Pages - Menu

Monday 17 July 2017

ஜுலை மாதப் புனிதர்கள்

ஜுலை மாதப் புனிதர்கள்
 அருட்சகோதரி.G. பவுலின்மேரி FSAG  

ஜுலை -3 புனித தோமா - திருத்தூதர்


தோமாவின் நம்பிக்கைக் குறைவு உயிர்த்த கிறிஸ்துவின் முன் மறைந்து போனது. ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்று திருச்சபையின் பாஸ்கா நம்பிக்கையை அறிக்கையிட்டார். நற்செய்திகளில் உள்ள சில குறிப்புகளைத் தவிர, இவரின் வாழ்க்கையைப் பற்றி எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. தோமா இந்திய மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்தார் என்ற ஆழ்ந்த பாரம்பரியமுண்டு. ஜுலை 3இல் திருத்தூதரின் சடலம் எடெசாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக நினைவுகூர்ந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டு முதல் இவரை நினைத்து விழா கொண்டாடி வருகின்றனர்.

ஜுலை - 6 புனித மரியகொரற்றி - கன்னியர், மறைசாட்சி

இப்புனிதை இத்தாலியில் அன்கோனா என்னுமிடத்தில் கி.பி 1890 இல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தம் இளமைப்பருவத்தை வறுமையில் கழித்தார். வீட்டு வேலைகளில் அன்னைக்கு உதவியாயிருந்தார். இயல்பாகவே இறைபற்றுடையவர். இறைவேண்டலில் விடாமுயற்சி உடையவர். 1902இல் ஜுலை 6 ஆம் நாள் தன்னைக் கெடுக்க வந்தவனிடமிருந்து தம் கன்னிமையைக் காத்துக் கொண்டார். பாவம் செய்வதிலும் சாவது மேல் எனத் துணிந்ததால், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு இறந்தார்.

 ஜுலை - 11 புனித ஆசீர்வாதப்பர் (480-542)

இத்தாலி நாட்டில் உம்பிரியாப் பகுதியில் நோர்சியா என்னும் இடத்தில் கி.பி.480இல் பிறந்தார். உரோமையில் கல்வி கற்றார். உலகத்தை துறந்து சுபியாக்கோ என்னும் மலையில் இருந்த ஒரு குகையில் தவம் செய்வதும், ஜெபித்தும் வாழ்வு நடத்தினார். இதைக்கண்டு பலர் சீடராயினர். அவர்களுக்கு ஒரு மடத்தை துவங்கி சட்டங்களையும் இயற்றித் தந்தார். மோந்தே கஸினோ என்னுமிடத்தில் ஒரு மடம் துவங்கினார். அவர் எழுதிய சட்டங்கள் புகழ் பெற்றன. 24 திருத்தந்தையர்களையும், 5000 க்கும் மேற்பட்ட புனிதர்களையும் இவரது சபை திருச்சபைக்கு தந்திருக்கிறது. இவர் நற்கருணை உட்கொண்டு பீடத்தின் முன்னின்று கரங்களை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் உயிர் துறந்தார். 

 ஜுலை - 16 புனித கார்மேல் அன்னை

கார்மேல் மலையிலே புனித கன்னிமரியாளின் நினைவாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. 1251இல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் மரியன்னை காட்சி கொடுத்ததாக பாரம்பரியம். அக்காட்சியில் நம் விண்ணக அன்னை உத்தரியத்தைக் காண்பித்தாள். இதை அணிபவர்களுக்கு விண்ணகக் கொடைகளையும், தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். ஒரு குரு உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். உத்தரியத்தை வெறுமனே அணிந்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். இன்று கார்மேல் சபையினரின் மிக முக்கியமான விழாவாகும்.

ஜுலை - 22 புனித மதலேன் மரியாள்

          கலிலேயா நாட்டிலுள்ள மக்தலா என்னும் ஊரைச் சேர்ந்தவள். நற்செய்தி யில் காணும் பாவியான பெண்ணும், இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவளும் இவளே. இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, சாகும்வரை அவருக்கு சேவை செய்து வந்தாள். உயிர்த்த இயேசுவைக் காணும் வரை அவள் ஓய்வெடுக்க வில்லை. “அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்” என்ற வார்த்தைகள் அவளின் அன்பைக் காட்டுகிறது. இவளை யூதர்கள் நாடு கடத்தினார்கள். இவள் சில சீடர்களுடன் பிரான்ஸ் நாட்டை அடைந்தாள் என்று பாரம்பரியம் கூறுகின்றது.

ஜுலை - 25 புனித யாகப்பர் -திருத்தூதர் 

         கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் செபதேயு, சலோமே இவர்களின் மகனாகப் பிறந்தார். யாகப்பரையும் அவரின் தம்பி யோவான் இருவரையும் இயேசு அழைத்தார். வலைகளையும், தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் சென்றார்கள். பேதுருவுக்கு புதுமையாக ஏராளமான மீன்கள் அகப்பட்ட போதும்,  திருமுழுக்கு யோவானின் சீடரான போதும், பேதுருவுவின் மாமியாரை குணப்படுத்திய போதும், இன்னும் பல நேரங்களில் இயேசுவின் அருகிலிருந்தார். “இடியின் மக்கள்” என்று ஆண்டவர் இவர்கள் இருவருக்கும் பெயரிட்டிருந்தார். பரிசுத்த ஆவியை பெற்றப்பின் ஸ்பெயின் நாட்டில் நற்செய்தி அறிவித்து எருசலேமுக்குத் திரும்பினார். 44இல் ஏரோது அகிரிப்பாவால் தலை வெட்டப்பட்டு இறந்தார் என்பது பராம்பரியம்.

 ஜுலை - 26 புனித சுவக்கின் அன்னம்மாள் - தூய மரியாளின் பெற்றோர்

               புனித அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்து, நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கின் என்பவரை மணந்தாள். இருவரும்  தாவீது அரசரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் பின்பு மரியாள் பிறந்தாள். 3 வயது ஆனதும் தேவலாயத்திற்குச் செல்லும்படி அவளை கடவுள் அழைத்தார். தியாக குணம் படைத்த பெற்றோர் குழந்தையை அர்ப்பணம் செய்தார்கள். தொடக்கத்திலிருந்தே அன்னம்மாளுக்கு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 ஆம் நூற்றாண்டில் புனித சுவக்கீன் நினைவாக எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. சுவக்கீன் என்றால் ஆண்டவரின் தயாரிப்பு என்றும், அன்னா என்றால் இறைவனது அருள் என்றும் பொருள்படும்.

ஜுலை - 31 புனித லொயோலா இஞ்ஞாசியார் (மறைப்பணியாளர்)

    இப்புனிதர் ஸ்பெயினில் கன்டாபிரியாப் பகுதியில் லொயோலா என்னுமிடத்தில் கி.பி.1491 ஆம் ஆண்டில் பிறந்தார். அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இராணுவத் திலும் பணியாற்றி னார். பின்பு சண்டையில் கால் உடைந்து போன வேளையில் இறைவனிடம் மனந்திரும்பி, பாரீஸ் நகரில் இறையியல் படித்து முடித்தார். தம்முடன் சில தோழர்களையும் கூட்டிச் சேர்த்தார். பின்பு உரோமையில் இவர்களை ஒரு சபையினராக (இயேசு சபை) அமைத்தார். இப்புனிதர், நூல்கள் எழுதியும் சீடர்களைப் பயிற்றுவித்தும் மிக நற்பயனுள்ள திருத்தூதுப்பணி புரிந்தார். திருச்சபையின் சீரமைப்பில் இவரின் சீடர்கள் சிறப்பான பங்கெடுத்தார்கள். 1556 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் இப்புனிதர் உரோமையில் உயிர் நீத்தார்.

பொதுக்காலம் 17 ஆம் வாரம் 30-07-2017

பொதுக்காலம்  17 ஆம் வாரம்
30-07-2017

1 அரச 3:5,7-12;    உரோ 8:28-30;  மத் 13:44-32
         
2007 ஆம் ஆண்டு 1839இல் செய்யப்பட்ட முதல் கேமராவை 4 கோடியே 65 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்திருக்கிறார்கள்.  1963 இல் எனக்கு 12 வயது ஒருமுறை என் தந்தை 100 ஐ கொடுத்து, பக்கத்திலுள்ள பெரிய ஊரில் பொருள்கள் வாங்கி வர அனுப்பினார். அந்த கடையில் புதிதாய் அழகான டைம்பீஸ் வைத்திருந்தார்கள். அதனை விற்பதற்காக அல்ல. தங்களின் கடைக்காக வாங்கியிருந்தார்கள். எனக்கு அந்த டைம்பீஸ் மிகவும் பிடித்து விட்டது. எனவே மற்றப் பொருள்களை வாங்காமல் அந்த கடிகாரத்தை வாங்கி வந்தேன். என் தந்தைக்கும் என் தாய்க்கும் அந்த கடிகாரத்தை மிகவும் பிடித்து விட்டது. மற்ற பொருள்களை வாங்காமல் நான் வாங்கி வந்ததைப் பாராட்டினார்கள். மகிழ்ந்தார்கள். பிறகு அதனை நல்ல விலைக்கு விற்றோம்.

              இன்றைய நற்செய்தியில், தான் கண்டுபிடித்த புதையலை ஓடிச் சென்று மகிழ்ச்சியுடன் தமக்குள்ள யாவற்றையும் விற்றுவிட்டு, புதையல் உள்ள நிலத்தை வாங்கிக் கொள்கிறார். அதே போன்று, நல்ல முத்தைக் கண்ட வியாபாரியும், தனக்கு உள்ள யாவற்றையும் விற்றுவிட்டு அந்த முத்தை வாங்கிக் கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் நாம் காண்பது, பெரிய நன்மையைப் பெறுவதற்கு சிறிய நன்மைகளை விட்டுக் கொடுக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிகளைப் போன்றது விண்ணரசு என்கிறார் இயேசு. விண்ணரசு அனைத்திலும் உயர்ந்தது. அதற்கு முதலிடம் தர வேண்டும் என்கிறார். செல்வந்தரான ஒரு வாலிபர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியபோது, உனது செல்வங்களையயல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு என்னை பின்செல் என்றார் (லுக் 18.22-24).

முதல் வாசகத்தில், சாலமோன் இறைவனிடம் உலக செல்வங்களை விட மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தாரும் என்று வேண்டினார். இறைவனும் மகிழ்ந்து அந்த வரத்தை அளித்தார்.

இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்று விளக்குகிறார். இறைவனிடம் சேர்பவர்கள் உயர்ந்த நிலையினை பெற்றுக் கொள்கிறார்கள்.        உலகச் செல்வங்கள்தான், நம்மை மிகவும் கவர்ந்திழுக்கின்றன. அதற்குதான் முதலிடம் தருகிறோம். விண்ணரசின் மதிப்பீடுகளை நம்முன் வைத்தால், விண்ணக மகிழ்வை இப்போதே நாம் அனுபவிப்போம்.

அண்ணன், தம்பி இருவர். இவர்கள் வேறுபட்ட பண்புள்ளவர்கள். அண்ணன் பொருள்கள் சேர்ப்பதிலே ஒரே கண்ணும் கருத்துமாயிருந்தார். உறவுகளையயல்லாம் மறந்தார். தம்பி தாராள எண்ணத்துடன்  மற்றவர்களுக்கு உதவி செய்து வந்தார். கடைசியில் அண்ணனின் சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதில் பிள்ளைகள் போட்டி போட்டுக் கொண்டு, அண்ணனை அநீதி செய்து விட்டதாக ஒதுக்கி வைத்தார்கள். யாருடைய உதவியுமின்றி அனாதையைப் போல் இறந்தார். தம்பி, எந்தக் குறையும் இல்லாமல் உறவகளுடன் மகிழ்ந்து, வாழ்ந்து, வாழ்வை நிறைவு செய்தார்.

இறைவனுக்கே முதலிடம் என்று சேக்கிழார் இவ்வாறு பாடுகிறார்.

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் 
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை 
குன்றாத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்.

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு 23-07-2017

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு
 23-07-2017 
 சாஞா 12:13,16-19;   உரோ 8: 26-27; மத் 13: 24-43 

விடை காண மிகக்கடினமான கேள்வி  ஒன்று உண்டு. கடவுள் எல்லாம் வல்லவர். அப்படியிருக்க தீமைகள் ஏன் உலகில் நிலவுகின்றன? என்பதுதான் அந்தக் கேள்வி. இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு கூறிய உவமையில், ஊழியர்கள், நிலக்கிழாரிடம் சென்று ஏன் களைகள், வயலில் தோன்றியுள்ளன? நாம் நல்ல கோதுமையை மட்டும் தானே தெளித்தோம் என்கின்றனர். களைகளை உடனே அழிக்கலாமா? என்கின்றனர். நிலக்கிழார், பொறுமையாக இருங்கள். களைகளைக் கடைசியில் சேர்த்து எரிக்கலாம் என்கின்றார். உலகில் நிறைய தீமைகளைச் சந்திக்கின்றோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்று, ஊழல் என்று எண்ணற்ற ஊழல்கள். 

ஒருவர் கூறினாராம், ‘இரண்டு உலகப் போர்கள் ஏற்பட்டு பெரிய அழிவுகளை ஏற்படுத்தின. இப்போதுதான் உலகம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது’ என்றாராம். விபரம் தெரிந்த ஒருவர் கூறினாராம். இது அமைதியின் காலம் அல்ல. மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தன்னை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும், இர´யாவும் இரண்டாம் உலகப் போரில் தயாரித்த ஆயுதங்களை, ஏழை நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. ஏழை நாடுகள் தங்களுக்குள் சண்டையிட அமெரிக்காவும் இர´யாவும் துVண்டி விடுகின்றன.

    இந்தியாவில் இந்த ஆண்டு 2017- 2018இல் பாதுகாப்புப் படைகளுக்கு 3.59 லட்சத்துக் கோடி. நமது வருமானத்தில் 2.9 சதவிகிதம் செலவழிக்கப்படுகிறது. நம் நாட்டில் நடக்கும் ஊழலினால் 36400 கோடி இழப்பாகியிருக்கிறது என கணக்கிடப்பட்டிருக்கிறது. 
    உலகில் நிலவும் தீமைகளால் மனிதர் பாதிக்கப்படுகின்றனர். தீமைகளை எதிர்த்து நிற்க வேண்டும். தீமைகளை வன்முறையால் அழிக்க வேண்டும் என்பது சிலரின் கருத்து. இயேசு சகிப்புத் தன்மையுடன் வாழ வேண்டும் என்கிறார்.

         நமக்கு ஏற்பில்லாதவைகளை தீமைகள் என்கிறோம். எல்லோரிடமும் மற்றவருக்கு ஏற்பில்லாதவை நிறையவே உண்டு. குடும்பங்களில் ஏற்பில்லாத நிலையில்தான், கசப்புகள் வன்முறைகள் உண்டாகின்றன.

    முதல் வாசகத்தில், இறைவன் பொறுமை உள்ளவராகவும், சகிப்புத்தன்மை உள்ளவராகவும் விளக்கப்படுகிறார். ‘நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு  வழங்குகிறீர். மிகுந்த பொறுமையோடு ஆள்கின்றீர்’ என்று சாலமோனின் ஞானநுVல் கூறுகிறது. இரண்டாம் வாசகத்தில், ‘துய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார்’ என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

        நமக்குத் தீமை செய்தவரை பழிக்குப்பழி வாங்கும் உணர்வுதான் நம்மிடையே பொதிந்து நிற்கிறது. அதனைத் தாண்டி மற்றவர்களைப் புரிந்துக் கொண்டு, சகிப்புத்தன்மையுடன் வாழ்வது கடினமானது. 

வள்ளுவர், பொறுமை பெரிய வல்லமையுடைத்து  என்கிறார்.

இன்மையுள் இன்மை விருந்தொரால்
வன்மையுள் வன்மை மடவார் பொறை.

பொறுமை என்பது பொறுத்திருத்தல் மடடுமல்ல
பொறுத்திருக்கிற நேரத்தில் எப்படி

செயல்படுகிறீர்கள் என்பதுதான் பொறுமை என்கிறார் -ஜாய்ஸ் மேயர்.
 பொறுமை கசக்கும் ஆனால் அதன்  கனி இனிக்கும் - ஸீன் ஸாக்ருசோ.

பொறுமை எல்லா நிலையிலும் அவசியம்,  முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.  அவசரப்பட்டு முட்டையை உடைப்பதால் முட்டையின் குஞ்சினைப் பெற முடியாது.   - அர்னால்டு - கிளாசோ. 

பொதுக்காலம் 15 ஆம் வாரம் 16-07-2017

பொதுக்காலம் 15 ஆம் வாரம்
 16-07-2017
எசா 55:10-11;   உரோ 8:18-23;  மத் 13:1-9

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். 
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

என்ற பாடலை பாட கேட்டிருக்கிறோம். மனிதரும் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று சொல்லலாம். இன்றைய நற்செய்தியில் இருவித பொருள் கொள்ளலாம். விதை தெளிக்கப்படுகின்றது. விதை பலவிதமான நிலங்களில் விழுகிறது. வழியோரம், பாறை, முள்புதர், நல்லநிலம் ஆகியவை. நல்ல நிலத்தில் விழுந்தது மட்டும் நிறைந்த பலன் தருகிறது. மற்ற நிலத்தில் விதை முளைத்து பலன் தர முடியாமல் போகிறது. 

விதை வளர்வது, நிலத்தைப் பொறுத்தது எனலாம். இப்போதெல்லாம், மண்ணின் தன்மையைப் பார்த்து அதற்கேற்ற பயிர் செய்ய விவசாய அறிஞர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர். இறைவனுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையோடு அணுக வேண்டும். அதுதான் நல்ல நிலம். திருமணத்திற்குமுன்  ‘சம்திங், சம்திங்’, திருமணத்திற்குப் பின் ‘நத்திங், நத்திங்’ என்பது போல, தடுமாற்ற மனநிலையும் (வழியோரம்),  குரங்குபிடி உடும்பு பிடியான, பிடிவாதமான நிலையும், (பாறை). சேராத இடந்தனில் சேர்ந்து வாழும் மனநிலையும் (முள்புதர்) இறைவார்த்தை வளர்வதற்கு ஏற்றவையல்ல.

நல்லநிலம் என்பவர்கள் இறை வார்த்தையைக் கேட்டு புரிந்து கொள்பவர்கள். இதற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர் மரியன்னை! ‘இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்படுகிறவராகத் திகழ்ந்து இயேசுவின் தாய் ஆனார் (லூக் 8:21). மார்த்தாவின் சகோதரி மரியாவும், இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார் (லூக் 10:39).

முதல் வாசகத்தில், மழையும் பனியும் மண்ணில் வீழ்ந்த பிறகு அது பயனளிக்காது திரும்பாது என்று எசாயா நூலில் வாசிக்கிறோம். திப 19:20இல் இவ்வாறு ‘ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய் பரவி வல்லமையுடன் செயல்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது. ‘ஆண்டவரின் வார்த்தைப் பரவியது’ என்ற குறிப்பையும் (திப 6:7; 12:24;13:49) திருதூதர்பணிகளில் பார்க்கிறோம். ஆக இறைவார்த்தை தன்னிலேயே வல்லமையுள்ளது. இரண்டாம் வாசகத்தில் வருங்காலத்தில் வெளிப்படப்போகும் மாட்சி எதற்கும் ஒப்பிட முடியாத பெருமையுடைத்து என்று விளக்குகிறார் பவுல்அடிகளார்.
பொதுத்தேர்வு நடந்துக் கொண்டிருந்தது. ஒரு மாணவன் காப்பியடித்துக் கொண்டிருந்தான். மேற்பார்வை செய்த ஆசிரியர் ஒரு கத்தோலிக்கர் (லூக் 16:10) இல் வருகிற வசனத்தை சொல்லி விட்டுசென்று விட்டார். மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
அந்த ஆசிரியர் பணிமுடிந்து ஓய்வு பெற்று விட்டார். தனக்கு வங்கியில் கடன்வாங்க வங்கிக்குச் சென்று, வங்கி மேலாளரிடம் சென்றார். அந்த ஆசிரியரைப் பார்த்ததும் வங்கி மேலாளர் ஓடிவந்து ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கினார். ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. வங்கி மேலாளர் கூறினார், ‘ஐயா, நான்தான் தேர்வில் காப்பியடித்தவன். அதனைப் பார்த்ததும், பைபிள் வார்த்தைகளை சொன்னீர்கள்’ ‘சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பர்’ என்றீர்கள். அந்த வார்த்தைகள் என் மனதை மாற்றி விட்டன. அது முதல் நேர்மையாக நடந்து இப்போது இந்த பெரிய பதவியைப் பெற்றிருக்கிறேன். இதோ பாருங்கள், நீங்கள் சொன்ன வார்த்தைகளை அச்சடித்து அங்கு மாட்டியிருக்கிறேன் என்றார்.

இறைவார்த்தை வல்லமையுள்ளது. 
வாழ்வை மாற்ற வல்லது.

Tuesday 4 July 2017

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு
 09-07-2017,              
அருட்பணி. ச.இ. அருள்சாமி
 செக் 9:9-10;  உரோ 8:9,11-13;  மத் 11:25-30

நம் வாழ்வில் எவ்வளவோ போராட்டங்கள், சுமைகள் நம்மை சந்திக்கின்றன. இவைகளிலிருந்து விடுபடுவது  எப்படி என்று தெரியாமல் பல நேரங்களில் தடுமாறி போய்விடுகிறோம். உதாரணமாக பிள்ளைகளை வாழ்க்கையில் அமர வைக்க பெற்றோர்கள் பெரிய போராட்டத்தைச் சந்திக்கிறார்கள். 
கடன் சுமைத் தாங்காமல் குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளும் செய்திகளை நிறையவே பார்க்கிறோம். இந்த போராட்டங்களெல்லாம் அடிப்படையாக மன அழுத்தத்தில்  போய் சங்கமமாகின்றன. இந்த  மன அழுத்தம், உடல் நோய்களிலும்  விடிவு காண்கின்றன. ஒருவருக்கு உடல் முழுவதும் சரியான அரிப்பு பல மருத்துவர்களைப் பார்த்து பல  மருத்துவ சோதனைகளைச் செய்தார்கள். எல்லாம் சரியாயிருக்கிறது. கடைசியாக  அந்நோயின் காரணம், அவளின் மகள், தன் கணவனுடன் வாழாமல் தன்னிடம் வந்திருக்கிறாள். அதனால் வந்த மன அழுத்தம், உடல் அரிப்பில் விடிவுக் கண்டது. 
இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு கூறுகின்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பார்க்கிறோம்.      ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்’ என்கிறார். இயேசுவின் காலத்தில்  ‘அம்ஆரஸ்’ என்று அழைக்கப்பட்ட சாமாணிய மக்கள் இருந்தார்கள். அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள், சமுதாயத்தின் பெருங்குடி மக்களால் ஒதுக்கி  வைக்கப்பட்டவர்கள். அவர்களைப் பார்த்துத்தான், பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்கிறார் இயேசு. இளைப்பாறுதல் தருவேன் என்பது ஓய்வு நாளிலிருந்து வரும் இளைப்பாறுதல், ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு’  என்ற சொற்றொடரில் வரும் ‘நுகம்’ என்பது பரிசேயர் மற்ற தலைவர்கள் முன் வைக்கும் பாரமான சட்டங்கள்.  ஆனால் இயேசு தரும் நுகம், எளிதானது. அன்பென்ற நுகம்.

முதல்வாசகத்தில், ‘உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்’ என்றும் ‘குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார். போர்க் கருவியான வில்லும் ஒடிந்துபோகும்’ என்றும் குறிப்புக்களைப் பார்க்கிறோம். இறைவன் வன்முறைக்கு எதிரானவர் என்ற கருத்தினை இங்குக் காணமுடியும்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள்’ என்று கூறுகிறார். பல நேரங்களில் வீணான சுமைகளை, நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். 

சிகரெட் குடிப்பதை விட, இப்போது பான்பராக் போடும் கலாச்சாரம் பரவி வருகிறது. பான்பராக்  அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இரகசியமாக வாங்கி அதனைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாள் இரயிலில் பயணம் செய்யும் போது, இளைஞர் ஒருவர் பான்பராக் போட்டுக் கொண்டு, நிமிடத்திற்கு ஒருமுறை எச்சிலை வெளியே துப்பிக் கொண்டிருந்தார். இதனால் இரயிலின் வெளிதகரங்கள் எச்சிக்கரையாகியது. அதற்குமேல், அவரின் உடல்நலம், புற்றுநோய்க்காக தயாராகியது எனலாம். 

இயேசுவின் வழியில் சென்றால் உடல் உள்ள சுமைகளுக்கு விடிவுக் காணலாம்.                 

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு
 02-07-2017,             
அருட்பணி. ச.இ. அருள்சாமி
 2அரச 4:8-11,14-16;   உரோ 6:3-4,8-11;  மத் 10:37-42        

மக்கள் திருப்பலியை அர்ப்பணிக்கிறார்கள். அதற்காக தற்போது ரூ100/- நன்கொடையாகத் தருகிறார்கள். மக்கள் நிறைய திருப்பலிகளை அர்ப்பணித்தால், அந்த பங்கிற்கு நல்ல வருமானம் என்பார்கள். அதுவல்ல உண்மை. திருப்பலிக்கு கொடுக்கப்படும் நன்கொடை, குருக்களின் பராமரிப்பிற்காக அளிக்கப்படுகிறது. குருவானவர் ஒரு நாளைக்கு ஒரு திருப்பலியின் நன்கொடையை பெற்றுக் கொள்வார். திருத்தலங்களில் மக்களால் கொடுக்கப்படும் திருப்பலிகள் குருக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். குருக்கள் தாங்கள் திருப்பலி நன்கொடைப் பற்றி ஒரு நோட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆண்டிற்கொரு ‡முறை ஆயர் அதனை  பார்வை யிடுவார். திருச்சபை சட்டம்  946, திருப்பலிக்கு அளிக்கப்படும் நன்கொடை திருச்சபையின் நலனுக்காக அளிக்கப் படுகிறது. இதில் அருள்பணியாளர் களின் பராமரிப்பு அடங்கும் என கூறியுள்ளது. இவ்வாறு திருப்பலிக்கு மக்கள் அளிக்கும் நன்கொடை, அவர்களின் தியாகத்தையும் குறித்துக் காட்டும். 
இன்றைய நற்செய்திப் பகுதியில் இறையடியார்களை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும், இறையடியார்களுக்கு உதவுபவர்கள் அதற்கேற்ற கைமாறு பெறுவர் என்றும் இயேசு கூறுவதை கேட்கிறோம். திருஅவை, திருஅவையின் மக்களாலேயே பராமரிக்கப்படுகிறது. இயேசுவிற்கு பெண்கள் பலர் தங்களின் உடைமைகளைக் கொண்டு அவருக்கு பணிவிடை செய்தார்கள் என்ற குறிப்பைப் பார்க்கிறோம் (லூக் 8:1‡3).  பவுல் அடிகளார், திருப்பணியாளர்கள், தங்கள் பணிக்கேற்ற ஊதியத்தைப் பெற தகுதியானவர்கள் என்கிறார். நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார் (1 கொரி 9:14). அதே நேரத்தில் பவுல், என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோ ‡டிருந்தவர்களின் தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன (திப 21:34) என்று கூறுகிறார்.
தற்போது வெளிநாட்டு உதவிகள் வெகுவாகக் குறைந்து விட்டன. நமது திரு அவையில், பங்குகளின் தேவைகளை நாமே நிறைவு செய்ய வேண்டும். அதுதான் மனநிறைவையும், கடவுளின் அருளையும் பெற்றுத் தரும்.  தற்போது, பங்குப் பேரவைகள் அமைந்து, மக்கள் மிக்க ஈடுபாட்டுடன் செயல்படுவதைப் பார்க்கிறோம். சிலர் தாராள சிந்தனைக் கொண்டு உதவி செய்கிறார்கள். ஒரு பங்கில் புதிதாக ஆலயம் கட்டினார்கள். மக்களின் உதவியை பங்குத்தந்தை நாடினார். ஏழை விதவை ஒருவர், என்னால் முடிந்தது என்று ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக தந்திருக்கிறார். அதே பங்கில் வசதி படைத்தவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று மட்டும் உதவி தந்துள்ளார்கள்.  திருஅவைக்கு உதவி அளிக்கும் போது பலர் பயன்பெறுகிறார்கள். அதனால் கடவுளின் ஆசீர் அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது. முதல் வாசகத்தில், எலிசா இறைவாக்கினருக்கு உதவி செய்து வந்த பெண்ணிற்கு, குழந்தை வரம் கிடைக்க ஆசீர்வதித்தார்.
குருமட மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் நிறைய பொருள் செலவு ஆகின்றது. குருமாணவர்களை தத்தெடுத்து அவர்களின் பயிற்சிக்கான செலவை பலர் ஏற்று கொள்கின்றனர். இஸ்பெல் ஆட்லர் கூறுகிறார், ‘பிறருக்கு உதவி செய்து யாரும் ஏழையானதில்லை’ என்கிறார். ‘உலகம் உனக்கு செய்வதை விட உலகிற்கு நீ அதிகமாக செய்யும்போதுமதான் வாழ்வில் வெற்றி பெறுகிறாய்’ என்கிறார் யஹன்றிபோர்ட்.
இரண்டாம் வாசகத்தில் ‘கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்’ என்கிறார் பவுல் அடிகளார்.                                                     
திருஅவைக்காக நாம் செய்யும் தியாகங்கள், இயேசுவின் சிலுவை தியாகத்தில் பங்குக் கொள்ளுதலாகும். இறையடியார்களை மதிப்போம். அவர்களுக்கு ஆதரவு தருவோம். அதனால் இறைவனின் ஆதரவை நிறைவாகப் பெறுவோம். திருப்பணியாளர்களுடன் உறவுக் கொண்டால் ஞானம் (தெளிவு) பிறக்கும் என்கிறார் திருமூலர்.
தெளிவு குருவின் திருமேனி கண்டால் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே (திருமந்திரம் 183)

வெற்றி உங்கள் கையில், அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

வெற்றி உங்கள் கையில்
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

 கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த வார்த்தை “TET”  (Teachers Eligibility Test) (ஆசிரியர்  தகுதித்தேர்வு).  ஒருவர்  D.TEd மற்றும்  B.Ed முடித்திருந்தாலும்  TED தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதியை அவர் பெறுகிறார்.  “தகுதி” என்கிற வார்த்தை ஆசிரியப் பணி செய்வதற்காக மட்டுமல்லாமல் எந்த துறையில் வேலைக்கு சென்றாலும் தகுதி என்பது முக்கியமான ஒன்றாக அமைகிறது. குழந்தைகள் Pre KG, LKG, UKG என்கிற நிலைக்கு படிக்கச் செல்லும்போது  தகுதி தேவைப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பதற்கும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கும், தகுதி தேவைப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர்வதற்கும், வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் தகுதி என்பது இன்றியமையாத ஒன்று. பதவி உயர்விலும் தகுதி என்பது  தேவையானதாக இருக்கிறது. இப்படி தகுதி என்பது நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகிறது. தகுதி என்ற மூன்றெழுத்தில்  மூன்று முத்தான வாழ்க்கை தத்துவம் அமைந்துள்ளது.

த’என்பது தன்னம்பிக்கையை குறிக்கிறது.
கு’என்பது  குறிக்கோளை  குறிக்கிறது.
தி’என்பது திறமையை குறிக்கிறது.

ஒருவர் தன்னம்பிக்கையோடு குறிக்கோளை நோக்கி தேவையான அளவு திறமையோடு பயணித்தால் வெற்றியை பெறலாம். ஆகவே வெற்றியை அடைய தகுதி மிக மிக முக்கியமானதாகும். அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்திய நாட்டிற்கு வருகை தந்தபோது நிருபர்கள் அவரிடம் “பலர் உங்களோடு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் யாருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபொழுது,  “இந்திய நாட்டின்  இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி பிடித்து வழிநடத்தும்  A.P.J அப்துல்கலாம் அவர்களோடு எடுக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.  பாருங்கள்! இந்திய மக்களின் மனதில் இடம்பிடித்த மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் தகுதிதான் பில்கிளிண்டனை இவ்வார்த்தைகளை  சொல்லவைத்தது.  கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபொழுது அப்துல்கலாமை பார்த்து ஒரு மாணவன் கேட்ட கேள்வி,  “வாழ்வில் வெற்றிபெற என்னசெய்ய வேண்டும்?”. அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் “If you want to be successful, don’t chase success. Chase EXCELLENCE, success will automatically follow you” வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான தகுதியின் உச்சத்தைத் தொட்டால், தானே ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும். ஆம் தகுதியை வளர்த்துக்கொண்டால் வெற்றி தானாக தேடி வரும். மதுரை தமிழ்ச்சங்கம் சிறுவர்களுக்கான கவிதைப்போட்டி ஒன்றை நடத்தியது. அதல் மூன்றாம் பரிசுக்கு கிடைத்த கவிதையின் வரிகள் இதோ,

 “செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”.  நீங்கள் கவிஞரை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மூன்றாம் பரிசை பெற்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். முதல் பரிசு, இரண்டாம் பரிசு பெற்றவர்கள் பற்றி இப்போது யாரும் பேசுவது இல்லை. யாருக்கும் தெரியாது. ஆனால் பாரதியார் மூன்றாம் பரிசைப்பெற்றாலும் தனது தகுதியை வளர்த்துக்கொண்டார். நம் உள்ளங்களைக் கொள்ளைக்கொண்டார்.  வெற்றியையும் தக்கவைத்துக் கொண்டார். சில சமயங்களில் நமக்கு ஒரு சந்தேகம் எழலாம். தகுதி இல்லாதவர்கள் வெற்றி பெறுகிறார்கள், தகுதி உள்ளவர்களால் வெற்றிபெற முடியவில்லையே என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தகுதியில்லாதவர்கள் வெற்றி பெறலாம்.  ஆனால் அதை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. தகுதி உள்ளவர்களால் மட்டுமே வெற்றியை தக்கவைத்துக் கொள்ளமுடியும். அனைத்து வெற்றியாளர்களின் வாழ்வை சீர்தூக்கிப்பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அன்பு வாசகர்களே! நீங்களும் உங்கள் வாழ்வில் தகுதியை வளர்த்துக்கொண்டு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்!.

திருப்பலி விளக்கம் 17. நற்கருணை வழிபாடு ( V)

திருப்பலி விளக்கம்

17. நற்கருணை வழிபாடு  ( V)   
 
3. 8.  நினைவு ஆர்ப்பரிப்பு 

இது நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்கும் அதற்குப் பின்வரும் பகுதிக்குமிடையே ஒரு தொடர்பை உருவாக்கு வதற்காக அமைந்துள்ளது. “நம்பிக்கையின் மறைபொருள்” என்று  ஆர்ப்பரிப்பது ஆண்டவர் மீது மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தை  உறுதிப்படுத்தவும், அவரை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும்  தூண்டுவதாய் அமைகிறது. விசுவாசத்தின் மறைபொருளை விளக்குவதாகவும் அமைகிறது. இதைத்தான்  “ஆண்டவரே நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்” என்ற நினைவு ஆர்ப்பரிப்பு வெளிப்படுத்துகிறது. இது போன்ற மேலும் 3 பாடங்கள் திருப்பலி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றையும் நாம் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். “எனக்காக பிறந்து, எனக்காக மரித்து .... உமக்கே ஆராதனை”  என்று சொல்வது தவறாகும். தவிர்க்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் பறைசாற்றக் கூடியே நேரம் இது.  இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும் நேரம் அன்று. 

 3.9.  நினைவாக்கம் (Sacrificial Memorial)

நற்கருணை வழிபாட்டின் இரண்டாவது பகுதி இந்த செபத்தோடு தொடங்குகிறது. முதல் பகுதி  கிறிஸ்துவின் உடலை அருள் அடையாள  உடலாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.  இரண்டாவது பகுதி மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளாகிய பாஸ்கா மறைபொருளை நினைவு கூறுவதோடு, இயேசு, கிறிஸ்துவையே இறைவனுக்கு பலியாக  ஒப்புக் கொடுக்கும் நேரமாக அமைகிறது. மேலும் கூடியிருக்கும் இறைமக்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்து (Second Epiclesis)  அவர்களை ஒன்றிணைக்க வேண்டப்படுகிறது. இந்த இரண்டாவது பகுதி கிறிஸ்துவின் மறையுடலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. “மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என தாழ்மையுடன் உம்மை மன்றாடு கிறோம்” என்று சொல்லப்படுகிறது.  (இரண்டாவது நற்கருணை மன்றாட்டு காண் ந.ம. III, IV). 
தூய ஆவியார் உயிர்த்த கிறிஸ்துவின் கொடை. விண்ணகம் சென்ற கிறிஸ்து இதற்காகத் தந்தையிடம் பரிந்து மன்றாடிக் கொண்டுள்ளார். தூய ஆவியார் மக்கள் மீது  இறங்கி வர மன்றாடுவது இரு நோக்கங்கள் கொண்டது: ஒன்று தூய ஆவியார் அனைவரையும் ஒன்றுசேர்த்து செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்பது (காண்  உரோ 8:26-27). மற்றொன்று நம்பிக்கையாளர்கள்  கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வதால் அதன் பயனாகிய ஒன்றிப்பை அடைய வேண்டும் என்பது (காண் 1 கொரி 10:17).

 3.10.  திரு அவையின் தேவைகளுக்காக மன்றாட்டு

அதன்பின் திருஅவையின் தேவை-களுக்காகவும்  மக்களுடைய தேவைகளுக்காகவும் மன்றாட்டுகள் தொடர்கின்றன. இவை தூய ஆவியாரின் வருகைக்குரிய மன்றாட்டின் இயல்பான தொடர்ச்சியாகும். முதலில் திருஅவைக்காகவும், திருத்தந்தைக்காகவும், அடுத்து திருப்பணியாளர்கள், மற்றும் மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். (காண் ந.ம. ணூணூ, ணூணூணூ). நான்காவது மன்றாட்டில் “நேர்மையான உள்ளத்தோடு உம்மை தேடிவரும் யாவரையும் நினைவுகூர்ந்தருளும்”  என்பது கவனிக்கத்தக்கது.

 3.11 . புனிதர்களின் நினைவு

இறைவனின் அன்பில் சிறந்து வாழ்ந்து, இன்று விண்ணக பேரின்பத்தில் பங்கு பெற்றிருக்கும் நம் மூத்த சகோதரர்களாகிய புனிதர்களையும் சுருக்கமாக நினைவு கூர்ந்து நமக்காக பரிந்துரைக்க மன்றாடுகிறோம். முதல் நற்கருணை மன்றாட்டில் நற்கருணை ஏற்படுத்துதலை விவரிக்கும் பகுதிக்கு முன்னும் பின்னும் புனிதர்களை நினைவுகூர்வதைக் காணலாம்.  மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் கன்னிமரியும், அவரது கணவர் புனித சூசையப்பரைத் தவிர மற்றவர்கள் திருத்தூதர், மறைசாட்சியர் என்று பொதுவாக நினைவு கூறப்படுகிறார்கள்.

 3.12.  இறந்தோருக்காக வேண்டல்

இவ்வுலகில் வாழ்வோருக்காக செபித்த அருள்பணியாளர் இப்போது இவ்வுலகில் வாழ்ந்து மரித்தவர்களுக்காக மன்றாடுகிறார். இறைவன் அவர்கள் மீது கருணைக்காட்டிட மன்றாடுகிறார்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட மூன்று வேண்டுதல்களும் புனிதர்களின் சமூக உறவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில்  இடம் பெறுகின்றன. பரிந்துரைகளின் கருத்துகளைக் குறிப்பிடுவதிலும், புனிதர்களை நினைவுகூர்தலிலும் ஒரே வகையான வரிசைகிரமத்தை நற்கருணை மன்றாட்டுகளில் காண்பதில்லை. மூன்றாவது நற்கருணை மன்றாட்டில் புனிதர்களை நினைவுகூர்தல் முதலிலும், மற்ற இரண்டிலும் (ணூணூ &ணூV) இறுதியிலும் அமைந்துள்ளது. வாழ்வோர்க்கான பரிந்துரைத்தலுக்குப் பின் இறந்தோர்க்காக மன்றாடுவது 3ஆம், 4ஆம் நற்கருணை மன்றாட்டுகளில் வரிசைக் கிரமமாயிருக்கிறது. ஆனால் 2 ஆம் நற்கருணை மன்றாட்டில் இறந்தோரை நினைவுகூர்ந்த பின்னரே நமக்காக வேண்டுதல் புரிகிறோம்.   
  
3.13.  இறுதி புகழுரை (Doxology)

இது நற்கருணை மன்றாட்டின் முடிவுரையாகும்.  என்றாலும் இதுவே நற்கருணை மன்றாட்டின் சிகரமாக அமைந்துள்ளது.  எல்லா நற்கருணை மன்றாட்டுகளிலும் இந்த இறைபுகழ் ஒரே வகையாக அமைந்திருக்கிறது. திருப்பலியின் இறையியல்பையும் நோக்கத்தையும் மிகச் சுருக்கமாக, ஆனால் தெளிவாக எடுத்துரைக்கிறது. தூய ஆவியாரால் ஒன்றிணைக்கப்பட்ட திருஅவை இயேசுகிறிஸ்து வழியாக தந்தையாகிய கடவுளுக்கு உரிய வாழ்த்தும்  வணக்கமும் ஆராதனையும் அளிக்கிறது.
நற்கருணை மன்றாட்டின் இந்த இறுதிப் பகுதியைத் திருப்பலிக்குத் தலைமையேற்று  நிகழ்த்தும்  அருள்பணியாளர் பாட அல்லது பறைசாற்ற, மக்கள் அனைவரும்  “ஆமென்”  என்று சொல்லி இப்புகழுரையை உறுதிப்படுத்துகினறனர், தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். இதைப் பெரிய ‘ஆமென்’  என்று சொல்வதுண்டு.
இந்த இறுதி புகழுரையை திருப்பணியாளர் மட்டுமே பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இது நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியாகும். எவ்வாறு நற்கருணை  மன்றாட்டில் எந்த ஒரு செபத்தையும் சொல்ல மக்களுக்கு அனுமதி இல்லையோ, அதேபோல்தான் இங்கும்.
இந்த இறுதிபுகழுரையில் வரும்  ‘இவர்’ இயேசு கிறிஸ்துவைக் குறிக்கின்றது. மேலும், அருள்பணியாளர் திருதட்டையும், கிண்ணத்தையும் தூக்கிப் பிடித்து நிற்பதால், அப்ப இரச குணங்களுள் பிரசன்னமாயிருக்கும் இயேசுவையே, ‘இவர்’ குறிக்கிறது. கூட்டுத்திருப்பலியில் திருதட்டுடன் அப்பத்தை ஒருவரும், இரசக் கிண்ணத்தை மற்றொருவரும் தூக்கிப் பிடிப்பர். ஏனைய கூட்டுப் பலியாளர் வேறு அப்பப் பாத்திரங்களை தூக்கிப் பிடிப்பது முறையானது எனக் கூறமுடியாது;  அவசியமும்  இல்லை.

 4. நற்கருணை மன்றாட்டுகளின் சிறப்பு பண்புகள்
நற்கருணை மன்றாட்டின் அமைப்பு கூறுகளை விளக்கியபின் அவற்றில் இழையோடும் சில பண்புகளைப் பற்றிய விளக்கம் இங்கு இடம் பெறுகிறது.

4.1.  நினைவாக்கம்  (Anemnesis)

“இதை என் நினைவாகச் செய்யுங்கள்”  என்று நம் ஆண்டவர் சீடர்களுக்குக்  கட்டளையிட்டார். இன்று நாம் அப்பத்தைப் பிட்டும், கிண்ணத்தைப் பகிர்ந்தும் கொள்வதின் வழியாக கிறிஸ்து தம்மையே பகிர்ந்தளித்ததை நினைவு கூர்கிறோம்.
விவிலியத்தில் ‘நினைவுகூர்தல்’  என்பது செயலாக்கம் உடைய இரு பண்புகளைக் கொண்டது. ஒன்று கடவுள்  மீட்புக்கடுத்த வாக்குறுதிகளில் பிரமாணிக்கம் தவறமாட்டார் என்பதை மக்களுக்கு நினைவூட்டுதலாகும். இது மக்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கும். மற்றொன்று அதே மீட்புக்கடுத்த வாக்குறுதிகனைக் கடவுளுக்கும் நினைவுப்படுத்துதலாகும். அதாவது, மக்கள் கடவுளின் திருமுன் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவற்றைக் காட்டி அவரது மீட்பின் வாக்குறுதிகளை மீண்டும் செயலாக்க மன்றாடுவது. எனவே நினைவாக்கம் வெறும் குறித்துக் காட்டுதல் மட்டுமல்ல,  செயலூக்கமும், படைக்கும் ஆற்றலு முடைய ஒரு செயல்.
இதன் அடிப்படையில் யூதர்கள் பாஸ்கா வைக் கொண்டாடும் போது கடவுளுடைய அரும் பெரும் செயல்களை நினைவுக்குக் கொண்டுவந்து பறைசாற்றினர். தங்கள் முன்னோர்களுக்குக்  கடவுள் செய்த அதே  மீட்புச்செயல்களை இப்பொழுதும் தங்களுக்குச்  செய்ததாகவும் அதனால் அதன் பயனை தாங்கள்  தூய்ப்பதாகவும் உணர்ந்தனர். எனவே இறைவனை உளமாற புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இன்றும் திருப்பலி கொண்டாட்டத்தில் இது நடைபெறுகிறது. நற்கருணை மன்றாட்டு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வுகள், அதாவது மீட்கும் ஆற்றலுடைய அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை முனைப்பான (எஸஷ்ஸஷ்d) முறையில் நினைவு கூறப்படுகின்றன. திருப்பலியில் பங்கு பெறுவோர் இங்கே இப்பொழுது மீட்கப்படுவதாக உணரமுடிகிறது. இயல்பாகவே அவர்கள் இறைவனை புகழ்ந்து நன்றிகூற உந்தப்படுகின்றனர்.

4.2.  புகழுரையும் நன்றிகூறலும்

நற்கருணை வழிபாட்டிற்குச் சிறப்பளிப்பது புகழ்ச்சியும் நன்றியுமாகும். இவை இரண்டும் ஒரே பொருளுடையவை என மேலே குறிப்பிடப்பட்டது. இப்புகழுரை கடவுள் தம் திருமகனின் பலி வழியாக நமக்கு மீட்பளித்துள்ளார் என்பதை  உயிராற்றல்  உள்ளமுறையில் உணர்வதால், இயல்பாகவே நமது எதிர்விளைவும், பதிலுரையும் புகழ்ச்சியாகவும் நன்றியாகவும் உருவெடுக்கிறது.

 4.3.  இறைஞ்சி மன்றாடுதல் (Supplication)

புகழ்ச்சியும் நன்றியும் நிறைந்த ஆர்ப்பரிப்பு,  கடவுள் தம் மீட்கும் செயலை,  இப்பொழுது இங்கு தம் மக்கள் சார்பாக தொடர்ந்து செய்யவும் புதுப்பிக்கவும் வேண்டும் என்று மன்றாட திருகுழுமத்தைத் தூண்டுகிறது. இது நினைவாக்கத்தின் விளைவுமாகும். நினை-வாக்கத்தோடு இறைஞ்சி மன்றாடுவதும் இணைந்து செல்ல வேண்டும் என்பது கடவுளுடன் மனிதன் கொண்டிருக்கும் உறவின் தன்மைக்குத் தேவைப்படுகிறது. நற்கருணை வழிபாட்டில் தம் திருமகனின் சாவு ‡ உயிர்ப்பின் பேறு பலன்களால் நம்மை மீட்கும்படி தந்தையாகிய இறைவனிடம் மன்றாடப்படுகிறது. இறைவனின் மீட்புத்திட்டம் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் முற்றுப்பெறும் வரை, அவரை அனுப்ப வேண்டுமென்று இறைஞ்சுகிறோம். இக்கண்ணோக்கில், நினைவாக்கம் கிறிஸ்துவின் மீட்புச்செயலின் ஓர் அருள்அடையாள வடிவமாகும். இதன் வழியாக, இன்னும் முற்றுபெறாத மீட்பின் வாக்குறுதியை நிறைவு செய்யும்படி தந்தையிடம் மன்றாடுகிறோம்.

4.4.  காணிக்கை (பலி)

நாம் செய்த மன்றாட்டுகள் ஏற்கப்பட்டு நமக்குப் பயன் அளிக்கும் வகையில் நாம் நமது காணிக்கைகளை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இக்காணிக்கை கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்படுவதால் நாம் இயேசுகிறிஸ்துவையே கடவுளுக்குக் காணிக்கை யாக்குகிறோம். இதில்தான் நாம் ஒப்புக்கொடுக்கும் பலி அமைந்துள்ளது.  இயேசுகிறிஸ்து கடவுளின் உகந்த மகனாகையால் அவர் ஏற்றுக்கொள்ளபடுவார். அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாம் இறைஞ்சி மன்றாடினதும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிபாடு நமக்கு உண்டு.                   தொடரும்...

குடும்பத்தின் மகிழ்வே, திருச்சபையின் மகிழ்வு - அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

குடும்பத்தின் மகிழ்வே, திருச்சபையின் மகிழ்வு
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

மனிதர் ஒரு சமூக உயிரி. மண்ணகத்தில் உதயமானதும் தாய் மடியில் கிடத்தப்படும் குழந்தை, தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற உறவு வட்டத்துள் வளர்கின்றது. தான் வளர்ந்து வாழும் சமூக, சுற்றுப்புறச் சூழலின் படைப்பாக ஒரு மனிதர் மாற்றம் பெறுகின்றார். இவரது வளர்ச்சியில் முதலிடம் பெறுவது இவரின் குடும்பமே. இக்குடும்பத்திலிருந்தே சமூகத்தோடு தொடர்பு ஏற்படுகின்றது. தான் வாழும் சமூகத்தில் பலரோடு கொண்டுள்ள உறவின் காரணமாகக் கோபம், மகிழ்ச்சி, வருத்தம், பயம், ஆச்சரியம், சந்தேகம், சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றார். இதனையே மனிதர் உணர்ச்சிகளால் ஆளப்படுகிறார் என்று உளவியலாளர் கூறுகின்றனர்.
  
அனைவரும் விரும்பும் உணர்வு:

பல்வேறு உணர்ச்சிகளுக்கு நாம் உட்படுத்தப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மகிழ்ச்சி என்ற உணர்வே. அனைவரும் தேடுவது மகிழ்ச்சியையே. நமது வாழ்வின் துக்கம் நிறைந்த அல்லது வருத்தம் தரும் நிகழ்வுகளை மறக்கத் துடிக்கும் நாம் மகிழ்ச்சியான அல்லது சந்தோ­மான தருணங்களையே நமது நினைவில் அசைப் போடத் துடிக்கின்றோம்.

தோச மில்லா சந்தோ­ம்:

தோ­ம் என்பது நமது மரபில் தீண்டத்தகாத வார்த்தையாக வாழ்வின் தீமைகளை நிறைந்திருக்கும் கருத்தியலைக் கொண்டுள்ளது. ஆனால் சந்தோ­ம் என்னும் மகிழ்ச்சியினை அனைவருமே  விரும்புகின்றனர். எங்கே மகிழ்ச்சி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று மனித மனம் அலை மோதிக் கொண்டிருக்கின்றது. 
ஆக, மகிழ்ச்சி என்பது என்ன?

மனித உள்ளத்திலிருந்து  எழும் ஆழமான ஓர் இனிய உணர்வே மகிழ்ச்சியாம்.  இயற்கையில் கொட்டிக் கிடக்கும் கொள்ளை அழகில் லயித்து வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி. மனம் விரும்பும் நண்பர்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி. தன்னை ஆளாக்கிய பெற்றோர், ஆசான்களோடு செலவழிக்கும் நேரம் தருகின்ற மகிழ்ச்சி. ஆன்மிக ஈடுபாட்டோடு கண்களை மூடி ஏகப்பொருளோடு தியானத்தில் அமர்ந்து செபிக்கும் போது நாம் பெறும் மகிழ்ச்சி. இவையயல்லாம் நீதிமிக்க, நியாயமான, மனதுக்கு திருப்தி தரக்கூடிய மகிழ்ச்சியாகும்.

ஆனால் இன்னொரு வக்கிரமான மகிழ்ச்சியும் உண்டு. அதுதான் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலின வன்கொடுமை போன்ற அநீதி செயல்களின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி. இறையாசீர் பெற்றுத் தருவது முந்தையது. மனிதரின் கோபத்தையும், இறை சாபத்தையும் பெற்றுத் தருவது பிந்தையது. மனமகிழ்வும், மனசாட்சியின் குடைச்சலும் ஒத்துப் போகுமா?

விவிலியம் காட்டும் மகிழ்ச்சி:

* உம் கட்டளைகள் காட்டும்  நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். திபா 119:35.
* தீங்கிழைப்பது மதி கெட்டோருக்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவுள்ளோருக்கு மகிழ்ச்சி தரும்           நீமொ 10:23
* ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்; அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின்   மணி                முடியுமாகும்.  - சீஞா 1:11

* உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கி விட        முடியாது. - யோவா 16:22
* சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில்          திளைத்திருந்தார்கள். - திப 13:52
* ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும்         சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன்                  எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். - 1 கொரி 12: 26


* தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை. ‡கலா 5:22

மத்தேயு நற்செய்தியாளர் காட்டும் மகிழ்ச்சி 

வாழ்வு நெறி முறைகள்:

புனித மத்தேயு நற்செய்தியாளர் நமது வழிபாட்டுக்கும், வாழ்வின் மகிழ்ச்சிக்கும் இறுதியாக, விண்ணக வீடு பேற்றினை அடைவதற்கான வாழ்வியல் நெறிமுறைகளை 5,6,7 ஆகிய அதிகாரங்களில் சுட்டிக் காட்டுகின்றார்.
1. நாம் பேறுபெற்றவர்களாக வாழ்வதற்கான எட்டு அழைப்புகள் (மத் 5:3‡16)
2. கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆறு விதமான நன்மைத்            தனங்கள் (மத் 5:17-48)

3. கடவுள் விரும்பும் மூவகை பக்திநெறிகள் (மத் 6:1‡18)
4. கடவுள் விரும்பும் பணி (மத் 6:19-29)
5. கடவுள் எதிர்பார்க்கும் நம்பிக்கை (மத் 6:25-34)
6. நமக்கு அடுத்திருப்பவரை நடத்தும் முறை (மத் 7: 1-12)
7. நமது அழைப்புக்கேற்ற வாழ்வு (மத் 7:13-27)
       
 நாம் வாழும் முறை நம் உள்ளத்திலும், மனித உறவிலும் சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதுவே கிறிஸ்து வழங்கும் மகிழ்ச்சியாக அமையும். 

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசுகின்றார் (எபி 1:1,2). திருப்பலி, அருள் அடையாளக் கொண்டாட்டங்கள், திருப்புகழ்மாலை ஆகிய அனைத்தும் நிறை மகிழ்வினை நமக்குக் கொணரும் என்பது திண்ணம்.

 திருத்தந்தை பிரான்சிஸ் : 

‘சன்னல்களைத் திறந்து விடுங்கள், புதிய காற்று உள்ளே வரட்டும்’ என்றுரைத்து திருத்தந்தை 23 ஆம் யோவான் இரண்டாம் வத்திக்கான் பேரவையினைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னரே திரு அவை பற்றிய சரியான புரிதல் உலக அரங்கில் ஏற்பட்டது. மனம் இறங்குபவரே உண்மையான நேர்மையாளர் (திபா 37:21) என்னும் தொனியோடு 2013 ஆம் ஆண்டு நேர்மையாளர் புனித யோசேப்பு விழாவன்று திரு அவையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் பிரான்சிஸ். இவர் மானுடம் தனது இதயங்களைத் திறக்க வேண்டும் என்பதனை தனது முழக்கமாக்கி வருகின்றார். மேற்காணும் சிந்தனைதான் இவரின் சுற்று மடல்களிலும், திருத்தூது  ஊக்க உரைகளிலும் மையமாக உள்ளது. இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை வைத்துச் செயல்பட நம்பிக்கையின் ஒளி  என்னும் சுற்று மடல். இயற்கை இறைவனின் கொடை. அதை அன்பு செய்து பராமரிப்பது நமது கடமை என்பதனைச் சுட்டிக் காட்டும் இறைவா உமக்கே புகழ்  என்ற சுற்று மடல். நற்செய்தியின் மகிழ்ச்சி  என்னும் திருத்தூது  ஊக்க உரை. இரக்கம் உள்ளவராய் வாழ்வதே உண்மையான நற்செய்திப் பணி என்னும் கருத்தியலை வலியுறுத்துகிறது.

இரக்கத்தின் முகம் என்ற ஆணை மடல். இதன் மூலம் இரக்கம் என்பது தந்தையின் செயல்பாடு மட்டுமன்று. அவருடைய உண்மைப் பிள்ளைகள்  யார் என்பதை உறுதிப்படுத்தும் அளவுகோலாகவும் அது உள்ளது. (எண்:9) போன்ற செயல்பாட்டுச் சிந்தனைப் பெட்டகம். குடும்ப வாழ்வு எங்கெல்லாம் நிறைவுற்று, மகிழ்ச்சியிலும், அமைதியிலும் குறைவுற்று உள்ளதோ அங்கெல்லாம் பரிவிறக்கம், உறவு நெருக்கம் ஆகியவற்றின் மூலம் இறையன்பினைச் சுவைத்து  அந்த அன்பினை இயற்கையிலும், மானுடம் முழுமையிலும் குறிப்பாகக் குடும்ப வாழ்விலும் வெளிப்படுத்திடல் வேண்டும். இந்தக் கருத்து திருத்தந்தையின்  அன்பின் மகிழ்ச்சி  என்னும் திருத்தூது ஊக்க உரையின் வழியாகத் தெளிவாக்கப்படுகின்றது.

 பொது நிலையினரின் ஈடுபாடு:

பொது, பொதுமை - சமத்துவத் தன்மை. நில் என்ற வார்த்தையிலிருந்து எழும் நிலை. நிலைத்த என்னும் பொருள். ஆக பொது நிலையினர் என்ற சொல்லுக்கு சமத்துவத்தில் நிலையாயிருப்போர் என்று அர்த்தமாகும். இதன் பின்னணியில்தான் பொது நிலையினர் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.  நமது மறை மாவட்டத்தில் பங்குப் பேரவை, நிதிக்குழு போன்றவையும் பொது நிலையினரின் ஈடுபாட்டினை அதிகரிக்கும் விதமாக அன்பியங்கள் பக்த சபைகள் போன்ற அமைப்புகளும் அதிகம் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் இறைமக்களே திருச்சபை. மக்களைக் கொண்டு, மக்களாலே, மக்களுக்காகச் செயல்படும் திருச்சபையாக நமது திருச்சபை மாற்றம் காண வேண்டும்.

அருள் வாழ்வு ஊற்றெடுக்கும் குடும்பம்:

மனிதர், தான் உணரும் தனிமையைப் போக்கக் கூடிய தனக்குத் தகுந்த துணையைத் தேடியதாக
விவிலியம் கூறுகிறது (தொநூ 2:18 ‡20). அவன் பெறும் உயர்ந்த கொடையாக அவனுடைய ஏற்ற துணை கருதப்படுகின்றார் (சீஞா 36:24).  இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பத்தில் அவர்கள் உடலும், உள்ளமும் நெருக்கமாய் இருப்பது போன்று இணக்கத்துடன் இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் ஓருடலாய் மாறுகின்றனர். குடும்பத்தில் பெற்றோர் அடித்தளம் என்றால் குழந்தைகள் அக்குடும்பத்தின் உயிருள்ள கற்கள் போன்றவர்கள். இவர்கள்தான் குடும்பத்தின் தொடர்ச்சியான அடையாளமாக உள்ளார்கள்.

திருமணத்தைப் பிள்ளை பேற்றுடன் மட்டுமே இணைத்துப் பார்ப்பது தவறு. திருமணத்தின் முறிவுபடாத் தன்மையை தங்கள் மீது சுமத்தப்பட்ட நுகத்தடியாகத் தம்பதியர் கருதலாகாது. உண்மையான அழகு என்பது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த கவர்ச்சியிலிருந்து வேறுபட்டது. அது அடுத்தவரின் புனிதத்தைப் போற்றச் செய்வது. அதனால் இல்லறத்தில் மகிழ்ச்சி ததும்பிட நன்றி - தயவு செய்து  - வருந்துகின்றேன் ஆகிய வார்த்தைகள் அவசியம் தேவை.
குடும்பம்தான் சமுதாயம் சார்ந்த செயல்பாடு களுக்கான முதன்மைக் களம். தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகத்தால் ஆதிக்கம் செய்யப்படுகின்ற நமது காலச் சூழலில் விமர்சனப் பார்வையோடு விழுமியச் சிதைவுகள் இன்றி பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். மேலும் இல்லம் என்பது இறை நம்பிக்கையின் பொருளையும், அழகையும் பாராட்டவும், இறைவேண்டல் செய்திடவும், அடுத்தவர் களுக்குத் தொண்டாற்றிடவும் கற்றுக் கொடுக்கும் இடமாக அமைய வேண்டும்.

மகிழ்ச்சி நிறை குடும்பமே, மகிழ்ச்சி நிறை சமுதாயம் படைக்கும். அதனைப் போன்றே மகிழ்ச்சி நிறை குடும்பமே. திருச்சபையின் மகிழ்வு.

ஒற்றுமையே உயர்வின் வழி, அருட்பணி. ச.இ. அருள்சாமி

ஒற்றுமையே உயர்வின் வழி
அருட்பணி. ச.இ. அருள்சாமி

வாட்ஸ் அப்பில் ஓர் அற்புதமான காட்சியைப் பார்த்தேன். காட்டில், காட்டெருமை கன்று ஒன்றை பல சிங்கங்கள் சேர்ந்து பிடித்துவிட்டன. கன்றின்தாய் மற்ற காட்டெருமைகளை அழைத்து வருகிறது. காட்டெருமைகள் சிங்கங்களையும் முட்டி தூக்கியயறிகின்றன. அதனால் இளம் கன்று குட்டியை மீட்டு வருகின்றன.
நம் உடலின்பலம், நம் உடலின் பல உறுப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவது. மனிதர் ஒன்றினைந்தால் எல்லையில்லா வல்லமையைப் பெறமுடியும். கோடிக்கணக்கான துகல்கள் இணைந்ததுதான் ஒருபாறை. துகல்கள் பிரியும் போது அது மணல்.

ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகயுத்தங்களால் சீரழிந்தன. இப்போது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தி, ஒரே நாணயம், திறந்த வர்த்தகம் என்று வெற்றி நடைப்போடுகிறார்கள். இங்கிலாந்து, இந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்துக்கொண்டு, பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

ர´யாவின் கூட்டாள்ச்சி உடைந்து பலநாடுகளாகச் சிதைந்து, ர´யா தனது வல்லரசின் பெருமையை இழந்து நிற்கிறது. ஆசிய நாடுகள் ஒன்றிணைந்த இயக்கங்கள் உண்டு. ஆனால் போட்டிப் போட்டுக் கொண்டு பகைமையுடன்தான் வாழ்கின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மியனமார்  ஆகியவை ஒருமித்த நாடுகளாக விளங்கலாம். ஆனால் ஒன்றிணையும் வாய்ப்புகளை ஏற்படுத்தாது, இராணுவத்திற்கு நிறைய செலவு செய்து, வளர்ச்சிப்படியில் செல்ல முடியாமல் நிற்கின்றன. மறைந்தத் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், ‘குடும்பங்களைப் போல்தான் அவர்களின் நாடும் அமையும்’ என்கிறார். ஒற்றுமையின் ஆரம்பம் குடும்பங்களே. கணவன்‡ மனைவி - பிள்ளைகள் ஒருவரையயாருவர் புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும். குடும்பங்களில் நாம் பெறுகின்ற ஒற்றுமைதான் நாம் செல்லும் இடங்களிலெல்லாம் வெளிப்படும்

இந்தியா பலமொழிகளையும், வேறுபட்ட கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய நாடு. ஒன்றாக நிற்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆனால் ஒற்றுமை உணர்வை சிதைக்கும் செயல்பாடுகள் நாட்டில் இடம் பெற ஆரம்பித்திருக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமை, வேற்றுமையில் நிற்கும் ஒற்றுமை. தனித்தன்மைகளுடன் இணையும் ஒற்றுமை. தனித்தன்மைகளை சிதைத்து, சுதந்திரத்தை புதைத்து ஒற்றுமையை காணும் தவறான சித்தாந்தத்தை

  ‘மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது’ என்ற வேண்டாத சட்டங்களை கொண்டுவந்து தங்களின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த சூழ்ச்சியுடன் செயல்படுகிறது. இதனால் கேரளாவில் திராவிடம் என்றெல்லாம் பிரித்து பேச வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. மதவாத கொள்கைக் கொண்டவரை இந்தியாவின் ஜனாதிபதியாக நிறுத்தி, நடுநிலையான நபரை நமதுநாட்டின்  முதல் மனிதராக பார்க்கமுடியாத அளவில் செய்து விட்டது மத்திய அரசு.

வேற்றுமையில் ஒற்றுமையில்தான் அழகே அமர்ந்துள்ளது என்கிறார், பெலிக்ஸ் மென்டை சோன். நமது கிராமங்களில் விழாக்கள் வழக்கமாக கலை கட்டுகின்றன. விழாக்கள் ஒற்றுமையின் மேலோட்டமான வெளிப்பாடு. நம் நாட்டின் பெரிய சாபக் கேடாக விளங்கும் ஊழலை, மக்களின் ஒற்றுமையினால்தான் வீழ்த்த முடியும். 

ஒற்றுமையை விளக்கும் ஒரு சிறு கவிதை  
மனிதா நீ என்னதான்
நாடு வீடு என்று பிரித்தாலும்
நம்மை தாங்கி நிற்பது பூமித்தாயே

தப்புத்தாளங்கள், சிறுகதை : கேத்தரின் ஆசா,திருச்சி

தப்புத்தாளங்கள்-  சிறுகதை :
கேத்தரின் ஆசா,திருச்சி

ஞாயிற்றுக்கிழமை பூசை, கோவில்  நிரம்பி வழிந்தது. பைபிள் ரீடிங் முடிந்து சாமியார் பிரசங்கத்தை ஆரம்பித்திருந்தார். அன்றைய பைபிள் வாசகத்தின் கருத்தைத்தான் பிரசங்கத்தில் விபரமாக சொல்வார்கள். ஆனால், சாமியார் முற்போக்குவாதி. தடம்புரண்டு சம்மந்தம் இல்லாத கருத்துக்களை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். இடையிடையே  அரசியல் தாக்கம் வேறு. கிறிஸ்துவர்கள் அமைதியானவர்கள். அகிம்சைவாதிகள், கொடூரம் நிகழ்ந்தாலும் மெளனமாக மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள். கிறிஸ்துவ நெறிமுறை தவறாதவர்கள். ‘இந்த சாமியார் ஏன் சமூக எழுச்சி, அரசியல் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார்’ என்று விசுவாசிகள் அவரை வினோதமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

பழமைவாதி  உத்திரியம் தாத்தா பிரசங்கத்தி லிருந்து லேசான உறக்கத்திற்கு சென்று விட்டார். ஸ்டெல்லா அக்கா எத்தனை முறைதான் தன் முக்காட்டை சரி செய்வதுபோல் புதிதாக அணிந்திருக்கும் மி´ன் கட்டிங் வளையல்களை எல்லோரும் பார்க்கும்படி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார். கையே வலித்துவிட்டது. பிரசங்கம் ஓய்ந்தபாடில்லை.

அன்னமேரி பாட்டிக்கு உட்கார சேர் கிடைக்காத தால் கீழே சம்மணம் போட்டு உட்கார முடியாமல்  சேரில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை மனதில் திட்டிக்கொண்டே அமர்ந்திருந்தார். இளம் பெண்கள் கீழே உட்காரக் கூடாதா? தங்கள் சுடிதார் அழுக்காகிவிடக்கூடாது என்று கவனமாக இருந்தார்கள்.

அழகான கலகங்தா அணிந்து கொண்டு வந்திருந்த  யஹலன் அடிக்கடி தன் கவனத்தை இறக்கையில்  அமர்ந்திருக்கும் ஸ்டீபன் தன்னை பார்க்கிறானா என்ற ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பூசை நேரத்திலும் ஜெபமாலை உருட்டி கொண்டிருக்கும் சகாயமேரி அத்தை,  இன்றைக்கு சொல்லும் தேவ ரகசியம் சரிதானா? என்று நினைவுபடுத்தி பார்த்துக்கொண்டே ஜெபமாலை உருட்டுவதில் கவனமாக இருந்தார். இவர் பூசையிலும் கவனம் செலுத்தவில்லை. தன்னை மற்றவர்கள்
பக்திவான் என்று நினைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். 

சினிமா ஹீரோ போல் உடை அணிந்து கொண்டு வெடுக்கான் வெடுக்கானாக எலும்புகூடு போல் (நினைப்பு தனக்கு பிடித்த ஹீரோ போல் இருப்பதாக நினைப்பு) பியானோ வாசித்துக் கொண்டிருக்கும் பெலிக்சின் கவனம் சர்ச்சில் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும் ஜுலி  மேலேயே இருந்தது. தன்னை ஒரு பெரிய இசைக்கலைஞனாக கற்பனை செய்துக் கொண்டு  சாமியார் இன்னும் அதிக நேரம் பிரசங்கம் செய்வதால்தான் அதிக நேரம் ஜுலியை பார்க்கலாம் என்று   பிரசங்கத்தை சூப்பர் என்ற மனோபாவத்தை  முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். 

  தான் இரண்டு நாளாக தயாரித்த இலக்கிய, அரசியல், சமூக சம்மந்தமான பிரசங்கத்தை மக்கள் ஏன் ஆவலோடு கேட்கவில்லை?  முடித்துவிடலாமா? அல்லது தயாரித்த முழு உரையையும் படித்து முடிப்போமா என்ற எண்ண ஓட்டத்தில்  நின்றிருந்தார்  சாமியார்.   
  திடீரென்று ஒரு பெண்மனி எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக சர்ச்சின் உள்ளே நடுபாதையில் விடுவிடுவென்று நடந்து பீடத்துக்கு எதிரே முழந்தாளிட்டு  இரண்டு கைகளையும் விரித்து உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள். 

ஜெபமாலை ஸ்பெஸலிஸ்ட் சகாயமேரி எழுந்து, அந்தப்பெண் அருகே சென்று“ஏப்புள்ள இப்படி நைட்டி போட்டுக்கிட்டு சர்ச்சுக்கு வரக்கூடாது தெரியுமா,  இப்படி பீடத்துக்கிட்ட கத்தி அழுவவும் கூடாது, எந்திருச்சி வெளியே  போ”  என்று  அதட்ட அந்தப் பெண் எதையும் சட்டை செய்யாமல் சகாயமேரியை பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு நல்லா சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டது.

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. பெண்களில் சிலர் நைட்டுக்கு போடும் நைட்டியை போட்டுக் கொண்டு தெருவில் அலைகிறார்களே... நைட்டிக்கு  ம்ழிதீ ழிஐd ஹிஷ்ஆஜுமி  என்று பெயர் வைக்கலாமா என்ற எண்ணம் உண்டு. 

சம்மணம் போட்டு அமர்ந்த பெண் அழகாக இருந்தார். வணப்பு மிகுந்த  உடல்வாகு. சரியா படிக்காமல் வீட்டிற்கும் அடங்காமல் திரிந்தவராக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
இளவட்டங்களின் கழுகு பார்வை அவளை மொய்த்துக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அந்த பெண்ணை அளவெடுத்து  விட்டு நல்லவன் போல் பெலிக்ஸ் ஜுலியைப் பார்க்க, அவள் அவனை முறைக்க இருவருக்கும் இடையே ஒரு சிறு  ஊடல்  ஓடிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிப் போல தோற்றம் உள்ள அந்தப் பெண்ணைப் பார்த்து, இதற்கு யார் காரணமாக இருப்பார்? இவளுக்கு கல்யாணம் நடந்துவிட்டதா? நடக்கிலியா? தவறிப்போனவளா?  யாருக்கும் அதுப் பற்றி அவளை தெரியவில்லை.

சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த  பெண் மீண்டும் எழுந்து நின்று கத்த ஆரம்பித்தது, அவளின் சிரிப்பும், அழுகையும் வித்தியாசமாக இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அவளது நடவடிக்கை இருந்தது. 
        கடைசி பெஞச் ஆரோக்கியம் அண்ணன், எங்கிருந்தோ ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வந்து,
            “இந்தாம்மா ஏந்திரி... கண்டது கடையதும் வீணாப்போனதும் கோவிலுக்குள் நுழைஞ்சி அழிச்சாட்டியம் பண்ணுது, ஓடு... வெளியே போ”... என்று சொல்லிக் கொண்டே குச்சியால் நெட்டித்தள்ளினார்.
குச்சியால் நெட்டி தள்ளிவிட்டதும் அவள் கெட்ட வார்த்தைகளால் வசை பாட ஆரம்பித்தாள்.

“ஒழுக்கம் கெட்டவ வார்த்தையை பார்... வெளியே ஓடு நாயே”  என்று ஆரோக்கியம் அண்ணன் அவளை விரட்டிக் கொண்டு ஓட பூசை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் அவர் அவர் பார்வையில் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.  எல்லோருடைய முடிவும் அவள் கெட்டுப்போனவள் என்பது தான். மனநிலை பாதிக்கப்பட்டவள், கெட்டுப்போனவளா? எதையும் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் தீர்ப்பளிப்பதுக்கு இவர்கள் யார்? இப்போது பைபிள் சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. பாவம் செய்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று சொல்லும்போது இயேசு கிறிஸ்துவின் சிந்தçனையும் தீர்ப்பும் எப்படி இருந்தது என்று நினைத்தேன். இந்த தீர்ப்புத்தான் இவர்களுக்கும் பொருந்தும் என்பது எனது முடிவு.

மனநிலை பாதிக்கப்பட்டவள் ஏதோ ஒரு நிலையில் தெளிவாக இருக்கிறார்களே அது எப்படி? மனநல  மருத்துவரைத்தான் கேட்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் பேசுவது என்பது ஒரு மனிதனின் ஒழுக்கம் தொடர்பானதா? அது எப்படி ஒழுக்கத்துக்கான அளவுகோளாக மாறும்? அப்படி பேசாதவர்கள் உத்தமர்களா? சக மனிதரை மனத்தளவில் உணர்வுகளில் நோகடிக்கிற, அவரை சரிநிகராக நடத்தாத எப்படிப்பட்ட  வார்த்தையும் கெட்ட வார்த்தைதான்.

எந்த சொல் நம்மை காயப்படுத்துகிறதோ, நம்மை இழிவுபடுத்துகிறதோ,  கோப்படுத்துகிறதோ அந்த சொல்லை மற்றவர்கள்  மீது நாம் பிரயோகிக்கும் முன் யோசிக்கிறோமா? தயங்குகிறோமா? அந்த சூழ்நிலையில் நாம்  எல்லோரும் தவறு செய்கிறோம் என்பதுதானே பொருள்.

குச்சியால் நெட்டித் தள்ளியதால் கீழே விழுந்த அந்தப் பெண் ரோட்டிலே பிரசவித்துவிட்டாள். சுற்றி நின்று கூட்டம் நல்ல கிறிஸ்துவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சக மனிதர்களின் பச்சாதாபம் அவள்மேல் விழவில்லையா?. தாயின் பெருமையை வாய்கிழிய பேசும் நாம், வாட்ஸ் அப்பில் நூறு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நாம், பேஸ்புக்கில் லைக்குக்காக தாயின் புகழ்பாடும் நாம், இந்த தாயை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் போகிறோம். அந்த குழந்தை இந்த  தாயை போற்றுமா? தூற்றுமா?.
தாய்மை புனிதமானது... அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்? என்று தெரியாது. அவளின் உணர்வில்லாமல் பெற்ற இந்த குழந்தை என்ன பாவம் செய்தது? சமுதாயத்தில் எதிர் கொள்ளப்போகும் பிரச்சினை எவ்வளவோ? அவளது அழகுதான் அதற்கு காரணம் என்றால் அவள் குற்றமற்றவர், இந்த சமுதாயம் தான் மாற வேண்டும்.

இரட்சணிய யாத்திரிகம் - திரு. குமார், ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பக்தி நெறியின் பங்கு தமிழ், உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் பத்தி நெறியின் மொழி எனப் பாராட்டப்படும் சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றமையால் அவை பத்தி இலக்கியங்களாகவேயுள்ளன. சமண, பெளத்த, சைவ, வைணவ சமயங்கள் தமது சமயக் கோட்பாடுகளைப் பரப்பத் தமிழ் மொழியைத் தக்க கருவியாகப் பயன்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்த மாட்டிலும் காலத்தால் பிற்பட்டுப் பரவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களும் முற்குறிப்பிடப்பட்ட சமயங்களைப் பின்பற்றித் தமது இலக்கியங்களைத் தமிழில் இயற்றின. இயற்றமிழைக் காட்டிலும், இசைத் தமிழ் பக்தியுணர்வை ஊட்டப் பெரிதும் துணை நல்கும் என்பதையுணர்ந்த சைவ, வைணவ பெரியார்கள் தமிழிசை வழியாகப் பாடுதற்கரிய பக்திப் பனுவல்களை இயற்றி நாளும் இன்னிசையால் தம் சமயம் பரப்பினர். கோயில் வழிபாடுகளில் இசைக்கு முதலிடம் கொடுத்துத் தம் இறைவனைப் பாடிப் பரவினர். பாடுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாரது மனங்களை ஈர்க்கும் வல்லமை இசைக்குண்டு. சைவ,வைணவப் புலவர்கள் பக்தியுணர்வோடு இசைத்திடுதற்கேற்ற தமிழ் பாவைகளைத் தம் நூலுள் கையாண்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாகவே தனிநாயக அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி எனப் பாராட்டினார். தமிழில் பக்திப் பனுவல்கள் பல்லவர் காலத்தில், நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் திருப்பாடல்களில் முழுமை பெற்றன. தமிழ் மொழியின் தனித்தன்மையான பக்தி நெறி உணர்வு எச்.ஏ. கிருட்டிணனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அனைத்திறகும் மேலாக இவரை ஆட்கொண்ட கிறிஸ்து பெருமானின் அன்பு இவரை பக்தி நெறியில் திளைத்திடச் செய்தது. பக்தி என்பது புறதோற்றமன்று. உள்ளத்தின் ஆழத்தில் இடையறாது பெருக்கெடுத்தோடுதம் ஆன்ம உணர்வாகும். தான் சுவைத்த அன்பின் அமுதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற தாகம், ஆத்தும வேட்கை இவரைப் பக்தி நெறிக் கவிஞராக ஒளிவிடச் செய்தது. மனமாற்றத்தால் ஏற்பட்ட பக்தியுணர்வின் வேகம் இவரது பாடல்களில் நிறைந்து ததும்பி வழிந்தோடிற்று. தமக்குமுன் வாழ்ந்த சமய அடியார்கள் போலவே இறைவனை தந்தையாய், தாயாய், அரசனாய் நண்பனாய் பாவித்து அவ்வுணர்வினால் நிரப்பப்பட்டு பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி பக்தி நெறி கவிஞரானார். இரட்சணியயாத்திரிக பக்திநெறி தனி மனிதன் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும், எனத் தனி மனித நிலையில் வைத்துச் சொல்படினும், உலக மக்களின் பிரதிநிதியாகவே யாத்திரிகன் காட்டப்படுகிறான். அதன்காரணமாகத்தான் நூலின் தொடக்கம் “ உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” என்று அமைத்துள்ளது. அத்துடன் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவைமிசையேறிய மெஞ்ஞான சூரியனாகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டைக் கூறத் தொடங்கும் பொழுது, “உலக மகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற அலகையுலந் திகிலேற வகண்டபரி பூரணனார் அருள்மெய்வாக்கு விலகிலதாய் நிறைவேறத் துதியேற நா வுருவாய் விளங்கி அன்பால் சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியடியைச் சிந்தை செய்வோம்” (இரட்சணிய சரிதப் படலம் ‡2) எனக் குறித்துள்ளது இரட்சணிய யாத்திரிக பக்தி நெறியில் இறைவன் மக்களிடத்துக்காட்டும் அன்பு, மக்கள் இறைவனிடத்து செலுத்தும் அன்பு என்ற இரு நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இறைவனது தியானமும், மன்றாட்டும் இடம் பெறுவதோடு மக்களது ஆன்மிக வேட்கையும், தவிப்பும், இரங்கலும், புலம்பலும் இடம் பெற்றுள்ளன.

இரட்சணிய யாத்திரிகம்
- திரு. குமார், ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 

பக்தி நெறியின் பங்கு


தமிழ், உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் பத்தி நெறியின் மொழி எனப் பாராட்டப்படும் சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றமையால் அவை பத்தி இலக்கியங்களாகவேயுள்ளன. சமண, பெளத்த, சைவ, வைணவ சமயங்கள் தமது சமயக் கோட்பாடுகளைப் பரப்பத் தமிழ் மொழியைத் தக்க கருவியாகப் பயன்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்த மாட்டிலும் காலத்தால் பிற்பட்டுப் பரவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களும் முற்குறிப்பிடப்பட்ட சமயங்களைப் பின்பற்றித் தமது இலக்கியங்களைத் தமிழில் இயற்றின. இயற்றமிழைக் காட்டிலும், இசைத் தமிழ் பக்தியுணர்வை ஊட்டப் பெரிதும் துணை நல்கும் என்பதையுணர்ந்த சைவ, வைணவ பெரியார்கள் தமிழிசை வழியாகப் பாடுதற்கரிய பக்திப் பனுவல்களை இயற்றி நாளும் இன்னிசையால் தம் சமயம் பரப்பினர். கோயில் வழிபாடுகளில் இசைக்கு முதலிடம் கொடுத்துத் தம் இறைவனைப் பாடிப் பரவினர். பாடுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாரது மனங்களை ஈர்க்கும் வல்லமை இசைக்குண்டு. சைவ,வைணவப்   புலவர்கள் பக்தியுணர்வோடு இசைத்திடுதற்கேற்ற தமிழ்  பாவைகளைத் தம் நூலுள் கையாண்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாகவே தனிநாயக அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி எனப் பாராட்டினார். தமிழில் பக்திப் பனுவல்கள் பல்லவர் காலத்தில்,  நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் திருப்பாடல்களில் முழுமை பெற்றன.
தமிழ் மொழியின் தனித்தன்மையான பக்தி நெறி உணர்வு எச்.ஏ. கிருட்டிணனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அனைத்திறகும் மேலாக இவரை ஆட்கொண்ட கிறிஸ்து பெருமானின் அன்பு இவரை பக்தி நெறியில் திளைத்திடச் செய்தது. பக்தி என்பது புறதோற்றமன்று. உள்ளத்தின் ஆழத்தில் இடையறாது பெருக்கெடுத்தோடுதம் ஆன்ம உணர்வாகும். தான் சுவைத்த அன்பின் அமுதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற தாகம், ஆத்தும வேட்கை இவரைப் பக்தி நெறிக் கவிஞராக ஒளிவிடச் செய்தது. மனமாற்றத்தால் ஏற்பட்ட பக்தியுணர்வின் வேகம் இவரது பாடல்களில் நிறைந்து ததும்பி வழிந்தோடிற்று. தமக்குமுன் வாழ்ந்த சமய அடியார்கள் போலவே இறைவனை தந்தையாய், தாயாய், அரசனாய் நண்பனாய் பாவித்து அவ்வுணர்வினால் நிரப்பப்பட்டு பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி பக்தி நெறி  கவிஞரானார்.

இரட்சணியயாத்திரிக பக்திநெறி

தனி மனிதன்  மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும், எனத் தனி மனித நிலையில் வைத்துச் சொல்படினும், உலக மக்களின் பிரதிநிதியாகவே யாத்திரிகன் காட்டப்படுகிறான். அதன்காரணமாகத்தான் நூலின் தொடக்கம் “ உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்”  என்று அமைத்துள்ளது. அத்துடன் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவைமிசையேறிய மெஞ்ஞான சூரியனாகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டைக் கூறத் தொடங்கும் பொழுது,  

“உலக மகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற
அலகையுலந் திகிலேற வகண்டபரி பூரணனார் அருள்மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நா வுருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியடியைச் சிந்தை செய்வோம்”

(இரட்சணிய சரிதப் படலம் -2) எனக் குறித்துள்ளது

இரட்சணிய யாத்திரிக பக்தி நெறியில் இறைவன் மக்களிடத்துக்காட்டும் அன்பு, மக்கள் இறைவனிடத்து செலுத்தும் அன்பு என்ற இரு நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இறைவனது தியானமும், மன்றாட்டும் இடம் பெறுவதோடு மக்களது ஆன்மிக வேட்கையும், தவிப்பும், இரங்கலும், புலம்பலும் இடம் பெற்றுள்ளன.

இதுக்கு என்ன சொல்றது? அருட்பணி. ச.இ, அருள்.சாமி

இதுக்கு என்ன சொல்றது?

 அருட்பணி. ச.இ,  அருள்.சாமி

கடன் தொல்லைகளுக்கு
நாம்தான் உடனாளிகள்.
‘ஏன் வீணாக கடன் வாங்க வேண்டும்?
விரலுக்கு ஏத்த வீக்கம் தானே?
விரலுக்கு ஏற்ற செலவு செய்தால்
கடன் வலையில் மாட்டிக் கொள்ள வழியில்லையே?’
இதெல்லாம் அறிவு பூர்வமான அறிவுரைகள், விளக்கங்கள்,  ஆனால்
நடைமுறையில் மனிதர் சந்திப்பது  என்ன?
கடன் குழியில் விழாமல் இருக்க முடியாது
என்பது தான் எதார்த்தம் ஆகிறது.
ஒரு விதவைப் பெண். ஒரே பையன்
பையனுக்கு கலியாணமாகிவிட்டது.
பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள்
விதவைப்பெண் ஒரு இலட்சம் ரூபாய்
கடனை தலையில் சுமக்கிறார்கள்.
அன்றாட கூலி, வேலையுமில்லை
கணவன் குடிகாரன், குடித்து விட்டு எல்லாவற்றையும்
அழித்துவிட்டு இறந்தான்.
மகனும் அப்பனுக்கு தப்பாமல் நடக்கிறான்.
குடி, அவன் குடியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
ஐந்து பைசா வட்டி
நூற்றுக்கு மாதத்திற்கு ஐந்து ரூபாய்.
அதாவது 60 சதவீகிதம்
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதத்திற்கு வட்டி ரூ 6000/‡
வங்கியில் அதிகம் போனால் 20 சதவிகிதம்
கூலிக்கு போய் வயிற்றிற்கு சாப்பிடவே போராட வேண்டியிருக்கிறது.
அது இருக்கட்டும், எதற்காக கடன் வாங்கினார்கள்?
மகனின் கலியாணத்திற்காகத்தான்,
அதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்.
 எப்படி செலவு செய்யாமல் இருக்க முடியும்?
 சமுதாயம் விட்டு விடுமா?
 சமுதாயத்தின் வன்முறை தானே இது.
 உலகத்தோடு ஒத்து வாழ வேண்டுமே!
 கடன் வாங்கி கல்யாணம், வளைகாப்பு என்று
 விதவையான பெண்
 பையனுக்குக் குறையில்லாமல் செய்தாள்.
 வாழ்க்கையில் பகட்டுப் போர்வை போர்த்தியாகிவிட்டது.
 ஆனால் போர்வைக்குக்  கீழ்
 கடன் என்ற மூட்டைபூச்சிகள் கடித்துக் கொண்டுள்ளன.
 வாழ்வதா?, சாவதா? தெரியவில்லை
 என்று கண்ணீர் விடுகிறாள்.
 கடன்காரன் ஒவ்வொருநாளும் பிச்செடுக்கிறான்.
 தாங்க முடியவில்லை என்ன செய்வது?
இதுக்கு என்ன சொல்றது?
  

உத்தாணியில் ஒரு கல்வி இதயம்

நேர் காணல்.
உத்தாணியில்  ஒரு கல்வி இதயம்

அருள்பணி. ஏ.ஆர். சின்னப்பன் 72  அகவையில் நிற்பவர்கள். குடந்தை மறைமாவட்டத்தில், ஜெயங்கொண்டம்,  பாபநாசம், மாத்தூர், கும்பகோணம் ஆகியப் பங்குகளில் சிறப்பாக பணியாற்றியவர். குடந்தை மறைமாவட்ட முதன்மை குருவாகவும் ஏழு  ஆண்டுகள் பணி செய்தவர். இப்போது தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி என்ற உட்கிராமத்தில் அனாதை பெண் பிள்ளைகளுக்கு இலவசமாக தங்குமிடத்தை தந்து, கல்வி கூடங்களுக்கு சென்று கல்விகற்க ஏற்பாடு செய்திருக்கிறார். கல்லூரி படிப்பு (6 பேர்) மருத்துவ செவிலியர் படிப்பு (4) என்று இங்கிருந்து படித்து  வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் பலர் அமர்ந்திருக்கின்றனர். ஜாதி, மதம் பாராது, தந்தை/ தாயை இழந்த  பெண் பிள்ளைகளுக்கு வாழ்வு தந்திருக்கிறார். இதுவரை மொத்தம் 146 பெண்கள் இந்நிலையத்திலிருந்து வாழ்வு பெற்றிருக்கிறார்கள். அதோடு சிறிய மருத்துவமனை, முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இச்சாதனை பல எதிர்ப்புகள், சோதனைகள் நடுவில் தான்  நடைமுறையாயிருக்கிறது.

இத்தகைய தெய்வீக எண்ணம் எப்படி உண்டானது என்று கேட்டபோது, மாத்தூர் பங்கு பணியின்போது தனிப்பட்ட ஓர் பணியினை உபயோகமான முறையில் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஒரு செப நேரத்தில் உதித்தது. அதை செயலாக்கினேன். உதவியாளர்களின்  உதவியோடு 13 ஏக்கர் நிலம் வாங்கி இந்த கல்விநிலையத்தை துவங்கியிருக்கிறார்.

ஜெயங்கொண்டம் பங்கில் இருந்தபோது நரிகுறவர் குழந்தைகளுக்கு கல்விகற்கும் நிலையம் உருவாக்கி, பல குழந்தைகளின் கல்விகண்களைத் திறந்தார். தற்போது உடல்நிலை குன்றிய நிலையிலும், தற்போதைய நிலையும் இறைவனின் கொடை என்று நம்பிக்கையோடு நேர்மறையாக கூறுகிறார்.

           தற்போதைய கிறிஸ்தவர்களின் மனநிலைகள் மாற வேண்டும். அருட்பணியாளர்களை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை தன் அனுபவத்தின் வெளிபாடாக கூறினார். நம் நாட்டு ஊழல் நிலைகளை எளிதாக ஒழிக்க முடியாது. மக்களின் மனம் மாறினால் தான் ஊழல் ஒழியும் என்ற கருத்தை முன்வைத்தார். சமூக வலைதளங்களால் நன்மையும் உண்டு, தீமைகளும் உண்டு. கவனமாக நாம் அலைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

அமெரிக்கக் கடிதம், சவரி-கெரி

அமெரிக்கக் கடிதம்
சவரி-கெரி

இங்கு மாணவர்களை பாடதிட்டங்களில் (Syllabus) இல்லாத புத்தகங்களையும் படிக்கத் துVண்டுகிறார்கள். முக்கியமாக  தொடக்கப் பள்ளிகளில் பாடத்தைத் தவிர குழந்தைகளுக்கேற்ற கதை புத்தகங்கள், அஷீவியல் புத்தகங்கள், வரலாறு புத்தகங்களை படிக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். எல்லா பள்ளிகளிலும் நுVலகங்கள் கண்டிப்பாக இருக்கும். அந்த நுVலகங்கள் அரிய புத்தகங்களை உள்ளடக்கியதோடு வலைத்தலம் பொருத்தப்பட்ட கணனிகளையும் கொண்டுள்ளன. இதனால் இங்குள்ள மாணவர்கள் நல்ல பொது அஷவோடு வளர்கிறார்கள். 
மேலும் மாணவர்களை சுயமாக சிந்திக்க வைத்து, படைப்பாற்றல் (Creativity)  கொண்ட  மாணவர்களாக உருவாக்குகிறார்கள். நிறைய அஷீவியல் செயல்முறைகளை செய்து கற்கும் கல்வி, எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுகிறது என்பதை உணர்த்துகிறார்கள். இங்குள்ள பள்ளி நிறுவனங்களில் பள்ளி முடிந்தவுடன் இயங்கும் நிறைய Club - கள் இருக்கின்றன. உதாரணமாக  (Science Olympiad) என்ற எல்லா பள்ளிகளிலும் புகழ் பெற்றது. இது பெற்றோர்கள் உதவியுடன் தனனார்வத் தொண்டர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. பள்ளிகளுக்கிடையே போட்டிகள் வைக்கிறார்கள். சமுதாயத்தில் உள்ள ஒரு பிரச்சனையை முன்வைத்து அதற்கு அஷீவியல் மூலமாக ஒரு கருவியை உருவாக்கலாம், அல்லது உங்கள் யோசனையை எழுத்து வடிவத்தில் சமர்பிக்கலாம். சிறந்த படைப்புக்கு பரிசளித்து ஊக்கவிக்கிறார்கள். 

இங்குள்ள கல்லுரிகள், மாணவர்கள் படிக்கும்போதே தொழில் தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கல்லுரிகளில் மாணவர்கள் ஆராய்ச்சி செய்வற்கு வசதியாக தனி அறைகளையும், வரை பலகைகளையும், கணனி வசதிகளையும் செய்துக் கொடுக்கிறார்கள். மேலும் கல்லுரியில் முன்னாள் படித்து, இப்போது தொழிலதிபர்களாக உள்ளவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கு பணவசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதனால் நிறைய மாணவர்கள் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். 

நாமும் நல் கல்வியை மாணவர்களுக்களித்து இவ்வுலகை உயர்த்துவோம்.

இயற்கை மூலிகை மருத்துவம் . இராசரெத்தினம், ஆடுதுறை, மஞ்சள் காமாலை

இயற்கை மூலிகை மருத்துவம்
. இராசரெத்தினம், ஆடுதுறை
மஞ்சள் காமாலை 

பொதுவாக இந்நோய் ஏற்பட கல்லீரல், மண்ணீரல் குறைபாடே காரணமாகின்றது. உடலில் அதிக உஷ்ணம் உண்டாகி, உஷ்ணத்தை தாக்குபிடிக்க முடியாத நிலையில் கல்லீரல், மண்ணீரல் வெந்து விரிவடைந்து மந்தம் அடையும் நிலையே மஞ்சள் காமாலை.

இந்நோய் உள்ளவர்களின் சிறுநீர், கண், நாக்கு, உடல், நகம் இவைகள் யாவும் மஞ்சள் நிறத்தைப் பெற்றிருக்கும்.
உணவு மாவு பண்டங்களாய் இருப்போர்க்கு குடலின் உள் சுவற்றில் கழிவுகள் தேங்கி, கார்பனாகி அதன் காரணமாய் உடலின் அதிதீவிர உஷ்ணம் உண்டாகிறது. உஷ்ணத்தின் வீரியத்தால் செல்கள் அனைத்தும் வெந்து விரிவடைந்து  அந்த நிலையே மஞ்சள் காமாலை.

அதிக  உஷ்ணத்தால் பித்தம் மேலோங்கி  இரத்தத்தில் கலந்து உடல் பகுதிகளில் சதை, தோல், கண், நாக்கு இவைகளில் நிலை கொண்டு நோய் வீரியம் அடைகின்றது.

வாயில் நீர்  ஊர்தல், வாய் குமட்டல், உணவில் வெறுப்பு, உட்கொண்ட உணவு செரியாமை ஆகியவைகள் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

இந்நோய் வருவதற்கு முன்பாகவே கண்ணில் வெள்ளை   விழியும், முகம், கழுத்து, உடல் முதலியன மஞ்சளாய் இருக்கும். 
நோய் அதிகமாகும் போது நாக்கு, வாயின் மேல்பாகம், உதடு, சிறுநீர், நகம் இவைகள் மஞ்சள் நிறமாய் மாறும்.                                                                                                                                                                                                                                 
நோய் மேலும் அதிகப்படுமாயின் மூக்கு, பற்களின் ஈறு, வாய் இவைகளிலிருந்து இரத்தம் கசியும். சிறுநீர் மஞ்சள் நிறமாய் இருக்கும். வியர்வை மஞ்சள் நிறமாய் இருக்கும். 
இந்நோய் தொடக்கத்தில் சரீரத்தில்  வறட்சி ஏற்பட்டு நமச்சல் உண்டாகி தோல் பகுதிகள் சிறிது தடிப்புற்று காணப்படும். நாடி நடைகள் தளர்ந்து தூக்கம் இருக்காது.
          
இந்நோயை குணமாக்கிக் கொள்ள இயற்கையான எளிய  வழி:

                இந்நோய் கண்டவர்களுக்கு குடல் சுத்தம் செய்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பு இருந்து  (குடிநீர்  மட்டும் அருந்தி இருப்பது) பத்து நாட்கள் பழச்சாறுகள் மட்டும் அருந்தி  இருந்து 
(சாத்துக்குடி, திராட்சை, மாதுளை ஏதாவது ஒரு பழத்தை தோலுடன் 75 கிராம் அளவு அரைத்து 750 மி.லி குடிநீர் கலந்து வடிகட்டி 250 கிராம் தேன் சேர்த்து சிறுக சிறுக அருந்திக் கொண்டிருப்பது) பத்து நாட்கள் சமைக்காத பச்சைக் காய்கள், சாறு நிறைந்த பழங்கள் உண்டு  இருந்தால் (சமையல் உணவுகளை தவிர்த்து) குணமாகும். இளநீரில் தேன் கலந்தும் கொடுக்கலாம்.

இதுபோல் இருக்கும் காலங்களில் செய்ய வேண்டிய பயிற்சிகள்:

1. நாள்தோறும் காலை, மாலை ஒருமணி நேரம் முதுகு தண்டு தொட்டிக் குளியல் செய்யவும்.
2. நாள்தோறும் முற்பகல் 11 மணி அளவில் கீழ்க்கண்ட குளியல் பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை ஒருமணி நேரம் செய்து வரவும். புற்றுமண் குளியல், சந்தன மண் குளியல், மலர் குளியல், இளநீர் குளியல்.

 புற்றுமண் தயாரிக்கும் முறை:

கரையான் புற்று மண்ணைக் கொண்டு வந்து, அதனை இடித்து சலித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது.

 சந்தன மண் தயாரிக்கும் முறை:

புற்றுமண், சுங்காமண், உவர்மண் மூன்றையும் சமமாக எடுத்து இடித்து சலித்து கல், குப்பை நீக்கி பத்து சதவிகிதம் சந்தனத் தூள் கலந்தால் சந்தனமண் தயார்.

மலர் குளியல்:

ரோஸ் கலரில் உள்ள ரோஜாப்பூ, தாழம்பூ, மகிழம்பூ, ஆவாரம் பூ சம அளவாக எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிப்பது.

இளநீர் குளியல்:

இளநீர் தேவையான அளவு எடுத்து 25 கிராம் சந்தனத் தூள் கலந்து உடல் முழுவதும் பூசிக் குளிப்பது.
 3.நாள்தோறும் காலை, மாலை எளிய மூச்சுப் பயிற்சி அல்லது பிராணயாமம் செய்து வரவும்.
 4. குழப்பமான எண்ணங்களைத் தவிர்த்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்.

மூலிகைகளைப் பயன்படுத்தும் முறை:
* சங்கன் வேர்பட்டையை எடுத்து வந்து இஞ்சிச் சாற்றுடன் அரைத்து சாறு எடுத்து நான்கு பங்கு குடிநீர் கலந்து  ஒரு பங்கு  தேன் சேர்த்து ( 50மி.லி சங்கன் வேர் + இஞ்சிச் சாறுக்கு 200 மி.லி குடிநீர் 50 மி.லி தேன் சேர்க்க) மூன்று மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு 4 வேளையாக மூன்று நாளைக்கு கொடுக்க குணமாகும்.

* குடல் சுத்தம் செய்த பின் பப்பாளிபழம் மட்டும் உணவாக உண்டு வர குணமாகும். 

* கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, தும்பை இலை, வில்வ இலை, சங்கன் இலை, ஏதாவது ஒரு மூலிகையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சூடு ஏறாமல் அரைத்து 500 மி.லி குடிநீரில் கலந்து வடிக்கட்டி, அதிகாலை குடல் சுத்தம் செய்த பின் அருந்தி வர குணமாகும்.

* கீழாநெல்லியையும்மஞ்சள் கரிசலாங்
கண்ணியையும் சம அளவாக எடுத்து இடித்து சாறு எடுத்து தேவையான தேன் கலந்து காலை, மாலை 100 மி.லி அளவு அருந்தி வர குணமாகும்.

*மஞ்சள் கரிசலாங்கண்ணி தூள், மருதம் பட்டைத்தூள் சம அளவாக சேர்த்து இரண்டு கிராம் அளவு தேனில்  குழைத்து நக்கி சாப்பிட்டு வர குணமாகும்.

*சோற்றுக் கற்றாழை மேல் பகுதியில் அமைந்திருக்கும் தோல், முள் நீக்கி, உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து, நன்கு கழுவி கசப்பு நீக்கி அரைத்து, தண்ணீரில் பெருக்கி தேவையான அளவு தேன் சேர்த்து, கவனமாக (தொண்டையில் மூக்குத்  துவராத்தில் அடைத்துக் கொள்ளும்) அருந்தி வர குணமாகும்.

*நன்னாரி வேர்த்தூள் ஒரு சிட்டிகை தேனில் குழைத்து நக்கி சாப்பிட்டு வர குணமாகும். அதிகம் உண்ணக் கூடாது.

*மஞ்சள் கரிசலாங்கண்ணி 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம், பொன்னாங்கண்ணி 50 கிராம், நெல்லிக்காய் 100 கிராம், நல்லெண்ணெய் 750 மி.லி, ஆமணக்கு எண்ணெய் 250 மி.லி அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்கு சூரிய ஒளியில் வைத்திருந்து, வடிகட்டி வாரம் ஒருமுறை தேய்த்து குளித்து வர குணாகும்.

*மருதாணியை அரைத்து கை, கால் நகக் கண்களிலும், உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் பற்று போட்டு வர,    
* எலும்பு நரம்புகள் வலிமை பெறும்.
* நகக் கண்களில் தோன்றும் வெடிப்பு குணமாகும்.
* சொத்தை நகம் விழுந்து நல்ல நகம் முளைக்கும்.
* உள் உறுப்புகள் பலம் பெறும்.
* கண்கள் தெளிவடையும்.
* மூளை புத்துணர்வு பெறும்.
* மூட்டு வலி, முழங்கால் வலிகள் மறையும்.

ஜுன் மாதப் புனிதர்கள்

 ஜுன்- 5 புனித போனிப்பாஸ் - ஆயர், மறைசாட்சி

இவர் இங்கிலாந்தில் ஏறத்தாழ கி.பி.673இல் பிறந்தார். எக்ஸ்ட்டர் என்னுமிடத்தில் உள்ள மடத்தில்  துறவற வாழ்வு மேற்கொண்டார். 719இல் நற்செய்தியைப் போதிக்க ஜெர்மனி சென்றார். அங்கு சிறப்பாக பணியாற்றியதால் மயின்ஸ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். தம்முடைய தோழர்களின் துணைகொண்டு பவேரியா, துரிஞ்சியா, பிராங்கோனியா போன்ற பல இடங்களிலும் திருச்சபையைப் புதிதாக நிறுவினார். ஆட்சிமுறைப் பேரவைகளை நடத்தி, சட்டதிட்டங்களைப் பலரும் அறியச் செய்தார். ஹாலந்தில்  பிரிசியர் நடுவில் உழைக்கும் போது, பிற மறையினரால் 754இல் கொல்லப்பட்டார்.

ஜுன் - 9 புனித எபிரேம் ‡ திருத்தொண்டர்,  மறைவல்லுநர்

இவர் மெசபெத்தோமியாவில் உள்ள நிசிபிஸ் என்னும் இடத்தில் ஏறத்தாழ கி.பி 306இல் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். திருத்தொண்டர் பட்டம் பெற்று, தம் சொந்த நாட்டிலும், எடெஸ்ஸாவிலும் பணியாற்றினார். இறையியல் கற்றுத் தேர்ந்தார். பிறகு தவ வாழ்வை தேர்ந்து வாழ்ந்தார். அந்நேரத்தில் தவறான போதனைகளை எதிர்த்து தன் எழுத்தாலும் போதனையாலும் போராடினார். 540இல் எழுதப்பட்ட எடெஸ்ஸா வரலாற்று குறிப்பேட்டின்படி, புனிதர் எடெஸ்ஸாவில் 373இல் இறந்தார்.

 ஜுன் - 11  புனித பர்னபா - திருத்தூதர்

இவர் சைப்பிரஸ் தீவில் பிறந்தார். எருசலேமின் முதல் கிறிஸ்தவர்களில் இவரும் ஒருவர். இவர் அந்தியோக்கியாவில் நற்செய்தியைப் போதித்தார். திருத்தூதரான புனித பவுலைப் பின்பற்றி, பவுலின் முதல் மறைபரப்புப் பயணத்தில் அவருக்குத் துணைபுரிந்தார். எருசலேமில் நடந்த திருச்சங்கத்தில் இவர் பங்குப் பெற்றார். பிறகு தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கு நற்செய்திப் பணி செய்து அங்கேயே இறந்தார்.

ஜுன்-13 புனித அந்தோணியார்-மறைப் பணியாளர், மறைவல்லுநர்.
             
இவர் போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். முதலில் புனித அகுஸ்தினார் துறவறச் சபையில் சேர்ந்தார். மறைப்பணியாளராகிய சிறிது காலத்தில் ஆப்பிரிக்க மக்களுக்கு பணியாற்ற விரும்பி கப்புச்சின் துறவியர் சபைக்கு மாறினார். ஆனால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் மறைபோதகப் பணியாற்றப் பணிக்கப்பட்டார். அங்கு சிறந்த முறையில் பணியாற்றினார். திருச்சபைக்கு எதிராக பேசிய பலரை மனந்திருப்பினார். சபையின் முதல் இறையியல் வல்லுநராகி மற்ற சகோதரர்களுக்கும் இறையியல் கற்றுக்கொடுத்தார். கருத்து நிறைந்த நயமான மறையுரைகளும் எழுதி வெளியிட்டார். 1231இல் இத்தாலியில் பதுவா நகரில் இறந்தார். அடுத்த வருடமே இவர் புனிதர் என்று அறிவிக்கப்பட்டார்.

 ஜுன்- 21  புனித அலோசியஸ் கொன்சாகா - துறவி.

              இவர் இத்தாலியில் லொம்பார்டி மாவட்டத்தில் மாந்துவா நகருக்கருகில் கி.பி 1568இல் காஸ்டிலியோனோ என்னும் அரசக் குடும்பத்தில் பிறந்தார். தம் தாயிடமிருந்து பக்தி நிறைந்த கல்வி பெற்று, சமய வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு உடையவராய்த் திகழ்ந்தார். அரச குடும்ப பிறப்புரிமையைத் தம் சகோதரனிடம்ஒப்படைத்து விட்டு, உரோமையில் இயேசு சபையில் சேர்ந்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தொண்டு செய்த போது, இவரும் நோய்வாய்ப்பட்டு, 1591இல் இறந்தார்.

 ஜுன் - 24  புனித திருமுழுக்கு யோவானின்  பிறப்பு

                இவர் இயேசுவின் முன்னோடி. அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன் பிறந்தார். இவரின் தந்தை சக்கரியாஸ் ‡ தாய் எலிசபெத்தம்மாள். இவர் புனித கன்னிமரியாவின் நெருங்கிய உறவினள். யோவான் தாயின் உதரத்திலேயே அர்ச்சிக்கப்பட்டார். பெண்களிடம் பிறந்தவர்களில் இவரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று இயேசுவால் புகழப்பட்ட இவர், பாலை வெளியில் வாழ்ந்தார். மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத்23:2) மக்களை எச்சரித்தார். யோர்தானில் இவர் இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தார். இயேசுவின் முன்னோடியாகத் துணிவுடன் பணியாற்றி, தன் தலையையே அர்ப்பணித்து தியாகியாக இறந்தார். 

 ஜுன் - 27   புனித சிரில் ‡ ஆயர், மறைவல்லுநர்.

               இவர் கி.பி370 ஆம் ஆண்டில் பிறந்தார். முதலில் துறவு வாழ்வு மேற்கொண்டார். பிறகு குருவாகி, பின்பு அலெக்ஸ்சாந்திரியாவின் ஆயராக 412இல் நியமனமானார். கிறிஸ்துவைப் பற்றி தவறாகப் போதித்து வந்த நெஸ்தோரியுசைத் திறமையுடன் எதிர்த்து உண்மையைப் போதித்தார். 431இல் எபேசில் நடந்த பொதுசங்கத்தில் முதன்மையான பொறுப்புகளை ஏற்று நடத்தினார். கத்தோலிக்க நம்பிக்கைக்கு விளக்கமாகவும், அதனைப் பாதுகாக்கவும் பல நூல்கள் எழுதினார். 444இல் இறந்தார்.

ஜுன்-29  புனிதர்கள் பேதுரு, பவுல்- திருத்தூதர்கள்

பேதுரு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரில் வாழ்ந்த மீனவர். இயேசுவால் தம் சகோதரன் பிலவேந்திரருடன் அழைக்கப்பட்டார். திருச்சபையின் தலைவராகவும், முதலில் அந்தியோக்கியாவிலும், பிறகு உரோமையிலும் திருச்சபையை தலைமையேற்று நடத்தினார். நீரோ மன்னன் ஆட்சியில் 67இல் இவர் கொல்லப்பட்Vர். பவுல் சிறிய ஆசியாவில் உள்ள தார்சுஸ் நகரில் பிறந்தார். இவரின் தந்தை உரோமை குடிமகன். தமஸ்கு செல்லும் வழியில்  புதுமையாக இவர் மனம் திரும்பி கிறிஸ்துவை புறவினத்தார்க்கு அறிவிக்கும் பணிக்கு இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்டார். பல ஆண்டுகள் நீண்ட மூன்று  பயணங்கள் செய்து, பல துன்பங்களுக்கு உட்பட்டு இறுதியில் உரோமையை அடைந்தார். அங்கு பேதுருவுடன் சேர்ந்து திருச்சபையை நிறுவினார். இவர் உரோமை குடிமகன் என்பதால், சிலுவையில் அறையாமல் தலையை வெட்டிக் கொன்றார்கள். 

விவிலிய விடுகதைப் போட்டி

விவிலிய விடுகதைப் போட்டி 
- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்

ஜுன்-2017 விடுகதைகள்,  மாற்கு 9 முதல் 16 முடிய

அன்றாடம் காய்ச்சியவள்
அயராது உழைப்பவள்
கிடைச்சக் கூலி இரண்டு காசையும்
மொத்தமாய் போட்டு உயர் இடம் பிடித்தாள்
இவள் யார்?

2. மீனப் பிடிச்சவரு
மனிதனைப் பிடிச்சாரு
காதையும் வெட்டினாரு ‡
கர்த்தரக் கைவிட்டாரு ‡ பின்
கதறி அழுதாரு ‡ யார் இவர்?

3. அரிது அரிது அரிது
ஆண்டவரின் வீட்டுக்கு போவது அரிது
சொத்தே, பெரிது, பெரிது,பெரிது
மனமோ அதிலே இருக்குது இருக்குது
இறையாட்சிக்குட்படுவது அரிது, அரிது
இவர்கள் யார்?

4. ஊரில் இருக்குது ஒன்று
இதுவரை அமராதது ஒன்று ‡ அதை
அவிழ்த்து வாருங்கள் இன்று
ஆண்டவருக்குத் தேவை சொல்வீர் நன்றே
அது எதை?

5. போர் போர் முழங்குது
பஞ்சமும் பஞ்சாய் பறக்குது
தாகம் தண்ணீர் ஏங்குது
பசிப் பிணி வறுமை வாட்டுது
நில நடுக்கமும் துளைக்கிறது.
ஆனால் ஆரம்பம் என மிரட்டுது
அது எது? வேதனைகளின் தொடக்கமே.

6. பால் போன்ற நிறம்
சுவைப்பின் இது கரிப்பு
மூன்றெழுத்து உடையது ‡ இது
இல்லா பண்டம் குப்பையிலே ‡ அது என்ன?

7. கணவன் மனைவி உறவு எல்லாம்
இப்போ சகஜமாய் மாறிப் போகுது
நீயா? நானா? போட்டியில்
நீண்ட உறவு முறியுது ‡ அது எதனால்

8. கேட்க முடிந்தது; பார்க்க முடியல
மேலுடை பறந்தது; குதித்தெழுந்து
வந்தவர்க்கு இரு இதழ் மலர் விரிந்தன
நம்பினான்; நலமாயிற்று.
யார் இவண்?

9. க்ஷிeழிஸeஐனும்  eழிrமிஜுதும் dழிவிஜு ஆகும்
ஆனால் அது மட்டும் ஐeஸer dழிவிஜு ஆகாது
அது என்ன?

10. பாதை வழி வந்தார்
பாங்குடனேப் பார்த்தார் ‡ அது
பசுமை இலை நிறைந்திருந்தது ‡ ஆனால்
பசிக்கு கனியில்லை  ‡ இனி
யாரும் உன் கனியை உண்ணக்கூடாது
என்றார் எதனை?

11. கட்டளைகளில் சிறந்த கட்டளை
தேவன் தந்த கட்டளை
மறைநூல் அறிஞர்  வினாவிற்கு
தெளிவுப்படுத்தியக் கட்டளை ‡ இது
எத்தனை கட்டளை. ‘பு’வில் முடிவில்
அது  என்ன?

12. இம்மனிதன் பிறவாதிருந்தால்
அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்
யார் இவன்? கூறியது  யார்?

13. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன்
பணப் பேய் கண்களை மறைத்தது
பாசங்குடன் பாசமாக முத்தமிட்டவன்
ரபி என்று அழைத்தவன். யார் இவன்?

14. வயல் வெளியிலிருந்து வந்தவர்
அலெக்ஸாந்தர், ரூபுவின் தந்தையிவர்
மூன்றெழுத்து உடைய  சீமான்
இயேசுவுக்காக கட்டாயப்படுத்தினர்
இவர் யார்?

15. தைலம் நறுமணத் தைலம்
விலைமிக்கத் தைலம், கலப்பற்றத் தைலம்
ஒரிஜனல் தைலம். இதன் முழுமையான
பெயர் என்ன?



Ads Inside Post