Pages - Menu

Friday 30 September 2016

அக்டோபர் மாத புனிதர்கள்

அக்டோபர் மாத புனிதர்கள்

- அருள்சகோ.G.பவுலின் மேரி FASG
கும்பகோணம்

அக்டோபர் 4     அசிசி நகர்  புனித பிரான்சிஸ் (கி. பி 1181 - 1226)

பிறப்பு : இத்தாலி நாட்டில் அசிசி நகர், 1881

இளமை : செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிறகு செல்வங்களைத் துறந்து துறவு பூண்டார்.

தனிவரம் : இயற்கையில் இறைவனைக் கண்டு போற்றினார். விலங்கினங்கள் தன் நண்பர்கள் என்று அவைகளுடன் பழகினார். ஏழ்மையை தன் காதலி என்றார். மனிதரின் மாண்பினை உணர்த்த தொழுநோயாளரை கட்டி அரவணைத்தார். தற்போதைய திருத்தந்தை, இவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு இவரின் ஏழ்மையையும், எளிமையையும் பின்பற்றுகிறார். கிளாராம்மாளும் இவரின் வழியைப் பின்பற்றி தனி சபையை ஏற்படுத்தினார். இவரின் ஏழ்மை எளிமை ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. அவர்கள் இவரின் சபையில் சேர்ந்தனர். மூன்றாம் சபை என்ற பிரிவிலும் மக்கள் சேர்ந்து இவரின் வழியைப் பின்பற்றினர்.
இறப்பு : தன் 44வது வயதில் இறந்தார். இயேசுவின் ஐந்து காயம் வரம் பெற்றவர். 
 
க்டோபர் 7    புனித ஜெபமாலை அன்னை

மக்களும், துறவிகளும் பக்தியோடு மாதாவின் ஜெபமாலையை செபித்ததன் பயனாக 1571இல் கிறிஸ்தவர்கள் துருக்கியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதற்கு நன்றியாக வெற்றிகளின் அரசி என்னும் விழா கொண்டாடும்படி திருத்தந்தை 5‡ஆம் பியுஸ் கி.பி.1573இல் ஏற்படுத்தினார். ஜெபமாலையை சொல்லும்போது ஆண்டவரது வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். ஜெபமாலையின் தேவ இரகசியங்களைப்பற்றி சிந்திக்கும் நாம் இயேசு, மாதாவைப் போல வாழ முயலவேண்டும். ஜெபமாலையானது நம்மை மரியாளுடன் ஒன்றிக்கிறது.

அக்டோபர் : 9  புனித யோவான் லெயோனார்ட் (1541 - 1609)

இவர் இத்தாலியில் தஸ்கனிப் பகுதியில் கி.பி.1541இல் பிறந்தார். மருந்து செய்யும் கலையைத் கற்றார். ஆனால், அதைக் கைவிட்டுக் குருவாக விரும்பினார். போதிக்கும் திருப்பணி, சிறப்பாக சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். 1547இல் இறை அன்னையின் பெயரால், துறவற மறைபபணியாளர்கள் சபை ஒன்றை நிறுவினார். இதனால் துன்பங்கள் பல அடைந்தார். பின்பு திருமறையை பரப்ப மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். திருத்தந்தையர் பலரின் தீவிர முயற்சியால் இன்று அது வளர்ச்சி கண்டு, உரோமை நிறுவனத்திற்கு அடித்தளம் இட்டவர் என்று கருதப்பட்டார். திருச்சபையின் பற்பல சபைகள் மீண்டும் தங்கள் ஒழுங்கு முறைப்படி செயலாற்ற பரிவன்புடனும், முன்மதியுடனும் பாடுபட்டார். உரோமையில் 1609இல் இறந்தார்.

அக்டோபர் 13  புனித எட்வர்ட் (1004 - 1066)

இவர் இங்கிலாந்து நாட்டில் 40 வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். செபித்து, பிறரன்பு செயல்கள் செய்து மக்களைச் சார்ந்து, நீதி, விவேகத்துடன் ஆண்டு வந்தார். எனவே மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தார்கள். 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. மக்கள் இவரைத் தெய்வமாகக் கருதினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். பின்னர் நிறைவேறிற்று. திருச்சபையின், நாட்டின் தலைவர்களுக்கும் சாந்தகுணம். நீதி, விவேகம் ஆகிய தேவையான புண்ணியங்களை அருளும்படி மன்றாடுவோம்.

அக்டோபர் 15               புனித அவிலா தெரசாள் (1515 - 1582)

இப்புனிதை ஸ்பெயினில்  அவிலா நகரில் கி.பி.1515இல் பிறந்தார். கர்மேல் கன்னியர் சபையில் சேர்ந்து நிறைவுப் பாதையில் விரைந்து முன்னேறினார். தம் சொந்த சபையைச் சீர்திருத்த முற்பட்டுத் துன்பங்கள் பலவற்றைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இதில் புனித சிலுவை அருளப்பர் உதவியினால் ஆண்களின் கார்மேல் சபையையும் சீர்திருத்தினாள். இடைஞ்சல்கள் அனைத்தையும் வீரத்துணிவோடு மேற்கொண்டார். மிக ஆழ்ந்த போதனை நிறைந்த நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் பயனுள்ளவை எனத் தம் சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்தார். இவர் ஆல்பா நகரில் 1582இல் இறைவனடி சேர்ந்தார்.

அக்டோபர் 18 புனித லூக்கா நற்செய்தியாளர்

இவர் சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகரில் யூதரல்லாதார் குடும்பத்தில் பிறந்தார். திருமறையை முதலில் தழுவியவர்களில் இவரும் ஒருவர். இவர் எழுதிய நற்செய்தியில், எல்லையற்ற இரக்கத்தைக் காட்டும். ஊதாரிப் பிள்ளையின் உவமையை நமக்குத் தருகிறார். இவரின் நற்செய்தியில், சமத்துவம், பெண்களின் சிறப்பு, மன்னிப்பு, ஏழ்மை போன்ற சிறந்த கருத்துக்களைக் காணலாம். திருதூதர் பணிகள் நூலையும் இவர்தான் எழுதினார் என்பது அறிஞர்களின் கருத்து. இவர் ஒரு சிறந்த ஓவியர் என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபர் 24   புனித அந்தோணி மரிய கிளாரட் (1807 - 1870)

இவர் ஸ்பெயின் நாட்டில் சாலந்தில் கி.பி.1807இல் பிறந்தார். திருநிலைப்பாடு அடைந்து, பல ஆண்டுகள் கத்லோனியப் பகுதி எங்கும் சென்று மக்களுக்குப் போதித்தார். மறைபரப்பும் பணிக்கென்று சபை ஒன்று நிறுவினார். பின்பு கியுபா தீவின் ஆயரானார். மக்களின் மீட்புக்காக மிகத் திறம்பட உழைத்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். செபமாலை பக்தியையும், மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் இவர் பரப்பினார். ஸ்பெயினுக்குத் திரும்பி வந்து, தொடர்ந்து திருச்சபைக்காகப் பல துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றார். பிரான்சிஸ் ஃபான்ப்ராய்ட் என்னுமிடத்தில் 1770இல் இறந்தார்.

அக்டோபர் 26           புனித சிலுவை சின்னப்பர் (1694 - 1775)

இவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீது சிறு வயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வேதத்திற்காக உயிரைவிட விரும்பிய இவர் துருக்கியரை எதிர்த்து போரிட இருந்த இராணுவத்தை விட்டுவிலகி, ஒரு புதுசபையைத் தொடங்கினார். சபை உடையை ஒரு காட்சியில் கண்டார். சிலுவையில் உயிர்விட்ட இயேசு மீது பக்தியை எங்கும் பரப்புவதே சபையின் நோக்கம். 50 ஆண்டுகளாக, இவர் கஷ்டங்களைப் பாராமல் இத்தாலிய நாடெங்கும் சென்று போதித்தார். கடவுள் இவருக்கு பல வரங்களைக் கொடுத்தார். எனினும் இவர் தம்மீது வெகு கண்டிப்பாக இருப்பார். ‘நான் பயனற்ற ஊழியன் நான் பாவி’ என்பார்.

அக்டோபர் 28 புனித சீமோன், யூதா ‡ திருத்தூதர்கள்

திருத்தூதர் பட்டியலில் 11ஆம் இடத்தில் உள்ளது சீமோனின் பெயர். இவர் கானாவூரில் பிறந்தவர். தீவிரவாதி என்றழைக்கப்பட்டவர். கடவுளின் சட்டங்களை அனுசரிப்பதிலும், பாவத்தை எதிர்த்துப் போராடுவதிலும், கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் ஆர்வத்துடன் உழைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் பாரசீக நாட்டில் வேதம் போதித்து, வேதத்திற்காக உயிரைக் கொடுத்தார். புனித யூதாவுக்கு ‘ததேயுஸ்’ என்ற வேறு பெயரும் உண்டு. ‘ததேயுஸ்’ என்றால் ‘தைரியசாலி’ என்று பொருள். இவர் புனித சின்ன யாகப்பருடைய சகோதரர். இயேசுவின் உறவினர். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சிரியா, மெசபத்தோமியா, லீபியா ஆகிய இடங்களில் வேதம் போதித்து, ஆர்மேனியா நாட்டில் வேதத்துக்காக கொல்லப்பட்டார் என்பது பாரம்பரியம்.

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 31ஆம் ஞாயிறு

சா ஞா 11 : 22 - 12: 2;       2 தெச 1 : 11 - 2 : 2:               லூக் 19 : 1 - 10

மனிதர் இறைவன் இசைக்கும் இனிய தாளங்கள். ஆனால் சிலர் தப்புத் தாளங்களாக சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டு விடுகின்றனர். தப்புத் தாளங்களை இனிய தாளங்களாக மாற்ற வேண்டும் என்று இயேசு அழைப்புக் கொடுத்தார். அதனையே செயலில் காட்டினார். ‘நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனமாற அழைக்க வந்தேன்’ என்றார் (லூக் 5 : 32). ‘பாவி’ என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, ‘அமார்த்தலோஸ்’ என்பதாகும். இது ‘அமார்த்தியா’ என்ற வார்த்தையிலிருந்து மருவி வருவதாகும். ‘அமார்த்தியா’ என்றால் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதில் காணும் தோல்வியாகும். ‘குறி தவறுதல்’ என்றும் கூறலாம். புதிய ஏற்பாட்டில் இந்த ‘பாவம்’, ‘பாவி’ என்ற வார்த்தைகள் பாவத்தை தவித்தல்,, மன்னிப்பு என்ற சூழலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள். உதாரணமாக மாற் 1 : 4இல் திருமுழுக்கு யோவான், பாவம் ‡ மன்னிப்பு ‡ மனமாற்றம் இவைகளை குறிப்பிட்டே மக்களுக்கு போதனை செய்தார் (காண் லூக் 3 : 3, தி ப 2 : 38).

இன்றைய நற்செய்தியில் சக்கேயு என்ற தலைமை வரிதண்டுபவர் இயேசுவின் வலையில் வீழ்கிறார். எரிக்கோ நகரில் வினோத பிரியனாக இயேசு யார்? என்று பார்க்க, குட்டையான சக்கேயு அத்திமரத்தில் ஏறுகிறான். நத்தனியேலை அத்திமரத்தின் கீழ் கண்டார் இயேசு. அத்திமரம், சட்டங்களை கற்கின்ற சூழலை கொண்ட மரம் என்பது ஒரு யூத வழக்கு. சக்கேயு அத்திமரத்தின் மீது ஏறுகிறான். இயேசுவை காண்கிறான். புதிய சட்டத்தைக் காண்கின்றான். தனது பேராசையான பாம்பு சட்டையை கழற்றி எறிகிறான். சக்கேயுவுக்கு இறைவாக்கினரைப் போல இயேசுவிடமிருந்து அழைப்பு வருகிறது. ‘சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் தங்க வேண்டும்’. சக்கேயு என்றால் ‘தூய்மை’ என்று பொருள். பாவிகள் என்று கருதப்பட்ட வரிதண்டுபவர்கள் இயேசுவின் நண்பர்களாகிறார்கள் என்ற குறிப்பினை லூக்கா நற்செய்தியில் பல இடங்களில் பார்க்கிறோம். (லூக் 3 : 12 - 13; 5 : 27 - 32; 7 : 29 - 30; 15 : 1 - 2; 18 : 9 - 14).

வரிதண்டுபவர்கள் இயேசுவின் அழைப்பிற்கு பதிலளித்து மனமாறுகிறார்கள். சக்கேயு வரிதண்டுபவர் மட்டுமல்ல, பெரிய செல்வந்தர் என்றும் கூறப்பட்டுள்ளது. இயேசு செல்வந்தர் ஒருவருக்கு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளும் வழியாக, ‘தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்றும் அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் என்றும் அறிவுரை கூறினார். இதனைக் கேட்ட அந்த செல்வர் மிகவும் வருத்தமுற்றார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இயேசு செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்றார் (லூக் 18 : 18 - 27).

சக்கேயு என்ற ஒட்டகமான செல்வந்தன் ஊசியின் காதில் நுழைந்துவிட்டான். ஏனென்றால் தன் சொத்துக்களின் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடவும், தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நான்கு மடங்கு ஈடுசெய்யவும் முன்வருகிறார். இவ்வாறு உயர்ந்த ஒட்டகம் சிறிய ஊசியில் நுழைகிறது.

முதல் வாசகத்தில, தவறு செய்பவர்களை இறைவனே சிறிது சிறிதாய் திருத்துகிறார் என்றும், இறைவன் இரக்கம் கொண்டவர் என்றும், மனிதர் மனந்திரும்ப வேண்டும் என்பதை விரும்புகிறார் என்றும் கூறுகிறது.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், கடவுள், உங்களை தாம் விடுத்த அழைப்புக்கு தகுதியுள்ளவராக்குவாராக என்றும், ‘உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும் நிறைவுற செய்வாராக’ என்றும் தெசலோனிக்கருக்கு அறிவுரை கூறுகிறார்
.
குறையில்லாத மனிதர் இல்லை. புல்டன் Uன் ஆண்டகை சிறை சாலை ஒன்றை சந்தித்தார். அப்போது அங்கிருந்த கைதிகளைப் பார்த்து கூறினார், நாம் எல்லோரும் ஒன்றுதான். ஒரே வேறுபாடு, நீங்கள் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளீரகள். நாங்கள் கம்பிகளுக்கு வெளியே உள்ளோம் என்றார்

பொதுக்காலம் 30ஆம் வாரம்

பொதுக்காலம் 30ஆம் வாரம்                      23 - 10 - 2016

சீ.ஞா 35 : 12 - 14, 16 - 18;   2 திமொ 4 : 6 - 8, 16 - 18;      லூக் 18 : 9 - 14

‘தற்பெருமை சோகத்தையே வருவிக்கும்’ என்கிறார் எமிலி பிரோன்த்.

‘ஒருவரின் அழிவுக்கு முன்னால் வருவது அகந்தை’ என்கிறது ஸ்பெயின் பழமொழி. 

இன்றைய இறைவாக்குகள், அகந்தை இறைவனுக்கு ஏற்ற பண்பு அல்ல என்றும், பணிவு இறைவன்முன் இனிய பண்பு என்ற கருத்துக்களை கூறுகின்றன.

நற்செய்தியில், தங்களை நேர்மையாளர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களைப் பற்றி விளக்க ஓர் உவமையைக் கூறுகிறார்.

பரிசேயர், வரிதண்டுபவர் இவர்களின் அகந்தை ‡ பணிவு என்ற பண்புகளை வேறுபடுத்திக் காண்பிக்கிறார். பரிசேயர் தன்னை உயர்த்தி அடுத்தவரை தாழ்த்திப் பார்க்கிறார். வரிதண்டுபவர் தன் தாழ்நிலையை நினைத்து வருந்துகிறார். தன்னையே தாழ்த்திக் கொண்ட வரிதண்டுபவர்தான் இறைவனுக்கு ஏற்புடையவராக வீடு திரும்பினார் என்று இயேசு தீர்ப்புக் கூறகிறார். முதல் வாசகத்தில், ‘தங்களை தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்’ என்று சீராக்கின் ஞானம் எடுத்துக் கூறுகிறது. முகட்டில் தண்ணீர் நிற்பதில்லை. பள்ளத்தில்தான் தண்ணீர் தங்குகிறது.

பெருமையை எல்லா மனிதரும் தேடுகின்றனர். மற்றவர்கள் தங்களைப் பற்றி பெருமையாகக் கூறும்போது மனதில் ஒரு திருப்தி உண்டாகிறது. நாம் பெற்றிருக்கின்ற நன்மைகளுக்காக மகிழ்ச்சியடைவது நல்லதுதான். ஆனால் நம்மிடம் இல்லாத நன்மைகளை நம்மிடம் இருப்பதாக பெருமையடித்துக் கொள்வதுதான் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் செயல். அதிலும் மற்றவர்களைக் குறைத்து நம்மை உயர்த்தி பேசுவது காற்றால் நிரப்பப்பட்ட பலுனை போன்றதாகும். எனவேதான் யூத பழமொழி, ‘தற்பெருமை அகந்தையுடள் விருந்துண்ணும், ஆனால் கடைசியில் ஏழ்மையின் பசியில் துன்புறும்’ என்கிறது. 
வள்ளுவரும், 

‘அமைந்தாங்கு ஒமுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்’ (குறுள் 474) 

என்கிறார். ‘அளவறியான்’, ‘தன்னை வியந்தான்’ என்று கூறுகிறார்.

நெல் முதிர்ச்சி அடையும்போது அப்படியே பணிகிறது. அதே போல ஞானம், அனபவம் வளர வளர பணிவு வளர்கிறது. பதரானது நிமிர்ந்து நிற்கிறது. குறைகுடம் ததும்புகிறது. பணிவது, அவமானத்தை தாங்குவது போல. இருவர் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டிலும் ஏற்று கொள்ளவில்லை. வீட்டை விட்டு விரட்டி விட்டனர். ஆனால் தனியாக சென்று வாழ்வில் மிகவும் வசதியாக வாழ்ந்தனர். இடையில் பெண்ணின் பெற்றோர், அவர்களுடைய மகன்களால் கைவிடப்பட்டார். முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இதனை கேள்விப்பட்ட பெண், பெற்றோர்களால் துரத்தியடிக்கப்பட்டவள், முதியோர் இல்லத்திற்கு சென்று தன் பெற்றோர்களை அழைத்து வந்து காப்பாற்றுகிறாள். முதியோர் இல்லத்திற்கு மகள் சென்றபோது அம்மா கட்டிப்பிடித்துக் கொண்டு, ‘மன்னித்துவிடு, நான் உன்னை அவமானப்படுத்தி விட்டேன்’ என்றாள்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், தன் வாழ்வின் நிறைவைப் பற்றி பேசுகிறார். உலகத்தை விட்டு பிரியபோகுமுன் நேரம் வந்துவிட்டது. என் வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டேன் என்கிறார். 

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து” 

என்கிறார் வள்ளுவர். பணிவு விண்ணகத்தின் பண்பு. தற்பெருமை வெறுமையின் முக்காடு.

பொதுக்காலம் 29ஆம் வாரம்

பொதுக்காலம் 29ஆம் வாரம்                            16 - 10 - 2016

விப 17 : 8 - 13;   2 திமொ 3 : 14 - 4 : 2;                    லூக் 18 : 1 - 8

செபத்தின் அனுபவத்தை அழகாக சித்தரித்து பாடுகிறார் வள்ளலார். 
நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து 
நெகிழ்ந்து நெகிழ்ந்து - அன்பே 
நிறைந்து நிறைந்து 
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு 
நனைந்து நனைந்து 
அருளமுதே நன்றதியே
 ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து 
ஏத்துதும் நாம் வம்மின் 
உலகியயீர் மரணமில்லாப்; பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் - திரு அருட்பா 5576.

செபம் என்பது ‘ஓர் ஆன்மாவின் உள்ளாந்திர ஏக்கம்’ என்கிறார் மகாத்மா காந்தி. 
உள்ளத்தினை, உறுதிபடுத்தும், உள்ளத்தினை திருத்தியமைக்கும். உள்ளத்திறகு உள்ளொளி கொடுக்கும் உள்ளாந்திர அனுபவம். இயேசுவின் வாழ்வில் இந்த செப அனுபவம் தனி இடம் பெற்றிருக்கிறது. தன் சீடர்களும் இந்த வல்லமையுள்ள அனுபவத்துடன் வாழ அவர்களை பயிற்றுவித்தார்.

முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்னால் இயேசு செபிக்கிறார். ஒவ்வொரு நாளும் பணிகள் முடிந்ததும் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று செபித்திருக்கிறார். இயேசு உருமாற்றம் அடைந்தபோது, அவர் ‘வேண்டிக் கொண்டிருந்த போது, அவரது முகத் தோற்றம் மாறியது’ (லூக் 9 : 29) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், மனந்தளராமல், எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு ஓர் உவமையைக் கூறுகிறார். அநீதியான நீதிபதி கைம்பெண் ஒருவரின் விடாத வேண்டுதலால்நீதி வழங்கினார். தாம் தேர்ந்து கொண்டவர்களின் கூக்குரலை எவ்வாறு இறைவன் கேடகாமல் விட்டுவிடுவார்? என்று இறைவனுடன் பாசமுடனான உறவு கொண்டு வாழவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

இன்றைய முதல் வாசத்தில், இரண்டு காட்சிகள். ஒன்று அமலேக்கியருடன் இரபிதியில் யோசுவா போர் செய்கிறார். மோசே குன்றின் மேல் கைகளை உயர்த்தி கடவுளிடம் மன்றாடுகிறார். மோசே கையை உயர்த்தும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றி பெற்றனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

‘செபம் என்பது கடவுளை மாற்றும் ஒரு வித்தையல்ல. மாறாக நம்மை மாற்றும் உள்ளாந்திர உறவு’ என்கிறார். கிர்க்கேகார் என்ற தத்துவ அறிஞர்.

‘இறைவன் என் இதயத்தை உடைக்கட்டும். இதனால் உலகம் அனைத்தும் என்னால் நலம் பெறட்டும்’ என்கிறார் அன்னை தெரசா.
‘எளிதான வாழ்விற்காக மன்றாட வேண்டாம். சுமையான வாழ்வை சுமக்கின்ற வலிமைக்காக செபிக்க வேண்டும்’ என்கிறார் புரூஸ்லீ.
செபத்தில், அமர்ந்து விட்டு வெளியே வரும்போது மனதில் ஓர் அமைதியை உணரலாம். ஒரு புதிய ஒளிகிடைப்பதையும் காணமுடியும். சிக்கல்களுக்கு ஒரு விடிவு வழியையும் தெரிந்துக் கொள்ள முடியும். 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
       மனக்கவலை மாற்றல் அரிது (குறள்7).

இறைவனிடம் இணைந்திருக்கும் போதுதான் மனக்கவலைகள் மறையும் என்கிறார் வள்ளுவர். அன்னை தெரசா இல்லங்களில் 24 மணி நேரமும் தொடர் செப நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொலைக்காட்சியின் கற்பனைத் தொடர்களில் நேரங்களை செலவிடும் நம் மக்கள் செபத்தின் பயனை உணராத நிலையினைப் பார்க்கிறோம். திருஅவை பலவகையான செப நிகழ்வுகளை நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது. செப அனுபவத்தைத் உள்வாங்குவோம், உள் ஒளியில் வளர்வோம்.

பொதுக்காலம் 28ஆம் வாரம்

பொதுக்காலம் 28ஆம் வாரம்                     09 - 10 - 2016

2 அரச 5 : 14 - 17;     2 திமொ 2 : 8 - 13;           லூக் 17 : 11 - 19

ஒரு பெண் கல்லூரியில் படித்தாள். விடுதியில் தங்கியிருந்தாள். அவள் தன் பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நன்றி என்று எழுதியிருந்தாள். ‘அம்மா, எனக்காக செய்த தியாகங்களையும் அன்பையும் நினைத்துப் பார்க்கிறேன். நன்றி அம்மா’ என்று எழுதியிருந்தாள். அந்த வாக்கியத்தை வாசிக்க கேட்டதும் அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

‘நன்றியுள்ளம் ஆன்மாவில் பூக்கும் உன்னதப்பூ’ என்கிறார் யஹன்றி வார்ட் பீச்சர்.
நன்றி என்பது உணர்வுகளின் நினைவு என்கிறார் Uன் பாப்டிஸ்ட் மாசியு.

இயேசு 10 தொழுநோயாளரைக் குணமாக்குகிறார். லூக் 5 : 12 ‡ 16இல் ஒரு தொழுநோயாளரைத் தொட்டு குணமாக்குகிறார். ஆனால் இன்றைய நற்செய்திப் பகுதியல் பத்து தொழுநோயளர்களைக் குணமாக்கி குருக்களிடம் உங்களை காண்பியுங்கள் என்கிறார். அவர்களில் ஒருவர் மட்டும், தான் குணமானதை அறிந்து குருக்களிடம் கூட சொல்லாமல், குணமளித்த இயேசுவிடம் வந்து முகம்குப்புற விழுந்து நன்றி கூறுகின்றார். குணமடைந்து, திரும்பி வந்து, நன்றி கூறியவர் சமாரியர் இவர் தாழ்ந்த இனத்தவராக கருதப்பட்டவர். நல்ல சமாரியர் உவமையிலும், குரு, லேவியர் ஆகியோரைவிட அன்பு காட்டும் உயர்ந்தவராக அங்குக் காண்பிக்கப்படுகிறார் (லூக் 10 : 25 ‡ 37). நன்றி என்பது மற்றவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளைக் காண்பது. எனவேதான், தொழுநோயாளர், ‘தம்பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு’ என்று காணுதல் என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறுகிறார் :

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலினும் பெரிது” (குறள் 103)

சமாரியர் கடவுளின் அற்புத செயலைக் கண்டு கொண்டார். எனவேதான், ‘அவர் கடவுளைப் புகழ்ந்து கொண்டே’ இயேசுவிடம் வந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. லூக்கா நற்செய்தியில் இறைவனின் வல்ல செயல்களை காண்பிக்கின்றவர், இறைவனை புகழ்கின்ற பண்பினை குறிப்பிடுகிறார்.

லூக் 2 : 20 மாடடை குடிலில் இயேசுவை பார்த்தப் பிறகு இடையர்கள் ‘கடவுனைப் போற்றி புகழ்ந்து பாடிக் கொண்டு திரும்பினர்’.

லூக் 5 : 25 ‡ 26 முடக்குவாதமுற்றவர் குணம் பெற்றபிறகு, ‘கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாரே வீட்டுக்குப் போனார்’.

லூக் 7 : 16 நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு மக்கள், ‘கடவுள் தம் மக்களை தேடி வந்திருக்கிறார் என்று சொல்லி கடவுளைப் போற்றி புகழ்ந்தனர்’.

லூக் 13 : 13 கூன் விழுந்த பெண்ணை இயேசு குணமாக்கியபோது ‘உடனே அவர் நிமர்ந்து கடவுளைப் போற்றி புகழ்ந்தார்’.

லூக் 18 : 43  பார்வையற்றவர் ஒருவரை இயேசு குணமாக்கிய போது, ‘உடனே அவர் பார்வை பெற்று டவுளைப் போற்றி புகழ்ந்துக் கொண்டே இயேசுவைப் பின்பற்றினார்’.

லூக் 23 : 47 இயேசு சிலுவையில் மரித்தக் காட்சியைக் கண்ட நூற்றுவர் தலைவர், ‘இவர் உண்மையாகவே நேர்மையாளர் என்று கூறி கடவுளைப் போற்றி புகழ்ந்தார்’. 

போற்றி புகழ்தல் என்பதற்கு கிரேக்க மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, ‘தொக்சா’ (dலிவகுழி) என்பதாகும். இதற்கு இணையான எபிரேய வார்த்தை ‘கபோத்’ என்பதாகும். ஒருவரின் பெருமையை, உயர்வை குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் இது. யாவேயின் பெருமையை எடுத்துரைக்க, ‘கபோத் யாவே’ என்ற சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் இது. யாவேயின் பெருமையை எடுத்துரைக்க, கபோத் யாவே என்ற சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி என்பது ஒருவர் பெற்ற நன்மைக்கு ஒருவரின் பதில் மொழி. புகழ்ச்சி என்பது ஒருவரின் சிறந்த பண்பை எடுத்துக்கூறுதல். தொழுநோயாளர் இயேசுவுக்கு நன்றி கூறினார். கடவுளுக்கு புகழ்ச்சியும் செலுத்தினார்.

நன்றி, உறவின் ஊடகம். உறவை வளர்க்கும் புளிப்பு மாவு. முதியோர் இல்லத்தில் வாழ்ந்த முதியவர் செய்த செபம் என்று வாட்ஸ் அப்பில் வந்திருக்கிறது. ‘இறைவா முதியோர் இல்லத்தில் வாழும் இந்த நிலை என் மகனுக்கும் வந்திடக்கூடாது’ என்று செபித்தாராம். மற்றவர்களால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவைகளை கண்டுக்கொண்டால் நன்றி பிறக்கும், நன்றி மகிழ்ச்சியை கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் பிறப்பிக்கும்.

முதல் வாசகத்தில், நாமான் என்ற சிரியா நாட்டு படைத்தலைவர் இறைவாக்கினர் எலிசா வழியாக தொழுநோயிலிருந்து குணம் பெற்றதற்காக, எலிசா வழிபட்ட இறைவனை வழிபட முன்வருகிறார். இவ்வாறு தன் நன்றியைக் காட்டுகிறார். 

இரண்டாம் வாசகத்தில், ‘நாம் நம்பத்தகாதவராயினும் கடவுள் நம்பத் தகுந்தவர்’ என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

 ‘உன் வாழ்வில், ‘நன்றி’ என்பதுதான் உனது ஒரே செயல் என்றால் அதுவே உன் வாழ்விற்குப் போதுமானது’ - மைஸ்ட்டர் எக்கார்ட்.

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

ஞாயிறு தரும் இறைவார்த்தை

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

அப 1 : 2 - 3; 2 - 4; 2 திமொ 1 : 6 - 8, 13 - 14; லூக் 17 : 5 - 10

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை  (குறள் 439)

தற்புகழ்ச்சி தேவையற்றது என்கிறார் வள்ளுவர் ;ஆனால் தற்புகழ்ச்சி, மனிதரிடத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பசியை போன்றது. தன்னால் ஆனது, என்னால் மட்டும் ஆனது. எனவே நான் மற்றவரைவிட சிறப்புக்குரியவர். மற்றவரை தன் ஆட்சியில் வைத்திருக்கும் வல்லமை உடையவன் என்ற எண்ணம் நம்மில் ஒவ்வொருவரிடமும் புதைந்திருக்கிறது.  இதனை மாற்றி, இறைதுணையாலும், மற்றவர் துணையாலும் தான் எதனையும் சாதிக்க முடிகிறது என்பது தெய்வீகப்பண்பு, இயேசு, இறைவனாயிருந்தும் அடிமையின் உருவெடுத்து நமக்கு மீட்பு அளித்தார் என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

ஓர் ஆயர் கூறுவார், குருத்துவம், ஆயர்பணி கடவுள் எனக்குப் போட்ட பிச்சை என்பார். நம் ஆற்றலுக்கு உயிர் கொடுப்பவர் இறைவன். இதனை உணர்ந்தால் நம் ஆற்றல் இரட்டிப்பாகும்.
இன்றைய நற்செய்திப் பகுதி, இயேசு எருசலேமை நோக்கி செல்கின்ற பயணத்தின் போது நடைபெறும் நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. இப்பயணத்தில் இயேசுவுக்கு அதிகமாக எதிர்ப்புக்கள் தோன்றுகின்றன. லூக் 17 : 1 ‡ 4இல் இயேசு மற்றவர்களுக்கு இடறல் தருவதைப் பற்றி பேசுகிறார். அப்போது சீடர்கள், எங்களின் நம்பிக்கையை உறுதியாக்கும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். அச்சூழலில்தான், நம்பிக்கையின் வல்லமை பற்றியும், பணியாளர்கள் நன்றி எதிர்பார்க்காமல் தொடர்ந்து பணி செய்ய வேண்டுமென்று இயேசு அறிவுறுத்துகிறார். அரசு அலுவலர்களுக்கு அரசு ஓரளவிற்கு நல்ல ஊதியத்தைத் தருகிறது. ஆனால் அவர்களின் பணிகளை செய்த பிறகு இன்னும் அதிகமாக பரிசுகளை எதிர்பார்க்கிறார்கள்.  கடமை என்னும் செடியில் மலர்வதுதான் மகிழ்வு என்ற பூ என்கிறார் பிலிப்ஸ் புருக்ஸ். கடமையை செய்தால் தோல்வி வருவதில்லை. கடமைகளை செய்யாத போதுதான் தோல்விகள் நம்மை சந்திக்கின்றன என்கிறார் இராபர்ட் பாடன் பவல். உன் கடமையை சற்று கவனமாக செய்தால் எதிர்காலம் உன்னை கைபிடித்து நடத்தும் என்கிறார் ஆன்று கமேஜி.

வல்லபாய் படேல், ஒரு வழக்கறிஞர். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் ஒருதுண்டு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். படேல் கடிதத்தை படித்துவிட்டு வழக்கில் தொடர்ந்து வாதாடினார். நீதிமன்றம் முடிந்ததும், நீதிபதி படேலைக் கேட்டார். அந்த துண்டு கடிதம் என்ன? என்றார். என் மனைவி இறந்துவிட்டார் என்று தான் அந்த கடிதம் தெரிவித்தது. எனது கடமையை செய்வது முதல் வேலை என்று தான் வழக்கில் தொடர்ந்து வாதாடினேன் என்றார்.

கடமையை மடமையாகவே நம்நாட்டில் பலர் கருதுகின்றார். எனவேதான் பல விபத்துக்கள் நடக்கின்றன. நம் நாட்டின் வளர்ச்சி தடை பெறுகிறது. சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அதன் உறுப்பினர்கள் பங்குக் கொள்வதில்லை. அரசு அலுவலகங்கள், அரசு தொழிலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், தங்களின் கடமைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை. ஓர் அலுவலகத்தில் பணியாளர் ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் பத்து நாட்களில் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். ஏன் விடுப்பினை முழுமையாக பயன்படுத்த வில்லை என்றதற்கு, வீட்டில் தூக்கமே வரமாட்டேங்குது. அலுவலகத்தில் தான் நல்ல தூக்கம் வருகிறது என்றார். இயேசு தன் தந்தை அவருக்குக் கொடுத்தப் பணியை முழுமையாக செய்ததாகக் கூறுகிறார். நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன் (யோவா 17 : 4).. யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று ஒன்று உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று (யோவா 5 : 36) கடமை உயர்வின் ஆளுமை!


அமெரிக்கக் கடிதம், - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்

- சவரி, 
கேரி, வடகரோலினா

“கடவுளை மட்டுமே நாங்கள் நம்பியுள்ளோம்”(IN GOD WE TRUST). இந்த வாக்கியம் அமெரிக்க நாட்டு அனைத்து டாலர் பணத்திலும், காசுகளிலும் எழுதப்பட்டுள்ள வாக்கியம். உலகில் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானியயன அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறுகிறார். ‘நான் எவ்வளவு அதிகமாக அறிவியலை படிக்கிறேனோ அவ்வளவு அதிகமாக கடவுள் மேல் நம்பிக்கை வருகிறது’ என்கிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளில் மயங்காமல் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பலிக்கு செல்வதற்கு வசதியாக, எல்லா அலுவலகங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலிருந்து குடியேறியவர்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்துவர்கள், தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளான தொலைக்காட்சி, தொலைப்பேசி, அலைப்பேசி, கணிணி, குளிர் சாதனப் பெட்டி, கார் போன்ற இயந்திரங்களைத் தவிர்த்து அந்த காலத்தில் உள்ளது போல் எங்கும் நடந்து சென்று, வயல் வெளியில் வேலை செய்து, மாட்டிலிருந்து பால் கறந்து, அடுப்பில் சமைத்து, இறைவனை துதித்து எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். இயந்திரங்களும், வசதிகளும், சொகுசுகளும் வந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம் என்பது அவர்கள் கருத்து.

அமெரிக்கர்கள் கோவிலில் நுழைந்தவுடன் அலைப்பேசியை அணைத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் நிம்மதியாக திருப்பலி காண்பதுடன் மற்றவர்களும் நிம்மதியாக திருப்பலி காண்பதற்கு வசதியாக இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பக்கத்தில் யார் இருக்கிறார்கள், எதிர்த்தார் போல் யார் வருகிறார்கள் என்று தெரியாமல், தலை குனிந்து அலை பேசியில் ஆழ்ந்து போயிருப்பதை பார்க்கிறேன். பல பேர் திருப்பலி நடக்கும் போது கூட, நம்மை படைத்த இறைவனை நினைப்பதை மறந்து விட்டு, ழஜுழிமிவிழிஸ்ரீஸ்ரீஇல் வந்த படங்களை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, மனது வலிக்க தான் செய்கிறது. அறிவியலும், கண்டுபிடிப்புகளும், நம்முடைய வாழ்வை எளிமையாக்குவதற்கு உருவாக்கப்பட்டவை. அவைகளுக்கு அடிமையாகி நம்முடைய நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.

கஷ்டம் வந்தால் இறைவனை நினைப்பதும், காசு வந்தால் இறைவனை மறப்பதும் மனித பழக்கம். இதை மாற்றி இன்பத்திலும், துன்பத்திலும் இறைவனைக் கண்டுகொள்வோம்.

பணிவு என்னும் இனிய பாதை 7. இயற்கையாக வரும் ஆணவம்

பணிவு என்னும் இனிய பாதை

7. இயற்கையாக வரும் ஆணவம்

-அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்,

இந்த முறை ஒரு இரகசியத்தோடு கட்டுரையை தொடங்குகிறேன். ஒரு சாமியாரின் (பங்குத்தந்தையின்) நன்மதிப்பை நீங்கள் பெற வேண்டுமா? அதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. “இன்றைக்கு உங்கள் பிரசங்கம் விற்ஸ்ரீer ய்ழிமிஜுer” என்று சொல்லிப் பாருங்கள். அநேகமாக எல்லாக் குருக்களும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நல்ல, ஞானம் மிக்க, ஆற்றல் வாய்ந்த குருவானவர். அவரிடம் ஒருநாள் பங்கின் உறுப்பினர் ஒருவர் சென்று, “உங்கள் பிரசங்கம் எனக்குப் புரியவில்லை. நான் வேறு ஒரு கோவிலுக்குப் போகிறேன்” என்றார். உடனே அந்த குரு கோபப்படவில்லை. “நண்பரே, நீங்கள் வேறு கோவிலுக்குப் போவதை நான் தடைசெய்யவில்லை. ஆனால் எனக்கு ஓர் உதவி செய்துவிட்டு செல்லுங்கள். ஒரு நான்கு வாரங்கள் தொடர்ந்து கோவிலுக்கு வாருங்கள். நான் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தை புதன்கிழமையே எழுதி உங்களிடம் தந்துவிடுகிறேன். அதில் உங்களுக்கு எது புரியவில்லையோ அதனை என்னிடம் சொல்லுங்கள். அதை மாற்ற முயற்சி செய்கிறேன். ஏனெனில் உங்களைப் போல என் பிரசங்கம் புரியாவிட்டாலும் என்னிடம் எப்படி சொல்லுவது என தயங்கிக் கொண்டு சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்” என்றார். “அந்த நபர், எனக்கு பேருதவியாக இருந்தார். நான் நல்ல பிரசங்கியராக வருவதற்கு உதவி புரிந்தார்” என்று தாழ்ச்சியோடு அந்த சம்பவத்தைப் பற்றி அந்த குருவானவர் நினைவு கூர்கின்றார்.

நமக்கு மிகவும் இயற்கையாக வருவது ஆணவம்தான். அதனால்தான் பணிவு அல்லது தாழ்ச்சி மிகவும் அரிதாக இருக்கிறது நமக்கு மிகவும் இயற்கையாக வருவது ஆணவம்தான் என்பதற்கு பல உதாரணங்களைச்  சொல்லலாம். நீங்கள் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். (பேச்சுப் போட்டி, நடனப் போட்டி). அந்தப் போட்டியில் வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. உங்கள் பெயர் வராவிட்டால் ஏன் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றுதான் நினைப்பீர்கள். அதைப் போல ஒரு குரூப் போட்டோ எடுக்கிறீர்கள். அதை பிரிண்ட் எடுத்து பார்க்கும்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றுதான் தேடுவீர்கள். என் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்னையின் அருட்சுடர் வந்தவுடன் என் கட்டுரை எங்கு இருக்கிறது? என்றுதான் தேடுகிறேன். (அடுத்த முறை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்கிறேன்). எனவே ஆணவம் இயற்கையாக வருகிறது என்பதும், பணிவு அரிதாக இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் உங்களது பெருமைகளுக்கு எந்தவிதமான அடித்தளமும் இல்லை. உதாரணமாக உங்கள் குடும்பப் பெருமைகளை (சாதிப் பெருமைகள்) பற்றி நீங்கள் பேசலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் (சாதியில்) பிறந்ததைவிட உங்கள் பங்களிப்பு அதில் எதுவும் இல்லை. சிலர் அவர்களின் சாதனைகளைப் பற்றி சொல்வார்கள். நீங்கள் ஓர் அருமையானக் கட்டிடத்தை கட்டியிருக்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு பொறியாளர் இல்லாமல், கொத்தனார் இல்லாமல், சித்தாள் இல்லாமல், தச்சர் இல்லாமல், பெயிண்டர் இல்லாமல் அந்த சிறந்தக் கட்டிடத்தின் நூறில் ஒரு பகுதியைக் கூட உங்களால் இருக்க முடியாது. இன்னும் கட்டி சிலர் சொல்வார்கள். நான் கஷ்டப்பட்டு உழைத்து நல்ல நிலைக்கு வந்துள்ளேன். சார், உங்களுடைய வாழ்வின் முதல் ஆண்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இரண்டாவது ஆண்டைப்பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் பிறந்த போது உங்களுக்கு நடக்கத் தெரியுமா? பேசத் தெரியுமா? இன்று நீங்கள் நன்றாக இருப்பதற்கு உறுதுணையாக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை மறந்துவிட்டு, நான்தான் என்று சொன்னால் அது உண்மைக்கு எதிரானதாகும்.

ஆணவம் இயற்கையாக நம் வாழ்வில் தவழ்கிறது. அரிதான பணிவை கொஞ்சம் கொஞ்சமாக தவழவிட்டு, பெருமைகளை தவிர்த்து வாழும்போது நம் வாழ்வும் அழகு பெறும். இனிமை பெறும். (தொடரும்)

செல்லரித்த பூக்கள்

செல்லரித்த பூக்கள்
- ரா. பெர்ணத், 
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி
சமயபுரம்
மனமெனும் மர்மப் பெட்டகத்தில
மயங்கி இருக்கும் போதும்
சோற்றுக்காக சோர்வுற்று
சோம்பி இருக்கும் போதும் ‡ எம்
இளையப் பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

உழைப்பு என்னும் சொல்
உன் உள்ளத்தை
உருவகப்படுத்தாத போதும்
செல்லரித்த பூக்கள் தான் நீ
சமூகத்தில் காணும்
அவலங்களை கண்டும் காணாமல்
உணர்வற்று ஊமையாய்
இருக்கும் போதும் - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

கற்புக்கரசி பிறந்த நாட்டில்
கற்பை களவாடும் போதும்
கண்ணாமூச்சி ஆடும் கண்மணிகளை
காமக் கொடூரன்களின் வலையில்
சிக்கித் தவிக்கும் போதும்
சீறியயழும் வேங்கையாய் இராமல்
சிற்பமாய் நிற்கும் போதும் - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

நிழலை நிஜமென்கின்றாய்
நிஜத்தை நிழலென்கின்றாய்
தெளிவில்லா உன் மனச் சிந்தனையால்
சிந்தித்தும் செயல்பட மறுக்கின்றாய்
அதிர்ஷ்டம் என்னும் ஆறாம்விரல்
என் வீட்டுக்கதவை தட்டவில்லையயன்று
சொல்லும் போதும் - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

உன்தாயின் கருவறை
உவகை கொள்ளாத போதும்
உன் பிறப்பு அர்த்தமற்றுப் போகும்போதும்
செல்லரித்த பூக்கள் தான் நீ - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் (தானா) நீ
சிந்தித்துப் பார்
செல்லரித்த பூக்கள் (தானா) நீ?

திருப்பலி விளக்கம் 9. வார்த்தை வழிபாடு

திருப்பலி விளக்கம்

9. வார்த்தை வழிபாடு

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்
முன்னுரை :

தொடக்கச் சடங்கு திருக்குழும மன்றாட்டோடு முடிவடைகிறது. அடுத்து வருவது ‘வார்த்தை வழிபாடு’ ஆகும். இதைப் பற்றி குறிப்பிடும்போது திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் பின்வருமாறு கூறுகிறது. “நம்பிக்கை கொண்டோருக்கு இறைவார்த்தைப் பந்தியில் இன்னும் மிக நிறைவாக உணவு வழங்கப்படவேண்டும். இதற்காக விவிலியத்தின் கருவூலங்களை இன்னும் தாராளமாகத் திறந்திடவும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாக விவிலியத்தின் முதன்மையான பகுதிகளை மக்களுக்கு வாசித்திடவும் வேண்டும்” (தி.வ.எண் 51).

அதைத் தொடர்ந்து உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது : “(விவிலிய) வாசகங்கள் வாயிலாக நம்பிக்கையாளருக்கு இறைவாக்கு விருந்து படைக்கப்படுகின்றது. விவிலியத்தின் கருவூலங்கள் அவர்களுக்குத் திறக்கப்படுகின்றன. விவிலிய வாசகங்களில் உள்ள அமைப்பு முறையைப் பின்பற்றுவது பெரிதும் நம்பத்தக்கது. ஏனெனில் அது இரு ஏற்பாடுகளின் ஒன்றிணைப்பையும் மீட்பின் வரலாற்றையும் தெளிவுப்படுத்துகின்றது. வாசகங்களும் பதிலுரைத் திருப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது”. (உ.தி.தூ.பொது படிப்பினை எண் 57. இனிமேல் றூணூயூனி ).

இந்த அறிவுறுத்தலையும், படிப்பினையையும் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது என இனி காண்போம்.

அருள் அடையாள கொண்டாட்டமும், இறைவாக்கும் :

திருப்பலியில் வார்த்தை வழிபாட்டை விளக்கும் முன் பொதுவாக அருள் அடையாளங்களைக் கொண்டாடுவதற்கு இறைவார்த்தை எவ்வாறு தேவைப்படுகிறது எனக் காண்போம்.

ஒவ்வொரு அருள் அடையாள கொண்டாட்டத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது இறைவார்த்தை போதகமாகும். நற்செய்தி அறிவிப்பு இல்லாமல் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகப் புதிய ஏற்பாட்டில் ஓர் இடத்தில் கூட நாம் காண முடியாது. ஏனெனில் இறைவார்த்தை பறைசாற்றப்படும்போதுதான் விசுவாசம் பிறக்கிறது. அதுவே அருள் அடையாளத்தைப் பெறும் சூழலை உருவாக்குகிறது. உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குத் தோன்றி ‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்’..... (மாற்கு 16 : 15 ‡ 16) என்று கூறினார். இதிலிருந்து நற்செய்தி போதகம் விசுவாசத்திற்கு வழிகோலுகிறது என்றும், விசுவாசம் திருமுழுக்குக்கு இட்டுச் செல்கிறது என்றும் 
அறியமுடிகிறது. 

ஆக போதகம் ‡ விசுவாசம் ‡ அருள் அடையாளம் என்பது அடிப்படை அமைப்பு எனத் தெரிகிறது. அதாவது இறைவார்த்தையை அறிவித்து அது விளக்கப்படும்போது, அதைக் கேட்பவர்கள் அதை ஏற்று விசுவசிக்கிறார்கள். “ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). அதன் பயனாக திருமுழுக்குப் பெறுகிறார்கள். இதற்கு எத்தியோப்பிய நிதி அமைச்சர் திருமுழுக்குப் பெற்றதை எடுத்துக்காட்டாக இங்கு குறிப்பிடலாம். (தி ப 8 : 35 - 38 காண்க). புனித பேதுரு தம் போதனைக்குப் பிறகு திருமுழுக்கு அளித்ததாக திருத்தூதர் பணிகளில் வாசிக்கிறோம் (திப 10 : 44 - 48 காண்க).

இதே போன்று இன்று ஒவ்வொரு அருள் அடையாளக் கொண்டாட்டத்திலும் இறைவார்த்தை வழிபாடு தேவையாக உள்ளது. ஏனென்றால் இறைமக்களின் விசுவாச சூழலில்தான் அருள் அடையாளம் கொண்டாடப்படுகிறது. இந்த விசுவாச சூழலை உருவாக்கிக் கொடுப்பது வார்த்தை வழிபாடாகும்.

       வார்த்தை வழிபாடு      -                விசுவாசம் -                        அருள் அடையாள வழிபாடு 

மேலே நாம் குறிப்பிட்டதிலிருந்து நற்செய்தி முழக்கமில்லாது அருள் அடையாளங்கள் இடம் பெற முடியாது எனத் தெரிகிறது. இங்கு நாம் சிந்திப்பது திருப்பலி கொண்டாட்டத்தில் முக்கிய பகுதியாகிய வார்த்தை வழிபாடு பற்றியது ஆகும். இந்த வார்த்தை வழிபாடு  திடீரேன இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்குப் பின் புகுத்தப்பட்ட ஒரு வழிபாடு அன்று. யூத மரபிலும், திருஅவையின் தொடக்கக் காலத்திலும் இது நடைமுறையில் இருந்ததாக நாம் அறிகிறோம்.

யூத மரபில் வார்த்தை வழிபாடு :

யூதர் தம் செபக்கூடங்களில் நடத்திய வழிபாடு இன்றைய வார்த்தை வழிபாட்டிற்கு முன்னோடியாக இருந்தது என்று சொல்லலாம். யூதர்களுக்குக் கோவில் ஒன்றுதான் இருந்தது. அது எருசலேம் தேவாலயமாகும். அங்கு பலி மட்டுமே ஒப்புக் கொடுக்கலாம். வாரத்தின் இறுதி நாளாகிய சாபாத் என்னும் சனிக்கிழமை தோறும் மக்கள் தங்கள் ஊர் மத்தியில் இருந்த செபக்கூடத்தில் கூடி வழிபாடு நடத்தினர். அந்த வழிபாட்டில் சில செபங்கள் சொல்லப்படும்; மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி தங்கள் ஒப்புதலை வெளிப்படுத்துவர். பின் விவிலியத்திலிருந்து வாசகங்கள் இடம்பெறும். இந்த வாசகங்கள் தோரா எனப்படும் சட்ட நூலிலிருந்து ஒன்றும், இறைவாக்கினர் நூலிலிருந்து மற்றொன்றுமாக அமைந்திருக்கும். இவ்விரு வாசகங்களுக்கிடையில் திருப்பாடல்களைப் பாடுவர். அதன்பின் அங்கு கூடியுள்ளவர்களில் பெரியவர் அல்லது தனிச் சிறப்புடையவர் வாசகங்கள் பற்றிய விளக்கத்தைக் கொடுப்பார். இறுதியாக நீண்ட செபத்துடன் செபக்கூட வழிபாடு முடிவடையும். 

இதே போன்ற வழிபாட்டு முறை புதிய ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவே தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத் செபக்கூடத்தில் எழுந்து வாசகங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம் (4 : 16 ‡ 23 காண்க). அதோடு திருத்தூதர் பணிகளில் திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்துப்பின் மக்களுக்கு அறிவுரை கூற புனித பவுலை செபக்கூடத்தலைவர் அழைப்பதைக் காண்கிறோம் (தி ப 13 : 14 ‡ 16).
இத்தகைய யூத மரபு இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கு ஏவுதலாக இருந்தது என்பதில் ஐயமே கிடையாது.

திருஅவையின் தொடக்கக் காலம் :

தொடக்ககால திருஅவையில் முதல் கிறிஸ்தவர்கள் யூதர்களாக இருந்ததால் செபக்கூட வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தனர். அதற்குத் தடை ஏற்பட்டபோது வீடுகளில் அப்பம் பிட்கக் கூடினபோது அதற்குத் தயாரிப்பாக வாசகங்களை வாசித்து இறைவாக்கு வழிபாட்டை நடத்திய பின்பே நற்கருணை விருந்து உண்டனர். இவ்வாறு தங்களுக்குப் பழக்கப்பட்ட சடங்குமுறையைக் கிறிஸ்தவக் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டனர்.

நாளடைவில், பழைய ஏற்பாட்டு வாசகங்களோடு புனித பவுல் தங்களுக்கும் மற்றும் தங்களுக்கு அருகாமையில் இருந்த வேறு திருஅவைக்கும் எழுதியனுப்பிய மடல்களையும் வாசிக்கத் தொடங்கினர். திருத்தூதர்களின் போதனைகள் எழுத்து வடிவம் பெற்று நற்செய்தி நூல்களாக வந்தபோது அவற்றிலிருந்தும் ஆண்டவருடைய வாழ்க்கை வரலாறும் போதனைகளும் வாசிக்கப்பட்டன.

இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்பே இப்பழக்கம் நிலையாகிவிட்டது. அக்காலம் முதல் இறைவாக்கு வழிபாடு நற்கருணை வழிபாட்டுடன் இணைந்தே வந்துள்ளது.

இரண்டாவது வத்திக்கான் சங்கத்திற்கு வார்த்தை வழிபாடு :

தொடக்க கால திருஅவையில் கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகள் நாளடைவில் தளர்வுற ஆரம்பித்தன. மக்கள் பேசும் கிரேக்க மொழியில் கொண்டாடப்பட்ட வழிபாடு 4‡ஆம் நூற்றாண்டு முதல் இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது. அதனால் இறைவாக்கு வழிபாடும் இலத்தீன் மொழியிலேயே கொண்டாடப்பட்டது. எல்லா மக்களாலும் இறைவாத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் விவிலியத்தின் எல்லா பகுதிகளும் இறைவாக்கு வழிபாட்டில் இடம் பெறவில்லை. சில பகுதிகளே வாசிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக இறைவாக்கு வழிபாட்டின் முதல் வாசகம் புதிய ஏற்பாட்டு திருமுகங்களிலிருந்து வாசிக்கப்பட்டது. அதனால் இது ‘நிருபம்’ வாசகம் என்று அழைக்கப்பட்டது. இது பெரும்பாலும் புனித பவுல் எழுதிய திருமுகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு விதிவிலக்காக திருவருகைக் காலத்திலும், தவக்காலத்திலும் மட்டும் பழைய ஏற்பாட்டிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன.

மற்றும் வார நாட்களின் திருப்பலி கொண்டாட்டங்களுக்குத் தனிவாசகம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்பட்ட அதே வாசகங்கள் அடுத்து வந்த வார நாட்களிலும் வாசிக்கப்பட்டன. அதனால் விவிலியத்தின் எல்லா பகுதிகளையும் கேட்கும் வாய்ப்பு மக்களுக்கு இல்லாமல் போனது.

இத்தகைய தளர்ச்சி திருஅவையின் இடைக்காலங்களில், அதாவது ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டு இரண்டாவது வத்திக்கான் சங்கத்தில் கொணரப்பட்ட மறுமலர்ச்சி வரை நீடித்திருந்தது.

திருவழிபாட்டில் மறுமலர்ச்சி :

இரண்டாவது வத்திக்கான் சங்கம் கொண்டுவந்த மறுமலர்ச்சியை நாம் இறைவாக்கு வழிபாட்டிலும் காண முடிகிறது.
வழிபாட்டை அந்தந்த மக்களின் மொழிகளில் கொண்டாட வாய்ப்பளிக்கப்பட்டதால், திருவழிபாட்டில் பறைசாற்றப்படும் இறைவார்த்தையை மக்கள் தத்தம் மொழிகளில் கேட்டு புரிந்துக்கொள்ள முடிகிறது.

திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் இடம் பெறும் விவிலிய வாசகங்கள் அதிகமாகவும் பல்வகையாய் வேறுபட்டனவாகவும், பொருத்தமானவையாகவும் (தி. வ 35 / 1 காண்க) இருப்பதால் விவிலியத்தின் கருவூலங்கள் இன்னும் தாராளமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆண்டு காலத்துக்குள் முக்கியமான பகுதிகள் எல்லாம் மக்களுக்கு வாசிக்கப்படுகின்றன (தி வ 51 காண்க). மேலும் பதிலுரை பாடல்கள் திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதால் விவிலிய வார்த்தைகளிலேயே செபிக்க மக்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது. மறையுரை, அதாவது பறைசாற்றப்பட்ட வாசகங்களின் விளக்கம், இறைவார்த்தை வழிபாட்டின் ஒருபகுதியாக கருதப்பட்டு இடம்பெறுவதால், நற்கருணை உணவை உண்ணும்முன், மக்கள் இறைவாக்கு விருந்தில் அமர்ந்து ஊட்டம் பெற்று ஆன்ம வளம் அடைய முடிகிறது. அந்த வளமையோடு நற்கருணை விருந்தில் பங்குபெற தகுதி கிடைக்கிறது.

முடிவுரை :

இவ்வாறாக இறைமக்கள் விவிலியத்தை மென்மேலும் அறிய புதுப்பிக்கப்பட்டுள்ள வார்த்தை வழிபாடு வாய்ப்பளிக்கின்றது. இந்த வார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையை அடுத்து வரும் சிந்தனையில் காண்போம் (தொடரும்)

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

-அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed; M. Sc; M. Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்


“ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி” என்கிற டயலாக்கை கேட்ட மாதிரி  இருக்கா? ஆமாங்க, வைகைப்புயல் வடிவேல் ஒரு திரைப்படத்தில் இந்த டயலாக்கை பேசியிருப்பார். ஆம் வெற்றியாளருக்கு மிகவும் தேவையான ஒன்று ரிஸ்க் எடுத்தலே. அதைப்பற்றி சிந்திப்போம்.

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில், இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நான்காம் இடத்தைப் பிடித்தார். இன்று ப்ரோடுனோவா வால்ட்டை எளிதாக கடக்கும் தீபாவின் ஆரம்பகால ஜிம்னாஸ்டிக் வாழ்வு அவ்வளவு பிரகாசமாக இல்லை. ஆரம்பத்தில் தற்போதைய பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியின் மனைவி, சோமா, அகர்தலாவில் உள்ள சிறு பயிற்சி மையத்தில் வைத்து தீபாவுக்கு ஜிம்னாஸ்டிக்கில் பாலபாடம் எடுத்தார். தீபாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து, இனி இந்த பெண்ணுக்கு நானே சொல்லி கொடுக்கிறேன் என பிஸ்வேஸ்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். “ஆரம்பத்தில் தீபாவை நான் கண்டுக்கொள்ளவில்லை. நாளாக நாளாக அவரது அர்ப்பணிப்பும், கடின முயற்சியும், அயராத உழைப்பும் என்னை பிரமிக்க வைத்தது. அடிக்கடி சீனியர் வீராங்கனைகளை காட்டி நானும் ஒரு நாள் அதுபோல் வருவேன் என்பார். அந்த நிலைப்பாடுதான் தீபாவுக்கு என்னை பயிற்சியளிக்க வைத்தது” என்கிறார் பிஸ்வேஸ்வர். அவர்தான் அன்று முதல் இன்றுவரை தீபாவின் பயிற்சியாளர். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொல்கொத்தாவிலிருந்து வந்த டாக்டர், தீபாவின் பாதங்கள் தட்டையாக இருப்பதைப் பார்த்து “இந்தப் பொண்ணு ஜிம்னாஸ்டிக்குக்கு சரிப்பட்டு வரமாட்டா” என்றார். ஜிம்னாஸ்டிக்கை கைவிட தீபாவுக்கு மட்டுமல்ல அவரது பயிற்சியாளருக்கும் இஷ்டமில்லை. தட்டையான பாதங்களில் வளைவு ஏற்படுவதற்காக மட்டுமே தினமும் ஆறுமணி நேரம் பயிற்சி செய்தார். அதன்பிறகு பலமணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை தொடர்ந்தார். வெகுசீக்கிரமே அதற்கு பலனும் கிடைத்தது. ஈரோட்டில் நடந்த தேசிய சாம்பியன்´ப் தொடரில் பல்வேறு பிரிவுகளில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி வென்றபோது தீபாவின் வயது 16. அதே சூட்டோடு பள்ளிகள் அளவிலான தேசியப் போட்டியில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்றதோடு தேசிய ஜுனியர் சாம்பியன்´ப்பில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி அள்ள “யாரு இந்த தீபா?” என ஜிம்னாஸ்டிக் உலகம் கேள்வி எழுப்பியது. இது போதாது என சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்த தீபாவுக்கு டெல்லியில் நடந்த 2010 காமன்வெல்த் போட்டி சறுக்கலாக அமைந்தது. முதல் சர்வதேசப் போட்டியில் அடைந்த தோல்வி ரொம்பவே கசந்தது. “பரவாயில்லை, அடுத்த காமன்வெல்த் போட்டியில் பார்த்துக் கொள்ளலாம்” என தேற்றிய பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் கூடவே ஒரு வி­யம் சொன்னார். “உலகம் உன்னை கவனிக்க வேண்டுமெனில் ரிஸ்க் எடுக்க வேண்டும்”. உடனே தீபா “நீங்க என்ன சொன்னாலும் செய்ய தயார்” என்று சொல்லி துள்ளி எழுந்தார். அந்த துணிச்சலுக்குப் பதிலாக 2014 கிளாஸ்கோ காமன்வெல்த்தில் தீபாவின் கழுத்தில் வெண்கலப்பதக்கம் மின்னியது. காமன்வெல்த்தில் பதக்கம் எல்லாம் ஒரு விசயமே அல்ல. ஒலிம்பிக்கில் ஜெயிச்சா ஆயுசுக்கும் பேர் என அடுத்த இலக்கை நிர்ணயித்தார் தீபா. உயிரை பணையம் வைத்து ‘ப்ரோடுனோவா’ வால்ட்டில் தடம் பதித்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வெற்றியாளராக வலம் வந்தார். மேலும் அவர் கூறியது. இன்னும் நான்கு ஆண்டுகளில் தங்கப் பதக்கத்தை கட்டாயம் வெல்வேன். டோக்கியோ 2020  ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் இலட்சியம் என்றார். தீபா கர்மாகர் தன் வாழ்வில் ரிஸ்க் எடுத்தார். வெற்றியும் கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் இவரது சாதனையைப் பாராட்டியது. இந்திய ஜிம்னாஸ்டிக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முதல்படி, என்று சமூக வலைதளங்கள் அவரை பாராட்டுகின்றன. மத்திய அரசும் அவரைப் பாராட்டி கேல்ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது.

ரிஸ்க் எடுத்தால்தான் இந்த உலகம் நம்மை உற்றுப்பார்க்கும், அறிந்து கொள்ளும், அறிமுகப்படுத்தும், அணைத்துக்கொள்ளும், ஆரவாரப்படுத்தும், துன்பங்கள், துயரங்கள், சவால்களுக்குப் பயந்தால் ரிஸ்க் எடுக்கவே முடியாது. பயத்திலிருந்து விலகிச் செயல்பட்டால்தான் வாழ்வில் ரிஸ்க் எடுக்க முடியும்.

“நம்மால் முடியும்” என்ற தாரக மந்திரம் நம் உடலில், உள்ளத்தில், உணர்வில், உறவில் ஒலிக்க வேண்டும். அதுதான் ரிஸ்க் எடுப்பதற்காக தூண்டுகோலாக அமையும். படிக்கின்ற மாணவ, மாணவியர் முக்கியமாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் போது ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இளைஞர்கள், இளம்பெண்கள் எதிர்கால வாழ்வில் வேலைவாய்ப்பைப் பெற்று நலமோடும், வளமோடும் வாழ்ந்திட ரிஸ்க் எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்வாழ்வு பெற்று வெற்றியடைய நல்லவற்றைக் கற்றுக்கொடுப்பதில் ரிஸ்க் எடுக்க வேண்டும். சுதந்திரம், பாசம், நேசம் என்ற பெயரில் அவர்கள் தவறான பாதையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. எனவே எந்தப் பணியை செய்பவராக இருந்தாலும் வாழ்வில் வெற்றி பெற ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும். இலவசமாக கிடைக்குமா? எளிதாக கிடைக்குமா? குறுக்கு வழியில் கிடைக்குமா? போன்ற கேள்விகளை ம்eயிeமிe செய்துவிட்டு அனைவரும் யூஷ்விவ எடுத்து வெற்றியின் பாதையில் சிஐமிer ஆவோம்.
“Take risks in your life. If you win you can lead. If you lose you can guide”. - Swami Vivekananda

ஆன்ம ஆரோக்கியம் நல்கிடும் அக்டோபர் மாதம்

ஆன்ம ஆரோக்கியம் நல்கிடும் அக்டோபர் மாதம்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அக்டோபர் மாதம் கோடையின் வெப்பம் தணிந்து இளங்குளிர் பொழிந்து உடலையும், மனதையும் உவப்புள்ளதாக்கும் மாதமாகும். நலம் தானா? நலம் தானா? உடலும், உள்ளமும் நலம் தானா? இந்த வரிகள் நலம் என்பது உடல், மனம் இரண்டையும் ஒன்றாக இணைக்கின்றன. நலம் என்பது தீமை கலவாத அல்லது நோய், நொடியில்லாத நிலை. இந்நிலையே ஆரோக்கியம் எனப்படுகின்றது.

ஆரோக்கியம், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதன் முழு அர்த்தத்தினை வெளிப்படுத்தும் வார்த்தை. ஆராக்கியம் அல்லது நலம் நிறை வாழ்வு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பன்முக பரிமாணங்களைக் கொண்டு விளங்குகின்றது. அவை முறையே :

1.சமூக நலன்
2.உணர்வு நலன்
3.ஆன்மீக நலன்
4.சுற்றுச்சூழல் நலன்
5.தொழில் அல்லது கடமை நலன்
6.அறிவுசார் நலன்
7.உடல் நலன்

மேற்கூறப்பட்ட ஏழு பரிமாணங்களும் ஒன்றாக இணைந்து எவ்வித தொய்வுமின்றி செயல்படுகின்ற சமூகத்தில் வாழும் மனிதரே முழுமையாக ஆரோக்கிய வாழ்வு வாழ்பவராவார். எதிர்வரும் மாதங்களில் மேற்கூறப்பட்ட நலன்களை விளக்கியே எனது கட்டுரைகள் வெளியாகும். இந்த அக்டோபர் மாதத்தில் ஆன்ம நலன் பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறேன்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவர் சார்ந்திருக்கும் சமயம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அவரின் சமயக் கொள்கைகள், பழக்கங்கள் அவரின் ஆன்மீக வாழ்வுக்கு அடித்தளமாயமைகின்றன. எனவே உடல் நோயினால் நலிவுற்றிருக்கும் வேளையில் நோயாளியின் ஆன்மீகப் பயிற்சிகள் இறை நம்பிக்கையினையும் குணப்படுத்தும் ஆற்றலையும் வழங்குகின்றன.

புகழ்பெற்ற உளவியலார் விக்டர் ப்ராங்கிள், ‘மனிதர் துன்பத்தினால் அழிக்கப் படுவதில்லை. மாறாக, துன்பத்தின் அர்த்தம் புரியாததனாலேயே அழிகின்றார்’ என்கின்றார். இந்த நிலையில் நோயாளியின் சமய நம்பிக்கை அவரின் துன்பத்திற்கு அர்த்தத்தை மட்டுமல்ல, இது பற்றிய கவலையையும் குறைக்கின்றது. துன்பத்தினை தாங்கும் மனப் பலத்தையும், நேர்மறையான சிந்தனையினையும் வளர்த்து இறை நம்பிக்கை மூலம் முழு சுகத்தையும் அளிக்கின்றது.

உடல் அழிவுக்குட்பட்டது. ஆன்மா அழிவில்லாதது. அழிவற்ற ஆன்மா தூய்மையில் நிலைத்திருக்கும்போது முழு ஆன்மீக நலன் பெற்றதாகத் திகழ்கின்றது.

அன்னை தெரசாவின் ஆன்மீகநலன் : 

நாம் வாழும் நாட்களில் வாழ்வது இயேசுவான இயேசுவின் அன்புக்குச் சான்று பகர்ந்து மரித்திட்ட அன்னை தெரசா ஆன்மீக வளமையோடு வாழ்த்திட்டார். எனவேதான் இவரது வாழ்க்கையில் எதிர்பட்ட துன்பங்கள், வேதனைகள் அனைத்தும் இவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 
‘அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே’
என்ற தாயுமானவரின் வாக்கு அன்னை தெரசாவின் வாழ்வானது. எனவேதான் இந்த அன்னை 
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்’ 
என்ற திருக்குறளின் வைர வரிகளுக்கு அர்த்தம் தந்து விட்டார்.

சொக்கத் தங்கம் : 

ஆன்மீக நலன் மிகுந்தோர் புடம்போட்ட சொக்கத் தங்கத்தைப் போன்றவர்களாயிருப்பர்.
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிழும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
என்னும் பொய்யாமொழிப் புலவரின் அருளாயுதம் ஆன்மீக நலன் மிகுந்தோரிடம் நிதர்சனமாகிடும்.

ஆன்மீக நலன் நிறைந்திட :

நிகழாண்டு செப்டம்பர் 04ஆம் நாள் புனிதர் நிலையினுக்கு உயர்த்தப் பெற்ற அன்னை தெரசாவின் நற்செய்தி வாழ்வே நமது மேல்வரிச் சட்டமாகட்டும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”....
என்ற வள்ளுவர் வாய்மொழி காட்டும் வழிகாட்டு நெறியில் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி அனைத்தையும் விட்டு விட்டு (லூக் 5 : 28) இயேசுவின் பின்சென்றது போல் நாமும் அனைத்தையும் விட்டுவிடல் வேண்டும். எதற்காக? கடவுளின் வார்த்தையைக் கற்பிப்பதை விட்டு விடாது (தி ப 6 : 2) இருப்பதற்காக.
ஆன்மீக நலனிற்கு செல்லும் வழி எது தெரியுமா? இயேசுகிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகின்றேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் (பிலி 3 : 8) என்ற பவுல் அடிகளாரைப் போன்றே ஆன்மீக நலனில் சிறக்க விரும்புவோர் செயல்பட வேண்டும்.

தனி மனித வாழ்வினுக்கு ஆதாயமாய் இருப்பவையனைத்தும் இழப்பே (பிலி 3 : 7). ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16 : 26).

இந்த அக்டோபர் மாதம் புனித டோமினிக் வழியாக அன்னை மரியா தந்திட்ட இறையருள் பொழியும் செபமாலையின் மறையுண்மைகளை அதிகம் செபிக்கும் நாட்களாகும். செபமாலை இறைவனின் அருளினை நிறைவாகப் பெற்று ஆன்மீக நலனில் நிறைந்திடச் செய்யும் ஓர் உன்னத அருள்மாலை. இயேசுவின் வாழ்வோடு நமது வாழ்வுப் பயணத்தின் தடுமாற்றங்களையும், தடைகளையும் ஒன்றிணைத்து இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்போம்.

இறுதியாக ....

ஆன்மீக நலனுக்கு வலுவூட்டிட
அ. பாவம் செய்து கடவுளின் மேன்மையினை இழந்து விடக்கூடாது. (உரோ 3 : 23).
ஆ. இறைவனை அறிந்து கொள்ளும் தகுதியை இழந்து விடக்கூடாது (உரோ 1 : 28).
இ. எதிர் நோக்கினை இழந்து விடக்கூடாது (கொலோ 1 : 23).
ஈ. கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும், தூய்மையையும் இழந்து விடக்கூடாது (2 கொரி 11 : 3)
உ. எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவுடன் உறவையும், அருளையும் இழந்து விடக்கூடாது (கலா 5 : 9).

உடைபடும், நடமாடும் காவிரி

உடைபடும், நடமாடும் காவிரி

காவிரி பிரச்சனை இப்போது தமிழ்நாட்டில் தலைவிரிந்தாடுகிறது. வானம் பொய்த்தது. ஆறு வரண்டது. நீரின் பயன்பாடு வளர்ந்தது. இப்போது கர்நாடகா, தமிழ்நாடு மோதலில் விடிந்திருக்கிறது. சிறுவானி ஆற்றில் கேரளாவின் புதிய அணை, முல்லைப் பெரியார் அணை ஆகியவற்றில் தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வருகிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீர் பகிர்வு அடிப்படையில்தான் உண்டாகும் என்று சாமுவேல் ஹன்டிங்கடன் என்பவர் கூறினார். நீர் பகிர்வு சிக்கல் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அது இந்தியாவிலும் உள்ளது. சீனாவின் யாங்ட்ஸ் என்ற ஆற்றின் நீரை பகிர்வதிலும், நைஜர் என்ற நதி நீரைப் பகிர்வதில், கினியா நைஜிரியா நாடுகளுக்கிடையிலும், தைகிரிஸ் நதி நீரை பகிர்வதில் ஈராக், சிரியா, துருக்கி நாடுகளுக்கிடையிலும் ரியோ கிரான்தே, ரியோ பிராவோ, ரியோ கோன்ச் சோஸ் ஆகிய நதிகளின் நீர்களை பகிர்வதில் அமெரிக்காவிற்கும், மெக்சிக்கோ நாட்டிற்கும், தபா என்ற நதி நீரை பகிர்வதில் ஸ்லவோக்கியாவிற்கும் ஹங்கேரிக்கும் சிக்கல்கள், மோதல்கள் இருந்து வருகின்றன. ஸ்லவோக்கியா ‡ ஹங்கேரி நாட்டிற்கு இடையேயான நதிநீர் பகிர்வு சிக்கல் அகில உலக நீதிமன்றத்திற்கே சென்றது.

இந்தியாவிலும் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் நீர் பகிர்வு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கிடையில் சிக்கல்களாகவே இருந்து வருகிறது. அதே போல ரவி ‡ பியாஸ் நதிகளின் நீர் பகிர்வு பஞ்சாப் ஹரியான மாநிலங்களுக்கிடையில் சிக்கலாக உள்ளது. மழை பொய்க்கும்போது நதி நீர் பகிர்வு சிக்கல் பூதாகரமாக ஆகிவிடுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்ற்கு 15000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்து விடவேண்டும் என்ற உத்தரவிற்கு கண்டன எதிர்ப்பு தெரிவித்ததுடன் கர்நாடகாவில் தமிழர்களையும் ,தமிழர்களின் சொத்துக்களையும் ,தமிழ்நாட்டு வாகனங்களையும் சேதபடுத்தியுள்ளார்கள். 15 நாள்களாக கர்நாடகா ‡ தமிழ்நாடு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடகா அரசே இவ்வித வன்முறைகளை தூண்டிவிடுவதாக செய்திகள் கூறுகின்றன. உள்நாட்டு போரைப் போல உருவேடுத்துவிட்டது. மத்திய ‡ மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. பாமர மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். கடைசியாக உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உத்தரவு கொடுத்துள்ளது. இந்த வாரியம் அமைத்தால் நீதியான முறையில் நதி நீர் பங்கிட முடியும். 1972இல் ஐரோப்பாவில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டது. சுற்றுபுற சீரழிவால்தான் மழை குறைந்துவிட்டது. அதனால்தான் நீர் பற்றாக்குறை, நீர் பகிர்வு சிக்கல்கள் உண்டாகியுள்ளன. நீரை கவனமாக, சிக்கனமாக பயன்படுத்துதல், தண்ணீர் வீணாகாமல் தடுப்பு அணை கட்டுதல், குளம், குட்டைகளை தூர்வாரி மழைநீரை சேகரித்தல், மரம் வளர்த்தல் போன்ற செயல்களால் நீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நம் பாகமாக செய்யலாம்.

இம்மாதம் செபமாலை மாதா மாதம். செபத்தினால் மனிதம் உறுதியாகிறது, உயர்கிறது. இதனைப் பற்றி பல கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் அருட்சுடரின் அமைப்பும், தாளின் தன்மையும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. பல ஆர்வலர்கள், அருட்சுடருக்கு புதிய சந்தாதாரர்களை சேர்ப்பித்தும், விளம்பரங்களை வாங்கிக் கொடுத்தும் உதவுகின்றார்கள். 2017இல் ஜனவரி முதல் சந்தா தொகையை ஏற்றவேண்டிய கட்டாயம் ஏறபடும் சூழ்நிலை இருக்கிறது. உங்களின் எழுத்து படைப்புகளை வரவேற்கிறோம். உறவுகளில் வளர இந்த ஊடகம் மிக உதவி என்பதில் ஐயமில்லை.

ச.இ.அருள்சாமி, ஆசிரியர்

Sunday 4 September 2016

வாழ்க்கை என்பது

நேசிக்கும் பெண்ணை அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஆண் கிடைப்பது மீண்டும் ஒரு தாய் கிடைப்பது போன்றது


வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தது


பொய் சொல்லி தப்பிக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக் கொள்
பொய் வாழ விடாது
உண்மை சாகவிடாது


சளைக்காமல் போராடு, இன்னொரு பூமியை எடுத்துக் கொள்ள அல்ல
உனக்கான பூமியை எடுத்துக் கொள்ளவாவது.


சாதிக்க வேண்டுமென்று நினைத்தால் அது நம்மை பாதிக்கும், வாதிக்கும், சோதிக்கும்.


விண்ணகத்தை நோக்கி நம் கண்களை உயர்த்துவோம். இல்லையயன்றால் மண்ணகத்தின் கவர்ச்சிகள் நம்மை மயக்கி ஏமாற்றிவிடும் - சிப்ரியான்.




சாதி வெறி

சாதி வெறி

19-08-2016 அன்று சிந்து என்ற இந்திய பெண் சிறகு பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இணையதளத்தில் கூகுளில் ஜுன் மாதம் சிந்துவின் ஜாதி என்ன என்று ஒன்றரை இலட்சம் பேரும், ஜுலை மாதத்தில் 90 ஆயிரம் பேரும், ஆகஸ்டில் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேரும் ஆந்திரா, தெலுங்கானா, அரியானா, தமிழ்நாடு இந்த மாநிலங்களில் அதிகமாக தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல பிழைக்க போன வளைகுடா நாடுகளில் உட்கார்ந்து தேடியிருக்கிறார்கள். இந்தியாவை சாதிதான் ஆள்கிறது என்று அம்பேத்கார் கூறினார். சாதியம் அழிந்தால் தான் நாடு உயரும்.

ஒலிம்பிக் விளையாட்டு பற்றி தெரியாத சில தகவல்கள்

ஒலிம்பிக் விளையாட்டு பற்றி தெரியாத  சில தகவல்கள்

வயது : 

ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் இளம் வீரராக நேபாளத்தைச் சேர்ந்த 13 வயதுடைய கெளரிகா சிங்கும், மூத்த வீரராக நியுசிலாந்தை சேர்ந்த 62 வயதான ஜுலி ப்ரோஹமும் பங்கேற்றனர். 

ஒலிம்பிக் விதிகளின்படி வயது வரம்பில்லை. ஆனால் அந்தந்த நாட்டு ஒலிம்பிக் சம்மேளனங்கள் வயது வரம்பை முடிவு செய்யலாம். அதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் ஆக்ரோபாடிக் விளையாட்டிற்கு குறைந்தபட்ச வயது 15.

தங்கபதக்கம் :

ஒவ்வொரு பதக்கமும் 24 காரட்டில் குறைந்தபட்சம் 6 கிராம் தங்கத்தைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டில் பதக்கம் 1.34 சதவிகிதம் தங்கம் 92.5 சதவிகிதம் வெள்ளியால் ஆனது. பிரேசிலிய நிறுவனத்தால் செய்யப்பட்ட இவை 500 கிராம் கொண்டவை. திட தங்கத்தால் ஆன பதக்கங்கள் 1912ஆம் ஆண்டு வரை ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகள் வரை பயன்படுத்தப்பட்டன.

வாலிபால்  உடை :

2012ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் வாலிபால் வீராங்கனைகள் நீச்சல் உடையை அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியா இந்த உடை எவ்விதத்திலும் விளையாட்டிற்கு அவசியமில்லை என்று குறை கூறியது. இப்போது 2012ன் விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது பெண்கள் கால்சட்டை (ஷாட்) முழுக்கை சட்டைகள் முழு உடல் ஆடைகள் அணியலாம். (ஆதாரம் பிபிசி - தமிழ்)


பேசாதே, பேசாதே!, E.B..ஆபிசர் - வாழைப்பழக்காரர்

பேசாதே, பேசாதே!

1. ஏழைக்கு முன்னால் நின்று கொண்டு உனது செல்வம் பற்றி பேசாதே!

2. நோயாளிக்கு முன் நின்று கொண்டு உன் ஆரோக்கியத்தைப் பற்றி பேசாதே!

3. பலவீனனுக்கு முன்னால் நின்று உனது பலம் பற்றி பேசாதே!

4. மகிழ்ச்சியை இழந்தவனுக்கு முன்னிருந்து கொண்டு சந்தோ­ம் பற்றி பேசாதே!

5. சிறைகைதிக்கு முன் நின்றுகொண்டு உன் சுதந்திரம் பற்றி பேசாதே!

6. குழந்தைப் பாக்கியமற்றவனுக்கு முன் நின்று கொண்டு உன் குழந்தைகளைப் பற்றி பேசாதே!

7. அநாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே!

அவர்களது காயங்களை இதற்கு மேல் அவர்களால் சுமக்க முடியாது போய்விடும்.

ஒரு எலட்ரிசிட்டி போர்டு ஆபீஸ். வெளியில ஒரு வாழைப்பழக்காரர் வாழைப்பழம் விற்றுக் கொண்டு இருக்கிறார். அவரிடம்,
E.B. ஆபிசர் : வாழைப்பழம் என்ன விலை?

வியாபாரி : சார், இத எதுக்கு நீங்க வாங்கறீங்கன்னு தெரிஞ்சாதான் விலை சொல்லிட முடியும்.

E.B..ஆபிசர் : என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்கினா உனக்கு என்ன?

வியாபாரி : இல்ல சார், நீங்க இந்த வாழப்பழத்த கோயிலுக்கு வாங்குனா ஒரு பழத்தோட விலை 10 ரூபாய். குழந்தைக்கு வாங்குனா ஒரு பழம் 20 ரூபாய். தெரிஞ்சவங்களுக்கு வீட்டுக்கு வாங்குனா 25 ரூபாய். நீங்க சாப்பிட வாங்குனா 30 ரூபாய் சார்.

E.B. ஆபிசர் : யோவ்! யாரை ஏமாத்துற? ஒரே பழம் எப்படிய்யா வேற, வேற விலைக்கு வரும்.

வியாபாரி : இதுதான் சார் என்னோட டாரிப் திட்டம். ஏய்யா, நீங்க மட்டும் ஒரே கரண்ட, ஒரே ட்ரன்ஸ்மி­ன் திட்டம் வச்சிக்கிட்டு வீட்டுக்குத் தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைன்னு விப்பீங்க. கேட்டா ட்ரன்ஸ்மி­ன்னு சொல்லுவீங்க. எங்களை நீங்க ஏமாத்துறீங்க. நாங்க சொன்னா மட்டும் கோவிச்சுக்கிறீங்க.

வீடு தரும் வாழ்க்கைப் பாடம், இழந்தவையயல்லாம் திரும்பத் தா இறைவா என கேட்டேன்

வீடு தரும் வாழ்க்கைப் பாடம்

என் வாழ்வை எப்படி வாழ்வது இறைவா? என்று கேட்டேன்.
இறைவன்,
உன் வீட்டினை உற்று நோக்கு. அதில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் வாழ்வின் பொருளை  உணர்த்திக் காட்டும் என்றார்.
கூறை      - உயர்ந்த குறிக்கோள் கொள் என்றது
மின்விசிறி - பதட்டப்படாது, மற்றவர்களை ஆற்றுபடுத்து என்றது
கடிகாரம்    - நேரத்தை பொன்னென மதித்திடு என்றது
நாள்காட்டி - எல்லாவற்றையும் தெரிந்தவனாயிரு என்றது
பணப்பை   - வருங்காலத்திற்கு சேமித்திடு என்றது
முகம் பார்க்கும் கண்ணாடி - எப்போதும் சுயசோதனை செய்துகொள்          என்றது
விளக்கு       -  மற்றவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கு என்றது
சுவர்கள்    - மற்றவர்களின் சுமைகளைத் தாங்கிடு என்றது
தரைத்தளம் - நடைமுறைக்கு ஏற்றபடி நடந்து கொள்   என்றது
மாடிப்படி      -  உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து   வை என்றது


இழந்தவையயல்லாம் திரும்பத் தா இறைவா என கேட்டேன்

இழந்தவை எவை என இறைவன் கேட்டான்
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டு சொல்லவா இயலும்?

கால மாற்றத்தால் இளமையை இழந்தேன்
கோலம் மாறி அழகையும் இழந்தேன்
வயதாக உடல்நலம் இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்,
எதையயல்லாம் இழந்தேனோ அதையயல்லாம் மீண்டும் தா என்றேன்

அழகாக சிரித்தான் இறைவன்
கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பலவுண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்

திகைத்தேன்! இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறுதான்
இழந்ததை அறிந்தேன், இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்.

Saturday 3 September 2016

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்
- எம்.சி. குமார், 
M.A., B. Ed., M. Phil,
விரகாலூர்

குரு தரிசனப் படலம் :

தன்னுடைய நிலையை அறிந்த  கிறித்தியான், துன்ப  மிகுதியால்  உடலும், உள்ளமும் சோர்ந்தான். நிலையான வாழ்வை நினைத்தான். துன்ப காலத்தில் துணைபுரிய வேண்டிய மனைவியும், மக்களும் இகழ்ந்தனர். நண்பர்கள் நழுவினர். தன் மன பாரத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்கு யாருமில்லையே என ஏங்கினான். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவரின் பார்வையோ அருள் நிறைந்த பார்வை. அன்பை வெளிப்படுத்தும் மலர்ந்த முகம். இரக்கம் மிகுந்த  உள்ளம். அவர்தான் குருவானவர் (நற்செய்தியாளர்). கிறித்தியானை நெருங்கி, வாடிய முகத்தைக் கண்டார். களங்கமில்லாத அன்பு கலந்த இனிய வார்த்தைகளால் அவன் துன்பத்திற்கு மாற்று வழி கூற எண்ணினார்.

“உருகிமெய் விசாரியை யுற்று நோக்கிநின்
கருணைத் தியாரைநீ யவலிக் கின்றனை
பெருகுமித் துயருனக் குற்ற பெற்றியயன்
திருகலில் சிந்தையாய் செப்பு கென்றனன்”

“அன்பா! நீ யார்? ஏன் மிகுந்த கவலையோடு நிற்கின்றாய்? உனக்கு மிகுந்த இந்தத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்குக் கிறித்தியான் “நான் அழிவு நகரைச் சார்ந்த கொடியவனுள் கொடியவன். இறைவனுடைய சினத்தீ விழுந்து இந்த இடமெல்லாம் அழியப் போகிறது என அறிந்தேன். விண்ணரசால் அற விசாரணை உண்மையாகவே வரும். அந்நாளில் அருளரசராகிய இறைவனின் கட்டளையை மீறிய தீயவர்கள் கொடிய நரகை அடைவது  உறுதியயன்று இந்தத் திருமறை கூறுகிறது. இதனைப் படித்து அறிந்த  நான் இத்துன்பம் அடைந்தேன். இறைவனை மறந்து, அவர் செய்த நன்மையை மறந்து ஒவ்வொரு நாளும் இழிவான செயலையே செய்து வீண் காலம் கழித்தேன். கொடியவனாகிய எனக்கு வர இருக்கின்ற தண்டனைக்கு இன்றைக்கு வருந்துவதில் பயனில்லை. சாகவும் மனமில்லை, தண்டனையை எதிர்கொள்ளவும் துணிவில்லை. மற்றவர்களைப் போலச் சென்று அடையும் வேறு அடைக்கலமும் எனக்கில்லை. இதற்கு ஈடாக ஏதாவது செய்யலாமென்றால் அதற்குச் சிறிதும் பலமில்லை. ஆதலால் நான் துன்புறுகின்றேன்” என்றான்.

இதனைக் கேட்ட குருவானவர் “கிறித்தியானே! நீ சொன்ன யாவும் உண்மையே. மறை பொருள் ஒன்றுமில்லை. இவ்வுலக வாழ்வில் மிகுந்த  வேதனை உண்டாவதை அறிந்தும் சாவதற்கு ஏன் பயப்படுகிறாய்?” என்றார். அதற்குக்  கிறித்தியான் “நான் பிறந்தது முதல் இன்று வரை செய்த குற்றங்கள் யாவும் ஒன்று சேர்ந்து என் முதுகு முரியுமாறு அழுத்துகின்றன. பாவச் செயல்களைச் செய்கின்ற தீயவர்கள் வாழும் நெருப்புக்கடல் பள்ளத்தில், நானும் அமிழ்ந்து விடுவேன் என்று அஞ்சுகின்றேன். பல நூல்களைக் கற்றறிந்த இவ்வுலகை ஆளும் அரசன் தண்டிக்கும் போது அஞ்சுகின்ற இவ்வுலக மக்களாகிய நாங்கள் எல்லாவற்றையும் படைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு அஞ்ச வேண்டாமா?” என்றான்.

இதனைக் கேட்ட குருவானவர், “கிறித்தியானே!  நீ உன் நிலையை உணர்ந்து சிந்திப்பதும், துணிவதும் மிகவும் நல்லது. நீ இவ்வளவு காலம் அழிவு நகரில் காலம் தாழ்த்தியது அறச்செயல் ஆகாது. சாகும் அளவிற்கு துன்பம் வருவதற்கு முன்னர் அடைக்கலத்தைத் தேடிச் செல்வது இந்த இடத்திலேயே சுற்றி அலைவது உனக்கு நன்மை தராது” என்றார். 
இதனைக் கேட்ட கிறித்தியான் “இக்கொடிய துன்பத்திலிருந்து தப்பிப் பிழைக்கும் வழி எதுவென்று எனக்குத் தெரியவில்லை. இவ்வுலகில் பலர் பல வழிகளைக் கூறுகின்றனர். அவைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தேன். உண்மை வழிகளாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வழிகள் யாவும் பொய்வழிகள் என்று அறிந்து கொண்டேன்.

அவ்வழிகளில் நான் செல்ல மாட்டேன். இறைவனின் விண்ணுலகுக்குச் செல்லும் வழி எவ்வழியயன்று இன்னும் நான் அறியவில்லை. விண்ணுலக நகருக்குச் செல்லும் நிலையான வழியை நீர் அறிந்திருப்பீரானால் சொல்லும். நானும் அவ்வழியே செல்லுவேன்” என்றான்.

குருவானவர் விண்ணாட்டின் சிறப்பையும் அந்நகரத்தின் சிறப்பையும் கிறித்தியானுக்குக் கூறத் தொடங்கினார். (தொடரும்).

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 12

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 12
- நல்லை.இ. ஆனந்தன்


1. வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன வித்தியாசம்?
- திருமதி. கலாவதி, கம்பம்

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது. தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது. அதுசரி, நீங்கள் 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மனதில் வைத்துத்தானே இந்த கேள்வியைக் கேட்டீர்கள். சிலர் ஆள்வதற்கும், நாம் வாழ்வதற்கும் தேர்தல் அவசியம். அதில் வெற்றியும் தோல்வியும் மிகவும் ரகசியம்.

2. மார்த்தா, நீ பல காரியங்களைக் குறித்துக் கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றே என்றார் இயேசு. அந்த ஒன்று எது?
- செல்வி. ராணி மேரி, காரைக்குடி

இறை உறவு (இறைவனுக்குச் செவிமடுத்தல்). மார்த்தா பிறரன்புக்கும், மரியா இறையன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பகுதி இதுதான். பிறரன்பு பணி செய்ய சக்தி தேவை. அந்த சக்தி இறைவேண்டலில்தான் நிறைவாக நமக்குக் கிடைக்கும் என்று சொன்ன புனித அன்னை தெரசாவுக்கு என் மனமார்ந்த நன்றி.

3. அங்கிள், என்னை ஒரு பெண் ரொம்ப இம்ப்ரஸ் செய்கிறாள். நான் அவளைக் காதலிக்கலாமா? வேண்டாமா?
- திரு. பவுல்தாஸ், மதுரை

பன்னிரண்டு வயது வரையிலும் ஒருவர் குழந்தைதான் என்கிறது உளவியல். பதிமூன்று வயதிலே டீன்ஏஜ் ஆரம்பிக்கிறது. இப்போது வருவது காதல் அல்ல. பாலினக் கவர்ச்சி. மணமுடித்தபின் மனைவிமேல் வருவதற்குப் பெயர் காதல் எனலாம். ஐம்பதிலும் சிலருக்கு ஆசை வரும். அது காதலல்ல, காமம். உனது கையயழுத்தைப் பார்க்கும்போது நீ மேனிலைப்பள்ளி படிக்கும் பையனாகத் தெரிகிறது. மருமகனே, வாழ்க்கைப் புத்தகத்திலே காதல் ஒரு சிறு பக்கம்தான். காதலே வாழ்க்கைப் புத்தகம் என நீ வாழ்ந்தாய் என்றால் சில காலம் கடந்தபின் திரும்பிப் பார்த்தால், நீ இழந்தவை ஏராளமானவை என்பதை உணர்வாய். எனவே படிப்பிலே தீவிர கவனம் செலுத்தவும். ஏனெனில் உன் எதிர்கால வாழ்வு உன் கையில்தான் உள்ளது.


4. உனக்கு இருப்பதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்செல் என்கிறார் இயேசு. எனக்கு இருப்பதை எவ்வளவு காலம் நான் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்?
- திரு. பிரான்சிஸ், கொடைரோடு

இறைவன் உங்களுக்கு கொடுக்கும் வரை நீங்கள் அதை பிறருக்குக் கொடுத்தல் வேண்டும். இறைவன் உங்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பதை (பணம் மட்டுமல்ல, நேரம், ஆற்றல், சக்தி, அன்பு, சேவை) ஏழைகளுக்கு (அதாவது இல்லாதவர்களுக்கு) நீங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் கொடுப்பதால் குறைவுபடமாட்டீர்கள். மாறாக அபரிமிதமாக ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். பதுக்கல் செய்தவர்கள் உலகில் படும்பாடுகளை உற்றுப் பார்த்தாலே உணர்ந்து கொள்ளமுடியும்.

5. உங்கள் வயது என்ன? ஆலோசனை நேரம் நிறுத்தப்பட்டால் பல புதிய தொடர்கள், புதுச் சிந்தனைகள் அன்னையின் அருட்சுடரில் வரலாம். ஏனெனில் இக்காலத்து மக்கள் பிறர் அட்வைஸ் பண்ணுவதை விரும்புவதில்லை. அதனால்தான் நிறைவு செய்யக் கேட்கிறேன்.
- திரு. ஜான் ராபர்ட், திருப்பூர்

தங்களுக்கும், தங்களைப் போல மனதில் இதே கருத்தை வைத்திருக்கும் பலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாசித்த, நேசித்த, பதில்களை ஆசித்த, அனைவருக்கும், அனைத்திற்கும் நன்றிகூறி நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம். வாழ்க வளமுடன்.
(நிறைவு பெற்றது

இயற்கை மூலிகை மருத்துவம், -ம.இராசரெத்தினம்.ஆடுதுறை

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

அனுபவ வைத்திய முறைகள்

1. வயிற்றைக் கவனித்து வாயைக் கட்டினால் வைத்தியன் தேவையில்லை. புளிப்பு சுவை அதிகமா? அமிலதன்மை, வலி, புண், வாயு  உணர்ச்சி  மிகும்.
அஜீரணம் ‡ ஜீரகம் 10, மல்லி 10, இந்துப்பு 5 (பொடி) + இஞ்சி 50 + லெமன் சாறு.

2. அஜீர்ணபேதி - ஓமம் + மிளகு + சர்க்கரை மூன்றும் கலந்து காலை, மாலை ஒரு டீஸ்புன்.
குடற்புழு ஒழிய ‡ ஓமம் + பணங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிடு.
வயிற்றுவலி போக ‡ ஓமம் +  இந்துப்பு வெந்நீரில் கலந்து பருகவும்.

3. சத்து பற்றாக்குறையால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது. நீங்கள் தொடர்ந்து விரும்பி உண்ணும் உணவுகளே பின்னர் நோய் தரும். மூன்று வேளை உண்பதைவிட அடிக்கடி சிறிது சிறிதாக உண்பதே நல்லது.

4. ஆயுளை நீடிக்கச் செய்யும் உணவுகளைத் தேடி, தெரிந்து உண்ணுங்கள். ஊட்டச்சத்து உணவுகளே உடலிலுள்ள உயிரணுக்களை வளர்க்கின்றது. ஜீனியைக் குறை, கால்சியம் உணவுகளைக் கூட்டி எலும்புகளை பராமரிக்கவும்.

5. யோகா, உடற்பயிற்சி மூலம் உட்புற, வெளிப்புற கழிவுகளை வெளியேற்றுக. கழிவுகளைத் தரும் உணவுகள் உடலுக்கு சக்தி தராமல் சோர்வையே தரும். பித்த மயக்கத்தின் பிதற்றலே பேய், பிசாசு என்கின்றது மருத்துவ ஆய்வு.

6. அன்னம், நா, பல், உதடு, குறி, கண்கள், மூளை, கைவிரல்கள், பாதம் ஆகிய பாகங்களில் உணர்வு மிகுதி  உண்டு.
சிறுநீர் போகும் போது வலியா? இரவில் பார்லி கஞ்சி உபயோகியுங்கள். வெய்யிலில் அலையும்போது குளிர்ச்சிக்கு வெள்ளரி சாப்பிடுங்கள்.

7. வயிற்று வலியா? - கசகசாவை அரைத்து பசும்பாலில் கலக்கி பருகவும். 
தேமல் போக - ஜாதிக்காயுடன் நாயுறுவி இலையை அரைத்துத் தடவுங்கள். 
வழுக்கையா? - கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தடவுங்கள்.

8. ஆஸ்துமாகாரர்கள் தினமும் பூண்டு உபயோகிப்பது மிகவும் நல்லது. அயோடின் அதிகமுள்ள மூலிகை ‡ மஞ்சள் கரிசாலை, பொண்ணாங்கண்ணி
அதிக பிராணசக்தி கிடைக்க தினமும் சிறிது நேரமாவது சிரிக்கவும்.

9. தோல் நோயா? - இலுப்பை / இலுவ இலையை அரைத்துப் பற்று போடுங்கள். 
வயிற்றில் வாயுவா - இலட்சக்கட்டுக் கீரையை உணவில் சேர்க்கவும்.
தேள்கடி? - மாங்காய் காம்பு பால் தடவு / சுக்கை இழைத்து பற்றுப்போடு.

10. உடல் குண்டு குறைய ‡ வாரம் இருமுறை கொல்லு ரசம் உபயோகியுங்கள்.
நெஞ்செறிவு ‡ வெறும் வயிற்றில் லெமன் ஜீஸ் சாப்பிடுங்கள்.
நாய்கடி - மணித்தக்காளி சாறு தடவி, சக்கையை காயத்தில் வைத்து கட்டு.

11. சளி, கபத்திற்கு சுண்டைக்காயை சாப்பாட்டில் பயன்படுத்துவது நல்லது. வயதானவர்கள் உடல் வலுப்பெற கொல்லுக்கஞ்சி சாப்பிட வேண்டும். படுக்கையில் சிறுநீர் போகின்றதா? எள், முள்ளங்கி உபயோகியுங்கள்

விவிலிய விடுகதைகள்

 விவிலிய விடுகதைகள்
திருப்பாடல்கள் 18 முதல் 34 முடிய

- அருட்சகோ. பெரேரா, ஓமலூர்

1. அஞ்சி நடப்போர்க்கும், அடைக்கலம் புகுவோர்க்கும் ஆண்டவர் செய்து வைத்த பெரிய பாக்கியம் எது?

2. நாடித் தேடி குடியிருக்க, அவர் அழகைக் காண எங்கே கண்டறிய வேண்டும்?

3. அவர் உண்மை, நேர்மை, நீதி, விரும்பி அந்த அன்பாலே அது நிறைந்துள்ளது. யாரால்? எது?

4. தலையில் பூசிய நறுமணத் தைலம் மணக்க பாத்திரக் கிண்ணம் நிரம்பி வழிய அவர்கள் என்னைப் பார்த்து முறைக்கின்றனர். யார் அவர்கள்?

5. அரிமா குட்டிகள் பட்டினி இருக்க நேரிட்டாலும் அவரை நாடுவோர்க்கு எது குறைவுப்படாது. யார்?

6. ஆண்டவருக்கு இப்படி இவ்விதம் வாழ்வோருக்கு சூப்பர்மேனாக சூழ்ந்து நின்று காப்பவர் யார்? யாருக்கு?

7. அழகிய நீலப் போர்வை. அதனுள்ளே பற்பல பூக்கள். சின்ன பந்துகளும், பெரிய பந்துகளும் உள்ளே உருளுகின்றன. மனிதர்கட்கு முன் வந்தவை யாரால்? எவை?

8. கரம், மனம், உள்ளம், நெஞ்சம் இவைகளில் தூய்மையை கடைப்பிடிப்போர் பெறும் பரிசு எது?

9. எவற்றின் கயிறுகள் என்னை இறுக்கின? எவைகள் என்னை மூழ்கடித்தன?

10. உமக்கு அந்த வேளை தன்னில் ஆண்டவர் பதிலளிப்பார் எப்போது?

11. யார் எனது ஒளி? யார் எனது மீட்பு?

12. மாலையிலோ Tears, காலையிலோJpyful எவை?

13. எந்த Donkey போன்று அறிவிலியாய் இராதே எது?

14. இனியவர் என்றுTaste பண்ணிப் பாருங்கள் யாரை?

15. அதைக் குவியல் போலும், அதை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார் எதை?

16. உமது பெயரை இவர்களுக்கு அறிவிப்பேன், அவற்றின் நடுவே உம்மைப் பாடுவேன் எப்படி?

17. இவற்றால் உம்மைப் புகழ முடியுமா? இவற்றால் பிறழாமையை அறிவிக்க இயலுமா?

18. புடமிட்டுப் பாரும். உமது நாலெழுத்து வார்த்தை என் கண்முன் உள்ளது எது?

19. என் மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்டது எது?

20. என் எலும்புகளெல்லாம் அப்படிப் போயின. என் இதயம் இப்படி ஆயிற்று எப்படி?

21. அது நிறைவானது, புத்துயிர் அளிப்பது, ஞானத்தை அருள்வது, இதயத்தை மகிழ்விப்பது எது?

22. அசைந்து அதிர்ந்தது எது? அடித்தளங்கள் கிடுகிடுத்தது எது?

23. எந்தக் குதிரையை நம்புவது வீண்?

24 New New ஒன்றை அவருக்குப் பாடுவேன் என்ன?

25. அன்னமிட்டக் கை, ஆளாக்கி விட்டக்கை, வெறுப்போரை எட்டிப் பிடிக்கும் கை எந்தக் கை?

26. எது பாய்ந்து வந்தாலும் அவர்களை அணுகாது? எப்போது?

பூண்டி மாதா புகழ் வளர்த்த புனித லூர்தார்

பூண்டி மாதா புகழ் வளர்த்த புனித லூர்தார்

- முத்தமிழ் மாமணி பேராசிரியர் ச. சாமிமுத்து

( மூத்த தமிழறிஞர் திரு.சாமிமுத்து அவர்களின் கவிதையை அன்னையின் அருட்சுடரில் வெளியிடுவதில் பெருமையடைகிறோம்)

1. பூண்டிக்கு நடைப்பயணம் போனபோது ....
பூண்டி நான் போகையிலே இருபுறமும்
பூத்தலர்ந்து வண்ணமலர்ச் செடிகொடிகள்
தாண்டிநான் நடக்கையிலே கண்டஅலை
தாவியயனை மலர்க்கரத்தால் தடுத்தனவே!
வேண்டநான் மரியன்னை கோவிலுக்கு
விருப்புடனே விரைவுதனை உணர்ந்ததனால்
மூண்டெழ அன்புறவு உளப்பரப்பில்
முகமலராய் புன்னகையும் பூத்தனவே

2. நெற்பயிர்கள் அன்னைபுகழ் பாடக்கேட்டேன்!
(சந்தம் வேறு)
பச்சைநிற நெற்பயிர்கள் வயல்கள் தோறும்
பாசமுறக் காற்றசைவில் மோதிக் கொண்டு,
கசிந்துவரும் வயல்வீட்டு  உறவின் வாழ்வில்
களைகளையும் தம்முறவாய்த் தாவித் தொட்டு,
நிசியிலுமே உறங்காமல் தழுவிப் பார்த்து
நெஞ்சினிக்கும் பாடலுடன் அசைந்தே ஆடிப்
பொசிந்துவரும் பரவசத்தால் உடலே ஆட்டிப்
போற்றிமரி பாதமலர் தலைகள் சூடும்!

3. கோவில் நான் சென்றபோது குரு லூர்து புனிதர் பார்த்தேன்!
நானுமிந்த காட்சியயலாம் வியந்தே நோக்கி,
நடைமறந்து கடந்துதொலை தூரம் தாண்டி
வானுலகத்  தோடுஇவண் ஞாலம் எல்லாம்
வாழ்த்திமரி புகழ்பாடி போற்றக் கண்டு,
தேனுதீர்க்கும் பொழில்கள்சூழ் பூண்டி மாதா
திகழ்கோவில் சென்றதன் முன்நானும் நிற்க,
மானுடத்தின் மகிமைக்கோர் சான்றாய்த் தோன்றும்
மாமனிதர் குருலூர்து புனிதர் பார்த்தேன்!

4. மரிபுகழ் வளர்த்த மனிதநேயர் புனித லூர்தார்!
புன்முறுவல் பூக்குமுகம் பூண்டித் தந்தை,
பூவுலகே போற்றுபுகழ் பூண்டி மாதா
அன்பருளைப் பெறுதற்கே வருவோர்க் கெல்லாம்
ஆதரவு தந்துஅருள் கனிந்தே நோக்கி,
பொன்னணிகள் பல்பொருள்கள் அள்ளித் தந்தே
பூரித்த நெஞ்சுறவுப் பாரி யைப்போல்
நன்மைபொழி அன்னைமரி அற்பு தங்கள்
நவின்றுமரி புகழ்வளர்த்தார் புனித லூர்தார்

Ads Inside Post