Pages - Menu

Monday 27 February 2017

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள்

- அருட்சகோ. பெரேரா, சேலம்

மத்தேயு நற்செய்தி  அதிகாரம் 1 முதல் 14 முடிய


1. கொண்டாட்டம் கொண்டாட்டம்
பிறந்த நாளு கொண்டாட்டம்
தாரகை நாயகி வந்தது
தாள கதி யிட்டது
தட்டில் அதனைக் கேட்டது? யார்? எதனை?

2. மீனைப் பிடிச்சவரு
மனிதரைப் பிடிச்சாரு
சேவகன் காதை வெட்டினாரு
அழைத்தவரை சபித்தாரு யார் இவர்?

3. பந்துப் போல் இருக்கும்
பம்பரமாய் சுழலும்
கனிவுடையோருக்கு
உரிமை சொத்தாகிவிடும். அது எது?

4. வீட்டுக்கு வீடு சண்டை
ஊருக்கும் ஊருக்கும் சண்டை
நாட்டக்கு நாடு சண்டை
இதனைத் தடுப்பவர் கடவுளின் மக்கள்
இவர்கள்  எதை நிலைநாட்டுவர்?

5. நீலக் கடலிலே ஒரு மீன் - அது
அந்தரத்தில் தொங்குது
வழிக்காட்டச் சொல்லுது
வாழ்வீட்டில் நிற்குது. அது எது?

6. ஐ சக்கா ஐ ‡ இது
கடவுள் கொடுத்த கை
இடக்கைக்கு தெரியாது
வலக்கை கொடக்கனுமே. அது என்ன?

7. இறைவாக்கினர் உரைத்தப்படி
சிப்பிக்குள் முத்து பிறக்க - அது
நம்மோடு இருக்க நல்லபேரு கிடைத்தது.
  அது என்ன பேரு?

8. கவலை ஒரு சுமை தோல்வி ஒரு சுமை
சோர்வு ஒரு சுமை
அவரை மட்டும் தேடினால்
கிடைப்பதோ சுகம்
தேடுபவர் யார்? கிடைப்பவர் யார்?
9. தலாக் என்று சொல்லவில்லை
தள்ளிவிட நினைக்கவில்லை
கனவு ஒன்று கண்டாரு
செய்தி தனைக் கேட்டாரு
உடனே ஏற்றுக் கொண்டாரு.
யார். இவர்?

10. நீரிலே பூப்பேன்
நீரிலே மடிவேன்
உள்ளலவும் நினை என்பேன்
நான் இல்லை எனில் - அது
குப்பையிலே. அது என்ன?

11. பூமிக்கு கொலுசு
வானத்துக்கு வளையல்
காகத்திற்கு கலரு
மலர்களுக்கு உடை
உனக்கு மட்டும் என்ன குறை?
மூன்றெழுத்தை விட்டெறி.
அது என்ன?

12. சுறுசுறுப்புக் கொண்டது
அடைக்கலம் பெயரிது
காசுக்கு ரெண்டு
இதைவிட நீ மேல் - எனவே
ஏழு எழுத்தைக் கொண்டிரு.
அது என்ன?

13. சீறியது நல்லப்பாம்பு
கொத்தியது தளிர்களை
வெட்டு ஒன்று. துண்டு இரண்டு.
யார் அந்தப் பாம்பு
துண்டாக்கியது எது?

14. கொடிய சுரத்தால் வாடி
சுருண்டு கிடந்த மாமிய
தொட்டு குணமாக்கிட
மாமி எழுந்து பணிவிடை புரிந்தாள்
‡ அவர் யார்?

15. கடவுளின் அரியணை அது?
அவரின் பாதப்படி இது?
அது? இது? எது?
வயதானால் வெள்ளை - அது என்ன?

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய  யாத்திரிகம்

- திரு. குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 
விரகாலூர்
சிலுவைப்பாடு

இறைவனது  மேலான அளவிடற்கரிய அன்பினைக் கிறித்துவ திருமறை, புதிய ஏற்பாட்டில் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார் (யோவான் 3 : 16). இறை மகனாகிய கிறித்துவின் அன்பினைச் சொல்லும்பொழுது, அவர்தம் மகிமையயல்லாம் துறந்து, தம்மைத் தாமே வெறுமையாக்கி தம்மை உயிர் பலியாகச் சிலுவையில் அறைவதற்கு ஒப்பிக் கொடுத்ததோடு தம்மைத் துன்புறுத்தியவர் களுக்காக, தம்மைச் சிலுவையில் அறைந்தவர் களுக்காகத் தம் தந்தையிடம் மன்றாடிய அன்பின் அறிய நிலை கூறப்பட்டுள்ளது. 

வான்புகழ் வள்ளுவரின், 
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் 
என்பும்  உரியர் பிறர்க்கு” (குறள் 72)
என்ற வாக்கு நினைத்ததற்குரியது.

இரட்சணிய யாத்திரிகம் இறைவனாம் பிதாவின் அன்பை,

“தன்னொரு மகவைத்தந்த தற்பான் அன்புவாழி
பொன்னுலக கிழிந்து வந்த புண்ணியன் வாழி வாழி
மன்னுயிர் புரக்க வந்த மனுமகன் சரணம் வாழி
என்னையிந நிலைபாலிக்கு 
எம்பிரான் கிருபை வாழி”

(இரட்சணிய யாத்திரிகம், ஆதிபருவம், இராசதுரோகம் படலம் பா ‡ 7) என்று கூறப்பட்டுள்ளது.

கிறித்து சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து காட்சியளித்து விண்ணகம் சென்ற மீட்பின் செய்தியாகிய கிறித்துவ சமயச் செய்திகளை இரட்சணிய யாத்திரிகம் திறம்படச் சித்திரிக்கின்றது.

“மரணமே உன்கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே?” என பவுல் 1 கொரி 15 : 55இல் கூறுவது போல, இயேசு வள்ளல் மரணத்தின் கூர் ஒடியவும், சாத்தானின் தலைநசுங்கவும், வேத வாக்குகள் நிறைவேறவும் காரணமாக சிலுவைப்பாடு என்னும் செய்கை முற்றுமாறு கல்வாரி மலையை நோக்கிச் சென்றார் இறைமகன்.

தனி மனிதன் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும்.
யாத்திரிகன் எனத் தனி மனித நிலையில் வைத்து சொல்லப்படினும்,  உலக மக்களின் பிரிதிநிதியாகவே அவன் காட்டப்படுகிறான். அதன் காரணமாகத்தான் நூலின் தொடக்கம்

“உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” (வரலாற்றுப் படலம், பாடல் - 1) என்று அமைந்துள்ளது. அத்துடன் குமார பருவத்தில் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவையின் மேல் ஏறிய மெய்ஞான சூரியனாகிய கிறித்துவின் சிலுவைப் பாட்டைக் கூறத் தொடங்கும்பொழுது,

“உலக மகிழ்ந்த தீடேறப் பரலோக வாசிகளுக்குவகை யேற
அலகையுளந் திகிலேடி லகண்டபரி பூரணனார் அருள்மெய் வாக்கு
விலகியதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கி அன்பால்
சிலுவை மிசை ஏறியமெய்ஞ் ஞான
சூ ரியனடியைச் சிந்தை செய்வாம்”

(இரட்சணிய  சரிதப்படலம்) எனக் கூறப்பட்டுள்ளது.
- (தொடரும்)

திருகாவலூர் கலம்பகம்

திருகாவலூர் கலம்பகம்

எளிய  உரையில் - குடந்தை  சலூசா 

வீரமாமுனிவர், இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர். இயேசு சபை மறை பணியாளராக இந்தியா வந்தவர். தமிழ்நாட்டில் ஏலாக்குறிச்சி என்ற உள்கிராமத்தில் 22 ஆண்டுகள் தங்கியிரக்கிறார். தமிழநாட்டில் தங்கியிருந்த 36 ஆண்டுகளில் 36 நூலகளக்கு மேல் எழுதியுள்ளார். அவைகளில் முக்கியமானவை : தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை ஆகியவை. இந்நூல்கள் செய்யுள் யாப்பு விதிகளுடன் எழுதப்பட்டுள்ளன. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் (1726) எழுதப்பட்ட இக்காவியம், தற்கால மொழி முறையில் சாமானியர்களுக்கு படிக்க கடினமானது. அதனை எளிமைப்படுத்தி, வீரமாமுனிவரின் மொழி திறனையும், மொழி எழிலையும் காண, அருள்பணி.லூர்துசாமி அவர்கள் முயற்சி எடுத்து, விளக்கம் தந்துள்ளார் கள். மூல செய்யுளையும் அதன் விளக்கத்தையும்  கவிதை நடையிலேயே தந்திருக்கிறார் தந்தை அவர்கள். இரண்டு பாடல்களுக்கு உரிய விளக்கத்தை இங்கு காணலாம்.

கலம்பகப் பாடல் - 1

தண் சுடர் காண் மதிக்குழலி
தாங்கியபூ வடி விளங்கத்
தெண் சுடர் காலுடு வளைந்த
திருமுடிகொள் சிரமிமைப்பப்
பனியுயிர்த்து மனங்குளிர்த்தப் பருதியுடுத்து டலிங்கத்
தணியுயிர்த்து மர ரணியாய்த்
தரிப்பதுநின் விருதாமோ

பாடலின் விளக்கம் :

நீரெனக் குளிரும்  
 நிலாப்பிஞ்சில் தடம் பதித்து
மீன்(கள்) மின்னும்   
மண்முடி சீரம் ஒளிர
இரக்கம் சுரக்கம்   
இதயமே கொண்டு மக்கள்
மனந்தாமரை மலர்ந்து   மனம் மகிழ்ந்து
பரிதி உடுத்திய பொன்   
ஒளிர் மேனியுடன்
ஒப்பில்லா இறைவனை   
உலகில் ஈன்றெடுத்த
அன்னையே அரச அணிகலன்
அழகாக அணிந்திருப்பது - நின்
கொற்றத்தின் வெற்றிச் சின்னமே

கிறிஸ்தவர்களுக்கான இந்தியச் சட்டத்தின் பார்வையில் திருமணம் மற்றும் விவாகரத்து

கிறிஸ்தவர்களுக்கான இந்தியச் சட்டத்தின் பார்வையில் திருமணம் மற்றும் விவாகரத்து

வழக்குரைஞர்:  திரு. அ. அருள்தாஸ், கும்பகோணம்

முதற்சொற்கள் :

இரு மனம் இணைவதே திருமணம் என்பது பொதுமொழி. மண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சகிப்புத் தன்மை மிக அவசியம் என்பதை நன்கு அறிவோம். ஒருவரையயாருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது மணமானவர்கள் அறிய வேண்டிய வாழ்வியல் கோட்பாடாகும். ஆனால் வழக்கை நெறி தவறி நடப்பதன் விளைவாக பல திருமணங்களில் விரிசல் ஏற்படுகிறது.  ஆதலால் “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்ற விதிக்கு சற்று விலகி ‘கடவுள் தன் பிள்ளைகள் ஒரு போதும் அர்த்தமற்ற, தீய சூழலுக்கு நடுவே வாழ விருப்பம் கொள்ளமாட்;டார்’ என்று பொருள் கொண்டு, மணவாழ்க்கை இன்பமாக இல்லாத நிலையில் மணமுறிவுக்கு நீதிமன்றத்தை அணுகவேண்டியிருக்கிறது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் அது நிலவுலகில் சட்டத்தின்பால் சரியானதாக இருக்கவேண்டும்.

கிறிஸ்தவ திருமணம் - இந்திய சட்டம் :

கிறிஸ்தவர்களுக்கென தனியாக இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் (The Indian Christian Marriage Act) 1872-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதன்படி திருமண பந்தத்தில் இணைபவர்களில் ஒருவராவது கட்டாயம் கிறிஸ்தவராக இருத்தல் அவசியம். அத்திருமணங்களை நிறைவேற்ற கிறிஸ்தவ குருவானவர் அல்லது சட்டத்தின்கண் உரிமம் பெற்றவர்க்கு மட்டும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக திருமணத்திற்கு முன்பு மணமாகவிருக்கும் நபர்களின் பெயர், உறைவிடம், பங்கு முதலியனவற்றை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளார்.  குருவானவரை Ministers of Church என்று அழைக்கின்றோம். அவர்கள் அந்த அறிவிப்பை ஓலை (Banns)  முறை பங்கு மக்களுக்கு அறிவிப்பது அனைவரும் அறிந்ததே. அத்திருமணத்தில் ஏதேனும் வில்லங்கம் இருப்பின் அதை குருவானவருக்கு தெரிவிப்பது பங்கு மக்களின் கடமையாகும். அவ்வாறு நடக்கும் திருமணத்திற்கு மணமக்களும் 2 சாட்சிகளும் கையயாப்பமிட்டு பதிவை பூர்த்தி செய்வார்கள்.

மண முறிவு :

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்நோக்கி அதற்கென சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு அப்பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு விவாகரத்து சட்டம் (The Divorce Act) 1869இல் இயற்றப்பட்டது. பிறன்மனை புணர்தல்  (Adultery),, துன்பம் விழைவித்தல் (Cruelty) போன்ற பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து கோரலாம். இதேபோல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க தீர்ப்பு வழிப் பிரிவுறைவு (Judicial Sepration) மூலமாகத் திருமணத்தை முறிக்காமல் கணவன் - மனைவி தனித்து வாழ சட்டம் வழிவகை செய்கிறது.

விவாகரத்து  கோருவதற்கான  காரணங்கள்:

விவாகரத்து சட்டம் பிரிவு கீழ்க்கண்டவாறு விவாகரத்திற்கான காரணங்களை பட்டியலிடப் பட்டுள்ளன. அவை 

1. பிறன் மனை புணர்தல் (Adultery); 

2. கிறிஸ்தவத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுதல்

3. வழக்கைத் தாக்கல் செய்தலுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் தொடர்ச்சியாக     குணப்படுத்த முடியாத மனநிலையில் இருத்தல் (Unsoundness of Mind)

4. வழக்கைத் தாக்கல் செய்தலுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் குணப்படுத்த முடியாத     தொழுநோயால் பாதிக்கப்படுதல்(Virulent and Incurable form of leprosy)
   
5. வழக்கைத் தாக்கல் செய்தலுக்கு முன்னர் இரு ஆண்டுகளுக்கு குறையாமல் தொற்றக்கூடிய பால்வினை(Venereal disease in Communicable form) நோயால் பாதிப்பு

6. ஏழு வருடங்களுக்கு குறையாமல் காணவில்லை.

7. வேண்டுமென்றே தாம்பத்ய உறவில் ஈடுபட மறுத்தல்

8. நீதிமன்றத்தின் பிரிவுறைவு உத்தரவை (Judicial Sepration) இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேலாக எதிர்மனுதாரர் (Respondent)  செயல்படுத்த தவறுதல்

9. மனுதாரரை Petitioner) வழக்கு தாக்கலுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கி வாழ்தல் (Desertion)

10. மனுதாரரை எதிர்மனுதாரர் மனதளவிலோ, உடலளவிலோ துன்புறுத்தி (Cruelty) வாழ்வதால் அவருடன் வாழ முடியாத சூழலை அவருக்கு ஏற்படுத்துதல்

மேற்சொன்ன பத்து காரணங்களும் கணவன் ‡ மனைவி இருவருக்கும் பொதுவானவை. அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணத்திற்காக ஒருவர் விவாகரத்து கோரலாம். அம்மனுவின் சங்கதிகள் போதுமான காரணங்களின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டால், நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்படும். அதைத் தவிர்த்து மனைவி, தன் கணவன் மீது மணமுறிவுக்கு மற்றொரு காரணத்தையும் எடுத்துரைக்கலாம். அதாவது கணவன், கற்பழிப்பு போன்ற செயல்களில் குற்றவாளியயன நிரூபனமானால் அதனைக் காரணம் காட்டி விவாகரத்து கோரலாம். 

சம்மதத்தின் மூலம் விவாகரத்து :

பிரிவு 10புன்படி இரு சாராரும் ஒற்றுமையாக திருமண பந்தத்தை நீடிக்க விரும்பாவிடில் இருவரும் சேர்ந்து நீதிமன்றத்தில் சம்மதத்தின் மூலமாக விவாகரத்து (Divorce by Mutual Consent) கோரி மனு அளிக்கலாம். அவ்வாறாக அவர்கள் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்திருந்தால்தான் அந்த மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு கோரும் பட்சத்தில் வழக்காடுமன்றம் தத்தம் மனவேற்றுமைகளை களைந்தெறிய 6 மாத கால அவகாசம் கொடுக்கும் அதன் பின்வரும் மன ஒற்றுமைக்கு துளி கூட வாய்ப்பில்லையயன்றால் விவாகரத்து வழங்கப்படும்.

செல்லாத் திருமணம் (Nullity of Marriage)
  அதே போல் விவாகரத்துச் சட்டம் பிரிவு 186ல் செல்லாத் திருமணமாக (Nullity) அறிவித்ததற்குரிய காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக அறிவிக்க பின்வரும் காரணங்களில் எவையேனும் ஒன்றை அது பூர்த்தி செய்தல் அவசியம். அவை

1. திருமண சமயத்திலும், வழக்கு தாக்கல் செய்யும் சமயத்திலும் எதிர்மனுதாரரின் தாம்பத்ய உறவிற்கு தகுதியற்ற நிலை.

2. மணமானவர்கள் திருமணத்திற்கு தடைப்பட்ட உறவினர்களாக இருத்தல்.

3. மணமாகும்பொழுது எவரேனும் ஒருவர் பித்து நிலையில் (Lunatic of idiot)  இருத்தல்.

4. வன்தாக்குதல் (Force) அல்லது (Fraud) மோசடி மூலமாக திருமணத்திற்கு சம்மதம் பெற்றிருத்தல்.

குடும்ப நீதிமன்றங்கள் :

நம் நாட்டைப் பொறுத்த மட்டீல் 1984 ஆம் ஆண்டில் குடும்ப நீதிமன்ற சட்டத்தின் வாயிலாக குடும்ப நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மாவட்டங்களில் அமைக்கப்படும் அந்நீதிமன்றங்கள் சீரிய முறையில் செயல்பட்டு வருகின்றன. அந்நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்பட்ட தலையாயக் கடமை யாதெனில் இரு சாராருக்கும் சமரசம் ஏற்படுவதே ஆகும். அவ்வாறு சமரசம் ஏற்படுவதற்கென சமரச ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக சமரசம் ஏற்படாவிடில் வழக்கைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பளிக்கப்படும்.

விவாகரத்து வழக்குகள் மட்டுமின்றி ஜீவனாம்சம், இளவர்களுக்கு பாதுகாவலராக (Guardianship for Minors) நியமித்தல் ஆகிய வழக்குகளும் குடும்ப நீதிமன்றங்களில் அதிகார வரம்பிற்குட்பட்டதாகும். அவ்வாறு அந்த நிலப்பகுதியில் குடும்ப நீதிமன்றம் இல்லையயனில் அவ்வகை வழக்குகளை ஆராய மாவட்ட நீதிமன்றத்தை (District Court) அணுகவேண்டும்.

மேல்முறையீடு (Appeal)  :

இவ்வாறு மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது குடும்ப நீதிமன்றங்கள் தரும் இறுதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடாக  உயர்நீதிமன்றத்தையும் அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தையும் அணுகலாம். அவ்வாறாக, திருமணத்திற்கு விவாகரத்து வழங்கப்படும்ப ட்சத்தில் மேல்முறையீடு செய்யவில்லையயன்றாலோ அல்லது மேல் முறையீடு செய்யப்படும் காலத்திற்கு பின்னரோ மறுமணம் செய்ய சட்டம் வழிவகை செய்கிறது.

இளைஞனே விழித்தெழு

இளைஞனே விழித்தெழு

- பேராசிரியர். ச. சாமிமுத்து, திருச்சி

“ஒளிபடைத்த கண்ணினாய் - வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினதய் - வா வா வா”
உன்னைத்தான் இளைஞனே பாரதியார் அழைக்கின்றார், பாரதத்தை வாழ்விக்க அழைக்கின்றார்!

விழித்தெழு இளைஞனே விழித்தெழு!
“ஒற்று மைக்குள் உய்யலே நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் - வா வா வா”

ஆம், எம் தமிழ் இளைஞனே, தாழ் நிலைகளை எல்லாம் உமிழ்ந்து துப்பி,, ஒளி நிறை வாழ்வினை ஆள்வினை உழைப்பினால் ஆக்கிட, உன் கண்களை அகலவிரித்து அகன்ற இம்மண்ணுலக மாந்தரையயல்லாம் உற்றார், உறவினராக, ஓர் இறைவனின் படைப்பினராக எண்ணி ஏற்கும் எண்ணத்தினனாய், மனித நேய நெஞ்சத்தினனாய் நீ, நிமிர்ந்து பார்!

நீ கல்வி கற்கும் மாணவ பருவத்தினனாய் இருக்கலாம். பட்டம் பெற்றுப் பல்துறைகளிலே பணி புரிபவனாய் இருக்கலாம். உடலை வருத்தி  உழவுத் தொழில் புரிபவனாக இருக்கலாம். நாள் கூலிக்காய் உழைத்து உண்டு, உடுத்தி வாழ்பவனாய் இருக்கலாம். பிறக்கும்போது குழந்தையாய்ப் பிறக்கின்ற நீ, வளரும்போது வலிமைமிக்க வாலிபனாக வளருகின்ற நீ, படிப்பினால், பதவியினால் ஏன் உனக்குள் பாகுபாட்டை வளர்த்துக் கொள்ளுகின்றாய். நீ ஒரு தமிழன், தமிழ் இனப் பண்பாட்டு வாழ்வுக்கு உரியவன். நீ மொழிவெறியனாகவோ, இனவெறியனாகவோ இருக்க வேண்டாம். இருக்கவும் கூடாது! ஆனால் நீயோ, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் மனித நேய பண்பாட்டு வாழ்வுக்கு உரியவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்னும் செவ்விய வாழ்வியல் நெறியில் உன்னை ஆற்றுப்படுத்தும் வள்ளுவ முன்னோனின் மனித சமுதாய வாழ்வு நெறியில் நிலைத்து நின்று வாழும் வாழ்வுக்கு உரியவன் நீ.

மனித வாழ்க்கை என்பது, வாழ்ந்து, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்தவர்கள் வாழ்ந்து காட்டியதுதான். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று யாரும் மனித வாழ்க்கையை மாற்றிவிட முடியாது. மாற்றி அமைக்கவும் முடியாது.

வாழ்க்கையில் காலப்போக்கிற்கு ஏற்ற மாற்றம் நிகழும். அதை யாரும் தடுக்கவும் முடியாது. தடுத்தால் வாழ்வே தடுமாறி தறிகெட்டுப் போகும்.

ஆண்டுதோறும் தைத் திங்களில் பொங்கலிட்டு அறுவடை விழாக் கொண்டாடும் தமிழன், தானும் தன் மாடும் உழைத்த  உழைப்பில் வந்த புத்தரிசியைப் பொங்கலாகப் பொங்குகின்றான். அப்பொங்கலைத் தானும் உண்டு, தன் மாடும்  உண்ணக் கொடுக்கின்றான். அவ்வுணவுக்குரிய நெல்லை விளைவித்து வழங்கிய இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகின்றான். அவ்விழாவின் ஒரு கூறாகத்தான் தமிழன் ஏறு தழுவும் நிகழ்வை நிகழ்த்திக் கொண்டாடுகின்றான். பன்னூறாண்டுக் காலமாகத் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையில் நிகழ்த்தி மகிழ்ந்து வந்த ஏறு தழுவுதலை, விலங்குவதை என்று பீட்டா போன்ற அமைப்பினர் சட்டத்தைக் கூறித் தடுத்து வந்த வேளையில், உன் பாரம்பரியப் பண்பாட்டு வாழ்வையே பாழ்படுத்த வந்த சட்டத்தையும், அந்தச் சட்டத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட பீட்டாவையும் எதிர்த்து நீ காட்டமாய் அறப்போராட்டக் களத்தில் கூட்டமாய் கூடினாய். சென்னை மெரினா கடற்கரையில் நீ  உன் தமிழ் இனமான பண்பாட்டு வாழ்வைக் காக்க இலட்சோப இலட்சம் பேராய் சனவரி 16 முதல் 21 முடிய அறப்போர் புரிய உன்னை அர்ப்பணித்துக் கொண்டாய்! அதன் விளைவுதான் இன்று தமிழ்நாட்டில் ஊரெல்லாம் ஏறு தழுவல் விளையாட்டு! சல்லி கட்டு ‡ மஞ்சு விரட்டு, அந்தச் சட்டம் உன் முன் தோற்றுப்போய் விட்டது!  உன் பண்பாட்டு வாழ்க்கையை மீட்டெடுத்து விட்டாய் நீ. உன்னை நான் பாராட்டுகின்றேன். ஆனால் இதுமட்டும் உன் வாழ்வை வளப்படுத்தி விடாது! உன் உரிமை வாழ்வைப் பறித்துவரும் கரிய சட்டங்களையயல்லாம் முறியடித்து முன்னேற முனைந்திடு நீ.

ஊழலை எதிர்த்து, இலஞ்ச லாவண்யத்தை எதிர்த்து, அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்து, அரசு அதிகாரி களின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, நீதி மன்றத்தில் நிலவும் அநீதத்தை எதிர்த்து, சொல்லாட - மல்லாடத் துணிந்தெழு இளைஞனே! போர்க்களமல்ல உன் வாழ்வுத் தளம். எதை எதிர்க்க வேண்டும் - ஏன் எதிர்க்க வேண்டும் - எந்த அளவு, எப்பொழுது இணைந்து எதிர்க்க வேண்டும் என்பதையயல்லாம் இளைஞனே நீ, உன்னை ஒத்த இளைஞர்களோடு கலந்து உறவாடி, அறிவுபூர்வமாகச் சிந்தித்து, சாதக பாதகங்களை நன்கு கணித்துப் பார்த்து நீ அறப்போராட்டக் களத்தில் இறங்க வேண்டும். குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்தை ஒழிக்க அதற்குக் காரணமான டாஸ்மாக்களை ஒழிக்க உன் போர் முரசு முழங்கட்டும்!

தமிழக மாணவ இளைஞனே, குறிப்பாகத் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட், எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்குப் பெற்று, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. அதை நடைமுறைக்குக் கொண்டுவர ஒன்றுபட்டுப் போராட உறுதி பூண்டெழு. பொறியியல் படிப்புக்கும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்த நடுவண் அரசு முடிவு செய்திருக்கின்றது. இந்தத் தேர்விலிருந்தும் தமிழகத்திற்கு விலக்குப் பெற வேண்டும். இதில் நீ விழிப்பாய் இருந்து செயல்படு.

இளைஞனே நீ, மாணவனாக இருந்தாலும் சரி, தொழில்புரிந்து வாழும் இளைஞனாக இருந்தாலும் சரி உன் எழுச்சி அறப்போராட்டத்திற்கு, உன் உரிமையைப் பாதுகாக்கும் நியாயமான - வன்முறையற்ற - பொதுநலக் கூட்டுப் போராட்டத்திற்கு என்றும் வெற்றிதான். உன் வாழ்க்கை அனுபவ அறிவு குறைவாக இரந்தாலும், நீ பலரோடு இணைந்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது , நீ அறிவு தெளிவு பெறுவாய்; உன் பாதையை நீயே வகுத்துக் கொள்ளும் நல்வழி கண்டடைவாய். விழிப்பாய் இருந்து செயல்படு - அறிவு வெளிச்சத்தில் இருந்து செயல்படு - அறநெறி பிறழாது செயல்படு.
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்.”

திருடன்- சிறுகதை

திருடன்

- சிறுகதை

- எம். பீட்டர் டேமியன் ஆசிரியர், 
விரகாலூ 

பிப்ரவரி மாதம் துவங்கிவிட்டது. பனிரென்டாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. சிமுழிது ய்eழிr என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது ‡ மாணவர்களுக்கு இருக்கிறதோ, இல்லையோ, ஆசிரியர்களுக்கு அதுவும் குறிப்பாக பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு நிறையவே  உண்டு.

லியோ +2 படிக்கும் மாணவன். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். விவசாய கூலிகளான அவனின் பெற்றோர்கள் அவனைப் படிக்க வைக்க படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பெற்றோர்கள் அவனிடம் படிக்கும்படி கெஞ்சுவார்கள். பள்ளியிலேயே எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என அவர்களின் கெஞ்சலை அலட்சியப்படுத்துவான். ஒவ்வொரு தேர்விலும் இரண்டு, மூன்று பாடங்களில் பெயிலாவான். பெற்றோரிடம் அடம் பிடித்து அலைபேசி  ஒன்றையும் வாங்கிவிட்டான். எப்போதும் அதிலேயே  முழு கவனத்தையும் செலுத்தி  பொழுதை போக்கினான். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சாப்பிட, தூங்குவதற்கு மட்டுந்தான் வருவான். மீதி நேரமெல்லாம் வெளியே  நண்பர்களோடு சேர்ந்து ஊரை சுற்றுவான். இதில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேறு. தான் கேட்கும்போது பெற்றோர்கள் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் ஒரே ரகளைதான்.

லியோ படிக்கும் பள்ளியில் அன்று இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. லியோ ¼தேர்வு எழுதும் அறையில், அவனது  வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மும்முரமாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் குனிந்து ஒவ்வொருவர் விடைத்தாளிலும் கையயாப்பமிட்டுக் கொண்டிருந்தார். லியோ மெதுவாக தனக்கு முன்னால் நன்றாக படிக்கும் அருள்ராஜின் காலை தனது காலால் சுரண்டினான். திரும்பிப் பார்த்த அருள்ராஜிடம் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்களுக்குரிய விடைகளை காட்டுமாறு சைகை செய்தான். முடியாது என்று மறுத்தவனை நாக்கை கடித்து  மிரட்டினான். வேறு வழியில்லாமல் அரை மனதாக சம்மதித்த நண்பனை எட்டிப் பார்த்து வேக வேகமாக பதில்களை காப்பியடித்தான். அவ்வப்போது  ஆசிரியரையும் பார்த்துக் கொண்டான். கையயழுத்திட்டு முடித்த ஆசிரியர், நிமிர்ந்து பார்த்த பார்வையில் லியோ காப்பியடிப்பது அப்பட்டமாக தெரிந்தது. மெதுவாக அவனருகில் சென்ற ஆசிரியர் அமைதியாக அவனது விடைத்தாளை எடுத்து வைத்துக் கொண்டு, புதிய விடைத்தாளை கொடுத்து எழுதுமாறு சைகையால் கூறினார். உள்ளுக்குள் வெல வெலத்துப் போன லியோ, நடுங்கியவாறு அதே சமயத்தில் எல்லோருக்கும் முன்பாக தனது மானத்தை கப்பலேற்றாமல் விட்டு விட்டாரே என்று சந்தோ­த்தோடு  தனக்கு தெரிந்ததை அரை குறையாய் எழுதி வைத்தான். ஒரு வழியாக தேர்வு முடிந்தது. மாணவர்கள் வரிசையாக தங்களது விடைத்தாளை ஆசிரியரிடம்  ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர். லியோவும் தனது விடைத்தாளை ஆசிரியரிடம் தந்துவிட்டு வெளியே செல்ல எத்தனித்தான். ஆசிரியர் மெதுவான குரலில் அவனை மட்டும் சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினார்.

படபடத்த இதயத்தோடு, பயந்தவாறு ஓர் ஓரமாக நின்றான். எல்லா மாணவர்களும் வெளியே சென்ற பிறகு அவனை அழைத்த ஆசிரியர், “தம்பி, நான் நினைச்சிருந்தா எல்லோர் முன்னாலேயும்  உன் தவறை சுட்டி காட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் உன்னை தனியாக நான் அழைத்ததற்கு காரணம், மற்ற மாணவர்கள் முன்னால் நீ அவமானபடக்கூடாது, நீ திருந்த வேண்டும் என்பதுதான்.  ஒவ்வொரு தேர்விலும் நீ காப்பியடிக்க முயற்சி செய்கிறாய். ஆசிரியர்கள் பலமுறை உன்னை எச்சரித்தும் நீ தொடர்ந்து அதே தவறை செய்து கொண்டுதான் இருக்கிறாய். திருடர்களில் பலவகை உண்டு. நீயும் ஒரு வகையில் திருடன்தான். சிலபேர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருடுவார்கள், சிலபேர் ஆடம்பர வாழ்க்கை வாழ திருடுவார்கள். இன்னும் சிலபேர்  உழைக்க மனமின்றி திருடுவார்கள். நீ மூன்றாவது வகை.  கடினமாக உழைத்துப் படிக்க மனமில்லாமல், உன்னுடைய சோம்பேறிதனத்தால் மற்ற மாணவர்களின் உழைப்பைத் திருடி தேர்வு எழுத நினைக்கிறாய். உன் பெற்றோர்களை எனக்கு நன்றாகத் தெரியும். விவசாய கூலிகள். அவர்கள் உழைப்பில் உன் உடம்பை வளர்க்கும் நீ, ஒருவகையில் அவர்கள் உழைப்பை திருடும் திருடன்தான். நம் பள்ளியின் விருதுவாக்கு, “கடின உழைப்பு வெற்றியை விளைவிக்கும்”. அதாவது  உனக்கு தெரியுமா? இதன் பொருளை உணர்ந்திருக்கிறாயா? “உழைக்காதிருப்பின் உண்ணலாகாது” இது பைபிளில் பவுல் அடிகளார் நமக்கு போதித்த போதனை.

“உழைக்கும் வயதில் நீ உறங்க நேரிட்டால்
உறங்கும் வயதில் நீ  உழைக்க நேரிடும்”.
யோசி தம்பி! மற்றவர் உழைப்பை திருடும் திருடனாக இருக்க விரும்புகிறாயா? அல்லது நேர்மையுள்ள மாணவனாக நிமிர்ந்து வாழ விரும்புகிறாயா? மறுபடியும் சொல்கிறேன், உன்னைத் தண்டிக்க விரும்பவில்லை, உன் தவறை திருத்தவே விரும்புகிறேன், நீ போகலாம்” என்று கூறிய ஆசிரியர் வெளியே சென்று வெகுநேரமாகியும் லியோ அதே இடத்தில் சிலையாக நின்றான். கண்களில் கண்ணீர். நான் திருடனில்லை! திறமையானவன். அதை வரும் தேர்வுகளில் நிரூபிப்பேன். கண்ணீரைத் துடைத்தவன் நம்பிக்கையுடன் நட

மார்ச் மாத புனிதர்கள்

மார்ச் மாத புனிதர்கள்

-அருட்சகோ.G. பவுலின்மேரி FSAG, கும்பகோணம்



மார்ச்-4 புனித கசிமீர்  (1458 - 1484)

இவர் போலந்து நாட்டு மன்னரின் மகன். 1458இல் பிறந்தார். கற்பு நெறியிலும், ஏழை எளியவருக்கு இரங்கி  அன்பு செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். திருமறையைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டினார். நற்கருணை மீது பக்தியும், கன்னிமரியாள் மீது பற்றுதலும் கொண்டு வாழ்ந்தார். 1484இல் மார்ச் 4ஆம் நாள் குரோடுவானா என்ற இடத்தில் காசநோயால் நலிவுற்று இறந்தார். 1521இல் இவருக்கப் புனிதப் பட்டம் வழங்கப்பட்டு  இவரின் விழா உரோமைப் பட்டியலில் 1621ஆம் ஆண்டு இடம்பெற்றது.

மார்ச்-7 புனித பெர்பெத்துவா- புனித பெலிசித்தாள் : மறைசாVட்சியர்

பெர்ப்பெத்துவா உயர்குலத்தைச் சேர்ந்த பெண். பெலிசித்தாள் அவளுடைய பணிப்பெண். இருவரும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாகி, பலவித கொடுமைகளுக்கு உள்ளானார்கள். பெலிசித்தாளுக்கு 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்தது. கர்ப்பிணி பெண்களை கொல்லக்கூடாது என்ற சட்டமும் இருந்தது. கிறிஸ்தவர்கள் அவளுக்காக மன்றாடவும் குழந்தை சீக்கிரம் பிறந்துவிட்டது. இருவரும் கி.பி.203இல் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.  இவர்களின் இறப்பு பற்றிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

மார்ச்-8 புனித இறையோவான்துறவி (1495 - 1550)

இவர் கி.பி.495இல் போர்த்துக்கல் நாட்டில் பிறந்தார். படைவீரராக பணிபுரிந்தபின், நோயாளிகளின் ஊழியத்திற்காக தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்மோடு தன் நண்பர்களை சேர்த்துக்கொண்டு ,இறையோவான் ‘மருத்துவமனை சகோதரர்கள்’ என்ற ஒரு துறவறச் சபையையும், ஸ்பெயினில் ஒரு மருத்துமனையும் நிறுவினார். புனிதர், சிறப்பாக ஏழை எளியவர், நோயுற்றோருக்கான பிறரன்புப் பணியில் சிறந்து விளங்கினார். 1550இல் மார்ச் 8இல் கிரனாடா நகரிலேயே இவர் காலமானார்.

மார்ச்-14 புனித யுப்ராசியா (380 - 420)

இவள் தன் பெற்றோருக்கு ஒரே மகள். தாய், தன் மகளுடன் எகிப்து நாட்டுக்குச் சென்று கன்னியர் மடத்தினருகில் வாழ்ந்தார். ஏழு வயது ஆனதும் கன்னியர் மடத்தில் சேர ஆசைப்பட்டதால் தாயோ பெரும் தியாக சிந்தனையுடன் மகளை மடத்தின் தலைவியிடம் ஒப்படைத்தாள். தாய் தன் மகளிடம் ‘நீ அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை மறந்துவிட்டு, தாழ்ச்சியுடன் கடவுளுக்கு சேவை செய்து வா’ என்றாள். தாயிடம், பேரரசர், ஒரு அரச குடும்ப வாலிபருக்கு அவளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்திருந்தார். யுப்ராசியா தன் கைப்பட அரசருக்கு கடிதம் எழுதி மணமுடிக்க நான் விரும்பவில்லை. என் உடைமைகள் எல்லாம் ஏழைகள், அகதிகள், கோயில்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்துவிடுங்கள் என்று எழுதியிருந்தாள். பேரரசர் சாகுமுன் அவள் விருப்பங்களை நிறைவேற்றினார்.

மார்ச் 17 புனித பேட்ரிக் ஆயர் (385 - 461)

இவர் இங்கிலாந்தில் கி.பி.385இல் பிறந்தார். சிறுவயதில் அடிமையாகி அயர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அடிமை வேலையாளாக ஆடுகளை மேய்த்து வந்தார். பிறகு சற்று வசதி அடைந்தபின் மறைப்பணியாளரானார். பின்னர் அயர்லாந்துக்கு ஆயராகி அத்தீவின் மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியைப் போதித்தார். பலரை திருமறைக்கு மனந்திருப்பினார். அயர்லாந்து திருச்சபையை ஒழுங்குபடுத்தினார். டவுன்பாட்ரிக் என்ற நகரில் 461இல் இறந்தார். அயர்லாந்து நாட்டிற்கு இவர்தான் பாதுகாவலர்.

மார்ச்-19  புனித யோசேப்பு

தூய கன்னிமரியாவின் கணவர், இயேசுவின் வளர்ப்பு தந்தை இவர். தாவீது அரசரின் குலத்தைச் சேர்ந்தவர். இவர் நீதிமான் (தூய உள்ளம்) உள்ளவர். கற்பை நேசித்தவர். தாழ்ச்சி, பொறுமை, ஏழ்மை, துணிவு ஆகிய பண்புகளுடன் வாழ்வு நடத்தினார். திருக்குடும்பத்தின் தலைவர். இவர் நல்மரணத்தின் பாதுகாவலர். ‘நம்பிக்கையுடன் மக்கள் இவரது  உதவியைத் தேடினால் அதனை அடையாமல் போனதில்லை’ என புனித அவிலாதெரசம்மாள் கூறுகிறாள். இத்திருவிழா மார்ச் 19இல் சிறப்பிக்க வேண்டுமென்று 1479இல் உரோமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எப்போதும் இவ்விழா தவக்காலத்தில் வருவதால் நாளினை மாற்றி வைத்து திருவிழா கொண்டாட ஆயர் குழுக்களுக்கு அதிகாரம் உண்டு.


மார்ச்-24 புனித தோமினிக் சாவியோ (1842 - 1857)

இவரின் பெற்றோர் கல்வி அறிவையும், ஆன்மீக அறிவையும் ஊட்டி வளர்த்தார்கள். இவரின் பங்குத்தந்தை இவரை கடவுள்பக்தியிலும், அன்னைமரியாள் மீது அன்பிலும் வளர ஊக்குவித்தார். இவர் காலை 5 மணி முதல் எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் கோவிலில் இருந்து ஜெபிப்பார். மக்களுக்கு உதவி செய்வார். ‘கடவுளுக்கு சேவை செய்வது நமக்கு மகிழ்ச்சி தரும் என்றும், கடவுளை மக்கள் நேசிக்கச் செய்வது, வல்லமையுள்ள நற்செய்தி பணியாகும்’ என்ற கருத்துக்களை, புனிதர் ஜான்போஸ்கோவிடமிருந்து கற்றுக்கொண்டார். “தோமினிக்கை போன்று திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட தூய்மையை சாகும்வரை காப்பாற்ற வீரத்துடன் போர்புரிந்தால் அவன் உண்மையாகவே புனிதன்” என்று திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் கூறினார்.

மார்ச்-31 புனித பெஞ்சமின்  (-424)

பாரசீக நாட்டில் அப்தாஸ் என்னும் ஆயர் அக்கினி தேவதையின் ஆலயத்தை தீயிட்டு எரித்து விட்டார். இதைக் கண்ட அரசன், “மீண்டும் அவ்வாலயத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லையயனில் கிறிஸ்தவ கோயில்கள் அனைத்தையும் அழிப்பேன்” என்றான். ஆயர் மறுத்ததால் கிறிஸ்தவர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டு, ஆயர் கொல்லப்பட்டார். கொடிய கலாபனை தொடங்கியது. துன்புற்றவர்களில் ஒருவர் பெஞ்சமின் என்னும் திருத்தொண்டர். இவரையும் சிறையில் அடைத்தார்கள். ‘கிறிஸ்தவ சமயத்தைப் பற்றி பேசக்கூடாது’ என்று நிபந்தனையுடன் விடுதலை பெற்றார். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி பேசவது என் கடமை. நான் மெளனமாக இருக்க முடியாது என்று கூறினார். இதனால் இவரைப் பிடித்து வதைத்துக் கொன்றார்கள்.

அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்

- சவரி, கேரி

இந்த வாரம் உங்களுடன் பெண் சுதந்திரத்தை பற்றி பேச விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கு நிகராக கல்வியூட்டி, விளையாட்டில் ஆர்வம் இருந்தால், நல்ல பயிற்சி அளித்து, தன்னம்பிக்கையுடன் வளர்க்கிறார்கள். இதனால்தான் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களைவிட பெண்கள் நிறைய தங்கங்களை அள்ளி வருகிறார்கள். கால்பந்து போட்டிகளிலும், கைபந்து போட்டிகளிலும் அமெரிக்க பெண்கள் அணி உலக அணிகளில் சிறந்த அணியாக சிறந்து விளங்குகிறது. வேலை வாய்ப்புகளில் தகுதியானவர் யாராக இருந்தாலும் ஆண்/பெண் வேறுபாடின்றி வேலை தரவேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனால் நல்ல வேலை வாய்ப்பை பெற்று ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள். பெண்கள் நுழையாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் கால்பதித்து ஆண்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து, பாரதி கண்ட புதுமை பெண்ணாய், பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள். சமீப காலத்தில் ராணுவத்தில் துரையில் இறங்கி, போர்களை உள்படுத்தும் கடின பணியிலும், அரசாங்கத்துடன் சண்டையிட்டு நுழைத்து விட்டார்கள்.

இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் பெண்கள் பலரிடம், அமெரிக்க நாட்டில் அவர்களுக்கு பிடித்தது என்ன? என்று கேட்டால், பெரும்பாலானவர்களின் பதில் இங்குள்ள சுதந்திரமும், பெண்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் என்றும் பதில் வரும். அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் சென்று வர கணவன் துணையோ, மற்ற ஆடவர் துணையோ தேவையில்லை. இங்குள்ள கார்கள் பெண்களும் ஓட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் சாலை விதியை மதிப்பதால் சாலைகளில் கார் ஓட்டுவது எளிதாக உள்ளது. றூPறீ என்ற கருவியில் செல்லும் இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டால், கையை பிடித்து கூட்டி செல்வது போல், ஒவ்வொரு வளைவுகளிலும் சரியான திசையில் திரும்ப சொல்லி சரியான இடத்துக்கு சரியான நேரத்துக்கு கூட்டி சென்று விடுகிறது. இதனால் பெண்கள் இங்கு தன்னிச்சையாக அலுவலகங்களுக்கும், மற்ற இடங்களுக்கும் செல்ல முடிகிறது.

இந்த பெண் சுதந்திரத்தை போராடி தான் பெற்றுள்ளார்கள். 1920‡இல் தான் பெண்கள் ஓட்டுபோடும் உரிமையை பெற்றார்கள். ஒரு பெண் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. கடந்த வருட தேர்தலில் ஹில்லரி கிளின்டன் இந்த கனவை நனவாக்கி விடுவார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. கூடிய விரைவில் இன்னொரு பெண் இதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டிலும், பெண்கள் பல துறைகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். நமது அரசும், நமது சமூகமும் பெண்களின் திறமைகளை மதித்து, அதை வெளிக்கொணர்ந்து, அவர்கள் வாழ்வில், செய்யும் வேலைகளில் வெற்றி வாகை சூட வழிவகைகளை செய்ய வேண்டும். பாரதி கண்ட புதுமை பெண்கள் நம் நாட்டில் எங்கும் உயிர்பெற வேண்டும்.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் 
எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பிள்ளை காணென்று கும்மியடி
                                                             - பாரதியார்

நான் எழுத்தாளன் ஆனேன்..

நான் எழுத்தாளன் ஆனேன்...

16. ஆயர் தாமஸிடம் ஒப்படைத்தார்

- லெயோ ஜோசப், 
திருச்சி
எழுத்துப் பிரதியை கவியரசு கண்ணதாசன் தாமஸ் ஆயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், குருக்கள், கன்னியர்கள் குழுமி இருந்தனர்.

உரிய நேரம் வந்ததும் கவியரசு கண்ணதாசன் எழுத்துப்பிரதியை ஆயரிடம் கொடுத்துப் பேசினார் : இந்த இயேசு காவியத்தைக் கண்ணதாசன் எழுதலாமா என்று  உங்கள் பக்கமும் எதிர்ப்பு எங்கள் பக்கமும்  எதிர்ப்பு. அவன் குடிகாரன் என்று  உங்கள் பக்கத்தில். அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி எழுதிய கண்ணதாசன் இயேசுவைப் பற்றி எழுதலாமா என்று எங்கள் பக்கத்தில்!

‘மரிய மதலேனாளைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவள் எவ்வளவு பெரிய பாவி என்பதும் தெரியும். அவளை மன்னித்த இயேசு இந்த கண்ணதாசனை மன்னிக்க மாட்டாரா?’

கைதட்டல் வானைப் பிளந்தது. அதன் பிறகு 2 மணி நேரம் பேசினார். அதன் பிறகுதான் பிழைத்திருத்தம் எல்லாம். கடைசி அமர்வை கொடைக்கானலில் வைத்துக் கொண்டோம். இயேசு சபைக்குச் சொந்தமான மிக  உயர்ந்த இடத்தில் இறுதி அமர்வை முடித்தோம்.

இறுதி ஸ்கிரிப்ட், அசை சேர்த்தல் எல்லாம் முடிந்தது. ஃபாதர்.ஸ்தனிஸ்லாஸ் உப தலைப்புகள் எல்லாம் எழுதினார். ஸ்க்ரிப்ட் ரெடி. கண்ணதாசனிடம் படித்துக் காட்டிவிட்டு அச்சகத்துக்குப் போக வேண்டியதுதான். கண்ணதாசனிடம் படித்துக் காட்டவேண்டும். யார்  போவது? ஃபாதர்.ஜார்ஜ், ஃபாதர்.அமுதனையும், என்னையும்  தேர்வு செய்தார்.

ஒரு குழுவாக சென்னை சென்றோம். கண்ணதாசன் கவிதா ஹோட்டலுக்கு வந்து விடுவார். அவர் ‘போதும்’ என்று சொல்கிற வரையில் ஃபாதர் அமுதனும், நானும் மாறி, மாறி படிப்போம். அவர் ‘போதும்’ என்று சொன்னதும் நிறுத்தி விடுவோம். இனி மறுநாள்தான்.

சில சமயங்களில் சில சுவையான வி­யங்களைப் பற்றிப் பேசுவார். நான் எற்கனவே எழுத்தாளர் கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார்.

‘ஒரு புலவன் அரசனைப் பார்க்கப் புறப்பட்டான். நெடுந்தொலைவு நடந்து வந்த களைப்பு, தூக்கம் வந்தது. அரசனின் மஞ்சத்தின் மீதே படுத்து  உறங்கிவிட்டான். அரசன் வந்தான். தனது மஞ்சத்தில் புலவர் படுத்து உறங்குவதைக் கண்டான். புலவர் எழுந்திருக்கும்வரை விசிறியால் விசிறி விட்டான்’. இதை எழுதி வைத்தவன் ஒரு புலவன்தான்.

‘இன்னொரு புலவன் அரசனைப் புகழ்ந்து பாடினான். மகிழ்ந்த அரசன், என்ன வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு புலவன் ‘யானைக் கன்றும், வளநாடும் வேண்டும்’ என்றான். ‘ஏன் புலவரே, உமக்கே, சாப்பாட்டுக்கு வழியில்லை. இதில் யானைக் கன்றை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்?’ என்று அரசன் கேட்டான். அதற்குப் புலவன், ‘நான் இன்னொருவருக்குத் தருவதாக வாக்களித்திருக்கிறேன்’ என்றான்.

‘வேறொரு புலவன் அரசனைப் புகழ்ந்து பாடினான். மகிழ்ந்த அரசன் பொற்கிழி கொடுக்க விரும்பினான். பொற்கிழியை சும்மா நீட்டினால் அவ்வளவு மரியாதையாக இருக்காதே என்பதால் ஒரு தட்டு கொண்டுவரச் சொன்னான்’. தங்கத்தட்டு ஒன்று வந்தது. பொற்கிழியைத் தட்டில் வைத்து நீட்டினான். புலவனுக்குத் தங்கத்தட்டுமேல் ஆசை வந்துவிட்டது.

‘மன்னா, பணத்தட்டு உனக்கா? எனக்கா?’ என்று கேட்டான்.
‘பணத்தட்டு’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘பணத்தட்டு’ என்று ஓர் அர்த்தம். ‘பணத்துக்குத் தட்டுப்பாடு’ என்று ஓர் அர்த்தம்.
அரசன் பார்த்தான். ‘பணத்தட்டு  உனக்கே இருக்கட்டும்’ என்றான்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவிகள். முதல் இரண்டு முறையான திருமணம். மூன்றாவது திருமணம் காதல் திருமணம். அவர் தமது முதலிரவு பற்றிக் கூறினார். அவர் பேசிக் கொண்டே இருந்தாராம். அவர் மனைவி ஒன்றும் பேசவில்லையாம். அவர் பேசுவதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தாராம். கண்ணதாசன் நினைத்தாராம், தமக்கு நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று. காலையில்தான் தெரிந்ததாம், அவர் டமாரச் செவிடென்று. 
(இன்னும் சொல்வேன்)

Sunday 26 February 2017

பெண்கள் சாதனையின் கண்கள்

பெண்கள் சாதனையின் கண்கள்

அருட்சகோ. முனைவர். விமலி. FIHM
தமிழ்த்துறைப் பேராசிரியர், இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

“நிலவினில் இருக்கின்ற
களங்கத்தை அவளது
பெருவிரல் துடைத்துவிடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்துவிடும்”

என்ற வைரமுத்துவின் கவிதை வரிகளுக்குகொப்ப பெண்ணுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னால் கல்வி வாய்ப்பு அத்தனை எளிதல்ல. “பேதமை” அறிவின்மை பெண்ணுக்கு அழகு என கருதப்பட்டது. மெல்ல மெல்ல, ‘பால் கணக்கு கடிதம் எழுதத் தெரிந்தால் நல்லது’ என்று ஆரம்பக் கல்வி, பின்பு பதின்பருவம் அடையும்வரை படிக்க அனுப்புவது, பின்பு உள்ளூரில் உள்ள பள்ளியில் எந்த வகுப்பு வரை உள்ளதோ அதுவரை படிக்க அனுப்புவது என்ற நிலைகள் மாறி, பிறகு சில சேவைத் துறைசார் படிப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பாதுகாப்புத் துறைகள் அவர்களுக்கு மிக அன்னியமான துறைகளாயின. ஆணுக்கு நிகரான சமூக அந்தஸ்து  போன்றவற்றிற்காகப். பெண்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர், வரதட்சணை, பெண் சிசுக்கொலை, பாலியல் பலாத்காரம், கடத்துதல் போன்ற கொடூரத்திற்கு ஆளாகி  உடலாலும், உள்ளத்தாலும் பாதிப்படைந்து அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்தது. இருப்பினும் பெண்கள் என்றுமே வாழ்க்கைக் கூறில் ஒரு பாதியாக விளங்குபவர்கள். காலத்தாலும், சூழ்நிலையாலும் அன்றும்,  இன்றும் ஒரு சில தடைகள் வந்தாலும், அவர்கள் வளர்ச்சி படிகளில் முன்னேறியே வருகின்றனர். குடும்பத்திலும், சமுதாயத்திலும் பெண்கள் இன்றி முன்னேற்றம் காண முடியாது என்பதுதான் எதார்த்தம். இத்தகு நனி சிறந்த ஆற்றல் சால் மகளிரை மாண்புறச் செய்வதையே இக்கட்டுரை ஆய்ந்துள்ளது.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 
என்று பாடினார் பாரதி.

‘உரிமைகள் மறுக்கப்படும்போது, உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாத போது, சுதந்திரம் மதிக்கப்படாத போது, நீதி நிராகரிக்கப்படும்போது, வெற்றியின் அனுபவங்கள் ஏராளம் என்று இயல்பாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கான  உலகத்தை  உரிமையாக்கி  உயரலாம்’ என்ற ஸ்பார்டகஸ் என்பவரின் வீரவாக்கிற்கேற்ப கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. அதில் சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரப் பெண்களின் சில ஆளுமையை இவ்வண் நோக்குவோம்.
இலட்சியத்தை அடைய தோல்வியும் வெற்றியே!

படிக்க வசதியில்லை என்பதால், பள்ளி, கல்லூரிகளுக்குப் போக முடியாமல் தவிக்கிற பெண்களுக்கு மத்தியில் நம்பிக்கை தருகிறார் பாண்டீஸ்வரி. மதுரை, வில்லாபும் பராசக்தி நகரைச் சேர்ந்தவர். தன்னை மிரட்டிய குடும்ப வறுமையை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார். மாலை நேரங்களில் மதுரை கீழ மாசி வீதிக்குச் சென்றால் அவரை பஜ்ஜியும் கையுமாகப் பிடித்துவிடலாம். தள்ளுவண்டி கடையில் பலகார வியாபாரத்தை நடத்தி, அதன் மூலம் வருமானத்தில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆவதே எனது கனவு என்கிறார். 

தினம் பத்துப் பக்கம் வாசிப்பதற்கே யோசிக்கிறவர்களுக்கு மத்தியில், தனித்த கவனம் ஈர்க்கிறார் லோகாம்மாள். இவர் மாதம் ஒரு புத்தகம் எழுதுவது என்ற கொள்கையுடன் செயல்Vபட்டு வருகிறார். கடந்த 29 மாதங்களில் 23 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

தேசிய சாதனை படைத்த பூங்கோதை :

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பான கிராமங்களின் ஆதாரத் தொழிலான விவசாயம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளும் இதைத்தான் நிரூபிக்கின்றன. இப்படியயாரு கசப்பான சூழலில் பெரம்பலூரைச் சேர்ந்த 60 வயது பூங்கோதை, தானியங்கள் உற்பத்தியில் தேசிய சாதனை புரிந்து, வயல்தான் வாழ்க்கை என்ற நம்பிக்கை அளித்துவருகிறார்.

ஜெயிக்க  வைத்த  சணல் :

‘பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்’ என்ற சிந்தனை தற்போது அதிகரித்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த ஜெசி தனது கடின உழைப்பால் தமிழகத்தில் சணல் பொருட்கள் உற்பத்தியாளர்களில் குறிப்பிடத் தக்கவராக மாறியிருக்கிறார்.

இளம் வயதில் கணவரை இழந்தவர் திருமதி. பாரதி, 32, கணவரால் கைவிடப்பட்டவர் திருமதி. யஹலன்மேரி, 45. இருவரும் தனது கடின உழைப்பால் உயர்ந்து, இன்று ஆட்டோ வாங்கி ஓட்டுநர்களாக அவர்களே சுய தொழில் செய்து, தமது வாழ்வில் உயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு  சாதனையாளர்களின் பட்டியல் இன்று எல்லாத் துறைகளிலும் கனிசமான தளத்தை அடைந்துள்ளது. இன்றைய பெண்கள் மிகவும் திறமைசாலிகள். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறமைப் படைத்தவர்கள். புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது  என்பதை  நம்புவோம்.

விண்ணைத் தொட்ட கனவு : 

தென்னாப்பிரிக்காவில் சராசரிக் குடும்பத்தின் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவர் ´போங்கீலி சம்போ, விமானப் பணிப் பெண்ணாக ஆக வேண்டும் என்று விரும்பியவர். உயரம் போதாது என்று ஒதுக்கப்பட்டார். அந்த நிராகரிப்பை அவர் தோல்வியாகக் கருதவில்லை. மகத்தான மற்றொரு வாய்ப்பு தனக்குக் காத்திருப்பதாகவே அவர் நம்பினார். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் அவரைத் தொடர்ந்து வழிநடத்தின. விமானப் பணி பெண்ணாகத் தேர்வாகாதவர், சில ஆண்டுகளிலேயே, விமான சேவையை ஆரம்பித்த முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

ஹாரிபாட்டர் பல புத்தகங்களை எழுதியவர், ஜே.கே.ரவுலிங் JK Rowling) என்னும் ஒரு பெண்மணி. அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், “ The Frimge Benefits of Failure”  என்ற தலைப்பில் பேசிய உரை மிகவும் பிரபலமானது. அது புத்தகமாகவும் வெளியானது. ‘நீங்கள் உங்களது மனவலிமை பற்றியும், மனவுறுதி பற்றியும் அறியத், தோல்வியை விட சரியான சோதனை வேறென்ன இருக்க முடியும்? நீங்கள் எப்போது பின்னடைவுகளிலிருந்து மேலும் வலிமையுடனும், திறமையுடனும் எழுதுகிறீர்களோ, அப்போது  உங்களின் வாழ்க்கை தானாக வெற்றியடையும். எனவே தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வலி மிகுந்த வெற்றியே,  உண்மையான வெற்றி. நாம் எங்கும் கற்க முடியாததை, தோல்வியே நமக்குக் கற்றுத் தரும். ஆகவே தோல்வியை பலவீனமாக கருதாமல், பலமாய் கருதினால், நமக்கு நன்மைகளே கிட்டும்’ என்கிறார்.

கனவுகள் மெய்ப்படும் காலம் :

திருமணம் என்ற இலக்கைக் கடந்து பெண்கள் தங்களுக்கான கனவுகளைக் காண வேண்டும். அதை நோக்கிய திட்டமிடலும் தொடர் பயணமும் வேண்டும். சாதனை பெண்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். தன்னை அலங்கரித்து, தொலைக்காட்சியில் தொலைத்து, இலட்சியமின்றி வாழும் வாழ்வுக்கு முடிவு காண வேண்டும். நாட்டில் சரிப்பாதி பெண்ணினம்  முடங்கிக் கிடந்தால், நாட்டின் முன்னேற்றம், பெண்ணை உயர்த்துவதோடு, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை நிச்சயம் உயர்த்தும். பெண்களே! உங்களுக்கான கனவுகளை நீங்களே காணுங்கள். அது மெய்ப்படப் பயணம் செய்யுங்கள்.

(இக்கட்டுரை எழுதும் ஆசிரியர் மேற்கண்ட தகவல்கள், தகவலாளரிடம் பேட்டி மற்றும் தொலைப்பேசி வழி சேகரிக்கப்பட்டது).

ஞாயிறு தரும் இறைவார்த்தை, தவக்காலம் முதல் ஞாயிறு 05-03-2017

ஞாயிறு தரும் இறைவார்த்தை

- அருள்பணி.. ச. இ. அருள்சாமி,  கும்பகோணம்

தவக்காலம் முதல் ஞாயிறு    05-03-2017

தொ நூ 2 : 7 - 9, 3 : 1 - 7;   உரோ 5 : 12 - 19;    மத் 4 : 1 - 11

ஒருவரின் உடல்பலம் குறைந்தால் நோய்கள் வரும். ஒருவரின் அன்பின் பலம் குறைந்தால் தீமைகள் அங்கு தலையயடுக்கும். ஜார்ஜ் எலியட் கூறுவார், ‘சாத்தான் நம்மை சோதிப்பதில்லை. நாம்தான், சாத்தானின் திறமையை நம்மிடம் காட்ட, அதனை அழைக்கிறோம்’ என்கிறார். நம்மில் பலகீனம் என்கிறோம், பலம் என்கிறோம். பலகீனத்திற்கு வரவேற்பு தந்தால், அங்கு தீமையின் பள்ளத்தில் வீழ்கிறோம். பலத்தோடு நின்றால் தீமைகளை பள்ளத்தில் வீழச் செய்கிறோம்.

தவக்காலத் தொடக்கத்தில் இயேசுவிற்கு சாத்தான் கொடுத்த சோதனைகளை நற்செய்தி நம்முன் வைக்கிறது. உணவு, பெருமை, அதிகாரம் ஆகியவைகளில் சாத்தான் சோதனைத் தருகிறது. இச்சோதனைகளை இணைச்சட்ட நூலில் 6 - 8 இயலிலுள்ள வார்த்தைகளைக் கொண்டு இயேசு சோதனைகளை வெல்கின்றார். சாத்தான் இந்தவழி என்கிறது, இயேசு அதுவல்ல இதுதான்  உண்மையான வழி என்கிறார்.

இணைச்சட்ட நூலில் வரும் 6 - 8 இயல்கள், மோசே இஸ்ரயேல் மக்களுக்கு ஆற்றிய இரண்டாவது சொற்பொழிவில் இடம்பெறுகிறது. இச்சொற்பொழிவில் இச 6 : 4 - 25 என்ற பகுதியில், கடவுள் தரபோகின்ற நாட்டில் அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச 8 : 1- 10 என்ற பகுதியில், ‘கடவுள் பாலை நிலத்தில் கொடுத்த மன்னாவை நினைவு கூறுங்கள். எனவே உணவிற்கான கவலை உங்களுக்கு வேண்டாம். இறைவனின் வார்த்தைகளை உணவாக உண்ணுங்கள்’ என்கிறார்.

இச 6 : 5இல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு எதிராக செயல்பட அழைப்பதுதான் இயேசுவின் முன் வைக்கப்பட்ட சோதனைகள்.

‘ஆண்டவர் ஒருவரே ஆண்டவர், உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும்  உன் கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்வாயாக’.  இதயம் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இழுத்து செல்லும் உள்ளுணர்வு. உள்ளம் என்பது வாழ்வு. வாழ்வையே தியாகம் செய்யும் செயலும் இதில் அடங்கும். ஆற்றல் என்பது  உலக செல்வங்கள், முழு இதயம், முழு உள்ளம், முழு ஆற்றல் என்பவை முழு அன்பைத்தான் குறிக்கின்றன. முழு அன்பின் நிலையிலிருந்து குறைந்து செல்ல அழைப்பதுதான் சோதனை. பால்பர் என்பவர் கூறுவார், ‘வாழ்வு என்பது தொடர்ந்த பயணம். நம் பயணத்தில் நன்மை. தீமை ஆகியவைகளுக்கிடையில் ஒரு சுவர் உள்ளது. அச்சுவரில் உட்காருவது நம் பயணம் அல்ல. ஏதாவது ஒரு வழியில் சென்றுதான் ஆகவேண்டும். அந்த வழியில் செல்ல அதனுள் சென்றால் அதுவும் முடியும்’ என்பார்.



சிலுவைப் பாதை

சிலுவைப் பாதை

- அருள்சகோ. அமலா கபிரியேல் SMMI,
 கும்பகோணம்.

முன்னுரை : 

புரட்சி ஏடுகளை புரட்டிப் பார்த்தால் புனிதப் பயணம் செய்தோர் ஏராளம், ஏராளம். புவி வாழ் மாந்தரின் புதுவாழ்வுக்காய் பொய்த்துப் போன உலகில், புது விடியலுக்காய், சுமையால் சோர்ந்த உள்ளங்களில் சுடர்வீசும் ஜோதி விளக்காய், வறண்டு போன நிலங்கள் வளம்தருபவனவாய், கனமான சுமைகளை சுகமாய் தன்தோளில் தூக்கி புறப்படுகின்றார் புரட்சி நாயகன். இது ஓர் இலட்சியவாதியின் பயணம். ஓர் நீதிமானின் நீதிக்கானப் போராட்டம். அன்பை மனதில் சுமந்து தீர்ப்பிடாமல் அனைவரையும் ஏற்று  உண்மைக்காக உயிர் கொடுக்க, ஏன் உயிரையும் தாரை வார்த்து, உயிர்க்கும் வரை போராடும், இச்சிலுவைப் பயணத்தில், வாழ்வின் அனுபவங்களைத் திரும்பிப் பார்ப்போம்.

முதல் நிலை : இயேசுவின் சிலுவை மரணத் தீர்ப்பு

தலைவர் : ஆளுநன் பிலாத்து இயேசுவைத் தீர்ப்பிடுகிறான். உண்மை ஊமையான நேரம் இது. நீதி விலைபோன நாள் இது. பதவியும் பணமுமே பிரததானம். 

இன்றும் அநீதி தலைவிரித்தாடுகிறது அநியாயமாக கற்பழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஓர் ஆங்கிலேயர், அதன்பிறகு நிரபராதி என்று தீர்ப்புப் பெற்று விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும்  உற்றார், உறவினர் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் உண்மைக்கு சான்று பகர்பவர்களா? நீதியை எந்நாளும் காப்பவர்களா?

துணை : எங்கள் மேல் இரக்கமாயிரும்.

இரண்டாம் நிலை: இயேசுவின் தோள் மேல்  சிலுவை

தலைவர் : 

பழியில்லா பரமன் இயேசுவின் தோளில் சிலுவை மரம். இவனிடம் எந்தக் குற்றமும் காணவில்லை என்ற தீர்ப்புப் பெற்ற இயேசுவிற்கு கசையடி? முள்முடி? ஏளனப் பேச்சு? அடி, உதை? போதாதென்று சிலுவைப் பயணம். சென்ற ஆண்டு 2016 இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைப் பாருங்கள். அவர்தம் தோளில் இருந்தது ஆளுயர மலர்மாலை. 5 விரல்களில் தங்க மோதிரங்கள், கத்திக் கோ­ம் போடும் பக்த கோடிகள். பணம், பதவி, செல்வாக்கு, தொண்டர்களுக்காக தியாகம் செய்யும் தலைவர்களா இவர்கள்? இயேசவின் சீடர்களான நாம், நம் தலைவர் இயேசுவைப் போல் துவண்டுவிடாது, பிறர் நலம் காப்போமா?

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

மூன்றாம் நிலை: இயேசு முதன்முறையாக கீழே விழுகிறார்

தலைவர் : 

அண்டத்தை ஆக்கிய ஆண்டவன் இயேசு, சிலுவையோடு விழுந்து கிடக்கிறார். தலைநிமிர்ந்து தரணியில் வலம் வந்த நாயகன், சிலுவை பாரம் தாங்காது தரையில் விழுந்து கிடக்கிறார். தன்னால் இயலவில்லையே என்ற தன் இயலாமையை தரணிக் கண்டு எள்ளி நகையாடுமே என்ற வேதனை.  இருப்பினும், அவர் நம்பிக்கை இழக்கவில்லை. நம் நாயகன் இயேசுவைப் போல் திருச்சபையும் தன் ஆற்றாமையை, அகிலத்தன்முன் ஏற்றுக் கொண்டது. ஜீபிலி ஆண்டான 2000இல் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஜெருசலேம் சென்றபோது, பழமை வாய்ந்த புலம்பும் மதில் முன் மண்டியிட்டு, திருச்சபை கடந்த 2000 ஆண்டுகளாக மத நம்பிக்கையின் பெயரால் யூதர்கள், இஸ்லாமியர், பிறஇனத்தாரக்கு எதிராகச் செய்த கொடுமைகளை எண்ணி மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டி செபித்தார். நம் திருத்தந்தையைப் போல் நாமும் நம் இயலாமைகளை ஏற்றுத், தயங்காது ஏற்றுக் கொண்டு, மீண்டும் எழுந்து பயணத்தைத் தொடர்வோம்.

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

நான்காம் நிலை : தாயும், மகனும் சந்திக்கின்றனர்

தலைவர்

தாயும், மகனும் சந்திக்கும் நேரம் கொடுமையானது. வரலாறு காணாத ஓர் சந்திப்பு. 10 மாதம் சுமந்த தாய், 30 ஆண்டுகள் மகனை வளர்த்த தாய், உறவின் இலக்கணமாய், உறவின் பாடங்களை உலகிற்கு கற்பித்த தாய்.       ஜே, ஜே நகரைச் சார்ந்த ஜெயலெட்சுமி என்ற 18 வயது பெண் தீக்காயங்களால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மரணமடைந்தாள். அவள் தந்த மரண வாக்குமூலம் என் அண்ணனின் நண்பன் எங்கள் குடும்பத்தில் ஒருவனாய் பழகினவன், வலுக்கட்டாயமாய் என் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டி, என்னைக் கற்பழித்து தீயிலிட்டான். நான் செய்த குற்றம். அவனின் ஆசையை அறியாது, பெற்றோர் பார்த்தவரை இரண்டு வாரங்களில் திருமணம் செய்ய இருந்தது. உலகில் அன்பும், பண்பும் பஞ்சாய் பறந்துபோய், போலித்தனமும், சுயநலமும் உறவுகளில்  உருவாகும்போது, மரியன்னையும் இயேசுவும் கண்ணீர் விடுகின்றனர்.

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

ஐந்தாம் நிலை:  சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார்

தலைவர் : 

இயேசுவிற்கு தோள் கொடுக்கிறார் சீமோன். கொடிய யூதர்கள் வலுக்கட்டாயமாய் சீமோனின் தோளில் இயேசுவின் சிலுவையை வைத்து சுமக்கச் செய்கிறார்கள். வரம் கொடுக்கும் வல்ல தேவனுக்கே கரம் கொடுத்த சீமோன் இவர். 

அஞ்சலகத்தில் அஞ்சல் பிரிக்கும் பெண்மணியின் ஓர் அனுபவம். கடவுளின் முகவரிக்கு ஓர் அஞ்சல், அதைப் பிரித்துப் படித்துப்போது, வயதான மூதாட்டி கருணைத் தொகை ரூ. 1000 அனுப்பக் கடவுளைக் கெஞ்சி வேண்டினார். படித்த அஞ்சலகப் பெண்ணின் மனமிரங்க, சக ஊழியர்களிடம் பெற்ற நன்கொடையோடு ரூ. 900 அனுப்பினாள் சில நாட்கள் கழித்து மூதாட்டியிடமிருந்து மற்றுமொரு கடிதம். பிரித்துப் படித்துப் பார்த்த போது, கடவுளே நன்றி, நீர் 1000 ரூபாய் அனுப்பியிருந்தாலும், எனக்கு ரூபாய் 900 மட்டுமே கிடைத்தது. அஞ்சலகத்தில் உள்ள அயோக்கியர்கள் வஞ்சகம் செய்துவிட்டனர் என எழுதியிருந்தாள் மூதாட்டி.
நேசக்கரங்கள் நீட்டும்போது அவைகளுக்குப் பின் இருப்பது தன்னலமா? அல்லது தியாக உணர்வா?

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

ஆறாம் நிலை : வீரப் பெண்மணி வெரோணிக்காள் இயேசுவின் திருமுகத்தை துடைக்கிறாள்.

தலைவர் : 

சூரியனை மங்கடிக்கும் ஜோதிபிரகாச இயேசுவின் திருமுகம் முள்முடி அழுத்திட இரத்தங்களாக வியர்வைகள் வெளியேறி அலங்கோலமானது முகம். வாளேந்திய வீரர் நடுவே வருகிறார். தன் உயிரையும் துச்சமென்று மதித்து, பரிவு கொண்ட நெஞ்சோடு இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள். என்ன ஆச்சரியம்! துடைத்தத் துணியில் இயேசுவின் திருமுகம் பதிந்தது. கல்கத்தாவில் நம் புனித அன்னை தெரசா 60 ஆண்டுகளாக தெருத்தெருவாக தன்னந்தனியே சென்று, துன்புறும் மானிடரை, அவர்தம் தனிமை, பிணி போன்றவற்றைத் துடைத்தார். இன்றும் இயேசுவின் பாடுகள் தொடர்கின்றன. துயர்  போக்கிடும் மேலும் பல வீர வெரோணிக்காக்கள் தேவை.

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

ஏழாம் நிலை : இயேசு இரண்டாம் முறை தரையில் கீழே விழுகிறார்

தலைவர்

இயேசுவின் பாதையில் மீண்டும் தரையில் சாய்கிறார். கொளுத்தும் வெயில். பாதங்களைச் சுட்டுப் பொசுக்குகின்றன. சிலுவையின் சுமை. இயேசுவின் பயணத்தில் மீண்டும் தடங்கல். 

பத்துக் கட்டளைகளை நிலைநாட்டும் இயக்கம் என்னும் போலி கிறிஸ்துவ அமைப்பில் 500 பேர்களுக்கு மேலான கிறிஸ்தவர்கள் இறுதிநாளைத் துரிதப்படுத்தும் வகையில் தங்களையும், கோவிலோடு தீக்கிரையாக்கினர் என்ற செய்தி  உலகையே  உலுக்கியது. ஆனால் நடந்தது, இரு தலைவர்கள் தங்கள் சீடர்களை வற்புறுத்தி சொத்துக்களை விற்கச் செய்து, மறுத்தவர்களை கொலை செய்து, கோவிலில் புதைத்து, அங்கத்தினர் 200 பேரையும் கோவிலில் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, சொத்துக்களோடு தப்பிவிட்டனர். விடுதலை தரவேண்டிய மதம் பலரின் அறிவை மழுங்கச் செய்து, உள்ளங்களை அடிமையாக்கி கீழே விழத்தாட்டுகின்றனர். நாம் பிறரை ஏமாற்றி விழவைக்கிறோமா?

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

எட்டாம் நிலை : அழுத ஜெருசலேம் பெண்களுக்கு இயேசு ஆறுதல் கூறுகிறார்

தலைவர் : 

பெண்களின் மனம் இரங்கும் தன்மையுடையது. பிறர் துன்பம் கண்டு மனம் பொறுக்காது. அழுது கண்ணீர் வடிக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள், தங்களுக்காக அழுவதைவிட, தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவர்களுக்காகவே அதிகம் கண்ணீர் வடிக்கின்றனர். 
காஷ்மீர் - குக்கிராமத்தில் அதிகாலையில் 40 தீவிரவாதிகள் வந்தனர். உறங்கிக் கொண்டிருந்த அத்தனை ஆண்களையும், வீட்டிற்கு வெளியே வரச்சொல்லி, வரிசையில் நிற்க வைத்து கண் இமைக்கும் நேரத்தில் 35 பேரை சுட்டுக் கொன்றனர். அத்தனைப் பெண்களும், கணவனை இழந்தும், மகனை இழந்தும் கதறி அழுகின்றனர். நமது வீட்டில், சமுதாயத்தில் பெண்களின் கண்ணீருக்கு நான் எந்த விதத்தில் காரணம்?

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

ஒன்பதாம் நிலை : இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்

தலைவர் : 

ஒருமுறை தவறியவருக்கு மூன்று முறை. இதோ! இயேசு மூன்றாம் முறை விழுகிறார். செங்குத்தான பாதை, சுமையான சிலுவை. உடல் பெலனற்று வீழ்கின்றார். ஆயினும் இது பயணத்தின் பாதை. நான் எழவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன், அமைதியாய், அழகாய், அரணாய் நின்ற எரிமலை, திடீரென்று குமுறத் தொடங்கி, ஒரு சில நாட்களில் வெண்புகை எழும்பி, அதன் நெருப்புக் குழம்பை பல மைல்கள் தூரத்தில் துப்பியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அத்தனையையும் விட்டு விட்டு, அபலைகளாக, அனாதைகளாக, உயிருக்குப் பயந்து ஓடிய காட்சியை தொலைக்காட்சி காட்டியது. ஏன் இவர்களுக்கு இந்த சோகம்? இயேசுவைப் போல் நம்பிக்கையோடு எழுந்து நடப்போம் வாழ்வில். நாம் நம்பிக்கையை இழப்பது எப்போது? மனம் சோர்ந்து, தளர்ந்து  போவது எதனால்? 

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பத்தாம் நிலை : இயேசுவின் ஆடைகள் களையப்படுகிறது

தலைவர்: 

மனிதன் பிறக்கும் போது ஆடையின்றிப் பிறக்கிறான். இறக்கும்போதும் ஆடையோடு இறக்கின்றான். இயேசுவின் ஆடைகள் மட்டும் உரியப்படவில்லை. மனித மாண்பும் உரியப்பட்டது. 

நம் உலகில் பலருக்கு நிர்வாணம் ஒரு நிர்ப்பந்தம். ஆனாலும் அதுவே ஒரு சிலருக்கு நாகரீகம். உடுத்த உடையின்றி வாடும் ஏழைகள் ஒருபுறமிருக்க ஆடம்பரச் செலவுகளுக்கதன பணத்தை விரயமாக்கும் நபர்களை நினைப்போம். பலரின் வறுமைக்கும், சிலரின் பேராசைக்கும் உண்மையில் தொடர்பு உண்டு. நமது நிலை என்ன? நாம் ஆடம்பரப் பிரியர்களா?

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பதினொன்றாம் நிலை: இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள்

தலைவர் : 

சிலுவைப் பாதையின் உச்சக்கட்டம் சிலுவையில் அறைதல். தொட்டில் இல்லை இவர் பிறக்கும்போது. துணி இல்லை அவர் குளிரில் வாடியபோது. உலகம் சேர்ப்பதில் பெருமை கொள்கிறது. இயேசுவோ தன்னை இழப்பதில் பெருமை கொள்கிறார். தான் சுமந்து வந்த சிலுவையே தற்போது இயேசுவை தாங்கி அறையப்படும் சிலுவையாக மாறிவிட்டது. நல்லதைச் சொல்ல நடந்த கால்களும், நல்லதைச் செய்த கைகளும் கூரிய ஆணிகளால் துளைக்கப்படப் போகின்றன.

நம் பாரதநாட்டிலும் கற்கவேண்டிய ஆயிரமாயிரம் சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாக, சுமைத் தூக்கிகளாக, குப்பை பொறுக்குபவர்களாக ஏன்? பட்டாசு உற்பத்தித் தொழிற்சாலைகளில் எத்தனை கொடுமைகள்? எத்தனை வேதனைகள்? எத்தனை ஆணிகள்? இவர்களின் பிஞ்சு உடலைத் துளைக்கின்றன. இவர்களின் மென்மையான இதயத்தைக் கிழிக்கின்றன. அறையப்படுவது குழந்தைகள், துயரப்படுவது இயேசு.

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பன்னிரெண்டாம் நிலை : இயேசு சிலுவையில் மரிக்கிறார்

தலைவர் : 

மானத்தைக் காக்க அங்கியைக் கேட்டாய் ‡ கொடுத்தேன்.
மூச்சை நிறுத்த மூன்று ஆணிகளைக் கொடுத்தாய் ‡ பெற்றுக்கொண்டேன்.
இரத்தம் சிந்தி  உன் உயிரைக் காத்தேன்
மீதம் இருக்கும் என் அருமை உயிரும் உனக்குத்தான்.
மனிதன் வாழ்வதற்கென்றே பிறக்கிறான். இயேசுவோ இறப்பதற்கென்றே பிறக்கிறார். வாழ்வின் ஊற்றாகிய இறைவனே இறந்ததால், இறப்பே வாழ்வின் பிறப்பானது. துயரத்தின் சின்னமாகிய சிலுவை மீட்பின் கருவியானது. இயேசுவின் இறப்பு நமக்கெல்லாம் பிறப்பு. இயேசுவின் சாவு, நமக்கெல்லாம் வாழ்வு.
இயேசுவின் பிறப்பு நம் அனைவரின் மீட்பு. நாம் வாழ அவர் இறந்தார்.

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பதிமூன்றாம் நிலை : மரித்த இயேசுவின் உடல் மரியின் மடியில்

தலைவர் : 

“தாயின் மடியில் தலை வைத்தால் துயரம் தெரிவதில்லை” (கண்ணதாசன்) “தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை”. இறைவனை எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காணமுடியாது என்றுதான் இறைவன் தாய்மார்களைக் கொடுத்துள்ளார். கருவறை முதல் கருவிழி போல் காத்த மகனைத் தோளைக் தொட்டிலாக்கித் தாலாட்டிய மகனை, இரத்தத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்த மகனை, பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகனை வேதனைக் கடலில் அமிழ்த்துள்ளார். இன்றும் சமுதாயத்தில், பலவிதமான மகன்களை இதயத்தில் வைத்து அழும் தாய்மார்கள் இதோ.
1. திடீர் விபத்து, வியாதியால் இறந்த மகன்களால்.
2. பாடுபட்டு நீரை வியர்வையாக்கி, வாழ வைத்தும் பெற்றோரைப் பராமரிக்காத மகன்களால்.
3. குடி, போதையினால் சீர்கெட்டு வாழும் மகன்களால்.
4. உழைத்துப் படிக்க வைத்தும் வேலையில்லா மகன்களால், வாழ்வில் குறிக்கோள்  இல்லாமல் வாழும் மகன்களால்.

துணை : எங்கள்மேல் இரக்கமாயிரும்.

பதினான்காம் நிலை : இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கின்றனர்

தலைவர்

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே நமக்கு சொந்தமடா”. இங்கே ஒரு வரலாறு புதைக்கப்படுகிறது. ஒரு சகாப்தம் முடிவடைகிறது. பிறந்ததும் அடுத்தவரின் மாடடைக்குடில். அடக்கப்படுவதும் அடுத்தவரின் கல்லறையில். இலட்சியவாதி அழிக்கப்படுவதில்லை. மாறாக, விதைக்கப்படுகின்றான். சாவும், கல்லறையும் நமக்காகக் காத்திருக்கின்றன. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம்  என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம்? என்பதே முக்கியம். வாருங்கள் நாமும் சமாதி கட்டுவோம். நமக்கல்ல, மாறாக நம் சுயநலத்திற்கு, நம் ஆணவத்திற்கு, நம் மனிதத்தன்மைய்ற செயலுக்கு, நம் சாதி வெறிக்கு, நம் கொள்கையற்ற வாழ்வுக்கு, நம் சந்தேகப் புத்திக்கு, உதட்டளவில் சமாதி கட்டாமல், உள்ளத்தைத் தொட்டுக் கட்டுவோம்.

இறுதி ஜெபம் : 

அன்பின் இறைவா, உம் சிலுவையின் பாதையை தியானித்து நடந்த எங்களைக் கண்ணோக்கும். எம் வாழ்வின் பாதையில் சிலுவையை எங்களின் அடிச்சுவடுகளாக, அடையாளமாக, தியானிக்க, வாழ்வில் நடக்க, எம்மோடு வாரும். கரம்பிடித்து வழிநடத்தும். ஆமென். 

Saturday 25 February 2017

திருப்பலி விளக்கம் 13. நற்கருணை வழிபாடு (I)

திருப்பலி விளக்கம்
13. நற்கருணை வழிபாடு (I)

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

இயேசு கிறிஸ்து தமது கல்வாரி சிலுவைப்பலியை முன்கூட்டியே தமது இறுதி இரவு உணவின்போது கொண்டாடினார். இன்று அதே சிலுவைப்பலியைத் திருஅவை பீடத்தில் கொண்டாடுகிறது. இதற்கு அடிப்படையாக இருப்பது  “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று சொன்ன அவரது வார்த்தைகளாகும்.

இயேசு சொன்ன வார்த்தைகளும் அவர் செய்த செயல்களும் இன்று நற்கருணை வழிபாட்டை அமைக்க திருஅவைக்கு உதவுகின்றன. இந்த நற்கருணை வழிபாடு “நன்றி வழிபாடு” என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் நற்கருணையைக் குறிக்கும் ‘யூக்கரிஸ்தியா’  (Eucharistia) என்ற கிரேக்கச் சொல் ‘நன்றி கூறுதல்’ என்று பொருளுடைய ‘யூக்கரிஸ்தெயின்’ (eucharistrein) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. 

இந்த நற்கருணை வழிபாடு (1) காணிக்கைப் பொருள்களைத் தயாரித்தல், (2) நற்கருணை மன்றாட்டு, (3) நற்கருணையைப் பிட்டு உட்கொள்ளுதல் ஆகிய ஆக்கக்கூறுகளால் ஆனது. இவை ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.

அ.காணிக்கைகளைத் தயார் செய்தல்

முற்கால நடைமுறை

திருஅவையின் தொடக்க காலத்திலிருந்தே மக்கள் அனைவரும் தத்தம் காணிக்கைகளை மகிழ்வோடு பாடிக்கொண்டு பவனியாக பீடத்திற்குக் கொண்டு வந்தார்கள். இக்காணிக்கைகள் முதலில் அப்பமும், இரசமுமாயிருந்தன. நாளடைவில் பீடத்திற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும், அதாவது எண்ணெய், மெழுகுவர்த்தி, மலர்கள், மற்றும் ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க பழம், காய்கறிகள் கொணரப்பட்டன. இவற்றிலிருந்து அந்நாள் திருப்பலிக்குத் தேவையான அப்பமும், இரசமும் மட்டும் ஒதுக்கி பீடத்தின்மீது வைக்கப்பட்டன. ஒதுக்கி வைக்கப்பட்டதால் விeஆreஆழிமிற்து இவை  ‘செக்கெரேத்தும்’  (Secretum) என்று அழைக்கப்பட்டன. இவற்றின்மீது சொல்லப்பட்ட செபத்தை ‘சீக்ரெட்’(Secret), அதாவது ஒதுக்கி வைக்கப்பட்டவை மீது செபம் என்று அழைக்கப்பட்டது. இதை அறியாதவர் அதை அமைதி செபம், அதாவது அருள்பணியாளர் காணிக்கைகள் மீது அமைந்த குரலில் சொல்லும் செபம் என்றார்கள். இவ்வாறு அமைந்த குரலில் சொல்வது கட்டளையாகவும் இருந்தது.

தொடக்கக்காலத்தில், அதாவது கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவெடுத்தக் காணிக்கைப் பவனி 8-ஆம் நூற்றாண்டு வரை சிறப்பான முறையில் திருப்பலியில் நடைப்பெற்றது. அதன்பிறகு தன் முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்து, கடைசியில் முற்றிலும் கைவிடப்பட்டது.

இரண்டாவது வத்திக்கான் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சி

கைவிடப்பட்ட காணிக்கைப் பவனியைப் புதுப்பித்து. அருள்பணி யாளருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காணிக்கைகளை ஒப்புக் கொடுத்தல் என்று அழைக்கப்பட்ட பகுதி, மாற்றப்பட்டு “காணிக்கைகளைத் தயார் செய்தல்” என்று அழைக்கப்பட்டது. இதில் பலியை நிறைவேற்றும் அருள்பணியாள ருடையவும், காணிக்கைகளைப் பவனியாகக் கொணரும் நம்பிக்கையாளர்களுடையவும்
ஈடுபாடு அடங்கியுள்ளது. அருள்பணியாளரின்
திருநிலைப் பாட்டில் அப்பத்தட்டையும், திருப்பலி கிண்ணத்தையும் ஆயர் அவர் கைகளில் கொடுத்து “மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்று நீர் திருப்பலி ஒப்புக்கொடுப்பீராக” என்று சொல்வது இரு சாராருடைய ஈடுபாட்டை தெளிவாக்குகின்றது.

காணிக்கையின் இறையியல்

திருப்பலி என்பது இயேசுகிறிஸ்து கல்வாரியில் செலுத்திய பலியை அடையாளங்கள் வழியாக பலிபீடத்தில் நிகழ்த்துவதாகும். இயேசுகிறிஸ்து கல்வாரி மலையில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்தையாம் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார். அதேபோல் திருப்பலியில் அருள்பணியாளரும், நம்பிக்கை யாளர்களும் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும். இயேசுகிறிஸ்து கல்வாரியில் தம் உயிரை மாய்த்து, இரத்தத்தைச் சிந்தி பலியை ஒப்புக்கொடுத்தார். அதேபோல் இன்று செய்ய திருஅவை அப்பத்தையும், இரசத்தையும் அடையாளங்களாகப் பயன்படுத்தி தன்னைப் பலியாக்குகிறது. இதற்கான வழியை இயேசு கிறிஸ்துவே தமது இறுதி இரவு உணவில் அப்பத்தையும், இரசத்தையும் பயன்படுத்தியதின் வழியாக வகுத்துக் கொடுத்தார்.

கோதுமை மணிகளிலிருந்து அப்பம் தயார் செய்ய இடம்பெறும் செயல்பாடுகளும், அதேபோல் திராட்சை பழங்களிலிருந்து இரசம் தயாராக இடம்பெறும் செயல்பாடுகளும் பலியை ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர், நம்பிக்கை யாளர்களுடைய வாழ்வில் செயலாக்கம் பெறவேண்டும். இந்த உருவ மாற்றத்தில் பாஸ்கா அடங்கியுள்ளது. அதாவது  கோதுமை மணிகள் உடைக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, பிசையப்பட்டு அப்பம் உருவாவதுபோல் பீடத்தில் பலியை ஒப்புக்கொடுப்பவர்கள் உடைக்கப்பட வேண்டும், நொறுக்கப்பட வேண்டும். அதேபோல் திராட்சை பழங்கள் பிழியப்பட்டு, சாராக்கப்பட்டு இரசமாவது போல பலியை ஒப்புக்கொடுப்பவர்கள் கசக்கப்பட வேண்டும். இந்த உண்மையை உணர்த்தும் விதமாகத்தான் “கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்” (உரோ 12 : 1) என்கிறார் புனித பவுல். அதாவது, நம்முடைய நொறுங்குண்ட உள்ளத்தை நாம் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
திருப்பலியை நிகழ்த்தும் அருள்பணியாளர் அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும்  போது சொல்லும் மன்றாட்டு இதைத் தெளிவாக்குகிறது.

“ஆண்டவரே. அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப் பெறுவீராக.
ஏனெனில், உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்;
நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்”.

இதே போன்று இரச கிண்ணத்தை அருள்பணியாளர் எடுத்து சொல்கிறார்.

“ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, 
நீர் வாழ்த்தப் பெறுவீராக.
ஏனெனில், உமது வள்ளன்மையிலிருந்து
நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம்.
திராட்சை செடியும் மனித உழைப்புத் தந்த
இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். 
இது எங்களுக்கு ஆன்ம பானமாக மாறும்”.

காணிக்கைப் பவனியும், காணிக்கை பாடலும்

அப்பத்தையும், இரசத்தையும் ஒப்புக்கொடுப்பது வெறும் சடங்காக மட்டும் இராமல், மேலே நாம் குறிப்பிட்ட இறையியல் சிந்தனைகள் பொருள் உள்ளதாக மாற வேண்டுமானால் காணிக்கை பவனி மக்கள் பெருவாரியாகக் கூடிவரும் திருப்பலிகளில் எல்லாம் இடம்பெற வேண்டும். நம்பிக்கை யாளர்கள் கொண்டுவரும் காணிக்கைகளாகிய அப்பமும், இரசமும், இன்னும் மற்ற பொருள்களும் அவர்களுடைய வாழ்க்கைப் பலிகளின் வெளிப்பாடும், அடையாளங்களாகவும் இருக்கும்போது இறைமக்களுடைய பொது குருத்துவம் செயலாக்கம் பெறுகிறது.

“முற்காலத்தில் நடந்ததுபோல், இன்று நம்பிக்கையாளர் தங்கள் உடைமைகளிலிருந்து திருவழிபாட்டிற்காக அப்ப, இரசத்தைக் கொண்டு வருவதில்லை என்றாலும் காணிக்கைப் பொருள்களைக் கொண்டுவரும் சடங்கு இன்றும் ஆன்மீக ஆற்றலும், பொருளும் கொண்டுள்ளது” (றூணூயூனி, 73). 

இக்காணிக்கைகள் பவனியின் போது, தகுதியான பாடல் பாடப்பெறுவதால் பவனி மாண்புறுகிறது; பவனியின் பொருள் வெளிக்கொணரப்படுகிறது. இந்தக் காணிக்கைப் பாடல் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கும் போது சொல்லப்படும் மன்றாட்டையும், மேலே நாம் விளக்கிய இறையியல் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். அர்த்தமற்ற பாடல்களைப் பாடக்கூடாது.

எடுத்துக்காட்டாக :
“சின்ன குழந்தை இயேசுவுக்கு 
என்ன கொடுப்பது - நாம்
என்ன கொடுப்பது”
என்று பாடுவது முறையற்றது. ஏனெனில் பலியில் காணிக்கைகள் கடவுளுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கப்படுகிறது என்பது மேலே நாம் குறிப்பிட்ட “ஆண்டவரே. அனைத்துலகின் இறைவா ....” என்ற செபத்திலிருந்து தெளிவாகிறது.

காணிக்கைகளைப் பவனியாகக் கொண்டு வரவில்லை என்றாலும், காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் சடங்கின் போது காணிக்கைப் பாடல் எப்பொழுதும் இடம்பெறும்.

உண்டியல் எடுத்தல்

காணிக்கை நேரத்தில் உண்டியல் எடுத்து பீடத்தருகில் வைக்கும் பழக்கம் தொடக்கத்தி லிருந்தே இடம்பெறும் ஒரு நிகழ்வு. இதைப் பொருள் உள்ள முறையில் அமைப்பது நல்லது. திருப்பலியில் மக்கள் மன்றாட்டுகளைச் சொல்லும் போது உண்டியல் எடுப்பதைத் தொடங்கி முடித்து காணிக்கைப் பவனியின்போது கொண்டு வந்து காணிக்கைகளை ஏற்கும் அருள்பணியாளரிடமோ, திருத்தொண்டரிடமோ கொடுப்பது நல்லது. திருஅவையின் தேவைக்காக காசு தண்டுவதற்கு விவிலியத்தில் ஆதாரங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக புனித பவுல் பின்வருமாறு கூறுகிறார் : “இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம் .... நீங்கள் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து  உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்” (1கொரி 16 : 1 - 4; காண்                    உரோ 15 : 28; 2 கொரி 8 : 1 - 24).
காணிக்கைப் பவனியின்போது கொண்டு வரப்பட்ட பணத்தையும் மற்றக் கொடைகளையும் .... பலி பீடத்திற்குப் புறம்பே தகுந்த இடத்தில் வைக்க வேண்டும் (GIRM,73). பலி பீடத்திற்கு முன் திருப்பலி முடியும் வரை வைத்திருக்கக்கூடாது.
(தொடரும்)

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

- ச.இ.அ

 நீ என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்  (யோவா 20 : 29).

உடல் பார்வைக்கு தூரம் உண்டு.
உணர்வு பார்வைக்கு உறவு உண்டு.

 நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும் (மத் 8 : 28 - 34).

தீமைகள் நாற்றத்தின் கடல்.
தீயவர் இழிவினில் எழில் காண்பர்.

 உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் (லூக் 6 : 27)

பகைக் கோடுகள் தருவது சுகக் கேடுகள்

 ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் (யோவா 13 : 15)

பணிவு  தலைமையின் முதல் எழுத்து

நல்ல மனிதர்களும் உண்டு

நல்ல மனிதர்களும் உண்டு

பாபநாசம், கோடுகிளி என்ற கிராமத்திற்கு கார் ஒன்றில் சென்றேன். அதன் ஓட்டுநர் ஓர் இளைஞர். அவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் பணத்தை பற்றி கேட்பதில்லை. முதலில் நோயாளியை மருத்துவ மனையில் சேர்த்திட எந்த மருத்துவமனை என்று கேட்டு அங்கு அழைத்துச் செல்வேன். பிறகு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்றார், இந்த மனநிலை எப்படி தனக்கு வந்தது என்றும் விளக்கினார்.

அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. சாகும் நிலையில் இருந்தார். அவரை தஞ்சாவூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல டாக்சி வாகனங்களை கேட்டிருக்கிறார். வழியில் அவர் இறந்துவிடுவார் என்று டாக்சி ஓட்டுநர் அனைவரும் அவர் தந்தையை எடுத்து செல்ல மறுத்துவிட்டனர். பிறகு ஆட்டோ பிடித்து அழைத்து சென்றார். பிறகு இவர் டாக்சி ஓட்டுநராக ஆனபிறகு தான் சந்தித்த அனுப வம் முள்ளாக குத்தியிருக்க, மருத்துவத்திற்காக யார் டாக்சி கேட்டாலும் உடனடியாக வண்டி எடுத்துக் கொண்டு செல்வேன் என்றார். மற்றொரு அனுபவத்தை யும் கூறினார். அவரின் 2 வயது பையனுக்கு கிட்னியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு நண்பர் ஒருவர் இரண்டு  லட்ச ரூபாய் கொடுத்து  உதவினார். பிள்ளைக்கு இந்த கிட்னி பிரச்சனை அவரின் மனைவியிடமிருந்த தைராய்டு காரணமாகத் தான் ஏற்பட்டது என்று கூறினர்.

ஆனால், தன் மனைவிக்கு தைராய்டு நோய் இருப்பது திருமணத்திற்கு முன் தெரியும். தைராய்டு நோயினால் குழந்தை பிறப்பில் சிக்கல் உண்டாகும் என்றும் தெரியும். இருப்பினும் ஒரு பெண்ணுக்கு நாம் வாழ்வளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்களுடன் உறவு உண்டாகிறது. ஏழைகளின் உறவு உருக்கமானது, நெருக்கமானது என்றார்.

Ads Inside Post