Pages - Menu

Wednesday 2 December 2015

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

மூலிகையின் மாமணியாம்  கண்ணே
முன்னோர்கள் மருத்துவத்தை
அருட்பணி.ஆயர் அந்தோனிசாமி பெயர் சொல்லி
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்திலிருந்து எழுதுகிறேன் - கண்ணே

உப்பு அதிகம் சேர்த்தால் - கண்ணே
உன் முடி நரைக்கும்
புளி அதிகம் சேர்த்தால் - கண்ணே
உன் மேனியில் திரை (தோல் சுருக்கம்) உண்டாகும்

உடல் மெலிந்து தூக்கமின்மையால் அங்கம் எரிகிறதா?
உன் ஆத்தாள் நான் இருக்கேன் - கண்ணே
ஆவாரை பஞ்ச சூரணம் தரட்டுமா? (இலை, பூ, காய், வேர், பட்டை)

சுடுகாட்டில் உன் உடல் வேக நாளாகுமென்று
வெண் சுருட்டில் (சிகரெட்) வெந்து போக விரும்புகிறாயா - கண்ணே
நுரையீரல் நொந்து போகும் நரம்புகள் தளர்ந்து போகும்

ஆண்மையும் குறைந்து போகும் - கண்ணே
வெட்டைநோய் உன்னை விளம்பரப்படுத்தும்
வேண்டாமே இந்த சிகரெட்.

பசியைத் தூண்ட இலந்தை பழம் தரட்டுமா?
புண்களை அகற்ற வாழைப்பழம் தரட்டுமா?
காசத்துக்கு மாதுளம் பழமும் - கண்ணே
கண்ணொளிக்கு முந்திரிப் பழமும் தரட்டுமா?



சத்தான மூலிகையைச் சுருக்கி சுத்தி செய்து சாப்பிட்டால்
மண்டலம்தான் கண்ணே
மத்தான மன்மதன் போல் மேனியாகும்
மாசற்று வாழ்வாய்

முள்ளங்கி சாப்பிட்டால் - கண்ணே
வாயுத் தொல்லை நீங்கும், வாய் நாற்றம் போகும்
கல்லீரல் வீக்கம் கரையும் ‡ கண்ணே
காமாலைக்கு நல்லது, சிறுநீர் அடைப்பு அகலும்

காதில் சீழ் வடிகிறதா - கண்ணே
மூன்று கிராம் உப்பு, 12 கிராம் தேன் கலந்து துணியால்
திரியாக்கி தினமும் இருவேளை காதுக்குள் வைக்க
இருநாளில் நன்றாக குணமாகும்

வெண்குஷ்டமா? வேதனைப் படாதே - கண்ணே
வறுத்த கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி
வடித்த கஞ்சியில் கலந்து களிம்பாக்கி
வெண்புள்ளிகள் மீது நான்கு மாதம் தடவிவர குணமாகும்

கருஞ்சீரகத்தை பொடியாக்கி தேனில் கலந்து - கண்ணே
இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு தினமும் சாப்பிட
ஓரிரு மாதங்களில் வெண்குஷ்டம்
இருந்த இடம் தெரியாமல் நிரந்தரமாகக் குணமாகும்

இரண்டு கிராம் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் - கண்ணே
கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால்
தடைப்பட்ட மாதவிலக்கு வெளியேறும்
பித்தப்பை, சிறுநீரகப்பை கற்களையும் கரைக்கும்

நூறு கிராம் கருஞ்சீரகத் தூளை அரை லிட்டர் நல்லெண்ணெய் - கண்ணே
கொதிக்க வைத்து வடிகட்டி இடுப்பு வலி, மூட்டு வலி,
மூட்டு வாதம், கை, கால் குடைச்சலுக்குத் தடவ குணமாகும்.

இரத்தத்தை சுத்தம் செய்து வீக்கங்கள் கரைய - கண்ணே
தோல் வியாதிகளும் நீங்கி பசியின்மையைப் போக்கி
செயலிழந்த சிறுநீரகங்களை செயல்படச் செய்ய
நிலவேம்பு சூரணம் அரை ஸ்பூன் சாப்பிடலாம்

அடிக்கடி நோய் வருகிறதா? - கண்ணே
நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?
அருகம்புல் சாறை காலையில் வெறும் வயிற்றில்
அரை அவுன்ஸ் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி கூடும் - கண்ணே

ஆறா புண்கள், சொறி, சிரங்கு ஆற - கண்ணே
அரசன் பட்டையை வறுத்து கரியாக்கிய பொடியை
தேங்காயயண்ணையில் குழைத்துப் போட
ஆறே நாளில் ஆறி விடும்.


முக்கி மலம் கழிக்கிறாயா - கண்ணே
மூல நோய் வந்து விட்டதா?
முள்ளங்கி கலந்து ஒரு டீஸ்புன் இருவேளை கொடுக்கட்டுமா?
மூலநோய் குணமாகும்

No comments:

Post a Comment

Ads Inside Post