Pages - Menu

Monday 28 March 2016

திருத்தந்தை பக்கம்

திருத்தந்தை பக்கம்

அருட்தந்தை. அ. பிரான்சிஸ், பாபநாசம்

1. இதயக் கதவுகள் திறக்கப்படட்டும் :

10 - 02 - 2016 திருநீற்றுப் புதன் அன்று தவக்காலத் தொடக்க வழிபாட்டினை திருநீறு பூசி திருத்தந்தை வழிநடத்தினார். புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு வேளையில் உலகெங்கும் இருந்து 1000 குருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறை இரக்கத்தின் தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். தமது மறையுரையில் இதயக் கதவுகள் இறைவனை நோக்கி திறக்கப்படட்டும். கீழ்க்காணும் நான்கு காரணிகள் இதற்குத் தடையாக உள்ளன.

அ. நமது தவறுகளைச் சிறிதென எண்ணுதல் அல்லது தவறுகளை நியாயப்படுத்துதல். மற்றவர்களை விட நான் ஒன்றும் பெரும் பாவியல்ல என்ற மனநிலை.

ஆ. இதயத்தின் இரகசியக் கதவைத் திறந்து பாவ நிலையிலிருந்து எழும்பிட வெட்கப்படுதல்.

இ. நமது தவறுகளிலேயே உழன்று கொண்டு தெய்வ பயம் குறைதல்.

ஈ. இதன் மூலம் ஆன்மாவின் இருள் அடர்ந்த பகுதிகளிலேயே மூழ்கிக் கிடத்தல்.
இவற்றினை அகற்றி இத்தவக்காலத்தில் நமது இதயக் கதவுகளை இறைவனுக்காய் திறந்து          வைப்போம்.

2. உரோமை நகரின் யூதச் செபக்கூடத்தில் திருந்தந்தை :

திருத்தந்தை புனித பவுல் யோவான் யூதர்களை நமது மூத்த சகோதரர்கள் என்றழைத்தார். இந்தச் சிந்தனையின் அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிஸ் ஜனவரி 17 அன்று உரோம் நகரில் உள்ள யூதர்களின் செபக்கூடத்திற்குச் சென்று செப வழிபாட்டில் பங்கேற்றார். திருத்தந்தையர்கள் யோவான் பவுல், 16 ஆம் பெனடிக்ட் ஆகியோருக்குப் பின் இந்தச் செபக்கூடத்திற்கு வருகை புரிந்த மூன்றாவது திருத்தந்தை இவரே. இவ்வேளையில் இறையியல் பின்னணியில் உற்று நோக்கும் போது கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட முடியாத ஒருமைப்பாடு உண்டு. யூத வேரோட்டமின்றி கிறிஸ்தவம் கிடையாது. கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையின் வழியாக இஸ்ராயேல் மக்கள் மீது இறைவன் கொண்டிருந்த உடன்படிக்கை ஒரு தொடர்பயணம். இப்பயணத்தினையே திருச்சபை தொடர்கின்றது என்று கூறினார்.

மேலும் இன்றைய உலகு சுற்றுச் சூழல், அமைதி மற்றும் உயிர் பாதுகாப்பு ஆகிய மூன்று சவால்களைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. 16 ‡ 10 ‡1943 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள், ஆகியோர், யூதர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உரோமையினின்று வெளியேற்றப்பட்டனர். அது மட்டுமின்றி மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த அறுபது லட்சம் யூதமக்களின் துன்பங்கள் மற்றும் இவர்களின் கண்ணீர் மறக்கப்பட முடியாதே என்றுரைத்தார்.

3. கிறிஸ்தவ சமய புரட்சியின் 500 ஆவது ஆண்டு விழாவில் திருத்தந்தை பங்கேற்க உள்ளார் :

1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் மார்ட்டின் லூத்தர் ஸ்வீடன் நாட்டின் லுண்ட் என்னும் நகரில் கிறிஸ்தவ சமயத்துக்கெதிரான 95 கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டார். இதன் ஐநூறாவது ஆண்டு விழா ஸ்வீடனில் கொண்டாடப்பட உள்ளது. உலக லூத்தரைன் கழகம் (ஸிற்மிஜுrழிஷ்ஐ நிலிrயிd ய்ஷ்derழிமிஷ்லிஐ) இங்குதான் உதயமானது. இதன் பொதுச் செயலாளர் மார்ட்டின் ஜீங்க் இந்நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகையில் முரண்பாடுகளினாலும், வன்முறையினாலும் சிதறுண்டு போயுள்ள உலகுக்கு, நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றின் கத்தோலிக்கர் மற்றும் லூத்தரைன்கள் மத்தியில் மலரும் ஒன்றிப்பின் மூலம் வழங்க முடியும் என்கின்றார்.

திருச்சபையின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகத் தலைவர் கர்தினால் குர்ட் கோச் என்பவரின் கூற்றுப்படி, கிறிஸ்துவ மைய அணுகுமுறையில் மரித்து உயிர்த்த இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினை ஆழப்படுத்தும் விதமாக இந்த விழா அமையும். மேலும் லூத்தர் சபையில் பிறந்து கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ந்து, தற்போது ஆயராகப் பணி புரியும் மேதகு ஆன்டர்ஸ் அப்போரெல்லியுஸ், நமது உலகியல் ஈடுபாட்டில் வாழும் மாந்தருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும், அவரின் நற்செய்திக்கும் உயிருள்ள சாட்சிகளாக வாழ இந்த விழா அமையும் என்கின்றார்.

4. அருள்பணியாளர்களுக்கு ஒப்புரவு அருள்சாதனம் வழங்கிய திருத்தந்தை :

பிப்ரவரி 11 அன்று ஜான் லாத்தரன் பசிலிக்காவில் குழுமியிருந்த குருக்களோடு உரையாடினார். இவர்களுக்குக் கடவுளின் பெயர் இரக்கம் என்னும் புத்தகத்தை வழங்கினார். அதன் பின் அங்குள்ள சில குருக்களுக்கு பாவசங்கீர்த்தனம் கேட்டு பாவ மன்னிப்பினை அளித்தார்.

5. திருத்தந்தை மற்றும் ரஷ்ய ஆர்தடாக்ஸ் திருச்சபை தலைவர் சந்திப்பு :

மெக்சிகோ நாட்டிற்குச் செல்லும் வழியில் கியூபா நாட்டின் ஹவானா விமான நிலையத்தில் ரஷ்ய ஆர்தடாக்ஸ் தலைவர் மேன்மை தங்கிய கிரில் அவர்களை 12 ‡ 02 ‡ 2016 அன்று திருத்தந்தை சந்தித்தார். அவ்வேளையில் இருவரும் மனம் திறந்து பேசி வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு, அன்னை மரியா மற்றும் புனிதர்களின் வணக்கத்தில் ஒன்றிணைந்துள்ள நாம் நம்மிடம் உள்ள
கடந்த கால கசப்புகளை மறந்து கரம் கோர்த்து வாழ்வோம். மேலும் சிரியா, ஈராக் இன்னும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடைபெறும் அநீதியான கொலைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உலகெங்கும் வாழும் மக்களுக்கெதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற முறையில் சொல்லப்படும் கோடிக்கணக்கான மக்கள் கொலைகளுக்கெதிராக உலக சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கருத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை அமைந்துள்ளது.

மெக்சிகோவில் திருத்தந்தை :

பிப்ரவரி 12 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் தனது மேய்ப்புப்பணி பயணத்தினை மெக்சிகோ நாட்டில் மேற்கொண்டார்.பிப்ரவரி 16 அன்று மெக்சிகோவின் பொக்கி­மாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். இயேசுவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினையே நீங்கள் செல்வமெனக் கருத வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் தாம் அமைதியின் தூதுவராக வந்திருப்பதாகவும், இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் மது போன்றவற்றை விற்பவர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

குருக்கள் மற்றும் துறவியரைச் சந்தித்த போது, நீங்கள் இயேசுவின் ஊதியம் பெறும் வேலைக்காரர்கள் அல்ல, மாறாக நீங்கள் அவர்களின் பணியாளர்கள். எனவே மக்களின் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் ஊனப்படுத்தும் அநீதிக்கெதிராக உரிமைக்குரல் எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 


Tuesday 15 March 2016

உயிர்ப்பில் மலரும் இறை இரக்கம்

உயிர்ப்பில் மலரும் இறை இரக்கம்
அருள்தந்தை. அ. பிரான்சிஸ்,
பாபநாசம்.
உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சங்கமம் அவதே தமிழுக்கு அணங்கும், அழகுமாகும். உயிரோடிணைந்த உடலே வாழ்வுச் செயலாக்கம் பெறுகிறது. பாவ மாசகன்ற வாழ்வே ஆன்மாவினுக்கு அழகூட்டி மணம் கமழச் செய்கிறது. அகத்தூய்மை புறத்தூய்மை இரண்டுமே இறை இரக்க மனிதராக ஒருவரை மாற்றி இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்கச் செய்கிறது. தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் (லேவி 19 : 1). ஆண்டவரின் நியமங்கள் சரியானவை ; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை ; அவை கண்களை ஒளிர்விக்கின்றன (தி. பா. 19 : 8)

பாவத்தின் சம்பளம் மரணம். சாதலின் இன்னாத தில்லை (குறள் 230). அதாவது சாவை விடத் துன்பமானது எதுவும் இல்லை என்பதுவே வள்ளுவம் கூறும் வாழ்வியல் உண்மை. மரணமில்லாப் பெருவாழ்வினை நோக்கியே நாம் பயணிக்கிறோம். பாவத்தினின்றும், சாபத்தினின்றும், நோய், பிணியினின்றும் விடுவித்திட இயேசு பாவிகளையும், நோயாளர்களையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்போரையும் தேடிச் சென்று உயிர்ப்பு வாழ்வு வாழச் செய்தார். பாவத்தினால் உருக்குலைந்த மனிதனை கிறிஸ்து தமது உயிர்ப்பினால் புத்துரு அளக்கின்றார். இயேசவின் உயிர்ப்பில் இணைந்து பங்கேற்றிட கீழ்க்காணும் கருத்துக்கள் செயலாக்கம் பெறட்டும்.

1. பாவ அறிக்கை : 

பாவத்தை வெறுத்துப் பாவிகளை அரவணைப்பவர் இறைவன். பாவத்தில் உழலும் மனிதன் பிளவுபட்ட மனப்பான்மை கொண்டு தான் வாழும் சமூகத்தைச் சீரழிக்கின்றான். எனவே பாவ நிலை அகற்றிப் பாவப் பரிகாரம் மேற்கொள்ள இத்தவக்காலம் நம்மை அழைக்கின்றது.

2. ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கையிடுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமை மிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும் (யாக்கோபு 5 : 16). பாவம் பற்றிய உணர்வு மங்கிக் கொண்டே வந்து மருங்கிப் போன மனம் பெற்றவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இந்த மனநிலை மாறி நிறைந்திருக்கும். மூவொரு இறைவனின் அருள் பிரசன்னம் எனது ஆன்மாவில் ஊடுருவிப் பாய்ந்து தெய்வீக இரக்கக் கடலில் நான் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பேன். எனது ஒன்றுமில்லாமையில் இறை நெருக்கம் ஒன்றே போதும் என்று வாழ்கின்றேன்.
ஒப்புரவு அருள்சாதனம் :
1. இது இரக்கம்மிகு இறைவனின் கொடை தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னகிக்ப்படா (யோவான் 20 : 22, 23)
2. புனித மதர் தெரசா : தாழ்ச்சியின் செயலாக்கம் ஒப்புரவு அருள்சாதனம். இது பாவப் பரிகாரம் அல்ல. இதுவே அன்பின் அருள்சாதனம்.
3. மனதின் குப்பைகளை வெளியேற்று.
4. ஆன்மத் தூய்மை உலகோரையும் தூய்மையாக்கும்.
5. புனிதமிகு ஆன்மாவில் இறை இரக்கத்தின் அருள் அதிகமாகப் பொழியப்படுகிறது.
ஒப்புரவு, திருப்பலி, செபம் ஆகியவற்றில் அடிக்கடி பங்கேற்போர் கடந்த காலத் தவறுகளைக் களைந்தால், தற்காலப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பர். ஆண்டவர் இயேசுவுக்கும் அவர்தம் திருச்சபையினுக்கும் தம்மையே அர்ப்பணிப்பர்.
இயேசுவின் உயிர்ப்பு : ஓர் வரலாற்று நிகழ்வு.. காலம் கடந்த நிகழ்வு. இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாகத் திகழ்வது வெற்றுக் கல்லறை. இந்த வெற்றுக் கல்லறையும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று. வெறுமையில் கடவுளின் முழுமை வெளிப்படுகிறது. அழிவுக்குரிய உடல் அழிவுக்குட்படுத்தப்படாதவாறு உயிர்பெற்றெழுந்து இறைத்தன்மையின் நிறைவினை உலகுக்குணர்த்தியது. இந்த வெற்றுக் கல்லறையே. உயிரற்ற உடல்களைத் தாங்கும் ஒவ்வொரு கல்லறையும் உயிர்ப்புக் கட்டியதாகக் கூறுகிறது.

உயிர்ப்புச் செயல்பாடுகள் : கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது தோ ஒரு முடிந்து விட்ட செயல் அல்ல. கிறிஸ்துவோடு இந்த உயிர்ப்பு அடங்கிவிடக்கூடியதும் அல்ல. உயிர்ப்பு என்பது ஒரு தொடர் பயணம். இயேசுவின் உயிர்ப்பின் பண்புக் கூறுகள் பல உள்ளன. பாவத்ஙதை அறிக்கையிட்டுப் பாவப் பரிகாரம் மேற்கொண்டு ஆக்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுதல். ஒப்புரவின் தோவையினை உணர்ந்து அடிக்கடி பாவ அறிக்கை செய்து இறை ‡ மனித ஒப்புரவினைப் பலப்படுத்திக் கொள்ளுதல். அடிமையாக்கும் பாவச் சக்தியினின்றெழுந்து நற்செயல்கள் மூலம் புனித வாழ்வில் இணைந்திருக்க முயல்தல்.
எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்ப்பு வாழ்வினை வாழ்வாக்குதல் எப்படி? உயிர்ப்புச் செயல்பாடுதான் அவ்வப்போது செய்திகள் வழியாக நம்மை நோக்கி வந்து கொண்டுதானிருக்கின்றன. உடல் உறுப்பு தானமும் ஓர் உயிர்ப்புச் செயல்பாடே. மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு தேவைப்படுவோருக்கு வழங்குவது மிகவும் உன்னதமான உயிர்ப்புச் செயலாகும்.
பெங்களூரில் நடந்த உண்மையான உயிர்ப்புச் செய்தி :
ஹரீஷ் 24 வயது இளைஞர். பிப்ரவரி 16 அன்று தனது கிராமத்திலிருந்து பெங்களூரு நகரில் பைக்கில் பயணிக்கின்றார். எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி பைக் மீது மோதுகிறது. ஹரீ´ன் உடல் இரு துண்டுகளாகின்றது. தன் உயிர் பிரியும் நேரத்திலும் நான் சாவது திண்ணம். இதோ நல்ல நிலையில் உள்ள எனது இரு கண்களையும் எடுத்து தேவைப்படுவோருக்கு அளியுங்கள் என்று கூறி உயிர் துறக்கின்றார். அவரின் இரு கண்களும் நேத்ராலாயா மருத்துவ டாக்டர்களால் எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் உயிர்ப்பின் செயல் வடிவங்கள் தானே! எனவே அவர்தம் திருச்சபையினுக்கும் தம்மையே அர்ப்பணிப்பர்.
இயேசுவின் உயிர்ப்பு : ஓர் வரலாற்று நிகழ்வு.. காலம் கடந்த நிகழ்வு. இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாகத் திகழ்வது வெற்றுக் கல்லறை. இந்த வெற்றுக் கல்லறையும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று. வெறுமையில் கடவுளின் முழுமை வெளிப்படுகிறது. அழிவுக்குரிய உடல் அழிவுக்குட்படுத்தப்படாதவாறு உயிர்பெற்றெழுந்து இறைத்தன்மையின் நிறைவினை உலகுக்குணர்த்தியது. இந்த வெற்றுக் கல்லறையே. உயிரற்ற உடல்களைத் தாங்கும் ஒவ்வொரு கல்லறையும் உயிர்ப்புக் கட்டியதாகக் கூறுகிறது.

உயிர்ப்புச் செயல்பாடுகள் : கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது தோ ஒரு முடிந்து விட்ட செயல் அல்ல. கிறிஸ்துவோடு இந்த உயிர்ப்பு அடங்கிவிடக்கூடியதும் அல்ல. உயிர்ப்பு என்பது ஒரு தொடர் பயணம். இயேசுவின் உயிர்ப்பின் பண்புக் கூறுகள் பல உள்ளன. பாவத்ஙதை அறிக்கையிட்டுப் பாவப் பரிகாரம் மேற்கொண்டு ஆக்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுதல். ஒப்புரவின் தோவையினை உணர்ந்து அடிக்கடி பாவ அறிக்கை செய்து இறை ‡ மனித ஒப்புரவினைப் பலப்படுத்திக் கொள்ளுதல். அடிமையாக்கும் பாவச் சக்தியினின்றெழுந்து நற்செயல்கள் மூலம் புனித வாழ்வில் இணைந்திருக்க முயல்தல்.
எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்ப்பு வாழ்வினை வாழ்வாக்குதல் எப்படி? உயிர்ப்புச் செயல்பாடுதான் அவ்வப்போது செய்திகள் வழியாக நம்மை நோக்கி வந்து கொண்டுதானிருக்கின்றன. உடல் உறுப்பு தானமும் ஓர் உயிர்ப்புச் செயல்பாடே. மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு தேவைப்படுவோருக்கு வழங்குவது மிகவும் உன்னதமான உயிர்ப்புச் செயலாகும்.
பெங்களூரில் நடந்த உண்மையான உயிர்ப்புச் செய்தி :
ஹரீஷ் 24 வயது இளைஞர். பிப்ரவரி 16 அன்று தனது கிராமத்திலிருந்து பெங்களூரு நகரில் பைக்கில் பயணிக்கின்றார். எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி பைக் மீது மோதுகிறது. ஹரீ´ன் உடல் இரு துண்டுகளாகின்றது. தன் உயிர் பிரியும் நேரத்திலும் நான் சாவது திண்ணம். இதோ நல்ல நிலையில் உள்ள எனது இரு கண்களையும் எடுத்து தேவைப்படுவோருக்கு அளியுங்கள் என்று கூறி உயிர் துறக்கின்றார். அவரின் இரு கண்களும் நேத்ராலாயா மருத்துவ டாக்டர்களால் எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் உயிர்ப்பின் செயல் வடிவங்கள் தானே! எனவே நாமும் உயிர்ப்பினை வாழ்வாக்கும் செயல்களில் ஈடுபட்டு உழைப்போம்.
இறை அக்க அழகு உனது ஆன்மாவை அலங்கரிக்க வேண்டுமா? இதயத்தை மூடியிருக்கும் அழுக்கை அகற்று. புண்ணிய நற்பேறுகளால் உனது ஆன்மாவை நிரப்பு என்று நீசா நகர் புனித கிரகோரி கூறுகின்றார். உயிர்த்த ஆண்டவரின் இறை இரக்க அழகு நமது ஆன்மாவினுக்கு ழேகூட்டி உயிர்க்கின் மக்களாக வாழ வழிகாட்டட்டும்.    

ஆசிரியர் பேனா, வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி


ஆசிரியர் பேனா
வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி

நம் மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது பிள்ளைகளின் கல்வியை கண்ணென நினைத்து, எவ்வித தியாகம் செய்தும் பிள்ளைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். அரசினர் பள்ளிக்கூடங்களைத் தவிர, தனியார் பள்ளிகள் எங்கும் பூத்துக்குலுங்குகின்றன. கூலி வேலைக்குப் போனாலும், தன் பிள்ளைகளுக்கு டைகட்டி, U போட்டு, பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்து, மக்கள் அழகுப் பார்க்கிறார்கள். அரசும், கல்வியின் தரத்தை உயர்த்த பல நெருக்கடிகளை பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தருகிறார்கள். நெறிகெட்ட வாழ்விற்கும், நம் நாட்டின் வறுமைக்கும் காரணம், தகுந்த கல்வியில்லாமைத்தான் என்று சொல்லலாம். மது அருந்தும் மாணவர்கள், பிஞ்சிலே பழுப்பதைப் போன்று, மாணவர்களின் காதல் தப்புத் தாளங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவை நாம் இன்று சந்திக்கின்ற சவால்கள்.

சி. எஸ். லெவிஸ் என்பவர் கூறுகிறார், ‘சரியான பண்புகளை, மதிப்பீடுகளை கற்பிக்காத கல்வி, திறமையான பேய்களையும், சாத்தான்களையும் தான் உருவாக்கும்’ என்கிறார். ‘நல் அறிவு, நல் மனித பண்புகளை மாணவரிடத்தே உருவாக்குவதே கல்வியின் நோக்கம்’ என்கிறார் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர். ‘மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதல்ல, மாறாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதே கல்வி’ என்கிறார் மார்கிரேட் மெட்.

இம்மாதம் மார்ச் மாதம், புனித சூசையப்பரை சிறப்பாக நினைவு கூறுகிற மாதம். கல்வியின் பாதுகாவலர் என்று அவர் அழைக்கப்படுகிறார். சில பள்ளிகளில் மார்ச் மாதத்தின் புதன் கிழமைகளில் சூசையப்பருக்கு தனி வணக்கம் செலுத்தி வழிபாடு செய்வார்கள். விரைவில் அரசு பொதுத் தேர்வுகள் வர இருக்கின்றன. மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் நேரம் இது. மாணவர்களின் மனஉலைச்சலைவிட பெற்றோர்கள், ஆசிரியர்களின் மன உலைச்சல் அதிகம்.

பெரும்பாலான பிள்ளைகள், இளம் வயதின் தாக்கத்தினால், வருங்காலத்தைப் பற்றி கவலையின்றி வழக்கமாக பள்ளிக்குச் சென்று வருவர். பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வருங்காலத்தை, தங்களின் வருங்காலத்தைப் போலக் கருதி, பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதைப் பற்றி நினைவுப்படுத்தி, பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும், பிள்ளைகளின் இயல்பான மன ஓட்டங்களைப் புரிந்துக் கொண்டு, அதற்கேற்றார்போல் கற்பிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களின் பிள்ளைகளை வடித்தெடுக்கும் சிற்பிகள் என்றுணர்ந்து தங்களின் வாழ்வை நல்ல பண்புகளால் வடித்தெடுக்க வேண்டும். யூதர்களின் பிள்ளைகளை எப்படி கருவிலிருந்தே கவனமாக வளர்த்து உயர்ந்தவர்களாக்குகிறார்கள் என்று ஒரு கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. மனிதர்களை தரமானவர்களாக வளர்ப்பது கல்வி. எனவே தரமான கல்வியை பிள்ளைகளுக்குத் தருவதில் ஆர்வம் காட்டவேண்டும்.
கல்வி என்பது மனிதரை செதுக்கும் உளி - அது
வாழ்விற்கு வெளிச்சம் தரும் ஒளி - அதுவே
வளர்ச்சியை சொல்லும் மொழி.

குடந்தையில் மகாமகம் என்ற மகா நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 22 வரை நடைபெற்றது. பத்து நாள்களும் மக்கள் அலை அலையாக மகாமக குளத்தை சந்தித்து, அங்கிருந்து 20 தீர்த்தங்களை தலையில் ஊற்றிக் கொண்டு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டு செய்திகளை நான் கவனித்தேன். கங்கை. யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, தாமிரபரணி  போன்ற ஆறுகள் மகாமகத்தன்று மகாமககுளத்தில் இணைகின்றன என்பது நம்பிக்கை. எனவே இந்தியாவின் ஆறுகளை இணைத்தல் என்பது புனித செயல் என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. இரண்டாவது, மகாமக குளத்தில் குளிப்பதால், தாங்கள் செய்த பாவ அழுக்கு மறைந்து போகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. தாங்கள் செய்த தீமைகள், அழுக்கானவை அழிவை தருகின்றவை என்ற எண்ணமும் மக்களிடம் மறைந்திருக்கிறது. மேற்கண்ட நல் எண்ணங்கள் மக்கள் மனதில் தோன்றினவா? என்பது கேள்விக்குறி! வழக்கம், வாடிக்கை என்ற கொண்டாட்டமாகத்தான் மகாமகம் மக்கள் மனதில் உண்டாயிருக்கும். வழக்கங்களிலும் வாழ்வின் பொருளை இணைத்துப் பார்த்தால் உயர்வும், சிறப்பும் உண்டாகும்.

வெற்றி உங்கள் கையில் ......

வெற்றி உங்கள் கையில் ......
அருட்திரு. S. ஜான் கென்னடி
M.A., M.Ed., M.Sc, M.Phil, PGDCA, NET, Ph.D,
பூண்டி புதுமைமாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

அலுவலக அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்திலிருந்து உடனே செல்ல வேண்டி வாடகைக்காரர் ஒன்றை பிடித்து உடனே ரயில்நிலையம் போகுமாறு  ஓட்டுநரிடம் சொன்னார். இவர்கள் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று, திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலைத்தடுமாறிய ஓட்டுநர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன்சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இஞ்ச் முன்னதாக நிறுத்தினார். அந்த காரிலிருந்து எட்டிப்பார்த்த அதன் ஓட்டுனர், இவர்களை கன்னாபின்னா என்று நா கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறார். இந்த வாடகைக்கார் ஓட்டுனரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாடா காட்டுவதுபோல கைகளை காட்டுகிறார். அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரைப் பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஓட்டிய ஒரு ஓட்டுனரிடம் செய்வதுபோல இல்லை. “ஏன் அவனை சும்மாவிட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாமுல்ல... அவன் மேல தப்ப வச்சுக்கிட்டு நம்ம மேல எகிர்றான்?” என்று அதிகாரி ஓட்டுனரிடம் கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுனர் சொன்னதுதான் ‘குப்பை வண்டி விதி’ ஓட்டுனரிடம் கேட்கிறார். அதற்கு அந்த ஓட்டுனர் சொன்னதுதான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் “The Law of the Garbage Truck” என்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர், சார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பைவண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும் வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம், புரிந்துகொள்ளாத நிலை அவர்களிடம் நிறைந்திருக்கும். அதுபோன்ற குப்பைகள் சேர சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை செய்து கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நம்மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்துக் கொண்டு போய் நாம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ, தெருவில் மற்றவர்களிடமோ கொட்டக்கூடாது சார். நம்ம பேருதான் நாரி போகும்...!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்து விட்டார். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும், இந்த குப்பை வண்டிகள் தங்களின் அன்றைய நாளை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

கடந்த மாதம் மாதாந்திர தியானம் செய்வதற்கு நான் காரில் பயணமானேன். எனது கல்லுரி நுழைவாயிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கார் ஏறி திரும்பியபோது இருசக்கர வாகனத்தில் தவறான திசையில் ஒருவர் வந்தார். வலது பக்கம் வரவேண்டாம், இடது பக்கம் வாருங்கள் என்று  சைகை மூலம் காண்பித்தேன். ஏனென்றால் அவர் வலப்பக்கம் சென்றால் என் காரின் பின்னால் வரும் மற்ற ஊர்திகளின் மீது மோதிவிடுவார் என்பதை தவிர்க்கவே அப்படி செய்தேன். ஆனால் அந்த நபர் கோபப்பட்டு திட்டிவிட்டு சென்றார். அவர் என்மீது குப்பையை கொட்டி சென்றதை சுமந்து செல்லாமல் பயணத்தை இனிதே தொடர்ந்தேன்.

இதுபோன்று, உங்கள் வாழ்விலும் குப்பைகளை கொட்டிய நபர்களை சந்தித்திருப்பீர்கள். கணவன் மனைவியிடையே, பிள்ளைகள் பெற்றோரிடையே பணியாளர்கள் அதிகாரிகளிடையே கோபப்பட்டு குப்பைகளை கொட்டியிருக்கலாம். வீட்டில், அலுவலகத்தில், பள்ளிகூடங்களில், கல்லூரிகளில், பங்குதளங்களில், சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் யாதொரு காரணமுமின்றி குப்பையை ஒருவருக்கொருவர் கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசி குப்பையை கொட்டினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.
அப்படி நடக்காதவர்களுக்காக பிராத்திப்போம்.
வெற்றியின் பாதையில் செல்வோம்.

பிறர் முகுதுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை “தட்டிக்கொடுப்பது மட்டுந்தான்” - விவேகானந்தர்.

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 9 நல்லை . இ . ஆனந்தன்

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 9
நல்லை . இ . ஆனந்தன்

1. தற்போதுள்ள அரசியலைப் பற்றி விமர்சிக்கவும் :
திருமதி. பவுலின் மேரி, திருச்சி

அதுசரி! அரசியல்பற்றி தற்சமயம் விமர்சிப்பது நல்லதல்ல என்பதை பட்டிமன்ற பேச்சாளர்களும், நகைச்சுவை நடிகர்களும் உணர்த்தும் நேரம் இது. சின்னக் கதை சொல்கிறேன். கேளுங்கள். மரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் வருத்தத்தில் இருந்தன. சிட்டுக்குருவி ஒன்று காரணம் கேட்டது. ஒரு மனிதன் வந்தான். மரத்தில் ஏறி எங்கள் அனைவரின் உழைப்பையும், உணவையும், சேமிப்பையும் சுரண்டிக் கொண்டு ஓடிவிட்டான். அவனால் எங்கள் தேனை மட்டும்தான் திருடமுடியும். ஆனால் மலர்களில் இருந்து தேன் சேகரிக்கும் எங்கள் திறமையை ஒருபோதும் திருடவே முடியாது. மறுபடி கடினமாக உழைத்து, கூடு அமைத்து, தேன் சேர்க்க எங்களால் நிச்சயம் முடியும் என்றன தேனீக்கள். ஆகவே ... என் உயிரினும் மேலான அன்பான வாக்காளர் பெருமக்களே ...........

ஜாக்கிரதை, ஓட்டுக்களை விற்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு அடிமையாக வேண்டாம்.

2. உயிர்ப்பு என்றால் என்ன?
செல்வி. நான்சி, காரைக்குடி 

விதை புதைக்கப்படுகிறது. தளிர்விட்டு எழுகிறது. சூம்பிய விதைகளை மண் தின்றுவிடுகிறது. வீரிய விதைகள் மண்ணைத் தின்று கொண்டே வீறு கொண்டு எழுந்து செடியாக, மரமாக மாறுகிறது. செடியும், மரமும் அழிவை உணர்த்துகின்றன. தன் உயிர்சக்தியை வாழும் நாட்களில் விதைக்குள் சேமிக்கின்றன. கடின ஓட்டினால் கவனமாக வைத்திருக்கின்றன. உங்கள் ஆன்மாவும் அவ்வாறே. வீரியமுள்ள விதையாக இருப்பின் மண்ணைப் பிளந்து முளைப்பீர்கள். அதாவது உயிர்ப்பீர்கள். (காண் 1 கொரி 15 : 35 ‡ 38).

3. சென்னை இன்னொரு பெருமழையைத் தாங்கமா?
திரு. ஆல்பர்ட், குரோம்பேட்.

நிச்சயம் தாங்கும். ஏனெனில் மழை தோற்றுப் போய் மனிதம் இந்த ஆண்டு வெற்றி பெற்றதை நீங்கள் அறிவீர்கள். இனி மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பார்கள். புதுவருட காலண்டர்களை வீடுகளுக்கு வினியோகிக்கச் சென்றேன். ஒரு வீட்டில் சோகம், காரணம், பிழைப்பதற்காக சென்னைக்குச் சென்ற வீட்டுத் தலைவன் நாற்பது நாட்களாக வீடு திரும்பவில்லை. அவரைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை. மழை, சென்னையில் வாழ்ந்த மக்களை மட்டுமல்ல, வாழ வந்த உயிர்களையும் அழித்தது. என் கணவர் வருவாரா? என்ற அந்த வீட்டுத் தலைவியின் வினாவிற்கு பதில் கூற முடியாமல் பேச்சற்று நின்றேன்.

4. நவநாகரீக காலத்தில் பாஸ்கா நாடகங்கள் தேவையா?
திரு. மனோகர், திண்டுக்கல்.

ஆண்டவரே... தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகிறோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம் என்று நாம் வார்த்தைகளில் சொல்கிறோம். அவர்கள் செயலில் செய்கிறார்கள். எனவே மனதாரப் பாராட்டுவோம்.

5. நான் கடவுளை நம்புவதால் எனக்கு என்ன லாபம்? நம்பாவிட்டால் என்ன நட்டம்?

திரு. செல்வநாதன், வேடசந்தூர்.
ஆத்திகம்பற்றி அமெரிக்காவில் நடந்த சமீபத்திய ஆய்வை நெட்டில் பார்க்கவும். கடவுளை நம்புகிறவர்களின் வாழ்நாள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் அதிகமாய் உள்ளன. கடவுளை நம்புவதால் கவலைகள் பாதிப்பதில்லை. கவலை, பயம் இல்லாததால் கொடிய நோய்கள் தாக்குவதில்லை. அவர்கள் முகத்தில் தெளிவும், அழகும் மிளிரும். ஆனால் இறைநம்பிக்கை இல்லாதோர் அச்சத்திலே இருப்பர். ஆயுளும் குறைவு. கவலை நோயை உருவாக்குகிறது. நோய் பயத்தை மிகுதியாக்குகிறது. முகமும் தன் பொலிவை இழக்கிறது. இருள் சூழ்ந்திருப்பதை அவர்களைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம்.

6. மகா கோபக்காரியான நான் மனம்மாற வழிகாட்டவும்?
திருமதி. தமிழரசி, நத்தம்

கோபத்தில் செய்கின்ற காரியங்கள் எல்லாம் ஆபத்தில் முடியும். கோபத்தைக் கட்டுப்படுத்தபழகிக் கொள்ளுங்கள். உங்களால் முடியும்.

7. தீமையும், பாவமும், சாத்தானும், சோதனையும் நிறைந்த இந்த உலகத்தில் நான் எப்படி நல்லவராக வாழ முடியும்?
திரு. மலர்மன்னன், பாண்டிச்சேரி.

சேறும், சகதியும் நிறைந்த குளத்தில்தான் தாமரைப்பூ நிற்கிறது. ஆனால் எதுவுமே தன்னை ஒட்டாமல் தூய்மையின் உருவாகக் கிடக்கிறது. தாமரைப்பூ சூரிய ஒளி கண்டு விரிகிறது. இருள் வருவதைக் கண்டு குவிகின்றது. ஒளியாம் இறைவனைக் கண்டு விரிந்துக் கொள்ளவும் (ஜெபம்). இருள் வரும்போது குவிந்துக் கொள்ளவும் (தவம்) தெரிந்தால் போதும், பாவம் நிறைந்த இவ்வுலகில் நாம் பரிசுத்தமாகவும் வாழ முடியும். தவக்காலம் உணர்த்திய செய்தியும் இதுதான். ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.

தவக்காலம் 5ஆம் ஞாயிறு, குருத்து ஞாயிறு , ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா

தவக்காலம் 5ஆம் ஞாயிறு                               13 - 3 - 2016
எசா 43 : 16 - 21
பிலிப் 3 : 8 - 14
யோவான் 8 : 12 - 20
அந்தக் கிராமத்தில் பள்ளி ஆசிரியை சுதாவை அக்கிராமத்துப் பெண்மணி ஒருவர் திட்டித் தீர்ததுக் கொண்டு இருந்தார். காரணம் அவளது மகன் சுப்புவை, இந்த ஆசிரியை அடித்து விட்டாராம். கொண்டு இருந்தார். காரணம் அவளது மகன் சுப்புவை, இந்த ஆசிரியை அடித்து விட்டாராம். காரணம், சுப்பு அரிச்சுவடி எழுத்துக்களை கோழி சீக்சாப் போல சிலேட்;டில் கிறுக்கியிருந்தான். சுதா ஆசிரியை அவனை கோபத்தில் ஒரு தட்டுத்தட்டி விட்டார். இது அம்மாவுக்கு எட்ட, அந்த அம்மா குய்யோ, முறையோ என்று அழுதுக்கொண்டு பள்ளிக்குச் சென்று சுதாவை வாய்க்கு வந்தபடி வாங்கி எடுத்தாள். சுதா ஆசிரியை பொறுமையாக விளக்கம் தந்தாள். இங்க பாருங்கம்மா, உங்க பிள்ளை எழுதின எழுத்தை கோழி கூட நல்லா சீச்சிருக்கும் என்று சொல்லி சிலேட்டைக் காட்டினாள். தாய் அதனைப் பார்த்து என் புள்ள நல்லாதான் எழுதியிருக்கு. இதைவிட எப்படி நல்லா எழுதறதாம் என்று ஒரு போடு போட்டாள். சுதா ஆசிரியை சுதாரிக்துக் கொண்டு ஏம்மா, உங்களுககு எழுதப் படிக்கத் தெரியுமா? என்று வினவ, இந்தத் தாய் எனக்கு எழுதப்படிக்கத் தெரியாதுதான். ஆனால் என் புள்ள நல்லா எழுதும் என எனக்குத் தெரியும் என்றாள்.

இன்றைய நற்செய்தியில் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவின் முன் நிறுத்தி அவளுக்கு மோசே சட்டப்படி கல் எறிந்து கொல்ல இயேசுவின் தீர்ப்பைக் கேட்டனர். இயேசு மேல் கொண்டிருந்த மரியாதை நிமித்தமாக அல்ல ; இயேசுலை சிக்க வைக்க இந்த நிகழ்வு நடந்தது. இயேசு குனிந்து தலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதினார்? சிலர் சொல்வர், அவர்களின் பாவங்களை எழுதினார். தங்கள் பாவங்களைப் படித்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞரும் ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர் என்று. பிறரின் பாவங்களை பொ/துவில் அறிக்கை செய்வது ஒரு பாவமாகும். எனவே இயேசு அவர்களின் பாவங்களை தரையில் எழுதவில்லை. கதையில் சிறுவன் சிலேட்டில் கிறுக்கியிருந்ததைப் போல, இயேசுவும் தரையில் கிறுக்கினார். கிறுக்கினார் என்றால் அதற்குப் பொருள் இல்லை. ஆனால் பார்த்தவர்கள் அதில் பொருளைக் கண்டு கொண்டார்கள். எப்படி?

இயேசு தீர்பிட்டிருக்க முடியும். அவரும் தீர்ப்பிடவில்லை. ஏனெனில் இது அவரது இரக்கம். இறைவன் நம்மீது இரக்கம் பொழிகிறார் என்றால் நாம் மீண்டும், மீண்டும் பாவம் செய்யலாம் என்பதற்காக அல்ல.
இயேசுவே என் ஒப்பற்ற செல்வம். அவரை அடைவதற்கு அனைத்தையும் இழந்துவிட்டேன். இயேசுவோடு உலக செல்வத்தை ஒப்பிடும்போது ‡ உலக செல்வங்கள் குப்பை என பவுலடியார் 2ஆம் வாசகத்தில் முழங்குகிறார்.பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுதான் வாழ்வுக்கு வளமான வழி என்பதை நற்செய்தியிலிருந்து புரிந்துக் கொண்டோம். முதல் வாசகத்திலும் எசாயா இறைவாக்கினர் இந்த மீட்பைத் தான் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீள இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாக ‡ நிரந்தர வாழ்வாக ஒளிவீசம் எனப் போதித்தார். பாவத்திலிருந்து விடுபட்டு வாழ்வதே புதிய வாழ்வாகும் எனவும் முழங்கினார்.

நல்வவர்கள் எவரும் பிறரைத் தீர்பிபட மாட்டார்கள். நாம் நல்லவர்கள் என்றால் பிறரின் குறைகளைப், பாவங்களைப் பட்டியலிடாமல் நம் குறைகளைத் தவிர்த்து முன்னேறிச் செல்வோம்.


                      குருத்து ஞாயிறு                            20 - 3 - 2016
எசா 50 : 4 - 7
பிலிப் 2 : 6 - 11
மத் 26 : 14 - 27 : 66
இந்த ஞாயிறு நாளை பாடுகளின் ஞாயிறு = குருத்தோலை ஞாயிறு என்றும், மேலும் பாடுகளின் ஞாயிறு என்றும் திருச்சபை அழைக்கிறது. இயேசு எருசலேம் நோக்கி இறுதியாகச் சென்றபோது ‡ இது ஒரு வித்தியாசமான வேறுபட்ட பயணம் ‡ வழியில் மக்கள் தங்கள் உடைகளை வழியில் விரித்தனர். வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியில் மேலுடைகளையும், வேறுசிலர் வயல்வெளிகளில் வெட்டிய இலைதழைகளைகளையும் வழியில் பரப்பினர் என்று மாற்கு (11 : 8) வும் குறிப்பிடுகிறார்.

பாடுகளின் ஞாயிறு ‡ இந்நாளில்தான் எருசலேமுக்கு அவர் எளிமையின், அமைதியின் அரசராக வரவேற்கப்பட்ட போதிலும் இந்நாள் அவருக்கு பாடுகளைத் தொடங்கி வைத்தது. எனவே இது இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.
அந்தப் படகு கடலில் மூழ்கியத. பயணி ஒருவர் கரையில் ஒருங்கினார். அந்தக் கரை ஒரு தீவு. அந்தத் தீவின் மக்கள் அவரை அழைத்துச் சென்று தம் நாட்டின் அரசராக அபிஷேகம் செய்தனர். தாரை, தம்பட்டம், ஆட்டம், கொண்டாட்டம், மேள தாளம் இவற்றையும் பார்த்து இந்த அரசர் அசந்து போனார். ஆச்சரியப்பட்டார். ஒரு வேளையில் பயந்தும் போனார். ஏன் இவ்வாறு செய்தார்கள் என பதறியும் போனார்.

அத்தீவு நாட்டின் சட்டம் இதுதான். ஓர் ஆண்டுக்கு அந்த அரசருக்கு மக்கள் எல்லா வகையிலும் கீV;ப்படிவர்; ஆனால் ஓர் ஆண்டு முடிந்தவுடன் அரசர் தம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வறட்சியான தீவு ஒன்றுக்கு நாடு கடத்தப்படுவார். அங்கே அவர் வறுமையை அனுபவிக்க வேண்டும்.
இந்தப் புதிய அரசர் எடுத்த எடுப்பிலேயே அந்த வறட்சியான நாட்டைத் தெரிந்து கொண்டார். அங்கே தனக்கும், பிற குடிமக்களுக்கும் நல்ல வீடுகளைக் கட்டினார். வசதிகளைப் பெருக்கிக் கொண்டார். ஓர் ஆண்டு முடிந்ததும் அங்கே நாடு கடத்தப்பட்டார். அங்கே அவர் நிம்மதியாக, மகிழ்வாக வாழ்ந்தார்.

இயேசு ஆண்டவரும் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார். இங்கே அவருக்கு வரவேறபம், புறக்கணிப்பும் காத்திருந்தன. தன் பாடுகளாலும், உயிர்ப்பாலும் ஒரு புதிய உலகை உருவாக்கினார். தனக்கு மட்டுமல்ல. தன் சீடர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் ஒரு புதிய உலகை துவக்கி வைத்தார்.

இயேசு எருசலேம் நகர் சென்றது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, தன்னைப் பலியாக்க, தரணியை மீட்க, அவருடைய பாடுகளும், உயிர்ப்பும் நமக்கு நல்ல பாடங்கள். பாடுகளைப் புறந்தள்ளி பரலோக அரசை அடைவது கடினம். எசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் இந்தக் கற்றலைப் பெரிதுப்படுத்தினார். ஆண்டவர் கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார் (எசா 50 : 4). இவ்வுலகின் பாடுகள் விண்ணக வீட்டின் விலாசங்கள் என்றால் மிகையாகாது. 2ஆம் வாசகத்தில் பவுலடியார் மிக அருமையாக இயேசுவின் சாவின் தன்மையை விளக்குகிறார். இயேசு தன்னையே வெறுமையாக்கிக் கொண்டார். இதை கிரேக்க மொழியில் கெனோசிஸ் என்ற வார்த்தையில் இயேசுவின் முழு இழப்பை, வெறுமைத்தன்மையை விளக்குகிறது. எந்த அளவுக்கு அவர் தன்னையேத் தாழ்த்திக் கொண்டாரோ ‡ அந்த அளவுக்கு ஆண்டவர் அவரை உயர்த்தினார். தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப் பெறுவான் என்று உரைக்கவில்லையா? இவ்வுலகில் நமக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும் ஏற்று இறைவனைப் பற்றி வாழ்கிற போது விண்ணும் நம் தாய் வீடாக மாறுகிறது.

                       ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா                      27 - 3 - 2016
தி ப. 10 : 34 அ, 37 - 43
கொலோ 3 : 1 - 4
யோவான் 20 : 1 - 9
அந்தப் பாபு ஓர் இளம்பிஞ்சு. தாத்தாவின் கரங்களில் தவழ்ந்தவன். தாத்தாவின் முதுகிலே ஏறி சவாரி செய்தவன். அவர் தோள்பட்டடையில் உட்கார்ந்து விண்ணை நோட்டமிட்டவன். அப்படிப்பட்ட தாத்தா பாவம் ஒருநாள். தடுமாறி விழுந்தவர் எழுவே இல்லை. இவ்வுலகை நீத்மு இறைப்பதம் தாத்தா பாவம் ஒருநாள். தடுமாறி விழுந்தவர் எழுவே இல்லை. இவ்வுலகை நீத்மு இறைப்பதம் சேர்ந்தார். பாபு தேம்பி, தேம்பி அழுதான். துக்க நிகழ்ச்சிகள் முடிந்தன. தாத்தாவை கல்லறையில் இறக்கி மண்ணால் மூடினர்.

ஒரு வாரத்திற்குப் பிறகு பங்கில் பாஸ்கா விழா நிகழ்ந்தது. இயேசு மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாள் பிரகாசமாக, வெடிகள் அதிர, பூமி குலுங்க, இருள்விலக, ஒளிமழையில் ஆண்டவர் இயேசு உயிர்த்தார். இந்தக் காட்சி தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. இயேசு உயிர்த்த காட்சி பாபுவின் மனதில் பசுமரத்தாணிபோலப் பதிந்தது. அதோடு பங்குத்தந்தையும் இயேசுவைப் போல நாமும் இறந்தபின் உயிர்ப்போம் என்று உரக்கச் சொன்னார். இந்த வார்த்தைகள் பாபுவின் இதயத்தை ஊடுருவியது. இயேசுவின் உயிர்ப்பைப் பார்த்த பாபுவின் மனதில் ஒரு ஏக்கம் உதித்தது. தன் அம்மாவைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட்டு கேட்டான், அம்மா, இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தார் தானே. நம்ம தாத்தா மூன்றாம் நாள் நம்ம வீட்டுக்கு வந்துடுவாரா? ஆம், வருவாரப்பா என்று தாய் சொல்ல இருவரும் தாத்தா உயிர்த்து வருவார் என்ற நம்பிக்கையில் வீடு நோக்கி நடந்தனர்.

ஆம், நாமும் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையில் விண்ணக வீடு நோக்கி, நகர்ந்து கொண்டிருக்கிறோம்.. ஏனெனில் இயேசுவின் உயிர்ப்பு நம் உயிர்ப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. இயேசுவின் உயிர்ப்பு நம் உயிர்ப்புக்கு ஒரு நம்பிக்கை. இயேசுவின் உயிர்ப்பு நம் உயிர்ப்புக்கு ஒரு முன்னோட்டம். இயேசு தான் உயிர்ப்பேன் என்பதை தெளிவுபடுத்த நற்செய்தியில் நயீன் ஊர்க்கைம்பெண் மகனை உயிர்ப்பித்தார் (லூக் 7 : 14). தொழுகைக்கூடத் தலைவரங் யாயீர் என்பவரின் மகளை உயிர்ப்பித்தார் (லூக் 8 : 54). மரியா, மார்த்தாள் இவர்களின் சகோதரன் லாசரை உயிர்ப்பித்தார் (யோவான் 11 : 44).

நாமும் உயிர்ப்போம் என்பதைத் தெளிவுப்படுத்த அவர்தாமே உயிர்த்தார் (மாற்கு 20 : 6). இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகள் 1.. அவருடைய வார்த்தைகளே. நான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என நற்செய்தியில் மும்முறை முழங்கியிருக்கிறார் (மத் 16 : 20, 17 ‡ 22, 20 ‡ 17). 2. காலியான கல்லறை : இயேசு பிறந்தபோது மரியா இயேசுவை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினாள். இயேசு இறந்தபோதும் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டார். அந்தத் துணிகள்தான் இயேசுவிக் உயிர்ப்புக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. மூன்றாம் நாள் கல்லறையில் இயேசு இல்லை. அந்தத் துணிகள்தான் இருந்தன. 3. வானதூதர்கள் : இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் என வானதூதர்கள் ஆர்ப்பரித்தனர் (மாற்கு 16 : 7). 4. சீடர்கள் : திருத்தூதர்கள் உயிர்த்த இயேசுவை பலமுறைக் கண்டு, பயணப்பாதையில, கடற்கரையில், செபக் கூடத்தில் இப்படி பல இடங்களில் உயிர்த்த இயேசுவைக் கண்டு உலகுக்கு ஓங்கி ஒலித்தனர். சீடர்கள் என்று சொல்லும்போது பெண்களுக்கும் காட்சி கொடுத்துள்ளார் (மத் 28 : 5, மாற்கு 16 : 9 , 12 ; லூக் 24 : 33).

இயேசுவின் உயிர்ப்பிலே நாம் பங்குப் பெற்றோம் என்றால் மேலுலகத்தைச் சார்ந்தவற்றை நாடுங்கள் என 2ஆம் வாசகத்தில் பவுலடியார் குறிப்பிடுகிறார். முதல் வாசகத்தில் பவுலடியாரும்  இயேசுவின் உயிர்ப்புக்கு ஒரு சாட்சி. புற இனத்தாருக்கு இயேசுவின் உயிர்ப்பை சுமந்து சென்றவர் பவுலடியார் :

இயேசு உயிர்த்தார் என அகமகிழ்வோம்
இயேசுவில் நாமும் உயிர்ப்போம் என ஆர்ப்பரிப்போம்
உயிர்ப்பின் மக்களாக விண்ணுலகை நாடுபவர்களாக வாழ்வோம்.

Ads Inside Post