Pages - Menu

Friday 3 November 2017

புனிதர்களின் தினம்

புனிதர்களின் தினம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி

கற்பனை சிறுகதை

நவம்பர் மாதம் என்றாலே சகல ஆன்மாக்களின் தினம் ஞாபகத்துக்கு வரும். கிறிஸ்துவர்கள் எல்லோரும் கல்லறை தோட்டத்திற்கு சுற்றுலா சென்று தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பூ, சாம்பிராணி போடுவது வழக்கம். பணக்காரர்கள் செய்யும் அலங்காரம் இருக்கே அது அவர்களின் பெருமையின் தம்பட்டம். போட்டிப்போட்டுக் கொண்டு அலங்காரம் இவர்கள் செய்வதன் அர்த்தம்தான் என்ன?, அடுத்த நாளே வாடி வதங்கிவிழும் பூவுக்கா, இந்த செலவு?, வாடி வதங்கி நிற்கும் ஏழைகளுக்கு இவர்கள் செய்யும் தானமும் போலிதானே... ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்து அலுத்தவிட்டது. 

இந்த வருடம் சகல புனிதர்களின் தினத்தை எப்படி கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடு, நவம்பர் முதல் தேதியன்று கோவிலுக்குப் போனேன். சகல புனிதர்களின் திருநாள் பூசை நடந்து கொண்டிருந்தது. சர்ச்சில் அதிகம் கும்பலை காணோம். சாமியாரும், கன்னியர்களும் மட்டும் ஒருவருக்கொருவர்  “HAPPY FEAST”  சொல்வார்கள் என்று பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை.

ஒன்றும் சுவாரசியமாக இல்லையே என்று நினைத்துக் கொண்டே சர்ச் வாசலில் புதிய பங்கு சாமியார் “ புனிதர்களின் தோட்டம்”  என்று ஒரு இடத்தில் பூச்சட்டிகளை வைத்து கார்டன் போல் அமைத்து புனிதர்களின் சில சிலைகளை வைத்து அழகு  படுத்தி இருந்தார். ரம்யான இடம். சோலையின் மூலையில் சவுகரியமாக அமர்ந்து கொண்டேன். வேப்ப மரக்காற்று ஜில்லென்று என் மேலே பட என்னை மறந்து சில நிமிடங்கள் அயர்ந்தேன்.

தேவலோகம் செல்லும் வழி எல்லாம் விதவிதமான பூச்செடிகள், கொடிகள் வாசம் நிறைந்த பூக்களை கொண்ட மரங்கள் இனிமையான மணத்துடன் காற்றில் கலந்து என்னை தொட்டது. திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம், சின்ன வயதில் ளீழிமிeஉஜுஷ்விது   கிளாஸ்சில் சிஸ்டர் நரகத்தைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மோட்சத்துக்கு போகும் வழி கரடு முரடாகவும், துன்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று சொன்னார்களே?, நரகத்துக்கு போகும் வழிதான் சோலைகளும், மலர்களும், கேளிக்கைகளும் நிறைந்த இடமாக இருக்கும் என்று சொன்னார்களே?, டிராக் மாறி வந்து விட்டேனோ?

என்ன தொல்லை இது? எப்படி புனிதர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது ஒரு ஸிழிஐd னிழிrவ  இல்லை. ஒரு மைல் ஸ்டோன் இல்லை.  சகல புனிதர்களின் கொண்டாட்டத்திற்கான எந்த அறிகுறியும் இல்லையே...

சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கான விளக்கமாக சிஸ்ட்டர் அப்படி சொல்லி இருப்பார்களா?  அப்படி என்றால்  உண்மை தான் என்ன? உலக காரியங்களில் மூழ்கி கடவுளை மறந்து தப்பாக வாழ்வது தப்பு, அந்த இன்பம் நிலையானது அல்ல என்று சொல்வதற்காக  அப்படி சொல்லி இருப்பார்களா?

கரடு முரடான பாதையில் கஷ்டப்பட்டு நடந்தால், நேர்மையாக வாழ்ந்தால் ( அது எல்லோருக்கும்  எளிதல்ல) கடவுளின் வழியில் நடந்தால் தான் மோட்சத்துக்கு போக முடியுமோ? அங்கே ஒரு அமைதியான சுத்தமான பாதை தெரிகிறதே அதுதான் உண்மையான வழியாக இருக்குமோ?, சென்று பார்ப்போம். வாவ்.. அழகான வாசல்... வாசலில் வாட்ச்மேனை காணோமே?, ஏதாவது Tips  குடுத்து உள்ளே நுழைந்து விடலாம். பூலோக புத்தி இது. என்ன செய்ய?, பழக்க தோசம், லஞ்சம் குடுத்து காரியம் சாதித்தே பழக்கம். ஆனால், லஞ்சம் குடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இது எங்கள் ஸ்லோகம். வாட்ச்மேன்தான் இல்லை, காலிங் பெல்லாவது இருக்குமே என்று தேடினேன். ஒன்றையும் காணோம். என்ன செய்யலாம்? கதவை தட்டலாமா? என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே இரண்டு இறக்கைகளுடன் அழகான ஒரு சம்மனசு என் முன்னே தோன்றினார்.

ஆஹா... என்ன அழகு... இதுதான் தெய்வீக அழகோ.. என்னைப்பார்த்து புன்னகித்தார். எனக்கு ரொம்ப சந்தோ­மாக இருந்தது. கோவிலில் உள்ள சம்மனசு சுரூபத்தைவிட அழகாக இருந்தார். தேவதூதர்களுக்குத்தான் எல்லா மொழியும் தெரியுமே என்று தமிழில் பேசினேன்.

‘அழகான தேவதூதரே, நான் உள்ளே வந்து சகல புனிதர்களையும் சந்திக்க வேண்டும்’ என்று கூறினேன். தேவதூதர் ‘நல்லது.... ஆனால் நீங்கள் சாதாரணமாக உள்ளே நுழைய முடியாது. அதற்கான  ID Proof   வேண்டும்.

‘அய்யோ... இங்கேயும்  ID Proof,  ஆதார் அட்டை,  Pan card,  ரே­ன்கார்டு கேட்பார்கள் போலிருக்கிறதே. இங்கேயும் மோடி  Formula  வரி?, என்ன  ID Proof ?, தேவதூதரே...

‘நீங்கள் தேவனும் புனிதர்களும், நல்ல ஆத்மாவும் வாழும் இந்த இடத்திற்குள் நுழைய தகுதி பெற்றவர் என்ன சான்றிதழுடன் உங்களது ஒரிஜினல்  ID Proof  வேண்டும்.

‘அப்படியா..  என்னிடம் எதுவும் இல்லையே... வேணுமென்றால் எங்கள் ஆடுயு வை போனில் சிபாரிசு  செய்ய சொல்லட்டுமா?’
‘என்ன சொல்கிறீர்கள்?, எனக்கு ஒன்றும் புரியவில்லை’.

‘சரி ... எங்க மினிஸ்டரைவிட்டே Phone பண்ண சொல்கிறேன்’.
‘என்னப்பா... தப்புதப்பா பேசுகிறீர்கள், நீங்கள் பேசுவது சரியல்ல.

‘என்ன இவருக்கு சிபாரிசு பிடிக்காது போல, பணம் ஏதும் எதிர்பார்ப்பாரோ?, லஞ்சம் கொடுத்த பழக்கதோ­ம், பணம்தான் பாதாளம் மட்டும் பாயும் என்கிறார்களே.. தேவலோகத்திலும் பாயலாம் இல்லையா?, என் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்போம்’ எனது பேண்ட் பாக்கட்டை துழவினேன்.

ரொம்ப எதுவும் இல்லை, மோடியின் பண மதிப்பு குறைப்புக்குப்பின் வெளிவந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்று இருக்கிறது, ரூபாய் ஐயாயிரம் கொடுப்போம். எப்படி கொடுப்பது? ஆறாயிரம் இல்ல இருக்கிறது, எப்படியும் அவரிடம் ஏற்கனவே பலரிடம் வாங்கிய பணம் இருக்கும், அதில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு வாங்கிக்கலாம்.

‘சரி உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?, சொல்லுங்க’

‘எனக்கு விளங்காத பொருளில் பேசுகிறீர்கள், நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது, நீங்கள் கடவுளின் வார்த்தையின்படி நல்லவராக, ஒழுக்கமுள்ளவராக, கடவுளின் கட்டளைகளின்படி வாழ்ந்து மரித்து, புனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் தகுதி பெற்றவர் என்ற சான்றிதழ் வழங்கபட்டிருந்தால் அதை பார்த்து உங்களை உள்ளே அனுமதிப்பேன் என்றுதான் தங்களிடம்; ID Proof கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு விளங்காத, இந்த இடத்தில் இல்லாத நடைமுறைகளைப் பற்றி பேசுகிறீர்கள் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்”, தேவதூதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து விட்டார். தேவதூதர் மறைஞ்சிட்டாரே, இப்ப என்ன பண்றது? நம்ப கிரிமினல் வேலை எல்லாம் இங்க ஒத்துவராது போல, தப்பு பண்ணிட்டோம், திரும்ப போக வேண்டியதுதான். புனிதர்களை பார்க்கனும்ன்னா நாம முதல்ல கல்லறைக்கு போணும், அப்புறம் தான் நமக்கு சிஐமிrழிஐஉe கிடைக்கும். அதுக்கும் முன்னால நான் பாவம் செய்யாம,  நல்லவனா, கடவுளோட அன்புக்குரியவனா மாறுனாத்தான் Entrance ID  கிடைக்கும். முதல்ல என் கெட்டபழக்கத்த எல்லாம் விடனும்.

வேப்பம் மரம் என் முகத்தில் விழுந்தோன படார்னு முழிச்சேன்.
“நான் இப்ப எங்க இருக்கேன்?, இப்ப நான் பார்த்தது எல்லாம் கனவா? பகல் கனவு கண்டிருக்கேன்.

சரி, முதல்ல கல்லறைக்குப் போனத்தானே, பரலோகம் போக முடியும், அப்ப ஏன் புனிதர்கள் தினத்தை முதல்லைçயும், கல்லறைத் திருநாள இரண்டவதா வெச்சிருக்காங்க, நம்மள  கேட்டிருந்தா சொல்லியிருக்கலாம்.

சகல புனிதர்களோட கொண்டாட்டத்த நாம அங்க போகும்போது பார்த்துக்கலாம்.

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில் 

பாடல் எண் - 13   - என் இனிய இளவேனிற் காலம்
- சலூசா
எண்சீர் ஆசிரிய விருத்தம்

பணியாத காமமுதிர் வேனிற் காலம்
பட்டாற்றா தழுங்கடகார் கால மாகிக்
கணியாத நரகச்ச முகுக்குங் கூதிர்க்
காலத்துண் ணடுங்கியபின் கால மும்போய்த்
தவ ஞானம் பூப்பவின வேனிற்கால
மணியாத திருக்காவலூரா ளன்னை
யடிக்கடிமைப் பட்டுற்ற கால மாலோ.

 ஆடி ஆவணி முதுவேனிர் காலம்.
 ஆடி அடங்கும் வாழ்க்கையிலே
 அடங்கா காமம் நிறைந்திடும் சோகம்
 காமம் வெகுளி மயக்கம் நீங்கி

பாவம் எண்ணி அழுது புலம்பி
சாபம் வருமென சங்கடப்பட்டு
கண்ணீர் சிந்தும் மழை உதிர் காலம்
ஆனி புரட்டாசி கார் காலம் - சேர்ந்து

ஐப்பசி கார்த்திகை கூதிர்க் காலம்
 அச்சம் கொண்டு நரக பயத்தால்
 அங்கம் கரைந்து மெல்லுடலாகி
 உள்ளம் நடுங்கும் குளிர் காலம் -போனபின்

மார்கழி தை முன் பனிக்காலம்
பாவம் குறையா பதற்ற காலம்.
மாசி பங்குனி பின் பனிக் காலம்
  நோயும் குறையா மிகு படு காலம் - கடந்து

காமமும் அழுகையும் மெலிவும் பிரிவும்
 நோய்களில் நடந்து காலத்தை கடந்து
 ஞானம் தோன்ற நடந்து வந்தேன்
 இளவேனிற் காலம் இனிது நோக்கி

ஞானம் நிறைந்தது ஞாலம் மகிழ்ந்தது
  காவலூர் அன்னை தாமரைத் திருவடி
  அடிமையாகி சேவடி புரிந்தேன்
அங்கமெல்லாம் பொங்கி மகிழ்ந்தேன்

அதுவே எனக்கு இளவேனிற் காலம்
 சித்திரை வைகாசி சீர்மிகு காலம்
 அடைக்கல அன்னை தேர் உலாக்காலம்.
       
கூதிர்காலம் - குளிர்காலம்.                                                         

அரசியல் அரங்கில் நம் தலைமை?

அரசியல் அரங்கில் நம் தலைமை?

 பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ M.A.; B.L.; M.Phil.; Ph. D
அறியாமை இருளில் அகப்பட்டு, ஆதிக்க சக்திகளால் சூறையாடப்பட்டு, உண்மை எதுவென்று தெரியாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆமையாய் - ஊமைகளாய், அடிமைகளாய்ப் பெரும்பாலான சாமானிய மக்கள்  இன்று பொது வாழ்வில் படும் இன்னல்கள் ஏராளம் ஏராளம்.

சுறாக்களும், திமிங்கிலங்களும் சதிராடும் ஆழ்கடலில், சுற்றியடிக்கும் சூறாவளியில் சிக்குண்டு, கரை சேரமாட்டோமா என்று ஏக்கப் பார்வையுடன் தவிக்கும் கப்பல் மாலுமிகள் போல் மக்கள் வறுமைக் கடலிலிருந்து மீண்டு, வளமை என்ற கரையைச் சேரத் துடிக்கின்றனர். அக்கரையை அனைவரும் அடைய இன்று நமக்குத் தேவை. ஒரு தன்னலமற்ற மனிதநேயத் தலைமை!

எத்தகைய இருள் சூழ்ந்தாலும், ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை எவ்வாறு  அந்தக் காரிருள் மறைக்க முடியாதோ அதுபோலத்தான் சுயநலமற்ற, ஆற்றல்மிகு, அறிவுசார்ந்த மனிதநேயத் தலைமையை அரசியல் கபடமோ, கயமையோ, வீழ்த்த முடியாது. அண்ணல் மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராசர், மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார், எளிமையின் ஏந்தல் கக்கன், கண்ணியமிக்க காயிதே மில்லத், ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு, ஆசிரியர் உலகத்தின் ஆதவன், டாக்டர்.ராதாகிருஷ்ணன், வீரத்தின் விளைநிலம் சர்தார் வல்லபாய் படேல், இறையன்பின் ‡ பிறரன்பின் கதிரொளியயன ஆன்மீகப் பட்டொளி வீசிய அன்னை தெரசா, ஆன்மீகத்தின் அளப்பரும் ஆற்றலை இளைஞர்களுக்கு உணர்த்திய வீரத்துறவி விவேகானந்தர், எத்தனை முறை தோற்றாலும் இறுதி வெற்றி எனதே என்று வென்று அமெரிக்கா ஜனாதிபதி இருக்கையில் அமர்ந்த ஆபிரகாம் லிங்கன், தென்ஆப்பிரிக்க காந்தி நெல்சன் மற்றும் தன் இன்னுயிர் ஈந்து மண்ணுயிர் வாழ சுதந்திரப் போராட்ட வேள்வியில் தேக்குமரத் தேகங்களைத் தீக்கிரையாக்கிக் கொண்ட இலட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களைப்போல, இன்று நாம் 21- ஆம் நூற்றாண்டில் உள்ளனரா அத்தகைய ஆளுமை? ஏனிந்த தலைமைப் பஞ்சம்? விடை தெரியாமல் விழிக்கின்றோம்!
இன்று வாய்ச்சொல் வீரர்களாக வெற்றுப்பேச்சில் காலத்தை வீணடிக்கும் மக்கள் ஏராளம். நியாயவிலைக் கடை அரிசி வாங்க மட்டுமே என்னிடம் பணம் உள்ளது, என்று சொல்லிய தமிழக முதல் பெருந்தலைவர் காமராசரிடம் சமையல்காரர் வைரவன், ‘ஐயா! அரிசி வாடை அடிக்கிறது’, அதனால் சொன்னேன் என்று மறுமொழி கூற, கர்மவீரர் காமராசர் இரண்டு சொட்டு நெய் விடு, அந்த வாசனையில் நான் சாப்பிட்டுக் கொள்கிறேன், என்று பொதுப்பணத்தைத் தீயாகக் கருதித் தொட மறுத்த காமராசர் எங்கே? தன் சொந்த அன்னை தண்ணீர்  எடுக்கத் துன்பப்படும்போது, முதல்வர் காமராசருக்குத் தெரியாமல் அருகிலேயே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டபோது, 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க  
சான்றோர் பழிக்கும் வினை

 என்ற வள்ளுவர் வழிநின்று, அந்தக் குடிநீர்க் குழாயை உடனடியாக அப்புறப்படுத்த சொன்ன, உண்மைக்கும், நேர்மைக்கும், உழைப்புக்கும் இலக்கணமான காலா காந்தி ( கறுப்பு காந்தி ) என்று வடநாட்டு மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட காமராசர் போன்ற ஆளுமை எங்கே? 21 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளை நிறுவி, இலவச மதிய உணவு திட்டத்தை  அமல்படுத்தி, இலவசக் கல்வியை 11‡ஆம் வகுப்புவரை விரிவுப்படுத்தி, அணைகள் பல கட்டி, விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி  BHEL, NLC என்று தமிழ் நாடெங்கும் தொழிற் பேட்டைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய, பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் பாசத்தோடு அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசரின்  ஆளுமை இன்று வெறும் கனவா? இந்திய அரசியலில் ஒரு அபாரப் புனிதனாக வாழ்ந்து காட்டிய  காமராசர் கிறிஸ்தவப் பெருமக்களாகிய நமக்கு அரசியல் அரங்கில் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு!

இன்றைய அரசியல் அவலங்களைக் கண்டு சமுதாயத்தில் இன்று அரசியல் என்றாலே அருவருப்பான ஒன்று என்று அனைத்துத் தரப்பினரும் வெறுத்து ஒதுக்ககூடிய சூழ்நிலையில், கிறிஸ்தவர்களின் அரசியல் தலைமை என்பது பேச்சளவில், ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், அரசியல் களத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்திபூத்தாற் போல கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஓரிருவர் இருப்பது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. கத்தோலிக்கத் திருச்சபைக் கட்டமைப்பில் AICUF  கத்தோலிக்க சங்கம், வாழ்வுரிமை இயக்கம் போன்று அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கங்கள் நம் மறைமாவட்டந்தோறும் இயங்கினாலும், கத்தோலிக்கச் சமுதாயத்தில், இன்றும் அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க கத்தோலிக்க  ஆளுமைகள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. உண்மையிலேயே இறை ஆட்சி மலர, எல்லாரும் எல்லாமும் பெற, மதநல்லிணக்கத்தோடு, சமதர்ம சமுதாயம் சமைக்கப்பெற, கிறிஸ்துவின் மதிப்பீடுகள் இறையன்போடும், பிறரன்போடும் பின்னிப்பிணைந்து மற்ற சமுதாயத்தினருக்கும், மதத்தினருக்கும் வாழ்வியல் நெறிகளாக எடுத்துக்காட்டப்பட, கத்தோலிக்க உலகிலிருந்து தலைவர்கள் இன்றைய அரசியல் அரங்கில் இல்லாதது, பெரும் குறையே. ஏன் இக்குறை? அரசியல் அரங்கிலும் உலகில் உப்பாக, புளிக்காரமாகச் செயல்பட வேண்டியது நமது அடிப்படைக் கடமையல்லவா?

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை வென்றெடுக்கவும், தக்கவைத்துக்கொள்ளவும், தலித் கிறிஸ்தவர்கள் SC/ST உரிமைகளைப் பெறவேண்டுமெனவும், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி  முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமாகிய முனைவர் ச.சாமிமுத்து அவர்களின் சீரிய ஒத்துழைப்பின் பேரில், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் வழக்கறிஞர் திரு. பிரான்சிஸ், பி. இராயன், மதுரை பேராசிரியர் கிளமெண்ட், பேராசிரியர் இறையரசன்  போன்ற ஆன்றோர்களால்,கிறிஸ்தவ ஜனநாயக முன்னனி 1973 இல் தொடங்கப்பட்டு தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளால் ஆதரவு நல்கப்பட்டு, வேகமாக வளர்ந்த சூழ்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆசியோடு கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் கி.ஜ.மு. சார்பில் ஒரு கத்தோலிக்க வேட்பாளரை, கிறிஸ்தவ ஜனநாயக முன்னனி நிறுத்தியது ஒரு வரலாற்றுச் சாதனை. அதன் தொடர் முயற்சியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முயற்சியால் M.G.R. அவர்களால் அனைத்துக் கிறிஸ்தவர்களும் B.C.. உரிமை பெற்றது நம் அரசியல் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாகும்.

ஆனால், இன்று கி.ஜ.மு. என்ற அக்கட்சி திரு. பிரான்சிஸ், பி. இராயன் மறைவுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால், சாதியப் பாகுபட்டால் திருச்சபையின் ஆதரவற்ற சூழ்நிலையில் சிதறுண்டு போனதும், நேரடி அரசியல் நம் தலைமை எங்கே என்னும் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது!

ஆனால், மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், இன்றைய இந்திய அரசியல் அரங்கில் பல குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமைகளை உருவாக்கியவை நம் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களே! எடுத்துக்காட்டாக கல்கத்தா புனித சவேரியார் கல்லூரியில் பயின்றவர்கள் மேற்கு வங்கத்தின் புகழ்மிக்க நீண்டகால முதலமைச்சர் ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யயச்சுரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்ற தமிழக முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், திரு வை.கோ, செயினட் ஜோசப் கல்லுரி மாணவர் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொய்யாமொழி, சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.தமிழ்க்குடிமகன், இலெயோலா, கல்லூரியில் பயின்ற ப. சிதம்பரம், சர்ச் பார்க் கான்வென்டில் படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏற்காடு மான்போர்டில் படித்த மத்திய அமைச்சர் இரா.அன்புமணி, தூய வளனார் கல்லூரி உருவாக்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகிய அனைவரையும் உருவாக்கியது கத்தோலிக்க கல்வி நிறுவனங்களே.

கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் பயின்ற பல்லாயிரக்கணக்கான IAS, IPS அதிகாரிகளும், தலைசிறந்த மருத்துவர்களும், பொறியியல் வல்லுநர்களும், தொழிற்துறை நண்பர்களும், பிரபல திரைப்படக் கலைஞர்களும், அறிவியல் துறை நிபுணர்களும், இன்று உலகமெங்கும் அரும்பணி செய்துகொண்டு உள்ளார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.(தொடரும்...)

வாழ்வின் பல பரிமானம்

வாழ்வின் பல பரிமானம்

சகோ. விமலி FIHM. இதயா கல்லுரி, குடந்தை

(வாழ்வு பற்றிய பலரின் புரிதல்களை, நேர்காணல் கண்டு தொகுத்துத் தருகிறார் சகோ.விமலி)

  “ஏழ்மையிலும் நேர்மை: கோபத்திலும் பொறுமை: தோல்வியிலும் விடாமுயற்சி:      வறுமையிலும் உதவி: துன்பத்திலும் துணிவு: செல்வத்திலும் எளிமை: பதவியிலும் பணிவு - இதுவே வாழ்க்கை” 
 - காந்தி

வாழ்வது ஒரு முறைதான்! வாழும் காலம் தெரியாது! சத்தியத்தில் நடந்து! நேர்மையில் மூழ்கி! முயற்சியை யாசித்து! உறவுக்குத் தோளாக! நட்பிற்கு உயிராக! குருக்களை மதித்து! ஒழுக்கத்தில் ஒப்பற்றவராக! உண்மைப் பாதை! நம் குடும்பத்திற்கு  நம் சமூகத்திற்கு  வழிகாட்ட வேண்டும் என்ற தாகத்தோடு தனித்தன்மையோடு, தங்கள் முத்திரை பதிக்கும் மனிதர்கள் இச்சமுகத்திற்கு இன்று தேவை. அவ்வாறு வாழும் நெஞ்சங்கள் இன்றைய உலகிற்குத் தேவை.  எத்தனைச் சுமைகள் எத்தனைத் தேடல்கள் வாழ்வை ருசிக்க, உறவை நேசிக்க அடடா! வாழ்வு மலராதா! கனவு பலிக்காதா! வாழ்க்கை சிறக்காதா! ஒரு முறைதான் சுகமான, சுவையான இப்பயணம்

திருவாளர் குமார், ஓட்டுநர், கும்பகோணம்

மனித வாழ்க்கை ஒரேயயாரு நொடி தான்: ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும். (புத்தர்) என்ற இம்மாமனிதரின் சிந்தனைப் போன்று நானும், உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் எனக்கு வேண்டும். எனக்கு கிடைத்ததை நெஞ்சார் நான் வாழ்த்த வேண்டும். நம்பிக்கையோடு வளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டும் இதுவே என் வாழ்க்கை.

மாணவி: வைத்தீஸ்வரி, தமிழ் இலக்கியம் முதுகலை முதலா மாண்டு மாணவி

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில் பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கிறார்கள். அவற்றைத் தனது அசாத்திய முயற்சியினாலும், தோல்விகளை முறியடித்து தடைகளைத் தகர்ந்தெறிந்து வெற்றிக் களிப்பில் மிதந்தவர் ஆபிரகாம் லிங்கன். இத்தலைமைப் போன்றதொரு இலட்சிய வாதியாக வருவதே என் வாழ்வின் இறுதி எல்லையாக கொண்டு வாழ்கிறேன்.

திருமதி ரூபலா, கணிதப்பேராசிரியர், இதயா கல்லூரி, கும்ப கோணம்

  இந்தியாவின் சொத்து இளைய தலைமுறையே!  நல்ல உடல் நலத்தோடும், அறிவாற்றலோடும், தன்னம்பிக்கையோடும் நம்முடைய இளைய சமுதாயத்தை வளர்த்தல். வலிமையும், அறிவாற்றலும், நிறைந்தவர்களாக அவர்களை உருவாக்கினால் வருங்கால இந்தியா நமதாகும் இதுவே என் வாழ்வில் இறுதியான ஆசை. இதில் முனைப்போடு பணியாற்றிக்கொண்டு இருக்கின்றேன்.

திருவாளர் வீ. குழந்தையப்பன், (Electric Engineer‡ ஓய்வு, மதுரை)

ஒருவன் கற்ற கல்விதான் அவனை மேன்மையடைய செய்யும். பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு, உதவிசெய்யும் குணம், மன்னிக்கும் தன்மை, புறங்கூறாமை ஆகியவையே நாம் முழுமையான வாழ்வு வாழ தேவையானவை. நம் பலத்தால் (பணம், இனம், அதிகாரம்) பிறருக்கு தீங்கு இழைக்க கூடாது. பிறருடைய பலவீனத்திற்கு மனதார உதவி செய்தால், கோடி புண்ணியம் தேடி வரும். சுய நலம் இல்லாத வாழ்வுதான் நம்மை மேன்மைப் படுத்தும்.
வாழ்க்கை என்றாலே முதலும் முடிவும் எதிர்நீச்சல்தான். கடைசிவரை தாக்குப்பிடிப்பது எளிதுமல்ல, இயலாததுமல்ல. எனவே சிறப்பானவற்றை தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் மோசமானவை வாழ்வில் ஒரு போதும் நிகழாது. எனவே நண்பர்களே மிகவும் கவனத்துடனும், தன்னம்பிக்கையுடனும், உயரிய இலட்சியத்துடனும் வாழ்வை வாழ முயற்சியுங்கள். வாழ்வு வருங்காலத்திற்கு வரமாய் அமையும். உங்களின் உயர்வான இலட்சியம் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள்.

“உங்கள் இலட்சியத்தில் வெற்றியடைய வேண்டுமானால் அதில் இம்மியும் பிசகாமல் அதே சிந்தனையோடு செயல்பட     வேண்டும்”.    -அப்துல் கலாம்.

சைக்கிள் சென்ற பாதை (2)

சைக்கிள் சென்ற பாதை  (2)
ச.இ.அ. 

டோல்கேட்டிலிருந்து புள்ளம்பாடிக்கு மாலை 5 மணியைப் போல் சென்று சேர்ந்தேன். இரவு  அங்குத் தங்கிவிட்டு காலையில் சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தேன். கீழப்பழூர், பொய்யூர், கைக்காட்டி வழியாக கீழமிக்கேல்பட்டி செல்வதாகத் திட்டம். கீழமிக்கேல்பட்டியில் தந்தை  P. ஜோசப் பங்குத்தந்தையாக இருந்தார். கீழமிக்கேல்பட்டிக்கு செல்லும் வழியில் சுத்தமல்லி என்ற ஊர் உள்ளது. அங்கு சில கிறிஸ்தவக் குடும்பங்கள் உள்ளன. அந்த ஊருக்கும் முன்னாளில் நான் பங்கு தந்தையாயிருந்த கூவத்தூருக்கும் கொள்வன கொடுப்பன உண்டு. நான் கூவத்தூரில் இருந்தபோது, எனக்கு எதிரியைப் போல செயல்பட்ட ஒருவரின் மனைவி சுத்தமல்லியை சேர்ந்தவர்.

அன்று அவர் சுத்தமல்லிக்கு வந்திருக்கிறார். நான் சைக்கிளில் மாலை 3 மணியைப் போல அவ்வூர் வழியே சென்றேன்.  அந்த நேரத்தில் அவர் என் எதிரில் தென்பட்டார்.  என்னைப் பார்த்ததும் பழைய பகைமையையயல்லாம் மறந்து, என்னை வரவேற்று, தன் மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்று, காப்பியயல்லாம் கொடுத்து கை நிறைய கடலைக் கொடுத்தார்.

நான்  கூவத்தூரில் இருந்த போது, அவரு க்கும் எனக்கும் இருந்த மோதல் இதுதான். அவர் குடிகாரர். சுமார் 50 ஆடுகள் வைத்திருந்தார். கோவில் வயலில் ஆடுகளை கொண்டு வந்து விட்டு மேய விடுவார். யார் சொன்னாலும் கேட்கமாட்டார். குடித்து விட்டு வந்து தூரத்தில் நின்று ஏதாவது உளறி விட்டுப் போவார். ஆனால் புதுமையயன்று சொல்வதா, அல்லது எப்படி என்று சொல்வது என்று தெரியவில்லை. 50 ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து விட்டன. இப்போது அவர் இல்லை. பிள்ளைகள் வெளிநாடுகள் சென்று ஒன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

சுத்தமல்லியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு கீழமிக்கேல்பட்டி வந்தேன். தந்தை  P. ஜோசப் விருந்தோம்பலில் பெயர் போனவர். அதே நேரத்தில் பங்குப் பணிகளைத் தீரமுடன் செய்பவர். நான் கூவத்தூரில் பங்குத்தந்தையாக இருந்த போதும், கீழமிக்கேல்பட்டியில்தான் இருந்தார். எனக்கு மிகவும் உதவியாயிருந்தவர். அவர் கீழமிக்கேல்பட்டி கிளைகிராமங்கள், பட்டடி என்று அழைக்கப்படும் மேலமிக்கேல்பட்டி, இடங்கண்ணி, குறிச்சி ஆகிய இடங்களுக்கு பணிக்காக அழைத்துச் சென்றார். மூன்று நாள்கள் அங்கு தங்கிவிட்டு சைக்கிளிலேயே குடந்தை வந்தேன். அப்போது மதனத்தூர் கொள்ளிடப் பாலம் இல்லை. எனவே ஆற்றில் சைக்கிளைத் தள்ளி கொண்டு குடந்தை வந்து சேர்ந்தேன்.
குடந்தையிலிருந்து என் தம்பி சவரியார் சைக்கிளை குலமாணிக்கம் எடுத்து வந்தார். பிறகு திருச்சிக்கும் சைக்கிளை ஓட்டி வந்தார். திருச்சியிலிருந்து கோவைக்கு சைக்கிளை  திருவள்ளுவர் பேருந்தில் எடுத்துச் செல்ல நின்று கொண்டிருந்தேன். கூலியாள்கள் அகோரமாக கூலி  கேட்டார்கள். பஸ்ஸிற்கு கட்டணம் அப்போது 35 ரூபாய்தான். சைக்கிளை பேருந்தின்மேல் ஏற்ற ரூ100/‡ கேட்டார்கள். எனவே அவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் போலீசை போல் வந்தார். அவர் எங்களை விசாரித்தார். நான் விபரத்தை கூறினேன். சைக்கிளைப் பேருந்தில்  ஏற்ற 100 ரூபாய் கேட்கிறார் என்றேன். அப்போது, அந்த கூலியாட்களைப் பார்த்து, ‘நான் யார் என்று தெரிகிறதா?’ என்றார். ‘தெரியலை சார்’ என்றார்கள். ‘தெரியலையா? நான்தான் கோட்டை ஸ்டே­ன் சப்இன்ஸ்பெக்டர்.  பாதரிடம் ஏன் வீணாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள். பத்து ரூபாய் கொடுங்கள் பாதர்.  ஏற்றுங்கள் ஐயா’ என்றார். அவர்களும் சைக்கிளை பேருந்தில் தூக்கிப்போட்டார்கள். கூலியாளர்கள் சென்றதும். ‘பாதர், நான் கோட்டை ஸ்டே­ன் சப்இன்ஸ்பெக்டர் அல்ல. ஒரு கடையில் வாட்ச்மேன். என் உடல் கட்டைப் பார்த்து ஏமாந்து போய் விட்டார்கள். ஏமாற்றுபவர்களை  இப்படித்தான் ஏமாற்ற வேண்டும். பத்திரமாக போய் வாருங்கள்’ என வழி அனுப்பி வைத்தார்.

கோவை வந்த பிறகு சைக்கிளை பேருந்திலிருந்து இறக்கி, மைலேறி பாளையத்திற்கு ஓட்டிச் சென்றேன். இதுதான் எனது நீண்ட சைக்கிள் பயணம். சாதனை செய்யும் உளப்பாங்கை இது போன்ற கடினமுயற்சிகள் உருவாக்கும். எனவேதான் பள்ளிகளில் மலையேற்றம்,  போன்ற கடினபோட்டிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். (தொடரும்

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள்  

- அருட்சகோ. பெரேரா, FIHM, சேலம்
நவம்பர் 2017,  திருத்தூதர் பணிகள்

1. யோப்பா நகர் சுந்தரி
    பெண்மான் என்னும் நாயகி
    தருமம் செய்வதில் பேருபகாரி
    மரித்தும் உயிர்த்த தாரகை.  யார் இவள்?

2. வானத்திலே பெருவிழா
    வீட்டுக்குள்ளே ஒளிவிழா
    மக்கள் மேலே தீ விழா
    பற்பல மொழிகள் புகுவிழா
    தத்தம் மொழி கேட்ட சிறப்பு விழா
    அது எப்போது?

 3. அரச ஆடை அணிந்தான்
      அரங்கத்தில் உரை அளித்தான்
      தர்ம அடிகள் வாங்கினான்
    புழுது நாறி செத்தான்
      இவன் யார்?

 4. போடுங்கையா ஓட்டு
      இருவர் தேர்வில் டவுட்டு
    குலுக்கல் சீட்டு போட்டு
    வெற்றிப் பெற்றவர் வரிட்டு
    இவர் யார்?

 5. ஆசை மிக ஆசை
      பணத்தில் மிக்க ஆசை
      அழிவு தந்த ஆசை
      விழுந்து மடிந்தான் ‡ முன்னே
    விழுந்து மடிந்தாள் ‡ பின்னே
    இவர்கள் யார்?

 6. காட்சி அருளப் பட்டவர்
      தூதனை நேரில் கண்டவர்
      உற்று நோக்கிப் பார்த்தவர்
      மிகவே  அச்சம் கொண்டவர்
    செய்ய வேண்டியதைப் புரிந்தவர்
    இவர் யார்?

 7. உயரமான கோட்டை
    ஏறமுடியா  கோட்டை
    கோட்டையை சுற்றி வேட்டை
    வேட்டைக்கு நடுவிலே கூடை
    கூடைக்குள் ஒரு முட்டை
    அது யார்? 

 8. குதிரை மீது போராரு
    சீற்றமாகப் போராறு
    டக்கு டக்குனு போனாறு
      வீடு வீடா நுழைஞ்சாறு
      இழுத்து சிறையில் அடைச்சாரு
      ஆட்டிப் படைச்ச அதிரடி வில்லன்
      இவர் யாரு?

9. வானத்திலே ஒரு அண்ணன், தம்பி
      ஒளி விழா வருமுன்னே
    அண்ணன் உடம்பெல்லாம் கரியாகும்
    தம்பி உடம்பெல்லாம் இரத்தகொதிப்பாகும்.
    அது என்ன?

 10. நான் இரண்டெழுத்து பெயர் கொண்டவள்
        பணிப்பெண். திட்டவட்டமாய் பேசுபவள்
        பேதுரு வருகைப் பற்றி சத்தமாக செய்தி
        சொன்னேன். நான் யார் தெரியுமா?

 11. பேறு பெற்ற பெயரு
      துவக்கத் திருச்சபை வேரு
      ஆணி வேரு அங்கப் பாரு
      கிடைச்சது எட்டு எழுத்து ஜோரு
      அது என்ன? எங்கே?

 12. நான் ஒரு பரிசேயன்
        திருச்சட்ட ஆசிரியன்
      உச்ச நீதிமன்றத்தின்
      உயர்ந்த இடத்தில் இருப்பவன்
      கடவுளிடம் போராடாதீர் என்று
      கண்டிப்பாய் தீர்ப்புக் கூறினேன்
      எனது பெயர் என்ன?

 13. இயேசுவைப் போல் பேசியவர்
        ஏசியவனை மன்னித்தவர்
        ஆகாயத்தை நோக்கியவர்
      அதிசயக் காட்சிக் கண்டவர்
      இயேசுவுக்காக உயிர் நீத்தவர்
      இவர் யார்?

 14. ஒரே ஒரு பிரசங்கம்
        ஆயிரங்கள் மூன்று
        ஆண்டவர்க்கு சொந்தமானவர்கள்
        இது யாருடைய பிரசங்கம்?
   
 15. ஜாலி ஜாலி தான்
        பூஸ்ட்டு பூஸ்ட்டுத் தான்
        ஜோரான சூப்பர் டேஸ்ட்டுத்தான்
        தி.தூ.பணி ‡ 1ம் அதிகாரம் தான்
        எட்டாம் வசனம்
        என்ன சொல்லுதுத் தான்.

இறப்பைப் பற்றி ஆன்றோர் வாக்கு

 இறப்பைப் பற்றி ஆன்றோர் வாக்கு

வாழ்வினைப் பற்றிய பயம்தான் சாவின் பயத்திற்கு அழைத்துச் செல்கிறது. வாழ்வினை முழுமையாக வாழ்பவர்கள்  எந்நேரத்திலும் சாவினை சந்திக்க  தயாராயிருக்கிறார்கள்.   மார்க் டுவைன்

இறப்பு ஒரு இழப்புத்தான். ஆனால் உயிர்வாழும்போது உன்னில் இருப்பது இறப்பினைக் கண்டால் அதுதான் பெரிய இழப்பு
 - நார்மன் கசின்ஸ்     

தன் வாழ்வில் ஏதாவது ஒன்றிற்காக உயிரைக் கொடுத்து அதனை சாதிக்க முன் வராதவர் வாழ தகுதியற்றவர்.  மார்டின் லூதர் கிங்.

கோழைகள் பலமுறை சாதிக்கிறார்கள் வீரர்கள் ஒருமுறைதான் சாதிக்கிறார்   வில்லியம் ஷேக்ஸ்பியர்.

உடல்நலம் இல்லா நிலை இறப்பின்
முன்வடிவம்  - புத்தர்.

இறப்பு என்பது ஒளியை அனைப்பதல்ல மாறாக அது விளக்கையே அகற்றுவதாகும். ஏனென்றால் அங்கு சூரிய உதயம் உண்டாகி விட்டது. -ரவிந்தரநாத் தாகூர்.

எப்போது ஒருவரிடம் நம்பிக்கை மறைகிறதோ, எப்போது  ஒருவரின் மாண்பு மறைக்கிறதோ, அப்போதுதான் அவர்  உண்மையாக சாகிறார்.   ஜான் கிரின்பீல்டு விட்டியர்.

எப்போது நம் இறப்பினை நினைக்கிறோமோ அப்போதுதான்  நம் வாழ்வு மலர்கிறது.   - மோன்டோ கொமரி கிளிப்ட்

செல்வம் வளர வளர சாவின் பயமும் வளர்கிறது.  - ஏர்னஸ்ட் யஹமிங்லே.

எப்போது ஒருவரிடம் நம்பிக்கை மறைகிறதோ, எப்போது  ஒருவரின் மாண்பு மறைக்கிறதோ, அப்போதுதான் அவர்  உண்மையாக சாகிறார்.   -  ஜான் கிரின்பீல்டு விட்டியர்.

அன்பும், சாவும் என்னும் இரண்டு இறக்கைகள் தான் ஒருவரை  விண்ணகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
 -  மைக்கேல் ஆஞ்சலோ.



ஆசிரியர் பேனா

ஆசிரியர் பேனா

அருட்பணி. ச.இ. அருள்சாமி

1996 இல் என் அன்னை இறந்தபோது, அவர் கடைசி மூச்சுவிடும் காட்சிக்கு சாட்சியாக நின்றேன். அந்நிகழ்ச்சி என் வாழ்வில் பெரிய தாக்கத்தை தந்தது. வாழ்வு எவ்வளவு நிலையற்றது. வாழ்வு இவ்வுலகில் நிரந்தரமல்ல என்ற கருத்துகளை ஆழ்ந்து என் மனத்தில் ஒரு தழும்பை ஏற்படுத்தியது. அவர்கள் இறந்தது 82 வது வயதில். ஆனால் அவர்கள் மறைந்த பிறகு ஒரு வெற்றிடத்தை  என்னில் உணர முடிந்தது.

கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுகிறார், கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை என்கிறார்.

  ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
கோடியும் அல்ல பல                       (குறள் 337) என்கிறார் வள்ளுவர்.

நவம்பர் இரண்டாம் நாள் நம்மை விட்டு பிரிந்த சகோதர சகோதரிகளை உருக்கமுடன் நினைவு கூறுகிறோம். நம் உறவுகள் உலகில் வாழ்ந்தபோது நாம் காட்டிய பாசத்தை விட அவர்கள் மறைந்த பிறகு அவர்கள்மீது நாம் காட்டும் பாசம் பெரிதாக விளங்குகிறது. ஓர் அம்மையார், தன் கணவர் பெரிய குடிக்காரராக விளங்கி குடும்பத்தை கொடுமைப்படுத்தியதால் வி­ம் வைத்து கொன்று விட்டார்கள். ஆனால் வருடா வருடம்  ஆடம்பரத்துடன் தன் கணவரை நினைவு கூர்ந்து திவசம் வைப்பார்கள்.

நவம்பர் இரண்டில் இறந்த நம் உறவுகளை உருக்கமுடன் நினைவு கூறுகின்ற வேளையில், நம் வாழ்வின் ஒப்பற்ற பெருமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் ஒளவைப் பாட்டி. தற்கொலை செய்து கொள்வது, குடித்து வாழ்வை சீரழிப்பது, குடும்பங்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ்வது ஆகியவை மனித வாழ்வின் மாண்பை உணர்ந்து வாழாத நிலை எனலாம்.
ஒருவர் விடாமல் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்.ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் ஊதிக்கொண்டிருந்தார். பழக்கமாகி விட்டது, விடமுடியவில்லை என்பது அவரது வாதம் இருமல் வந்தது. மருத்துவர், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால் மூன்றே மாதத்தில் இறந்து விடுவீர்கள் என்றார். அப்போதே சிகரட்டை விட்டெறிந்தார். மரணத்தை நினைப்பவர், தீயபழக்கங்களை அகற்றுவார், வாழ்வின் குறுகிய காலத்தைக் கருதி, பொருளுடன், மகிழ்வுடன் வாழ்வார்.

இவ்வாண்டு அன்னையின் அருட்சுடரின் பொன்விழா ஆண்டு 1967இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழை குடந்தை மறைமாவட்ட குருக்கள், குடந்தை மறைமாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய  பெருமக்கள், இவ்விதழுக்கு அடிப்படை ஆதரவாக நிற்கின்றனர். சந்தாதாரர்களும் பக்கபலமாய் நிற்கின்றனர். ஆனால் பொருளாதார அளவில் இன்னும் அதிக உதவி தேவைப்படுகிறது. தற்போது அன்னையின் அருட்சுடர் புதுபொழிவு பெற்று வருகிறது என்று பலர் சொல்ல கேட்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. கல்லக்குடி ஆரோக்கியமேரி, ஜெயங்கொண்டம் ஆரோக்கியமேரி, லால்குடி அக்ஸிலியா ஆகியோர் புதிய சந்தாதாரர்களை சேர்க்கவும், விளம்பரங்கள் பெற்றுதரவும் தற்போது பெரிதும் உதவுகிறார்கள். இவர்களைப் போல மற்றவர்களும் உதவி செய்தால், சிறப்பாக அன்னையின் அருட்சுடர் வளர்ச்சி பெறும். பொன்விழா ஆண்டின் நினைவாக, பொன்விழா நினைவுமலர் வருகிற மே மாதம் 100 பக்க அளவில் வெளியிடலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் படைப்புகளையும் விளம்பரங்களையும் கொடுத்து உதவலாம். 

தமிழ்நாட்டில் இவ்வாண்டு நல்லமழை பொழிந்துள்ளது. இறைவனுக்கு நன்றி கூறுவோம். மரங்களை வளர்த்தால் இன்னும் நிறைய மழை பெறுவோம். டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர், சுமார் 10,000 க்கும் அதிகமாக பாதிக்ப்பட்டிருக்கிறார்கள். கொசுவினால் உண்டாகும் இக்கொடிய நோயை அகற்ற, அரசுடன் நாமும் முயல வேண்டும். சுற்றுபுறங்களை சுத்தமாக வைத்தால் கொசுக்கள் வளரும் வாய்ப்புக் குறையும். தமிழ்நாட்டு அரசியல் சூழல், ஆளும் கட்சியில் தண்ணீரில் ஏற்படும் நீர் சுழற்சியை போல் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் தளர்ச்சியால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தூக்க நிலையில் உள்ளது.

மெர்சல் படத்தைப் பற்றி விவாதம் நடக்கிறது. பி.ஜே.பி. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி பொய்யான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்று மெர்சல் பட குழுவினரை வசைபாடி வருகிறார்கள். ஊடகத் துறையினர், எதிர்க்கட்சியினர், கருத்து சுதந்திரத்தில் மத்தியில் ஆளும் கட்சியை கை வைக்கப் பார்க்கிறது  என்று குற்றம் சாட்டுகின்றனர். பி.ஜே.பி. கட்சியினர் இப்பிரச்சனையில் மதசாயத்தை பூசி மக்களிடம் பிரிவு உணர்வை உட்புகுத்தவும் பார்க்கின்றனர். ஜோசப்விஜய் என்றும் சிமியோன் சீமோன் என்றும் மத வேற்றுமைகளைக் காட்டி தங்களின் அடிப்படை வாதத்தை நுழைக்கப் பார்க்கின்றனர். ஜி.எஸ்.டியும், ரு500,1000 பண மதிப்புக் குறைப்பும் மக்களின் பொருளாதார சூழலை பெரிதும் பாதித்துள்ளது. எனக்குத் தெரிந்த பலர் வேலையின்றி சுற்றி வருவதை காணமுடிகிறது. இன்றைய சூழ்நிலை, இன்றும் அதிகமாக அரசியல் விழிப்புணர்வுடனும், ஒற்றுமையுடனும் நாட்டிற்காக தியாக சிந்தனையுடனும் வாழ நம்மை அழைக்கிறது.

Thursday 2 November 2017

கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசர் பெருவிழா

21-11-2017 

எசே 34:11-12,15-17, 1 கொரி 15: 20-26,28, மத் 25:31-46

அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வெஸ்டர்

பரிவிரக்கத்தின் பங்களானாய்...

வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி. அரசன் என்றவுடன் பெரியவர்களின் நினைவுக்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன்.

என்ன, இன்று அரண்மனையில் 8 புள்ளி கோலம்தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போடமாட்டார்களா? வீணாக என் வாளுக்கு இரையாகி விடப்போகிறார்கள் என்ற 23ம் புலிக்கேசியை குழந்தைகளின் நினைவுக்கு வரும். 

அரசர்களைப் பற்றி திரைப்படங்களிலும் கதைகளில் மட்டும் கண்டு கொண்டிருக்கிற நமக்கு ஏன் இயேசுவை அரசராக அறிமுகம் செய்கிறது திருச்சபை?

 வரலாற்றுப் பின்னனி

முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். உலகம் அச்சுநாடுகள், நேச நாடுகள் என்று இரண்டாகப் பிளந்து அதிகாரப் போட்டி போட்டுக்கொண்டு மக்களை துன்புறுத்துக் கொண்டிருந்த நேரம். அம்மக்களுக்கு பணியாற்ற திருச்சபை Mgr.அம்புரோஸ்ராட்டி  என்பவரை அனுப்புகிறது. பின் ஆயராக, கர்தினாலாக உயர்த்தப்படுகிறான். அப்பொழுது இருந்த திருச்சபையின் மறைவுக்குப் பிறகு, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.(திருத்தந்தை 11ம் பயஸ்). போரின் துயரத்தையும், அரசர்களின் அதிகார போக்கையும் கண்டு அனுபவித்தவர், 1925ம் ஆண்டு                    குவாஸ்பிரிமாஸ் என்கிற சுற்று  மடலின் மூலம் கிறிஸ்துவை அரசாக அறிமுகம் செய்து, மற்ற அரசர்களுக்கெல்லாம் முன்னுதாரனமாக நிறுத்துகிறார். ஆனால் அத்தகு முன்பே மாவீரன் நெப்போலியன். இயேசுவை அரசராக ஏற்றுக் கொண்டான் என்பதை வரலாறு கூறுகிறது. வாட்டர்லூ போரில் தோற்று தீவில்    தனிமை சிறையில் இருந்த  போது அவன் எழுதியது.

  அதிகாரம், மகிமை, புகழ் எல்லாம் வெறும் புகை. ஒரு காலத்தில் அலெக்ஸாண்டரை மகான் என்றேன். இப்பொழுது அவன் எலும்பு கூட கிடைக்கவில்லை. பிறகு என்னையே வீரன் என்றேன். ஆனால் அந்நிய நாட்டில், அரியணையோ, காவல் வீரர்களோ இன்றி தனி மரமாகி விட்டேன். ஆனால் 2000 ஆண்டுகளாய் மக்கள் மனதில் அரசராய் இருப்பவர் இயேசுகிறிஸ்து மட்டுமே. நானும் அலெக்ஸாண்டரும், ஆயுதத்தால் ஆட்சி செய்தோம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ அன்பினால் ஆட்சி செய்கிறார். ஆம் நெப்போலியன் சொன்னது போல் இயேசு அதிகாரத்தின் அரசல்ல. அன்பின் அரசு. இயேசுவின் அதிகாரத்தின் ஆட்சி இடத்தை சார்ந்தல்ல. இதயங்களைச் சார்ந்தது. பதவிக்கு  முக்கியத்துவம் தருவதல்ல, பரிவுக்கே முக்கியத்துவம் தருவது. சிம்மாசனத்தை விரும்பியதல்ல. சிலுவை விரும்பி ளஏற்றது. 

விவிலிய பின்னனி

இயேசு அரசர் என்பது கற்பனையாகக் கொடுக்கப்பட்ட தலைப்பு அல்ல. விவிலியத்தில் காணப்படும்  சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. மத் 2:2 யூதர்களின் அரசராகப் போகிறவர் பிறந்திருக்காரமே? அவர் எங்கே? என்ற ஞானிகள் வார்த்தைகள் அவர் அரசர் என்று  நீர் அரசுரிமையோடு வரும்போது என்னை நினைவு கூறும் (லூக் 23. 43) என்ற திருந்திய கள்வனின் கூற்று. 
இதோ யூதர்களின் அரசன் (யோவா 19.19) என்ற மரண சாசனம் போன்றவைகள் சில விவிலிய சான்றுகள். இயேசு அரசர் என்றால் நாமெல்லாம் அவரது குடிமக்கள். இயேசுவின் அரசு இவ்வுலகை சார்ந்ததன்று (யோவா 18. 36) விண்ணுலகைச் சார்ந்தது. எனவே நம் எல்லோருக்கும் இரட்டை குடியுரிமை உண்டு.
ஒன்று, இவ்வுலகிலே பணியாற்ற வந்திருக்கிறோம். இங்கே திருச்சபை என்னும் திருவருட்சாதனத்தின் வழியாக தற்காலிக குடியுரிமை பெற்றுள்ளோம்.

அவரது அரசில் நிரந்தர குடியுரிமை பெறவேண்டுமானால் நாம் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அந்த கடமைகள் என்ன என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் விவரிக்கின்றது.
 1. பசியால் இருப்பவருக்கு உணவளிப்பது.
2. தாகமாயிருப்பவர்களுக்கு குடிக்கக் கொடுப்பது.
3. உடையில்லாதவர்களை உடுத்துவது.
4. அந்நியர்களை ஏற்றுக்கொள்ளுதல். 
5. நோயாளிகளை பார்த்தல்.
6. சிறையிலிருப்போரை சந்தித்தல்.
சுருக்கமாகச் சொன்னால், அரசனைப் போல மக்களும் வாழ அழைப்புக் கொடுக்கப்படுகிறது.

  இயேசு இக்கடமைகளை நிறைவேற்றி நமக்கு சிறந்த முன்னுதாரனமான விளக்குகிறார்.
- பசியால் வாடியவர்களுக்கு அப்பம் பலுகச் செய்தார்.
- ஆன்மீகத் தாகத்தால் அலைந்தவர்களின் தாகத்தை தீர்க்க வாழ்வளிக்கும் தாகம் எடுக்காத தண்ணீர் தந்தவர். அந்நியர்களாக கருதப்பட்ட சமாரியர்களையும், கானானியர்களையும், பிற இனத்தாரையும் ஏற்றுக் கொண்டார்.  மனித மாண்பு என்னும்  ஆடையை இழந்து நின்ற பாவிகள், விபச்சாரிகளை மனித மாண்பு என்னும் ஆடையால்   உடுத்தினார். நோயுற்ற எத்தனையோ மக்களை குணமாக்கினார்.

ஆக, அவரை பிரதிபலிக்க அழைக்க ப்படுகிறோம். மனித நேயமிக்க இயேசுவை அரசராகக் கொண்டாடும் நாம், அதே மனித நேயத்தை, பரிவை வாழ்வாக்க அழைக்கப்படுகிறோம். அப்பொழுது அவரது அரசின்    (நிரந்தர குடியுரிமை) நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

முடியும் வாழ்க்கை

அமெரிக்கக் கடிதம் 
- சவரி, கேரி

முடியும் வாழ்க்கை


நவம்பர் 2ஆம் நாளை இறந்தோரை நினைவு கூறும் நாளாக, கல்லறை திருநாளாக, நம் இறுதி நாள்களை நினைவுறுத்தும் நாளாக, நாம் சிறப்பிக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். என்னுடைய உறவினர் ஒருவர் தான் பிறந்த இடத்தை விட்டு சில ஆயிரம் மைல்கள் தாண்டி வேலை செய்கிறார். அங்கேயே அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் அன்று எங்கிருந்தாலும் ஊருக்கு வந்து விடுவார், தன்னை விட்டு பிரிந்த தன் பெற்றோருக்காக, முன்னோர்கள் கல்லறைக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்துவார். அவர் மற்ற விழாக்களுக்கோ,  திருமணங்களுக்கோ மிக சிரத்தை எடுத்து வருவதில்லை. ஆனால் கல்லறை திருவிழாவிற்கு மிக சிரத்தை எடுத்து வந்து விடுவார். இதை பார்த்து நான் நெகிழ்ந்து போனேன். என் அப்பா என்னுடன் பகிர்ந்து கொண்ட அந்த காலத்து நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அப்போது கிராமங்கள் வளர்ச்சியடையாத காலம், பேருந்து வசதிகள் அதிகம் வளர்ச்சி அடையாத காலம், தொலைப்பேசி வசதிகள் இல்லாத காலம். எல்லா இடங்களுக்கும் மக்கள் நடந்தோ, மிதிவண்டியிலோ செல்வார்கள். அப்போது வழிப்பறி கொள்ளைக்காரர்கள் பயணம் செல்பவர்களை  நிறுத்தி பொருள்களை களவாடுவார்களாம். அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி இருந்ததாம். பயணம் செல்பவர்களை கொள்ளைகாரர்கள் நிறுத்தி விசாரிப்பார்களாம், எங்கிருந்து வருகிறாய், எங்கு செல்கிறாய், எதற்கு செல்கிறாய் என்று விசாரிப்பார்களாம். அப்போது பயணிகள் பெரிய காரியத்திற்கு செல்கிறேன் என்றால் விசாரிப்பார்களாம். அப்போது பயணிகள் பெரிய காரியத்திற்கு  செல்கிறேன்  என்றால் மறுபேச்சு பேசாமல், விரைவில் செல் சென்று அவர்களிடமிருந்து களவாடாமல் ஒதுங்கி நின்று வழி அனுப்பி வைப்பார்களாம். பெரிய காரியம் என்றால் இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு செல்கிறேன் என்று பொருள். இது இறந்தவர்களை அடக்கம் செய்யும் புனிதத்தையும், அதில் பங்கெடுக்கும் முக்கியத்துவதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. மனிதர்களின் துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை கீழ்வரும் விவிலிய வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன.

பிறந்த நாளைக் காட்டிலும் இறந்த நாள் நல்லது. விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், இழவு வீட்டிலே எல்லா மனிதருக்கும் முடிவு உண்டென்று காணப்படுவதால், உயிரோடிருக்கிறவன் தனக்கு நிகழவிருப்பதைச் சிந்திப்பான். (சஉ 7:2-3)

ஐ - போன் என்ற டச் போனை (விதுழிrமி ஸ்ரீஜுலிஐe) ‡ஐ கண்டுபிடித்த ஆப்பிள் (புஸ்ரீஸ்ரீயிe) நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் (றீமிeஸe மூலிணு) ‡ ன் கடைசி நாள்களை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஸ்டீவ் ஜாப் ஆப்பிள் நிறுவனத்தை 1976 ‡ ம் ஆண்டு ஆரம்பித்தார்.  மைக்ரோ சாப்ட்  (னிஷ்உrலி விலிக்ஷூமி ) நிறுவனமும் 1975 ‡ ம் ஆண்டு நிறுவப்பட்டது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ( நிஷ்ஐdலிழவி) கணினி மக்களால் பயன்படுத்தப்பட்டது. ஆப்பிள் கணினி அதிக வெற்றி பெறவில்லை. இதனால் மனம் நொந்த ஸ்டீவ் ஜாப் கார்ட்டூன் சினிமாக்களை உருவாக்க சென்று விட்டார். 2007 ‡ம் ஆண்டு  ஐ‡போன்னை வெளியிட்டார். ஐ‡போன் மிக பெரிய வெற்றியை பெற்றது.  ஐ‡போன் வாங்குவதற்கு உலகெங்கிலும் இளைஞர்கள் தவம் கிடைத்தார்கள். ஐ ‡ போன் தரத்தில் சிறந்து ஸ்டீவ் ஜாப்‡ற்கு பெரும் புகழையும், பொருளையும் சம்பாதித்தது கொடுத்தது. இந்த புகழையும், வெற்றியையும் அதிக நாள் நிலைக்கவில்லை. 2011 ‡ ம் ஆண்டு அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பணமும், புகழும் இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரண படுக்கையில் அவர் மற்றவர்களுக்கு கூறிய கடைசி வார்த்தைகள் எல்லோரையும் கலங்க வைத்தது, பலரின் மனதை தொட்டது. அவரின் கடைசி வார்த்தைகளிலிருந்து சில வரிகள்.

எனக்கு கார் ஓட்டுவதற்கும், காசு சம்பாதிப்பதற்கும் வேலையாள்களை அமர்த்த முடியும். ஆனால் என்னுடைய மரண வலியை தாங்கி கொள்ள வேறொரு ஆளை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. என்னுடைய பணமும், புகழும் என்னுடைய மரண படுக்கைக்கு முன் பயனற்று நிற்கிறது. என் இறுதி நாள்களில், நான் சம்பாதித்த பணமும், புகழும் கூட வரவில்லை, நான் சம்பாதித்த அன்பும், நட்பும்  அதன் நினைவுகளும்தான் என்னுடன் இப்போது உள்ளது. பணத்தை ஒன்றையே குறி வைத்து ஓடாதீர்கள். அன்பு ஆயிரம் மைல்களை கடந்து செல்லும் வேகம் பெற்றது. உங்கள் மனைவியை,  கணவனை, குழந்தைகளை, நண்பர்களை அன்பு செய்யுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு காட்டும் அன்பை மதித்து போற்றுங்கள். - ஸ்டீவ் ஜாப் 

நாமும் நம் வாழ்க்கையை அன்பாலும், நட்பாலும், தொண்டாலும் வாழ்ந்து, இறைவனை புகழ்ந்து,  அவரின் வருகைக்காக காத்திருப்போம். 

வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!!!               

பொதுக்காலம் 33ம் ஞாயிறு

பொதுக்காலம் 33ம் ஞாயிறு
அருட்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ்,
                                                                    குடந்தை. 
 நீ.மொ 31: 10-13, 19-20,30-31;  1 தெச 5: 1 - 6;      மத் 25: 14-30

உழைப்பின்  உயர்வு

  வாழ்க்கை வாழ்வதற்கே! வெற்றி நிச்சயம் நமக்கே! என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைகாட்சிப் பெட்டியிலே ஒளிப்பரப்பபட்ட  விளம்பரங்களின் பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்வை வாழ வேண்டுமென்றால், அவ்வாழ்விலே  ஆர்வமும், பிடிப்பும் இருக்க வேண்டும். அப்பிடிப்பு இருக்க வேண்டுமெனில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை வேண்டும். அவ்வாசையானது  உழைப்பாக உருவெடுக்கையிலே உயர்வு தானாகவே தேடி வந்துவிடும். திருவழிபாட்டின் பொதுகாலத்தின் 33‡ம் ஞாயிறில், இறைவன் நம்மை சிந்திக்க அழைப்பு விடுப்பது யாதெனில், உழைப்பே ஒருவரின் உயர்வுக்கு அஸ்திவரமாக அமைகிறது.

சிறுவயதிலே, பள்ளிப்பருவங்களில், நீ என்னவாக எதிர்காலத்தில் உருவாக விரும்புகிறாய் என்றால் பவ்வேறு விதமான பதில்களை மாணவர்கள் கூறுவார்கள். அவ்வார்த்தைகள் அனைத்தும் முழுமையடைந்து வெற்றிப் பெருநல் என்பது  அவர்களது எண்ணத்திலும், உழைப்பிலுமே அடங்கியுள்ளது.

பட்டுப்புழு ஒன்று தனது பட்டுநூலை கட்டிக்கொண்டிருந்தது அதைக் கண்ட சிலந்தி பூச்சி சொன்னது, நீ மட்டும்தான் நூல் கட்டுவாயா நானும் கட்டுவேன் என்று விறுவிறுவென, தனது சிலந்தி கூட்டினை கட்டியதும், அந்த கூட்டிற்கு  வீட்டின் விலாசத்தையும் சேர்த்து எழுதியது. பின்பு நக்கலாக, என்ன பட்டு புழுவாரே  நான் எனது கூட்டை கட்டி முடித்துவிட்டேன். நீ எப்போது  முடிப்பாய் என்றது. அதற்கு பட்டு பூச்சி சொன்னது. உன் வலையும், என் வலையும் ஒன்றல்ல, உன் கூடானது பூச்சிகளை பிடிக்கவே, மக்களும் உன்னை நூலாம்படை எனச்சொல்லி விளக்கமாத்தால் அடித்துக் களைப்பார்கள் ஆனால் என் நூலையோ பத்திரப்படுத்தி வைத்து அணிந்துக்கொள்வார்கள். நூல் ஒன்றாக இருப்பது போல் தோன்றினாலும், என் உழைப்பே எனக்கு உயர்வையும் மதிப்பையும் கொண்டு வருகிறது என்றதாம்.

ஆம், அன்பு மக்களே, நாமும் நமது வாழ்விலே பல்லேறு விதங்களில் தேவையின் அர்த்தம்  அறியாமல் உழைக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலும் இயேசு கூறுகின்ற உவமைகளில் நாம் காண்பதும் அதுவே. வெளியே பயணம் மேற்கொண்ட தலைவர், தன் பணியாட்களுக்கு ஐந்து, மூன்று, ஒன்றென தாலந்துகளை கொடுக்க, அவர்களுள் சிலர் அந்த தாலந்துகளின் மதிப்பினை கூட்டுகின்றனர். சிலர் உழைக்கின்றனர். ஆனால் உழைப்பின் பயனேதும் இல்லாமல் சிலந்தி  தான் எடுத்த வாந்தியால் கட்டிய கூட்டை போன்று ,  வெளிப்புறத் தோற்றம் அழகு நிறைந்திருப்பினும்  தன் வாழ்வால் உயர்வு பெறாமல் அழிந்து,  பிறர் வாழ்வு அழிகின்ற பணியாளனின்  நிலையை நாம் வாசகத்தின் வழியாக கேட்டறிகின்றோம்.

இங்கே தாலந்து என்று குறிப்பிடப்படுவது இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளும் கொடைகளும் 1கொரி 12:4‡11 புனித பவுல் அடிகளார் குறிப்பிடுவது போன்று  நமக்கு இறைவன் பல்வேறு விதமான கொடைகளையும், திறமைகளையும் வழங்கியுள்ளார். சிலருக்கு நல்ல ஞானத்தையும், சிலருக்கு நன்கு பேசும் திறமையும் என தூய ஆவியாரின் சிறப்பு கொடைகளான தனது கடிதத்தில் பட்டியலிடுகிறார்.

நற்செய்தியில் ஐந்து தாலந்து பெற்ற மனிதர் தாலந்தின் மதிப்பை உணர்ந்து,  தனக்கு கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தி தன் தலைவரிடம் மதிப்பு பெற வேண்டுமென உணர்ந்து,  அதற்கு உழைப்பே சிறந்ததென்று மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்தான். மூன்று தாலந்து வாங்கியவனும் அவ்வாறே செய்தான். ஆனால் ஒரு தாலந்து வாங்கியவனோ,  எப்படியயன்றால், சில நண்பர்கள் நடு இரவு வரை நன்றாக குடித்து கும்மாளமிட்டுவிட்டு நதியின் அக்கரையில் இருந்து துடுப்பு போடுகிறார்கள். அதிகாலை வந்துவிட்டது காலை வெளிச்சத்தில் பார்க்கிறார்கள் படகு அதே நங்கூரத்தில் கட்டிய கயிற்றை அவர்கள் அவிழ்க்கவில்லை. இரவு முழுவதும் துடுப்பு போட்டும் ஒரு பயனும் இல்லை, எல்லாம் வீண் அநேகர் நிலைமை இவ்வாறே உள்ளது. பத்து வருடம் கழித்து நண்பர் பார்த்து, எப்படி இருக்கிறாய்? என்றால் அப்படியே இருக்கிறேன் என்பார். அதாவது அதே இடத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், வயது மட்டும்தான் கூடுதலாகும். அதுபோன்று தான் அவனுடைய செயல்பாடுகளும் தனக்குக் கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தாமல் எதற்கும் பயனில்லாமல் நேரத்தையும் வீணடித்து தன் தலைவரின் குணம் இவ்வாறு எனத் தெரிந்தும் உழைத்து முன்னேறாமல் சோம்பேறியாய் இருக்கின்றான்.

உலக வாழ்விலே உழைத்து முன்னேறிய தலைவர்கள் பலர். ஆங்கில இலக்கியம் போற்றும் ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரை சாணம் அள்ளிக் கொண்டிருந்தவர். அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சட்டம் படிக்க புத்தகங்களை வாங்க பணமில்லாமல் கடன் வாங்கி படித்தவர். புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் சிறுவயதில் மாடு மேய்த்தவர். இவ்வாறாக நாம் வியக்கின்ற மாபெரும் மனிதர்கள் தங்கள் உழைப்பினால் உயர்ந்து வரலாற்றில் தடம் பதித்துள்ளார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இன்றைய திருவழிபாடும் நமக்கு உணர்த்துவதும் அதனையே. தாலந்து என்னும் திறமை எல்லோருக்கும் புதைந்திருக்கிறது. திறமைகளில்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள தன் திறமையை பயன்படுத்தி உழைத்து தனது முன்னேற்றத்தை தீர்மானிக்கவும்,  தாலந்து ஒப்படைத்து சென்று மீண்டும் திரும்பி வந்து கேட்ட நேரத்தில் எதிர்பார்க்காத பணியாளனைப் போல் அல்லாமல்,  எந்த நேரத்திலும் இறைவனை சந்திக்க தயாரோடு  நாம் இருக்கவும், திருமுழுக்கினால் பெற்ற இறைவிசுவாசத்தை தனது திறமைகளையும், கொடைகளையும் பயன்படுத்தி, உழைப்பினால் உயர்வு பெறவுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவன் தனக்கு அளித்துள்ள சிறப்பு கொடைகள் யாது, அவற்றின் மூலம் எனது பயன் என்ன என்றெல்லாம் அறிந்து, நமது உழைப்பால் நாமும்  உயர்ந்து, பிறரையும் வாழ வைக்கின்ற மனிதர்களாய் வாழ்ந்திட  இறைவனின் அருள் வேண்டுவோம். உழைப்பால் உயர்வு பெற்றிட நம்மையே இறைவன் பாதத்தில் அர்ப்பணிப்போம்.

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
12 - 11 - 2017
சா ஞா 6: 12 - 16; 1 தெச 4: 13 - 18;  மத் 25: 1 - 13;

தற்போது வாகனங்கள் பெருகி விட்டன. விரைவாக செல்வதற்காக உண்டான இவ்வாகனங்கள், நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகமாகி விட்டன. 22.6.2017 ஆங்கில இந்து நாளிதழில் வெளியான செய்தி. இந்தியாவில் இரயில் விபத்துக்கள் 55 - 60 வயத்துக்குட்பட்ட ஓட்டுனர்களின் கவனமின்மையால் நடந்துள்ளன. 74 சதவிகித விபத்துக்குள் இந்த கவனமின்மையால் நடந்துள்ளன. இன்னும் அதிர்ச்சியான செய்தி. இந்த விபத்துக்கள் பயணிகளின் இரயிலில் நடந்துள்ளன.

ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். நம் நற்செயல்கள்தான் இறைவன் முன் வெகுமதியைக் கொடுக்கும். மற்றவர்களின் நற்செயல்களால் நாம் பயனடைய முடியாது. பத்துகன்னியர் உவமை மேற்கண்ட கருத்çத்தான் தெரிவிக்கிறது. மத் 24:45-51 இல் தன் வீட்டு உடமைகளுக்குப் பொறுப்பான அதிகாரியை நியமித்த  தலைவர், அவர் வரும் நேரத்தில் பணி செய்துக் கொண்டிருப்பவர் பாராட்டும்,  பதவி உயர்வும் பெறுகிறார் என்ற உவமையும்,  பத்துக் கன்னியர் உவமையும்  ஒத்து செல்கிறது எனலாம். லூக் 12: 35-38 இல் திருமண விருந்திற்குச் சென்ற தலைவருக்காக விழித்திருந்து காத்திருக்கும் பணியாளர் உவமையும் பத்துக் கன்னியர் உவமை ஒத்ததாக காண முடியும்.

விழிப்பாயிருப்பதற்குமேல், ஆயத்தமாயிருக்க வேண்டும் என்ற கருத்து இங்கு, அழுத்தமாக கூறப்படுகிறது. முதல்வாசகத்தில் நாம் ஞானத்தைத் தேடினால், ஞானம் நம்மைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் உயிர்ப்பினைப் பற்றி விளக்குகிறார். உலக முடிவில், முன்பே இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்,  பிறகு உயிரோடிருப்பவர் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவர் என்று விளக்குகிறார்.

சொகுசு தேடும் பண்பினால் சோம்பல் உண்டாகிறது. சோம்பலினால் விழிப்புணர்வு தளர்ந்துபோய் விடுகிறது. நம் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தற்போதைய மத்திய அரசு போர்க்  கொடி உயர்த்தியிருக்கிறது. ஆனால் அடிமட்ட அளவில் இந்த ஊழல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. எந்த அலுவலகத்திலும் காசை காட்டினால்தான் காரியம் நடக்கிறது.

ரேன் கார்ட்டில் ஒருவரின் புகைப்படத்திற்குப் பதிலாக செருப்பு இடம் பெற்றிருக்கிறது. இன்னுமொரு ரே­ன் கார்டில் ஒரு நடிகையின் போட்டோ இடம் பெற்றிருக்கிறது. தயாரிக்க வேண்டிய அலுவலர்கள் சொற்ப சம்பளத்திற்கு ஆள்களை நியமித்து, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்ய கூறுவார்கள். சொற்ப ஊதியம் பெற்றவர்  சோர்வான நிலையில் வேலை செய்வர். எனவேதான் இத்தகைய கேவலமான தவறுகள் நடைபெறுகின்றன.

ஆயத்தமாயிருந்தால் எதிர்பாராத நேரத்தில் வரும் இறைவனை சந்திக்கலாம். ஆயத்தமாயிருந்து கருமமே கண்ணாயினராக நாம் இருந்தால், வெற்றிகள் நம்மை தேடி வரும். கேரளாவிலிருந்து பீடம் செய்ய ஆள்கள் குடந்தை வந்திருந்தார்கள். குடந்தை பங்கு குரு சொன்னார். கேரளாகாரர்கள் வேலை செய்யும் போது பேசுவதேயில்லை. நம் ஆள்கள் ஊர்கதை உலகத்துக் கதைகளையயல்லாம் வேலை நேரத்தில்தான் பேசுவார்கள். பெரிய மருத்துவமனை அது. அங்கு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்த போது, அங்குள்ள செவிலியர் பிள்ளைகள் சிரித்து விளையாடிக் கொண்டு செய்தார்கள்.

நம் நாட்டிற்கு விழிப்புக் கலாச்சாரம் மிக அவசியம். விழிப்பின் வழியாகத்தான் உயர்ந்து நாம் நிற்க முடியும்.

பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு 
 ( 05 - 11 - 2017)
மலாக் 1:14 -2: 1-2, 3-10;  1 தெச 2: 7-9, 13;   மத் 23: 1 - 12

ஒரு நடிகையை  பெரிய நகைக் கடைத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்களாம். விமானத்தில் நடிகை வந்து விட்டார். ஆனால் விமான நிலையத்திலிருந்து கடைக்கு அழைத்துவர ஏ.சி. கார் வந்தால்தான் வருவேன் என்று அடம்பிடித்தார் நடிகை.  புதிதாக ஏ.சி. கார் ஏற்பாடு செய்ய சில மணி நேரங்கள் ஆனதாம். இப்போது பந்தாவிற்குதான்  மரியாதை. எளிமைக்கு அவமரியாதை தான். பந்தா என்ற மதிப்பினைப்  பயன்படுத்தி பலர் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். வருமான வரி அலுவலர் என்று ஆடம்பரமாக வந்து, வீட்டினை சோதனை செய்யும் நேரத்தில், வீட்டினருக்கு சந்தேகம் எழ, அதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்களின் வெளிவேடம் தெரிய வர, வேடமிட்டு வந்தவர்கள் பயங்கரமாக அடி வாங்கினார்கள்.

விழாக்களில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர அலங்காரங்கள், வேடிக்கைகள், கேளிக்கைகள் நடைபெறுகின்றன. ஒரு பெரிய பணக்கார வீட்டுத் திருமணம். பல அருள்பணியாளர்கள் திருப்பலியில் பங்குப் பெற்றனர். பிரபலப்  பாடகரின் கச்சேரி, குதிரை சரட்டு வண்டியில் ஊர்வலம், ஒருவருக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள உணவின் விருந்து. இப்படியாக எல்லோரும் வியக்கும் வண்ணம் பெருமையுடன் திருமணம்  நடந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஒரே வாரத்தில் மணமக்கள் பிரிந்து விட்டனர். வரதட்சணைப் பொருள்களையயல்லாம் எடுத்து சென்று விட்டனர். ஆடம்பரத்தின் பயன் என்ன?

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கற்றறிந்த சமயத்  தலைவர்களும்  மக்களுக்கு அறநெறிகளைப் போதிப்பவர்கள். சிறப்பாக அவர்கள் போதிக்கும் பணியை செய்து வந்தார்கள். இயேசு, திருமுழுக்கு யோவனைப் போல பயப்படாமல், அந்த தலைவர்களின் வெளிவேட வாழ்க்கையை கண்டித்துப் பேசுகிறார். அவர்கள் போதித்ததைப் போல வாழ்வதில்லை. இறைவனின் சவாலான வழியை மக்களுக்குக் காட்டிவிட்டு,  அதிலிருந்து  ஒதுங்கிக் கொள்கிறார்கள். மக்கள்மீது சுமைகளை கட்டி விடுகிறார்கள். விரலால் கூடத் தொட முன் வரமாட்டார்கள் என்கிறார் இயேசு. இரண்டாவது, மனிதர்களின் கவனத்தைப் பெற நெற்றியிலும் கையிலும் கட்டிக் கொள்கின்ற பட்டயங்களையும், அங்கிகளின் இறுதியில் சேர்க்கப்படும் குஞ்சங்களையும், மக்களின் கண்களில் நன்கு படும்படி பெரிதாக்கிக் கொள்கிறார்கள். மூன்றாவதாக, மனிதர் தரும் பெருமையை, பொது இடங்களில் (விருந்து, தொழுகைக் கூடங்கள்) விரும்பிப்  பெறுகிறார்கள். நான்காவதாக, தங்களைப் பெருமையுடன் மற்றவர்கள், ரபி, தந்தை, ஆசிரியர் என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியத் தொண்டினை மறந்து  பெருமையை மட்டும் விரும்பி தேடினார்கள்.

மத் 23: 1-36 என்ற பகுதி இயேசு பரிசேயர்களைக் கண்டிப்பதைக் காட்டுகிறது. பரிசேயர்கள், ரபி, தந்தை, ஆசிரியர் என்று அழைக்க விரும்பினர். ஆனால் அவர்கள் வெளிவேடக்காரர் (5 முறை), குருட்டு வழிக்காட்டிகள் (2 முறை), குருடர், குருட்டுமடையர், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், பாம்புகள், விரியன் பாம்புக் குட்டிகள் என்று மிகக் கடினமாக அவர்களைச் சாடுகிறார்.

முதல் வாசகத்தில், ‘நீங்கள் செவிசாய்க்காவிடில் உங்கள்மேல் சாபத்தை அனுப்புவேன். நான் செய்த உடன்படிக்கையை பாழாக்கி விட்டீர்கள். ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்’ என்ற வாக்கியங்களைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில், ‘நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்’ என்று பவுல் தெசலோனிக்க மக்களைப் பாராட்டுகிறார். 1 சாமு16:7இல் ‘மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ என்று கூறப்பட்டுள்ளது. மனிதர் முன், பெருமையை, மனிதரை ஏமாற்றும் கருவியாக  மனிதர் பயன்படுத்துகின்றனர். மனிதர் தரும் பெருமை கானல் நீர் போன்றது. தற்போது, வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேல்நாட்டு நாகரீகத்தைப் பின்பற்றி, விதவிதமான ஆடைகளை அணிகிறார்கள். பெண்களுக்கு நகையின் மீது மோகம், உள்ளாந்திர உறவுகள் குறைகின்றன. நாகரீகம் வளர வளர, உள்ளந்திறந்த உரையாடல்கள், பகிர்தல் ஆகியவை குறைகின்றன. தங்களின் வாழ்வை இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். நம் குடும்ப சிக்கல்கள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நம் மானம் மரியாதை என்னாவது? என்று மிகவும் கவனமாயிருப்பார்கள். ஒரு நகைச்சுவையில், பெண் பார்க்கப்  போகிறார்கள். பெண் நன்கு அலங்கரித்து வருகிறாள்.  மாப்பிள்ளையின் நண்பன் கூறுகிறான். இப்போது டபுள்கோட் அடித்து வந்திருப்பாள், மேக்கப்பை களைந்து வழக்கமான நைட்டியுடன் வரச்சொல் என்கிறான். மாப்பிள்ளையும் அப்படியே கூறுகிறான். பெண்பார்க்கும் நிகழ்வு சண்டையின் நிகழ்வாக மாறுகிறது.

  நகைச் சுவையின் உணவு வெளிவேடம்          - மோரோக்கா.

ஒன்றாய் இருப்பார்களாக

ஒன்றாய் இருப்பார்களாக

 - நல்லை இ. ஆனந்தன், வேதியர் 

கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தால் வானதூதர் நின்று கொண்டிருந்தார். உங்களில் ஒருவரை மோட்சம் அழைத்துப் போக வந்திருக்கிறேன். யாரை நான் அழைத்துச் செல்ல என்று நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார். உடனே மனைவி சொன்னாள். என் கணவரை தயவு செய்து மோட்சத்துக்கு அழைத்துப் போங்கள். அவர் போனால் எனக்கு வீடே மோட்சமாகிவிடும் அதற்கு கணவர் சொன்னார், இவளை நீங்கள் அழைத்துப் போங்கள் இவள் போனால் எனக்கு இந்த உலகமே சொர்க்கமாகிவிடும்  வானதூதர் திகைத்து நின்றார்.

இது கற்பனைக் கதையல்ல. நிஜத்தின் நிழல். உண்மையின் உரைகல். இருமனங்கள் ஒரு மனமாவது திருமணம் என்ற காலகட்டம் இப்போது மலையேறிவிட்டது. நான் பேச நினைப்பதெல்லதாம் நீ பேச வேண்டும், நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் என்று கணவர் மனைவியிடம் கண்டிசன் போட முடியாத காலம் இது. நீ காணும் உலகத்தை நீயே பாரு. நான் ஏன் பார்க்க வேண்டும்? என்று மனைவி எதிர்ப்புக்குரல் எழுப்பும் காலகட்டம் இது. காரணம் இந்த உலகம் எல்லாவற்றிலும் வளர்ந்துவிட்டது.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து, ஆனந்தமாய் வாழ ஆண்டவர் ஏற்படுத்திய, அற்புத அமைப்பு. ஆனந்தக்கொடை ஆனால், நிகழ்காலத்தை விட்டுவிட்டு, கடந்தகால நிகழ்வுகளை நினைத்துப் புலம்பிக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இழந்து இறைவன் பாதுகாப்பார் என்பதையும் மறந்து, வேதனை, விரக்தி, நிராசை, கோபம், சந்தேகம், சண்டை, சச்சரவு, குடி, அடிதடி, வன்முறைகள் என்று  குடும்பத்திற்குள்ளே ஒரு மூன்றாம் உலகப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இரு பூசணிக்காய்களை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைத்தது போல ஒட்டாமல், உறவாடாமல் தம்பதியர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விதிவிலக்காக, சில குடும்பங்கள் புளிமூட்டை போல உறவாடுவதாக ஒட்டியிருப்பதாகத் தோற்றம் அளித்தாலும், ஆழ்மனத்தில் சில புழுத்த விதைகளையும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றில் இரண்டுபேர் விவாகரத்து பெற்றுவிடுகின்றனர். ஆனால் நூற்றில் ஐம்பதுபேர் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உறவினர்களின் ஞானத்தையும், கத்தோலிக்க நம்பிக்கையையும் மனதில் கொண்டு குடும்பமாக வாழ்வதாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் விவாகரத்து பெறுவதை மணமுறிவு என்று பெயரிட்ட தமிழ் குடிமகன்கள். இந்த மன முறிவு பெற்ற தம்பதிகள் நிலையை மனவிலகல்  என்று புதுப்பெயரிட்டு அழைக்கிறார்கள் உலகமும், கிறித்தவமும் உட்கார்ந்து குடும்பத்தின் மாண்பு பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த மனவிலகல் நோய் ஓர் ஆட்கொல்லி நோய். உயிர் கொல்லி நோய். இதை வளர விடுவது உலகத்தின் உயர்வுக்கே தடையாகிவிடும். உடனடியாக கவனிக்க வேண்டிய கொள்ளைநோய் இது. இந்த மனவிலகல் எதனால் ஏற்படுகிறது? குடும்பத்தில் மனைவியர் சந்திக்கும் சவால்களில்தான் இது ஆரம்பிக்கிறது.

பொறுப்பு இல்லாத கணவராக இருப்பது, மனைவியை ஓர் அடிமையாக நினைப்பது, ஊதியத்தில் நியாயமான பங்கை குடும்பத்திற்கு வழங்க மறுப்பது, குழந்தைகளைப் பற்றி  அக்கறையின்றி இருப்பது, எதற்கெடுத்தாலும் குற்றம் காண்பது, குடிபோதையில் அதிகமாக ஆழ்வது, பாலுறவில் அளவுக்கு அதிகமான நாட்டம் கொள்வது, பிற பெண்களோடு தொடர்பு கொள்வது, மனம் திறந்து பேச மறுப்பது, மனைவியின் வீட்டை மட்டம் தட்டிப் பேசுவது, சந்தேகப்படுவது, அதிகாரத் தோரணையில் அமட்டுவது, வன்முறையில் இறங்குவது, சமைப்பதைப் பற்றி குறைவாகக் கூறுவது, ஆசிட் வீசுவது, அரிவாளைத் தூக்குவது என்று உடல் ரீதியான தாக்குதல்களை கணவர் ஆரம்பிக்கும்போது மனைவிக்கு மனவிலகல் நோய் ஏற்படுகிறது.

ஆனால் கணவர்கள் குடும்பத்தில் சந்திப்பது உளவியல் ரீதியான தாக்குதல்கள். இது அதிக வலுவான தாக்குதல்கள். மற்றவர்கள் முன்னிலையில் கணவரை அவமதிப்பது, யாரோடு பேசினாலும் கண்காணிப்பது, வாழ்வின் எல்லா நேரங்களிலும் தன்னோடு மட்டுமே இருக்க  வற்புறுத்துவது, கணவரின் இயலாமைகளைச் சொல்லிக் காட்டி சிறுமைப்படுத்துவது, முட்டாள், எதற்கும் லாயக்கில்லாதவன் என்று காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவது, தன் விருப்பப்படி நடக்கவில்லை எனில் விட்டுவிட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டுவது, நினைத்தது நடக்கும் வரை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது. கணவரின் கைபேசி, கணினிகளை ஆராய்வது வேவு பார்ப்பது, சில நேரங்களில் கையில் கிடைத்த பொருட்களால் தாக்க ஆரம்பிப்பது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுவது, காவல் நிலையத்தில்  போய் பொய் புகார் கொடுப்பது, குழந்தைகளை தூக்கிட்டு போயிடுவேன் என்று மிரட்டுவது, குழந்தையிடம் உன் அப்பா, ஒரு குடிக்காரன், ஊதாரி, பொறுப்பற்றவர் என்று பேசிப்பேசி குழந்தையின் மனதில் அப்பாவைப் பற்றி தப்பான கருத்தை உருவாக்குவது,...... இதுபோன்ற இன்னும் பல கணவருக்கு மனைவியோடு மனவிலகல் நோயை ஏற்படுத்தலாம்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகம் சந்திக்கப் போகும் ஆபத்துகளைப் பற்றி பேசி வருகிற இத்தொடரில், மனவிலகல்தான் உலகம் முழுவதும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகத் திகழப் போகிறது என்கிறார்கள்.  தயவுசெய்து வீட்டிலே  எதிரிகளாக நடிப்பதை விட்டுவிட்டு, நண்பர்களாகவே பிரிந்து போய் வாழுங்கள் என்று சொல்லலாம் என்றால் கடவுளின் நோக்கம், இயேசுவின் நோக்கத்திற்கு அது எதிராக அல்லவா மாறிவிடும்? இனி அவர்கள் இருவர் அல்ல, ஒருவரே, என்றும் எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருப்பாராக என்று கிறிஸ்துவத்தின் மதிப்பீடுகளுக்கு எதிராக அல்லவா போய்விடும்?

இறைக்குடும்பமும், திருக்குடும்பமும் எப்படி ஒன்றாய் இருக்கிறார்களோ அப்படியல்லவா நம் குடும்பம் இருக்க வேண்டும். முதல் குடும்பத்தில் இருந்த ஆதாம் ஏவாளைப் போல வாழவா ஆண்டவர் நம்மைப் படைத்தார்? சிறுபிள்ளைகளுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் கணவன் மனைவி பெற்றோர் நிலைக்கு உயர்ந்த விட்ட நிலையில் அவர்களுக்கு அறிவுரை கூறுவது என்பது சிறுபிள்ளைத் தனமானது.

புனித பவுலடியாரின் வார்த்தைகளைக் கேளுங்கள். திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள் (கொலோசை 3:18-19).

அன்பான தம்பதியரே, கடவுள் முன்னிலையில் கைகளை கோர்த்துக் கொண்டு, வாக்குறுதி அளித்ததை நினைவு கூறுங்கள். உன்னை ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன். என்ன ஞாபகம் வந்துவிட்டதா? ஏற்றுக்கொள்ளல், நேசித்தல், மதித்தல், பிரமாணிக்கமாயிருத்தல் இந்த நான்கும்தான் மனவிலகல் நோயை அழிக்கும். ஒழிக்கும். உலகமெங்கும் மிக வேகமாக பரவிவரும் மனவிலகல் நோய்க்கு உடனே முடிவுகட்டுங்கள்.

இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 
     

நம்பிக்கை இழந்தால் தோல்விதான்

நம்பிக்கை இழந்தால் தோல்விதான்

குத்துச்சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்த பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துகளிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை. அவரின் எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும்கூட அவரை வீழ்த்த முடியவில்லை. நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாக பேணி வந்ததால், எதிரிகள் அவரை  வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பலவிதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஏதாவது செய்து அவரைக் கொன்று விட்டாலும், அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழை பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்டப் பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல்நாட்டு போதைப் பொருள்களை அவருக்கு பரிசளிக்க முயன்றபோது, அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரை போட்டியில் வீழ்த்த வேண்டும். எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதை விட அதிகமாக செலவு செய்யவும் தயாராயிருந்தார்கள். இந்த செய்தி காட்டு தீப்போல் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின்  காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத்  தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்த புதிய இளைஞன்  தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் போக வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.

போட்டியின் நாள் அறிவிக்கப்பட்டது. புதிய இளைஞன் தன் நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவி செய்யும்படி சில வி­யங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படி சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தார்கள். அதனால் நண்பன் சொன்ன படியே செய்தார்கள்.

அதில் ஒருவன் வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும்  சந்தோ­மாக அவற்றை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று ‘என்னய்யா ஆச்சு உங்களுக்கு பேசும்போதே இப்படி மூச்சுவாங்குதே. கல்லுமாதிரி இருந்தீங்களே, உடம்பை பார்த்துக்குங்க’ என்று சொல்லிக் கிளம்பினான். ‘எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லதானே பேசுறேன்’. அவருக்கு குழப்பம் வந்துவிட்டது. மறுநாள் அதிகாலையில் அவர் வீதியிலே ஓட்டப் பயிற்சியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திட்டமிட்டபடி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்பட்டு வணங்கினான். ‘ஐயா போட்டியில் கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர இரசிகன். இப்பவும் நீங்க தான் ஜெயிக்க போறீங்க அதுல சந்தேகமே இல்ல. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் வலிமையும் இப்ப இல்லையே?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

என்ன எல்லோரும் இப்படி கேக்குறாங்க. இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கியது. அவர் வேகமாய் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.  எல்லோரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றி புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான். பலருடைய வாழ்விலே வந்துவிட்ட வியாதியை விட, வந்துவிடுமோ என்று பயப்படுகிற வியாதியே பலரை விழத் தாட்டி விடுகிறது. பலப்படுவோம் எண்ணங்களால். (வலையில் பிடித்தது)

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

17. உறவுகளே வாழ்வின் வேர்கள்

அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் தன் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லித் தருவது வழக்கம். அதைப்போல அன்று ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தந்தார். அன்று வகுப்பிற்கு ஒரு பெரியக் கண்ணாடிக்குடுவையை எடுத்துவந்து மாணவர்களுக்கு முன் வைத்தார். பிறகு ஒரு பையிலிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து வந்து அந்தக் கண்ணாடிக் குடுவையின் விளிம்பு வரை போட்டுவிட்டு, இப்போது இந்தக் கண்ணாடிக் குடுவை நிரம்பியிருக்கிறதா? என்றுக் கேட்டார். மாணவர்கள், ஆம் என்றார்கள். அப்போது ஆசிரியர் நீங்கள் சொல்வது தவறு. இந்தக் கண்ணாடி குடுவையில் உள்ள கற்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்று சொல்லிவிட்டு இன்னொரு பையிலிருந்து கூழாங்கற்களை எடுத்து விளிம்புவரை நிரம்பினார். பிறகு மாணவர்களிடம் கேட்டார். இப்போது மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள். இல்லை சார், கூழாங்கற்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது என்றார்கள். ஆசிரியர் இன்னொரு பையைத் திறந்து அதிலிருந்த மணலை குடுவையில் கொட்டி நிரப்பிவிட்டு, இப்போது குடுவை நிரம்பி இருக்கிறதா? என்று கேட்டார். மாணவர்கள் நிரம்பி இருக்கிறது சார், என்றார்கள். அப்போது ஆசிரியர் நீங்கள் சொல்வது தவறு. இன்னும் மணல்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது என்று சொல்லிவிட்டு கண்ணாடிக் குடுவையின் விளிம்பு வரை  தண்ணீர் ஊற்றினார். பிறகு மாணவர்களைப் பார்த்து சொன்னார். இப்போதுதான் இந்தக் குடுவை நிரம்பி இருக்கிறது.

பிறகு வாழ்க்கைப் பாடத்தை ஆரம்பித்தார். இதைப்போன்றுதான் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் வேர்கள்தான் உறவுகள். உறவுகள் இல்லாமல் நம் வாழ்வு என்றும் வளர முடியாது. கனி தர முடியாது. நிழல் தர முடியாது. நம் வாழ்வின் ஆணிவேரைப் போன்றது நம் இறை உறவு. தண்ணீரைப் போன்றது இறை உறவு. தண்ணீரைப் போல இருக்கும் இறைவனை நாம் பார்க்க முடியாது. ஆனால் அந்த தண்ணீரைப் போல இறைபிரசன்னம் இல்லாத இடமே இல்லை. மேலும் அந்தத் தண்ணீரைப் போல எல்லா உறவுகளையும் இணைப்பதும் இறைவன்தான். எவ்வாறு தண்ணீர் இல்லாமல் அந்த கண்ணாடிக்குடுவை நிறைவுப் பெறாதா அதைப்போலவே இறைவன் இல்லாமல் நம் வாழ்வும்  நிறைவு அடையாது.

அந்தக் குடுவையில் உள்ள மணலைப் போன்றதுதான் நம் குடும்ப உறவுகள். கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், முதியவர்கள் அனைவருக்கும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நாம் எப்படி குடும்பத்தில் இருக்கிறோமோ அதைப் போன்றுதான் நம் வாழ்க்கையிலும் இருப்போம். நம் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருப்போம். நம்குடும்பத்தில் அமைதியின்றி இருந்தால் நம் வாழ்க்கை முழுவதும்  அமைதியின்றி இருப்போம்.  எனவே நம் குடும்பத்தின் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும். நம் குடும்பத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். நம் குடும்பத்தில் மனவருத்தம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த மனவருத்தத்தை எவ்வளவு சீக்கிரமாக களைகிறோமோ  அவ்வளவு மகிழ்ச்சி மிக்கதாக நம் குடும்பம் மாறும். அதே வேளையில் நம் குடும்பத்தின் மீது அதீத  அன்பு காட்டக்கூடாது. நம் குடும்பத்தின் மீதான அதீத அன்பு மற்ற உறவுகளைச் சிதைத்து விடும். இறைவனுக்கு மேலாக குடும்பத்தை  அன்பு செய்யத் தொடங்கும்போது செபம் அர்த்தமற்றதாகி, பொழுதுபோக்கு, தொழில் முதலியவை முன்னிலை வகிக்கின்றன. குடும்ப உறவு மட்டுமே போதும், சமூக நலன் வேண்டாம் என்று நினைப்பவர்கள்தான் ஊழல், இலஞ்சம், ஏமாற்று வேலைகள் போன்றவை உலகில் நிஜம் பெறுகின்றன. அவ்வாறு அந்தக் கண்ணாடிக் குடுவையில் மணலோடு சேர்ந்து தண்ணீர், கூழாங்கற்கள், பெரிய கற்கள் இடம் பெற்றனவோ அதைப்போலவே நம் வாழ்விலும் குடும்ப உறவைத் தாண்டி இறை உறவும், பிறர் உறவும் இடம் பெற ¼ண்டும்.

அந்தக் குடுவையில் உள்ள கூழாங்கற்களைப் போன்றவர்கள் நம் பணித் தளத்தில் இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள். எவ்வாறு கண்ணாடி குடுவையை கூழாங்கற்கள் பெரிதும் ஆக்கிரமித்துள்ளதோ அதைப் போன்றே பணித்தள நபர்களும், நண்பர்களும் நாம் வாழ்வை பெரிதும் ஆக்கிரத்திருப்பதை நாம் உணரலாம்.

நண்பர்களோடு பொழுது போக்குவது நம் வாழ்வில் மறக்க முடியாத இனிய நினைவுகளைத் தரும். பள்ளிப்பருவ நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் நம் வாழ்வின் பக்கத்தை பெரிதும் நிரப்பி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அண்டை வீட்டாரோடு நல்ல உறவு, தொழில் புரியும்போது உண்மை, அன்பு,கருணை முதலிய பண்புகளை நாம் கடைபிடிக்கும் போது இந்த உறவுநிலைகள் சிறப்பாக இருக்கும்.

அந்தக் குடுவையில் உள்ள பெரியக் கற்களை போன்றதுதான் நாம் வாழும் இந்த பூமி மற்றும் நாம் சார்ந்து வாழுகின்ற சமூகம். பல சமயங்களில் நம்மீது நாம் காட்டுகின்ற அன்பில் நூறில் ஒரு பகுதியைக் கூட நாம் சமூகத்திற்கு காட்டுவதில்லை. நம் குடும்பத்தின் மீது நாம் காட்டுகின்ற அன்பில் பத்தில் ஒரு பகுதியைக் கூட நம் சமூகத்திற்குக் காட்டுவதில்லை. நம் அனைவருக்கும் இன்றும் கொஞ்சம் அதிகமாக சமூக அக்கறையும், சமூக பொறுப்பும் இருக்க வேண்டும் என அண்மைக் காலமாக அதிகமாக உணர்கிறேன். இந்த பூமி என்பது நம் பெரியக் குடும்பம். நம் சமூகம் அல்லது ஊர் (பங்கு) என்பது கொஞ்சம் சிறியக் குடும்பம். இப்பதிலே மிகவும் குட்டியான குடும்பம்தான். நம் மனைவி, மக்கள். எனவே பெரியக்குடும்பங்களையும், நம் குட்டிக் குடும்பம் போன்று பாவித்து அன்பு செய்ய வேண்டும். நம் வீட்டில் குப்பை இருந்தால் நாம் வெறுக்கிறோம். அதே நேரத்தில் நம் ஊரில் குப்பை இருந்தால் அதனை சரி செய்கிறோமா? நம் வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் வருந்துகிறோம். நம் தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் பலியானவர்களுக்காக போராட தயாராக இருக்கிறோமா?

சரிங்க, இந்த கண்ணாடிக் குடுவை உவமையினால் நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் வாழ்வில் உறவுகள் தான் அடிப்படை. உறவுகள் சிறப்பாக இருந்தால்  வாழ்வு சிறப்பாக இருக்கும். உறவுகளின் ஊற்றுக்கண். அன்பு நம் அன்பு எப்போதும் பலமடங்கு அதிகமாக பலனளிக்கும். அதற்கு என் வாழ்விலிருந்தே ஒரு உதாரணம் தருகிறேன். எனக்கு ஒருவரை மிகவும் பிடிக்கும். அவரும் என்னை அன்பு செய்கிறார். நான் அவரை அன்பு செய்வதைப் போல 4 மடங்கு அதிகமாக அவர் என்னை அன்பு செய்கிறார். அவர் பெயர் ரோசி. என்னாங்க, ரொம்ப யோசிக்காதீங்க. அவர்தான் நான் வளர்க்கும் என் செல்ல நாய்க்குட்டி. எனவே அன்பு செய்வோம். உறவை வளர்ப்போம். அப்போது வாழ்வு இனிமை பெறும். - (தொடரும்...)

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

21. பலவகை நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும் ( 2 )

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு 

இந்த நற்கருணை மன்றாட்டு மிகவும் தொன்மையான ஹிப்போலிட்ஸின் ‘அனாபோரா’ (Anaphora) வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து சில காரியங்களில் இது வேறுபட்டுள்ளது.  எடுத்துக்காட்டாக ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’வில் இல்லாத தொடக்கவுரையை இந்த இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் காணமுடிகிறது. இந்த தொடக்கவுரை கடவுளின் மீட்பு செயல்களை முன்வைத்து புகழுரைக்கிறது.
           அடுத்து ஒரு சுருக்கமான இடமாற்ற (Transition) செபம் காணிக்கைகளை அர்ப்பணிக்கும் செயலை  நோக்கி (Consecratory Epiclesis) நகர்கிறது. பின் நற்கருணையை ஏற்படுத்திய விரிவுரை இடம் பெறுகிறது. இந்த விரிவுரை மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் இருக்கும் விரிவுரையைப் பின்பற்றுகிறது. நினைவு ஆர்ப்பரிப்பு மற்ற நற்கருணை மன்றாட்டுகளுடன் ஒத்துப்போகிறது.

அப்ப - இரச வசீகரங்களுக்குப் பின் முதல் நற்கருணை மன்றாட்டில் காணப்படுவது போல், ஒப்புக்கொடுக்கும் செபம், தூய ஆவியார் திருகுழுமத்தின் மீது இறங்கி வந்து ஒருங்கிணைக்கும் செபம் (Communion Epiclesis), திரு அவைக்கும், திருதந்தைக்கும், இறந்த ஆன்மாக்களுக்கும், திருப்பலிக்கு வந்திருக்கும்  அனைவருக்கும் பரிந்துரை செபங்கள் இடம் பெறுகின்றன. புனிதர்களில் அன்னை மரியாவும், யோசேப்பும் திருத்தூதர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அடுத்து இறுதி புகழுரையுடன் முடிவடைகிறது.

ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’ தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் ஓரளவு மட்டும் இதில் வெற்றி பெறுகிறது.  இரண்டாவது நற்கருணை மன்றாட்டில்  கொடுக்கப்பட்டுள்ள தொடக்கவுரை படைப்பில் தொடங்கி மீட்பின் வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக குறிப்பிட்டு நன்றி செலுத்துகிறது. ஆனால் பழைய ஏற்பாட்டு மக்களை யாவே கடவுள் வழிநடத்தியமுறை இதில் இடம்பெறவில்லை. இந்த தொடக்கவுரை புதிய ஏற்பாட்டின் விசுவாச அறிக்கை போல் உள்ளது. இதனால்தான் இது ஞாயிற்று  திருப்பலிக்கு உகந்ததன்று என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஞாயிற்று கிழமை திருப்பலியில் வார்த்தை வழிபாட்டின் இறுதியில் விசுவாச அறிக்கை வருகிறது. ஆதலால்  இந்த நற்கருணை மன்றாட்டை வார நாள்களிலும் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். இம்மன்றாட்டுக்கு உரிய தனிப்பட்ட தொடக்கவுரை இருந்தாலும். மற்ற தொடக்கவுரைகளைச்  சிறப்பாக அவை  மீட்புத் திட்டத்தை  எடுத்துரைக்கும்போது அவற்றைப்  பயன்படுத்தலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டின் மையம் கிறிஸ்து. தொடக்கவுரை கூட கிறிஸ்துவை மீட்பராக அனுப்பியதற்காக  இறைதந்தைக்கு நன்றி நவில்கின்றது.  மக்களை தந்தையிடம் கொண்டு சேர்க்க அவர் மனமுவந்து பாடுகளை ஏற்று தம்மை பலியாக்கினார். இவ்வாறாக கிறிஸ்து முக்கியத்துவம் பெறுகிறார்.

 3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு

இந்த நற்கருணை மன்றாட்டு தொன்மையான எந்தவொரு நற்கருணை மன்றாட்டையும் தழுவி அமைக்கப்பட்டதன்று . இது ஒரு புதிய படைப்பு. இருந்தாலும் உரோமை நற்கருணை மன்றாட்டின் கூர்மதியை  உடைத்ததாக உள்ளது;  அதனுடைய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. கல்லிக்கன் வழிபாட்டு முறையின் சில தனிமத்தை இதில் காணலாம்.

முதல் நற்கருணை மன்றாட்டைப்போல், இதற்கும் உரித்தான தொடக்கவுரை கிடையாது. எனவே இதை எந்த தொடக்கவுரையுடனும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழாக்களிலும் பயன்படுத்த  இது மிகப் பொருத்தமானது. தொடக்கவுரையிலிருந்து ஒரு இணக்கமான நிலைபெயர்பை இதில் காணலாம். “ ஆண்டவரே நீர் மெய்யாகவே தூயவர்”  என்று தொடங்கும் மன்றாட்டு தொடக்கவுரையில் குறிப்பிப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல்களின் சுருக்கமான  தொகுப்பாக அமைந்துள்ளது.  
இந்த நற்கருணை மன்றாட்டின் சிறப்பு அம்சம் தூய ஆவியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமாகும். இதே  தூய ஆவியார் தான் மக்கள் கொண்டு வந்த  காணிக்கைகளை புனிதபடுத்தி பலிபொருளாகும் தகுதியை அளிக்கின்றார். கிறிஸ்துவ சமூகத்தை இறைவனுக்கு ‘தூய காணிக்கையை ஒப்புக்கொடுக்குமாறு’  ஒன்று  கூட்டுகிறார். மேலும் இந்த பலியில் பங்கு பெறு வோரையும் புனிதப்படுத்துகிறார். நற்கருணையில் பங்கு பெறுவதின் வழியாக கிறிஸ்துவின் மறையுடலாக மாறும் ஆற்றலை அளிக்கின்றார்; அவர்கள் தூய ஆவியின் ஆலயமாகின்றார்கள்.

இதில் இறந்தோருக்கான மன்றாட்டை அதற்குரிய இடத்தில், அதாவது “இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக் கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்” எனும் சொற்களுக்குப் பின் பயன் படுத்தலாம்.

 4. நான்காவது  நற்கருணை மன்றாட்டு

புதிய  நற்கருணை மன்றாட்டுகளில் இது மிகவும் பாராட்டுக்குரியது என்றால் அது மிகையாகாது. உரோமை மரபிலிருந்து விலகி அந்தியோக்கியன் மரபை நெருங்கியுள்ளது. அதாவது அந்தியோக்கியன் “திருத்தூதர்களின் விதி தொகுப்பின்”  (Constitutiones Apostolorum) சாராம்சத்தைச் சார்ந்துள்ளது.

இந்த நற்கருணை மன்றாட்டின் முதல் பாதிபகுதி தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது (1) அவருடைய கடவுள் தன்மைக்கும் (2) படைப்புக்கும், சிறப்பாக மனிதனின் படைப்புக்கும், அவன் தவறினாலும் அவனை மீட்க வகுத்தத் திட்டத்திற்கும் (3 ) மனிதராகி, மெசியாவை அவர் வெளிப்படுத்தவும், பாடுகளை அனுபவித்து மரித்து உயிர்த்தெழவும்  அவரை இவ்வுலகிற்கு அனுப்பியதற்கும், மற்றும் கிறிஸ்துவின் பாஸ்கா மறை பொருளில் பங்கு பெற்று அருள் அடையாள வாழ்வை வாழ்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி கூறப்படுகிறது. இந்நற்கருணை மன்றாட்டின் இரண்டாவது  பகுதி மற்ற இரு புதிய நற்கருணை மன்றாட்டுகளோடு அமைப்பில் ஒத்துப்போகிறது. இருந்தாலும் பரிந்துரை மன்றாட்டுகளின் வரிசைக் கிரமத்தில் சிறிது வேறுபடுகிறது.

இந்த நற்கருணை மன்றாட்டில் தூய ஆவியார் காணிக்கைகளை அர்ச்சிக்கவும் (Consecretory Epiclesis)  (“அதே தூய ஆவியார் இக்காணிக் கைகளை புனிதப்படுத்தியருள... ” ),  மக்களை ஒன்று  சேர்க்கவும் (Communion Epiclesis) - (“இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறும் அனைவரும்  தூய ஆவியாரால் ஒரே உடலாக கூட்டிச் சேர்க்கப்பட்டு....”) வேண்டிய  மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்த வகையில் மற்ற இரு (2+3) நற்கருணை மன்றாட்டுகளோடு ஒத்துப் போகிறது. இந்த ஒன்றிப்பு மன்றாட்டு இயல்பாக பரிந்துரைகளுக்கு நகர்வதைப் பார்க்கிறோம். அதாவது திருத்தந்தை, ஆயர்கள், திருநிலையினர் (Clergy), இறைமக்கள், நேர்மை உள்ளத்தோடு இறைவனை தேடுவோர் ஆகியவர்களின் ஒன்றிப்புக்காக பரிந்துரை மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மீட்பின் செயல் முழுவதிலும்  தந்தையாம் கடவுள் செயல் முதல்வராகக் (Main Agent of Actor) காட்டப்பட்டுள்ளார். அதாவது தந்தையாகிய கடவுள் முக்கிய, மையமான இடம் வகிக்கிறார்.

இந்த நான்காவது  நற்கருணை மன்றாட்டு  மாற்ற முடியாத   தொடக்கவுரையைக் கொண்டுள்ளது. திருப்பலிக்கென்று தனிப்பட்ட தொடக்கவுரை இல்லாத போதும், ஆண்டின் பொதுக்கால ஞாயிற்று கிழமைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் அமைப்பின் காரணத்தால் இதில் இறந்தோருக்கான சிறப்பு மன்றாட்டை இடையில் சேர்க்க முடியாது. ( காண் GIRM 365 ஈ).                                         (தொடரும்...)

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம் 

சிறுபிள்ளையாக இருக்கும் போது நமது தாத்தா, பாட்டியிடம் இந்தக் கதையை நாம் கேட்டு இருப்போம். என்ன கதை அது? பாட்டி வடை சுட்ட போது காகம் வடையைத் திருடிய கதை. பாட்டி மரத்தடியில் வடை சுட்டார். காகத்திற்கு பயங்கர பசி. மரத்தின் மேலே அமர்ந்திருந்த அந்த காகம் பாட்டி சுட்ட வடையைத் திருடியது. அப்பொழுது அதன் வழியே வந்த நரி காகத்திடமிருந்து வடையைப் பெற ஆசைப்பட்டது.  நரி அதனிடம் “நீ ரொம்ப அழகா இருக்க. ஒரு பாட்டு பாடேன்” என்றது காகம் “கா கா”  என்று கத்தியது. வாயிலிருந்து வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்து ஓடியது. இது ஒரு நீதிக் கதை. மற்றவர்கள் புகழ்வதைக் கண்டு ஏமாறாதே, ஏமாற்றாதே ஏமாந்து விடுவாய் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் அதில் சில எதிர்மறை எண்ணங்கள் விதைக்கப்படுகிறது. பசி - திருட்டு - பொய் - ஏமாற்றுதல் - ஏமாந்துபோதல் இவைகளை இக்கதை சொல்கிறது. காகம் வடையைத் திருடுகிறது. நரி அதை ஏமாற்றுகிறது. ஏமாற்றிய நரிக்கு என்ன தண்டனை? 

ஆனால், இதே கதையை சீனாவில் எவ்வாறு சொல்லிக் கொடுக்கிறார்கள் தெரியுமா? பல கருத்துகளை உள்வாங்கும் வகையில் மாற்றி தருகிறார்கள். பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். காகம் அங்கு வருகிறது. அது பாட்டியிடம்   “பசிக்கிறது வடை கொடு”  என்று கேட்கிறது.

பாட்டி :  விறகு ஈரமாக இருப்பதால் அடுப்பு எரியவில்லை. பொருத்திரு தருகிறேன்.

 காகம் : ( பறந்து சென்று )  தான் கட்டிய கூட்டிலிருந்து காய்ந்த குச்சிகளை எடுத்துவந்து பாட்டியிடம் தருகிறது. (உழைப்பு)
பாட்டி வடையைச் சுட்ட பிறகு காக்கைக்கு கொடுக்க மறந்து விட்டார். (முதலாளித்துவம்)

காகம் : பாட்டி! பாட்டி! நான் உழைத்த உழைப்பிற்கு கூலி கொடு. முதலில் நான் கேட்டது பிச்சை. இப்போது நான் கேட்பது   கூலி. கொடு! (தொழிலாளர் உரிமை)

பாட்டி :   மன்னித்துக்கொள் ( வடையைக் கொடுக்கிறார்)

காகம் வடையை எடுத்துக்கொண்டு  தன் உழைப்பின் பலனை அனுபவித்துக்கொண்டே பறந்தது. ஒரு மரத்தில் அமர்ந்தது.

 நரி:   (எல்லா நாடுகளிலும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் அல்லவா) 

காக்கா! காக்கா! நீ அழகா இருக்கிறாய், பாட்டு ஒன்று பாடு. காகம் மயங்கி பாட்டு பாடியது (தொழிலாளர் பலவீனம்). வடை கீழே விழுந்தது. நரி வடையை கவ்வியது.

இந்த கதையை இத்தோடு முடிக்கவில்லை. இங்கு தான் முக்கியமான செய்தியை சொல்றாங்க. காகம் சத்தமாக கத்தியது.  (தொழிலாளர் விழிப்புணர்வு) சத்தத்தைக் கேட்டவுடன் ஓராயிரம் காகங்கள் ஒன்றுக்கூடியது. (தொழிலாளர் சங்கம்) வடை திரும்ப பெறப்பட்டது. வடையைத் திருடிய நரி காகங்களுக்கு இரையானது. இவ்வாறு பல கருத்துக்களையும், பாடங்களையும் உள்ளடக்கி கதையை திருத்தி தந்திருக்கிறார்கள்.

பசி - உழைப்பு - தொழிலாளர் உரிமை - ஏமாற்றுதல் - தொழிலாளர் விழிப்புணர்வு ஆகிய ஆழ்ந்த கருத்துக்கள், கதையை கேட்கும் பிள்ளைகளுக்கு கொண்டு  சேர்க்கப்படுகிறது. தற்போது க்ஷுலிற் மிற்ணுe   ல் Vஷ்rழியி  ஆக  பரவிவரும் வீடியோ ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாளப்பாடல். இதன் அர்த்தம் “அம்மாவுடையை ஜிமிக்கி  கம்மலை எடுத்துக் கொண்டுப்போய் விற்று அப்பா சரக்கு வாங்கி வருகிறார். அந்த சரக்கை அம்மா குடித்துவிடுகிறார்”. இந்த வீடியோ ஒரு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. இதை பாப்புலராக்கியது நம் தமிழர்கள்தானாம். 

            இந்தப் பாடல் மக்களின் மனதில் எதிர்மறை சிந்தனைகளை விதைக்கிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்கள் போன்ற சமூகத் தொடர்பு சாதனங்கள் பல நேரங்களில் எதிர்மறை எண்ணங்களையும், தீய செயல்பாடுகளையும் விதைக்கிறது. வியாபாரத்திற்காக நல்ல செய்திகளையும், நேர்மறை எண்ணங்கள் கொண்ட நிகழ்ச்சிகளையும், நல்ல விழுமியங்களை எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுகின்ற மனிதர்களையும் பதிவு செய்ய மறுக்கிறது, மறக்கிறது, இருட்டடிப்பு செய்கிறது. இந்தச் செய்திகளையும், பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள், பெரியவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

  நண்பர்களே! நமது சிந்தனையில் நேர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தப்படட்டும், நமது பார்வையில், சொல்லில், செயலில் நல்ல விழுமியங்கள் செயல்படுத்தப்படட்டும். நமது உள்ளத்தில் நல்ல நீதிக்கதைகள் பதிவு செய்யப்படட்டும். அப்போது தனி ஒருவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே வெற்றி உண்டு! வெற்றி உண்டு!   வெற்றி உண்டு!

“வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே,
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்,
செய்வதை விரும்பிச் செய்,
செய்வதை நம்பிக்கையோடு செய்”.                                                                - 
- Will Rogers

Ads Inside Post