையுரை ஆற்றும் இடமும் அல்ல.

பீடத்தின் மீது பீடத்துகிலும், திருமேனித் துகிலும் மெழுகுதிரிகளும் வைக்கப்பட வேண்டும். பலி பீடத்திற்குப் பின்பகுதி சுவரில் பெரிய பாடுபட்ட சிலுவை இல்லையயனில், சிறிய பாடுபட்ட சிலுவையை பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

திருப்பலியில் பங்குபெற குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்கள் பலிபீடத்தில் இருப்பனவற்றையும், நிகழ்வனவற்றையும் எளிதில் பார்க்கத் தடை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே எவையயல்லாம் இதற்கு இடையூறாக இருக்கின்றனவோ ‡ எடுத்துக்காட்டாக மலர் ஜாடிகள், மெழுகுதிரி தண்டுகள், போன்றவை ‡ அவற்றையயல்லாம் பலிபீடத்திற்கு வெளியே அதன் வலது, இடது புறங்களில் வைக்க வேண்டும்.வெளியே அதன் வலது, இடது புறங்களில் வைக்க வேண்டும்.

3. வாசக மேடை (Lectern) :

திருப்பலி பீடத்திற்குக் கொடுக்கப்படும் கவனமும், முக்கியத்துவமும் வாசக மேடைக்கும் கொடுக்கப்படுகிறது. இறைவார்த்தையின் மாண்புக்கு ஏற்ப அதைப் பறைசாற்ற பொருத்தமான இடம் திருப்பீடமுற்றத்தில் அமைய வேண்டும். வார்த்தை வழிபாட்டின்போது நம்பிக்கையாளரின் கவனத்தை இயல்பாகவே ஈர்க்கும் வண்ணம் வாசக மேடை அமைய வேண்டும்.

பீடத்தின் வலப்புறம் சற்றுமுன் தள்ளி வாசக மேடையை அமைப்பது நல்லது. புதிதாக கோவில் கட்டி திருப்பீட முற்றத்தை அமைக்கும் போது வாசக மேடையின் இடம் மிக கவனத்தோடு தேர்வு செய்யப்பட வேண்டும். வாசக மேடைக்கு ஏற்ற இடத்தைத் தேர்வு செய்யும்போது கட்டிட கலைஞரோடு, திருவழிபாட்டு வல்லுநருடைய ஈடுபாடும் இருந்தால் அமைப்பு சரியானதாக இருக்கும்.

திருப்பீடம் எவ்வாறு அசையாததாக இருக்க வேண்டுமோ, அதே போல் வாசக மேடையும் அசையாததாக இருக்க வேண்டும். அது இடம் பெயரக் கூடிய புத்தகத்தாங்கி மட்டும் அல்ல. இது அமைக்கப்படுகிற இடம் நம்பிக்கையாளர் எளிதாகப் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

வாசக மேடையிலிருந்து மட்டும் வாசகங்களும், பதிலுரைத் திருப்பாடலும், பாஸ்கா அறிக்கையும் பறைசாற்றப்படும். இங்கிருந்தே மறையுரை ஆற்றப்படும். பொது மன்றாட்டின் கருத்துக்கள் அறிவிக்கப்படும். வாசக பணியாளர் மட்டும் வாசக மேடையில் ஏறுவது அதன் மாண்பை நிலைநிறுத்தும் (காண் பொது பாடம் எண் 309).

இந்த வாசக மேடையைப் பயன்படுத்துமுன் உரோமைத் திருச்சடங்கு நூலில் விவரித்துள்ளபடி புனிதப்படுத்துதல் ஏற்புடையதாகும்.

4. அருள்பணியாளர் இருக்கை (President Chair) :

இந்த இருக்கை திருப்பலியைக் கொண்டாடும் அருள்பணியாளரின் தலைமைத்துவத்தை உணர்த்துவதாக அமைக்கப்பட வேண்டும் என்றாலும் இது ஓர் அரச சிம்மாசனத்தைப் போல் தோற்றம் அளிக்கக்கூடாது. தர்பார் இருக்கையை பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த இருக்கை பலிபீடத்திற்குப் பின்னால், நற்கருணை பேழைக்கு முன் நடுவில் அமையலாம். இதுவே மிகப் பொருத்தமான இடம். அதே சமயம் இங்கிருந்து செயல்படும் தலைமை அருள்பணியாளரை மக்கள் எளிதில் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்; அருள்பணியாளருக்கும், மக்கள் குழுமத்திற்கும் இடையே உள்ளத் தொடர்புக்கு இடையூறாக உள்ள அதிக தூரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைக்க முடியாத கோவில்களில் இந்த இருக்கை பீடத்தின் இடது புறம் சிறிது பீடத்திற்கு முன்பாக அமைக்கப்படலாம். இவ்வாறு இருக்கை அமைக்கப்பட்டால் இது வாசக மேடைக்கு இணையயாத்த முறையில் (ஸ்ரீழிrழியியிeயி) அமையும். இந்த இருக்கையிலிருந்துதான் திருப்பலியின் தொடக்கச் சடங்கும், முடிவு சடங்கும் இடம் பெற வேண்டும்.

கூட்டுத்திருப்பலி அருள்பணியாளர்களுக்கு திருப்பீட முற்றத்திலேயே பீடத்தின் வலது, இடது புறங்களில் இருக்கைகள் அமைக்க வேண்டும். போதிய இடம் இல்லையயன்றால் பீடமுற்றத்திற்கு வெளியேயும் இவ்விருக்கைகளை அமைக்கலாம். ஆனால் கூட்டுத்திருப்பலியின் அருள்பணியாளர்களுடைய இருக்கைகள் மற்ற நம்பிக்கையாளர்களின் இருக்கைகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

5. அறிக்கை மேடை :

வாசக மேடையில் வாசகப் பணியாளர் மட்டும் ஏறுவது அதன் மாணபை நிலைநிறுத்தும் என மேலே குறிப்பிட்டோம். அப்படியானால், விளக்கவுரையாளர்களின் இடம் எது? திருப்பலி இறுதியில் எங்கிருந்து அருள்பணியாளர் அறிக்கைகளை வாசிப்பார்? போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றி அதிகாரபூர்வமான எந்த அறிவுரையும் இல்லை என்றாலும், திருவழிபாட்டு விளக்கவுரையை பீடத்தின் இடது புறம் மற்றொரு மேடையை அமைத்து அதிலிருந்து வழங்கலாம். இதே மேடையிலிருந்து திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரோ அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட வேறொருவரோ நம்பிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களையும், திருமண அறிக்கையையும் வழங்கலாம். இது சாத்தியமாகாது என்றால் திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளரின் இருக்கையிலிருந்து வழங்கலாம்.

முடிவுரை :

வழிபாடு என்பது ஒரு கொண்டாட்டம். இது அழகுர அமைய வேண்டுமானால் ஒவ்வொரு செயலுக்காக குறிப்பிடப்பட்ட இடத்தை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கொண்டாட்டம் அழகுணர்ச்சி (aesthetic) உடையதாக அமையும். வழிபாட்டின் பயனையும் துய்க்க முடியும். எனவே பங்கு அருள்பணியாளர்கள் வழிபாட்டு கொண்டாட்டத்திற்கான ஒழுங்கு முறைகளை சரிவர கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். இது அவர்களது கடமையாகும்.
தொடரும்

அன்பின் மகிழ்வு AMORIS LAETITIA. The Joy & Love

அன்பின் மகிழ்வு

AMORIS LAETITIA. The Joy & Love

- அருட்பணி. பிரான்சிஸ், பாபநாசம்


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது மடலில் காணப்படும் கல்வியியல் கூறுகள் :

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014 அக்டோபர் 5 முதல் 19 வரையிலும், 2015 அக்டோபர் 4 முதல் 25 வரையிலும் வத்திக்கான் நகரின் குடும்பங்களுக்கான மாமன்றப் பேரவையினைக் கூட்டினார். இப்பேரவையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திருச்சபையின் போதனையினை தொகுத்து மார்ச் 19, 2016 அன்று புதுலிrஷ்வி ஸிழிeமிஷ்மிஷ்ழி என்ற தலைப்பில் திருத்தூது மடலாக வெளியிட்டார்.
இது 325 பத்திகளையும், 9 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இதில் காணும் கல்வியியல் கூறுகளை நாம் தேர்ந்து தெளிவோம்.

1. இறைவார்த்தை ஒளியில் :

இந்தத் திருமடலின் முதல் அதிகாரம் இறைவார்த்தையின் வெளிச்சத்தில் நமது வாழ்வினைச் செம்மைப்படுத்திக் கொண்டோம் என்ற அழைப்போடு தொடங்குகிறது. யூதத் திருமணச் சடங்குகளிலும், கிறிஸ்தவத் திருமண வழிபாடுகளிலும் மக்கள் பயன்படுத்துவது திருப்பாடல் 128. ‘ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும், நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உமது பிள்ளைகளின் வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உமது பிள்ளைகளின் நன்மைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக’ (திருப்பாடல் 128). இல்லற வாழ்வில் அடியயடுத்து வைக்கும் தம்பதியினர் வேண்டி விரும்பி எதிர்ப்பார்க்கும் நற்பேறுகள் இவை தானே!

விவிலிய நூல்களில், பல காதல் கதைகள், பிறப்புக்கள், குடும்ப வரலாறுகள் மற்றும் குடும்ப உறவுகள், சிக்கல்கள் போன்ற எதார்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன (எண் : 8). குடும்பம் என்பது புரிந்து கொள்ளப்படாத புதிர் அல்ல; மாறாக நடைமுறை எதார்த்தமே. தொடக்கம் முதலே, குடும்ப உறவுகள் பாவத்தோடு முரண்பாடு கொண்டதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது (எண் : 19). எனவே இறைவார்த்தை புரிந்து கொள்ளப்பட முடியாத புதிர்களைக் கொண்டதல்ல. மாறாக இல்லறத்தின் இனிமை மற்றும் தோழமை உணர்வு கொண்டு வாழும் போது ஏற்படும் உரசல்களைச் சுட்டிக்காட்டி, இவ்வுலக  பயணத்தின் இலக்கினைத் தெளிவாக்கும் கலங்கரை விளக்காக இறைவார்த்தை திகழ்கிறது (எண் : 22).

2. குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும் :

விவிலியப் பிண்ணணியில் இன்றைய குடும்ப நிலைகளை அலசி ஆய்கின்ற போது கீழ்க்காணும் சிக்கல்கள் வெளிப்படுகின்றன (எண் : 56).

அ. பாலின சமத்துவமின்மை.

ஆ. கடவுளின் படைப்புத் திறனில் பங்கேற்பதற்கெதிரான சிசுக்கொலை.

இ. மகளிர் மற்றும் சிறார் மீதான வன்முறை.

ஈ. சட்டங்களை சுயநலத்துக்கான ஆதாயமாக்கிக் குடும்பகளைச் சீரழித்தல்.

உ. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோரை இழிவாகக் கருதுதல்.

ஊ. சமூகத்தில் காணும் வல்லுறவு.

குடும்பங்களின் அன்றாட உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மறுத்து ஏற்றுக் கொள்ளாத நிலையில், திருச்சபை இனிய இல்லற வாழ்வினுக்கு வழிகாட்ட இயலாத (எண் : 31). தாண்மை உணர்வு, தன்னல மறுப்புக்கும், தியாக வாழ்வுக்கும் எதிரானது (எண் : 33). இந்நிலையில் தூய ஆவியாரின் ஏவுதலுக்கும் செவி சாய்க்க முடியாது.

3. மனசாட்சியை மையமாகக் கொண்ட கல்வி :

ஒவ்வொரு தனி மனிதருக்கும் இறைவனின் குரலாகத் திகழ்வது அவரது மனசாட்சி. நன்மை, தீமையை பகுத்தாய்ந்து நலமானதைத் தேர்ந்து, செயல்பாட்டுச் சிந்தனையினை உருவாக்குவதே உண்மையான கல்வியின் நோக்கமாகத் திகழ முடியும். வாழ்வுக்கு ஒவ்வாத இறையியல் மற்றும் கருத்துத் திணிப்பு மனசாட்சியைக் குழப்பத்திற்குள்ளாக்கி தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. மனசாட்சி மையக் கல்வி இன்றைய காலத்தின் கட்டாயமாகும் (எண்கள் 36 ‡ 38).

4. குடும்பத்தின் அழைப்பு :

இத்திருத்தூது மடலில் எண்கள் 58 ‡ 88 வரையுள்ள கருத்துக்கள் குடும்பத்தின் மாண்புமிக்க அழைப்பினை வெளிப்படுத்துகின்றன. குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை. இந்தக் குடும்பத்திலிருந்துதான் உத்தமக் குடிமக்கள் உருவாக்கப்படுகின்றார்கள். நலமிக்க சமூகத்தின் வேர்களே குடும்பங்கள். எனவே ஒவ்வொரு குடும்பமும் இயேசுவை உற்றுநோக்கி இறைவார்த்தை என்னும் விதைகளை தமது குடும்பத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகள்தான் பிறசமயங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இலக்கியங்களில் காணும் பலன் அளிக்கும் தன்மை கொண்டவை. இவையே பொறுப்புள்ள, அன்பும் ‡ பண்பும் மிகுந்த, பிறரை மதிக்கின்ற, தியாக உணர்வுள்ள குடிமக்களை உருவாக்கும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

5. திருமணத்தில் அன்பு (89 - 164) :

1 கொரி 13 : 4 - 7ல் பவுல் அடியாரின் அன்பின் பண்பு நலன்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. எதிரும், புதிருமான உளவியல் உணர்வுகள் இளந்தம்பதியினரை காம உணர்வினுக்கும், அதன் இன்பத்திற்கு மட்டுமே இட்டுச் செல்கின்றன. உனக்கு நான், எனக்கு நீ. நீயும், நானும் ஒன்று. ஓருடல், ஈருயிர் என்ற சிந்தனை வளர்ந்து, தன்னலம் மறுத்து, தியாகம் மிகுந்து காணப்படும் குடும்பமே சீரிய செம்மைமிக்க அனைவராலும் மெச்சத்தக்க குடும்பமாகத் திகழும். கிறிஸ்துவும், திருச்சபையும் ஒன்றே. இந்த ஒன்றிப்பு நிலையினை  அனைவராலும் மெச்சத்தக்க குடும்பமாகத் திகழும். கிறிஸ்துவும், திருச்சபையும் ஒன்றே. இந்த ஒன்றிப்பு நிலையினை குறைவுபட்ட மனிதர்களிடம் முழுமையாக எதிர்ப்பார்ப்பது ஏற்புடையதல்ல. அதே வேளையில் இறைவனின் கொடைகளை தம்பதியர் உணர்ந்து இல்லற இன்பமிகு உறவினைப் பகிர்ந்து ஒன்றுபட்டு வாழ்ந்திட முனைதல் சாலச் சிறந்தது (எண் : 123).

வாழ்வு முழுவதும் ஒரே விதமான, மன உணர்வோடு வாழ்வது அரிதான ஒன்றுதான். ஆனால் இல்லற இணைப்பு என்பது அழகு குறைந்தாலும், முதுமை அ டைந்தாலும், கவர்ச்சி மங்கினாலும் என்றுமே இளமை எண்ணம் கொண்டு வாழ்தலே சீர்மிகு தம்பதியரின் சிறப்பான பண்பாகும் (எண் : 163). இன்றைய கல்வி மேற்காணும் பண்புகளை பிஞ்சு மனங்களில் விதைக்கக் கூடியதாகத் திகழ்ந்திடல் வேண்டும்.

6. பயன் விளைவிக்கும் அன்பு (எண்கள் : 165 - 198) :

ஐந்தாம் அதிகாரம் அன்பின் கனிகள் மற்றும் குழந்தைப் பேறு பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறது. புதிய வாழ்வினை வரவேற்கும் இளம்தம்பதியர் மக்கட்பேற்றினை அடைந்து, தாய், தந்தை என்னும் நிலையினை அடைகின்றபோது இவர்கள் ஆன்மீக மற்றும் உளவியல் முதிர்ச்சி பெறுகின்றனர்.  குழந்தைப் பேற்றுக்குப்பின் மாமன் ‡ அத்தை , சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, நண்பர்கள் போன்ற புதிய உறவுகள் முளைவிட்டுத் துளிர்க்கின்றன. திருமண அருட்சாதனம் இளையோர், முதியோர், சகோதர, சகோதரிகள் மற்றும் பிறருடனான உறவுகளை உறுதிப்படுத்தும் சமூகப் பணிபினையும் வளர்க்கின்றது.
                                  - தொடரும்.

வெற்றி உங்கள் கையில் ...

வெற்றி உங்கள் கையில் ... 

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

ஒரு குழந்தை பிறக்கும்போது அந்த வீடு மகிழ்ச்சியால் நிரம்பும். குடும்பத்தினர் அனைவரும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொஞ்சுவர். அந்தக் குழந்தையை தரையில் விடாமல் பார்த்துக் கொள்வர். இரண்டு அல்லது மூன்று வயதுவரை பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். ஆனால், ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.ஒட்டகச்சிவிங்கி நின்றுகொண்டு குட்டிபோடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிபட்டுக் கொண்டுதான் தன் வாழ்க்கையை துவங்குகிறது. நம்மைவிட உயரமான இடத்திலிருந்து ஒரு குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவரையிலிருந்து வெளிவரும்போதே கீழே விழந்து அடிபடுவதை யோசித்துப் பாருங்கள். இதைவிட கொடுமையான வி­யம் என்னவென்றால், தாய் ஒட்டகச்சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்டகால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும். வலியோடு தடுமாறி அது எழுந்துநிற்க முயற்சி செய்யும். ஆனாலும், மீண்டும் தடுமாறி கீழே விழந்துவிடும். மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச்சிவிங்கியின் மாமிசம்மீது அலாதி பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய், தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத் தருகிறது. ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச்சிவிங்கி எழுந்து நடந்துவிடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர்வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக் கொண்டு போராட வேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக் கொடுக்கிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி கீழே விழுந்ததால் ஏற்பட்ட வலி தீரும்வரை ஓய்வெடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால், அதன் தாய், வலியைத் தாண்டி வெற்றியைப் பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கையைக் கற்பதற்கு உதவி செய்கிறது. தற்காலத்தில் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும், ஆசிரியர்கள் அளிக்கும் வழிகாட்டுதலையும் துன்பமாக நினைத்து ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். சிலசவால்களை சந்திக்க பயந்து தோல்விகளை கண்டு துவண்டு தற்கொலையும் செய்துக் கொள்கிறார்கள். முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற செய்துவிட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் தோல்வியடையும் போது, வலிகளை தாங்க மறுக்கிறார்கள். அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற கல்வித்திட்டம், பல மாணவ, மாணவியர்களுக்கு சவால்களை சந்திக்க தடை போடுகிறது. மேலும் வலிகளை தாங்க தயங்குகிறது என்பதை கல்வியாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். நவீன உலகில் படித்து முடித்தவுடன் கடினமான சூழ்நிலையை சந்திக்காமல், உடனே உயர்ந்த வேலை கிடைக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும். சந்தோ­மாக வாழவேண்டும் என்ற எண்ணம் பல இளைஞர், இளம்பெண்கள் உள்ளத்தில் உதித்திருக்கிறது. சில சமயங்களில் இலவசமாக பல பொருள்களை பெற்றுக் கொள்ளும் அமைப்பு முறைகள்கூட மக்களின் மனதில் உழைக்கும் எண்ணத்தை விரட்டி விடுகிறது என்று சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே மாணவ ‡ மாணவியர்களே! இளைஞர், இளம்பெண்களே! பெற்றோர், பெரியோர்களே! ஒட்டகச்சிவிங்கியைப் போல வலிகளை ஏற்போம். வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களை கற்றுக் கொள்வோம். வெற்றி வீரர்களாக வலம் வருவோம். 

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

Monday 16 May 2016

குழந்தைக்காக ... (சிறுகதை)

குழந்தைக்காக ... (சிறுகதை)

அது வசதி படைத்த குடும்பம். கணவர் கணிணி அலுவலகத்தில் பணிசெய்கிறார். மாதம் மூன்று லகரம் சம்பளம், மனைவி இரயில்வேயில் வேலை. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். பெரிய மாளிகைப்  போன்ற வீடு. எந்த  குறையும் இல்லை. 

ஆனால் ... 
குழந்தையில்லா பெரிய குறை. திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தைக்காக, மருத்துவர், திருத்தலங்கள் இப்படி 
சந்தித்து விட்டு, குழந்தை ஒன்றை தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்தனர். இப்போது குழந்தைகளை தத்தெடுப்பதும் பெரிய சாதனையாகிவிட்டது. வீட்டிற்கு ஒன்றிரண்டு குழந்தைகள் என கடடுப்பாடாகி விட்டது. பல இடங்களில், பல நிறுவனங்களில், பல குடும்பங்களில் தத்தெடுக்க குழந்தையைத் தேடினார்கள். பயனில்லை, பலநாள்கள் மன உழைச்சலுக்கு ஆளானார்கள். பலநாள்கள் செபித்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

ஒரு குடும்பத்தில் எட்டு பெண் பிள்ளைகள். தகப்பன் இறந்து விட்டான். அதில் ஒரு பிள்ளையை தத்தெடுக்கக் கேட்டார்கள். ‘பிச்சையயடுத்தாவது என்பிள்ளைகளை காப்பாற்றுவேன். பிள்ளைகளை தத்தெடுக்கக் கொடுக்க மாட்டேன்’ என்று மறுத்ததுவிட்டாள் தாய். ‘உங்கள் குடும்பமே என் வீட்டிற்கு வாருங்கள். எங்களோடு வாழுங்கள்’ என்றார்கள் தத்தெடுக்க விரும்பியவர்கள். ‘நீங்கள் வேண்டுமென்றால் எங்களோடு தங்கி வாழுங்கள், எட்டு பிள்ளைகளோடு சேர்ந்து வாழலாம்’ என்றாள்  

அந்தத்தாய். கணவனும், மனைவியும் மாறி மாறி அந்த ஏழை குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். வாழ்ந்தும் பார்த்தனர். வாழ்க்கை எவ்வளவு இனியது என்று புரிந்து கொண்டனர்.

மாதாவின் வணக்கம்

ஆசிரியர் பேனா

ஒருவர் சொற்பொழிவாளர் கூறினார். ஒரு தாயைப் பார்த்து ‘ஏன் உன் பிள்ளைகள் மீது இவ்வளவு அன்பு செய்கிறாய்?’ என்று கேட்டால், ‘அவன் பிற்காலத்தில் எனக்கு பெருமைதரும் விதத்தில் வாழ்வான்’ என்றோ, ‘பிற்காலத்தில் என்னை வைத்து காப்பான்’ என்றோ கூறமாட்டாள். மாறாக, ‘அவன் / அவள் எனது பிள்ளை அதுதான் ஒரே காரணம்’ என்பாள். எனவேதான் பாசம், பற்று, அன்பு ஆகியவை இயல்பாக தாயிடம் எழுந்து வருகிறது. ஒரு புதுக்கவிதையில், ‘வயோதிகர் இல்லத்திலிருந்து, தன் மகனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினாள்’ என்று எழுதியிருந்தார்கள்.

இயேசு உலகில் புதிய ஒளியையும், வழியையும் காண்பித்தவர். அவர் காட்டிய வழி 2000 ஆண்டுகளாக உலகிற்கு வாழ்வு தந்திருக்கிறது. அவரின் தாய் மரியா. இயேசுவை உலகிற்கு தந்தவர். அவரது பணியில் பங்குபெற்றவர். இறைவனின் தனி அருளைப் பெற்றவர். எனவேதான், வானத்தூதர், ‘அருள் மிகப் பெற்றவரே’ என்றும், ‘கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்’ என்றும் மரியாவை வாழ்த்துகிறார் (லூக் 1 : 28, 30). வானதூதர் என்பவர் இறைவனின் மறுபெயர் எனலாம்.

மாதாவின் வணக்கம், திருச்சபை வரலாற்றில் தொடக்கத்திலிருந்தே இடம் பெற்றிருக்கிறது. மாதாவின் திருத்தலங்கள் இறைவனின் அருளை பெற்றுதரும் சாட்சியங்களாக விளங்குகின்றன. கிறிஸ்துவ மதத்தை சாராத மற்ற சமயத்தாரும், மாதாவின் திருத்தலங்களுக்கு திரண்டு செல்வதை பார்க்கிறோம்.

குடந்தை மறைமாவட்டத்தில் 92 பங்குகளில் 34 பங்குகள், மாதாவின் பாதுகாவலில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் 6 பங்குகள் ‘அடைக்கல அன்னை’ பாதுகாவலை பெற்றிருக்கின்றன.

ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னைக்கு பல வரலாறுகள் உண்டு. 1716 முதல் 1739 வரை வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் தங்கி பணியாற்றியிருக்கிறார். ஏலாக்குறிச்சியில் மாதாவின் பெயர் பெரிய நாயகி என்றுதான் இருந்திருக்கிறது. 1739 ஆண்டு மயிலை ஆயரின் உத்தரவு பெற்று அடைக்கல அன்னை என்று வீரமாமுனிவர் மாற்றியிருக்கிறார். அக்காலத்தில் லூத்தரன் சபையினர் திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அச்சூழலில் மாதாவின் துணைவேண்டி அடைக்கலமாதா என்று மாதாவிற்கு பெயர் சூட்டியிருக்கிறார்.

அண்மையில் ஏமனில், நான்கு, அன்னை தெரசா சகோதரிகளைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் இன்றைய மறைசாட்சிகள் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார். அவர்கள் போன்று, திருச்சபை வரலாறு முழுவதும் கோடிக்கணக்கான புனிதர்களும், மறைசாட்சியரும் வாழ்ந்துள்ளனர்.

மாதாவின் வணக்கம், இருவிதங்களில் நமக்குப் பயனளிக்கிறது. ஒன்று மாதாவின் வல்லமையுள்ள பரிந்துரை, இரண்டு, நமக்கு சிறந்த கிறிஸ்துவின் முன்னோடி. மரியா இரக்கத்தின் அரசி என்ற கட்டுரையும், திருச்சபை வரலாற்றில் , மாதாவின் வணக்கம் எப்படி பதிலாயிருக்கிறது என்ற கட்டுரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. மாதா வணக்கத்தை பொருளுள்ள முறையில் செயல்படுத்துவோம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, அதன் முடிவுகளும் இம்மாதத்தில் வெளிவந்துவிடும். தமிழர்கள் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். சினிமா மோகம் அழிய வேண்டும். மக்களுக்காக பாசம், பற்று, அன்பு ஆகியவை இயல்பாக தாயிடம் எழுந்து வருகிறது. ஒரு புதுக்கவிதையில், ‘வயோதிகர் இல்லத்திலிருந்து, தன் மகனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினாள்’ என்று எழுதியிருந்தார்கள்.

 இம்மாதத்தில் வெளிவந்துவிடும். தமிழர்கள் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். சினிமா மோகம் அழிய வேண்டும். மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் உருவாக வேண்டும். மரியன்னை நம் தமிழகம் சிறந்து வளர, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவாராக. மரியே வாழ்க!

கே. நா - ப. நா (கேள்வியும் நானே ‡-பதிலும் நானே)

கே. நா - ப. நா (கேள்வியும் நானே -பதிலும் நானே)
- சியா

- அன்பியங்களின் வளர்ச்சி எப்படி?

உறவின் இனிமையை சுவைக்க உதவும் இயக்கம் இது.


- பங்கு பேரவைகள் சவாலாகத் தானே உள்ளன?

குடியாட்சி  என்றும் சர்வாதிகாரத்தை புதைக்கும் கல்லறை.


- சினிமா நடிகர்களின் வழிபாடு தமிழ்நாட்டில் ஒழியுமா?

கல்வி வளர,  இந்த கானல் நீர் கனவு களையும்.


- ஏன் ஒரு நல்ல,  புதிய அரசியல் இயக்கம்  உதயமாகவில்லை?

எதையும் தாங்கும் இதயங்களின் விதைகள் தெளிக்கப்படவில்லை.


- வெளிநாடுகளில் (அரபு) தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாகிறார்களே?

கேட்டு செல்வதில்லை, கேட்பாருக்கு நாதியுமில்லை.

இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா  
                          
29 - 5 - 2016        

தொ நூ 14 : 18 - 20,   1 கொரி 11 : 23 - 26 ,    லூக் 9 : 11 - 17
அண்மைக்காலங்களில் திரு சீமான் அவர்கள் கிறிஸ்துவ மறையைப் பற்றி கிண்டல் அடித்து பேசி வருகிறார். முக்கியமாக, நற்கருணையைப் பற்றி, எப்படி அப்பம், இயேசுவின் உடலாகவும் இரசம், இயேசுவின் இரத்தமாகவும் ஆகும்? இவர்கள் மனித உடலைத் தின்னும் காட்டுமிராண்டிகளா? என்கிறார். இதே குற்றச்சாட்டு தொடக்க திருச்சபையிலும் இருந்தது. ஆனால் முருகன் கோவிலுக்கு அவர் காவடி தூக்குகிறார். அதற்கு அவர் தரும் விளக்கம் நம் மூதாதையர் வேட்டையாட சென்றபோது, வேட்டையில் பிடித்த மிருகத்தை தோளில் போட்டு நடனமாடி வருவார்கள். அதன் நினைவுதான் காவடி ஆட்டம் என்கிறார். நற்கருணை இயேசு தன் அன்பைக் காட்ட அவர் வடித்துக் கொடுத்த அடையாளம் என்பதை புரியாது, தெரியாது சீமான் பேசிவருகிறார். இறைவன் என்றும் நம்மோடு இணைந்து வாழ்பவர், உலகில் வந்த  இறைமகன் இயேசு, இறைவன் நம்மோடு என்றும் வாழ்வதை  செயலாக்க வடிவமாக நற்கருணையை ஏற்படுத்தினார்.

எம்மாவு நிகழ்ச்சியில் அப்பம் பிட்கையில் இயேசுவை சீடர்கள் கண்டுணர்ந்தது குறிப்பிடப்படுகிறது. முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறுகிறார், ‘நற்கருணை இல்லையயனில் திருச்சபை இல்லை’ என்கிறார். புனித பேதுரு ஜீலியான் என்பவர், ‘நற்கருணை, இயேசுவின் அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடு அதற்கடுத்தது விண்ணகம் தான்’ என்கிறார்.

இன்றைய நற்செய்தி பகுதியில் ஐயாயிரம் பேருக்கு இயேசு பாலைவனத்தில் உணவு தருகிறார். அந்நிகழ்ச்சியிலும் இயேசு, இறுதி இரவு உணவில் செய்த அதே செயல்களை செய்கிறார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து அவற்றின் மீது ஆசி கூறி, மக்களுக்கு பரிமாறக் கூறுகிறார். இந்நிகழ்ச்சியை விளக்கும் புனித ஜெரோம், ‘வழியில் பசியால் வீழ்ந்து விடாமல் இருக்க  மக்களுக்கு இயேசு உணவளித்தார். விண்ணக பயணத்திலும் வானக அப்பம் உண்ணாமல் செல்வது, மிகவும் ஆபத்தானது’ என்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார் தான் பெற்று கொண்ட நற்கருணை பாரம்பரியத்தை மக்களுக்குக் கொடுப்பதாகக் கூறுகிறார். நற்கருணை, உணவு, உடன்படிக்கை பலியாக விளங்குகிறது. மனித பலகீனத்தை மாற்றுவதற்கு இயேசு கொடுத்திருக்கும் மாமருந்தாக இது விளங்குகிறது. அப்பமும், இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுவதுபோல அதனை பெறுகின்ற நாமும் மாற வேண்டும். இல்லையயன்றால் நற்கருணையினால் பயனில்லை என டீக்மேன் என்பவர் கூறுகிறார். அன்னை தெரசாவின் புதுமையான பணிக்கு அடித்தளமாக விளங்கியது நற்கருணை பக்தியாகும். 24 மணி நேரமும் நற்கருணை ஆராதனை அன்னை தெரசாவின் இல்லங்களில் அவசியம் இடம் பெறுகிறது. 

மூவொரு இறைவன்

மூவொரு இறைவன்   
 22 - 5 - 2016

நீ மொ 8 : 22 - 31,   உரோ 5 : 1 - 5,   யோவா 16 : 12 - 15

இறை நம்பிக்கை ஓர் உள்ளார்ந்த அனுபவம். இந்த நம்பிக்கை நம் வாழ்விலும், நம் வாழ்வின் செயல்பாடுகளிலும் வெளிப்படுகிறது. இறைவன், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பது இயேசு வெளிப்படுத்திய மறை உண்மை. அறிவியலுக்கு ஒவ்வாத உண்மை. ஆனால் மனிதர் அனுபவத்தில் இயேசு வெளிப்படுத்திய உண்மையை உணரமுடிகிறது. ‘தந்தையே விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவரே’ என்கிறார் இயேசு (மத் 1 : 25). நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார் (உரோ 5 : 8). தூய ஆவியார் அருள்பொழிவு செய்கிறார் (லூக் 4 : 18). நமது விசுவாச அறிக்கையில் தந்தை படைத்து காப்பவர் என்றும், மகன் மீட்பவர் என்றும், தூய ஆவியார் புனிதப்படுத்துகிறவர் என்றும் அறிக்கையிடுகின்றோம். நாம் அனைவரும் கடவுளின் உருவில், சாயலில் உருவாக்கப்பட்டுள்ளதால், இறைவனின் பணிகளும், பண்புகளும் நம்மில் சாயலாக பதிந்துள்ளன எனலாம். தந்தையைப் போல் மனிதர் புதிதாக படைக்கும் ஆற்றலை பெற்றிருக்கின்றார். உலகில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக உண்டாக்கப்படும் கருவிகள், புது கண்டுப்பிடிப்புக்கள் அனைத்தும் மனிதரின் படைக்கும் பண்பிலிருந்து  உண்டானதுதான் எனச் சொல்லலாம். இந்த  படைக்கும் ஆற்றல் ஒவ்வொரு மனிதரிலும் புதைந்துள்ளது. எனவே ஒவ்வொரு மனிதரும் தந்தையின் படைக்கும் பண்பையும், காக்கும் பண்பையும் உள்வாங்கியுள்ளனர் என்பது தெளிவு.

மகன் உலகை மீட்டார், விடுதலை அளிக்கிறார். ஒவ்வொரு மனிதர் மனதிலும் மற்ற உயிரினங்கள் மேலும், துன்புறும் மானிடர் மேலும் இயல்பாக கருணை, இரக்கம் பிறக்கிறது. அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் போது, மனிதரின் இரக்கம், கருணை எப்படி செயல் வடிவில், தியாக வடிவில் வெளிப்பட்டது என்று பார்க்கிறோம். தாய்மையில் பொதிந்திருக்கும், பிள்ளைகள் மீதுள்ள பாசம், பற்று  இந்த மகனின் சாயல் எனலாம்.

தூய ஆவியார் புனிதபடுத்துகிறவர். அர்ப்பணம் என்ற பண்பில் துணை செய்தல், வழிகாட்டுதல், ஆறுதலைத் தந்து உற்சாகப்படுத்துதல் ஆகிய அனைத்தும் அடங்கும். அர்ப்பண பண்பும், மற்றவர்களுக்கு வழிகாட்டும் பண்பும் ஒவ்வொருவரிடத்திலும் புதைந்திருக்கிறது. இதனை சிலர் அன்னை தெரசா போன்றோர் முழுமையாக்கி காட்டுகின்றனர்.

இன்றைய நற்செய்தி பகுதியில் தூய ஆவியார், முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவர் என்று இயேசு விளக்குகிறார். தூய ஆவி உள்ளார்ந்த அனுபவமாக இருக்கிறார். அவரை உணர்ந்து கொள்பவர்கள் உண்மையின் ஒளியை பெற்றவர்கள் என்கிறார் இயேசு.

முதல் வாசகத்தில், ஞானம், இறைவனோடு,  உலக தொடக்கம் முதல் இருந்தது. அது ‘மனிதரோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டது’ என்று நீதிமொழிகள் நூலிலிருந்து வாசிக்கிறோம். இரண்டாம் வாசகத்தில், பவுலடியார், நம்பிக்கையால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனோம் என்கிறார். சடங்குகளால் அல்ல,  நம்பிக்கையால், நாம் கடவுள்முன் குற்றமற்றவர்களானோம் என்கிறார். நம்பிக்கை என்பது மனவுறுதி.

இவ்வாறு  மூவொரு இறைவனை நம்மிலேயே பதித்து வைத்திருக்கிறோம். தந்தையை போல் படைப்பவராகவும், காப்பவராகவும், மகனைப் போல் மற்றவர்களுக்கு வாழ்வு தருபவர்களாகவும், தூய ஆவியைப் போல் நம் பணிகளுக்கு முழு அர்ப்பணம் காட்டுபவர்களாகவும் விளங்குவோம்.

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியார் பெருவிழா                           
     15 - 5 - 2016

தி ப 2 : 1 - 11,     உரோ 8 : 8 - 17,  யோவா 14 : 15 - 16, 23 - 26

- அருள்பணி ச. இ. அருள்சாமி

தூய ஆவியின் அனுபவத்தில் செயல்படுவோம்

வாகனங்களில் மிகவும் அவசியமானது எரிபொருள். தண்ணீர் போன்ற திரவம், சக்கரங்களை சுழல செய்கிறது. இது புதுமையான செயல். இயேசு, தன் சீடர்கள் தன் வழியில் இயங்க, வியக்கத்தக்க எரிபொருளைப் போன்று தூய ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் ‘துணையாளர்’ என்றும் (யோவா 14 : 16 - 26) ‘உண்மையை  வெளிப்படுத்தும் ஆவியானவர்’ என்றும் (யோவா 14 : 17) இன்றைய நற்செய்தி பகுதியில் குறிப்பிடப்படுகிறது. அவர் அனைத்தையும் கற்றுதருவார் என்றும், அனைத்தையும் நினைவுபடுத்துவார் என்றும் (யோவா 14 : 26) கூறப்பட்டுள்ளது. கற்றுத் தருவார் என்பதும், நினைவுபடுத்துவார் என்பதுதான் பொருள். (யோவா 2 : 22 இயேசு கோவிலை தூய்மை செய்தபோது இக்கோவிலை இடித்துவிடுங்கள், மூன்று நாளில் இதை கட்டி எழுப்புவேன் என்று இயேசு சொன்னதை நினைவு கூர்ந்தனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது புரிந்துக் கொண்டனர் என்பது பொருள்). துணையாளர் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கச் சொல் பாரா களேத்தோஸ் என்பது, ‘பாரா களேத்தோஸ்’ என்றால் ‘அருகிலிருந்து கூப்பிட்டுக் கொண்டிருப்பவர்’ என்று பொருள். ‘உண்மையை வெளிப்படுத்தும் ஆவியார்’ என்றாலும், ‘புரிய வைத்தல்’ என்றுதான் பொருள். மத்தேயு நற்செய்தியில் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் ஒன்றுக்கு  நூறாக பலன் தந்தது. இறை வார்த்தைகளைக் கேட்டு புரிந்துக் கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது (மத் 13 : 23).

பிரட் இ ஒயிட் என்பவர் கூறுகிறார், கடவுளின் ஆவி நேர்மறையான மன தூண்டுதலைத் தருகிறது. ஆனால் மனித மனம் தற்பெருமையைத் தூண்டுகிறது என்கிறார். கேரி ஹேப்பிஸ் என்பவர், உன் சுய பெருமையை கட்டவீழ்த்துவிட்டால், தூய ஆவியாருக்கு செவிமடுக்கும் திறனை அது குறைத்து விடும் என்கிறார். தூய ஆவியின் வல்லமையுள்ள செயல்பாட்டை லூக்கா நற்செய்தியாளர், தன் நற்செய்தியிலும், திருத்தூதர்பணிகளிலும் விவரித்துக் கூறுகிறார். முதல் திருச்சபையில் ஏற்பட்ட நற்செய்தி  அறிவிப்பு பணியில் திருப்பு முனைகளிலெல்லாம் தூய ஆவியின் செயல்பாட்டை லூக்கா குறிப்பிடுகிறார் (தி ப 2 : 1 - 4 ; 4 : 31; 8 : 17 - 18; 9 : 17 - 18; 10 : 44 - 11: 15; 19 : 6).

முதல் வாசகத்தில், திருத்தூதர்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, வெவ்வேறான மொழிகளில் பேசுகிறார்கள். கூடியிருந்த  மக்கள் தங்கள் சொந்த மொழியில் கேட்டு புரிந்துக் கொள்கிறார்கள்.

இரண்டாம் வாசகத்தில், கடவுளின் ஆவியால் நாம் இயக்கப்பட வேண்டும், ஊனியல்பின் ஆவியால் இயக்கப்படக் கூடாது என்கிறார்.

ஒவ்வொரு நாளும் தூய ஆவியுடன் நாம் அனுபவத்தில் வாழ்ந்திட வேண்டும். நம் வாழ்வு நற்செய்தியை விளம்பரப்படுத்தும் விதத்தில் அமைந்தால், அங்கு தூய ஆவி செயல்படுவார். 10ஆம் வகுப்பில் ஒரு மாணவர் முதல் மார்க் பெற்றதற்காக 15,000 ரூபாய் பரிசாக கொடுத்தார்கள். ‘நீ இந்த பணத்தை என்ன செய்வாய்?’ என்று அப்பையனைக் கேட்டார்கள். ‘என்னோடு படிக்கும் பல மாணவ, மாணவிகள் கிழிந்த  உடையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல உடை வாங்கி தருவேன்’ என்றான். இதுதான் தூய ஆவியின் தூண்டுதல். நமக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்குதல், பொருள் சேர்க்கும் வெறி ஆகியவை ஊனியல்பின் செயல்கள்.

“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள (குறள் 241)”

ஆண்டவரின் விண்ணேற்றம்

ஆண்டவரின் விண்ணேற்றம்                              
 8 - 5 - 2016

தி ப 1 : 1 - 11  , எபி 9 : 24 - 28; 10 : 19 - 23,  லூக் 24 : 26 - 53

நமக்கெல்லாம் ஒரு கேள்வி எழலாம். ஏன் இயேசு கிறிஸ்து தான் உயிர்த்தெழந்த நாற்பது நாட்களுக்கு பிறகு தன்னுடைய சீடர்களை விட்டு செல்கிறார்? நாற்பது என்ற எண் விவிலியத்தில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாக இருக்கிறது. மோசே இறைவனின் திருமுக தரிசனம் காண மலைக்கு சென்று நாற்பது நாட்கள் செபத்திலும், தபத்திலும் செலவழித்தார் என்பதை விவிலியத்தில் பார்க்கிறோம். இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்வதற்கு முன்தயாரிப்பாக நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்திலே இருந்தனர். இறைவாக்கினர் எலியா இறைவனின் மலைக்கு பயணித்த போது, நாற்பது நாட்கள் நோன்பிருந்தார். தான் உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு நாற்பது நாட்கள் சீடர்களுக்கு பலமுறை தோன்றி, தான் உயிர்த்தெழுந்ததை உறுதிபடுத் தவும், தன்னுடைய  உலக வாழ்வின் போது,  கூறிய சொற்களை உறுதிபடுத்தவும் தான் நாற்பது நாள்கள் உலகிலிருந்து, சீடர்களுக்கு காட்சியளித்தார் எனலாம்.


இயேசுவின் பிரிவும், விண்ணேற்றமும் இந்த இரண்டுமே  சீடர்களுக்கு தொடக்கமும், முடிவுமாக இருந்தது. உடல் ரீதியாக இயேசுவின் உடனிருப்பு சீடர்களுக்கு முடிவாக தோன்றினாலும், புதிய முறையிலே இயேசுவின் பிரசன்னத்தின் தொடக்கமாக அமைகிறது. உலகம் முடியும் வரை அவர்களோடு இருப்பதாக இயேசு தன்னுடைய சீடர்களிடம் வாக்களித்தார். இயேசு விண்ணேற்பு அடைந்த பின் தந்தையின் வலது பக்கத்தில் தன் முழு வல்லமையோடும் வீற்றிருக்கிறார் என்ற கருத்தும் விவிலியத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இதுவும் இயேசுவின் மாட்சிமைக்கும், வல்லமைக்கும் ஓர் அடையாளம் (தி. பா 111 : 1; திப 2 : 34; உரோ 8 : 34, 1 பேதுரு 3 : 22, எபி 1 : 3, 8 : 1, 10 : 12). அவர் மகத்துவ மிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார் (எபி 8 : 1) என்ற சொற்கள் பரமதந்தை அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்து அனைத்திற்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலைவராய் ஏற்படுத்தினார் என்ற உண்மையை உணர்த்துகின்றன.

இயேசு விண்ணேறிச் சென்ற போது, சீடர்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது வானதூதர் விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் என்று ஆறுதல் கூறியதாகவும் வாசிக்கிறோம் (தி பா 1 : 11). இயேசுவின் விண்ணேற்றத்தையும், அவரது இரண்டாம் வருகையையும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இயேசு விண்ணகம் சென்றார். அவருடைய  சீடர்களும்  உலகெங்கும் செல்ல வேண்டும்  என்று கட்டளை கொடுத்து விட்டே சென்றார். இயேசுவின் பணி முடிந்தது. திருச்சபையின் பணி துவங்கி விட்டது (மத் 28 : 17, மாற் 16 : 5, யோவா 20 : 17, லூக் 24 : 47, தி பா 1 : 8). சீடர்கள் சென்று போதிக்க வேண்டும். நற்செய்தி அறிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் இயேசு வருவார். இயேசுவின் வருகைக்காக தயாரிக்க வேண்டுமென்றால் நற்செய்தியை போதிக்க வேண்டும், அதை வாழவேண்டும்.

பணக்காரன், அவன் தன் தற்புகழ்ச்சிக்காக தினமும் அன்னதானம் செய்வான். ஆனால் பழைய மக்கிப்போன அரிசியில்தான் சோறு சமைப்பாள். அவனது  மகனுக்குத்  திருமணமானது. மருமகள் இந்த  தகாத செயலை கவனித்தாள். ஒருநாள் மக்கிய அரிசியில் சமையல் செய்து பணக்கார மாமனாருக்கு உணவு படைத்தாள். அதை  சாப்பிட்ட மாமனார், சோறை பணக்காரன், அவன் தன் தற்புகழ்ச்சிக்காக தினமும் அன்னதானம் செய்வான். ஆனால் பழைய மக்கிப்போன அரிசியில்தான் சோறு சமைப்பாள். அவனது  மகனுக்குத்  திருமணமானது. மருமகள் இந்த  தகாத செயலை கவனித்தாள். ஒருநாள் மக்கிய அரிசியில் சமையல் செய்து பணக்கார மாமனாருக்கு உணவு படைத்தாள். அதை  சாப்பிட்ட மாமனார், சோறை வாயில் வைத்ததும் துப்பினார். “ஏன் இப்படி செய்தாய்?” என்று கோபமாகக் கேட்டான் பணக்காரன். “ஏழைகளுக்கு நாம் கொடுப்பதுதான் மோட்சத்தில் நமக்குக் கிடைக்கும். அதற்கு நீங்கள் பழகிக் கொள்வதற்காகத் தான் இப்படி செய்தேன்” என்றாள். 

நற்செய்தியை நாம் வாழ்ந்தால்
விண்ணகம் நம்மில் இறங்கிவரும்

Wednesday 4 May 2016

இறை இரக்கத்தின் அரசியும், மே மாத வணக்கமும்

இறை இரக்கத்தின் அரசியும், மே மாத வணக்கமும்

-  அருட்தந்தை அ. பிரான்சிஸ் அடிகளார், பாபநாசம்

மே மாதம் மாதாவின் வணக்க மாதம். இந்த மாதத்தின் எல்லா நாட்களிலும் இறை அன்னைக்கு தனி வணக்க வழிபாடு செய்கின்றோம். மே மாத முதல் நாள் தொழிலாளரான புனித வளனார் நினைவு கூறப்படுகின்றார். அன்னை மரியாவின் கணவரும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான இவர் இல்லத்தலைவர்களுக்கு முன்மாதிரியாகவும், தந்தையர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் என்பதன் அர்த்தம் திருக்குடும்பத்தில் விளங்கியது.

இத்தகு மாண்புமிக்க புனித வளனாரின் விழாத் தொடங்கி, அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச் சந்தித்த விழா வரையிலான 31 நாட்களும் மாதாவின் வணக்க நாட்களாகத் தொடக்க  காலம் தொட்டே அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் அழகின் முழுமையான அன்னை மரியாவின் திருச்சுரூபத்தை அலங்கரித்து அழகு பார்ப்பார்கள். பல வண்ண மலர்களைக் கொண்டு புத்தம் புது கோணத்தில், ஒவ்வொரு நாளும் அன்னையின் புதுமைகளும், அன்றன்று செய்யக் கூடிய புனிதச் செயல்பாடுகளும் வாசிக்கப்படும். இவையயல்லாம், இறைமக்கள் அன்னையின் பாதையில் நடந்து, இறைமகன் இயேசுவின் சீடத்துவத்தில் இரண்டறக் கலந்திட  உதவிடும் வழிபாட்டு செயல்களாகும்.

தாய் என்பவள் யார்? தன்னையே தருபவள் தாய். அவளின் இரத்தம்தான் நம் ஒவ்வொருவரிடமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா என்ற மூன்றெழுத்தினுக்கு அதிசய சக்தி  உண்டு.. தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை என்கிறது ஒரு பாடல். நாம் மனம் கலங்கி நிற்கின்ற வேளையிலும் மனதின் பாரத்தைக் குறைத்து நல்ல ஆலோசனை வழங்கி கோணலானவற்றைச் செம்மைப்படுத்தி வாழ்க்கையின் சறுக்கலகளில் சரிந்து விழாமல் நம்மை நிலை நிறுத்த  உதவுபவர் தாய். 

இறையாட்சியின் தாய் :

அவர் (இயேசு) பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அருள்வார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1 : 32 - 33). கபிரியேல் வானதூதரின் இந்தச் செய்தியின் மூலம் இயேசு மண்ணுலகில் கொணர இருந்த இறையாட்சியின் தாயாக மரியா உயர்த்தப்படுகின்றார்.

மரியாவின் மகன் என்றும் நிலைத்திருக்கும் ஓர் அரசின் மன்னவர் என்றால் அவருடைய தாய் அரசரின் அன்னையல்லவா! டாக்டர் மாற்கு மிரவல் என்னும் இறையியலாரின் கூற்றுப்படி,  ‘இஸ்ரயேலரின் மன்னர்கள் பல மனைவியரைக் கொண்டிருந்தனர். இவர்களை விட, மன்னர்களின் அன்னையரே அரசியராக அமர்த்தப்பட்டனர். ஏனென்றால் தாய்மைப் பேற்றின் வழியாக மன்னரின் ஒற்றைக் குடும்பப உறவு மேன்மைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே அன்னையும், அரசியுமாகத் தாய் திகழ்ந்தார் )’ காண்க. 1 அரச 2 : 19, 1 அரச 15 :9 ‡ 13, 2 அரச 11 : 3, எரே 13 : 16 ‡ 20). இத்தகு உயர்ந்த அந்தஸ்து அரசரின் மிகச் சிறந்த ஆலோசகராகவும், சர்வ சக்தி மிக்க அரசியாகவும் மன்னரின் அன்னையைச் செயல்பட வைத்தது. அரசரை ஈன்றெடுத்ததன் காரணமாகவே இவள் அரசியாயினாள். எனவே இவள் அரச மகத்துவ அன்னையாகத் திகழ்ந்தார். அரசின் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளில் அரசரின் முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டார்.
(காண்க . நீமொ 31 : 1 ‡ 9, 2 குறி 22 : 1 ‡ 12).

இறை இரக்கத்தின் அரசி :

இத்தகு வரலாற்றுப் பின்னணியில், நாம் இரக்கமிகு விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகி இயேசுவின் தாய் மரியாவையும் உற்று நோக்கிட வேண்டும். முதல் ஏற்பாட்டின் அரச அன்னையை போன்றே நாசரேத்தூர் கன்னியும், இரண்டாம் ஏற்பாட்டின் கதாநாயகியுமான மரியாவும் இயேசு நிறுவிய இரக்க அரசின் அரசியாகத் திகழ்கின்றார்.

‘அம்மா இவரே  உம் மகன் ... இவரே உம் தாய்’ (யோவான் 19 : 25 ‡ 27) என்ற வார்த்தைகள் மூலம் கல்வாரி ‘அம்மா இவரே  உம் மகன் ... இவரே உம் தாய்’ (யோவான் 19 : 25 ‡ 27) என்ற வார்த்தைகள் மூலம் கல்வாரி மலையின் சிலுவையடியில் நின்றிருந்த தமது தாயினை மனித குலத்தின் தாயாக இயேசு விட்டுச் சென்றுள்ளார். இளந்திருச்சபை தந்தையின் கூற்றுப்படியும், நம்பிக்கையாளர்களின் அறிக்கையின்படியும், நாசரேத்தூர் பெண்மணி இரக்கத்தின் அரசியாகத் திகழ்கின்றார். மண்ணுலக வேதனைகளிலிருந்து நாம் விடுபட நமது பரிந்துரையாளராக இந்த மரியன்னை திகழ்கின்றார். அரசர் என்பவர் ஆட்சி, அதிகாரம் செலுத்துபவர். அரசி என்பவரோ தாய்மைப் பண்பின் (மலட்டினால் துன்புறுவோரின் கண்ணீர் துடைக்கும் இரக்கம் மிக்கவர்). எனவே தான் இவர் இரக்கத்தின் அரசியாகத்  திகழ்கின்றார்.

உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல், நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள் (லூக் 6 : 36) என்றுரைக்கும் கிறிஸ்துவே, விண்ணகத் தந்தையின் இரக்கத்தின் செயல்பாட்டாளராகத் திகழ்கின்றார். கொடூர வேதனைகளை 
அனுபவித்து, வேதனைகளின் உச்சத்தில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையிலும் தந்தையே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23 : 34) என்று விண்ணகத் தந்தையின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். எனவே தான், இந்த இயேசுவை விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசு, மாபெரும் இரக்கத்தின் அரசர். இவருடைய தாய் மரியா, இரக்கத்தின் தாய், இரக்கத்தின் அரசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இரக்கமிகு அரசியின் பரிந்துரையினால் நம்மீது பொழியப்படும் கொடைகள் அனைத்தும் விண்ணகத் தந்தையின் இரக்கமிகு கொடைகளே. விண்ணகத் தந்தையின் அருள்வெள்ளம் நம்மீது பாய்ச்சப்படும் ஓர் அருட்கருவியாக இரக்கத்தின் அரசி மரியா திகழ்கின்றார்.

புனித பவுஸ்தினம்மாளின் வாழ்வில் இறை இரக்க அரசியின் செயல்பாடு :

இறை இரக்கத்தின் திருத்தூதர் எனப்படும் போலந்து நாட்டின் அருட்சகோதரி புனித பவுஸ்தீனம்மாள், இறை இரக்க அரசி தனது வாழ்வில் புரிந்திட்ட அருஞ்செயல்களை தனது குறிப்பேட்டில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கின்றார். அருள் மிகப் பெற்றவரே! என்று நாம் இறை இரக்க அரசி மரியாவை அழைப்பது மிகவும் சரியான ஒன்றே. மகளே! நான் இறையன்னை என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளேன். ஆனால் நான் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். எனது இதயத்தை ஏழு வாள்கள் ஊடுருவின (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 786). நான் துன்புற்ற வேளையில், மகளே! நீ எத்தகைய துன்பத்தில் சிக்கித் தவிக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். அஞ்சாதே  உனது துன்பங்களோடு  என்னை நான் இணைத்துக் கொள்கின்றேன். உனது  உணர்வுகளோடு நானும் ஒன்றித்துள்ளேன் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 75).

ஓ! மரியே! என் அன்னையே! எனது ஆன்மா, எனது உடல், எனது வாழ்வு, எனது மரணம் ஆகிய அனைத்தையும் உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 79).

புனித பவுஸ்தினம்மாளின் வாழ்வு இறுதியில் மரியாவின் இரக்கத்தில் குழந்தைக்குரிய நம்பிக்கை கொண்டிருந்தார். என் மகளே! கடவுளின் ஆணைப்படி நான் உனக்கு மிகவும் நெருக்கமான முறையிலும், சிறப்பான விதத்திலும் உனக்கு அன்னையாக உள்ளேன். நீ எனது பாசமிகு குழந்தையாக வாழ நான் ஆசிக்கின்றேன் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 1414).

இறையன்னையே! மாபெரும் கசப்புக் கடலில் உமது ஆன்மா அமிழ்ந்திருந்தது. உமது குழந்தையாகிய என்மீது கருணை கூர்ந்தருளும். துன்பப்படவும், துன்பத்தை அன்பு செய்யவும், எனக்குக் கற்றுத் தாரும். வேதனை என்னை பிரிக்காதிருக்க எனது ஆன்மாவைப் பாதுகாத்தருளும். அருளின் அன்னையே! நான் இறை விருப்பத்தின்படி வாழ என்னைப் பயிற்றுவித்தருளும் (பவுஸ்தினாவின் குறிப்பு எண் : 315).

இறை இரக்கத்தின் அழைப்பு :

‘இதோ, நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்’ (திவெ 3 : 20) என்கிறார் ஆண்டவர். நாம் நமது இதயக் கதவைத் திறந்து வைத்து இயேசு நம்மோடு உணவருந்த அனுமதிக்கின்றோமா? நாம் நற்கருணை வடிவில் இயேசுவை  உட்கொள்கிறோம். உண்மைதான். ஆனால் நமது உள்ளத்தை தற்பெருமை, ஆணவம், கவலை, பயம் போன்ற தீய ஆவியின் செயல்பாடுகளால் நிரப்பி வைத்துள்ளோம். இப்படியிருக்கையில் இயேசு எப்படி நம்முள் வாசம் செய்வார்?

இறை இரக்க அரசியின் தாய்மைப் பண்பு :

மிகவும் இரக்கம் மிகுந்த கன்னித்தாய், நமது  இதயக் கதவுகளை நாம் திறந்து வைத்து, இயேசுவை நம்மில் வாழவைத்திட நமது  உதவியாக  நிற்கின்றார். நாம் பாவத்தில் உழன்று கொண்டிருந்தாலும் தண்டிக்கும் தாயாக அல்ல, மன்னிக்கும் தாயாகத் தான் இருக்கின்றார். காயம்பட்ட நமது மனங்களைக் குணமாக்கும் அன்னையாக இரக்கமிகு அரசி நமக்காகக் காத்து நிற்கின்றார்.

இவர் ‘இரக்கம்மிக்க தாய்’ காரணம், இரக்கம்மிகு விண்ணகத் தந்தையினால் அமல உற்பவியாக மண்ணில் மரியா உதயமானவர். இயேசுவின் மானுடலேற்பில் இரக்கமே மனிதரானது. மனுவுருவான இரக்கத்தினை உலகிற்குக் கொணர்ந்தவர் மரியாவே. கிறிஸ்துவ சீடத்துவத்தின் மாண்பாளராக, முழுமையாளராகத் திகழ்பவர் இவர். நாம் இறக்கின்ற வரையில் நமது உடல், உள்ள, ஆன்மீக வாழ்வின் கண்காணிப்பாளராக இருந்து நமது தேவைகளை நிறைவேற்றி வருகிறவர் இவரே. மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23 : 34) என்று விண்ணகத் தந்தையின் இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். எனவே தான், இந்த இயேசுவை விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசு, மாபெரும் இரக்கத்தின் அரசர். இவருடைய தாய் மரியா, இரக்கத்தின் தாய், இரக்கத்தின் அரசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இரக்கமிகு அரசியின் பரிந்துரையினால் நம்மீது பொழியப்படும் கொடைகள் அனைத்தும் விண்ணகத் தந்தையின் இரக்கமிகு கொடைகளே. விண்ணகத் தந்தையின் அருள்வெள்ளம் நம்மீது பாய்ச்சப்படும் ஓர் அருட்கருவியாக இரக்கத்தின் அரசி மரியா திகழ்கின்றார்.

திருச்சபையின் வரலாற்றுத் திருப்பு முனைகளில் எல்லாம் மனிதத் தவறுகளை மன்னித்து இரக்கத்தைப் பொழிந்து வழிநடத்தும் அரசியாக திகழ்பவர் இவரே. இவர் ஆற்றிய அரும்பெரும் செயல்களே மே வணக்க மாத நாட்களில் வாசிக்கப்பட்டு வருகின்றது. இந்த வரலாற்றுப் பதிவுகளை நமது வாழ்வாக்கி இறை இரக்க அரசியின் பிள்ளைகளாக வாழ்வோம்.  
$$$$$$

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

- புலவர். இ. அந்தோணி, எம்.ஏ. பி.எட்., எம்.ஃபில்,
சிறிய மலர் மேனிலைப்பள்ளி (ஓய்வு),
கும்பகோணம்

அண்மையில் படித்த செய்தி, கணவனை அவரின் மனைவி, ‘குண்டு யானை’ என்று கூறியதற்காக கணவன் விவாகரத்து பெற்றிருக்கிறார். அதேபோல், கணவன் தன் மனைவியை, ‘தேவாங்கு’ என்று கூறியதற்காக, மனைவி, தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். தமிழ்நாட்டில் 8.8 சதவிகிதம் விவாகரத்து நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக  விவாகரத்து நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. குடும்ப அமைப்பு மிகவும் சிதைந்து வருகிறது. ஆனால் குடும்பம்தான் சமுதாயத்தின் உயிர்நிலை. வெளிநாடுகளில் சென்று வாழ்கின்ற இந்தியர்களின் பிள்ளைகள் மிகவும் அறிவு திறமை பெற்றவர்களாக வளர்வதைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்தியர்கள் குடும்ப பாரம்பரியத்தை பாதுகாப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

வெளிநாடுகளில் குடும்ப இணைப்பு பயங்கரமாக  உடைந்து நிற்கிறது. கணவன் - மனçவி பிரிவு பிள்ளைகளில் வளர்ச்சியிலும், கணவன் - மனைவி மன அமைதி நிலையிலும் பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.

விவிலியத்தில், கடவுள் ஆணும் - பெண்ணுமாக மனிதரை படைத்தார் என்று கூறப்பட்டுள்ளது (தொ நூ 1 : 27). மனித பண்புகளை பெற்றவர் ஆண் - பெண் என்ற இருபாலர். ஆனால் அவர்களின் உடல் அமைப்பிலும், உணர்வு நிலைகளிலும் வேறுபட்டு நிற்கிறார்கள். வேறுபாடுகளை புரிந்து கொண்டு, வேறுபாடுகள் ஒன்றன் மற்றொன்றின் நிறைபாடு என்பதை ஏற்று கொண்டு வாழ்வதுதான் குடும்பத்தின் உண்மைப்பண்பை உயிர்மைப்படுத்துவதாகும்.

இந்து சமயத்தில் அர்த்தநாதீஸ்வரர் என்ற உருவில், உரே உடலில் ஆண் பாதி பாகமும், பெண் பாதி பாகமும் அமைந்திருப்பதை காணமுடிகிறது. அதாவது ஆணில் பெண்ணின் பண்பு மறைந்திருக்கிறது.  பெண்ணில் ஆணின் பண்பு புதைந்திருக்கிறது என்பது பொருள். ஆனால் ஆண் ‡ பெண் ஆகியவர்களின் தனித்தன்மையையும்  மறந்துவிடக்கூடாது. ஆண் ‡ பெண் ஆகியவர்கள் சமத்துவ நிலையில் பணி செய்கின்ற வேளையில், மற்றவர்களால் முடியாததை செய்து நிறைவு செய்வதே ஆண் ‡ பெண் வேற்றுமையின் நோக்கமாகும்.

பெண்ணின் தனிப்பண்பை பாரதிதாசன் இப்படி அழகாக எழுதியிருக்கிறார்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவிபோர்த்த இருள்நீங் கவில்லை ஆயினும்
கேள்வியால் அகலும் மடமைபோல் நல்லிரவு
மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது
தொட்டி நீலத்தில் சுண்ணாம்புக் கலந்த
கலப்பென இருந்தன் கட்டுக்குலைந் தது
புலர்ந்திடப் போகும் பொழுது கட்டிலில்
மலர்ந்தன அந்த  மங்கையர் விழிகள்
என்கிறார் பாரதிதாசன்.

ஆம் பின்தூங்கி முன் எழுபவள் அல்லவா பெண். அதிகாலை எழுந்து குளித்து இறையை வேண்டி கணவனுக்கும், பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து தானும் அலுவலகம் செல்லும் பெண்.

அதாவது  குடும்பத்தை தாங்குபவள் மனைவி என்று விளக்குகிறார். ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு செயல்படுபவள் பண்பான மனைவி என்றும் விளக்குகிறார் பாரதிதாசன்.

கொண்டவர்க் கெதுபிடிக்கும்? குழந்தைகள் எதை விரும்புவர்?
தண்மூன்றி நடக்கும் நன்மாமன் மாமிக்குத் தக்கதென்ன?
உண்பதில் எவர்உடம்புக்கு எதுஉதவாது  என்றெல்லாம்
கண்டனள் கறிகள் தோறும் உண்பவர் தமமைக் கணடாள்

கீழ்க்காண்பவை ஆண் - பெண் ஆகியவர்களின் முக்கிய உணர்வு வேறுபாடுகள். இவை ஆராய்ச்சியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

1. பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பண்பினால் பெண்கள் வீணாக எதிலும் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். எதிர்காலத்தைப் பற்றி விளையாட்டாக நினைக்க மாட்டார்கள்.

2. ஆண்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவர். மாற்றம், சவால், இவைகளை எதிர்கொள்ளவும் விரும்புவர். பெரும்லாபத்திற்காக ஆபத்துகளை சந்திக்க துணிவர்.

3. பெண்களுக்கு துணிச்சல் குறைவு. ஆனால் பாதுகாப்பு, உறவு, போதுமென்ற மனம் பெண்களுக்கு அதிகம்.

4. குடும்பத்தில் பெண்கள், ஆண்களின் வீணான துணிச்சலை கட்டுப்படுத்துவார்கள். ஆண்கள், பெண்களின் வீணான பயத்தை அகற்ற உதவுவார்கள்.

5. பெண்கள் வீடுகளின் வசதி, குடும்ப வாழ்வு இவற்றைப் பற்றி கவலைப்படுவர்.

6. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெறிதனத்தை ஆண்கள் காட்டவார்கள். பெண்கள் அதனை ஒரு பொழுதுபோக்காக மட்டும்  கருதுவர்.

ஒன்றுக்கொன்று உதவுவதற்காகவே வேறுபட்ட பண்புகளுடன் இறைவன் படைத்திருக்கிறார். ஒன்னும், ஒன்னும் இணைவதுதான் குடும்பம். ஒன்றை மற்றொன்னை அழிப்பது குடும்பத்தின் நோக்கமல்ல.  
 (இன்னும் வரும்)

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 11

ஆலோசனை நேரம்

வேதியரிடம் கேளுங்கள் - 11
- நல்லை.இ. ஆனந்தன்

1. விளங்க முடியாத கவிதை எது?

- திருமதி. அகிலா, சென்னை

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறவிதைக்குள் எப்படி ஒடுக்கிச் சேமிக்கிறது? மண்ணில் நட்டு உயிர்த்தவுடன் எப்படி பரந்து விரிந்து அகலமாக பரவுகிறது? மரங்களில் மட்டுமல்ல. மனிதரிலும் இதுதானே நடக்கிறது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உயிரணு எப்படி குழந்தையாகிறது? அது பிறந்த வளர்ந்து, ஆஸ்கார் விருது வாங்குவதும், ஆயிரம் படங்களுக்கு இசையமைப்பதும், இருபதாயிரம் பாடல்களை இனிமையாகப் பாடுவதும் எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் உலகில் விளங்க முடியாத, ஏன் விளக்கமுடியாத கவிதை.


2. பாதம் கழுவும் சடங்கு ‡ பெரிய வியாழனன்று எதற்காக?

‡ திரு. ஆல்பர்ட், நிலக்கோட்டை

பாலஸ்தீன் நாடு பாலைவன நாடு. மணற்பரப்பு அதிகம். அந்த மணல் நொய் மணல். (கடற்கரையில் உள்ளது போல) காற்றடித்தால் அது பறந்து வந்து உடல் முழுவதும் ஒட்டிக் கொள்ளும் என்பதால் யூதர்கள் தலைமுதல் கால் வரை துணிகளால் மூடியிருப்பார்கள். நடந்து வரும்போது காலில் ஒட்டியிருக்கும் மணல்துகள்களோடு வீட்டிற்குள் நுழைவது சரியல்ல என்பதால் பாதங்களைக் கழுவிவிட்டு உள்ளே நுழைவார்கள். பணியாளர்களோ அல்லது வீட்டினரோ இச்சடங்கை வீட்டிற்கு வருவோர்க்கு நிகழ்த்துவதுண்டு. நமது தமிழ்நாட்டிலும் வயலில் வேலை செய்த விட்டு வருவோர் மற்றும் விவசாயப் பெருங்குடிமக்கள் வாசலில் உள்ள தொட்டியில் நீர் மொண்டு கால்களைக் கழுவிய பின்னரே வீட்டிற்குள் நுழைவார்கள். தலைகுனிபவர்களால் மட்டுமே பாதங்களைக் கழுவ முடியும். தலைக்கனம் பிடித்தவர்களால் அதைச் செய்ய இயலாது. தாழ்ச்சியுடன் பிறருக்கு பணிபுரிய நாம்  அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை பாதம் கழுவும் சடங்கு கற்பிக்கிறது. மேலும், விண்ணக வீட்டிற்குள் நுழைவதற்கும், இறைவன் தரும் விருந்தை  உண்பதற்கும் நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் நிகழ்வே அது.

3. மே மாதத்தில் என்ன செய்வது?

- செல்வி. உதயா, திருச்சி

ஏராளமாய் செய்யலாமே. உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வரலாமே. விடுமுறை விவிலியப் பள்ளிக்கு செல்லலாமே. பாடல், இசை, கணிணி கற்றுக் கொள்ளலாமே. சுற்றுலா சென்று வரலாமே. பொருட்காட்சிகளுக்குப் போய் வரலாமே. நூலகம் சென்று வாசிக்கலாமே. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாமே. வீட்டுத் தோட்டம் மற்றும் பூந்தொட்டிகள் அமைக்கலாமே. பயனுள்ள நிகழ்ச்சிகளை டிவியில் பார்க்கலாமே. இப்படி பல மேக்களை மே மாதத்தில் செய்யலாமே. அதோடு மே மாதம் மேரியின் மாதம். அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். அன்னையின் திருத்தலத்திற்குச் சென்று செபித்துவிட்டு வாருங்கள். அப்புறம் வீட்டில் நடக்கும் நன்மைகளைப் பாருங்கள்!

4. குருத்து ஞாயிறு வருத்த ஞாயிறு அல்லவே? பிறகு ஏன் நற்செய்தியில் அன்று இயேசுவின் பாடுகள் அனைத்தையும் வாசிக்கிறோம்?

‡ திரு. சேவியர், கோவில்பட்டி

குருத்து ஞாயிறு, திருப்பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு எருசலேம் சென்றது பாடுகளை ஏற்க. எனவேதான் இயேசுவின் பாடுகள், அன்றும் வாசிக்கப்படுகிறது. மனிதரில் எத்தனை நிறங்கள். எத்தனை ஆளுமைகள் என்பதை படம் பிடித்துக் காட்ட இயேசுவின் பாடுகள் அனைத்தையும் புனித வார துவக்க நாளிலே நாம் வாசிக்கின்றோம். ஓசான்னா பாடியவர்கள், ஒழிக கோ­ம் போட்டவர்கள், பண ஆசையால் காட்டிக் கொடுத்தவர், உயிர் பயத்தால் மறுதலித்தவர், பதவிக்காக கடமை தவறியவர், சக மனிதரின் துன்பம் கண்டு தோள் கொடுத்தவர், வார்த்தைகளால் காயப்படுத்தியவர்கள், அழுகையால் ஆறுதல் தந்தவர்கள், வேதனையின் உச்சத்தில் இருப்போரைக் கண்டு வேடிக்கை பார்த்தவர்கள், இறந்த பின்னும் ஈட்டியால் குத்தியவர்கள், ... இப்படி அதில் வருகிற அனைவருமே அன்று மட்டுமல்ல இன்றும் நம்மில் இருக்கிறார்கள். இயேசுவின் பாடுகளை அன்று வாசிப்பது வருந்த வேண்டும் என்பதற்காக அல்ல! திருந்த வேண்டும் என்பதற்காகவே.

5. வழக்கம்போல ஒரு கதை சொல்லவும் :

- திருமதி. நான்சி, கன்னியாகுமரி

சரிதான். சொல்லிட்டாப் போச்சு. கதை முக்கியமல்ல, அதன் கருத்துதான் முக்கியம். சரியா?
கிறிஸ்துவ ஆலயத்தில் குரு திருப்பலி நிறைவேற்றுகிறார். நூற்றுக்கணக்கில் விசுவாசிகள் பூசை காண்கிறார்கள். திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கிகளோடு உள்ளே நுழைகிறார்கள். இறைவழிபாடு செய்ய தடை போடுகின்றனர். எல்லோருக்கும் அதிர்ச்சி. கடவுளைத் தொடர்ந்து வழிபடுவோம் என்பவர்கள் எழுந்து வெளியே செல்லுங்கள். ஆனால் அவர்களை நாங்கள் கொன்றுவிடுவோம் என்று எச்சரிக்கின்றனர். குரு முதலில் ஆலயத்தைவிட்டு வெளியே செல்ல அவரைத் தொடர்ந்து வெகுசிலர் ஆலயம் விட்டு வெளியேறுகின்றனர். சற்று தூரம் சென்றதும் துப்பாக்கி சத்தம் கேட்கின்றது. பின் நீண்ட அமைதி. ஆலயத்தில் உள்ளவர்கள் மைதானத்திற்கு ஓடி வர குருவும் அந்த வெகு சிலரும் உயிருடன் அமர்ந்திருந்தார்கள். தீவிரவாதிகளின் தலைவன் அப்போது சொன்னான், இறப்பினும் இறைவழிபாடு தொடர்வோம் என்ற இவர்களே ஆலயத்தில் செபிக்க அருகதை  உள்ளவர்கள். ஆனால் உயிருக்குப் பயந்து கடவுளைத் துறந்த நீங்கள் அனைவருமே ஆலயத்தினுள் சென்று செபிக்கத் தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் மட்டுமே  ஆலயத்திற்குள் மீண்டும் செல்லலாம் என்றனராம்.

6. எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு க வரிசையில் பெயர் வைத்தால் அமோகமாக வாழ்வோம் என்று ஜோதிடர் கூறினார். ஏதாவது பெயர் சொல்லுங்கள்?

- திரு. ரெத்தினசாமி, திண்டுக்கல்

அட்ரா சக்கை. பிறப்பது ஆண்குழந்தை எனில் காக்கா என்றும், பெண் குழந்தை  எனில் கீக்கீ என்றும் பெயர் வையுங்கள். உங்கள் ஆலோசகர் பெரிதும் மகிழ்வார். அல்லது புனிதர்கள் பெயரை உங்கள் பிள்ளைக்குச் சூட்டுங்கள். கடவுள் மகிழ்வார். வேதியரிடமும், சோதிடரிடமும் தயவுசெய்து ஒரே நேரத்தில் ஆலோசனை கேட்க வேண்டாம்.
$$$$$$

மரியன்னை வணக்கத்திற்கு வரலாற்றின் சாட்சி

மரியன்னை வணக்கத்திற்கு வரலாற்றின் சாட்சி

- சியா

இறைநம்பிக்கை ஓர் ஆன்மீக அனுபவம். இந்த அனுபவத்தின் அடித்தளம், நாம் பின்பற்றும் சமயங்களின் பாரம்பரியம். கிறிஸ்தவம் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வளர்ந்து வருகிறது. ஆனால் கிறிஸ்துவத்தில் பிரிவினை சபைகள் உள்ளன. தற்போது பெந்தகோஸ்தே கபையினர், உரோமன் கத்தோலிக்க சபையினரை, சிலை வழிபாடு, மாதா வழிபாடு என்றெல்லாம் சொல்லி குழப்பி வருகின்றனர். மாதாவின் வணக்கம் திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே  இருந்து வந்திருக்கிறது. இதனை, முதல் ஆறு நூற்றாண்டு வரை இருந்த மாதா வழிபாட்டு பாரம்பரியத்தை கீழே தருகிறோம். தொடர்ந்து அடுத்த நூற்றாண்டுகளில் மாதா வணக்கம் எப்படி இடம் பெற்றிருந்தது என்பதை வரும் இதழ்களில் காணலாம். எனவே மாதா வணக்கம் ஆழ்ந்த கிறித்துவ பாரம்பரியத்தில் புதைந்தது என்பதை அறியலாம்.

இரண்டாம் நூற்றாண்டில் :

லியோன் நகரை சேர்ந்த இரேனியுஸ் மரியாவை இரண்டாவது ஏவாள் என்று விளக்கினார். முதல் ஏவாள் கடவுளின் வார்த்தையை மீறி தடைசெய்யப்பட்ட கனியைத் தின்று இறைவனிடமிருந்து பிரிந்தாள். அந்த பிரிவு மானிடத்தையே பாதித்தது. ஆனால் மரியா இரண்டாம் ஏவாள் கடவுளுடைய வார்த்தைக்கு பணிந்ததால், கடவுளிடமிருந்து பிரிந்த மானிடத்தை  மீண்டும் இறைவனிடம் இணைத்தார் என்று விளக்குகிறார்.

நான்காம் நூற்றாண்டில் :

இந்நூற்றாண்டில் வாழ்ந்த  புனித அம்புரோஸ் மரியாவை திருச்சபையின் தாய் என்றார். அவ்விளக்கத்தை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடும் பதிவு செய்தது. (திருச்சபை எண். 8)

ஐந்தாம் நூற்றாண்டில் :

மூன்றாவது திருச்சங்கம், மரியா, ‘இறைவனின் தாய்’ என்று அறிக்கையிட்டது. நெஸ்டோரியஸ் என்பவர் ‘இறைவனின் தாய்’ என்பதற்கும் ‘கிறிஸ்துவின் தாய்’ என்பதற்கும் வேறுபடுத்தி விளக்கினார். இறைவனின் தாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் இறைவார்த்தை உலகம் உருவாகும் முன்னரே இருந்தது. எனவே  உலகில் பிறந்த இயேசுவின் தாய்க்கு ‘இறைவனின் தாய்’ என்பதைவிட, ‘கிறிஸ்துவின் தாய்’ என்பது பொருந்தும் என்றார். ஆனால் திருச்சங்கம், இயேசு, கடவுளும் மனிதரும் ஆனவர். அதனை உறுதிபடுத்தும் வகையில் மரியா இறைவனின் தாய் என்பதே பொருந்தும் என்று அறிவித்தது. இன்றும் கிழகத்திய ஆர்த்தோடாக்ஸ் சபை, லூத்தரன் சபை, ஆங்கிலிக்கன் சபையினர். மரியா இறைவனின் தாய் என்ற நம்பிக்கை கோட்பாட்டினை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆறாவது நூற்றாண்டில் :

இந்நூற்றாண்டில் மரியா ஆன்ம, சரீரத்துடன் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இடம் பெற்றிருந்தது.

Ads Inside Post