Pages - Menu

Sunday 30 April 2017

பாஸ்கா காலம்-நான்காம் ஞாயிறு 07-05-2017

பாஸ்கா காலம்-நான்காம்  ஞாயிறு 
07-05-2017
 தி.ப 14:36-41, 1பேதுரு 2: 20-25;  யோவா 10:1-10 

      “தலைமைத்துவம் என்பது மற்றவர்களின் வாழ்வை உயர்த்துவதற்கு  பெறப்பட்ட அரிய வாய்ப்பு. தங்களின் பேராசைகளை நிறைவு செய்துக் கொள்ள பயன்படுத்தும் வாய்ப்பல்ல”  என்கிறார்  ம்வாய் கிபாக்கி என்பவர்.

யோவான் 10ஆவது  இயல், “இயேசு நல்ல ஆயர்” என்ற கருத்தை வலியுறுத்தி பேசுகிறது. இன்றைய நற்செய்திப்  பகுதியில், நல்ல ஆயருக்கும் திருடருக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காண்பிக்கிறார். இயேசு ஆடுகளின் உண்மையான  ஆயர்  சுதந்திரமாக வாயில் வழியே செல்கிறார். குரல் கொடுக்கின்றார். அவன் முன் செல்கிறார். ஆடுகள் அவரைப் பின் செல்கின்றன.  திருடர்கள் திருட்டுத் தனமாக சுவறேரிக் குதித்து, ஆடுகளை அழிக்க வருகிறார்கள். இயேசு தன்னை முதலில் “வாயில்”என்பதற்கு ஒப்பிட்டு பேசுகிறார், தன் வழியை, தன்முன்மாதிரிகையைப் பின்பற்றும் ஆயர்களுக்கு “ஆபத்தில்லை” என்கிறார்.  ஆயர்களின் வாழ்வு ஆடுகளை  மையப்படுத்தி அமைய வேண்டும். எனவேதான் இன்றைய நற்செய்திப் பகுதியில், எட்டு முறை “ஆடுகள்” என்ற வார்த்தை குறிப்பிடப் படுகிறது.இயேசு,ஆடுகள் ஆயர்  என்ற உவமையைப் பல  பின்னணிகளில் பயன்படுத்துகிறார்.
  - மாற் 6:35      மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல் இருப்பதாக இயேசு குறிப்பிடுகிறார்.
  - லூக் 15 : 3-7 காணாமற்போன ஆடும், அதனைத் தேடும் ஆயரும் என்ற உவமையில், இயேசு பாவிகளைத் தேடி செல்வது  விளக்கப்பட்டது.
 - மத் 7: 15; 10: 16 ஆடுகள், ஓநாய்கள் நடுவில்  வாழ்வதனால் விழிப்பாக அவர்களிடம் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையைத்  தருகிறார்.
 - திபா 23:  தொநூ 49: 24  இறைவன் மக்களின் நல்ல ஆயர் என்று விளக்கப்பட்டுள்ளது.
 - எசே 34: மக்களின் தலைவர்கள் தீய ஆயர்களாக  வாழ்வதாக காண்பிக்கப்படுகின்றனர்.

இன்றைய அருள்வாக்குப் பகுதிகள் ஆடுகள் ஆயனின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டும், ஆயனை அடையாளம்  கண்டுக் கொண்டு அவரைப் பின் செல்ல வேண்டும், என்ற கருத்தை முன்வைக்கின்றன எனலாம். எனவேதான் முதல்வாசகத்தில், பேதுரு,
எருசலேமில் வாழ் மக்களைப் பார்த்து  “மனம் மாறுங்கள்  திருமுழுக்குப் பெறுங்கள், தூய ஆவியைப் பெறுவீர்கள்” என்கிறார். இரண்டாம் வாசகத்தில், நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்க.இதற்காகவே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள் என்று பேதுரு கூறுகிறார்.மக்களுக்கு ஏற்ற தலைவர்கள்தான் தோன்றுவார்கள். ஏமாற்றி வாழும் எண்ணம் கொண்ட மக்கள் வெகுவாக இருந்தால், ஏமாற்றும் தலைவர்தான் அங்குத் தோன்றுவார். நல்ல நிலத்தில் பயிர்கள் செழித்து வளரும். பாலை நிலத்தில்  பயிர்கள்  கருகி ச்சாகும்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
கொல் குறும்பும்  இல்லது நாடு   (குறள் 785)

 நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல கட்சிகளும், கூடவேயிருந்தே தீங்கு செய்யும் உட்பகைவர்களும், மக்களை துன்புறுத்தும் தீயவர்களும் இல்லாததுதான் நல்லநாடு என்கிறார் வள்ளுவர்.
               “மனிதனை மனிதன் சாப்பிடுரான்டா தம்பிப் பயலே”  என்பது போல், நம் நாட்டவரிடம் தியாக மனப்பான்மை இல்லாமல் இருப்பதைக் காண்கின்றோம்.
     
          நிருபன் சக்கரவர்த்தி என்பவர் திரிபுராவில் முதலமைச்சராய் இருந்தார். 1988இல் அவர் பதவி முடிந்த போது, ஒரு சிறிய டிரங்க் பெட்டியுடன், ரிக்ஷாவில் ஏறி தன் கட்சி அலுவலகத்திற்குச் சென்றாராம். மக்களுக்காக பணி செய்கிறவர்  அவ்வளவு  எளிமையாக வாழ்ந்தார். 

இந்திய பாராளுமன்றத்தில்  543 உறுப்பினர்களில் 186 பேர் ( 34 சதவீதம் ) குற்றப் பின்னணியுள்ள  தாதாக்களாக வாழ்பவர்கள் என்று கணக்கெடுப்புக் காட்டுகிறது.  தமிழ்நாட்டிலும், சட்டமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு  ஒருவர் இந்த குற்றப் பின்னணி உள்ளவர். தாயைப்போல பிள்ளை, நூலைப் போல சேலை, மக்கள் போல் மக்கள் தலைவர்கள். 

இளம் உள்ளங்களின் மரியாள் ஆன்மீகம்

இளம் உள்ளங்களின் மரியாள் ஆன்மீகம்

அருட் சகோ. முனைவர் விமலி, FIHM   
தமிழ்த்துறைப் பேராசிரியர்,இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம். 

இன்றைய உலகிலும் இளம் உள்ளங்கள் தங்களின் அனுதின வாழ்வில் அன்னை மரியாவின் உடனிருப்பையும், உயர்வான மகத்துவத்தையும் அனுபவமாக உணர்கின்றனர். கல்லூரி மாணவி கள் சிலரின்  மரியாவின் துணையின் சாட்சியத்தை இங்கு பதிவு செய்கிறோம். 

       ‘இந்த அகிலத்தில் இறைவனின் குரலுக்கு உடனே செவிசாய்த்து, தன்னை முழுவதும் அர்ப்பணித்த முதல் பெண் மரியா. ஒரு பெண் எப்படியயல்லாம் வாழவேண்டும் என்று இறைவன் விரும்பியதை தன் வாழ்வால் வாழ்ந்து காட்டிய முதல் சரித்திரப் பெண். இவளின் புனிதமிகு வாழ்வு பல துறவிகளைப் புனித வாழ்வுக்கு உயர்த்த வேண்டும். ஒரு குழந்தை கேட்டவுடன் தாயானவள் வாரி வழங்குவது போல் இவள் என் வாழ்வில் பல புதுமைகளைச் செய்து என்னைக் காத்துவருகிறாள். எனவே அவளைப் பின்பற்றி அவளின் அன்பு பிள்ளையாய்  என்றும் வாழ்வேன்’. ( ர. இலாவண்யா, கெங்கவல்லி, கன்னியர் பயிற்சி, விருப்பநிலை).

     ‘அள்ளி கொடுப்பவள் அன்னை அல்ல அனைத்தையும் அப்படியே கொடுப்பவள்தான் அன்னை’ என்பதற்கேற்ப தன்னிடம் உள்ள அனைத்தையுமே அதுவும் தன் மகன் இயேசுவையும் முழுமையாக தந்துவிட்டார். நான் எட்டாம் வகுப்பு படித்தேன். அப்போது எனது தாய், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்கள். ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். நான் அன்னை மரியாவிடம் கண்ணீரோடு வேண்டிக் கொண்டேன்.எனது அம்மாவையும் கண்டுபிடித்தேன். அவருக்கு பூரண சுகம் தந்து காத்தார். இத்தகைய பெரும் அற்புதங்களைச் செய்து வருகின்ற எனது இரக்க அன்னை என்றும் வாழ்க. ( செ. எலிசபெத் ராணி, கடலூர், கன்னியர் பயிற்சி, விருப்பநிலை)

  மாதா என் வாழ்வின் நம்பிக்கையின் உரு என்று சொல்லலாம். என் குடும்பத்தினர் குடியிருக்க ஓரு வீட்டைக் கட்ட உதவியவர் அவர். அத்தோடு திடீர் விபத்திலிருந்து என்னையும், என் குடும்பத்தில் உள்ளவர்களையும் காப்பாற்றியவர். எந்த ஒரு செயலையும் நம்பி கேட்குற போது  வெற்றியாக செய்து முடித்துள்ளார்கள். என்றும் அவருக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். (அ. ஸ்டேசிதெபோரா, வெங்கமேடு, முதுகலை கணிதவியல் படிக்கும் மாணவி)  

எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட துன்பமான, தோல்வியான சூழலில்தான், எங்களோடு அன்னை நடந்தார்கள். அனைத்து  உறவுகளும் கைவிட்ட தருணத்தில்தான் அன்னை மரியாள் எங்களுக்கு ஆறுதலையும், உறுதுணையும் அளித்து  காத்து வருகின்றார்கள்.  எனவே என்றும் அவள் புகழ் சிறக்க, தொடர்ந்து  வாழ்த்தி செபிக்கின்றேன். (எஸ். ஜீலி ஜென்சியா, விரியூர், தமிழ் இளநிலை முதலாமாண்டு மாணவி)
அன்னை மரியாள் பெண்களுக்குள் சிறந்தவர், பாவமாசு அற்றவர், உலக மீட்பரின் தாய். எங்கள் குடும்பத்திற்கு  தந்தையின் இறப்பால் ஏற்பட்ட தனிமையை, என் தாய் உணராத வகையில், ஆறுதலும், ஆற்றலும், பாதுகாப்பும் தந்து, என் தாய்க்கு அரசு வேலையில் நிரந்தரத்தைத் கொடுத்து  காத்து வருகின்றார். ( சூ.ரேமிஜியுஸ் மேரி, காட்டுக்கூனங்குறிச்சி, இயற்பியல் இளநிலை  முதலாமாண்டு மாணவி)
திருமணத்திற்குப் பிறகு பத்து ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பாக்கியத்தை அளித்து எனது தாய்க்கு தாய்மையை அளித்தவர். நன்றி அன்னையே! நீவீர் வாழ்க. ( ஏ. பிரின்சியா, கனிணி முதுகலை இரண்டாமாண்டு மாணவி)

இந்த மனித சமூகத்திற்கு நாம் ஏதாவது தர வேண்டும் என்று நினைத்தால் அது நம்பிக்கையாகத்தான்  இருக்க வேண்டும்.இவ்வாறுதான் நமது அன்னை மரியாளும் இவ்வுள்ளங்களுக்கு பரிசாகப் பல நன்மைகளை அளித்துள்ளாள் என்பதை இவண் கண்டோம். எனவே இந்த மனுக்குலத்தை வாழ்வின் பாதைக்கு அழைத்து வரும் மாபெரும் திட்டத்திலே அன்னை மரியாள்  அற்புதமாய்த் தன் பங்கை முழுமையாக செய்து வருகின்றாள். தாய்மை தாங்கிக்கொள்ளும். இதுதான் உண்மையான தாய்மை. இத்தாயானவள் தன்னுடைய துன்பத்தை மட்டும் சுமப்பவள் அல்ல. மாறாக தன் துன்பத்தோடு தன் பிள்ளைகளின் துன்பத்தையும் சேர்த்தே சுமப்பவள். அதைத்தான் நமது அன்னை கன்னிமரியும் நமக்கு நாள்தோறும் செய்து கொண்டே வருகின்றாள். 

கார்மேல் சகோதரி மரிதோமினிக் பிலய் கூறுகிறார்,

‘ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்ற மனித ஆன்மா எது? தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும் இறைவனின்  தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கின்ற ஆன்மாதான். எனவே அத்தகைய ஆன்மா இறை கட்டளை  அனைத்தையும் உறுதியுடன் கடைபிடித்து இறைவனின் மகத்துவத்தையும் அவரது வல்லமையையும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.  இவ்வகையில் மரியன்னையும் வாழ்ந்தாள். தமக்கு வரும் மேன்மையும், அனைத்து ஆற்றல்களும் வல்லமையே உருவான இயேசுவின்  வழியாக வருகின்றது என்று உணர்ந்திருந்தாள்’ என்கிறார்

 கன்னி மரியாவின் இதயம் இறைவனின் வளம் நிறைந்த இறை அன்பைக் கொண்டுள்ளது. கடவுள் மனிதனோடு செய்து கொள்ள விரும்பிய உடன்படிக்கையின் நிறைவே மரியாவின் தெய்வீகத் தாய்மையாகும். மனித மீட்பின் ஊற்றாக, தெய்வீக தாய்மை விளங்குகிறது.  ஒரு குழந்தை யின் உயிருக்கு ஊற்றாக விளங்குபவர் தாய்தான். பல நேரங்களில் புண்ணிய வாழ்வு வாழ இயலாத பாவப்பட்ட மனிதர்கள் அருகிலும் மரியா இருப்பது நமக்கு வியப்பூட்டுகிறது. அன்னை மரியாள் வரங்களின்  இடை நிலையாளராக இருக்கின்றார். இடைநின்றுப் பரிந்துரைக்கும் தமது பணியில் மரியா, தூய ஆவியோடு மிகவும் நெருக்கமாய் இணைந்திருக்கின்றார்.

மனிதர்களின் துன்பங்களை மரியாள் புரிந்துகொண்டு, அவற்றைத் தன் இதயத்தில் ஏற்று, இறைவனிடம் ஒப்படைப்பதே மரியாவின் இடைநிலையாளர்ப் பணியாகும். மரியா உயிர் தரும் தாயாக விளங்குவதே அவரது இடைநிலையாளர் பணியின் இரண்டாவது அம்சமாகும். மூன்றாவதாக, மரியா போராடும் தாயாக இருக்கின்றார்.  மரியா தன் வாழ்வு முழுவதும் மிக ஆபத்தானதும், வேதனைக்குரியதும், கடுமை யானதுமான சூழ்நிலைகளையே ஏற்றுக் கொண்டார். ஏனெனில், மாபெரும் போராட்டத்தின் மத்தியில்தான்  மரியா நம்மை ஈன்றெடுத்தார். மிக உச்சக் கட்ட போராட்டம் சிலுவைப் போராட்டமாகும். ஒப்புயர்வற்ற இரக்கத்தாலும், அன்பாலும் இடைநிலையாளராதல் அவரது, அன்பின் மனநிலையை வெளிப்படுத்து கிறது. கிறிஸ்தவ வாழ்வின் இன்பங்களையும், துன்பங்களையும், போராட்டங்களையும், மகிமை யையும் முழுமையாக வாழ அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.     
யாரேனும்ஒருவர் என்னிடம் உதவி கேட்கிறார் என்று சொன்னால், இன்னும் நான் இந்த உலகத்திற்கு பயன்படுகிறவனாக இருக்கிறேன் என்று பொருள்.
 (பெளலோ  கோயயல்லோ)
      
  நான் தோற்றால் நாம் வாழ்வோம். என்பதை அன்னை வாழ்வாக்கியவர். அன்பு வாழ்வில் தோற்கத் தெரிந்த இதயம்தான் ஜெயிக்கத் தெரிந்த இதயம். அதுதான் நம் அன்னை மரியாள். தான் தோற்றத்தின் ( தன் மகனை இழந்து) மூலம் இவ்வுலகையே வெற்றி காணச் செய்தவள். நாமும் இவ்வுலக வாழ்வில் தோற்று பிறர் வாழ்வை வெற்றி காணச்செய்வோம்.

விண்ணுலகின் தேவதையாய்
மண்ணுலகின் அரசியாய்
மலரும் பூக்களின் இதழாய்
வானில் ஒளிரும் நிலவாய்
அன்றும் இன்றும் என்றும் அன்னையாய்
விளங்குவாள் என் அன்னை மரியாள்.   

Saturday 29 April 2017

விழாக்கள் ஒரு பார்வை

விழாக்கள் ஒரு பார்வை

விழாக்கள் அழகு நிகழ்வுகள் என்று சொல்லலாம். கிறிஸ்தவர்கள்,  தங்கள் பங்கின் பாதுகாவலரின் விழாவை தங்களின் பங்குகளில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். கொடி¼ற்றம், நவநாள்கள், தேர்பவனி, வானவேடிக்கைகள், மேளதாளங்கள் என்று சமூக கொண்ட்டமாக விளங்குகின்றன. விழாக்கள் மக்களை ஒன்றினைக்கும் பாலங்களாக, உறவுகள் இணையும் நாள்களாக விளங்குகின்றன.

           குடந்தை மறைமாவட்டத்தில் பாஸ்கா விழா முடிந்ததும், பங்குகள், பங்கு விழாக்களை கொண்டாடுகிறார்கள். பிரான்சு நாட்டு அருள்பணியாளர்கள் 17-18-ஆம்  நூற்றாண்டுகளில் பங்குகளை வழிநடத்திய போது உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக விழாக்கள் அமைக்கப்பட்டன. பாஸ்கா விழா கோடைகால துவக்கத்தில் அமைந்து வடுவதால், விவசாயத்தில் அறுவடையயல்லாம் முடிந்து , விழாக்கள் கொண்டாட ஏற்ற காலமாகி விட்டது.  உயிர்ப்பு ஞாயிறை அடுத்த ஞாயிறுலிருந்து பங்கு விழாக்கள் ஆரம்பமாகின்றன. கீழ்காணும் ஊர்களில் பாஸ்காவிழாவுற்குப் பிறகு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

 2 ஆம் வாரம்  - புதுக்கோட்டை, இருங்களுர்
 3 ஆம் வாரம்  - விரகாலூர்,  வந்தலை
4 ஆம் வாரம்  - ஏலாக்குறிச்சி, பெரியவர்சீலி, பாளையம்
 5 ஆம் வாரம்  ‡ குலமாணிக்கம், மேகளத்தூர், அன்னமங்களம், நடுவலூர், குமிழங்குடி 
 விண்ணேற்றவிழா 40 ஆம் நாள் விழா, புள்ளம்பாடி, கொன்னைக்குடி  
விழாக்களுக்கு மக்கள் வரி கொடுக்கிறார்கள். ரூ 100 முதல் 200 வரை ஊருக்கு ஊர் அவர்களின் தேவை, வசதிக்கேற்பக் கொடுக்கிறார்கள். ஊர் தலைவர்கள்  (நாட்டன்மை, காரியக்காரர்கள்) பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.   லால்குடி பங்கில் 400 குடும்பங்கள் குடும்பத்திற்கு ரூ 200/- வரி. ஆனால் பூ, மேளதாளம், ஒளி ‡ ஒலி அமைப்பிற்கு தனிதனியாக சிலர் பொறுப்பேற்கிறார்கள். இந்த பங்கில் வரிபணத்தில் செலவு போக வருடம் ரூ 30000/‡ சேமிக்கிறார்கள். அதனை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்கிறார்கள். இதனை மிகவும் பாராட்ட வேண்டும். இந்த முன்மாதிரிகையை மற்ற பங்குகளில் பின்பற்றலாம். 

 சில ஊர்களில், வான வேடிக்கைகளும், மேளதாளத்தற்கும் லட்ச கணக்கில் செலவு செய்கிறார்கள். கல்வி உதவி, பொது  தேவைகள் ஆகியவைகள் பற்றி கவலைபடுவதில்லை. பல இடங்களில் மதுபானம் ஆறாக ஓடி, அதன் விளைவாக அடிதடி ஏற்படுவதுண்டு.
    
 திருவிழாக்கள் மாப்பிள்ளை பெண்பார்க்கும் நாள்களாகவும் அமைந்து விடுகின்றன. பெந்த கோஸ்தே சபையினர், நம் விழாக் கொண்டாட்டங்களை கலைவழிபாட்டின் உச்சக்கட்டம் என்பர்.
 நம் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வெளிகாட்டுவன   திருநாள்கள். தவறுகள் நடப்பதை  தடுத்து  நிறுத்தினால் விழாக்கள் அழகிய நிகழ்வுகளாகும்.

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்


15.- அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

 நற்கருணை வழிபாடு (iii)

முந்தின சிந்தனைகளில் நற்கருணை வழிப்பாட்டின் தொடக்கப் பகுதியாக “காணிக்கை களைத் தயாரித்தல்”  என்பது பற்றிய விளக்கம் இடம் பெற்றது. இப்பொழுது நற்கருணை வழிப்பாட்டின் மையமாகிய “நற்கருணை மன்றாட்டு”  என்பது பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். இவ்விளக்கம் பலதவனைகளில் இடம் பெறும்.

ஆ.நற்கருணை மன்றாட்டு 

 உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் 
நற்கருணை மன்றாட்டு பற்றிய பின்வரும் குறிப்பை வாசிக்கிறோம்:

“திருப்பலி கொண்டாட்டம் முழுவதற்கும்  மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருனை மன்றாட்டு... நன்றி மன்றாட்டாகவும்   புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறை வேண்ட லுடனும், நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருன்பணியாளர் அழைப்பார். அவர்களை தம்முடன் இறைவேண்டலில் இணைத்து திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைதந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெறும் செயல்களை அறிக்கையிடுவதிலும், பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது.” ( எண் 78).

இந்த மேற்கோவிலிருந்து நற்கருணை வழிபாட்டில் பயனுள்ள முறையில் பங்கு கொள்வதற்கு நற்கருணை மன்றாட்டுகளைச்  சரியாகப் புரிந்து கொள்வது அவசியமென்பது தெளிவாகிறது. எனவே இப்பொழுது நற்கருணை மன்றாட்டுகளின் பின்னணி, தோற்றம்,  வளர்ச்சி, அமைப்பு, அவற்றில் பொதிந்துள்ள இறையியல் சிந்தனை ஆகியவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.
  
1. நற்கருணை மன்றாட்டுகளின் பின்புலம்

 நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இறுதி இரவு உணவு பகுதியில் பயன்படுத்தபட்டுள்ள “நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து”  எனும் வார்த்தைகள் நற்கருணை மன்றாட்டு தோன்றுவதற்கு மூலமாக இருந்திருக்கலாம் என்றாலும், இப்பகுதி நற்கருணை மன்றாட்டு தோன்றிய விதமனைத்தையும் விளக்குகிறது என்று சொல்ல முடியாது. எனவே இதன் மூலத்தை வேறு இடங்களில் தேட வேண்டும்.     

1.1. யூதர்களின் பெராக்கா (Berakah)

யூதர்களுக்கு ஒவ்வொரு உணவும், குறிப்பாக பாஸ்கா விழாவுக்கு முந்தினநாள் மாலை உணவு திருவழிப்பாட்டுத் தன்மை உடையதாக இருந்தது. அப்பத்தையும், இரசக்கிண்ணத்தையும் ஆசீர்வதித்தல்.  யூதர்களின் அன்றாட செப அமைப்பின் ஒரு கூறாக  இருந்தது. அவர்களுடைய  “யாவே வழிபாட்டில்”  இறை புகழ்ச்சி சிறப்பிடம் பெற்றிருந்தது. மனித வரலாற்றில் விளங்கும் இறைவனின் அன்புக்கு, மனிதர் காட்டும் நன்றியறிதலும், வாழ்த்துரையும் ஒரு பதிலுரையாக அமைந்திருந்தது. தம் வியத்தகு படைப்பு செயலினால் இறைவன் பேச, அவருடைய படைப்பின் கைவன்மைக்குப் புகழ் கூறி மனிதன் பதிலளித்தான் 
(காண் சங் 26:7).  எனவே யூதர்களின் “இறைபுகழ்ச்சி”  இயல்பிலேயே இறை வார்த்தைக்கு அளிக்கும் பதில் மன்றாட்டாக இருந்தது. இறைவன் தங்களுக்குச் செய்தவற்றை வெளிப்படை யாக ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவதாகவும், நம்பிக்கையை வெளிப்படுத்து வதாகவும் இருந்தது. இவ்வாறு அது மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த இறை புகழ்ச்சியாக இருந்தது.

          இது போன்ற புகழ்ச்சி மன்றாட்டுக்குப் பழைய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன ( காண் தொ.நூ 24:27; 1அரச 1:48). புதிய ஏற்பாட்டிலும் இறைபுகழ்ச்சிக்குச் சான்றுகளைக் காணலாம்( காண் மத் 11:25‡27;  எபே 1:3‡14) . இப்புகழுரைகள் கடவுளின் வியத்தகுச் செயல்களைப் பிந்திய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தின. அவர்களும் இச்செயல்களை  நினைவு  கூர்ந்து  இறைவனைப் போற்றி புகழ்ந்தனர். கால போக்கில் இப்புகழுரைகள் மாறாத வாய்ப்பாட்டு செபங்களாக மாறின. (Stereotype formulas). யூதர்களிடையே பழக்கத்திலிருந்த 18 புகழுரைகள் குறிப்பிடத்தக்கவை.

1.2. புதிய ஏற்பாட்டில் பின்னணி 

           புதிய ஏற்பாட்டில் “ நன்றி கூறுதல்”  என்பதற்கு  “யூக்கரிஸ்தேயின்”(Eucharistein)  என்ற கிரேக்கச் சொல்லும்,  “புகழுரைத்தல்” என்பதற்கு “யூலோகேயின்” (Eulogein)  என்ற கிரேக்கச் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் எபிரேய மொழியில் “நன்றி கூறுதல்” என்பதற்குத் தனிச்சொல் கிடையாது. எனவே இக்கருத்தை வெளிப்படுத்த “பெராக்கா” (Berakah=இறை புகழ்ச்சி) என்றே சொல்லே  பயன்படுத்தப்பட்டது.
         அப்பம் பலுகுதலை விவரிக்கும் பகுதிகள் இறுதி இரவு உணவைப்பற்றி கூறும் பகுதியுடன் நெருங்கியத் தொடர்புக்  கொண்டுள்ளன. ( காண். மாற் 6:35; 8:26). மாற்6:41 இல் நற்செய்தியாளர் “இறை புகழ்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். யோவானோ அதே புதுமையை விவரிக்க “நன்றி கூறுதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ( யோவா 6:11). மாற்கு ஏழு அப்பம் பலுகுதலை விவரிக்குமிடத்தில்  ( 8:6) “நன்றி கூறுதலும்” என்ற சொல்லை உபயோகிக்கிறார். இதிலிருந்து“நன்றி கூறுதலும்”, “இறை புகழ்ச்சியும்”  ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என உணர முடிகிறது.

 இது போன்றே மத்தேயும், மாற்கும் அப்பத்தைப்பற்றிக் கூறும்போது “இறைபுகழ்” என்றும், கிண்ணத்தைப்பற்றிக் குறிப்பிடும் போது “நன்றி”  என்றும் சொல்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் பவுலும், லூக்காவும் இரண்டு செயல்களுக்கும் “நன்றி கூறி”  என்றே குறிப்பிட்டுள்ளார்கள். முதல் கிறிஸ்தவர் களுக்கும் இவ்விரு  சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தின ( காண் 1 கொரி 14: 16‡17)       இவ்வாறு ( 1 ) இயேசுவின் இறுதி இரா உணவும் (2) யூதர்களின் “பெராக்காவும்” ( 3) புதிய ஏற்பாட்டுக் கால மக்களின் “ இறை புகழுரைதல்” மற்றும் “நன்றி கூறுதலும்” நற்கருணை மன்றாட்டுக்கு   பின்னணியாக அமைந்தன.

2. நற்கருணை மன்றாட்டின்    தோற்றமும் வளர்ச்சியும்

         நமது ஆண்டவர் தமது இறுதி உணவின்போது  தம் சீடர்களுக்கு அப்பத்தையும் கிண்ணத்தையும்  அளித்து,  “இதை  என் நினைவாகச் செய்யுங்கள் ”  என்றார். இது தொடக்கக்கால கிறிஸ்தவர்கள்   நற்கருணை மன்றாட்டைத் தமக்கேற்ப அமைத்துக் கொள்ள வாய்ப்பும், உரிமையும் அளித்தது.

       முதல் கிறிஸ்தவர்கள் காலத்தில்  “ நற்கருணை வழிபாடு”  பொது உணவு வேளையின் முடிவில் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக  நம் ஆண்டவருடைய  இறுதி உணவின் இரு “இறைபுகழுரைகளும்”  ( துவக்கத்திலும்  முடிவிலும்)  ஒரே  இறைபுகழ் மன்றாட்டாக இணைக்கப்பட்டன. இதிலிருந்துதான் பிற்கால நற்கருணை மன்றாட்டு செபங்கள் விரிவாக்கப்பட்டன.

நற்கருணை மன்றாட்டைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துத் தொகுக்கக்கூடிய  வாய்ப்பு அதன் பொது  அமைப்பிலே இருந்தது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் வரையறுக்கப்பட்ட அதிகாரபூர்வமான வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் ஏதுவும் இல்லை. இதை மறைசாட்சியான புனித ஜஸ்டின் என்பவருடைய “ சமயதற்காப்பு” (Apology of Justin) உரையிலும், அதன் உட்கூறுகளின் சுருக்கத்தை ஹிப்போலிட்டஸ் (Hypolitus) என்பவரின் “திருத்தூதர்களின் மரபு” (Apostolic Tradition)   என்ற நூலிலும் இருந்து அறிகிறோம்.

நான்காம் நூற்றாண்டிற்கு முன் ஒரே ஒரு நற்கருணை மன்றாட்டு இருந்ததாக புனித ஜஸ்டின் குறிப்பிடுகிறார்.  மேலும்  அது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.  எனினும் 4‡ஆம் நூற்றாண்டி லிருந்து, வரையறுக்கப்பட்ட  வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் தேவையயனும் ஒரு  பொதுவான மனப்பாங்கு நிலவி வந்தது. இத்தகைய எண்ணம் முதலில் கீழக்குத் திருஅவையில் தான் தோன்றியது. ஏனெனில் இது “ஆரியனிஸம்” (Arianism) போன்ற தப்பறையான கொள்கைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தவும் பாதுக்காகவும்  அவசியம் என உணரப்பட்டது.

        இதன் விளைவாக கால போக்கில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நற்கருணை மன்றாட்டுகள் தோன்றின. இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன.

     1. எகிப்திய அல்லது அலெக்சாந்திரிய வழிபாடு
    2. அந்தியோக்கியா அல்லது மேற்குசீரியா வழிபாடு  
    3. கிழக்கு சீரிய வழிபாடு
    4. உரோமைய வழிபாடு
    5. கல்லிக்கன்  மற்றும் ஸ்பெயின் சார்ந்த வழிபாடு

இவற்றுள்  உரோமை வழிபாட்டு முறையைச் சார்ந்த  நற்கருணை மன்றாட்டு (உரோமைத் திருமுறை-Roman Canon)  காலபோக்கில் மேற்குதிரு அவையில் 11-ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப் பட்டது. 16-ஆம்  நூற்றாண்டில் இது மட்டுமே உலகெங்கும் இலத்தின் திருஅவையில் பரவி நிலைத்து  1970 வரை நின்றது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு உரோமை வழிபாட்டில் மற்றும்  மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்ட பின் இந்த உரோமன் திருமுறை சிலசிறு மாற்றங்களுடன் முதல் நற்கருணை மன்றாட்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.     இப்பொழுது இலத்தீன் திருஅவையில் நான்கு நற்கருணை மன்றாட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றோடு ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவரோடு நிகழ்த்தும்  திருப்பலிக்கான நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும், பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்  நான்கும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.  சிறுவர்களுக்கான திருப்பலியின் மூன்றாவது  நற்கருணை மன்றாட்டு இருபாகமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.  

          பல்வேறு நற்கருணை மன்றாட்டுகளின் கருப்பொருள் ஒன்றே. அதாவது இறைவன் புரிந்த அரும்பெரும் செயல்களுக்குப் புகழ்பாடி, நன்றிகூறி மன்றாடுவதாகும். திருப்பலியில் கிறிஸ்துவின் மீட்புச்செயல் நினைவு கூறப்படுகிறது.  இதற்கு மூலக்காரணராகிய இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறப்படுகிறது. மீட்பின் பலனை நம்பிக்கையாளர் அடையும்படி மன்றாட்டுகள்  இடம் பெறுகின்றன. அவை பயனை விளைவிக்கும்படி காணிக்கைகள், அதாவது பலிபொருள் ( கிறிஸ்துவே ) ஒப்புக் கொடுக்கப்படுகிறது.
                                                                                                                                                                                தொடரும்...
                                                                                                                                                                                                                                                                 

அன்பு எல்லையில்லா சுவையானது

அன்பு எல்லையில்லா சுவையானது

ஒரு இளைஞன் வெளியூர்  சென்று திரும்பும் போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரைக் கண்டான். ஆவலுடன் ஓடி சென்று நீரை பருக்கியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த   முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரைக் கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல்பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பண முடிவில் தன்னுடைய ஊரை  சென்றடைந்தவன். அரண்மனைக்குச் சென்று அந்த நீரின் அருமை பெருமைகளைக் கூறி, உலகிலேயே இதுபோல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

          இதை அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பட்டத்துராணி, எனக்கும் கொஞ்சம் அந்த நீரைக் கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாயிருக்கிறது என்று கூறி, அவர் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்து விட்டான் மன்னன். பிரமாதம் உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இதுவரை என் வாழ்க்கையில் அருந்தியதே இல்லை உனக்கு எவ்வாறு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார். இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோ­த்தில் விடைபெற்று சென்றான். அவன் சென்ற பிறகு, ராணி இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்குக் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடுவீர்கள்? என்றாள்.

              இல்லை ராணி........... நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்து பாரேன்.

             அரசன் சொல்ல, ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்......... சே......சே...... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது? என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள். தேவி நீ நீரைதான் சுவைத்தாய்.  ஆனால் நான் அவன் என்மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கருதி தனது தோல்பையில் நிரப்பிக் கொண்டு வந்தான். எனவே, தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது.  நீரின்  சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்குக் கொடுக்காத்திருந்தால் நீ இப்போது செய்ததை போலவே அவன்முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப் பட்டிருக்கும், அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.

Friday 28 April 2017

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

(நாசரேத்தூர் நல்லாள் பாத்திமாவில் காட்சி தந்ததன் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை)

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

‘ஆகட்டும் ஆண்டவரே’ என்று சொல்லி  இறைத் திருவுளத்தினுக்கு முற்றும் பணிந்து வாழ்ந்தனாலேயே பெண்குலத்தோருள்  மாணிக்க மாகத் திகழ்கின்றார் மரியா. விண்நோக்கிப் பயணித்தன் விளைவாக இவரின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைச் செயல்பாடுகளாகத் திகழ்ந்தன. பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்த  உலகோரினை விண்நோக்கி நடத்திச் செல்ல வேளாங்கண்ணி, லூர்து, லா சலேத்,   கோதலுப்பே போன்ற பல இடங்களில் காட்சி தந்து இறைத் திட்டத்தினைச் செயல்படுத்தி வருபவர் இறை அன்னை மரியா.

முதல் உலகப் போர் முழக்கம்:

1914 முதல் 1918 வரை உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. அழிவுச் சக்தியினை  உணவாக உட்கொண்டு மரணத்தினை நோக்கிப் பயணித்திட்ட இருள் சூழ்காலம் அது. இப்போரட்ட காலத்தில்தான் தன்னிலை விட்டெழுந்து தரணியர்  தழைத்திட பாத்திமா நகரில் காட்சி தந்து பல தந்த வாழ்வினாக்கி வழிகாட்டினார் நம் மரியன்னை.

பாத்திமா ஒரு வரலாற்றுப்  பின்னணி:

                    போர்த்துக்கல் நாட்டினருக்கும், இஸ்லாமியருக்கும் 12 ஆம் நூற்றாண்டில் பெரும்போர் ஒன்று நடைபெற்றது. போர்த்துக்கீசியர் வெற்றிக்கனியினை ஈட்டினர். இஸ்லாமியப் படைத்தளபதியின் மகள் பாத்திமா. போர்த்துக்கீசியரின் படைத்தளபதி கொன்சாலோ. இவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது. இவர்கள் வாழ்ந்திட்ட நிலப் பகுதி அவ்ராணா அவ்ரம்.  இவர்களுக்குப் பின் இந்த இடமே பாத்திமா நகராயிற்று. இப்பட்டணம் இன்று போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனிலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ மேற்கே கோவாதா ஈரிய என்னும் மலைப் பாங்கான சமவெளிப் பகுதியே மாதா காட்சியளித்த மாண்புமிகு இடமாகும்.

காட்சி பெற்றோர்:

                லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய மூவரும் நெருங்கிய உறவினர். இவர்கள் முறையே 10,9,7 வயதினர். பக்திமிக்க பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்த இவர்கள் ஆன்மீகச் சிந்தை கொண்டோராவர். ஏழை, எளிய  மனங்கொண்ட இவர்களே மரியாவின் காட்சி காணும் பாக்கியம் பெற்றனர்.

அன்னையின் காட்சிகள்:
                முதல் உலகப் போரினால் மிரண்டிருந்த மக்களுக்கு ஆறுதலாக திருத்தந்தை 15‡ஆம் பெனடிக்ட் அமைதி காக்க வேண்டி உலகோருக்கு வேண்டுகோள் விடுத்தார். 1917 ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் நாள் நண்பகல் வேளை லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா என்னும் இவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மூவேளை செபம் சொல்கின்றனர். என்ன ஆச்சரியம். அதோ அங்கே அசின்ஹோர் மரத்தின் உச்சியில் ஓர் ஒளிமணடலம். அதன் நடுவில் வெண்ணிற ஆடை அணிந்து, புன்னகை தவழ்ந்திடும் முகத்தோடு குவிந்த  கரங்களில் செபமாலை ஏந்தி ஓர் அழகான பெண்மணி.

                 சிறு  குழந்தைகள் பயம் சூழ்ந்து விழிகள் கலங்கி நிற்கின்றனர். ‘ பிள்ளைகளே அஞ்சாதீர்கள் நான்தான் விண்ணிலிருந்து மண்ணகம் வந்துள்ள இயேசுவின் தாய். பாவத்தில்  ஊன்றி, பாவிகள் வெகுவாகி கடவுளை வேதனைப் படுத்துகின்றனர். பாவிகள் மனத்திரும்பிட உங்களின் துன்பங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுங்கள். உலகில்  போர் நீங்கி, அமைதி நிலவிட தினசரி செபமாலை செபியுங்கள்’ எனறாள் அப்பெண்மளி..

              தாங்கள் காண்பது காட்சியா? பகல் கனவா? இல்லை. இல்லை. மாதா காட்சிதான் என்றறிந்து அவர்கள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ததும்புகின்றது. வீட்டிற்குச் சென்று இதனைப் பகிர்ந்து கொண்ட போதோ. ஏளனம், பரிகாசம், எகத்தாளம். பெற்றோரே அந்த இடத்திற்குச் செல்லக் கூடாது எனத் தடை செய்தனர்.

தொடர் காட்சிகள்: 

               தொடர்ந்து வந்த  ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காட்சிகள் நம்பத்தக்கதாகத் தோன்றிட மக்கள் எண்ணிக்கை பெருகியது. மாதாவின் காட்சியினை இம்மூவர் மட்டுமே பிரதிமாதம் 13 ஆம் நாள் காண முடிந்தது. இச்சகமாக பேச்சுகள், சக வயதினரின் கேலி, கிண்டல் ஆகியவை இந்த இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் வேதனைகளை உருவாக்கின. ஆனால்  அவையனைத்தையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தனர். மனத்திடம் பெற்று மரியன்னையின் பிள்ளைகளாக வீறு கொண்டு எழுந்தனர்.

காட்சிகளின் செய்தி:

               ‘ கேழ்வரகில் தேன் ஒழுகுகின்ற தென்றால் கேட்பவனுக்கு மதி எங்கே போச்சு?’ என்ற விவாதங்கள் ஆங்காங்கே எழுந்தன. ஆனால்  உண்மையினை உறங்க வைக்க முடியுமா? 

  இக்காட்சிகள் தந்த  செய்திகளில் முக்கியமானைவ:
 1. போர் முடிவுக்கு வந்து  உலகில் அமைதி நிலவிடல் வேண்டும்.
 2. ரஷ்யா மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்படல் வேண்டும்.
 3. கிறிஸ்தவர்கள் அதிக வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக திருத்தந்தை ஒருவர்  கொடூரமாகத்  தாக்கப்படுவார்.
 4. பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய இருவரும் விரைவில் விண்ணகம் செல்வர். பாத்திமா ரகசியங்கள்  உலகெங்கும் பரவிட லூசியா நீண்ட காலம் வாழ்வார்.
      
 திருச்சபையின் பதில்:

மனிதர் எப்போதெல்லாம் தடம் மாறித் தவறுகளில் வீழ்ந்து செயல்படுகின்றார்களோ அப்போதெல்லாம் தடுமாற்றம் போக்கிட  மாதா பல்வேறு இடங்களில் காட்சி மூலம் இறைத் திருவுளத்தினை வெளிப்படுத்தியதனை வரலாறு பதிவு செய்துள்ளது. பாத்திமாக் காட்சிகளும் அப்படியே. ஆனால் விசுவாசக் கண் கொண்டு மட்டும் இவற்றினை நோக்காது. அறிவியல் ரீதியாகவும்  திருச்சபை இதனை அணுகியுள்ளது.

இறைவெளிப்பாட்டுக் கூறுகள்:

அன்பின் வெளிப்பாட்டு சமூக அமைப்பினை உருவாக்குதலே திருச்சபையின் முக்கியப் பணி. எனவே கிறிஸ்தவம் அன்பினை அடித்தளமாகக் கொண்ட சமயம். இச்சமயம் தழைத்திட விவிலிய நூல்களிலும் பல இறை வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளைக் காணுகின்றோம். இவை பொது வெளிப்பாடு ( Pற்ணுயிஷ்உ யூeஸeயிழிமிஷ்லிஐ), தனி வெளிப்பாடு ( Prஷ்ஸழிமிe யூeஸeயிழிமிஷ்லிஐ), எனப்படுகின்றன.

இந்த  வெளிப்பாடு, மனித மீட்பின் வெளிப்பாடாக  விவிலிய நூல்களில் துவங்கி, கிறிஸ்துவில் முழுமையடைந்து திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக மக்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் மனிதர் கிறிஸ்து அளித்த மீட்பினை  உணர்ந்து, அனுபவித்து ஏற்றுக் கொள்ள திருச்சபையின் அருளடையாளங் களோடு  அவரைப் பயிற்றுவித்து, விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்து நிற்கச் செய்யப் பாத்திமாக் காட்சிகளும் அவை தரும் செய்திகளும் உதவியாகத் திகழ்கின்றன.

பாத்திமா இரகசியங்கள்:

பாத்திமாவில் நடைபெற்ற பொதுக் காட்சிகள் மூலம் வெளிப்பட்டவை ஒரு சிலவே. தனிக்காட்சிகள் மூலம் இம்மூவராலும்  பெற்ற வெளிப்பாடுகள் இரகசியமாகக் காக்கப்பட்டன. அவை மூன்று  இரகசியங்கள் எனப்படுகின்றன.

 அ. நரகம்:

           1941 ஆம் ஆண்டு லூசியா எழுதிய ‘தனது நினைவுகள்’ என்னும் குறிப்பேட்டில் 1917 ஜீலை 13‡இல் மாதா கீழ்க்கண்ட காட்சியினை தங்களுக்கு வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். பூமிக்கடியில் தீச்சூளையில் வெந்து மடியும் மனித ஆன்மாக்களைக் கண்டோம். அதில் கொத்துக் கொத்தாக மனிதர்கள் விழுந்து கொண்டிருந்தார்கள்.

 ஆ. இரண்டாம் உலகப்போர்:

              உலகப் போரினால் சீரழிக்கப்பட்டிருந்தாலும், உலகம் இன்னொரு அழிவினைச் சந்திக்கும். அதுவே இரண்டாம் உலகப் போர்.  இது ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதியில் கம்யூனிசக் கொள்கையினால் கடவுள் மறுப்புத் தத்துவம் கொண்டுள்ள ரஷ்யா மனம் திரும்பிட வேண்டும். இதற்காக மரியாவின் மாசற்ற திரு இருதயத்தினுக்கு ரஷ்யா அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

 இ. கிறிஸ்தவர்களின் வேதனை:

இந்த மூன்றாவது இரகசியத்தினை  லூசியா வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது மறைமாவட்ட ஆயர் சில்வா அவர்களின்  ஆணையின் படியே வெளியிட்டார். இதன்படி கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பத்தினுக்கு உட்படுத்தப்படுவர். ரஷ்யாவிலும், பிறநாடுகளிலும் கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றும். திருத்தந்தை ஒருவர் மரணவாயில் வரை சென்று  திரும்புவார். முதல் சனிக்கிழமை பக்தி அவசியம் அனுச்சரிக்கப்பட வேண்டும்.

பாத்திமாக் காட்சிகளின் உண்மைத் தன்மை:

பாத்திமாக் காட்சிகள் அனைத்தும் இறைவெளிப்பாட்டின்  அடையாளங்களே. இவற்றிற்கான  வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்கள்.
   1. இரண்டாம் காட்சியில் கூறப்பட்டுள்ளவாறு பிரான்சிஸ், ஜெசிந்தா இருவரும் முறையே 1919, 1920 இல் விண்ணகம் சென்றனர்.
   2. லூசியா கார்மேல் சபையின் துறவு வாழ்வு  பூண்டு தனது 97 ஆம் வயதில் விண்ணகம் சென்றார்.
   3. திருத்தந்தை ஜான்பால் 1981 மே 13ல் அலி அக்கார் என்னும் இளைஞரால் சுடப்பட்டார். தனக்கு மறுபிறவி கிடைத்ததும் 
       தனது நன்றிக் காணிக்கையாக தன் உடலில் பாய்ந்த இரவைக் குண்டினை பாத்திமா மாதாவின் கீரிடத்தில் பதித்து வைத்தார்.      

   4. 1991 ல் சோவியத் யூனியன் பிளவுப்பட்டு ரஷ்யா என்ற தனி நாடாகியது.
  5. ‘ஓ  என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் 
       சிறப்பாக  உமது இரக்கம் யார், யாருக்குத் தேவையோ அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்’ என்னும் செபம் செபமாலையோடு
       இணைந்து செபிக்கும் பழக்கம் நடைமுறையாகியது.
  6. முதல் சனிக்கிழமை பக்தி பாத்திமா மாதா பக்தியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.

 பெண்ணியத்தின் மேன்மை:

              ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்களுக்கு அளிக்கப்பட்ட காட்சிகள் அவனியயங்கும் பரவி பெருமை படுத்தப்படுகின்றது. பெண்ணியலை ஐந்து பிரிவுகளாகப் பார்க்கலாம்.
 1. ஏற்பு நிலைப் பெண்ணியல்
 2. ஒதுக்கு நிலைப் பெண்ணியல்
 3. மறுபார்வைப் பெண்ணியல்
 4. பெண்தன்மையை உணர்த்தும் பெண்ணியல் 
 5. விடுதலைப் பெண்ணியல்

               பெண்மையின் தூய்மையே தாய்மை. தன்னலங் கருதாது பிள்ளை நலம் பேணுதலே தாய்ம்மை போற்றின்  சீரிய பண்பு. இப்பண்பின் வெளிப்பாடுகளே பாத்திமாக் காட்சிகள். இக்காட்சிகள் கூறும் செய்தியினை வாழ்வாக்கினால் வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திடும்.

மாதாவின் நேசம்

மாதாவின் நேசம்

அருட்பணி.ச.இ. அருள்சாமி

 திருத்தலங்களுக்கு மக்கள் வந்து வேண்டுதல் செய்வது, நன்றி சொல்வது, நம் மனதை உருக்கும் காட்சியாகும். முடியயடுப்பது அல்லது மொட்டையடிப்பது என்பது அவமானச் செயல். எதிரிகளை மொட்டையடிக்கும் வழக்கம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1குறி 19:4). 

எனக்குசிறுவயதாயிருக்கும் போது எழுநீர் என்ற வியாதி இருந்தது.இந்த  வியாதியால் திடிரென்று முச்சடைத்து, கைகால் வலிப்பு வந்தது போல் இழுக்கும். அப்பொழுதெல்லாம் சரியான  மருத்துவம் இல்லை. என் அம்மா வேளாங்கன்னி மாதாவிடம் நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டு ஜெபித்தார்கள்.  எனது நோய் குணமானால் மும்மொட்டை அடித்து நன்றி செலுத்துகின்றேன் என்று, மும்மொட்டை என்றால் தாய், தந்தை , பிள்ளை முவரும் முடியயடுத்து கொள்ளுதல், எனக்கு முற்றிலும் நீங்கியது. 

எனக்கு19 வயது  நடந்த போது என் அன்னை எனக்கு நினைவூட்டி, நேர்த்திகடனை நிறைவு செய்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 35 வயதுள்ள பெண். என் அன்னை  தன் பிள்ளைக்காக  மொட்டை அடித்துக் கொண்டார்கள் என்றால், மாதாவின் கருணையை எவ்வளவு ஆழ்ந்து உணர்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. திருத்தலங்களில் முடியயடுப்பது, முழங்காலில் சென்று செபிப்பது போன்ற நேர்த்தி செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய கதையை சுமந்து நிற்கும்.

            மாதா, நம் செபங்களை ஆண்டவர் முன்பாக, நம் சார்பாக வைக்கிறாள். இதுதான் இறையியல் விளக்கம். நம் தேவைகளுக்காகத்தான் மாதாவை நோக்கி ஜெபிக்கிறோம். ஆனால் மரியாவின் முதல் செபம், மரியா எலிசபெத்தை சந்தித்து பாடிய புகழ் பாடல், நன்றி  செபம். இந்த புகழ்ச்சி செபத்தில் நம்மை கலந்துக் கொள்ளத்தான் மரியன்னை நம்மை அழைக்கிறார்கள். இந்த புகழ்ச்சி, நன்றி செபம் கடவுளின் பிள்ளைகளின் நாவிலிருந்து அகலக் கூடாது என்கிறார் இரேனியுஸ் என்ற அறிஞர். 

               மரியன்னை இயேசுவின் முழுமையான முதல் சீடர். எனவே அவர் நமக்கு முன்னோடி.

               குடந்தை மறைமாவட்டத்தில் 3 முக்கிய மாதா திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

 பூண்டி திருத்தலம்,  இறையடியார் லூர்து சேவியர் அவர்களின் பெரும் முயற்சியால், அவரது புனித வாழ்வினால், மாதாவின் உதவிகள் வழிந்து வரும் தலமாக விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.

17ஆம் நூற்றாண்டில், வீராமமுனிவர், ஏலாக்குறிச்சி என்ற உள்ளாந்திர கிராமத்தில், தஞ்சை மன்னரால், கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை தங்க செய்து அவர்களை பாதுபாத்தார்.மரியன்னை¼, கிறிஸ்தவ மக்களுக்கும், மற்றவர்களுக்கும் அடைக்கலமாக விளங்குபவர் என்று மக்கள் அறிய செய்தார். இங்கும்  ஏராளமான மக்கள் சென்று அடைக்கல அன்னையின் உதவியைப் பெற்று  வருகிறார்கள்.

 17ஆம் நூற்றாண்டிலிருந்து ( 1674) பல பெயர் பெற்ற மறைப்பணியாளர்கள், வீரமாமுனிவர், அருளானந்தர் போன்றவர்கள் பணி செய்த இடம் வடுகர்பேட்டை. இங்கு ஆரோக்கிய மாதா திருத்தலம் வளர்ந்து வருகிறது. 
             
தூய மரிய வியானி அருளப்பர் கூறுவார், மரியன்னைக்கு உலக முடிவுரை ஓய்வென்பதில்லை. ஏனென்றால் எப்போதும் தன் பிள்ளைகளைப் பற்றியே கவலை உள்ளவளாய் இருக்கிறார். 

மரியாவின் வழி  செல்லாது. இயேசுவின் பணியாளராய் விளங்க முடியாது என்கிறார், ஆயர் தேகோன்சஸ் மாசற்ற மரியன்னை இறைவனின் இதயத்திற்கு உகந்த அரசியாக விளங்குகிறார். எனவே அவளின் பரிந்துரையுடன் செய்கின்ற செபம் எல்லையில்லா வல்லமையுள்ளது. என்கிறார் தூய மாக்ஸ்மில்லியன் கோல்பே. 
தமிழகம் வரட்சியால் காய்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வருகிற ஆண்டில் பருவமழை சீராக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. வான் பொழியும் நீரை தகுந்த முறையில் சேமிக்க அரசு ஆவன செய்ய வேண்டும. குளங்களை துர்ர்எடுத்தல், துVர்க்கப்பட்ட குளங்களை மீட்டெடுத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளை இணைத்தல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

தமிழக விவசாயிகள் டெல்லியில் பல விதமான முறையில் கடந்த 45 நாட்களாக போராடி வருகிறார்கள். ஏழையின் குரல் அம்பலம் ஏறுமா என்பதைப் போன்று அரசு தன் முகத்தை திருப்பிக்கொண்டிருக்கிறது. 

சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. பணம. பட்டுவாடாக் காரணமாக இது செய்யப்பட்டிருக்கிறது. கொடுக்கும் போது வாங்கினால் என்ன என்ற தவறான எண்ண போக்கு நம் மக்களிடையே உள்ளது. இது மாற வேண்டும். பணம் வாங்குதல் ஊழலடின் முதலெழுத்து. நேர்மை என்ற நேர்க்கோடுதான் உயர்வின் சிறந்த வழி. 
                

Monday 17 April 2017

தேள் விடமா?

தேள் விடமா?

1. உப்பு + மிளகு அரைத்து கடிவாயில் பூசு.

2. நமச்சாரம் + உப்பு கடிவாயில் தடவு.

3. தேங்காய் பால் + வெல்லம் கலந்து குடிக்கவும்.

4. பிம்மத் தண்டு இலைச்சாறு கொட்டு கடிவாயில்  தடவு.

5. பழம் புளி + சுண்ணாம்பு சூட்டோடு கடிவாயில் பூசு.

6. தும்பை பூ + துளசி சம அளவு அரைத்து  வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.

7. நாயுருவி வேர்சாறு மென்று குடி.

8. கனியாத பூவன் வாழைப் பழத்தை குறுக்கே அரிந்து கடிவாயில் தேய்த்துப் பார். வி­ம் இறங்கும்.

9. பெருங்காயம் நீரில் குழைத்து தடவு. அனலில் காட்டவும்.
10. துளசியை மென்று கடிவாயில் தடவு.

11. வெற்றிலையில் 9 மிளகு வைத்து மென்று சாப்பிடு.

12. பப்பாளிக் காய் பால் தடவு, வி­ம் இறங்கும்.

13. வெற்றிலை + குப்பை மேனி + உப்பு கசக்கி சாறு எடு. கரண்டியில் நல்ல எண்ணெய் காய்ச்சி அதில் ஊற்று. கொட்டு வாயில் தடவி ஆவி பிடி.

14. தும்பைப் பூ + தும்பை இலை சாறு சாப்பிடு. கொட்டு வாயில் தடவு.

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்

தொகுப்பு : ம. இராசரெத்தினம், ஆடுதுறை

1. அடிக்கடி டீ, காபி சாப்பிடாமல் காலை, மாலை இருவேளை மட்டுமே சாப்பிடலாம்.

2. நெய், இனிப்பு பண்டம், கேக், பிஸ்கட், பிரட், சாக்லெட், எண்ணெய் பண்டங்கள் , மசாலா உப்பு போன்றவற்றை தவிர்க்கவும், முடியாவிட்டால் குறைக்கவும்.

3. முந்திரி, பாதாம், பிஸ்தா, பருப்பு வகைகள், நிலக்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி இவைகளை குறைக்க அல்லது தவிர்ப்ப நல்லது.

4. மோர் அல்லது தயிர் கூடாது.

5. ஒரு வேளை மட்டும் அரிசி உணவு, மற்ற வேளைக்கு புஞ்செய் தானியங்களை சேர்க்க.

6. காலை உணவு பலகாரங்கள் அல்ல, பழ ஆகாரமே சிறந்தது. பச்சை காய்கறிகள், சாலட் சாப்பிடலாம்.

7. காலை, மாலை சிற்றுண்டிகள் கூடாது.

8. நாக்கை கட்டுப்படுத்துங்கள்.

9. இரவு 7 மணிக்குமேல் உண்ணாதீர்கள். இரவு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்து உறங்க செல்லுங்கள். தூக்கம் வரவில்லையானால் படுக்காதீர்கள்.

10. பகலில் தூங்கவே கூடாது. தூங்கினால் எடை கூடும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மட்டும் பகலில் தூங்கலாம்.

11. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அளவோடு சாப்பிடுங்கள்.

12. உடல் பருமனைக் குறைக்கும் உணவுகள், வாழைத்தண்டு, கீரைத்தண்டு உணவில் அடிக்கடி சேர்க்கவும். வெதுவெதுப்பான நீரில் தேன்விட்டு சாப்பிடுங்கள். கோழிக்கீரை பருப்புடன் சமைத்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

13. உணவுக்கு ஏற்ற உழைப்பு கட்டாயம் தேவை.
14. காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் உபயோகிக்கவும்.

15. இரவில் படுக்க போகும்முன் திரிபாலா முன் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

16. வாரம் இருமுறை கசப்பு உணவு சாப்பிடவும்.

17. காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் கொஞ்சம் உலர்ந்த திராட்சை சாப்பிடலாம்.

18. உணவில் ஒருநாள் மட்டும் தேவைப்பட்டால் புலால் உணவு. நோயாளிகள் கட்டாயமாக மாமிச உணவு உண்ணக்கூடாது.

20. முட்டை உணவில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். பிராய்லர்  கோழி முட்டை சாப்பிடுவது நல்லதல்ல.

21. விதையில்லாத பழங்களை சாப்பிடக்கூடாது. அதில் உயிர் ஆற்றல் இருக்காது.

22. துவர்ப்பு உணவு தினமும் சேர்த்துக்  கொள்வது நல்லது.

23. அமிலத்தன்மையுள்ள உணவுகளை சேர்க்காமல் இருப்பது மிக மிக நல்லது.

24. மாவு பண்டங்கள் சேர்க்காமல் இருப்பது நல்லது. மாவு நோயைத் தரும். மலச்சிக்கல் உண்டாக்கும்.

25. உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்யவும். தொந்தி  குறைய பெல்ட் போடவும்.

26. யோகாசனம் உடல் பருமனுக்கு ஏற்றது. உடல் பருமனைக்  குறைக்கும் முறை  மூலம் உழைப்பாளிகளும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

27. தினமும் சாப்பிடும் முன் வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்கும்.

28. தினமும் அதிகாலை நடந்து, செல்வது நல்லது. “நடை நோய்க்குத் தடை”.

29. தேன் + பூசணிச் சாறு + எலுமிச்சை பழச்சாறு சாப்பிடலாம்.

சிறுவனின் கோபம், பாட்டியும் வாலிபமும்

சிறுவனின் கோபம்



ஹைதராபாத்தில் சஞ்சீலி ரெட்டி நகரிலுள்ள காவல் நிலையத்திற்கு இரண்டாவது  படிக்கும் சிறுவன் வெகுகோபத்துடன் நுழைந்தான். “சார் எங்க பாட்டிய உடனே கைது செய்யுங்க” என்றான். காவலர்கள் அசந்து போனார்கள். என்னப்பா வி­யம்? உங்க பாட்டி யாரையும் கொலை செய்திட்டாங்களா? என்று கேட்டார். இல்லை சார். என்னால தாங்க முடியல சார். எத்தனை நாளுக்குதான் பொறுத்துகிறது? என்னை விளையாடவே விடமாட்டேங்ராங்க சார். காவலர்கள் அதிர்ச்சியுடன் சிறுவனை நைசாக சமாதானபடுத்தினர்.  நைசாக பைவ்  ஸ்டார் சாக்லெட்டை கொடுத்தனர்.கோபம் குறைந்து வீடு திரும்பினான் பையன்.


பாட்டியும் வாலிபமும்

தியேட்டரில் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது.

          நம்மாள் பக்கத்தில், ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர் பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என சிறிது சிறிதாக குடிப்பத்தைப் பார்த்து எரிச்சலடைந்தார்.    

நம்மாள் பாட்டியிடமிருந்து  குளிர் பானத்தை  பிடுங்கி மடக்...மடக் என ஒரே மூச்சில் குடித்து விட்டு   நம்மாள், பாட்டி கூல்டிரிங்சுன்னா இப்படி குடிக்கனும்..... தெரியுதுங்களா

பாட்டி       : அடப்பாவி மவனே அவசர பட்டியேடா....
 நம் மாற : ஏன்? என்ன?

பாட்டி       : அதுலதான் நான் வெத்தலைய துப்பிக்கிட்டு இருந்தேன் இவ்ளோநேரம்

அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்   
                                                                                                                                                                  - சவரி - கெரி
                 
இந்த வாரம் உங்களுடன் அமெரிக்காவில் தவக்காலம், கிறிஸ்து உயிர்ப்பு விழா கொண்டாட்டம் பற்றி  பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். தவக்காலத்தில் இங்குள்ள மக்கள் நோன்பிருந்து நிறைய தர்ம செயல்கள்  செய்கிறார்கள். மீனை தவிர மற்ற எல்லா மாமிசங்களையும் சாப்பிடாமல் தவிர்கிறார்கள். வெள்ளி கிழமைகளில் மாலை நேரத்தில் சிலுவைப்பாதை  செபித்து, சமூகமாக கஞ்சியையும், மீன் வருவலையும் (Fishfry) சாப்பிடுகிறார்கள். இங்குள்ள கத்தோலிக்கர் இத்தவக்காலத்தில் பிற சமயத்தையைச் சார்ந்தவர், பிற  கிறிஸ்துவ  சபைகளில் உள்ளவர்கள் ஆகியோரை கத்தோலிக்க திருச்சபைக்கு அழைத்து வரும் பணியை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த 40 நாள்களும் மறைக் கல்வியைக் கற்பித்து, கிறிஸ்து  உயிர்ப்பு திருநாள் அன்று  திருமுழுக்கு தந்து கத்தோலிக்க  மறைக்கு அழைத்து வருகிறார்கள். நான் செல்லும் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து  உயிர்ப்பு திருநாளன்று சுமார் 25 முதல் 30 பேர் கத்தோலிக்க திருச்சபையில் சேருக்கிறார்கள்.
                இப்பணியில் என்னை மிகவும் கவர்ந்தது, உணவு வங்கி (Food Bank) . உணவு வங்கி  என்பது விவசாயிகள். உணவு அங்காடிகள் ( Food Stores) உழவர் சந்தை ( Farmer Market) இவர்களுடன் இணைந்து  பெரும்பாலும்  தன்னார்வு தொண்டர்களால் ( Volunteer)  இது இயக்கப்படுகிறது. உணவு வங்கிக்கு  விவசாயிகள், உணவு அங்காடிகள் (Food Stores) , உழவர் சந்தைகள்  ஆகியவை உணவு பொருட்களை இலவசமாக கொடுக்கிறார்கள். அதை எடுத்து வந்து தரம்  பிரித்து தேவைபடுவர்களுக்கு குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். கொஞ்சம் தாமதித்தாலும் உணவு பொருட்கள் கெட்டு விடும். எனவே உணவு பொருட்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கவும், அதை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கவும் நிறைய தன்னார்வு தொண்டர்கள்  (Volunteer) இதில் ஈடுபடுகிறார்கள்.  உதவி தேவைப்படுவோர்களின்  தேவையை இங்குள்ள ஆலயங்களிலிருந்தும், தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, அவர்களின் முகவரி, அவர்களின்  வீட்டிற்கு செல்ல வேண்டிய வழிகள்  ஆகியவற்றில் தயாராக வைத்திருக்கிறார்கள். உணவு பொருள் வந்தவுடன் அதை பிரித்து, கட்டி (Pack) தேவைப்படுவர்களுக்கு உடனடியாக கொண்டு சேர்கிறார்கள்.  இந்த  தவக்காலத்தில்  இங்குள்ள மக்கள்  இது  போன்ற அமைப்புகளுக்கு தங்களின் நேரத்தையும், உதவியையும் அளிக்கிறார்கள்.

                  நாமும் இந்த கிறிஸ்து  உயிர்ப்பு  நாளில் பிறருக்கு தொண்டு செய்து  இறைவனின் கருணையையும், அன்பையும் பெறுவோம்.
     
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் -இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
 பாரை  உயர்த்திட வேண்டும்.                                                                                                             - பாரதியார்.  

Thursday 6 April 2017

பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

நூல் - 1  பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

1  தி. மொ 1 : 5 நான் ஒரு பாவி என்று எண்ணுவது.

1  யோ 1 : 8 நாம் பாவம் செய்யவில்லை என்றால் நம்மை ஏமாற்றுகிறோம்.

1  யோ 1 - 10 நம்முடைய பாவங்களை ஒப்புகொள்ளுதல்.

1  தி.மொ 1 - 15 பாவிகளை மீட்க மீட்பர் இயேசு வந்தார்.

மத் 9‡13 நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்

லூக் 19 - 10    இழந்துபோனதை தேடி மீட்க வந்தேன்

யாக் 5: 15, 16 ஒருவர் மற்றவரிடம் பாவ அறிக்கை செய்துகொள்ளுதல்

1 யோ  2 : 1 - 2  நமது பாவத்துக்கு கழுவாய இயேசு

யோ 1 - 29 இவரே கடவுளின் ஆட்டுகுட்டி

1  யோ 1 : 7 - 10 இயேசுவின் ரத்தம் சகலவித பாவத்தைப் போக்கும்


நூல் - 2  ஏன் பாவ அறிக்கை செய்ய வேண்டும்?


மலா 2 : 7 குருவானவர் ஆண்டவரின் பிரதிநிதி ‡ மருத்துவர், வழக்கறிஞர்

லேவி 4 : 26 குரு பாவ கழுவாய் பலியை நிறைவேற்றுபவர், எபி 9 = 14, :22; 10:9-10

2  சாமு 12 - 13 தாவீது ‡ நாத்தானிடம் பாவம் அறிக்கை செய்தான்

மத் 18 - 18 இயேசுவுக்கு பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உண்டு

லூக் 19 - 5 சக்கேயு தம் பாவத்தை அறிக்கையிட்டான்

திபா 32 : 3 பாவத்தை அறிக்கையிட்டு  விட்டு விடாதவரை உடல் வியாதி  உண்டு

லூக் 15 : 21 ஊதாரி மகன் தன் பாவத்தை அறிக்கையிட்டான்


நூல் - 3 பாவத்துக்குரிய பட்டியல்

கலா 4 - 10 நாள், கிழமை, மாதம் பார்த்தல் பாவம்

2  தீ.மொ 3:2-4 கடவுளுடைய காரியங்களைவிட உலக காரியங்களை விரும்புவது

கொல 3 : 5 பேராசை சிலை வழிபாட்டுக்கான தூண்டுதல்

2 தெச 3 : 6 பெற்றுக்கொண்டதை மற்றவருடன் பகிர்ந்து  நூல் ‡ 1


பாவ மன்னிப்பு வழிபாட்டுக்குரிய சிந்தனை

1 திமொ 1 : 5 நான் ஒரு பாவி என்று எண்ணுவது.

1 யோ 1 : 8 நாம் பாவம் செய்யவில்லை என்றால் நம்மை ஏமாற்றுகிறோம்.

1  யோ 1 : 10 நம்முடைய பாவங்களை ஒப்புகொள்ளுதல்.

1  திமொ 1 : 15 பாவிகளை மீட்க மீட்பர் இயேசு வந்தார்.

மத் 9:13 நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்

லூக் 19 ; 10    இழந்துபோனதை தேடி மீட்க வந்தேன்

யாக் 5 : 15, 16 ஒருவர் மற்றவரிடம் பாவ அறிக்கை செய்துகொள்ளுதல்

1 யோ  2 :1 - 2  நமது பாவத்துக்கு கழுவாய இயேசு

யோ 1 : 29 இவரே கடவுளின் ஆட்டுகுட்டி

1 யோ 1 : 7 - 10 இயேசுவின் ரத்தம் சகலவித பாவத்தைப் போக்கும்

ஏப்ரல் மாத புனிதர்கள்

ஏப்ரல் மாத புனிதர்கள்  

 அருட்சகோ.G.பவுலின்மேரி , FSAG
கும்பகோணம்
ஏப் . 5  புனித வின்சென்ட் பெரர் - மறைபணியாளர் (1350 - 1419)

இவர் ஸ்பெயினில் வலன்சியா நகரில் கி.பி 1350 இல் பிறந்தார். புனித தோமினிக் சபைத் துறவிகளுள் ஒருவராகி,  இறையியல் கற்றுக் கொடுத்தார். பல மாவட்டங்களுக்கும் சென்று , மறையுறைகள் நிகழ்த்தி , மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். தவறான கொள்கைகளுக்கு எதிராக உறுதியுடன் வாதாடினார். இவர் கடுந்தவ முயற்சிகள் மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் 4 மறையுறைகள் நிகழ்த்துவார்.சில நேரங்களில் 3 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவார். மறையுறைகளுக்கு நன்கு தயார் செய்வார். 1419 ‡ ல் ஏப்ரல் 5 - ஆம் நாள் பிரான்சு நாட்டில் வான் என்னும் இடத்தில் போதிக்கும் போது இறந்தார்.

ஏப் . 7  புனித ஜான் பாப்டிஸ்ட் ‡ மறைபணியாளர் (1651 - 1719)

  பிரான்சு நாட்டில் ரெய்ம்ஸ் நகரில் கி.பி. 1651 இல் பிறந்தார். மறைபணியாளராகிய பின், முக்கியமாக இளைஞர்களுக்குக்  கிறிஸ்தவ கல்வி புகட்டுவதற்கென்றும்,  ஏழைச் சிறுவர்களுக்காகப் பள்ளிகளை நிறுவதற்கென்றும்,  தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்முடன் உழைத்த தோழர்களையயல்லாம் துறவற சபையினராக ஒன்றுசேர்த்தார். இச்சபையை ஏற்படுத்துவதற்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். இவரின் சபை உலகெங்கும் சபை பரவியது. நம் நாட்டிலும் இச்சபை பணியாற்றுகிறது.1719‡ல் பிரான்சில் ரூவான் என்ற இடத்தில் இறந்தார்.

 ஏப் . 11  புனித தனிஸ்லாஸ் ‡ ஆயர் , மறையாட்சி (1030 - 1079)

   போலாந்து நாட்டில் ஜெசப்பனாவில் கி.பி 1030 இல் பிறந்தார். பாரீஸ் நகர் சென்று படித்தார். பெற்றோர் இறந்ததும்  உடமைகளை விற்று  ஏழைகளுக்கு வழங்கிவிட்டு குருப்பட்டம் பெற்று ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்தார். 1071 இல் ஆயரானார். ஒரு நல்ல ஆயராய் இருந்து , திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவினார். தம்மால் கண்டிக்கப்பட்ட போலஸ்ஸால் மன்னரால் 1079 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.

ஏப் . 13  புனித மார்ட்டின்  ‡ திருத்தந்தை, மறைசாட்சி (656)

இத்தாலியில் உம்பிரியா மாவட்டத்தில் உள்ள டோடி என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையின் மறைப்பணியாளர்களுள் ஒருவராகி , திருதந்தையாக கி.பி.649‡ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே ஆண்டில் உரோமையில் ஒரு திருசங்கத்தைக் கூட்டி இயேசுவிடம் மனித இயல்பு இல்லை என்ற தவறான கொள்கையை கண்டித்தார். அதனால் இவரின் மன்னரால் 653 இல் சிறைப்படுத்தப்பட்டார். பின்பு கிரிமியாத் தீவில் உள்ள கெர்சோனுக்கு  நாடுகடத்தப்பட்டு அங்கு 656 இல் இறந்தார்.

ஏப் . 20 புனித ஒன்பதாம் சிங்கராயர் (1002 - 1059)

 இவர் தம் 25- ஆம் வயதில் ஆயராகி 20 ஆண்டுகள் மறைமாவட்டத்தை வழிநடத்தும் போது பல சவால்களை சந்தித்தார். தற்செயலாக திருயாத்திரையாக உரோமைக்குச் சென்ற போது, இவரை பாப்புவாக தேர்ந்தெடுத்தார்கள். திருச்சபையின் நலனுக்காக பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவுக்கு எதிரான தவறான கருத்துகளை மறுத்து உண்மை கொள்கைகளை நிலைநாட்டினார். தகுதியற்ற குருக்களை பணியிலிருந்து நீக்கினார். பல நாடுகளின் ஆயர்களை ஒன்று சேர்த்து ஒரு திருசங்கத்தைக் கூட்டினார். அவரின் உரையை மக்கள் ஆர்வமுடன் கேட்டனர். எதிரிகள் இத்தாலி நாட்டின் மீது  படையயடுத்து வந்த வேளையில் இவரையும் கைது செய்து 9 மாதங்கள் சிறையில் வைத்தார்கள். விடுதலைப் பெற்றபின் பலர் இறந்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார். புனித இராயப்பர் பேராலயத்தின் நடுப்பீடத்தின் முன் உயிர் நீத்தார்.

ஏப் . 25  புனித மாற்கு - நற்செய்தியாளர்:

 இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் மறை பயணத்தில் அவரோடு கூடச் சென்றவர். அவரின் மூன்றாம் பயணத்திலும் உரோமை வரையிலும் சென்றிருக்கின்றார். இவர் பேதுருவின் சீடர் என்ற பாரம்பரியம் உண்டு. எகிப்தில் உள்ள அலெக்ஸாந்திரியா நகர் திருச்சபையை இவர் நிறுவினார் என்ற பாரம்பரியமும் உண்டு. காப்டிக் தல திருச்சபையும் புனித மாற்குவின் விழாவை இன்று கொண்டாடுகின்றது.

ஏப். 29 புனித சியான்னா கேத்தரின் ‡ கன்னியர், மறைவல்லுனர் (1347-1380)

  இப்புனிதை இத்தாலியில் சியான்னா நகரில் கி.பி 1341 இல் பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். புனித தோமினிக்கின் 3‡ ஆம் சபையில் சேர்ந்து இறையன்பு, பிறரன்பு ஆகியவைகளில் சிறந்து விளங்கினார்.  
திருச்சபையின் ஒற்றுமைக்காக பெரிதும் உழைத்தார். திருத்தந்தையின் தலைமையை அனைவரும் ஏற்று வழிநடக்க வலியுறுத்தினார். இவரின் ஆன்மீகக் கருத்துகளை இவர் வாய்ப்பட சொல்லி , பிறகு அவை நூலாக அச்சிடப்பட்டன. இவரின் ஆழ்ந்த இறையியல் கருத்துகளுக்காக மறைவல்லுநர் என்ற பட்டம் இவருக்குத் தரப் பட்டது.1380 இல் உரோமையில் இவர் இறந்தார்.

ஏப்.30  புனித ஐந்தாம் பயஸ் ‡ திருத்தந்தை (1504-1572)

           இவர் இத்தாலியில் அலெக்சாந்திரியாவுக்கு அருகில் கி.பி. 1504இல் பிறந்தார். புனித தோமினிக்கன் சபையில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொடுத்தார். ஆயராகவும், கர்தினாலாகவும் 1566 இல் திருத்தந்தையாகவும் உயர்த்தப் பெற்றார். திரிதெந்தின் திருசங்க திருச்சபையில் தொடங்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். மறைபரப்புப் பணியை ஊக்குவித்து, திருவழிபாட்டு முறைகளை சீர்படுத்தினார். 1572 இல் இப்புனிதர் இறந்தார். 

இரட்சணிய யாத்திரிகம், உயிர்த்தெழுந்த காட்சி


இரட்சணிய யாத்திரிகம்

உயிர்த்தெழுந்த காட்சி

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லையயன்றால் கிறித்துவ சமயமே இல்லை. கிறிஸ்து சிலுவையில் அறைய பட்டதைக் கண்டு அஞ்சியோடிப் போனார்கள் சீடர்கள். அவரை மூன்று முறை மறுதலித்தவர் இராயப்பர். அவர் கரங்களிலும், விலாவில், கையை விட்டுப் பார்த்தாலொழிய நம்ப மாட்டேன் என்ற தோமா முதலியோர் அவரது உயிர்த்தெழுதலைக் கண்டு, விசுவாசித்து  ஊக்கம் பெற்று உலகெங்கும் போய் நற்செய்தியைப் பரப்பினார்கள். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் காலையில்,  தாம் கூறிய வண்ணமே  உயிர்த்தெழுந்தார்.
இரட்சணிய யாத்திரிகம் உயிர்த்தெழும் காட்சியினை இலக்கிய நயத்துடன் புனைந்துள்ளது. கிறிஸ்து உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையின் காலைப் பொழுதில்,இருள் விலகும் நேரமான வைகறையைப் பார்த்துத் திங்கள் (நிலா) ஒளி குன்றியது. அந்தச் செயல் உண்மையைக் கண்டவுடன், பொய் தோற்றுப் போனது போல இருந்தது. கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட கள்வனின் செல்வம் போல் விண்மீன்கள் மறைந்தன. பொய்யைக் கண்டு மருளும் நல்ல உள்ளங்களைப் போல்,தீபங்கள் ஒளி இழந்தன. இத்தகைய காலை நேரத்தில் உலகிற்கெல்லாம் மீட்பினைத் தமது சிலுவை மரணத்தால் சம்பாதித்து, யோக நித்திரையில் ஆழ்ந்தவர் துயில் நீங்கி எழுவது போல உன்னத தேவ மைந்தனாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என இரட்சணிய யாத்திரிகம் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறது.

“இன்னதோர் அமையந் தன்னில் இருநில உலகுக்கெல்லாம்
பன்னரு நலத்த ஆய பரகதிப்பயனை ஈட்டித்
துன்னிய சடவியோகத் துயிலுணர் சூழ்ச்சியே போல்
உன்னத தேவமைந்தன் உயிர்த்தெழுந்தருளிப் போந்தார்” (பா.304)

வள்ளல் இயேசு உயிர்த்தெழுந்ததைக் கண்டு,உலகில் வாழும் அளவில்லாத அனைத்து  உயிர்களும் மகிழ்ந்தன. செடிகளும், கொடிகளும் மலர்களைப் பூத்து மகிழ்ந்தன. நீங்குதற்குரிய துன்பம் நீங்கி உண்மையான இன்பம், உண்மை ஒளி போன்றவை மனங்களில் நிறைந்தன. உலகம் முழுவதும் இருள் நீங்க, ஞாயிறு உதயம் செய்தது. பறவை இனங்கள் இன்னிசைக் கீதங்கள் எழுப்பிப் போற்றின. கிறிஸ்து பெருமான் உயிர்த்தெழுந்த காட்சி மானிடமே புதிய உயிர்பெற்று விட்டதைப் போல் தோன்றிற்று.
இரட்சணிய யாத்திரிகம் மீட்பின் சரித்திரத்தைச் சொல்லி முடிக்கும் ஒரு முத்தாய்ப்பான பாடல் ஒன்றைக் கீழே காண்போம்.
“சிந்திக்க நெஞ்சடியேன் சென்னியிரைஞ்சக் கரங்கள்
வந்திக எஞ்ஞான்றும் வாழ்த்துவாய் ‡ 
புந்திக்குள் வீற்றிருக்கும் சேசுவீரை மலர்பூஞ்  சேவடிக்கே ஆற்றுக மெய் அன்பின் பணி”
 (பா. 496)
மூன்றாம் நாள் காலையில் கல்லறையைக் காண வந்த மகதலேன் மரியாள் முதலிய பெண்கள்,கல்லறை வெறுமையாய் உள்ளதைக் கண்டு திகைத்தனர். இறைதூதன் அவர்களுக்கு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை அறிவித்தான். கிறிஸ்து தாமே தோன்றி அப்பெண்களுக்கும், எம்மாவூருக்கு வழிப்பயணம் செய்து கொண்டிருந்த சீடர்களுக்கும், யூதர்களுக்கு அஞ்சி ஒளிந்து கொண்டிருந்த பதினொரு சீடர்களுக்கும் காட்சி தந்தார். உயிர்த்தெழுந்த பின் நாற்பது நாள் சஞ்சரித்தார். பின் விண்ணகத்திற்கு எழுந்தருளி பிதாவின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுவதே அவரது கருணை செயலாக உள்ளது.
வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி, கிறிஸ்து உயிர்த்தேழுந்த காட்சியினை, பகைவர் தந்த துன்பத்தினால் கிறிஸ்து  தமது  உயிரை அளித்த பின், அந்துன்பமெல்லாம் நீங்கப் பெற்று, உலகத்தினை மீட்டல் என்னும் இறைவனது குறிக்கோள் நிறைவேறுமாறு, தனது விலா, இரண்டு கை, தாள்பட்ட (இரண்டு பாதம்) ஐங்காய அடையாளங்களோடு ஒளிவீச உயிர்தெழுந்தார் எனப் பாடியுள்ளது. 
மறைதிரு ஆசீர்வாதம் எழுதிய திருஅவதாரத்தில் கிறிஸ்து  உயிர்த்தெழுந்த மாண்பினை ஜெயகாண்டம் என்ற பகுதியில் வினாக்கள் சிலவற்றையயழுப்பி அவைகளுக்கு விடைகளை உய்த்துணர்ந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தியுள்ளது. இதனை
“மண்ணவர்க் கெனவுயி ரீந்தவரை மரணமே தடைசெயக் கூடியதோ
அண்ணலா ருடலையே கல்லறையுள் ளடக்கிவைத் திருப்பதுங் கூடியதோ
கண்ணயர் கிறிஸ்துவே யயழும்புவதைத் தடைசெய்ய முடியுமோ கல்லினாலே
விண்ணவர் மகிபனே உயிர்தெழுந்தார் வெளிப்பாடு மொரு ஜெயவேந்த னென”

என வந்துள்ளதை திரு அவதாரப் பாடல் வழி அறிய முடிகின்றது.
ஆசுகவி ஆரோக்கியசாமி இயற்றிய சுடர்மணி என்னும் நூலில் இக்காட்சியினை,

“அடக்கம் செய்த மூன்றாம்நா ளவரே சொன்ன முன்னுரைபோல்
தொடங்குங்காலை விண்ணவர்கள் தோன்றிக் கல்லைப் புரட்டிவிட
அடங்கா வொளியி லாண்டவரு மழகே யுருவாய் வெளியேற
குடலே நடுங்கக் காவலர்கள் குருவிடமோடிச் செப்பினரே”
எனப் புகன்றுள்ளது.

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியம், இயேசு உயிர்த்தெழுந்த காட்சியை மகிமை எனத் தலைப்பிட்டுக் கூறியுள்ளது. இயேசு காவியம் கிறிஸ்து  உயிர்த்தெழுந்த மகிமையினை,

“வெள்ளியன்று பிற்பகலில் மரித்த இயேசு
வேதமுறை மாலையிலே அடக்கமானார்
கள்ளர்களும் ஓய்வெடுப்பார் சனியில் அன்று
கட்டாய விடுமுறைநாள் யூதருக்கு,
பிள்ளைகளும் பெரியோரும் மாதர் தாமும்
பேதலித்து சனிமுழுதும் ஓய்ந்திருந்தார்!
வெள்ளிமுளைத் தேஎழுந்து ஞாயிறன்று
விடிகின்ற போதினிலே குறியித்தெழுந்தார்”

என இயேசு காவியம் கூறுகிறது.
கிறிஸ்துவ  சமயத்தின் வாழ்வும், வரலாறும், வளர்ச்சியும், நம்பிக்கையும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற அடிப்படை கோட்பாட்டைத் , தமிழ் கிறிஸ்துவ இலக்கியங்களில் கற்பவர் நெஞ்சைக் கனிந்து உருகச் செய்கின்ற பான்மையில் பாடப்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்வளிக்கும் வள்ளல் இயேசுவின் வாழ்வுக் காட்சிகள் பலவற்றையும் அறிந்து  இன்புறுதல் சாலப் பயனளிப்பதாகும்.

எல்லாம் நிறைவேறிற்று, ( இயேசுவின் பாடுகளைக் காணும் உணர் வலைகள்)

எல்லாம் நிறைவேறிற்று  


         பேராசிரியர் ச. சாமிமுத்து
( இயேசுவின் பாடுகளைக் காணும் உணர் வலைகள்)

கள்வர்கள் மத்தியில் , சிலுவையிலே துடிதுடித்துக் தொங்குகின்ற செம்மறியே , அன்னையின் அரவனைப்பிலே நசரேத்து வீட்டிலே விழுந்து எழுந்து நடைப்பயின்ற  படைப்பாற்றலனே, கடையனையும் தேற்ற வந்த  மாற்றறியாப் பசும் பொன்னே, பூமானே விண்ணக்கும் , மண்ணக்கும் இடையே உறவைப் புதுப்பிக்க வந்த புத்துயிரே,  பூபாளமே , பூங்கா வனத்திலே அழுது அங்கலாய்த்த துடிதுடிப்பின் இறுதிக்கட்டம்  நிறைவேறுவதற்கு முன்பு , இந்த பாவிகான பொய்யான கோலமே மெய்யயனக் கொண்டலையும் இந்த புல்லனுக்காக ‡ உண்ணுவதிலே, உடுத்துவதிலே , அதிகாரம் செலுத்துவதிலே நாயினும் கேடுகெட்டு ஆசை வலைப்பட்டலையும் இந்த அறிவிலிக்காக ‡ மனிதர்களை மட்டும் அல்லாமல் உன்னையே ஏமாற்றிவிட்டதாக  எண்ணி, கொண்ட கொள்கையைக் குழிக்குள் தள்ளிவிட்டு குறுக்கு வழிநடக்கும்  இந்த  குறுமதியாளனுக்காக விண்ணகத் தந்தையிடத்திலே என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகின்றாயே! ஐயோ தலை சாய்கிறதே எல்லாம் நிறைவேறிற்று ! ஆம் அவர்  உயிர் பிரிகிறது.

Wednesday 5 April 2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 2-4-2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு        2-4-2017

  தி.ப  2 : 42-47;   1 பேதுரு 1 : 3-9 ;  யோவா 20 : 19 - 31  
  
 மார்ட்டின் லுVத்தர் கிங் என்பவர்,  நம்பிக்கை  என்பதை  கீழ்க்காணுமாறு விளக்குகிறார், “நம்பிக்கை  என்பது மாடிபடிகள்        அனைத்தையும் நாம் காணாவிட்டாலும், அதன் முதல்படியில் அடி எடுத்து வைக்கிறோம். அதுதான் நம்பிக்கை” என்கிறார். இன்றை வாசங்களில் நம்பிக்கை  என்பது  மையக் கருத்தாக விளங்குகிறது.
                    
  முதல் வாசகத்தில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும்  ஒன்றாயிருந்தனர் (தி.ப 4:32)  என்று பார்க்கிறோம். இரண்டாம் வாசகத்தில், “நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காக கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்” (1 பேது 1 :5)  உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள் (1 பேதுரு 1 :7)   இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும்  மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்  (1 பேதுரு 1 :7) . இப்பொழுதும் நீங்கள்   அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கைக் கொண்டு  சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து  பேருவகைக் கொள்கிறீர்கள் (1 பேதுரு 1 : 8).  “நீ என்னை கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” ( யோவா 20 : 29)  நம்பிக்கையினால் பகிர்வு ஒற்றுமை ஏற்படுகிறது. நம்பிக்கை பாதுகாப்பைத் தருகிறது. நம்பிக்கை பெருமையையும் மாண்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இவ்வாறு வாழ்வின் போது செழுமையாக விளங்குகிறது நம்பிக்கை.  புனித  அகுஸ்தினார் கூறுவார், “நம்பிக்கை என்பது நாம் காணமுடியாததை ஏற்றுக் கொள்வது. ஆனால் நம்பிக்கையின் கைமாறு என்னவென்றால் காணமுடியாததைக்  காண்பதாகும்” என்கிறார் . ய்ழிஷ்மிஜு ஷ்வி மிலி ணுeயிஷ்ஸe ழஜுழிமி தீலிற் dலி ஐலிமி விee, மிஜுe reழழிrd லிக்ஷூ க்ஷூழிஷ்மிஜு ஷ்வி மிலி விee ழஜுழிமி தீலிற் ணுeயிஷ்eஸe?  உயிர்த்த இயேசு தம் சீடர்களை சந்திக்கிறார். சீடர்கள் என்பவர்கள் தேர்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். சீடர்கள் இயேசுவை கண்டதும் மகிழ்ச்சியடைகிறார்கள். அமைதி உரித்தாகுக என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். பிறகு  சீடர்களுக்கு துVய ஆவியை அளித்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் அளித்து அனுப்புகிறார். இயேசு தோன்றியதும் சீடர்கள் நம்பினார்கள். தோமா, அவர்களோடு இல்லாததால் அவர்கள் கூறியதை ஏற்க மறுக்கிறார். இயேசுவே மறுமுறை தோன்றி தோமாவின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். இயேசு, ஒரு விதத்தில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். இதுதான் இயேசு தன் சீடர்களுக்கு அளித்த காட்சியின் பொருள். அதே நேரத்தில் நம் வாழ்வினால்  நாம் பெற்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. இதனைத்தான் முதல்வாசகம் விளக்குகிறது. திருவருட்சாதனங்களிலும் அன்பு செயல்களிலும் இறைவன் வெளிப்படுகிறார்.

                      அண்மையில் ஒரு சகோதரிக்கு சிறந்த சமூக  சேவையாளர் விருதினைத் தந்தார்கள். மருத்துவமனைச் சந்திப்பு, சிறை சாலை சந்திப்பு, வீடு சந்திப்பு, செபக்  கூட்டங்கள் நடத்துதல் என தன் உடல் நலத்தையயல்லாம் பாராமல் பணியாற்றுகிறார். எப்படி இத்தகைய ஆர்வம் உங்களுக்கு கிடைத்தது என்றால்,  “எல்லாம் எனது கடவுள் நம்பிக்கை  தந்த பலம்”  என்றார்.  

நம்பிக்கையின்றி எதனையும் சாதிக்க முடியாது. நம்பிக்கையிருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இருக்க முடியாது -  மேரி மேக்லேயோட் பெத்துVன்.  
                                                                                                                                         
 Without Faith nothing is possible; With Faith Nothing is impossible

பாஸ்கா ஞாயிறு 16 - 4 - 2017

பாஸ்கா  ஞாயிறு 16 - 4 - 2017

  திப 10: 32 ,37 ‡ 43;  கொலோ 3: 1 ‡4 ;   யோவா 20 : 1 ‡9 
                                                                                                                                                    -
                 
பேறு பெற்ற நாள் இதுவே .......
  உயிர்ப்பின் மகிழ்வு என்பது இயேசுவைத் தவிர வேறு எவரும் முன் பின் அறிந்திராத  ஓர் அனுபவம். வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாத  உணர்வு. இயேசு தன் பாடுகளையும் உயிர்ப்பையும் மும்முறை அறிவித்தபோது, சீடர்கள் அதனை கற்பனை செய்து கூடப் பார்த்தார்களா என்பது நமக்குத் தெரியாது. கொடூரமாகக் கொலை செய்து சிலுவையில் அறையப்பட்டவர் , மூன்றாம் நாள் உயிர்ப்பெற்று விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் , சிதைந்த முகமும், சிதறிய உடலுமே நினைவிற்கு வந்திருக்கும்.

 “நடுங்க வைக்கும் இருள் நல்லிரவிற்கு மேல்  தெரிவதில்லை , என்னும் கூற்று உயிர்ப்பு தரும் நம்பிக்கையை உணர வைக்கிறது. எல்லா நற்செய்திகளும் இயேசுவின் உடல் இல்லாத காலியான கல்லறையைத்தான் முதலில் குறிக்கப்பிடுகின்றன. (மத் 28:2 ; மாற் 16:5‡6 ; லூக் 24:2 ; யோவா 20: 1 ) எனவே தான் சாம் மோரிஸ் கூறுவார்,  இயேசுவின் கல்லறையின் வெறுமையினால்தான் அது பெறுமை பெற்றது” என்பார்.எனவே தான் பவுல் , “கிறிஸ்து உயிருடன் எழுப்பபடவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1 கொரி 15:14). ஆங்காங்ககே ஓரிரு வீடுகள் இருந்த காலங்களில் உறவுகளில் நெருக்கம் இருந்ததை போல அருகருகே வீடுகள் நெருக்கமாக இருக்கும்  இன்றைய காலங்களில் உறவுகளில் நெருக்கம் இல்லை. யாரும் யாரையும் பற்றிக் கவலை கொள்வதில்லை. பல்வேறு காரணங்களை முன் வைத்து உறவுகளும் விலகியிருக்கவே விரும்பும் இத்தகைய நிலையில், இயேசுவுக்கு நிகழ்ந்தவற்றில் உடனிருந்து , விடியற்காலையில் கல்லறையில்  காத்திருந்து  இழந்த இயேசுவை உயிரோடு கண்ட மதலேன் மரியாளும், சீடர்களும் மகிழ்ந்ததைப் போல , எப்போதெல்லாம் வலிகளைத் தொடர்ந்து உயிர்தரும் நிகழ்வுகளுடன் உலகம் கரம் சேர்க்கிறதோ, அங்கெல்லாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

           அன்பு அச்சத்தைத் தகர்த்தெறியும் ஆக்கப்பூர்வமான சக்தி வாய்ந்தது. உலகத்தை இருளை நோக்கி இழுத்துச் செல்லும் இன்றைய சூழல்களிலும் மனித வாழ்வில் நம்பிக்கை தரும் நற்செய்திகளும் நம் செவிகளைத் தேடி வராமல் இல்லை. 
இருண்ட மேகத்தைக் கடந்து வரும் விடியலும், வறட்சியைக் கடந்து வரும் வசந்தமும்  வறுமையைத் துடைக்க நீளும் கரங்களும்,  துன்பத்தைக் கடந்து வரும் புன்னைகயும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும், உயிர்த்த இயேசுவின் வெற்றியின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. 

           இயேசுவின் அற்புதங்களும் அடையாளங்களும் அவருடைய மகிமை நிறைந்த வாழ்வைக் கண்முன் கொண்டதாகவே இருந்தன. எனவே  உயிர்ப்பு என்பது எளிதாக அமைந்து விடவில்லை. மனித நிலையில் துன்பம் நிறைந்தாக தோன்றினாலும் , இறை விருப்பத்தோடு இணைந்து  சென்றதால் மகிமைக்கு இட்டுச் செல்வதாக இருந்தது.

                 நமது புரிதலும் இறையனுபவமும் வளர வளர,  துன்பங்கள் நமக்குப் பாரமாக அமைவதில்லை. இன்றைய புரிதலுடன் நேற்றைப் பிரச்சினையைப் பார்க்கும் போது,  அவை பிரச்சனைகளே அல்ல என்பது புரிகிறது. உண்மைதான் . இயேசுவின் மகிமையான இறைநிலைக்கு  முன் சிலுவைத் துன்பமும் , உயிரிழப்பும் வலிகளைக் கடந்து, பிறந்த குழந்தையின் வசந்தப் புன்கையே. 

                     எனவேதான் பவுலடிகளார், நீங்கள் கிறிஸ்துவோடு  உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் (கொலோ 3:1) என்கிறார். நம்பிக்கை இருளான நிலையிலும் , நம்முயற்சிகள் தொடர்ந்தால் உயிர்ப்பின் வெற்றி நிச்சயமே.

          உயிர்த்த யேசு நமது இல்லங்களில் வாழட்டும். உயிர்ப்பின் மகிமை  நமது உள்ளங்களில் ஒளிரட்டும் பேறுபெற்ற நாளாக நமது வாழ்நாட்கள் மாறட்டும்.

புனித வெள்ளி

 புனித வெள்ளி
  எசா 52 : 13 - 53:12;     எபி 4:14-18; 5:7-8;      யோவா 18: 1 -19 :42


                         துன்பங்கள் பயத்தைத் தரும்.  அது ஒருவரை நிலை குலையச் செய்யும் . ஆனால் இயேசு துணிவுடன் தன் துன்பங்களை சந்திக்கிறார். அவருக்கு கொடுமை செய்பவர்கள்தான் நிலை  குலைந்து போகின்றனர். ஷேக்ஸ்பியர் கூறுவார் . “எல்லா நற்பண்புகளின் மறுபெயர் துணிவு”  என்கின்றார். (Virtue is bold).  

முர்ரே  என்பவர், “துணிவுக்கு ஞானம்  உண்டு , வல்லமை உண்டு.  அது ஒரு மாந்திரிகம்  (Magic) ”  என்பார்.  பவுல் அடிகளார் , “தூய ஆவி அருளிய திருப்பணி மாட்சியுடையதாய் இருந்தது என்றும் , அதனால், நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான் மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்” என்கிறார் (2கொரி 3:12).  

யோவான்,  இயேசுவின் பாடுகளுக்கு முன்பாக மற்ற ஒத்தமைப்பு நற்செய்திகளில் காணப்படும்  கெஸ்தமணி தோட்ட நிகழ்ச்சியை முன் வைக்கவில்லை. இயேசு பிடிபடும் போது ,  “ தானே முன்சென்று  யாரைத் தேடுகிறீர்கள் ” என்று கேட்டு , “ நான்தான்” , என்று தன்னையே தருகிறார். தலைமை குரு இயேசுவின் பணியைப் பற்றி கேட்கும் போது ,   “ ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்.  

நான் பேசியதை கேட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்”  என்று துணிவாகக் கூறுகிறார் (யோவா 18 : 19-20).  “தலைமை குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்”  என்று அறைந்தவனிடம்,   “சரியாக பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” (யோவா 18: 23)  என்று கேட்கிறார். பிலாத்து , இயேசுவை சிலுவையில் அறைய தனக்கு   அதிகாரம் உண்டு என்று கூறிய போது , மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது என்று துணிந்து பதில் கூறுகிறார் (யோ 19:11)   லூக்கா நற்செய்தியில் சிரேன் ஊரைச் சேர்ந்த , சிமியோனை இயேசுவின் சிலுவையைச் சுமக்கச்  செய்யும் செய்தியைப் பார்க்கிறோம்  (லூக் 23: 25 ‡ 26) . ஆனால் யோவான் ,  “இயேசு சிலுவையை தாமே சுமந்து கொண்டு,  மண்டை ஓடு  என்னுமிடத்தற்குச்  சென்றார்”  என்கிறார் (யோவா 19 : 17). 

ஒத்தமைப்பு நற்செய்திகளில் ,  இயேசு சிலுவையில் ,  “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” (மாற் 15 : 34;  மத் 27 : 46) என்று இயேசு கூறுகின்ற வார்த்தைகளைத் தருக்கின்றனர்.  ஆனால் யோவான் “தாகமாய் இருக்கிறது” என்று இயேசு கூறியது, மறைநூல் நிறைவேற என்றும் ,   “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறி “ஆவியை கையளித்தார்” என்றும் விளக்குகிறார்  (யோவா 19: 28 ‡30). இவ்வாறு இயேசு தன்னையே துணிவுடன் பாடுகளுக்குக் கையளித்ததால் நீரும் = தூய ஆவி  (யோவா 7 : 37 ‡ 39)  இரத்தமும் = தியாகமும்  (1 யோவா 5; 6 -7 : 1:7) வெளிப்பட்டன. 
                                       
துன்பங்கள்  வாழ்வின் நியதி. அதனைக் கண்டு பயந்து ஒதுங்க தேவையில்லை.  

துன்பம்  தருவது பயம்.  பயம் தருவது தோல்வி .  ஆனால் துணிவுத்  தருவது வெற்றி.  

மேக்கில் என்பவர், “துன்பங்கள்,  வாழ்வின் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர் ”  என்கிறார். 

ரூமி என்பவர்  “காயங்கள் வழியாகத்தான் வாழ்வின்  ஒளி உன்னில் நுழைகிறது” என்கிறார்.  

நாம் தாங்கும் துன்பங்கள்  நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும்  பெரும் பலன்களைத் தருகிறது.  

ஓர் ஆசிரியர்,  அவர்க்கு  கைநிறைய சம்பளம், வாழ்க்கை நன்கு ஓடியது. மற்றவர்களுக்கும் தாராளமாக உதவி செய்வார். அவரின் தங்கைக்கு   திருமணமாகவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு  உதவி செய்கிறேன் என்று லட்சக்கணக்கில் கடன் வாங்கி விட்டாள்.  அவள் ஒருமன பேதகம் போல செய்து விட்டாள் ,  இப்போது அப்பெண்ணின்  அண்ணன்  தங்கையின்  சுமையைத்  தாங்கி கொண்டு , தங்கைக்காகத்  துன்பங்களை தாங்குகிறார். அப்பெண்ணிற்கு வியாதிவந்து சாகும் நிலையில் தன் அண்ணனின்  கைகளைப்  பிடித்துக் கொண்டு ,  “எனக்கு வாழ்வு கொடுத்ததற்கு நன்றி அண்ணா”  என்று  சொல்லி  இறந்தாள்.

Sunday 2 April 2017

குருத்து ஞாயிறு 9 - 4 -2017

குருத்து ஞாயிறு 

        9 - 4 -2017                                                                                             

 அருள்பணி.சிரில் ரிச்சர்ட் கிருபாகரன்

 எசா 50 : 4 -7;    பிலி 2: 6 -11     மத் 26:14 - 27
   
தவக்காலத்தின் இறுதியில் வரும் இஞ்ஞாயிறு, இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் உயிர்ப்புக்கு முன்னதாக இயேசு எருசலேம் நகரத்தில் நுழையும் நிகழ்வை முன்வைக்கிறது. உயரிய அந்தஸ்தை கொண்ட  (அல்லது)  உயரிய அதிகாரத்தை,  பதவியை பெற்ற ஒருவருக்கு  குருத்தோலைகளை விரித்து வரவேற்பு அளிப்பார்கள். ஆனால் இயேசுவை அவரை பின்பற்றியவர்கள் ஏன் இத்தகையை உயரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இஞ்ஞாயிறு  பாடுகளின் ஞாயிறு  என்றும் அழைக்கப்படுகிறது. அதனால்தான் மத்தேயு நற்செய்தியிலிருந்து  இயேசுவின் பாடுகள்  இன்று வாசிக்கப்படுகின்றன. 

குருத்தோலை: 

                குருத்தோலை  ஏந்தும் பவனியானது  ஒரு குறிப்பிட்ட சிறப்பான வெற்றியை கொண்டாடுவதன் வெளிப்பாடு ஆகும்.                    வெற்றியை ஆர்ப்பரிக்கும் விதமாக குருத்தோலை  ஏந்தி அசைத்து கொண்டாடுவது  கிரேக்க ரோமானிய காலகட்டத்தின் பாரம்பரியம்  ஆகும். இயேசு ஒரு குறிக்கப்பட்ட மனிதனாக,  பகிரங்கமாக ஜெருசலேம் நகரத்தில் நுழையும் இந்த நாள், மக்களுக்கு சுதந்தர உணர்வை மேலும் அதிகப்படுத்தியது. மக்களின் நுகங்களை அகற்ற ஒரு அரசன் தங்களுக்கு கிடைத்துவிட்டார் என்கின்ற  உணர்வே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. அவர்கள்   உரைத்த  “ஓசான்னா ”, “ காப்பாற்று ”, “உதவு”  என்கின்ற கருத்துகளை வெளிப்படுத்தும்  எபிரேய வார்த்தையின் விளக்கமாக இருந்தது. ஆக,  இயேசு அவர்களின் சுமைகளை  போக்க வாக்களிக்கப்பட்ட மெசியா  (அல்லது) அரசராக உயர்த்தப்பட்Vர்.


கழுதை : 

          ஒரு கழுதையின் மீது சுமர்ந்து  ஊர்வலம் வந்தது , இந்நிகழ்வின் சாரத்தை திசை திருப்புகிறது. அரசர் என்பவர் குதிரையின் மீது வருவார். இவ்வாறு குதிரையில் வரும் போது  அது  போரின்  அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் கழுதை என்பது அமைதியைக் குறிக்கும்  அறிகுறியாக மாறியது. அது செக்கரியா 9:9வின் வார்த்தைகளை நினைவூட்டும் நிகழ்வை குறித்து காட்டுகிறது. “சீயோன் மகளே! உனது அரசர், கோவேறு  கழுதையின் மீது அமர்ந்து  வருகிறார்”என்கிற வார்த்தைகள், அமைதியை வழங்கும்  அரசர், மக்களை காப்பாற்ற வருகிறார்,  அவரின் வருகை அரசியல் ரீதியான சுதந்திரத்தை நிரந்தரமாக கொடுக்க வந்தார்  என்பதையே  உணர்த்தியது.

மக்கள் கூட்டம் : 

     மூன்று வகையான கூட்டம் இயேசுவை வரவேற்றது. 1.ஜெருசலேம் நகரில் பாஸ்கா திருவிழா சிறப்பிக்க வந்த யூதர்கள். 2. யூதர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட, ஜெருசலேமிற்கு வெளியில் தங்கிய யூதர்கள் ( Diasphora).  3. புறவினத்தார். ஆக இயேசு அனைவருக்காகவும் வந்தார் என்பதையும் , தன்னுடைய  மீட்பு  இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்பதையும் தெளிவுப் படுத்தவே மூவரின் வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.  இயேசுவை பற்றிய  மக்களின் புரிதல்,  இயேசுவின் இலக்கில் மாற்றம் கொண்டு வரவில்லை. மாறாக தன்னுடைய நோக்கத்தில், இறைதிட்டத்தை நிறைவேற்ற மக்களின் ஆர்ப்பரிப்போடு சாவின் மீது இயேசு வெற்றிவாகை சூட சென்ற நிகழ்வாகவே குருத்து ஞாயிறு இன்றும் நினைவு கூறப்படுகின்றது . 

                மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் பாடுகள் பகுதியில் சில தனிப்பட்ட கருத்துகளைப் பார்க்கிறோம். இயேசுவை கைது செய்த போது  பேதுரு,  தலைமைக் குருவின் ஊழியரை   தாக்கி, அவரின் காதை துண்டித்தபோது , இயேசு, “உன் வாளை அதன் உறையில் போடு . ஏனெனில் வாளை எடுப்போர் வாளால் அழிந்து  போவார்” (மத் 26 : 52) என்ற குறிப்பை மத்தேயு மட்டும்  தருகிறார். யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டதும் , பிலாத்துவின் விசாரணையின் போது , பிலாத்து கை கழுவுதல், யூதர் , இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் , எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் என்று கத்துதல் (மத் 27:25), பிலாத்துவின் மனைவி கனவு கண்டு, பிலாத்துவை  எச்சரித்தல் (மத் 27:19) ஆகியவை மத்தேயு நற்செய்தியில் மட்டும் கூறப்படுகின்றன. மத்தேயுவின் , இயேசுவின் பாடுகளின் தொகுப்பில் , இயேசு மெசியா என்ற கருத்தை வலியுறுத்தப்படுகிறது (மத் 26 : 68 ; 27: 14 -22). இரண்டாவது, இயேசுவின் இறப்பில்  யூதர் தலைவர்களின் பொறுப்பு  நன்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாடுகளின் நடுவில் இயேசுவின் பொறுமை, சீடர்களின் முன் மாதிரிகை ஆகியவை முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய மகத்துவமிக்க குருத்து நாளை சிறப்பிக்கும்  நாமும் பொருளுணர்ந்தவர்களாய்  இயேசுவின் எருசலேம் பயணத்தில் அவரை ஆரவாரத்தோடு வரவேற்று இறைதிட்டம் நிறைவேற துணை நிற்போம். 

Ads Inside Post