Pages - Menu

Wednesday 6 April 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 - 1 புதிய வாழ்வியல் தொடர்
- அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்.

(அன்பு ஒன்றே போதும்! என்ற அழகிய புத்தகத்தைப் படைத்த தந்தை மகுழன் அவர்கள் இத்தொடரை தொடங்குகிறார்கள்)

1. விண்ணகத்தின் திறவுகோல் பணிவே


ஒரு நாள் இராயப்பர் மிகவும் கவலையுடன் கடவுளைச் சந்தித்தார். “ஆண்டவரே, மோட்சத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சாத்தான் ஏதோ சதிவேலை செய்து எல்லாரையும் அவன் பக்கம் திருப்பி விடுகிறான். நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டினார். கடவுள் இராயப்பரிடம், “இராயப்பரே! ஒன்று செய்யுங்கள். அவனிடம் சென்று சில நாட்கள் தங்கி அவனுடைய சித்து வேலைகளை எல்லாம் கற்று வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

இராயப்பர் சாத்தானை சந்திக்கச் சென்றார். இராயப்பரை பார்த்தவுடன் சாத்தானுக்கு அதிர்ச்சி. அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “வாருங்கள் இராயப்பரே! தாங்கள் என்னிடம் வருவதற்கு ஏதாவது முக்கியக் காரணம் இருக்க வேண்டுமே?” என்றுக் கேட்டான். இராயப்பர், “ஆமாம். எனக்கு நீ ஓர் உதவி செய்ய வேண்டும். உனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தங்கம் தருகிறேன். நீ எவ்வாறு கோடிக்கணக்கான மக்களை உம் பக்கம் இழுக்கிறாய்? என்ற இரகசியத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். சாத்தான் அவரிடம், “இராயப்பரே, தங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். சரி, எவ்வளவு தங்கம் தருவீர்கள்?” என்று கேட்டான். “நூறு மூட்டை தருகிறேன்” என்றார் இராயப்பர். “100 மூட்டையா?” என்று கேட்டுவிட்டு சிரித்தான் சாத்தான். “சரி, அதற்கு தகுந்த ஓர் இரகசியம் சொல்கிறேன். மனிதர்களை பொய் சொல்ல வைப்பேன். அதுவே அனைத்து பாவங்களுக்கும் காரணமாக அமைந்துவிடும்” என்றான். சாத்தானுக்கு இன்னும் அதிகமாக பொன் தேவைப்படுகிறது என்பதை இராயப்பர் உணர்ந்து கொண்டார். “சரி, 1000 மூட்டை தங்கம் தருகிறேன்“ என்றார் இராயப்பர். “சரி, அதற்கு தகுந்தாற்போன்று மற்றொரு இரகசியம் சொல்கிறேன். மனிதரிடத்தில் கெட்ட எண்ணத்தை விதைப்பேன். அவர்கள் அடுக்கடுக்காக பாவம் செய்வார்கள்” என்றான். இராயப்பர், “சரி, உனக்குத் தேவையான பொன் தருகிறேன். முழுமையாகக் காரணத்தைச் சொல்“ என்றார் இராயப்பர். சாத்தானோ “இராயப்பரே, எனக்குத் தேவையான பொன்னை உங்களால் தரமுடியாது. ஏனென்றால் என் பேராசை அப்படி. சரி, உங்கள் காரியத்திற்கு வருகிறேன். மனிதரை எளிதில் என் வழியில் கொண்டுவர நான் இதைத்தான் செய்கிறேன். அவர்கள் மனதில் ஆணவத்தை விதைப்பேன். அதன் பிறகு அவர்கள் அனைத்து பாவங்களுக்கும் அடிமையாகி விடுவார்கள். சரி, நான் இதனை இலவசமாக உங்களுக்கு சொல்கிறேன். ஏன் தெரியுமா? ஆணவம் உடையவர்கள் அத்துணை விரைவில் அதை கைவிட மாட்டார்கள்” என்று சொல்லி எகத்தாளமாய் சிரித்தான்.

விண்ணகத்தில் உள்ள புனிதர்களில் சிலர் உலகில் வாழ்ந்தபோது தானதர்மம் செய்யாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய ஏழ்மை அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

விண்ணகத்தில் உள்ள புனிதர்களில் சிலர் உலகில் வாழ்ந்தபோது தவமுயற்சியை மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய உடல்நலக் குறைவு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் விண்ணகத்தில் உள்ள புனிதர்களுள் எவரும் உலகில் வாழ்ந்தபோது தாழ்ச்சியை, பணிவை கடைபிடிக்காமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் தாழ்ச்சி, பணிவு இல்லாமல் எந்த நல்லப் பண்பும் அவர்களிடத்தில் இடம் பெற முடியாது.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும், மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 11 : 28 ‡ 29).

இயேசு, அவரது பள்ளியில் பாடம் பயில அழைக்கிறார். எதற்காக அழைக்கிறார்? அவரைப் போல வல்ல செயல்களை செய்வதற்காக அல்ல. அவரைப் போல அதிகாரம் கொண்ட போதனையை கற்றுக் கொள்வதற்காக அல்ல. மாறாக, அவரிடத்தில் உள்ள கனிவை, சாந்தத்தை, பணிவை, புனிதத் தாழ்ச்சியை அணிந்து கொள்வதற்காக அழைக்கிறார்.

நம் வாழ்வின் பாதையை இனிமைப்படுத்தும் தாழ்ச்சியை, பணிவை கற்றுக் கொள்ள இயேசுவோடு சேர்ந்து பயணம் செய்வோமா?

அமெரிக்கக் கடிதம் - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்
- சவரி,
கேரி, வடகரோலினா
இந்த வாரம் உங்களுடன் அமெரிக்கர்களின் கடின உழைப்பைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை கடுமையாக உழைக்கிறார்கள். சனி, ஞாயிறு நன்றாக ஓய்வு எடுக்கிறார்கள். அவர்கள் உழைப்பிற்கு ஓர் உதாரணம் சொல்லி விளக்க விரும்புகிறேன்.

அப்போது, என்னுடைய மகன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். துவக்க பள்ளிகளில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆசிரியர் - பெற்றோர் கூடி பேசுவார்கள். அப்போது குழந்தைகளின் வளர்ச்சி பற்றியும், எதில் பின்வாங்கி இருக்கிறார்கள் என்பது பற்றியும் கலந்து பேசுவார்கள். அந்த கூட்டத்திற்கு முன்பே ஆசிரியரிடம் பேசி நேரம் ஒதுக்க வேண்டும். “நான் ஆசிரியரிடம் நான் அலுவலகத்துக்கு போகும் முன் சந்திக்க விரும்புகிறேன்” என்றேன். அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்த வைத்தது. அவர் “நான் காலை 5 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிடுவேன். பள்ளி காலை 7. 45 க்கு ஆரம்பிக்கிறது. இந்த 2. 45 மணி நேரத்தில் இன்றைக்கு நடத்த வேண்டிய பாடங்கள், Prலிளூeஉமி இவைகளுக்காக தயார் செய்வேன். காலை 5 முதல் 7. 30 வரையுள்ள நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், பேசுவோம்” என்றார்கள். இவர் மூன்றாம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்.

அமெரிக்கர்கள் வளரும் அறிவியலுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்து கொள்கிறார்கள். என்னுடன் வேலை செய்யும் நண்பருக்கு 68 வயது. அவரிடம் “எப்படி கணணி கற்று கொண்டீர்கள்?” என்று கேட்டேன். அவர் சொன்னார், “நான் பதினெட்டு வயதில் இராணுவத்தில் ஹிழிஸதீ பிரிவில் சேர்ந்தேன். 5 வருடங்கள் வேலை செய்தேன். நான் ஆங்கிலத்தில் கல்லூரியில் பட்டம் பெற்றவன். அதனால் கல்லூரியில் இருக்கும் போது கணணி கற்று கொண்டேன். என் ஆங்கில அறிவையும், கணணி அறிவையும் வைத்து, கணணி துறையில் துழிஐற்ழியி தயார் செய்யும் வேலை கிடைத்தது. அதற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது. அப்போதே கணணியில் ஸ்ரீrலிஆrழிது செய்வது என்பதையும் கற்று கொண்டேன். அதற்கு இன்னும் அதிகம் சம்பளம் கிடைத்தது. என் 69 வயதில் ஓய்வு பெற்று மாலை நேரங்களில் கல்லூரியில் மாணவர்களுக்கு மீண்டும் ஆங்கிலம் கற்று கொடுக்க போகின்றேன்” என்றார்.

இப்படி அமெரிக்கர்கள் கொடுத்த வேலையை கண்ணும், கருத்துடனும், விருப்பத்துடனும் செய்கின்றனர்.

இது அவர்களின் உயர்வுக்கு காரணம். நாமும் கடினமாக உழைத்து, புதியவைகளை கற்று புது உலகம் படைப்போம்.

கடின உழைப்பை பற்றிய டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வரிகளை கூறி முடிக்கிறேன்.
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும்
தோல்வி என்னும் நோயை கொல்லும் மருந்துகள்
                                                                                        - டாக்டர். அப்துல் கலாம்

Tuesday 5 April 2016

ஆசிரியர் பேனா, மகிழ்ச்சியும், எழுச்சியும்

ஆசிரியர் பேனா

மகிழ்ச்சியும், எழுச்சியும்
ஏப்ரல், மே மாதங்களில் நம் கிராமங்கள், விழா தோரணையில் ஊஞ்சலாடும். தேர் ஊர்வலங்கள், வண்ண, வண்ண  வான வேடிக்கைகள், உறவினரின் ஒன்றுகூடல் ஆகியவைகளுடன் கலகங்களும், கைகலப்புக்களும், பிளவுகளும் மக்களை சந்திக்கும்.
தி.பா 37 : 4 அருமையானதொரு வாக்கியத்தைத் தருகிறது.
“ஆண்டவரிலேயே மகிழ்ச்சிக் கொள்.
  உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்”.
இறைவனிடமிருந்து  உதவிகளை பெறுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் முன்வைக்கும் நிபந்தனை, ஆண்டவரிலேயே 
மகிழ்ச்சிக் கொள் என்பதாகும்.
“மகிழ்ச்சி என்பது ஒரு வழி, அது ஒரு இடமில்லை” என்கிறார் சிட்னி ஹேரிஸ் என்பவர்.
“வழிபாடுகள் ஆன்மாக்களின் மகிழ்வு கொண்டாட்டங்களாக அமைய வேண்டும்” என்கிறார் கோர்டன் ஹிங்லி என்பவர்.
பாஸ்கா மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக நமது பங்குகளில் விழா கொண்டாடப்படுகிறது. விழாக்கள் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்றன. உறவுகளை வளர்க்கின்றன. எனவே விழாக்கள் தங்களின் பெருமைக்குரிய பண்புகளிலிருந்து விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவதே நமக்கு உண்மையான மகிழ்வைத் தரும்” என்ற செய்தியை இம்மாத இதழின் ஒரு கட்டுரையில் காணலாம்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பணம் பட்டுவாடா மிக திறமையான முறையில் திரைமறைவில் செய்யப்பட்டு வருகிறது. ஓர் அம்மையாரிடம், ஏன் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உங்கள் உரிமையை கொச்சைப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்றேன். “ஐநூறு ரூபாய் யார் தருவார்? கிடைப்பது லாபம் தானே?” என்றார் அவர். பணம் கொடுத்து சாமி படங்களில் கைவைக்கச் சொல்லி, சத்தியம் வாங்குகிறார்கள். பாமர மக்கள் இந்த தந்திர வழிகளுக்கு பலியாகி விடுகிறார்கள்.
திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் தன் அனுபவத்தை ஒரு கூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டார். மதுரையில் ஒரு தொகுதியில் தேர்தலுக்கு பொறுப்பாளராக இவரை நியமித்து, ஊழலில்லாமல் நடத்துங்கள் என்ற உத்தரவு அவருக்கு கொடுக்கப்பட்டது. ஊர் தலைவர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியவர்களை சந்தித்து தேர்தலுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டாராம். இதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அவர்கள் சொல்லிவிட்டார்களாம். பிறகு கல்லூரிகளுக்குச் சென்று, கல்லூரி மாணவர்களை சந்தித்து நேர்மையான தேர்தலை நடத்த உங்களால் முடியும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் எழுச்சிக் கொண்டனர். தங்கள் பெற்றோர்களை, நண்பர்களை, உறவினர்களை ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுபோட்டனர். மற்ற இடங்களிலும் சென்று அறிவுறுத்தினர். சிறப்பாக தேர்தல் நடந்ததாக திரு.சகாயம் அவர்கள் பகிர்ந்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற வேட்கை வெடித்திருக்கிறது. ஊழலற்ற அரசு, மக்களின் நலனை முன்னெடுக்கும் அரசு என்று மக்கள் காத்து நிற்கிறார்கள். திரு.சகாயம் அவர்கள் மீண்டும் கூறினார், மக்கள் நேர்மையாக மாறினால்தான் நேர்மையான தலைவர்கள் அரசு உண்டாக முடியும் என்று.
கவிக்கோ அப்துல்ரகுமான், முன்னோட்ட சமுதாயத்தில் வாக்கெடுப்பு எப்படி நடக்கும் என்று கனவு காண்கிறார். 

வாக்குப் பெட்டிகளை 
செயற்கை முறையால் 
சினையாக்க முடியாது. 
கருச்சிதைவு செய்யும் 
காரியமும் நடக்காது.

முன்னோட்ட சமுதாயத்தின் பண்பு என்ன என்பதையும் குறிப்பிடுகிறார்.

கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவரி
புன்னகை அங்கே பொதுமொழி
ஆன்மீக மகிழ்ச்சி சமுதாய எழுச்சியைத் தரட்டும்.

வெற்றி உங்கள் கையில் ...

வெற்றி உங்கள் கையில் ...
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M. Ed; M.Sc; M.Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி,
சமயபுரம்

அது பெரிய மருத்துவமனை. நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டிருந்தது. அம்மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால் அங்குள்ள பணியாளர்கள், மருத்துவர்கள் அவ்வளவு ஆர்வமாக செயல்படுவர். நோயாளிகளை அவர்கள் அன்புடன் கவனிப்பதிலேயே நோயாளர்களின் நோய்கள் பாதி தீர்ந்துவிடும். அங்குள்ள பணியாளர்கள் அவ்வளவு ஆர்வமாக பணிசெய்ய என்னக் காரணம் என்று எல்லோரும் அதிசயத்தினர். அங்கு புதைந்திருந்த இரகசியம் இதுதான். மருத்துவமனையின் தலைவர், பணியாளர் ஒவ்வொருவரையும் அவரின் பிறந்த நாளில் சந்தித்து, வாழ்த்துக்களையும், பரிசுகளையும் கொடுப்பார். இன்னும் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளைத் தெரிந்துக் கொண்டு, தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்வார். பணியாளர் ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற கொள்கையில் செயல்படுவார்.

அதேபோல, பெங்களூரில் ஒரு புகழ் பெற்ற பொறியாளர், தான் சம்பாதிப்பதையயல்லாம் தன் பணியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். தனக்கென எதுவும் சேர்த்து வைப்பதில்லை. எனவே பணியாளர்கள் ஆர்வமுடன் பணிசெய்வர். அவரது தொழில் பலுகியது, பெருகியது.
தான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதோடு பிறரையும் மகிழ்ச்சி அடையச் செய்வதுதான் வெற்றியாளனுக்கு உரிய பண்புகளில் ஒன்று.
குடும்பத்தில், அப்பா, தான் அணிந்து கொள்ள நல்ல உடைகள் இல்லாவிட்டாலும், அறுந்துபோன செருப்புகளை பயன்படுத்தினாலும், பழைய சைக்கிளில் பயணம் செய்தாலும் தன் மகன் புத்தாடை உடுத்தி, றீஜுலிe போட்டுக்கொண்டு ளீழிr ‡ ல் நுக்ஷூக்ஷூஷ்உe - க்கு போகும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அம்மா தன்னுடைய வசதி, வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு தன் மகள் படித்து பெரிய வேலைக்கு சென்று மகிழ்ச்சியோடு வாழும்போது அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இப்படி பிறரை மகிழ்ச்சிப்படுத்தும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, கணவன், மனைவி அனைவருமே வெற்றியாளர்களே. ஆகவே, உலகில் வாழும் அனைவரும் தம் மகிழ்ச்சியோடு பிறரையும் மகிழ்ச்சிக்கடுத்துகின்றபோது வெற்றியாளர்களாக உருவாகிறார்கள். Hello!எங்க கிளம்பீட்டிங்க? பிறரை மகிழ்ச்சிப்படுத்தி வெற்றியாளராக மாறவா? All the very best.

உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை

‡‡ சார்லி சாப்ளின்

ஆத்தாவும், தாத்தாவும்

ஆத்தாவும், தாத்தாவும்
‡ வாயாடி வண்ணக்கிளி

‡ என்னடியம்மா, ஏதோ பத்திரத்தை கொண்டு வந்து கொடுக்கிற.
‡ படிச்சு பாருய்யா, இனிமே என்ன ஏமாத்த முடியாது. இத்தனை வரு­மா ஏமாளியா நான் வாழ்ந்திட்டேன்.
‡ என்ன வி­யம் சொல்லு. மே மாசம், வெயில் காலம் இன்னும் வரல. நீ இப்பவே குழம்பி போனது போல தெரியுது.
‡ அதிகமா பேசாதீங்க, பேசினீங்க பின்னிப்பிடுவேன் பின்னிப்பிடுவேன்.
‡ என்ன பின்னி பிடுவியா? நான் என்ன சடையா?
‡ முதல்ல அந்த பத்திரத்த பாருய்யா.
‡ என்ன விவாகரத்து பத்திரமா? குழியில போற வயசில எப்படிடி இந்த எண்ணமெல்லாம் உனக்கு வருது?
‡ இதான்யா இன்றைக்கு டிரன்ட், மற்றவங்க உதவி எனக்கு தேவையில்லை. நான் தனியா நின்னு ஜெயிச்சு காட்டுறேன் 
   பாருங்க.
‡ இனிமே என்னத்தடி ஜெயிக்க போற?
‡ சொத்து, நகை, பாங்க் பணம் இதெல்லாம் என் கைவசம் கொண்டு வரப் போறேன்.
‡ தாராளமா எல்லாத்தையும் எடுத்துக்கடி. உன்னுடைய பிச்சுபிடுங்கள் இல்லாம வனவாசம் போறேன்.
‡ ஏன்யா, இன்றைய அரசியல் நிலவரம் தெரியாம உளருற.
‡ வாங்க, வாங்கன்னு, கால்லுல விழுந்து கும்பிடாதபடி சில கட்சிகள் கூட்டணிக்கு கூப்பிடுது. அட போய்யான்னு தனியா 
  நின்னு ஜெயிக்கிறேன்னு சில கட்சிகள் ஒதுங்குது.
‡ ஏண்டி, அரசியல நம் குடும்பத்தில இழுத்துக்கிட்டு வர? அது சாக்கடை. நல்லவனையும் கெட்டவனா மாத்திர பேய் 
   கூடம். அரசியல் கட்சிகாரங்க அப்படி, இப்படினா நாம அப்படி நடக்க வேண்டியதில்லை.
‡ என்னய்யா புரியாமா பேசுற. அரசு, அதிகாரமெல்லாம் ஆரம்பமாகிற இடம் குடும்பந்தான். உன்னை அடக்கி    
   வைச்சிருந்தா, எனக்குத் தெரியாம நேத்து சினிமாவுக்கு போயிருப்ப? இன்னைக்கு சொல்லி வைச்சு அதே 
   சினிமாவுக்கு போயிட்டு வரேன் பாரு.
‡ ‘விசாரணை’ என்ற படத்துக்குதான் போனேன். அய்யோ, போலீஸ் செய்ற அட்டூளியத்தை அப்படியே 
   படத்தில பிழிஞ்சு வைச்சிருக்காங்க,
‡ உங்களையும் அப்படி நான் சித்திரவத பண்ணாம போயிட்டேன். அவ்வளவு தூரம் உலகம் தெரியாத 
  பொம்பளையாயிட்டேன்.
‡ போதுமடியம்மா, உன் உணர்ச்சியையயல்லாம் மூட்டை கட்டி வை. உன்னை எனக்கு மனைவியா கொடுத்ததற்கு 
   கடவுளுக்கு தினமும் கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்.
‡ ரொம்ப ஐஸ் வைக்காதீங்க. வருகிற தேர்தல யாருக்கு ஓட்டு போடலாம்னு யோசிங்க. ஓட்டு உரிமை தீமைக்கு வேட்டு 
   வைக்கும் பெருமை.
‡ சரிடியம்மா, ஓட்டு உரிமை பூமாலையை போல. மணமக்கள் எப்படி பயன்படுத்துவாங்களோ அப்படி 
   பயன்படுத்துவோம்.
‡ பன்றிகளுக்குமுன் போடப்பட்ட முத்தினை போல, விபரம் தெரியாதவங்களா இல்லாம பாத்துக்குவோம்.
‡ இந்தா, விவாகரத்து பத்திரத்த நீயே கிழிச்சு போடு.

தமிழில் உறவு முறைகள், கலியாண சிரிப்பு

   
தமிழில் உறவு முறைகள் 

        நாம் = முதல் தலைமுறை
தந்தை + தாய் = இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி = மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி = நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி = ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் = ஆறாம் தலைமுறை
பரன் + பரை = ஏழாம் தலைமுறை
பரன் + பரை = பரம்பரை

பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச்சிறப்பு!...



 கலியாண சிரிப்பு  

 ஒரு புலி தன் கல்யாணத்துக்கு காடடுல எல்லா அனிமல்சுக்கும் இன்விடே­ன் கொடுக்கப் போச்சு...
      அப்போ அங்கே ஓடிவந்த ஒரு பூனை பயங்கரமா உருண்டு உருண்டு சிரிச்சுது...!
      பயங்கர காட்டமான புலி, ஏண்டா சிரிக்கிறேன்னு கேட்டுச்சு?
      அதுக்கு அந்த பூனை கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு, நானும் கல்யாணத்துக்கு முன்னாடி புலியாத்தான்  
     இருந்தேன்டான்னு சொல்லிட்டு ஓடிப்போய்ருச்சு.

வேதியரிடம் கேளுங்கள் - 10, நல்லை.இ.ஆனந்தன்

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 10
நல்லை.இ.ஆனந்தன்

திரு. அலெக்சாண்டர், குளத்தூர் :

1. வீட்டில் அம்மாவுக்கும், மனைவிக்கும் எப்போதும் சண்டை. எப்படி தீர்ப்பது?

உங்களைக் கருவில் சுமந்தவர் உங்கள் அம்மா. உங்கள் கருவைத் தன் வயிற்றில் சுமந்தவர் உங்கள் வீட்டுக்கார அம்மா (அதாவது மனைவி). எனவே, இருவருமே முக்கியமானவர்கள். அவர்களிடையே எழும் முக்கிய பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் நீங்களாக இருக்கும் பட்சத்தில் தயவுசெய்து உங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். அம்மாவுக்குரியதை அம்மாவுக்கும், மனைவிக்குரியதை மனைவிக்கும் கொடுங்கள். பிரச்சனைகள் தானாகத் தீர்ந்துவிடும்.

திருமதி. அமலாதேவி, கொடைரோடு :

2. வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது நல்லது என நினைக்கிறீர்கள்?


உங்கள் கேள்வியில் சிறிய பிழை உண்டு. இந்த முறை தேர்தலில் எந்த கட்சியும் தனித்து நிற்காது. ஆகவே, கேள்வியினை எந்த கூட்டணிக்கு ஓட்டுப் போடுவது நல்லது என்று கேட்டிருந்தால், நானும் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கலாம்.

திருமதி. ராணிச்சந்திரா, உடுமலைப்பேட்டை :

3. அன்னை மரியா மாதாவா? தாயா?


மா என்றால் பெரிய என்பது பொருள். தா என்றால் தருபவர். பெரிய காரியங்களை இயேசுவிடமிருந்து பெற்றுத் தருவதால் அவர் மாதாதான். தா என்றால் கொடு என கேட்பது. ஈ என்றால் ஈதல் ‡ கொடுப்பது. எனவே கேட்டவுடனே தருவதால் அவள் தாய். எனவே அன்னை மரியா மாதாதான். தாய்தான்.


செல்வி. இதயா, திருப்பூர் :

4. எனக்கு எதிரிகள் பெருகிக் கொண்டே வருகிறார்கள். என்ன செய்வது?


எதிரிகள் என்று யாருமே பிறப்பதில்லை. நாம்தான் எதிரிகளைப் பிறப்பிக்கின்றோம். நமக்குப் பிடித்ததைச் சொன்னால், செய்தார்கள் எனில் நண்பர்கள் என்கிறோம். அவ்வாறு செய்யாவிடில் எதிரிகள் என நாம்தான் முத்திரை குத்துகிறோம். எல்லோரும் நல்லவரே என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும். தன்னைக் காட்டிக் கொடுக்கத் துடித்தவனையும் நண்பா என்று அழைத்தவர் இயேசு. கிறிஸ்து இயேசுவின் மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

திரு. இராபர்ட், மணப்பாறை :

5. மாதா தொலைக்காட்சி பார்ப்பதுண்டா?

உண்டு. நல்ல முயற்சி. அருமையான நிகழ்ச்சிகள். பொதுநிலையினருக்கு இன்னும் தாராளமாக இடமளித்தால் அபார வளர்ச்சி நிச்சயம்.

திருமதி. மார்க்கிரேட், விழுப்புரம் :

6. மனிதருக்கு வியாதிகள் வரக் காரணம் என்ன? சுலபமாக சுகம்பெற ஏதாவது வழி உண்டா?

மனிதருக்கு 4449 வியாதிகள் வருவதாக இதுவரையிலும் கணக்கிட்டுள்ளார்கள். காரணங்கள் பல. அவற்றுள் சில: 1. சுகாதாரக் குறைவு, 2. சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, 3. நம்மில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள். 4. பிறரை மன்னிக்காத தன்மை, 5. குற்றப்பழி உணர்வுகள், 6. புறக்கணிப்புகள், 7. அடங்காத கோபம், மனக்கசப்பு, 8. சில தீய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளாதது, 9. வயது முதிர்ச்சி, 10. உணவுக் கட்டுப்பாடு இல்லாதது. சுலபமாக சுகம்பெற ஒரே வழி... மனதில் உள்ள பேய்களை விரட்டியடியுங்கள். நோய்கள் தானாக ஓடிவிடும். மருந்தில்லாத மருத்துவம் இது ஒன்றுதான்.

திரு.பாக்கியராஜ், வேலூர் :

7. இசையில் யார் பெரியவர்? இசைப்பவரா? அல்லது ரசிப்பவரா?

மனிதருக்கு இரு கண்கள் போல இசைக்கு இருவருமே மிக மிக முக்கியமானவர்கள். இசைப்பவரால் இசைக்கவும் முடியும், ரசிக்கவும் முடியும். ஆனால் ரசிப்பவரால் சில நேரங்களில் இசைக்க இயலாத நிலையில் இருக்கக்கூடும். அதுசரி, நீங்கள் (ஆலயத்தில்) இசைப்பவரா? ரசிப்பவரா?

இதயம் கனிந்த ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு             17 - 04 -2016

தி.ப 13 : 14, 43 - 52,
திவெ 7 : 9 : 14 - 17


யோவா 10 : 27 - 30


இயேசு ஆண்டவர் சொன்னார், நானே நல்ல ஆயன் (யோவா 10 : 14). என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும், அவையும் என்னைப் பின் தொடர்கின்றன (யோவா 10 : 27).
ஆடுகள் என்ற சொல்லைக் கேட்கிற போதோ அல்லது படிக்கிற போதோ அருட்பணியாளர் சேவியர் அந்தோணி சே. ச, அவர்கள் எழுதின கோவில் ஆட்டுக்குட்டிக் கதை என் நினைவைத் தட்டுகிறது. நல்லவைகள் மீண்டும், மீண்டும் கேட்கப்படவோ, பேசப்படவோ, எழுதப்படவோ வேண்டும்.
இந்தக் கோயில் ஆடும், ஒரு பன்றியும் நண்பர்கள். இந்த ஆட்டுக்கு அந்த ஊரில் நல்ல சுதந்திரம். பலரின் விளைச்சலில் மேய்ந்தது. பல வீடுகளில் நுழைந்தது. எங்கும் சுற்றித் திரிந்தது. பன்றி அதைப் பார்த்துச் சொன்னது, நீ கொடுத்து வச்சவன். அட உனக்கு என்ன கவலை. உனக்கு வந்த வாழ்வைப் பாரு என்று பொறுமியது. என்னைப் பார்த்தியா? நான் எங்குப் போனாலும், பன்னி, பன்னின்னு திட்றாங்க. கல்லெடுத்து அடிச்சு விரட்டுறாங்க என்று தன்னையே நொந்துக் கொண்டது.

கோவில் திருநாள் வந்தது. அந்த ஆட்டைப் பிடித்து, குளிப்பாட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, மாலையிட்டு மரியாதை செலுத்தினர். தாரை, தம்பட்டம், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டமாக ஊரைச் சுற்றி வந்தனர். கோவிலை நெருங்கியதும் அனைவரும் அதைக் கும்பிட்டனர். இதையயல்லாம் பார்த்த பன்றிக்குச் சொல்லவா வேண்டும், உனக்கு என்ன கவலை. நீ கொடுத்து வச்சவன். மக்கள் கும்பிடப் பிறந்தவன் என்று இச்சு கொட்டியது.  சற்று நேரத்தில் பூசாரி ஆட்டின் கழுத்தின் மீது அரிவாளால் ஒரு வெட்டுப்போட, ஆடு இரண்டு துண்டானது. பன்றி இதைப் பார்த்து, கொடுத்து வச்சது இதற்குத்தானா என்று பதறி ஓடி மறைந்தது. 

இயேசு ஆண்டவர் நானே நல்ல ஆயன் என்று சொன்ன போது எவ்வளவு உண்மை வெளிப்படுகிறது. பார்த்தீர்களா? இயேசு ஆண்டவர் பலியிடுபவரும், பலிப்பொருளுமாக இருக்கிறார். இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1 : 36) என்று திருமுழுக்கு யோவான் இயேசுவை ஆட்டுக்குட்டியாக தன் சீடர்களுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதே விதமாக எசாயா இறைவாக்கினர் இயேசுவைப் பற்றி முன்னுரைத்திருந்தார், அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார் (எசாயா 53 : 7). முதல் வாசகம் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும் (திரு. வெ 7 : 17)
இஸ்ராயேல் குலத்திலே ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஆயராக கருதப்பட்டனர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே போன்றவர்கள் எல்லாம் மேய்ப்பர்கள்தான். ஏன் தாவீது போன்ற அரசர்களும் ஆயனாவும், மேய்ப்பராகவும் அழைக்கப் பெற்றனர். இவர்களின் கடமை, ஆடுகள் என உவமிக்கப்பட்ட மக்களுக்கு, நல் வழியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் தருவது. ஆட்டைப் போல இயேசுவும் தன்னையே மக்கள் தின்பதற்கு கொடுத்தார். என்னை தின்பவன் நிலைவாழ்வைப் பெறுவான் (யோவா 6 : 54). இயேசுவும் நம்மை நல்வழிப்படுத்துகிறார். தன் சதையால் நம்மை உண்பிக்கிறார், பாவங்களிலிருந்து நம்மை மீட்கிறார்.
இந்த மனித சமூகத்தில் வாழ அழைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று ஒரு ஆயராக ‡ மேய்ப்பராக ‡ ஆட்டுக்குட்டியாக ‡ சமூகத்திற்கு நம்மையே மாய்த்துக் கொள்ளும் தியாகிகளாக வாழ அழைக்கப் பெற்றுள்ளோம். நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும், நம்முடன் தோழமை கொண்டுள்ளோருக்கும், நல்ல வழியைக் காட்ட, அற நெறிகள் புகட்ட, பாதுகாப்பு அளிக்க, தேவைப்பட்டால் பராமரிக்க நமக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் நல்ல மேய்ப்பர்களாக இருந்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து நல்வழிப்படுத்தினர்.

இயேசுவைச் சார்ந்து இருப்பவர்களுக்கு என்றுமே நல்வாழ்வு, நிலைவாழ்வு உண்டு. அவரின் குரலைக் கேட்பவர்கள் குணம்பெறுவர். அவரைப் பின்பற்றுபவர்கள் பெருவாழ்வைப் பெறுவார்கள்.

Sunday 3 April 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 24 - 04 - 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு             24 - 04 - 2016
தி.ப. 14 : 21ஆ - 27,
திரு. வெ 21 : 1 - 5
யோவா 13 : 31 - 33அ, 34 - 35

அன்பு என்ற சொல்தான் உலகில் அதிகமாகப் பேசப்படுகிறது. நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் அன்பு என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. வள்ளுவர் அன்பை, உயிருக்கு இணையாக அன்பின் வழியது உயிர்நிலை என்றும், அன்பு உடலின் உள்ளுறுப்பு என்றும் எழுதினார். ஆண்டவர் இயேசு அன்பை வானுயர எடுத்துச் சென்று அதை இறை மயமாக்கினார். நான் உங்களை அன்பு செய்ததுபோல (யோவா 13 : 34) என்று சொல்லி அன்பை தன் மயமாக்கினார் - கிறிஸ்து மயமாக்கினார். அன்பே கிறிஸ்து. அன்பே கிறிஸ்தவம் என்று அன்பை விண்ணுக்கு விண்வழிதடத்தை உண்டாக்கினார்.
அவர் எவ்வாறு நம்மை அன்பு செய்தார்? தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து, தன்னைத் தாழ்த்தி (பிலி 2 : 6 ‡ 8) நம்மை எல்லாம் அன்பு செய்தார். நாம் பிறரை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்பதை நல்ல சமாரியன் உவமை (லூக் 10 : 29 - 30) வழியாக நமக்கு கற்றுக் கொடுத்தார். பிறருக்கு சிறு உதவிகூட செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25 : 40) என அன்பை ஊக்கப்படுத்தினார்.

இயேசு ஆண்டவர் பிறரை மன்னித்தார். மதித்தார். நட்பு பாராட்டினார். நல்லதை செய்யச் சொன்னார். சுகப்படுத்தினார். சுமைகளை இறக்கி வைத்தார். உறவை வளர்த்தார். உயிர்ப்பித்தார். எதையும் எதிர்பார்க்காமல் கடவுளின் மகிமைக்காகவேச் செய்தார். இவைகள்தான் கிறிஸ்துவின் அன்பின் வழித்தடங்கள். வாழ்வின் பாடங்கள். நாமும் அவ்வாறே செய்கிற போது கிறிஸ்துவின் வழித்தடங்களில் நாமும் பயணிக்கிறோம்.

ஒருமுறை அன்னைத் தெரசா அவர்கள் கல்கத்தாவில் தன் பணிக்கு ஒரு இல்லம் ஏற்படுத்த விழைந்தார்கள். பூசாரி ஒருவர் அன்னையின் முயற்சிகளுக்கு பெரும் தடைக்கல்லாய் அமைந்தார். அன்னையைப் பற்றி அவதூறாகப் பேசினார். அன்னை அவர்கள் கல்கத்தாவில் கால் ஊன்றாமல் இருக்க இந்த பூசாரி அவரால் முடிந்த எல்லா தவறான வேலைகளையும் செய்துகொண்டுதான் இருந்தார்.

அன்னைத் தெரசாள் அவர்கள் கடவுளை நம்பி செபத்தில் ஈடுபட்டார். இறை விருப்பத்தை நாடி செபித்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு அந்தப் பூசாரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவரைத் தொட, அவரிடம் மகிழ்ந்து பேச. அவருடைய மனைவிகூட அஞ்சினார். மக்கள் அஞ்சினர். உறவினர்கள் அஞ்சினர். நண்பர்கள் அஞ்சினர். அவரைத் தெருவில் தூக்கிப் போட்டு விட்டனர்.  இந்த நிலையில்தான் அன்னைத் தெரசாள் அவரைச் சந்தித்தார். வழக்கம் போல அவர்மீது தன் அன்பைப் பொழிந்து அவரைத் தன் இல்லத்துக்குத் தூக்கிச் சென்று அவரை நன்குப் பராமரித்து குணப்படுத்தினார். பிறகு இந்த பூசாரி அன்னைத் தெரசாவுக்கு பெரிய உதவியாக இருந்தார்.
இந்த அன்பைத்தான், ஆண்டவர் இயேசு தன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். இத்தகைய அன்புதான் இரண்டாம் வாசகத்தில் நாம் கேட்டது போல அனைத்தையும் புதியதாய் ஆக்குகிறது. இத்தகைய அன்பினால் தூண்டப்பட்டு பவுலடியாரும் பர்னபாவும் பல நாடுகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து திருச்சபைகளை ஏற்படுத்தினர். முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல கடவுளின் பணிக்கென தங்களையே அர்ப்பணித்துக் கொண்டனர்.

நம்முடைய அன்பு எவ்விதம் உள்ளது? எதையும் எதிர்பார்த்து நாம் பிறரை அன்பு செய்கிறோமா? அல்லது நம்முடைய அன்பில் ஏதாவது நிபந்தனைகள் படிந்துள்ளனவா? இயேசுவைப் போல அன்பு செய்வோம். உயிர்ப்பின் மக்களாக வாழ்வோம்.

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு             10 - 04 -2016

தி. ப 5 : 27ஆ - 32, 40 ஈ - 41
தி வெ 5 : 11 - 14
யோவா 21 : 1 - 19

இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்டவர் மீண்டும் சீடர்களை தன் பணிக்கு அழைத்தார். இயேசுவின் பாடுகளையும், மரணத்தையும் கண்டு பயந்து ‡ இதற்காகவா, இவருக்காகவா இவரைப் பின்தொடர்ந்தோம் என எண்ணி ஒருவேளை சீடர்கள் தம் பழைய மீன் பிடித்தொழிலுக்கே திரும்பிவிட்டனர். அத்தொழிலில் அவர்கள் உணர்ந்தது இயேசுவின் பிரசன்னத்தில் எல்லாம் கைகூடும். இயேசுவை விட்டு செய்யும் தொழிலில் வெற்றி கை கூடவில்லை என்பதை உணர்த்துகிறது.

இயேசுவை விட்டு அவர்கள் இரவுக்குச் சென்றார்கள், இருளுக்குச் சென்றார்கள். இருளில் தம் மீன்பிடித் தொழிலைத் தொடங்கினர். இரவும், இரவின் இருளும் பாவ நிலையைக் குறிக்கின்றன. பேதுரு இயேசுவை மறுதலித்து பாவம் செய்தவர். மற்றவர்கள் தம் உயிருக்குப் பயந்து இயேசுவை விட்டு ஓடியதால் பாவம் செய்தனர். எனவே பாவநிலையில்  தம் தொழிலைத் தொடங்கினர்.

மறுநாள் காலை இயேசு அவர்களுக்குத் தோன்றினார். அதாவது இருள் விலக ஒளி உதயமானது. இயேசு தோன்றிய போது அவர்களைத் தண்டிக்க முன்வரவில்லை. மாறாக கருணையோடு காட்சி கொடுத்தார். தன் உயிர்ப்பின் பிரசன்னத்தை உறுதி செய்தார். வலைகளை வலதுபுறம் வீசச்சொன்னார். அப்படியே செய்தனர். வலைகிழிய மீன்கள் கிடைத்தன. இயேசுவின் வார்த்தைப்படி வாழ்ந்தால் திருச்சபை பெருகும் என்பதை இந்த மீன்பிடிப்பு உணர்த்தியது. இல்லாத இடத்திலிருந்தும் மீன்களை பெருகச் செய்தவர் உயிர்த்த ஆண்டவர். திருச்சபை இல்லாத இடத்திலும் ஏற்படுத்தப்படும் என்பதை உணர்த்தினார். இதற்கு பேதுருவின் தலைமைத்துவம் தேவைப்பட்டது. இரு சிறுவர்கள் பேசிக் கொண்டனர். என் மீது உனக்கு அன்புண்டா? இருக்கு. அப்படின்னா எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு. ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டது. இருவரும் மகிழ்ந்தனர். ஒருசில மணி நேரங்களுக்குப் பின் அவர்களுக்குள் ஒரு கோழிச்சண்டை எழுந்தது. அதே சிறுவன், என்மீது உனக்கு அன்பில்லையா? இல்லை. அப்படின்னா நான் வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமை திருப்பிக் கொடு என்றான். ஐஸ்கிரீமில்தான் இவர்களின் அன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அன்பு, உடலின் தேவைகளைச் சார்ந்த அன்பு இது ஈரோஸ் என கிரேக்க மொழியில் அழைக்கப்படுகிறது.

இயேசு பேதுருவை என்னை அன்பு செய்கிறாயா? என்று மும்முறை கேட்டார். மூன்று முறையும் பேதுரு இயேசுவை அன்பு செய்வதாக உறுதியளித்தார். மூன்று முறை என்பது முழுமையும், உறுதிப்பாட்டையும் விளக்குகிறது. அன்பு என்பது உணர்வது மட்டுமல்ல, அது வெளிப்படுத்தப்படுவது. அன்பு வெளிப்படுவது மட்டுமல்ல, அது வாழ்ந்து காட்டப்படுவது. இதை கிரேக்கத்தில் பிலோஸ் என்று அழைப்பர். வாழ்ந்து காட்டப்படும் போது உயிரையும் கொடுக்க வல்ல தியாகத்தில் ஊறியிருக்கும் அன்பை கிரேக்கம் அகாப்பே என்று அழைக்கிறது.


அன்பில் தோய்ந்தவர்கள் மட்டும்தான் மேய்ப்பர்களாக இருக்க முடியும். எனவே இயேசு பேதுருவின் அன்பின் வெளிப்பாட்டை ஏற்றதும் அவருக்கு மேய்ப்புப் பணியை ஒப்படைத்தார். அன்புள்ளம் கொண்டவர்கள்தான் பிறரைத் தேடமுடியும். பிறரை வழிநடத்த முடியும். தலைமைப் பொறுப்பில் அமர முடியும். பேதுருவின் அன்புக்கு ஆண்டவர் கொடுத்த பரிசு பொறுப்பு  தலைமைப் பொறுப்பு - மேய்ப்புப் பணி. இந்த அன்புக்கு பல முகங்கள் உண்டு ; மன்னிக்கும் முகம், அரவணைக்கும் முகம், சகித்துக் கொள்ளும் முகம், பிறரின் நலனுக்கு தன்னையே சிதைத்துக் கொள்ளும் முகம் இன்னும் பல.
ஒவ்வொருவருக்கும் பிறரை வழி நடத்தக்கூடிய பொறுப்பு உண்டு. பெற்றோர் குழந்தைகளை, நண்பர் நண்பரை, ஆசிரியர் மாணவர்களை, அலுவலர் பணியாளர்களை, இதுபோன்ற எல்லாரும் ஒருவகையில் பிறருக்கு அன்புகாட்ட அழைக்கப்பட்டுள்ளனர். அன்பிலே வாழ்வோம், அன்பை விதைப்போம், அன்பை அறுவடை செய்வோம்.

ஞாயிறு தரும் இறைவார்த்தை, பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 03 - 04 - 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை

அருட்பணி. சி. குழந்தை, காணியிருப்பு

                      பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு            03 - 04 - 2016

 தி.ப. 5 : 12 - 16,  திவெ 1 : 9 - 11அ, 12 - 13, 17 - 19 , யோவா 20 : 19 - 31

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அன்று தமிழ்த் தாய்மார்களிடம் ஒரு நல்லப் பண்பு இருந்ததாம். தம் மகன்களை போருக்கு அனுப்பும்போது நெற்றியில் வெற்றித்திலகமிட்டு அனுப்பி வைப்பர். நெஞ்சில் பாய்ந்த ஈட்டிகளோடு வீடு திரும்கிய மகன்களை மீண்டும் வெற்றித்திலகமிட்டு வரவேற்பர். முதுகில் அடிபட்டு வந்தவர்களை மீண்டும் போர்க்களத்துக்கே அனுப்பி வைப்பர்.
உலகமெல்லாம் அமைதிக்காக ஏங்கிக் கிடக்கிறது. உலகில் உண்டான போர்களினால் அமைதியை நிலை நாட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம். உண்மையான அமைதியை அளிக்கவல்லவர் உயிர்த்த இயேசு மட்டுமே. தான் உயிர்த்தபின் தன் சீடர்களுக்கு முதற் கொடையாக வழங்கியது அமைதி, அமைதியின் ஊற்றான தூய ஆவியார். தூய ஆவியாரின் அருளில் உருவான மன்னிப்பு. மன்னிப்பு அளித்தவர் புனித தோமாவையும் மன்னித்து திடப்படுத்தினார்.
யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருக்கையில் இயேசு தோன்றி, உங்களுக்கு அமைதி உண்டாகுக என்றார். சீடர்கள் தங்களையே பயத்தில் சிறைப்படுத்திக் கொண்டனர். பயம், வெட்கம், துரோகம் ‡ இவைபோன்ற குற்ற உணர்வுகள் அவர்களைத் தலைகுனியச் செய்து கூடத்திலே முடக்கிப் போட்டிருந்தது. ஒருவர் மறுதலித்து இருந்தார், மற்றவர்கள் புறமுதுகுக் காட்டி ஓடியவர்கள். இந்தப் பின்னணயில் தான் உயிர்த்த ஆண்டவர் அவர்களுக்குத் திடம், துணிவு, மன்னிக்கப்பட்டதன் உணர்வு, இய¼சுவின் ஏற்பு ‡ இதை சீடர்களின் இரண்டாவது அழைத்தல் எனலாம். இவைகளின் ஊற்றான தூய ஆவியார் ‡ போன்ற கொடைகளை வழங்கினார்.
இந்த அமைதியை ­லோம் என்ற எபிரேயச் சொல் குறிக்கிறது. ­லோம் என்ற வார்த்தை எல்லா நன்மைகளாலும் இணைந்து அதனால்வரும் கறைபடாத, களவாடமுடியாத அமைதியைக் குறிக்கிறது. இந்த அமைதியை பொன்னும், பொருளும், பெண்ணும், புகழும், பதவியும் கொடுக்க இயலாது. இறைவன் மட்டுமே ‡ கொடுக்க முடியும். எனவேதான் ஆண்டவர் இயேசு தன் உயிர்ப்பின் முதற் கொடையாக அமைதியை அளித்தார். எனவேதான் திருப்பலியில் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் என உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே என்று நினைவு கூறுகிறோம். இஸ்லாமியச் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் என்ற வார்த்தையைச் சொல்லித்தான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
உலகின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அமைதியின் சூழலில்தான் உருப்பெற்றன. அமைதியான சூழலில்தான் தெளிவுகள் பிறக்கும். தீர்மானங்கள் தெளிவுபெறும். கோபம், வர்மம், வைராக்கியத்தோடு களத்தில் எவர் பணியாற்றினாலும் பலன் தரமுடியாது. எனவேதான் ஆண்டவர் இயேசு தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகையில், யூதர்களையும் மன்னித்து, பயமின்றி பணியாற்றுங்கள் என்று சொல்லி அனுப்பினார். தன் நெஞ்சில் ஈட்டி ஊடுருவிய காயத்தழும்பையும் தோமாவுக்கு காண்பித்து, தானும் அவர்களை மன்னித்த உணர்வோடு புறப்படச் செய்தார். தூய ஆவியாரின் துணை கொண்டு, தொடர் துயர்களையும் வெல்ல முடியும் என தூய ஆவியாரை அவர்களுக்குக் கொடையாக வழங்கினார். யூதர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்த போது இந்த ஆவியார்தான் அவர்களை வெற்றிப் பாதையில் வழி நடத்தினார். இவர்களின் இத்தகைய செயல்பாட்டை முதல் வாசகம் தெளிவாகவே விளக்கிப் பேசுகிறது. அஞ்சாமல் பணியாற்றும் பண்பைத்தான் இரண்டாம் வாசகமும் விவரிக்கிறது. தூய ஆவியாரின் துணையோடுதான் யோவான் பணியாற்றியதாக இரண்டாம் வாசகத்தில் விளக்கினார். நாமும் பயமற்ற மனநிலையில் பணியை ஆற்ற அழைக்கப்படுகிறோம்.



“தாழி மாண்டதை மீட்போம்” (ஓர் இலக்கியக் கட்டுரை) அருட்சகோதரி. விமலி, இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

“தாழி மாண்டதை மீட்போம்”
(ஓர் இலக்கியக் கட்டுரை) 
அருட்சகோதரி. விமலி,
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

அன்பும் அறிவும் நிறைந்த என் அருமை நெஞ்சத்தீரே!... வணக்கங்கள்.
என் பெயர் தாழி!
திடுமெனப் பார்க்கும் பிறருக்கும், புத்தம் புதியவளாகத் தோன்றினாலும் நான் மிகமிகப் பழமையானவள்!... மேலும் மிகமிக மூத்தவள்!... இச்செய்தியை இவ்வுலகம் நன்கு அறியும்!

என் காலமோ ஆயிரம் ஆண்டுகள்தாம் என்கின்றனர் சிலர்! 3000 ஆண்டுகள், 5000 ஆண்டுகள், 10,000 ஆண்டுகள் என்றவாறு வேறுவேறு காரணங்கள் கூறி, மாறுபட்டும், கூறுபட்டும் கருத்துரைத்து வருகின்றனர் சிலர்! ஆமாம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலையிலாக!...

இவையாவற்றையும் தாண்டி மிகப் பல தலைமுறைகளுக்கும் மிக முன்னேயே உருவாகி ‡ பயனாகி ‡ நிறைவாக நிலைத்து நிற்பவள் நான்!...
இம்மண் நிரம்பவும் நன்மனம் நிரம்பியவராய் முந்தி வாழ்ந்தவர்கள் ‡ நான் வீழாது உயர்ந்திருக்கும், உருநிலைத்திருக்கும் இடங்களிலெல்லாம் நிலைத்து வாழ்கின்றார்கள். மிகப் பல்லாயிரம் ஆண்டுகள் காலப் பழமையினால், மிகப் பல இடங்களில், நான் மண்ணோடு மண்ணாகிப் போனேன்! அவர்களும் என்னோடு மண்ணாகி மட்கிக் கரைந்து மறைந்தனர்!

தாழிய பெருங்காடு என்றவாறு, புறநானூற்றுள் 364 ஆம் பாட்டினுள் 13 ‡ ஆம் வரியுள் வரும் வரலாற்று பதிவுத் தொடர் ‡ பண்டைய புதைப்பு முறை நெறிவழக்கையும், செயற்பாட்டுப் பெரும்பரப்பையும் தெரிவிப்பதாகும்.
பிறப்பு எப்படி இயல்பானதோ ... அவ்வாறே இறப்பு என்பதும் இயல்பான நிகழ்ச்சிதானே! ... பிறந்த உயிரிகள் ஒவ்வொன்றும் உரிய கால இறுதியில் இறப்பனவே! இறந்து தீர்வனவே!

எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டவைதாம் என்னும் இயற்கைப் பெரு நெறிக்கு இந்த பிறப்பும், இறப்பும் உட்பட்டனவே. என்றேனும் ஒருநாளில் நாம் இறப்பது உறுதி என்னும் மெய்த் தெளிவை அனைவர்க்கும் உருவாக்குதற்கு அவ்வக்கால அறிஞர் பெருமக்களும் “நிலையாமை” பற்றி மிக நிரம்ப எடுத்துரைத்திருக்கின்றார்கள்!

என் பெயர் தாழி என்றவாறு மிகப் பண்டைய நம் முதுமுன்னோர் சுட்டியுள்ளமையுள். அதாவது சுட்டிக் குறிப்பிட்டுள்ளமையுள் அமைந்துள்ள மொழியியல் உண்மைகள் சிலவற்றை உங்களுக்கு நான் விளக்க விரும்புகின்றேன்!

“தாழ்தல்” என்னும் சொல்லுக்குக் “கீழிருத்தல்” என்பது பொருளாகும்! பள்ளம் பறித்து - அதாவது ஆழ்ந்த குழியினைத் தோண்டி அதனுள்ளாக அடலினை இட்டு மூடிப் பொந்தியிருக்குமாறு அமைப்பதற்குப் பெறும் பெரிய மண்கலம். இத்“தாழ்தல்” என்னும் கருத்தின் அடிப்படையில் தாழ்+இ = “தாழி” என்றவாறு குறிப்பிடப் பெற்றுள்ளது! அப்படியாக நான் குறிக்கப்பட்டுள்ளேன்.
நிலைபெறுமாறு உள் அமையும்படியும் - தாழ் நிலையாகிக் கீழமைந்திருக்கும்படியாகவும் நின்று புதைப்புக்கெனப் பயன்பட்ட “தாழி” என்னும் நான் பிணத்தை உள்ளடக்கிக் கிடத்தற்கெனவே உருவாக்கப்பெற்ற பண்டைய மண்கலம் ஆவேன்! அதாவது ஆனேன்!

இறந்த உடலினை உள்ளிட்டு மூடிப் புதைக்கப் பயன்பெற்ற “தாழி” என்னும் பெயரில் என் மண்கல வகை - பிற பயன்பாடுகளுக்கும் காலச் சுழற்சிக்கிடையே மாந்தர் வாழ்வில் மேற்கொள்ளப் பெற்றுள்ளது.
உள்ளே வைத்து மூடப்பெறாத “தாழி” என்பதே இல்லை! எல்லாம் மூடப்பெற்றவைதாம்! அனைத்தினுள்ளும் பெரும் பண்பும் பேரறிவும் உயிரினுக்கும் அன்பு உணர்வும் வாய்த்திருந்த நம் முன்னோர் அடக்கம் செய்யப்பெற்றுள்ளனர். கடுங்களிமண் சேற்றுக் கட்டியை எடுத்து உருண்டையுருவாக உருட்டிக் கொண்டு அவ்வுருண்டையை மெல்ல மெல்லக் குடைந்து உட்பகுதி மண்ணைத் தோண்டியயடுத்துக் காயவைத்துப், பின்னர் விறகு செத்தைச் சருகுகளால் மூடித் தீயிட்டு வேக்கித் திடமான குடமாக வெளியிலெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் மாந்தர் நம் மூதாதையர் என்னும் உண்மையை, உலகினர் அனைவரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்!

‘குடம்’ என்னும் சொல்லே, குடைதல் எனும் வினைக் கருத்து அடிப்படையில் தோன்றியுள்ளது! “குழிசி” என்றவாறு பானையைக் குறித்து வழங்கிய தமிழ்ச்சொல்லும் குழிப்படுத்திய, மட்கலம் (பொருள்) என்னும் சொல்லுக்குள்ளும் அடிப்படையாகக் கொண்டதுவே! “கலம்” என்னும் சொல்லுக்குள்ளும் கல்லுதலாகிய தோண்டுதல் கருத்தே உட்கருவாகக் கிடக்கின்றது! “தோண்டி” என்னும் பொது மக்கள் பயன்பாட்டுப் பரவற் சொல்லுக்குள்ளும், உலகிலேயே முதன் முதலில் கலத்தினை ‡ அதாவது மண்கலத்தினைச் செய்து பயன்படுத்தியவர் நம்முடைய முன்னோரே என்னும் மட்கிக் கரைந்து மறைந்தனர்!

தாழிய பெருங்காடு என்றவாறு, புறநானூற்றுள் 364 ஆம் பாட்டினுள் 13 ‡ ஆம் வரியுள் வரும் வரலாற்று பதிவுத் தொடர் ‡ பண்டைய புதைப்பு முறை நெறிவழக்கையும், செயற்பாட்டுப் பெரும்பரப்பையும் தெரிவிப்பதாகும்.
பிறப்பு எப்படி இயல்பானதோ ... அவ்வாறே இறப்பு என்பதும் இயல்பான நிகழ்ச்சிதானே! ... பிறந்த உயிரிகள் ஒவ்வொன்றும் உரிய கால இறுதியில் இறப்பனவே! இறந்து தீர்வனவே!

எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டவைதாம் என்னும் இயற்கைப் பெரு நெறிக்கு இந்த பிறப்பும், இறப்பும் உட்பட்டனவே. என்றேனும் ஒருநாளில் நாம் இறப்பது உறுதி என்னும் மெய்த் தெளிவை அனைவர்க்கும் உருவாக்குதற்கு அவ்வக்கால அறிஞர் பெருமக்களும் “நிலையாமை” பற்றி மிக நிரம்ப எடுத்துரைத்திருக்கின்றார்கள்!

என் பெயர் தாழி என்றவாறு மிகப் பண்டைய நம் முதுமுன்னோர் சுட்டியுள்ளமையுள். அதாவது சுட்டிக் குறிப்பிட்டுள்ளமையுள் அமைந்துள்ள மொழியியல் உண்மைகள் சிலவற்றை உங்களுக்கு நான் விளக்க விரும்புகின்றேன்!

“தாழ்தல்” என்னும் சொல்லுக்குக் “கீழிருத்தல்” என்பது பொருளாகும்! பள்ளம் பறித்து - அதாவது ஆழ்ந்த குழியினைத் தோண்டி அதனுள்ளாக அடலினை இட்டு மூடிப் பொந்தியிருக்குமாறு அமைப்பதற்குப் பெறும் பெரிய மண்கலம். இத்“தாழ்தல்” என்னும் கருத்தின் அடிப்படையில் தாழ்+இ = “தாழி” என்றவாறு குறிப்பிடப் பெற்றுள்ளது! அப்படியாக நான் குறிக்கப்பட்டுள்ளேன்.
நிலைபெறுமாறு உள் அமையும்படியும் - தாழ் நிலையாகிக் கீழமைந்திருக்கும்படியாகவும் நின்று புதைப்புக்கெனப் பயன்பட்ட “தாழி” என்னும் நான் பிணத்தை உள்ளடக்கிக் கிடத்தற்கெனவே உருவாக்கப்பெற்ற பண்டைய மண்கலம் ஆவேன்! அதாவது ஆனேன்!

இறந்த உடலினை உள்ளிட்டு மூடிப் புதைக்கப் பயன்பெற்ற “தாழி” என்னும் பெயரில் என் மண்கல வகை - பிற பயன்பாடுகளுக்கும் காலச் சுழற்சிக்கிடையே மாந்தர் வாழ்வில் மேற்கொள்ளப் பெற்றுள்ளது.
உள்ளே வைத்து மூடப்பெறாத “தாழி” என்பதே இல்லை! எல்லாம் மூடப்பெற்றவைதாம்! அனைத்தினுள்ளும் பெரும் பண்பும் பேரறிவும் உயிரினுக்கும் அன்பு உணர்வும் வாய்த்திருந்த நம் முன்னோர் அடக்கம் செய்யப்பெற்றுள்ளனர். கடுங்களிமண் சேற்றுக் கட்டியை எடுத்து உருண்டையுருவாக உருட்டிக் கொண்டு அவ்வுருண்டையை மெல்ல மெல்லக் குடைந்து உட்பகுதி மண்ணைத் தோண்டியயடுத்துக் காயவைத்துப், பின்னர் விறகு செத்தைச் சருகுகளால் மூடித் தீயிட்டு வேக்கித் திடமான குடமாக வெளியிலெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிய உலகின் முதல் மாந்தர் நம் மூதாதையர் என்னும் உண்மையை, உலகினர் அனைவரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்!

‘குடம்’ என்னும் சொல்லே, குடைதல் எனும் வினைக் கருத்து அடிப்படையில் தோன்றியுள்ளது! “குழிசி” என்றவாறு பானையைக் குறித்து வழங்கிய தமிழ்ச்சொல்லும் குழிப்படுத்திய, மட்கலம் (பொருள்) என்னும் சொல்லுக்குள்ளும் அடிப்படையாகக் கொண்டதுவே! “கலம்” என்னும் சொல்லுக்குள்ளும் கல்லுதலாகிய தோண்டுதல் கருத்தே உட்கருவாகக் கிடக்கின்றது! “தோண்டி” என்னும் பொது மக்கள் பயன்பாட்டுப் பரவற் சொல்லுக்குள்ளும், உலகிலேயே முதன் முதலில் கலத்தினை ‡ அதாவது மண்கலத்தினைச் செய்து பயன்படுத்தியவர் நம்முடைய முன்னோரே என்னும் உண்மையும் புதைந்து கிடக்கின்றமையை சற்றே உற்று எண்ணினாலும் உணரமுடியும்! ... “தாழி” என்னப்பெறும் என்னுடைய கலவகையில் பதின்மூன்று எண்ணிக்கையிலான மண்கலப் பெயர் வகைகள் இன்றைய தமிழக மக்களின் பேச்சு வழக்கிலும், மரபுத் தொடர்ச்சிகளைப் பதிவு செய்து வைத்துள்ள இலக்கிய வழக்கிலும், தொல்லியற்பதிவு வழக்கிலும், பரவலான பதிவுகளாக நின்று பயன்பாடு கொண்டுள்ள உண்மையை, உலகினர் யாவரும் உணர்தல் வேண்டும்!

இவ்வழக்காறுகளுள் ஒன்றான “ஈமத்தாழி” என்றவாறு தொன்முதுகாலத்திலேயே சுட்டப் பெற்றவளான நானே, இன்று பண்டைப் பழம், பழைய புதைவிலிருந்து வெளிவந்து நிலைநின்று உங்கள் சிந்தனைக்கென, எண்ணத்திற்கென - கருத்திற்கெனச் சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றேன்!

பெருமைக்குரிய அன்பு மாந்தர்களே! இதனை நன்றாக நினைவில் நிறுத்துங்கள்! இலட்சக்கணக்கான பெரும்பெருஞ் சான்றோர்கள், ஆன்ற அறிஞர்கள், அறிவியல் நோக்கார்ந்த நுண்ணியர்கள், அறநெறியில் நிலைநின்று வாழ்வியல், உலகியல் பற்றிய கருவுண்மைகளைக் கண்டறிந்து, அம் மெய்ம்மங்களைக் கண்டறிந்து, வெளிப்படுத்திய முனைவர்கள் என்றவாறு, மிகப் பெரும்பாலோர் ஆகிய நம் முதுமுன்னோர்கள், என் போன்ற தாழிகளுக்குள்தான் அடக்கமாயினர்!

அவர்கள் அனைவரும் - தம் பிறங்கடையினராகிய நாம், நலமும் வளமும் மனச்செழுமையும் உடையோராகச் சிறந்து வாழ வேண்டும் என்று நினைத்து, உய்ந்து மேம்படுதற்கெனப் படைத்தளித்த அறிவுக் களஞ்சியங்களை மதிப்போடு பயன்படுத்தினோமா? ... அவர்களின் நாகரிகப் பாங்குகளை, அவர்கள் மேற்கொண்டொழுகிய பண்பாட்டு முறைகளை, நாம் நம் வாழ்க்கையில் மேற்கொள்ளுதற்குச், சற்றேனும் முயற்சி மேற்கொண்டோமா? அவர்களின் நோக்கங்களை எண்ணிப் பார்த்தோமா? நாம் எதனையுமே செயற்படுத்த முனையவில்லையே! அவை பற்றியயல்லாம் சிந்திக்கவே நமக்கு நேரமில்லாது போயிற்றே! ...

நம் பண்டைய மாட்சிமையை நாம் உணருவது எப்போது? ... நம் மறத்தை ‡ அறத்தை - மாண்பை - மானத்தை - ஈகைப் பேருணர்வைத் தெளிவாக உணர்வது எப்போது? ...

உங்களின் பெருமைக்குரிய திறமும், அறமும் செறிந்த முதுமுன்னோர்களைச் சுமந்து புதைபட்டுக் கிடக்கும் தாழிகளாகிய, ஈமப் பேழைகளின் சார்பாகப், புத்துணர்வு, எழுச்சியுடனும் பண்டைப் பழைய வீரவுணர்வுடனும், தெளிவார்ந்த உணர்வுப் பெருக்கம் வாய்ந்த, நல்லூக்கத்துடனும், வேட்கையுடனும் செந்நிறத் தாழியாகிய நான் உங்கள்முன் ஒரு நம்பிக்கையுடன் நிலைநிற்கின்றேன்! ...
“என்னுள் புதைந்திருக்கும்
அரிய பல செய்திகளையும்
ஆழமிகு சவால்களையும்
அழுத்தமிகு சாத்தியங்களையும்
தோண்டி யயடுப்பது ...!
தேடி ... பெறுவது
என்பதே என்றும் வலிமையானது”.

திருப்பலியும், இறைமக்களும், - எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

திருப்பலியும், இறைமக்களும்

- எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் ஒப்புக் கொடுத்த அதே பலிதான் இன்று பீடங்களில் அடையாளங்கள் வழியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறது என்றும், இது இன்று நடைபெறுவதற்கு திருஅவையின் செயல் அவசியமாக உள்ளது என்றும் கூறினோம். அதாவது திருப்பலி கிறிஸ்துவின் பலியாக இருந்தாலும், அதே சமயத்தில் அது திருஅவையின் பலியுமாகும். திருஅவை என்பது இங்கு பலியை ஒப்புக் கொடுக்க அருள்பணியாளர்களையும், அதில் பங்கு பெறும் நம்பிக்கையாளர்களையும் குறிக்கும்.
திருப்பலியில் அருள்பணியாளரின் செயல்பாடுகளைப் பற்றி முந்தின சிந்தனையில் விளக்கினோம். இப்பொழுது திருப்பலியில் பங்கு பெறும் நம்பிக்கையாளர்களின் (இறைமக்களின்) செயல்பாடுகள் பற்றி விளக்க முற்படுவோம்.

நம்பிக்கையாளர்களும் குருக்களே :

திருப்பலியில் அருள்பணியாளருடன் சேர்ந்து பலியை ஒப்புக் கொடுக்கும் இறைமக்களும் கிறிஸ்துவின் ஒரே குருத்துவத்தில் பங்கு பெற்றவர்களே. கிறிஸ்து “கடவுளின் புது மக்களாக இருக்கவும், ஊனியல்புக்கு ஏற்ப அல்லாமல், ஆவியிலே ஒற்றுமை பெறவும், யூதர்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் ஒரு குலத்தை அழைத்தார்” (திருச்சபை எண் 9). தலைமை குருவாகிய கிறிஸ்து இப்புதுமக்களை “ஆட்சி உரிமை பெற்றவர்களாக, தம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக ஏற்படுத்தினார்” (தி. வெ. 1 : 6; காண் 5 : 9 ‡ 10). “ஏனெனில், தம் மறுபிறப்பாலும், தூய ஆவியின் பொழிதலாலும் திரு முழுக்குப் பெற்றவர்கள் அருள் இல்லமாகவும், தூய திருப்பணி நிலையினராகவும் திருநிலைப்படுத்தப் பெற்றுள்ளனர்” (திருச்சபை . 10)

இவர்களுடைய குருத்துவம் பொது குருத்துவம் (Common Priesthood) எனப்படுகிறது. இது தரத்திலும் இயல்பிலும், பணிக்குருத்துவத்திலிருந்து (Ministerial Priesthood) வேறுபட்டாலும் அதோடு நெருங்கியத் தொடர்புடையது. ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய முறையில் கிறிஸ்துவின் ஒரே திருப்பணி நிலையில் பங்கு கொள்கின்றன (காண் திருச்சபை 10&2).

நம்பிக்கையாளரின் குருத்துவப் பணிகள் :

“திருப்பணிநிலை குழுவின் தூயப் பண்பும் உயிர் அமைப்பும் அருளடையாளங்கள் மூலமும், நற்பண்புகள் மூலமும் செயல்படுகின்றன” (திருச்சபை 11). இதிலிருந்து இவர்களது குருத்துவப் பணிகள் இருவகைப்படுமெனத் தெரிகிறது. ஒன்று உள்ளரங்க, அதாவது ஞானக் குருத்துவப் பணிகள் Spiritual Priestly Functions; மற்றொன்று வெளிப்படையான அருள் அடையாளங்களுக்கடுத்தக் குருத்துவப் பணிகள் Sacramental Priestly Functions.

திருப்பலியில் செயல்படுவது இறைமக்களின் அருள் அடையாள குருத்துவப் பணியாகையால், இதுப்பற்றி மட்டும் இங்கு விளக்குவோம். “ அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சியுமான நற்கருணைப் பலியில் பங்கு கொண்டு தெய்வீகப் பலிப்பொருளையும், அஃதோடு தம்மையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். இவ்வாறு ஒப்புக்கொடுப்பதாலும், நற்கருணை உட்கொள்வதாலும் அனைவரும் ஒரே வகையில், ஒவ்வொருவரும் தத்தமக்குரிய முறையில் , திருவழிபாட்டுச் செயலில் தம் பங்கை நிறைவேற்றுகின்றனர்” (திருச்சபை 11&1) என்று இவர்களுடைய பொது குருத்துவம் திருப்பலியில் செயல்படும் விதம் விளக்கப்பட்டுள்ளது.

தத்தம் முறையில் இறைமக்கள் அனைவரும் திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறார்கள். அதாவது, தங்கள் உழைப்பின் பயனும், நிலத்தின் விளைவுமாகிய அப்பத்தையும், இரசத்தையும் இறைமக்கள் காணிக்கையாகக் கொண்டு வருகிறார்கள். அப்பமும், இரசமும் இல்லாமல் பீடத்தில் பலி ஒப்புக்கொடுக்க முடியாதாகையால் இவர்களுடைய செயல் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அப்பம், இரசத்தின் வழியாக இவர்கள் தங்களையே, அதாவது தங்களுடைய உழைப்பு, அதனால் வரும் களைப்பு, தங்கள் அருள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தையும் இவற்றின் வழியாகக் காணிக்கையாக்குகிறார்கள். திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர் இவர்களது காணிக்கைகளை ஏற்று மக்கள் பெயரால் இறைவனுக்கு ஒப்புரவாக்கப்படுகிறார். “பணியாற்றும் திருப்பணியாளர் தாம் பெற்ற தூய அதிகாரத்தால் .... எல்லா மக்கள் பெயராலும் கடவுளுக்கு அதை ஒப்புக்கொடுக்கிறார். நம்பிக்கை கொண்டோரோ தம் அரசத் திருப்பணி நிலையால் நற்கருணைப் பலியை ஒன்றித்து ஒப்புக்கொடுக்கின்றனர்” (திருச்சபை 10). திருத்தந்தை இன்னசென்ட் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது : “குருக்கள் மட்டுமல்ல, விசுவாசிகளும் பலி ஒப்புக்கொடுக்கிறார்கள். குருக்கள் சிறப்பு முறையில் செய்வதை விசுவாசிகள் உள்ளத்தளவில் அவரோடு ஒன்றித்து ஒப்புக்கொடுக்கிறார்கள்”. அதாவது அருள்பணியாளர் அப்பத்தையும், இரசத்தையும் இறைமக்கள் பெயரால் ஒப்புக்கொடுக்கும்போது, ஒவ்வொரு நம்பிக்கையாளரும் அருள்பணியாளரோடு மனதில் ஒன்றித்து ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஒரே சமயத்தில் இறைமக்கள் அப்பத்தையும், இரசத்தையும் படைப்பு பொருள்களின் முதற்கனிகளாகவும், தங்களது ஞானப் பலியின் அடையாளமாகவும் அதே பொருள்களை கிறிஸ்துவின் பலிப்பொருள்களின் அடையாளமாகவும் ஒப்புக்கொடுக்கிறார்கள்.
திருப்பலியில் அருள்பணியாளர் மூன்று விதங்களில் செயல்படுகிறார். மக்கள் பெயரிலும், கிறிஸ்து பெயரிலும், தம் பெயரிலும் பலி பொருள்களை அதற்குரிய நேரங்களில் ஒப்புக்கொடுக்கிறார். “சகோதர சகோதரிகளே என்னுடையதும், உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்” என்று அழைப்பது திருப்பலி மக்களுடைய பலியும் என்பதை உணர்த்துகிறது. மேலும் திருப்பலியில் சொல்லப்படும் காணிக்கைமீது மன்றாட்டுகளும், மற்ற செபங்களும் இதைச் சுட்டிக் காட்டுகின்றன. “நாங்கள் ஒப்புக்கொடுக்கும்” என்ற சொற்றொடரும், “இறைவா, உம் ஊழியர்களாகிய நாங்களும், உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை மனமுவந்து ஏற்றருளும்” என்று குரு செபிப்பதில் வரும் “குடும்பம் முழுவதும்” என்பதும் இறைமக்களைக் குறிக்கின்றன. எனவே இறைமக்கள் உள்ளத்தளவில் இச்செபங்களோடு இணைந்து செபிக்கும் போது தங்கள் குருத்துவப் பணியைச் செய்கிறார்கள்.

மற்றும் எழுந்தேற்றத்துக்குப்பின் அப்பம், இரசத்தில் தம் உடலோடும், இரத்தத்தோடும் பிரசன்னமாகி இருக்கும் கிறிஸ்துவையே இறைமக்கள் தந்தையாகிய கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கலாம். அப்போது கிறிஸ்துவின் பலி இவர்களுடைய பலியாகிறது. எனவேதான் முதல் நற்கருணை மன்றாட்டில் எழுந்தேற்றத்துக்குப்பின் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களும் உம் புனித மக்களுமாகிய நாங்கள் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளிலிருந்து நிலைவாழ்வு தரும் புனித அப்பத்தையும், நிலையான மீட்பளிக்கும் திருக்கிண்ணத்தையும் தூய, புனித, மாசற்ற பலிபொருளாக மாட்சிமைமிகு உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்” என்று அருள்பணியாளர் செபிக்கிறார். இதில் வரும் “புனித மக்கள்” திருப்பலியில் பங்கேற்கும் நம்பிக்கையாளர்களைக் குறிக்கின்றது. அவர்கள் இயேசுகிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். எனவே அருள்பணியாளரோடு ஒன்றித்து இச்செபத்தை மனத்தளவில் சொல்லும்போது தங்கள் குருத்துவப் பணியை நிறைவேற்றுகிறார்கள்.

சுருங்கச் சொல்லின், நம்பிக்கையாளர் திருப்பலியில் “மு (Active) ழுமையாகவும் (Full), உணர்ந்தும் (Conscious), ஆக்கப்பூர்வமாகவும்செயல்படும்போது” தங்கள் குருத்துவப் பணியை நிறைவேற்றுகிறார்கள்.

நம்பிக்கையாளர்களே பலிபொருளாக வேண்டும் :

“அருள்பணியாளரோடு தங்கள் மனதையும் ஒன்றித்து பலியில் பங்குபெறும் போது, தங்களையும் சேர்த்துப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். திருப்பலியில் நம்பிக்கையாளர் தெய்வப் பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பது பயனுள்ளதாக மாற வேண்டுமானால் தங்களையும் பலிப்பொருள்களாக ஒப்புக்கொடுக்க வேண்டும்“ என ‘இறைநடுவர்’ (Mediator Dei) என்ற சுற்றுமடலில் திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் கூறுகிறார் (எண் 103).
இரசத்தோடு கலக்கப்படும் துளிநீர் தன் இயல்பை இழந்து இரசமாக மாறுவது போல், கிறிஸ்துவாகிய பலிப்பொருளோடு தங்களையும் சேர்த்து ஒப்புக்கொடுக்கும்போது அது தெய்வீகப் பலிப்பொருளின் மதிப்பை இறைவன் முன் பெறுகிறது. இதற்குச் சிறந்த நேரம் எழுந்தேற்றத்துக்குப் பின்வரும் நேரமாகும். கிறிஸ்து பலியான விதத்தில் பீடத்தில் இருக்கிறார். அவரோடு ஒன்றித்து அனைவரையும், தங்களையும் சேர்த்து தந்தையாகிய கடவுளுக்கு இவர்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

முடிவுரை :

கிறிஸ்து என்னும் அஸ்திவாரக் கல்லின்மேல் எழுப்பப்படும் கட்டிடத்தின் உயிருள்ள கற்கள் இறைமக்கள். எனவே அவரில், அவர் வழியாக இறைவனுக்கு ஏற்ற ஞானப்பலிகளை தங்கள் அன்றாட வாழ்வில் ஒப்புக்கொடுக்க வேண்டும் (காண் 1 இரா 2 : 5). “கடவுளுக்குகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு” (உரோ 12 : 1) என்று புனித பவுல் குறிப்பிடுவது இவர்களின் வாழ்க்கைப்பலியைக் குறிக்கிறது. இது எப்பொழுதும், எங்கும் தங்களைப் பலியாக்கி கிறிஸ்துவின் பலியோடு ஒன்றிக்க முடியும் என்று காட்டுகிறது (காண் இ.ந.104, 85).

திருப்பலிக்கும் இவர்களுடைய அனுதின வாழ்வுக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்க வேண்டும். “சென்று வாழுங்கள்; திருப்பலி நிறைவேறிற்று” என்று சொல்லப்பட்டு உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே தங்கள் அந்தஸ்தின் அலுவல்கள் மத்தியில் நேரிடும் இன்ப, துன்பங்களையும், புரிகின்ற தியாகங்களையும் திருப்பலியோடு தொடர்புபடுத்தி ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“முடிந்தது அந்த பீடப்பலி - இனி
தொடங்குவது நம் வாழ்க்கைப்பலி”.
தொடரும்...

Ads Inside Post