Pages - Menu

Thursday 3 December 2015

ஆத்தாவும், தாத்தாவும் வாயாடி வண்ணக்கிளி

ஆத்தாவும், தாத்தாவும்
வாயாடி வண்ணக்கிளி
என்னடியம்மா தலையயல்லாம்விரிச்சு போட்டுக்கிட்டு இப்படி வந்து நிக்கிற? என்ன ஆச்சு உனக்கு? அதிகமா பேசினீங்க, உங்கள உரிச்சு போட்டுவேன். இப்பல்லாம் மனு­னுக்கு காலமில்ல, பேய்க்குத்தான் காலம்.
அடியம்மா, பேயா வந்திருக்க, உனக்கு என்ன வேணும்? சொல்லி தொலை. நாலு பேய் படம் வேணும். இப்பத்தான் பக்கத்து வீட்டில ஒரு பேய் படம் பார்த்திட்டு வரேன். பேய்னா, நல்லா ஜாலி!
எத்தனை பேயயல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த வே­ம் போடாமலேயே நீ, பல நேரத்தில பேயாட்டம் ஆடியிருக்கிறியே!
ம்... உடனே போய் நாலு பேய் படம் சிடி வாங்கிட்டு வா. இல்லைனா உன்ன “செஞ்சிடுவேன்”.
என்னடி, புது வார்த்தையா இருக்கு. செஞ்சிடுவேன்னா என்னா அர்த்தம்?
பெறந்த சின்ன பிள்ளைக்குக்கூட இந்த வார்த்தை தெரியுது. உங்களுக்கு தெரியலையா? செஞ்சிடுவேனா, உங்கள முடிச்சிடுவேன்னு அர்த்தம்.
அடி பாவி, இந்த அளவுக்கு வந்திட்டியா? இப்பவே போன் போட்டு நீ கேக்கிறத வாங்கிட்டு வரச்சொல்றேன்.
ஏன்டியம்மா, ஊரெல்லாம் மழைபேஞ்சு, மக்கள் தண்ணியில மிதக்கிறாங்க. அதபத்தியயல்லாம் உனக்கு °ன்டியம்மா, ஊரெல்லாம் மழைபேஞ்சு, மக்கள் தண்ணியில மிதக்கிறாங்க. அதபத்தியயல்லாம் உனக்கு கவலையில்லையா?
வயித்தெரிச்சல கொட்டிக்காதேயா?
கடவுள் கொடுக்கிற மழைய தேக்கி வைக்க கதியில்லாம போயிருச்சு. இலவசம் இலவசம்னு அரசாங்கம் மக்களுக்கு அல்வா கொடுத்துகிட்டு இருக்கு.
ஆமாடியம்மா, பேனு, மிக்சியயல்லாம் பேருக்கு தானாம். ஓட்டை ஒடசலா இருக்காம். கேரளா அரசாங்கத்தில வேலை செஞ்ச ஒரு அதிகாரி சொன்னாராம். தமிழ்நாட்டில வேண்டிய ஏரி, குளம் வெட்டி, இருக்கிற ஏரிகளெல்லாம் பல்லகாட்டி, தண்ணிய பிச்சை வாங்க வேண்டியதில்லைனு சொன்னாராம்.
ஆந்திராவில சந்திரபாபு நாயுடு 2000 கோடி செலவு செய்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளை இணைச்சிருக்காராம். இந்த மழையில, 5 டிஎம்சி தண்ணீர் சென்னையில மட்டும் கடலில் கலந்திருக்காம்.
இதுமாதிரி ஆக்கபூர்வமான ஐடியால்லாம் நம்ம ஆளுகளுக்கு தோணாது. விஜய், அஜய்ன்னாத்தான் பைத்தியமாயிடு வாங்க.
டெல்லியில, கேரளா அரசு பங்களாவில, மாட்டுக்கறி சமைச்சாங்கன்னு, போலீஸ் ரெயிடு போச்சுதாம். கேரளாகாரங்க சும்மா விடுவாங்களா? தர்ணா நடத்தினாங்க. மத்திய அரசு ஆடிபோயிடுச்சாம். மாட்டுக்கறி, பசுவதைன்னு கொடி பிடிக்கிறவங்க, நதிகளை இணைச்சு நாட்டின் வளத்தை பெருக்கக் காணாம்.
சத்தம் போட்டு பேசாதீங்க, எலி கடவுளின் வாகனம். எலியை அடிக்கக் கூடாது. கொசுவும் பசுவை போல. கொசுவைக் கூட அடிக்கக் கூடாதானு சொன்னாலும் சொல்லுவாங்க.  துவரம் பருப்ப, துயரம் பருப்புனு சொல்ல வைச்சிருக்கே. தெரியுமாடியம்மா, தமிழ்நாடு, நாட்டின் வளர்ச்சியல 20வது மாநிலமா இருக்குதாம்.
அம்மா ஆட்சியில எது நடந்தாலும், மக்கள் கண்டுக்க மாட்டாங்க. மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு.. பீகார் தேர்தல மோடி தன்மாய வித்தையயல்லாம் காண்பித்தாரு. ஒன்னும் எடுபடல. மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறாங்க.
சரிடியம்மா, வெள்ளத்தில குதிச்சு, ஒரு அலசு அலசியதுபோல, ஒரு அலசு அலசிட்டோம். இந்தா பேய் சிடி வந்திருச்சு.
போய் பேயோடு உல்லாசம் இடு.
பேய்க்குத்தான் காலம். அடுத்த வாரம் ஒரு கலக்கு கலக்குவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post