Pages - Menu

Wednesday 27 July 2016

தமிழ்நாட்டின் மறைமாவட்டங்களும், அதிலுள்ள பங்குகள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் விபரம்

                                                   
ஒரு சிறிய பார்வை
தமிழ்நாட்டின் மறைமாவட்டங்களும், 
அதிலுள்ள பங்குகள் மற்றும் 
கிறிஸ்துவ மக்கள் விபரம்

வ. எண் மறைமாவட்டம்         பங்குகள்       இறைமக்கள்
1 செங்கல்பட்டு                                93-----------------1,89,027
2 கோயம்புத்தூர்                             68 ----------------1,89,253
3 தருமபுரி                                            40 ---------------- 55,300      
4 திண்டுக்கல்                                    49-----------------1,46,753
5 கோட்டார்                                         82-----------------2,52,979
6 கும்பகோணம்                               93----------------- 2,24,764
7 சென்னை - மயிலாப்பூர்         126----------------4,40,525
8 மதுரை                                               69----------------- 2,30,200
9 ஊட்டி                                                 64------------------  90,864
10 பாளையம்கோட்டை              50-----------------1,36,315
11 பாண்டிச்சேரி, கடலூர்           102--------------- 3,91,553
12 சேலம்                                                 60------------------ 85,955
13 சிவகங்கை                                      78--------------- 1,90,386
14 தஞ்சாவூர்                                          89--------------- 3,18,547
15 திருச்சிராப்பள்ளி                        69 -------------- 2,39,613
16 தூத்துக்குடி                                   111---------------- 4,28,684
17 வேலூர்                                              85--------------- 1,75,848
18 குழித்துறை                                   100 --------------- 2,64,222

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- திரு. எம். சி. குமார், எம். ஏ., எம்.பில்., 
விரகாலூர்
மெய்யுணர்ச்சிப் படலம் தொடர்ச்சி:

கிறித்தியான் குடும்பமாகிய தாமும், இங்கு வாழும் இந்த நாட்டு மக்களும் நீதி தவறாத தூய்மையான இறைவனைப் போற்றாமல், அவர் வார்த்தையைக் கேளாமல் தீய செயல்களைத் துணிந்து செய்து வருகின்றோம். அழியும் சாத்தானுக்கு அடிமையாகி, மரணத்திற்கும் துணிந்து அதில் நிலைத்து மிகவும் கொடியவரானோம். உலகில் உள்ள மக்கள் ஏளனம் செய்ய அதனைப் பற்றிய சிந்தனையற்றவர்களானோம். இறைவனின் பெயரை வீணாக வழங்கினோம். வீணர்களுடன் சேர்ந்து வீணர்களானோம். பெருமை மிகுந்த ஓய்வு நாளை உயர்வாக எண்ணி இறைவனை வழிபடாமல் வீண் காலம் கழித்தோம். பெற்றோரைப் பாதுகாக்கத் தவறினோம். நாங்கள் எவர்க்கும் நன்மையைச் செய்யவில்லை. நன்மை செய்வதற்கு ஏற்ற பண்பும் எங்களிடமில்லை. செய்ந்நன்றி மறந்த கொடியவரானோம். இழிவும், களவும், பொய்யும், புரட்டும், வஞ்சனையும், பொறாமையும், தீராப்பகையும் எப்பொழுதும் உடையவராக உள்ளோம். பாவத்தொழிலைப் பயிற்சி செய்து எப்பொழுதும் வாழ்ந்து வருகின்றோம்.

இறைவன் நம்மிடம் ஒப்படைத்த நன்மை தரும் பொருளைப் பாதுகாத்துப் பெருக்கிக் கொள்ளாமல் அதனை மண்ணில் புதைத்து வைத்தோம். இறைவனே வந்து நம்மை கணக்கு கேட்பாரானால், நாம் கொடியவர் என்று முடிவு செய்யப்பட்டுத் தண்டனை பெறுவோம். இறைவன் தந்த உயர் வாழ்வை விரும்பாமல், நாட்டில் வெறுக்கத் தகுந்த வாழ்வையே விரும்பி அலைகின்றோம். நம் மனச்சான்றை மழுங்கச் செய்து நாமே அழித்துவிட்டோம். இது நம்மை நெருங்கி வரும் அழிவையுணராது  உறங்கும் செயலாகும். இவ்வுலகில் பிறந்த நோக்கத்தையும், பயனையும் ஆராய்ந்து பாராமல் வாழும் மனிதர் அவற்றை அடைய முடியாது. ஒருவர் தன்னையும், தன் நிலைமையையும், இறைவனையும், அவருடைய விருப்பத்தையும் அறிந்து வாழ்தல் வேண்டும். பின்னர் அறிவோம் என்பது அறிவீனமாகும். நான் வருந்துகின்ற அளவுக்கு நீங்கள் வருந்தாமல் இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை. இறைவன் வெளியிட்ட அறிவிப்பைக் கேட்டும், இன்னும் இந்த நாட்டிலிருந்து அழிவது நன்மை தராது என்ற உண்மையை உங்களுக்குச் சொன்னதற்கு என்னைப் பைத்தியம் கொண்டவன் என்று சொல்லுகிறீர்கள், தீமையோடு வாழ்கின்றவர்களே! இப்பொழுதே மனம் திரும்புங்கள், இல்லாவிட்டால் கொடுந்துன்பங்கள் உங்களை வந்து சேரும்.

மோசேயின் மூலம் இறைவனுடைய செய்திக்குச் செவி கொடுக்காமல் எகிப்து நாடு பத்து வகையான துன்பங்களால் அவதியுற்றது. இறைமக்களுக்குத் துன்பந்தரத் தொடர்ந்த எகிப்து மன்னன் பாரோனும் அவனுடைய படைவீரரும் செங்கடலால் மூடப்பட்டு அழிந்தனர். எனவே அழிவு வரும் முன்னர் தங்களைக் காத்துக் கொள்ளுவதே அறிவுடைமையாகும்.
“நான் யார்? இம்மண்ணுலகில் ஏன் பிறந்தேன்? இவ்வளவு நன்மையே செய்த இறைவனுக்கு என் கடமை என்ன. அதற்காக நான் என்ன செய்தேன்? எனக்கு வரக்கூடிய பயன் என்ன என்பதைப் பெரிதும் ஆராய்ந்து பார்க்கும் சிந்தனையில்லாமல் திரியும் மக்களின் பிறப்பும் ஒரு பிறப்பாகுமா? உலகமும், உலகிலுள்ள பொருள்களும் யாருடையவை? இறைவனுடைய மாட்சி மிகுந்த பண்புகள் யாவை? அப்பண்புகளை நாம் பெறவழி என்ன? என்று ஆராயாத மனிதர் மண்ணுக்குப் பாரமேயாவர்”.

“நான் கூறிய இந்த வார்த்தைகள் இறையருளால் நான் பெற்று வைத்துள்ள இந்தப் புத்தகத்தில் உள்ளன. உங்களுக்கு விருப்பமானால் தருவேன். வெறுத்திடாமல் கருத்தோடு படித்து வாழ்வு பெறுங்கள். வரும் நிகழ்ச்சிகளைச் சிந்திப்பீர்களானால், சிறிதும் காலம் தாழ்த்தாமல் இந்த நாட்டைவிட்டு இப்பொழுதே விரைந்து ஓட வேண்டும். அழிவதற்குத் துணிவீர்களானால் இங்கேயே தங்கியிருங்கள்” என்று கிறித்தியான் கூறினான். கிறித்தியான் கூறிய கருத்துக்கள் எல்லாம் “பெரிய கல்லில் மோதிய பந்தைப் போல்” ஆனது. அறியாமையாகிய இருளில் மூழ்கிக் கிடக்கின்ற மக்களின் மனதில் நிலைகொள்ளவில்லை. மிகுந்த வெளிச்சம் கொடுக்கும் விளக்கை ஏற்றினாலும் கண் தெரியாத குருடருக்கு அதனால் பயனில்லையன்றோ! மக்கள் அனைவரும் கிறித்தியான் மீது வெகுண்டெழுந்து அவமதித்தனர். “உன்னையே மேலான அறிஞனாக எண்ணும் உன்னைப் போன்ற பித்தன் இவ்வுலகில் இல்லை” என்றனர். “பெண்ணையும், பொன்னையும். மண்ணையும் வெறுத்துவிட்டால் இவ்வுலகில் பெறக்கூடிய இன்பம் வேறு என்ன உண்டு? முன்னர் இவ்வாறு கூறியுள்ளவர்களை அடித்துள்ளோம். பெற்ற பிள்ளைகளையும், வாழ்க்கைத் துணையாகக் கொண்ட மனைவியையும், ஆபத்தில் உதவும் நண்பர்களையும் வெறுக்கின்ற இவன் பேய் ஆவான். பித்தம் மிகுதியால் பிதற்றுகின்றான்” என்றனர். கிறித்தியானுடைய மனைவி, “என் கணவருக்குப் புத்திமாறாட்டம் வந்து விட்டது” என்று மனம் வருந்தினாள். கவலை கொண்டாள், கண்ணீர் வடித்தாள். பிள்ளைகள் ஏளனம் செய்தனர்.

இந்நிலைகளையயல்லாம் கண்டு, கேட்டு அறிந்த  கிறித்தியான், “எல்லா இடங்களிலும் இருக்கின்ற, எல்லாவற்றையும் காண்கின்ற, எல்லாவற்றையும் அறிகின்ற இறைவா! எல்லா உலகங்களையும் ஆட்சி செய்கின்றவர் நீர். என்னை சூழ்ந்திருக்கின்ற, ஆராயும் திறன் இல்லாத இவர்கள் நன்னெறியை அறியாமல் செய்கின்ற குற்றங்களை எல்லாம் பொருத்தருள்வீராக” என வேண்டினான். வீட்டை விட்டு வெளியேறினான். தனிமையான இடத்திற்குச் சென்று திருமறையைத் திறந்து படித்து மனம் மகிழ்ந்தான்.                                                                                                                                 (தொடரும்)

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்
 ம. இராசரெத்தினம், 
இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை


சித்தர் பாடல் : தேரையர் கூறும் தேர்ந்த மருந்து
ஒற்றைத் தலைவலிக்குத் தைலம்

பார்த்துமே தலை நோய்க்கு தைலம் கேள்
ஆர்த்து வெள்ளுள்ளி உரிய வலம்புரி
கோத்து மாசிக்காய் குறிக்கும் லவங்கமும்
தீர்த்து சமனெடை தீர வெடுத்திடே
எடுத்துக் கொம்பரக் கெழியாக வல்லிடை
உடுத்துமே பசும்பாலில் அரைத்துமே
தொடுத்துமே வெண்ணெய் தோன்றக் கலக்கியே
காடுத்து முத்தியும் கூற யயறக்கிட
எறக்கி மாய னெழிலடி போற்றியே
உறக்க மண்டல முற்று முழுகிட
திறக்கக் கபால சூலை வலியுறும்
பறக்கு மென்றால் லோ பாடினான் தேறனே

ஒற்றைத் தலைவலி வந்து அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்ட தைலத்தை தயாரித்து வாரம் இருநாள் தலைமுழுகி வர கபால குத்தல், கபால சூலை காரணமாக வரும் ஒருபக்க தலைவலி ஒரு மண்டலத்திற்குள் விலகும் பூசணிக்காய், புடலங்காய், முள்ளங்கி, தக்காளி, இளநீர், எலுமிச்சம் பழம் ஆகியன சாப்பிடக் கூடாது.

செய்முறை :
வெள்ளைப்பூண்டு - 50 கிராம்
வலம்புரிக் காய் - 50 கிராம்
மாசிக்காய் - 50 கிராம்
லவங்கம் - 50 கிராம்
கொம்பாக்கு - 50 கிராம்
இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இவற்றை பசும்பாலில் அரைத்து 1 கிலோ நல்லெண்ணெய் கலக்கி காய்ச்சி முறுகுபதத்தில் இறக்கி ஆற வைத்து எண்ணெய் தேய்த்து குளிக்கவும். பெண்கள் வெள்ளிக்கிழமையும், செவ்வாய் கிழமையும், ஆண்கள் புதன் கிழமையும், சனிக்கிழமையும் குளிக்கவும் (ஒரு மண்டலம் = 48 நாட்கள்)
குழந்தைகள் பிணியின்றி இருக்க வேண்டுமா?
கிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்கள் கட்டாயமாக தாய்ப்பால் அளிக்கவும், மஞ்சள் நிறமாக கசியும் தாய்ப்பால் மிகவும் நோய் எதிர்ப்பாற்றலைக் குழந்தைகளுக்குத் தரக்கூடியதாகும். கொலஸ்ட்ரால் எனப்படும் இந்த சத்துப்பொருள் தாய்ப்Vலைத் தவிர மிகச்சிறப்பாக எதிலும் கிடைப்பதில்லை. இது குழந்தையின் நோய் 
எதிர்ப்பாற்றலை ஊக்குவித்து தீவிரமான நோய்கள் வராமல் காக்க உதவுகின்றன.

தொப்பையை கரைக்கும் அன்னாசி :

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்யவும், பலத்தை தரவும் செய்கிறது. பல வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக இருக்கிறது. தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசி பழம் சிறந்த டானிக் ஆகும்.

நன்றாக பழுத்த அன்னாசியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை அரைமணி ஊறவைத்து படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அனைத்து விதமான உடல் உபாதைகளும் நீங்கும். அன்னாசிப் பழச்சாற்றை தொடர்ந்து குடித்து வர முகம் பொலிவு பெறும். இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஒரு அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 4 தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாக கிளறி ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அதை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கவும். அப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பைக் கரையத் தொடங்கும்.
இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். ஊற வைத்த அவலை காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். 300 கிராம் கருணைக் கிழங்கை தினமும் மதிய உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக் குறையும். காசிணிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

ஆலோசனை நேரம்

ஆலோசனை நேரம்

வேதியரிடம் கேளுங்கள் - 14
- நல்லை.இ.ஆனந்தன்
 உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் ஓட்டுப்போட பணம் வாங்கினீர்களா? இல்லையா?

-திரு.அண்ணாசெல்வம்,சின்னாளப்பட்டி

அய்யா, கும்பகர்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரரே, ஓட்டுப்போட்டு, ரிசல்ட் வந்து, ஆட்சி அமைத்து மூன்று மாதம் கழித்து இப்போதுதான் கண் முழிச்சீங்களோ? தமிழக வாக்காளர்கள் ஓட்டுப்போட பணம் கேட்குமளவிற்கு இன்னும் தரம் தாழ்ந்து விடவில்லை. வேட்பாளர்கள்தான் ஓட்டுக்குப் பணம் கொடுக்க அலைந்தார்கள். கண்டெய்னர் லாரியை வைத்துக் கொண்டு பிலிம் காட்டினார்கள். சில இடங்களில் பணம் கொடுத்தும் டெபாசிட் காலியானார்கள். செய்தித்தாள்களில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது என்று தான் படித்திருப்பீர்கள் (ஒரு தாழ்மையான வேண்டுகோள். ரகசியமாகக் கேட்கவேண்டியதைப் பகிரங்கமாகக் கேட்காதீர்கள். எல்லாருமே மாட்டிக்கொள்வோம்.)

2. ஒரு சிலர் நான் எது பேசினாலும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இதனால் வெளியில் ஏதாவது பேசவே பயமாக இருக்கிறது?

- அமலாதேவி, பொள்ளாச்சி

உங்கள் பிரச்சனை இயேசுநாதருக்கே இருந்தது. பலர் அவரது கருத்துக்களைத் தவறாகவே புரிந்து கொண்டார்கள். ஒரு காலம் வரும். அப்போது உண்மையை உணர்ந்துக் கொள்வார்கள். எனவே அதிகம் பயப்பட வேண்டாம். கதை சொல்கிறேன். கவனமாய்க் கேளுங்கள். ஒரு தந்தை சாகும் வேளையில் தனது மகனிடம் சொன்னார். நான் சொல்லும் மூன்று அறிவுரைகளை மட்டும் செயல்படுத்து. வாழ்வில் வெற்றியடைவாய்.

1; பெற்றோர்க்கும், பெரியோர்களுக்கும் சோறு போடாதே. 2. கடன் கொடுத்தவரிடம் சென்று கடனைத் திருப்பிக் கேட்காதே.  3. விவசாய நிலத்தைச் சுற்றி வேலி போடாதே. அப்பாவின் மறைவிற்குப் பின் அவன் தப்பாது அதன்படி நடக்க, ஊராரின் ஏச்சும், பொருளாதாரச் சிக்கலும், விவசாயத்தில் பேரழிவும் நடந்தது. பிறகு முனிவரிடம் சென்று ஆலோசனை கேட்டான். அதற்கு அவர் சொன்னது. பெற்றோருக்கும், பெரியோருக்கும் செரிமான பிரச்சனை இருக்கும். அவர்களாகவே தேவைக்கேற்ப போட்டு சாப்பிடும்படி விட்டுவிட வேண்டுமே தவிர தட்டு நிறைய அள்ளிப் போட்டு நீட்டக்கூடாது. கடன் கொடுக்கும்போது, வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தரும் நல்லவரிடம் மட்டுமே கடன்தரவேண்டும். அயோக்கியனிடம் கொடுத்தால் அலைய வேண்டி வரும். தரமானவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கவும். 3. விவசாயம் செய்யும் போது பக்கத்துத் தோட்டக்காரனிடம் பாசத்தோடு பழகினால் அவன் நமது தோட்டத்தையும் நாம் இல்லாதபோது ஒருகண் பார்த்துக் கொள்வான். வேலி போட அவசியமில்லை. இப்போதுதான் மகளுக்குப்புரிந்தது. அப்பாமேல் தப்பு இல்லை. அவரை தப்பாகப் புரிந்து கொண்டதுதான் தன் தவறு என்பதை உணர்ந்து கொண்டான்.

3. முதுமை ஒரு வரமா அல்லது சாபமா?

- திரு. முத்துச்சாமி, தூத்துக்குடி

வரம். ஏனெனில் பல பேருக்கு அது வாய்ப்பதில்லை. இளமையிலேயே போய் விடுகிறார்கள். சாபமாக மாற்றுவதும், வரமாக ஆக்குவதும் முதியவர்கள் கையில் இருக்கிறது. வயதான காலத்தில் வாழ்க்கையை ஓட்ட வழிவகைகளை திட்டமிட்டுச் செயல்படும் முதியோர்கள் சற்று நிம்மதியுடன் இருக்கிறார்கள். இருப்பது எல்லாவற்றையும் தாரை வார்த்துவிட்டு மற்றவரிடம் அஞ்சுக்கும், பத்துக்கும் கையேந்துகிற ஆசாமிகளும் இருக்கிறார்கள். இன்றைய இளையோர், நாளைய முதியவர்கள். எனவே இளையோரே, உங்கள் எதிர்காலத்தைச் சந்திக்கத் தயாராக இருங்கள். வாழ்க்கை வசப்படும்.

04. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் நிகழ்வில் இயேசு குனிந்து தரையில் என்ன எழுதினார்?

- திருமதி. சகாயமேரி, தஞ்சாவூர்.

யோவான் தனது நற்செய்தியில் இயேசு தரையில் குனிந்து எழுதினார் என்று எழுதினாரே தவிர, என்ன  எழுதினார் என்பதுபற்றி குறிப்பு இல்லை. ஒரு யூகம்தான். சொல்கிறேன். பத்துக்கட்டளைகளைத் தரையில் எழுதியிருக்கலாம். கொலை செய்யாதே என்று அந்த மகளுக்கும் எழுதியிருக்கலாம். எப்படியோ... இயேசு அந்த மகளின் தலையயழுத்தை மாற்றி எழுதிவிட்டார். சாவைச் சந்திக்க இருந்த அவள் வாழ்வைப் பெற்றுக்கொண்டாள். மரண தண்டனையை இயேசு மாற்றி எழுதிவிட்டு போனசாக ஓர் அட்வைஸ் செய்தார். இனி பாவம் செய்யாதீர்.

05. தமிழ்ப் பெண்கள் கொலை செய்யப்படுவதையும், தற்கொலை செய்துக் கொள்வதையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

- செல்வி. அகிலா, கன்னியாகுமரி.

அணுசக்தி ஆக்கத்திற்கும், அழிவுக்கும் பயன்படும் என்பது அறிவியல் உண்மை. அலைப்பேசியும் அதேபோலதான். அதை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தியிருந்தால் இத்தகைய அவலங்கள் நேர்ந்திருக்காது. விஞ்ஞானத்தோடு அதிகமாக விளையாட ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்பதை முதலில் பெற்றோர்கள்தான் புரிந்துக்கொள்ள வேண்டும். விலையுயர்ந்த செல்போன் வாங்கித் தரும் போதே.... சில அறிவுரைகளை கண்டிப்புடன் கூற வேண்டியது பெற்றோரின் கடமை. ‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும். தீயவராவதும் பெற்றோர் வளர்ப்பிலே’. எனவே வாழ்க்கையை வாழ்வதெப்படி என்று வளரும் சமுதாயத்திற்குப் புரிய வையுங்கள் பெற்றோர்களே! இதுதான் தற்போதைய அவசர, அவசியத் தேவையாகும்.

06. என் குடும்பம் கைராசிக் குடும்பமாகத் திகழ ஆலோசனைகள் கூறவும்?

- வர்றே, வா.... இதைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு வீட்டில் மனைவி தெய்வமகளாக இருக்கும் பட்சத்தில் அவள் என் கணவன் என் தோழன் என்று வாழ்வாள். அந்த வீடும் தெய்வம் தந்த வீடு ஆக இருக்கும். சண்டை சச்சரவின்றி மெளன ராகம் இசைத்தால் வீட்டில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உள்ளம் கொள்ளை போகுதே என்று ஒவ்வொரு நிமிடமும் வாழலாம். தேவையான சமயத்தில் தம்பதியர் மனம் விட்டு நெஞ்சம் பேசுதே என்று உரையாடினால், உறவே .... உயிரே என்று வாழ்வீர்கள். இறைவன் மழலைச் செல்வம் அளித்தால் அவை இனிய இருமலர்கள் ஆகத் திகழும். பிறகு உங்கள் குடும்பம் கைராசிக் குடும்பமாகத் திகழும் (தயவுசெய்து தொலைக்காட்சித் தொடர்களில் படங்களை மட்டும் பார்க்கவும். பாடங்களை கற்றுக் கொள்வதில் கவனமாக இருக்கவும். வாழ்த்துக்கள்!).

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

-அருள்சகோ. றூ. பவுலின் மேரி FSAG, கும்பகோணம்

ஆகஸ்ட்- 4, தூய மரிய வியான்னி (மறைப்பணியாளர்)

இப்புனிதர் பிரான்சு நாட்டில் லயன்ஸ்  நகருக்கருகில் கிபி 1786இல் பிறந்தார். இவர் கல்வி கற்பதில் திறமையற்றிருந்தார்.  ஆனால்  இவரின் ஆழ்ந்த பக்தி வாழ்வினால் குருவாகி பிறகு ஆர்ஸ் நகரின் பங்குதந்தையானார். மக்களை ஒப்புரவு  அருட்சாதனத்தின் வழியாக  ஆற்றுபடுத்தினார். ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம்  பாவசங்கீர்த்தனம் கேட்பார். ஏழைகள் மீது இரக்கம்  உள்ளவர். தேவபராமரிப்பு என்ற விடுதியை தொடங்கி  80 பேருக்கு ஒவ்வொரு நாளும்  உணவு  கொடுத்து வந்தார். வெகு குறைவாக உணவு அருந்தி, குறைந்த நேரமே உறங்குவார். இவர் 1859இல் ஆகஸ்ட் 14ஆம் நாள் இறந்தார். இவர் பங்கு குருக்களின் பாதுகாவலராகத் திகழ்கிறார்.

ஆகஸ்ட்- 6  ஆண்டவரின் உருமாற்றம்

இயேசு பாடுபடுவதற்கு முன் கலிலேயாவிலிருந்து இராயப்பர், யாகப்பர், அருளப்பர் மூவரையும் அழைத்துக் கொண்டு தாபோர் மலைக்குச் சென்று உருமாறினார். இயேசுவின் முகம் சூரியனைப் போல் பிரகாசமாகவும், உடைகள் பனிக்கட்டியைப் போல் வெண்மையாயும் இருந்தன. மோயீசனும், எலியாசும் இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தபோது இராயப்பர் மூன்று கூடாரங்கள் அமைக்கலாம் என்றார். அப்போது ‘இவரே நம் அன்புக்குமாரன், இவருக்கு செவிசாயுங்கள்’ என்ற குரல் ஒலித்தது. தாபோர் மலையில் ஆண்டவரின்  மகிமையைக் கண்ட இவர்கள், ஒலிவ தோட்டத்தில் ஆண்டவர் பட்ட ஆன்மீக போராட்டத்திலும் உடனிருந்தார்கள். துன்பத்தை இவற்றை பொறுமையுடன் சகித்தால் பின்னர் நித்திய காலத்துக்கும் இயேசுவின் அழகைப் பார்த்து மகிழலாம் என்ற நினைவு அவர்களுக்கு துன்பத்தைச் சகிக்க திடன் அளித்தது. இவ்விழா 11ஆம் நூற்றாண்டில் மேற்றிசை நாடுகளில் பரவத் தொடங்கி கிபி 1457இல் உரோமை விழா பட்டியலில் இடம் பெற்றது.

ஆகஸ்ட் - 8,  தூய தோமினிக் - மறைப்பணியாளர்

ஸ்பெயின் ஓஸ்மா மறைமாவட்டத்தில் இலரூகாவில் கிபி 1170இல் பிறந்தார். பலேன்சியாவில் இறையியல் கற்றார். ஓஸ்மா நகரத் திருக்கோவிலில் பணிபுரிந்த மறைப்பணியாளர்களில் இவரும் ஒருவரானார். ஆல்பி ஜென்சியருக்கு எதிராகப் போராடினார். தம் மறையுரைகளாலும், வாழ்க்கைச் சான்றாலும் நற்பெயர் பெற்றார். இப்பணியைத் தொடர்ந்து செய்ய தம்மோடு தோழர்களை இணைத்து போதகர்களின் சபையை நிறுவினார். இத்தாலியில் பொலோஞ்ஞோ என்ற இடத்தில் 1221இல் ஆகஸ்ட் 8ஆம் நாள் இறந்தார்.

ஆகஸ்ட் - 10    புனித லாரன்ஸ்       - திருத்தொண்டர், மறைசாட்சி - 258.

இவர் உரோமைத் திருச்சபையின் திருத்தொண்டர். மன்னன் வலேரியன் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய காலத்தில் திருத்தந்தையை பிடித்து கொலைகளத்திற்கு கொண்டு போகும் போது, லாரன்சும் அழுது கொண்டு பின்சென்றார். அக்காலத்தில் உரோமை அரசன் ‘திருச்சபையின் திரவியங்களையயல்லாம் எனக்கு காட்டு’ என்றான். ‘மூன்று நாட்களுக்குள்ளாக காட்டுகிறேன்’ என்று  ஏழைகளைத்  திருச்சபையின் திரவியங்களாகக் காட்டினார். உடனே அதிகாரி கடும் கோபத்துடன் அவரை இரும்பு அடுப்பில் வைத்து எரித்துக் கொல்லும்படி உத்தரவிட்டான். இறையருளால் இவர் வேதனையை வீரத்தோடு சகித்து மகிழ்ச்சியுடன் இருந்தார். மக்கள் மனத்திரும்பவும் கிறிஸ்தவ விசுவாசம் உலகமெங்கும் பரவவும், கடைசி மூச்சு விடும்வரை ஜெபித்து 258இல் உயிர் துறந்தார். இவரது சாவைக் கண்ட பல அதிகாரிகள் திருமறையை ஏற்றுக் கொண்டனர்.

ஆகஸ்ட் - 11          புனித கிளாரா - 1194 - 1253

புனித கிளாரா இத்தாலியில் அசிசி நகரில் கிபி 1193இல் பிறந்தார். 1212இல் தவக்காலத்தில் புனித அசிசி பிரான்சிஸ் இவரது ஊர்க்கோவிலில் மறையுரைகள் நிகழ்த்தினார். துறவியாக வேண்டுமென்று தீர்மானித்து, குருத்து ஞாயிறன்று இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் புனித பிரான்ஸிசிடம் அடைக்கலம் புகுந்தாள். அவர் இவருக்குத் துறவற உடை அளித்தார். பெற்றோர் தேடி வருகையில் (பல போராட்டத்தின் மத்தியில்) ‘என்னை கடவுள் தமது சேவைக்கு அழைத்திருக்கிறார். இயேசுவைத் தவிர வேறு எவரும் வேண்டாம்’ என்று கூறிவிட்டாள். இவரைக் கொண்டு புனித பிரான்சிஸ் ஒரு புதிய கன்னியர் சபையைத் தொடங்கினார். மிக எளிமை வாழ்வு நடத்தினார். எனினும் பிறரன்பு பணிகளிலும், இறையன்பு செயல்களிலும் சிறந்து விளங்கினார். 1253இல் ஆகஸ்ட் 11ஆம் நாள் இத்தாலியில் அசிசி நகரிலேயே இவர் இறந்தார்.

ஆகஸ்ட் - 15          தூய கன்னி மரியின் விண்ணேற்பு

1954ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர், கன்னி மரியாள் விண்ணகத்திற்கு ஆன்மாவோடும், உடலோடும் எடுத்து செல்லப்பட்டார் என்ற உண்மையை விசுவாச சத்தியமாக அறிவித்தார். இவ்விழா ஆரம்பத்திலிருந்து பலவித பெயர்களைக் கொண்டிருந்திருக்கின்றது. ‘விண்ணக பிறந்த நாள்’, ‘துயில் கொள்ளல்’, ‘சென்று விட்டார்’, ‘விண்ணேற்பு’ என்று பலநாடுகளில் கொண்டாடப்பட்டு கிபி 690இல் இங்கிலாந்து நாட்டில் அன்னையின் விண்ணகப்பிறப்பு விழா என்று கொண்டாடப்பட்டதாக ஆல்டெம் என்பவர் கூறுகிறார். ‘படைத்தவரைக் குழந்தை வடிவில் தம் உடலில் தாங்கிக் கொண்டவர், உடலோடு கூட இறைவனின் வீட்டில் இடம் பெறுவதும் பொருத்தமானதே’ என்று விளக்குகிறார் புனித ஜான் தமசீன்.

ஆகஸ்ட் - 20     தூய பெர்நார்து - 1093 -1153

பிரான்ஸ் நாட்டில் திஜோன் நகருக்கருகில் கிபி 1090இல் பிறந்தார். கடவுள் பற்றோடு கல்வி கற்றார். உலகிலிருந்தால் ஆன்மாவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சி துறவியானார். சிறிது காலத்திற்குள் ஒரு மடத்தை நிறுவி தலைவராக இருந்தார். 30 பேர் இவரைப் பின்பற்றி துறவியானார்கள். உடன் துறவிகளை போதனையாலும், மாதிரியாலும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் தோன்றியதால் அமைதியையும், ஒற்றுமையையும், நிலைநாட்டுவதற்காக ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார். இறையியல், தவவாழ்வு பற்றிய நூல்கள் பல எழுதினார். அவர் க்ளேர்வோ ஆதினத்தில் 1153இல் ஆகஸ்ட் ‡ 20ஆம் நாள் இறந்தார்.

ஆகஸ்ட் - 25          தூய லூயிஸ் - 1215 - 1270

கிபி 1214இல் பிறந்தார். தம் 22ஆம் வயதில் பிரான்ஸ் நாட்டின் மன்னரானார். தன் திருமண வாழ்வில் 11 குழந்தைகளுக்குத் தந்தையாகி, தாமே சிறந்த முறçயில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவத்திலும், ஜெபத்திலும், ஏரழ, எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். மக்களிடையே அமைதியை உருவாக்குவதிலும், ஆன்மீடீக நலத்திலும் அக்கறைக் கொண்டு தம் ஆட்சிப் பொறுப்பை நிறைவேற்றினார். கிறிஸ்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர்களை மேற்கொண்டார். 1270இல் ஆகஸ்ட் 25ஆம் நாள் வட ஆப்பிரிக்காவில் இறுதி திரு அருட்சாதனங்களைப் பெற்று இறந்தார்.

ஆகஸ்ட் - 28       தூய அகுஸ்தீன் - 354 - 430

இவர் வடஆப்பிரிக்காவில் தகாஸ்தே என்னுமிடத்தில் கிபி 354இல் புனித மோனிக்கம்மாளிக் மகனாகப் பிறந்தார். இளமைப் பருவத்தைத் தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றிக் கழித்தார். பின்பு மிலானில் ஆயர் அம்புரோசின் மறையுரைக் கேட்டு 387இல் ஆயர் அம்புரோசியாரிடம் திருமுழுக்குப் பெற்றார். 390இல் குருப்பட்டம் பெற்று ஹிப்போவுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று 34 ஆண்டுகள் குருத்துவ வாழ்வு வாழ்ந்து தம் மந்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். சிறந்த இறையியலார் இவர் மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களைப் பயிற்றுவித்தார். அவர் காலத்தில் நிலவிய தவறான கருத்துகளுக்கு எதிராகப் போராடி திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார். இன்றும் இவருடைய இறையியல் விளக்கங்கள் வியப்புடன் படிக்கப்படுகின்றன. 430இல் ஆகஸ்ட் 28 ஆம் இறந்தார்.

ஆகஸ்ட் - 29            தூய திருமுழுக்கு யோவான்

இவர்  தம் 30ஆம் வயதில் யோர்தான் நதிக்கரைக்கு வந்து மக்களை மனம்மாற அழைத்தார். இவர் கிறிஸ்துவின் முன்னோடி. கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் அளிக்கும் பேறுபெற்றவர். இவரே இறைவனின் செம்மறி என மக்களுக்குச் சுட்க்காட்டியவர். மாசில்லா குழந்தைகளைக் கொன்ற ஏரோது இறந்ததும் அவரின் மகன் ஏரோது அந்திபாஸ் நாட்டை ஆண்டு வந்தான். தன் சகோதரன் மனைவி ஏரோதியாளை தன் மனைவி ஆக்கிக் கொண்டதை யோவான் அச்சமின்றி கண்டித்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். ஏரோதியாளின் வேண்டுகோளின்படி தலையை வெட்டி யோவான் கொல்லப்பட்டார்.

தூய்மையைப் போற்றுவோம்

அமெரிக்கக் கடிதம்

தூய்மையைப் போற்றுவோம்

ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல, நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளின் தனி சிறப்புகளைப் பற்றிப் பேசிக் கொணடிருந்தோம். பிரான்சு நாட்டில் பலவிதமான ஒயினை சுவைத்துப் பார்க்கலாம். பெல்ஜியம், சாக்லெட்டிற்கு பெயர் போனது. இத்தாலி நாடு நூடுல்சுகளில் செய்யப்படுகின்ற ‘ஸ்பெகெட்டி’ என்ற உணவு பெயர் போனது என்று கூறியபோது, ஜெர்மனி நாடு எதற்கு பெயர் போனது? என்ற கேள்வி எழுந்தது. ஜெர்மனி சுத்தத்திற்கு பெயர் போனது என்றனர். (ஜெர்மனி மொழியில் சுத்தத்திற்கு ‘செளபர்’ என்பர்). சென்னை எதற்கு பெயர் போனது என்றார். ‘கூவமும், கூவ நாற்றமும்’ என்று சொல்லலாம். வீட்டினுள் சுத்தத்தைப் பேணும் நம் மக்கள் பொதுவிடங்களில் அசுத்தத்தால் அசிங்கமாக்குகிறார்கள்.

கழிவறைகள் இல்லாத நிலையில் வெளியிடங்களில் மலம் கழிக்கின்ற சூழ்நிலை மாறிவருகிறது. கேரளாவில் மலையாளிகள், கோவை வழியாக இரயிலில் பயணம் செய்யும் போது, கோவையில் இரயில் பாதை இருபக்கங்களிலும், காலை காட்சி என்றும், மாலை காட்சி என்றும் மக்கள் அமர்ந்திருப்பதை சொல்லி சிரிப்பதை கேட்டிருக்கிறேன்.

நமது அரசு மருத்துவமனைகளை சொல்ல தேவையில்லை. அவ்வளவு அசுத்தமாக வைத்திருப்பர். நோய்களின் பரப்பு நிலையம், அரசு மருத்துவமனை என்று சொல்ல முடியும். சென்னையில் சங்கரா நேத்ராலயா என்ற மருத்துவமனையில் தூய்மையாக வைப்பதற்கு பெரும் முயற்சி செய்து, தூய்மையை பாதுகாக்கின்றனர். மேல்நாடுகளில் சுத்தத்தை பேணி காப்பதில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். சுகாதாரமின்மையால் நோய்கள் எளிதாக பரவுகின்றன. மருத்துவத்திற்கு பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் சுகாதாரத்தை எவ்வளவு கவனமாக பாதுகாக்கின்றனர் என்று இக்கட்டுரையாளர் விவரிக்கிறார்.
காலரா நோய் இன்று வரை பல கோடி உயிர்களைப் பறித்துச் சென்றுள்ளது. இதற்கு மூலகாரணம் சுத்தமற்ற தண்ணீரும், சுகாதாரமின்மையும்தான் என்பதை ஆய்ந்து, அறிந்து, எல்லா ஊர்களிலும் தண்ணீரை சுத்தப்படுத்தி வடிகட்டி பாக்டீரியா இல்லாத தூய்மையான தண்ணீரை இலவசமாக அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர்.

மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க தண்ணீர் ஓடுவதற்கு திட்டமிட்டு வடிகால்களை அமைக்கின்றனர். மழைநீர் தேங்காததால் துர்நாற்றத்தையும், கொசு தொல்லையையும் கட்டுப்படுத்துகிறார்கள். கொசு இல்லாத நிலை உண்டாக்கி கொசுவினால் வரும் நோய்கள் வராமல் தடுக்கின்றனர். கழிவுகளையும், குப்பைகளையும் அகற்ற என்று தனி ஒரு துறையை அமைத்து, அதில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளனர். முதலில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வண்ணமாக தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உதாரணமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், பிளாஸ்டிக் பை குப்பைக்கு செல்லும் போது, இது மண்ணில் மக்க பல வருடங்கள் ஆகும். அதனால் கடைகளுக்குச் செல்லும் போது சொந்த பைகளை எடுத்து வந்தால் மக்களுக்கு வாங்கும் பொருள்களின் விலைகளில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். இதனால் மக்கள் கடைகளுக்குச் செல்லும் போது மறக்காமல் பெரிய துணிப் பைகளை கையுடன் எடுத்துச் செல்கின்றனர்,

பொருள்களை மறுசுழற்சி செய்து, வீணாக குப்பைக்குச் சென்று சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தாமல், மீண்டும் அதை பயன்படுத்துமாறு செய்கிறார்கள். உதாரணமாக மக்காத காலியான தண்ணீர் பாட்டில்கள், சோடா டின் போன்றவற்றை மண்ணில் குப்பைகளாக கொட்டாமல் இவைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இப்படி பல முயற்சிகள் எடுத்து வீதிகளில் குப்பைகள் சேராமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக காக்கின்றனர்.

ஒரு காலத்தில் லண்டன் நகரத்தில் ஓடும் தேம்ஸ் நதியும் நமது சென்னை நகரின் கூவம் போன்று தான் இருந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு மக்கள் தேம்ஸ் நதியை சுத்தம் செய்து அதில் படகுகளை விட்டு போக்குவரத்துக்கும், நகரை சுற்றிப் பார்க்க சுற்றுலா ஊர்தியாகவும் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் நம்மாலும் முடியும், முயல்வோம், நம் சுற்றுப்புறத்தை காப்போம். நமது ஊரையும், நாட்டையும் பூங்காக்களாக மாற்றுவோம்.
சுத்தம் காத்தால், நோய்கள் வராமல் காக்கலாம்

தூய்மை உடல் நலத்தின் மூன்றில் இரண்டு பகுதியாகும் - லபரைன் பழமொழி

நமது நம்பிக்கை இருளை போன்றது. 
சுகாதார சூழல்தான் இருளிற்கு ஒளியைத் தருகிறது.
தூய்மையான சுற்றுச்சூழல்தான்
இறைவனை வெளிப்படுத்தும் வெளிச்சங்கள்                                     - - ----லைலா கிப்டி அகிடா.

சட்ட ஆலோசனை

சட்ட ஆலோசனை

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியமொழி. ஒவ்வொரு நாடும் கிறிஸ்தவ நாடு, முஸ்லிம் நாடு என வரையறுக்கப்பட்டு செயல்படுகிறது. இந்திய நாடு மத சார்பற்ற நாடு என்று 1947க்கு பிறகு முடிவு செய்யப்பட்டு செயல்படுகிறது. இது சீக்கியருக்கோ, சமணர்களுக்கோ, பார்சிக்கோ, முஸ்லிம்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ சொந்தமானதல்ல. இதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பாலசமுத்திரம் கிராமத்தில் ஒரு பொது வழியில் முஸ்லிம்கள் தங்களது பிணத்தை எடுத்துச் செல்வதை இந்துக்கள் தடுத்தனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சி நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் அளித்துள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களும், ஜாதிகளும் சமமானவை. அவரவர் விருப்பப்படி மதத்தைப் பின்பற்ற அவர்களுக்கு உரிமை உள்ளது. இந்துக்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தமல்ல. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், சமணர்கள், பார்சி சீக்கியர்கள் போன்ற அனைத்து மதத்தவர்களும் சட்டத்தின் முன் சமம். இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டில் முதல் தர குடிமக்களாக வாழவேண்டும் என்றும், மற்றவர்கள் இரண்டாம் தர குடிமகன்தான் என்பதும் சரியல்ல. நமது நாட்டில் வாழும் அனைவரும் முதல் தர குடிமகன்கள்தான்.

நமது நாடு சுதந்திரம் அடையும்போது இந்தியத் துணை கண்டத்தில் மதப் பிரச்சனை இருந்தது. நமது முன்னோர்கள் நமது நாட்டை இந்து நாடாக அறிவிக்கக்கூடாது என்றும், மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது இதை செய்வதற்கு மிகவும் கஷ்டமான காரியம். பாகிஸ்தானை முஸ்லிம் நாடாக அறிவித்த  நிலையில் இந்தியாவையும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று நமது முன்னோர்களுக்கு கடுமையான நிர்பந்தம் இருந்திருக்க வேண்டும்.  

ஆனால் அவர்கள் அந்த நிபந்தனைகளை எல்லாம் தடுத்துவிட்டனர்.
இந்தியாவில் பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்னவென்றால் மதச்சார்பற்ற கொள்கைதான். அனைவரையும் சமமாக மதிக்கும் தன்மையும் உள்ளது. இல்லையயன்றால் நமது நாடு நிலைத்து நிற்க முடியாது. சீனாவில் 125 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 96 கதவிகிதம் பேர் ஒரே குரூப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவில் 105 கோடி பேர் உள்ளனர். இங்கு பல மதங்கள், ஜாதிகள் பண்பாடு குரூப்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை  எல்லாம் ஒன்றுபடுத்தி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது மதச்சார்பற்ற கொள்கையும் அனைவரையும் மதிக்கும் தன்மையும்தான். இந்தப் பாதையை தான் அசோகர், அக்பர் போன்ற பேரரசர்கள் காட்டினர்.

இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக  உள்ளனர். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெரும்பான்மையினருக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பாக மரியாதையுடன் வாழ்வதாக  உணரவேண்டும். அவர்களை துன்புறுத்தக் கூடாது. சிறுபான்மையினரை மதிப்பது என்பது நாகரீக சமூகத்தின் அடையாளம் ஆகும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.

Tuesday 26 July 2016

துக்காராம் (சுதந்திர தினத்திற்கான சிறப்பு சிறுகதை)

துக்காராம்

(சுதந்திர தினத்திற்கான சிறப்பு சிறுகதை)
- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

துக்காராம் .... எங்கள் தெருவில் எல்லோருக்கும் பரிட்சையமான ஒரு ஆன்மா. இவன் யார்? இவன் எங்கிருந்து வந்தான்? இவன் பேசும் மொழி என்ன? இவன் பேர் என்ன? எதுவுமே இங்குள்ள யாருக்கும் தெரியாது. எப்படி இந்த தெருவுக்குள் வந்தான் என்றும் யாருக்கும் தெரியாது.

ஒருநாள் பிச்சைக்காரனைப் போல், தெருக்கோடியிலுள்ள டீக்கடையில் புரியாத மொழியில் அவனது வயிற்றுப்பசியை வெளிப்படுத்தியபோது, கடைசி வீட்டு பங்குஜதம்மா மாமியார் லெஷ்மி பாட்டிதான் ஏதோ எல்லா மொழியும் தெரிந்தவர் போல், அவன் பசிக்கு சாப்பாடு கேட்கிறான் என்பதை உணர்ந்து, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

லெஷ்மி பாட்டி அம்மாவாசை அன்று காக்கைக்கு சோறு வெச்சி கூப்பிட்டும் வராததால், தன் கணவரே இவன் உருவில் வந்து சாப்பாடு கேட்கிறார் என்று சந்தோ­த்தோடு அழைத்து வந்து இலைபோட்டு வடை பாயாசத்தோடு, சாப்பாடு போட்டார். அவனுக்கு துக்காராம் என்ற நாமத்தை சூட்டியதும் பாட்டிதான்.

பசியின் உக்கிரம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அதை புரிந்து கொள்ள கருணை உள்ளம் போதும். லெஷ்மி பாட்டி அவர் வீட்டுக்கு அழைத்து வந்ததிலிருந்து, அவன் இந்த தெருவுக்கு சொந்தக்காரனாகிவிட்டான். பாட்டி வழியாக  எல்லோருக்குமே  அவன் துக்காராமாகிவிட்டான்.

தினமும் லெஷ்மி பாட்டி துக்காராமை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பிட ஏதாவது கொடுப்பதும், பாட்டிலில் தண்ணீர் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஐயர் மாமி வீட்டு காம்பவுண்டு மூலையில் வேப்பமர நிழல்தான் அவனது இருப்பிடம். அழுக்காக அவன் போட்டிருந்த வெள்ளை ஜிப்பாவும், சட்டையும் அவன் வட நாட்டுக்காரன் என்பதை உறுதிபடுத்தினாலும், அவன் பேசும் மொழி இந்தியோ, குஜராத்தியோ, மராத்தியோ இல்லை. புரியாத மொழி ஒரியாவாக இருக்கவேண்டும் என்பது ஐயர் மாமாவோட கணிப்பு. முதலில் துக்காராம், தன் வீட்டு காம்பவுண்டு ஓரத்தில் படுக்கக்கூடாது என்று சொன்னவர், என்ன நினைத்தாரோ பழைய பாய் ஒன்றை அவனுக்கு கொடுத்து படுக்க உதவினார்.

இப்போது, லெஷ்மி பாட்டி ஒரு பழைய எவர்சில்வர் தட்டை கொடுத்து சாப்பிட வெச்சிக்கோ என்று சொல்ல, அதை புரிந்தவனாக, அவன் சொன்ன பதில் பாட்டிக்கு மட்டும் புரியும். தினமும் மருமகளுடன் மல்லுக்கு நிக்கும் பாட்டி, இவனிடம் மட்டும் அதிகமான பாசத்தை காட்டுவது புரியாத புதிர்.

டீக்கடை நாயர், இவனுக்கு தினமும் பேப்பர் கப்பில் ஒரு டீ குடுத்துவிடுவார். பதிலுக்கு அவன் சொல்லும் நன்றி புரியாவிட்டாலும், புன்னகையை பதிலாக்கி தன் வேலையில் மூழ்கிவிடுவார்.
மேரி டீச்சரும் தன் பங்குக்கு, வீட்டில் மிச்சமாகும் டிபன், சாப்பாட்டை கொடுக்க தவறுவதில்லை. கிறிஸ்மஸ் வந்தபோது மேரியும், அவள் கணவர் தியோடரும், அவனுக்கு புது ஜிப்பாவும், சட்டையும் வாங்கி கொடுத்து போட சொன்னபோது, அவனுக்கு பிடித்த உடை இதுதான் போல. ஒருவேளை இவன் சேட்டாக இருப்பானோ என்று டீச்சர் சொன்னபோது எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது உண்மை. இவன் ஒரு கிறிஸ்துவனா இருக்கக்கூடாதா என்று மேரி டீச்சருக்கு மனசுக்குள் ஒரு ஆசை.

அவன் யாராக இருப்பான் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் இருந்தது.  ஜங்­னில் டிபன் கடை நடத்திவரும் ஜெய்ப்பூர் இந்திக்காரர்களுக்கும் துக்காராம் என்ன மொழி பேசுறாருன்னு புரியலன்னு சொல்லிட்டாங்க.

காலையில் கோலமாவு வித்துக்கிட்டுப் போகும் கந்தன், துக்காராமோட நண்பன். அவன் கொடுக்கும் கோலப்பொடியில் துக்காராம் வட்ட, வட்டமா போடும் கோலம் ரங்கோலியா? என்ற ஆராய்ச்சியே உண்டு. கோலம் போட்டுவிட்டு லெஷ்மி பாட்டியிடம் காட்டி அவன் சொல்லும் விளக்கம், அவர்களுக்கு மட்டுமே புரியும்.

தள்ளு வண்டியில் வாழைப்பழம் விக்கும் கணேசனுக்கு துக்காராம் மீது ஒரு பரிவு. தினமும் அவனுக்கு பழம் கொடுக்காமல் போவதே இல்லை.  லெஷ்மி பாட்டி அழுக்கு மூட்டையாகத் திரியும் துக்காராம் குளிக்க தன் வீட்டுக்கேணியிலிருந்து தண்ணீர் இறைத்து குளிக்க சொன்னதால் பாட்டிக்கும், பேரன் ரவிக்கும் சண்டை. எல்லோரையும் வீட்டில் குளிக்க அனுமதிக்க முடியாது என்பது அவன் வாதம். ஆனால், பாட்டி பிடிவாதமாக இது என் வீடு. என் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கனும். வேற ஒருத்தருக்கும் உரிமையில்லைன்னு சொல்லி அடக்கிட்டாங்க. துக்காராம் குளிச்சவுடன் விபூதி, குங்குமம் கொடுத்து அவன் ஒரு இந்துவாக மாற்றி பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய் சாமி கும்பிட வைத்தார்.

ரம்ஜான் நோன்பு ஆரம்பம் முதல் துக்காராமுக்கு நோம்பு கஞ்சியும், சமோசாவும் கொடுத்து உபசரித்தார் ரஹீம்பாய். ரம்ஜான் அன்று ஒரு குல்லா, கைலி, சட்டை குடுத்து போடச்செய்து மசூதிக்கு அழைத்துச்  சென்றார் ரஹீம்பாய். முஸ்லீம் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து ஓடிக்கொண்டிருந்தான் துக்காராம். அவனை ஒரு முஸ்லீமாக மாற்றுவதில், ரஹீம்பாய் முயன்று கொண்டிருந்தார்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்தான் உலகில் வாழ்கிறான். சிரிக்க நல்ல உள்ளம் தேவை. எப்போதும் சிரித்துக் கொண்டும், உற்சாகத்துடனும் காணப்படும் துக்காராம், ஒரு மகிழ்ச்சியான மனிதன். நிறைவுள்ள குறையில்லா மனிதன். அவன் எதற்கும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவனது கடந்த காலம் அவனுக்கு தெரியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஆனால், நிகழ்காலத்தில் நிறைவுள்ள முழு மனிதனாக வாழ்கிறான். தெருக்கோடியில் வாழ்ந்தாலும், ராஜபோக வாழ்க்கை அது. இந்த தெருவுக்கே அவன் ஒரு காவலாளி.

இன்று என்ன ஆச்சி? துக்காராமுக்கு தலையில் சின்ன கதர் குல்லா. கதர்சட்டை, கதர்வேஷ்டி. அவன் சட்டையில் தேசிய கொடியை குத்தியிருக்கிறான். ஓ! இன்று சுதந்திர தினம்.  தெருவில் உள்ள எல்லோருக்கும் சல்யூட் அடித்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று தெளிவாக சொல்கிறானே, இவன் யார்? இந்துவா? லெஷ்மி பாட்டிக்கு சொந்தக்காரனா? முஸ்லீமா? ரஹீம் பாயோட உறவா? கிறிஸ்டீனா? மேரி டீச்சரோடு பந்தமா?
துக்காராம் ஒரு இந்தியன்! சுதந்திர இந்தியாவின் குடிமகன். ஜாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டவன். சுதந்திர இந்திய நாட்டின் குடிமகன்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை உணர்த்தும் பாரத தேவியின் புதல்வன். அதில் தான் அவனுக்கு பெருமிதம்.

நான் யார்? என்பதை சொல்லாமல், சொல்லும் அவனது மொழி புதுவிதம், வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் பாரத தேவியின் தலைமகன் நான் என்பதை அவனது மிடுக்கான நடையும், சுதந்திர இந்திய கொடியை பெருமையுடன் பார்த்துக் கொண்டு, அவன் எல்லோருக்கும் அடிக்கும் சல்யூட், அவன் யார் என்பதை புரியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னோர்களுக்கு கடுமையான நிர்பந்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த நிபந்தனைகளை எல்லாம் தடுத்துவிட்டனர்.
இந்தியாவில் பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்னவென்றால் மதச்சார்பற்ற கொள்கைதான். அனைவரையும் சமமாக மதிக்கும் தன்மையும் உள்ளது. இல்லையயன்றால் நமது நாடு நிலைத்து நிற்க முடியாது. சீனாவில் 125 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 96 கதவிகிதம் பேர் ஒரே குரூப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவில் 105 கோடி பேர் உள்ளனர். இங்கு பல மதங்கள், ஜாதிகள் பண்பாடு குரூப்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை  எல்லாம் ஒன்றுபடுத்தி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது மதச்சார்பற்ற கொள்கையும் அனைவரையும் மதிக்கும் தன்மையும்தான். இந்தப் பாதையை தான் அசோகர், அக்பர் போன்ற பேரரசர்கள் காட்டினர்.

இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக  உள்ளனர். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெரும்பான்மையினருக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பாக மரியாதையுடன் வாழ்வதாக  உணரவேண்டும். அவர்களை துன்புறுத்தக் கூடாது. சிறுபான்மையினரை மதிப்பது என்பது நாகரீக சமூகத்தின் அடையாளம் ஆகும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

தாய்மையின் தியாகம்

- புலவர். இ. அந்தோணி, 
சிறியமலர் மேனிலைப்பள்ளி (ஓய்வு) ஆசிரியர், 
குலமாணிக்கம்


பெண் குடும்பத்தின் விளக்காகிறாள். விளக்கு இருளை விலக்கி பொருளைக் காண்பிக்கிறது. பெண் ஓர் அணுசக்தியைப் போன்றவள். இரண்டு கிலோ அணுபொருள் ஒரு கப்பலை பல வருடங்களுக்கு இயக்கும் வல்லமைக் கொண்டது. அதேபோல பெண்ணில் ஆழ்ந்த சக்தி புதைந்துள்ளது. அந்த சக்தியை இயங்க அனுமதித்தால்தான் குடும்பங்கள் செழிக்கும். கிராமங்களிலும், ஏன் பணி செய்கிற பெண்களும் தங்களைவிட தன் குடும்பம்தான் அவர்களின் எண்ணங்களில் முழுமையாக ஓடிக்கொண்டிருக்கும். அவள் குடும்பத்திற்காக பம்பரமாக சுற்றுகிறாள். எனவேதான், மற்றவர்கள் எழுமுன், பெண் எழுந்து தான் வாழும் வீட்டினை தூய்மைப்படுத்துகிறாள். குடும்பத்தவர்க்கு தேவைப்படும் உடல் சக்தியான உணவை கவனமாக தயார் செய்கிறார். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். கணவர் பணிக்குச் செல்கிறார் என்றால் அவர்களைப்  பற்றிய எண்ணமே அவளின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். எனவேதான் பாரதிதாசனார் பெண்களின் குடும்ப ஈடுபாடு கொண்ட ஆர்வத்தைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.

பள்ளிக்குச் சென்றிருக்கும் பசங்களில்
சிறிய பையன் துள்ளிக் குதித்து 
         மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ என்று
உள்ளத்தில் நினைத்தாள். ஆனால் 
        மூத்தவன் உண்டென்றெண்ணி தள்ளினாள்
அச்சம் தன்னை தாழ்வாரம் சேர்ந்தாள் நங்கை
        ஒட்டடைக் கோலும் கையும் உள்ளமும் விழியும் சேர்த்தாள் 
    கட்டிய சிலந்திக்கூடு கரையானின் கோட்டையயல்லாம்                தட்டியே பெருக்கி தூய்மை தனியரசாளச் செய்து
 சட்டைகள்தைய்ப்பதற்கு தையலைத் தொட்டாள் 

தையல் பெண்களின் ஈடுபாட்டு சக்தியைப் புரிந்துக் கொண்டு அவர்களுடன் நல்லுறவுக் கொண்டு, அவர்களின் முழு வல்லமையையும் வெளிக்கொணர்வதுதான் கணவரின் திறன்.

இல்வாழ்க்கை என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (குறள் 41).
ஒரு பெண் மனைவியாகவும் தாயாகவும் விளங்குகிறாள். இவ்விரண்டு பணிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றவளாக விளங்குகிறாள்.
தாய்க்குப் பிறகு நற்றாரமெனச் சொன்ன 
அவ்வாய்க்கு பெருமை வழங்குகின்றார் - வாய்க்கும் 
கனிமரத்தைப் பேணும் கடமை போல் கொண்ட
மனைநலம் பேணல் மதி - ஜெகவீர பாண்டியனார்.

கனிமரத்தை பேணுதல் போல் மனைவியை போற்றுதல் வேண்டும் என்கிறார் கவிஞர்.

பெண்கள் செய்யும் பெரும் பணிகளை உணராது சிறுமையாக நினைப்பதுதான் இல்லறத்தை வாளாலருக்கும் கொடுமையாகும்.

10. நான் எழுத்தாளன் ஆனேன்

10. நான் எழுத்தாளன் ஆனேன்
- லெயோ ஜோசப்,திருச்சி

   டெலிபிரிண்டர் ஆபரேட்டர் ஆனேன்

நான் ராமகிருஷ்ணா தியேட்டரில் மேலாளராக இருந்தபோது மாலை முரசு நாளிதழில் பிழை திருத்தும் வேலை காலியாக இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் மூலம் கேள்விப்பட்டேன். எழுத்துத் தொடர்பான வேலை ஆயிற்றே! விடுவேனா?

மாலை முரசு மேலாளரைப் போய்ப் பார்த்தேன். அவர் என் படிப்பைப் பற்றி கேட்டு விட்டு, மறுநாள் மாலை முரசின் முதலாளி திரு.இராமச்சந்திர ஆதித்தன் வருவதாகவும், அவரிடம் கேட்டு விட்டு சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். மறுநாள் முதலாளி வந்தார். மேலாளர் என்னை அவரிடம் அறிமுகம் செய்தார்.

சினிமா வேலை நல்ல வேலைதானே! அதை ஏன் விடுகிறீர்கள்? என்று கேட்டார் திரு.இராமச்சந்திர ஆதித்தன். அதில் எதிர்காலம் இல்லை ஐயா என்றேன். வேலையில் சேர்த்துக் கொண்டார். நான் பிழை திருத்துபவன்தான் என்றாலும், நிருபர்கள் இல்லாதபோது சில நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர் என்னை அனுப்புவார்.

ஒரு சமயம் தஞ்சையில் நடந்த மெடிக்கல் காலேஜ் ஆண்டு விழாவிற்கு ஆசிரியர் என்னை அனுப்பினார். அங்கே துளசிராமன் என்றறொரு நிருபர் இருந்தார். அவரைப் போய் சந்தித்தேன். இருவரும் பேருந்தில் மெடிக்கல் கல்லூரிக்குப் போனோம். விழா முடிய நடுச்சாமம் ஆகிவிட்டது. இருவரும் நடந்தே வந்து தஞ்சை பஸ் நிலையம் அடைந்தோம். நான் திருச்சிக்கு வந்தேன்.

மாலை முரசு அலுவலகத்தில், ஓர் இடத்துக்கு நிருபரை அனுப்பினால் செலவுக்குப் பணம் கொடுப்பார்கள். போய் வந்த பிறகு கணக்குக் கொடுக்க வேண்டும். தஞ்சாவூரில் மெடிக்கல் கல்லூரிக்குப் போகும்போது, துளசிராமனே பேருந்துக்கு டிக்கட் எடுத்தார். ஓட்டலில் உணவு வாங்கிக் கொடுத்தார். ஆக, எனக்கு தஞ்சாவூருக்குப் போக வர பேருந்து செலவுதான்.

அதை ஒரு பேப்பரில் எழுதி ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும். அவர் கையயாப்பமிடுவார். அதை நிர்வாகியிடம் காண்பிக்க வேண்டும். அவர் கையயாப்பம் இட்ட பிறகு, காசாளரிடம் கணக்கு கொடுக்க வேண்டும். நான் கணக்கு எழுதி ஆசிரியரிடம் கொண்டு போனேன்.

இரவு சாப்பிடவில்லையா? என்று அவர் கேட்டார். துளசிராமன் வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னேன். டவுன் பஸ்சுக்கு? என்று கேட்டார். அதையும் அவரே கொடுத்தார் என்று சொன்னேன். நான் கணக்கு எழுதிய தாளில் மேலும் அனுமதிக்கலாம் என்றெழுதி கையயாப்பமிட்டார். நிர்வாகி மேலும் சில ரூபாய்கள் எழுதி கையயாப்பமிட்டார். அதிலிருந்து நிருபர்கள் இருந்தாலும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர் என்னை அனுப்புவார்.

அப்படி, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ், ரவிச்சந்திரன், சச்சு, சந்திரகாந்தா, பிரமிளா, பத்மினி, ஜெய்சங்கர், மனோகர் போன்றோரை பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன். தி.மு.க. மாநாட்டில் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்திருக்கிறேன். நடிகர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, பத்திரிக்கை நிருபர்கள் என்றால் காக்க வைக்க மாட்டார்கள். உடனே சந்தித்து விடுவார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது பலமுறை சந்தித்திருக்கிறேன்.

உதவி ஆசிரியர் ஒருவர் மாற்றலாகிப் போனார். அவருக்குப் பதிலாக டெலிபிரிண்டர் ஆபரேட்டர் சந்திரசேகரை நியமித்தார்கள். எனக்கு ஃபிங்கரிங் தெரியும் ஆதலால், என்னை டெலிபிரிண்டர் ஆபரேட்டர் ஆக்கினார்கள். டெலிபிரிண்டர் என்பது பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும். டைப்ரைட்டர் போன்று சற்றுப் பெரிதாக இருக்கும். எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். செய்திகளைத் தமிழில் டைப் செய்ய வேண்டும். அதற்கு சில இலக்கணங்கள் உண்டு. ற என்றால் யூய என்று டைப் செய்ய வேண்டும். ண என்றால் ஹிய என்று டைப் செய்ய வேண்டும். சென்னையில் செய்தி அனுப்பினால் அது திருச்சிக்கும், திருநெல்வேலிக்கும் கிடைக்கும். அதே போல் நாங்கள் செய்தி அனுப்பினாலும் எல்லா ஊர்களுக்கும் கிடைக்கும்.

சித்ரா வெளியீட்டின்போது ஃபாதர் ஜார்ஜ் வந்திருந்தார். தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். கலைக்காவிரியைத் தோற்றுவித்தவர் இவர்தான். எனக்கு அழைப்பு விடுத்தார். கலைக்காவிரி தனிக் கட்டிடத்தில் செயல்படும் முன், ஆயர் இல்லத்தில் ஓர் அறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஹோலிகிராஸ் மடத்தைச் சேர்ந்த அருள்சகோதரி ஒருவரும், செர்வைட் கான்வென்ட்டைச் சேர்ந்த ஓர் அருள்சகோதரியும், முருகேசன் என்றொரு எழுத்தாளரும் அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.         (இன்னும் சொல்வேன்)

11. வெற்றி உங்கள் கையில்...

11. வெற்றி உங்கள் கையில்...

 அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed., M.Sc, M.Phil, PGDCA, NET, Ph.D,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

சிரித்தால் சிறப்பு வரும்

நகைச்சுவை உணர்வு மனித குலத்துக்கு இறைவன் கொடுத்த பெரும் கொடை. ஏன் மற்ற உயிரினங்களுக்கு இது இல்லை? மனம்  என்பது  மனித  இனத்திற்கு மட்டும் தான் உண்டு. இதற்கு ஆதாரம்  சிந்திக்கும் சக்தி. சிந்திக்கும் சக்திக்கு ஆதாரம் பகுத்தறிவு. இந்த  பகுத்தறிவு  மனிதனுக்கு மட்டுமே உண்டு. பகுத்தறிவு கத்தியைப் போன்றது. அதனால் நல்லதையும் செய்யலாம் கெட்டதையும் செய்யலாம். ஒருவருக்கு நல்ல குணம் மேலோங்கி இருந்தால் நல்லவர் எனவும், கெட்ட குணம் மேலோங்கி இருந்தால் கெட்டவர் எனவும் அழைக்கிறோம். இப்படி நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் மனிதர் தனது கெட்ட குணத்தால் பல துன்பங்களுக்கு ஆளாகிறார். அத்துன்பங்கள் மனதில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இறுக்க நிலையில் இருந்து எப்படி மீள்வது? அதற்குத்தான் கடவுள்  மனிதனுக்கு நகைச்சுவை  உணர்வைக் கொடுத்து  இருக்கிறார். ஒருவர் அழகான தோற்றத்தோடு ‘உம்’ என்று இருந்தால் யாரும் அவரை விரும்ப மாட்டார்கள். அதே சமயம் தோற்றப்பொலிவு இல்லாமல் நன்றாக, நகைச்சுவையாக பேசுபவர்களை கவனியுங்கள். அவர்களுக்கு நிறைய நண்பர்கள், தோழர்கள், தோழிகள் இருப்பார்கள். மற்றவர்களை எளிதாக கவர்ந்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள். இனிமையாய் பழகுவதற்கு முதல் ஆயுதம் நகைச்சுவை தான். இதனைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவோர் வாழ்வில் வெற்றி காண்பர்.

நாம் சிரிக்கும்போது 43 தசைகள் இயங்குகின்றன. அதிலும் இரத்த நாளங்கள் அகலப்படுத்தப்படுகின்றன. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன தைரியம், ஆன்மீக பலன், உறவுகள் பலப்படுத்தப்படுதல் போன்றவைகள் நிகழ்கின்றன.

பெரும்பான்மையோர் பல கவலைகளால், தொல்லைகளால் பெரும்பாலும் இறுக்கமாக இருப்பார்கள். மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டார்கள். இவர்களுக்கு வெற்றி கனி கிடைப்பது அரிது.

உங்களுக்கொன்று தெரியுமா? மனித இனங்களிலேயே யூத இனத்திற்கு தான் நகைச்சுவை உணர்வு அதிகம். அவர்களுடைய ஜோக்குகள் புத்திசாலித்தனமாகவும், அர்த்தமுள்ளதாகவும் பிறர் மனதை புண்படுத்தாததாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? உலகத்தில் உள்ள பல இனங்களில் யூத இனம் தான் மிகவும் கஷ்டப்பட்ட இனம். அந்த துன்பத்தையும், துயரத்தையும், மன இறுக்கத்தையும் குறைக்க அவர்கள் கையாண்ட யுத்திதான் நகைச்சுவையுடன் பேசுவது. இந்த  நகைச்சுவை  உணர்வு மட்டும் இவ்லையயன்றால் அவர்கள் இனம் எப்போதோ அழிந்திருக்கும்.

நண்பர்களே! சார்லி சாப்ளின் மற்றும் னிr.பீன் தங்களின் நகைச்சுவை உணர்வு மூலம் உலக அளவில் வெற்றியாளர்களாக வலம் வந்தவர்கள். இவர்கள் தங்களின் நகைச்சுவையால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள். அதேபோல் நம் தமிழ்நாட்டிலும் கலைத்துறையைச் சார்ந்த சந்திரபாபு, தங்கவேல், நாகேஷ், சுருளிராஜன், என்னத்த கண்ணைய்யா, மனோரமா, கோவைசரளா, ஜனகராஜ், குமரிமுத்து, கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், புரோட்டா சூரி, சந்தானம் இவர்கள் தங்களின் நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் குடிகொண்டவர்கள். இவர்களின் நகைச்சுவை உணர்வே வெற்றியின் ரகசியமாகும். பட்டிமன்றப் பேச்சாலும், தங்களின் நகைச்சுவை உணர்வாலும் மக்கள் மனதை கொள்ளைகொண்ட நகைச்சுவை பேச்சாளர்களான ‘நகைச்சுவை தென்றல்’ திண்டுக்கல் ஐ.லியோனி, சாலமன் பாப்பைய்யா, சுகிசிவம், ராஜா, பாரதிபாஸ்கர் போன்றவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

கலைத்துறையில் மட்டுமல்ல நம் அன்றாட வாழ்வில் பள்ளிகள், கல்லூரிகள், குடும்பம் போன்ற இடங்களிலும் கூட தங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் நகைச்சுவை உணர்வு தான் என்று கூறுகிறார்கள்.

வீடுகளிலும் மக்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில் நகைச்சுவை  உணர்வை பெற ஆதித்யா, சிரிப்பொலி, போகோ, நிக் போன்ற தொலைக்காட்சி சானல்களை விரும்பி பார்க்கிறார்கள்.

நாமும் நம் அன்றாட வாழ்வில் மன இறுக்கத்தை  குறைத்து  நகைச்சுவை  உணர்வை  அதிகப்படுத்தி வெற்றியாளர்களாக  வலம் வருவோம். “உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை” ‡ சார்லி சாப்ளின்.
நாநலம் என்னும் நலனுடமை அந்நலம்
          யாநலத்து உள்ளதூம் அன்று (குறள் 641)

உயிரளித்துப் பெற்ற உயிரான சுதந்திரம்

உயிரளித்துப் பெற்ற  உயிரான சுதந்திரம்

- அருள்சகோ. விமலி , 
இதயா கல்லூரி, கும்பகோணம்

300 வருட கால தர்ம யுத்தம்
விடியலின் தேடலில்
விடை கிடைத்த நாள்
வரலாற்றின் காவியத்தில்
சுதந்திரத்  திருவிழா!
எத்தனை முறை திருப்பிப் பார்த்தாலும்
திரும்ப வாரா தியாக தீபங்கள்!
உணர்வுப் போராட்டங்கள்!

திறன்களின் குவியல் பாரதம்!
பண்பாட்டின் அடையாளம் பாரதம்!
இறையுணர்வின் ஆன்மா பாரதம்!
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
பொருந்தா இணை சக்கரங்களாய்
கொண்டு சுழன்றது பாரதம்
வளங்களின் புதையல் பாரதம்
பிரிவினைகளின் குவியல் பாரதம்!

வணிக மேகமாய் சுரண்ட வந்ததே!
வஞ்சகமாய் தஞ்சமடைந்து
வரியை அவன் விதித்தான்!
வினையை நாம் அறுத்தோம்
வீழ்ந்தோம் வீனரின் வலையிலே
நம் வளங்களில் நரிக் கூட்டம்
நயமாக நஞ்சை விதைத்து
ஏமாற்றினான் எங்கிருந்தோ வந்தவன்

அடிமைகளாய் சொந்த மண்ணிலே!
அவனின் அதிகார ஆதிக்கத்தில்
அடிமை விலங்குகளாய் நடத்தியதில்
கால் நடைகளுக்கும் கண்ணீர்!
கல் நெஞ்சத்தோருக்கு பன்னீர்!
தாமதமாய் தந்திரத்தை  உணர்ந்ததில்
உரிமையை உலகறிய பெற்றிட்டோம்
உருவிழந்த சுதந்திரத்தை யாசித்தே.
யுத்தக் களத்தில் குதித்தோம்
இளம் போராளிகள், முதிர் போராளிகள்
பட்டியலிட்டாலும் பக்கங்கள் போதா
வெளிச்சத்தில் தெரிந்தவர் பாதி!
வெளிச்சத்தில் தெரியாதவர் மீதி!
உறக்கம், உறவுகள், உடைமைகள்,
சுகம், குடும்பம், செல்வம் எல்லாம்
சுதந்திர தாகத்தில் கரைந்து விட்டதுவே
.
சுதந்திர வேட்கை தணிக்க தரணியிலே!
யுத்தப் பணி நித்தம் செய்தனரே
வாழ்ந்தாலும் தாய் நாட்டிலே!
வீழ்ந்தாலும் தாய் மண்ணிலே!
தன்னை நினையாது வலியச் சென்று
வலிகள் பெற்று தந்ததுவே வீர சுதந்திரம்
நாம் சுவைக்கும் வேள்வியின் சுதந்திரம்
வசதியான தருணங்களில் கிடைத்ததல்ல

சவாலான சர்ச்சைக்குரிய தருணங்களை
சந்தித்த சாமானியரின் சாதனையே
உரிமையின் சுதந்திரத்தை மெய்ப்பித்து
உயிரைக் கொடுத்து உரமாயினர்
அவ்வெழுச்சியின் காவியத்தின் சுவாசிப்பே
பாரதத்தின் பசுமையான பக்கங்கள்
கடல்கள், நதிகள், நீர்நிலைகள், ஏரிகள்
செழித்து வளர்ந்த தரமான உண்மைகள்

விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி
நவீன மருத்துவம், மூலிகை மருத்துவம்
ஓலைச்சுவடியில் அர்த்த சாஸ்திரம்
கனிமச் சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம்,
தங்கச் சுரங்கம், பெட்ரோலியம், தாதுக்கள்
பாரதத்தின் பெருமை எல்லாத் துறைகளிலும்
பட்டொளி வீசி பாரெங்கும் பறந்ததுவே

இனம், நிறம், பால், மொழி, மதம்,
அரசியல், தேசீயம், சமூகம், சொத்து
பாகுபாடுகள் இன்றி உரியச் சுதந்திரத்தை
உவப்புடன் தருவதே  மானிடச் சுதந்திரம்.
சுதந்திரம்  என்ற சமத்துவ உரிமையானது
வெறும் சடங்கு முறையானதோ
வெறுமையான விளம்புகையோ அல்ல, அது
உறுதியான  உழைப்பின் சுதந்திரமாம்
அணுகுமுறை அனுபவங்கள் அகிலத்தின் உறவுகளில்
அனுதின இலட்சியங்களில் சுதந்திரத்தை  வாழ்வோம்.

திருப்பலி விளக்கம் 7. தொடக்கச் சடங்கு (2)

திருப்பலி விளக்கம்
7. தொடக்கச் சடங்கு (2)

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

(சென்ற மாத சிந்தனையில் தொடக்கச் சடங்கில் அருள்பணியாளர் திருப்பலிக்கு குழுமியிருக்கும் நம்பிக்கையாளரை வாழ்த்தும் பாடங்களுக்கு விளக்கங்களோடு முடித்துக் கொண்டோம். இந்த சிந்தனையில் எஞ்சியிருக்கும் தொடக்கச் சடங்கில் இடம்பெறும் பகுதிகள் பற்றிய விளக்கம் கொடுக்க முற்படுவோம்).

சுருக்கமான முன்னுரை:

அருள்பணியாளர் மக்களை வாழ்த்திய பின், அவரோ, திருத்தொண்டரோ அல்லது பொதுநிலையினரில் ஒருவரோ மிகச்சுருக்கமான முன்னுரையை வழங்கி அந்நாளின் திருப்பலிக்கு நம்பிக்கையாளரைத் தயார் செய்கிறார்.
(பொது பாடம் 50 : 124)
The Priest (or antother minister) may very briefly introduce the faithful to the mass of the day. (ordo Missae cum Populo, p.3)

குறிப்பு : 
வேண்டுமென்றே மேலே உள்ள மேற்கோல் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுகிறது. இது நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கும். மொழிபெயர்த்தால் மேலே தமிழில் கொடுத்த திருப்பலி நூலின் பொது படங்களிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றாது.

விளக்கவுரையாளர்: 

இவர் தேவைக்கு ஏற்ப நம்பிக்கையாளருக்கு விளக்கவுரைகள், அறிவுரைகள் சுருக்கமாக வழங்குவார். இதனால் திருப்பலி கொண்டாட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவர்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுவார். விளக்கவுரையாளரின் குறிப்புகள் நன்றாகவும், சுருக்கமாகவும் தயாரிக்கப்படவேண்டும். விளக்கவுரையாளர் தம் பணியை நிறைவேற்றும்போது மக்கள்முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் அவர் வாசக மேடையைப் பயன்படுத்தக்கூடாது (பொது பாடம் எண் 105 / ஆ).

இன்று நடைமுறைகளில் நடப்பதற்கும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்குமிடடையே முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே திருப்பலியின் முன்னுரையைச் சரியா புரிதல் அவசியமாக இருக்கிறது.

திருப்பலிக்கு முன்னுரை வழங்குவதும், விளக்கவுரை அளிப்பதும் வெவ்வேறு பணிகள். இதனால்தான் இவர்களுக்குரிய தகுந்த இடம் வெவ்வேறானது. திருப்பலிக்கு முன்னுரை கொடுக்கும் அருள்பணியாளர் தமக்கென்று குறிக்கப்பட்ட இருக்கையில் இருப்பார். அவர் பொதுநிலையினராக இருந்தால் பலிபீட முற்றத்திலிருக்கும் அறிக்கை மேடையில் இருப்பார். ஆனால் விளக்கவுரையாளர் இரண்டாவது மாதிரி படிவத்தின் (Second Typical Edition 1975) பொது படிப்பினைப்படி பலீபீட முற்றத்திற்கு (Sanctuary) வெளியே நிற்பார். இந்த குறிப்பு சற்று மாற்றப்பட்டு திருத்தப்பட்ட மூன்றாவது மாதிரி படிவத்தின் (Revised Third Typical Edition 2008) பொது படிப்பினைப்படி “மக்கள் முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் வாசக மேடையைப் பயன்படுத்தக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தக்க இடம் பலிபீட முற்றத்திற்கு வெளியேயும் இருக்கலாம். விளக்கவுரை மேடை என்று நாம் குறிப்பிட்டுள்ள இடமாகவும் இருக்கலாம் என்பது எமது கருத்து. நாம் இங்கு கவனிக்கக் கூடியது திருப்பலிக்கு அளிக்கப்படும் முன்னுரையும், திருப்பலி தொடக்கத்திற்குக் கொடுக்கப்படும் விளக்கவுரையும் வெவ்வேறு பணிகள் ஆகும். குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

நாம் மேலே கொடுத்த மேற்கோள்களிலிருந்து புலப்படும் உண்மை என்னவென்றால், திருப்பலிக்கு முன்னுரையாக இருந்தாலும் சரி, அன்றைய திருப்பலிக்க விளக்கவுரையாக இருந்தாலும் சரி அவை மிகச்சுருக்கமானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். மறையுரையாக மாறிவிடக்கூடாது. பல சமயங்களில் மக்களையும், அருள்பணியாளர்களையும் அமரச்செய்துவிட்டு எழுதிவைத்திருக்கும் பல பக்கங்கள் அடங்கி அடுக்கு மொழி உரையை வாசிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மூன்றாவதாக இந்த முன்னுரை அன்றைய விழாவில் மையமாக இழையோடிக் கொண்டிருக்கும் மையக்கருத்தை (நன்றி, துக்கம், மகிழ்ச்சி, மனத்துயர்) துல்லியமாகச் சுட்டிக்காட்டி குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை உசிப்பிவிட்டு உணர்வோடும் (உலிஐவிஉஷ்லிற்வி), செயல்முறையிலும் (ழிஉமிஷ்ஸe) பங்குபெற உதவும் விதமாக அமைய வேண்டும். வெள்ளி, பொன் விழாவாகக் கொண்டாடும் நாயகர்களையோ, வார்த்தைப்பாடு புதிப்பித்தபின் நன்றி செலுத்தும், இருபால் துறவிகளையோ அடக்கத் திருப்பலியில் இறந்தவரைப் பற்றியோ புகழாரம் சூட்டும் நேரமல்ல இது. இத்தகைய செயல் அறவே அகற்றப்பட வேண்டும். இது திருப்பலிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

மனத்துயர்ச் சடங்கு :

தொடக்ககால திருஅவையில் கொண்டாடப்பட்ட வழிபாடு பற்றிய தகவல்களை நமக்குத் தொகுத்துக் கொடுப்பது “திதாக்கே” (ம்ஷ்dழிஉஜுe) என்னும் நூலாகும். இதில் மனத்துயர் சடங்கு பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆண்டவர் நாளில் ஒன்றுகூடி அப்பத்தைப் பகிர்ந்து நன்றி கூறுங்கள். ஆனால் முதலில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்; இவ்வாறு உங்கள் பலி தூய்மையானதாகும்” (14 : 1)

எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டுமானாலும் ‘தயாரிப்பு’ தேவை. திருப்பலியில் பங்குபெற தயாரிப்பு தேவைப்படுகிறது. ஆண்டவரோடு உறவுக்கொள்ள மனத்தூய்மை வேண்டும். மக்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தி அழுது, தீய வழியை விட்டகல அழைக்கப்படுவதும், அதற்கேற்ப அவர்கள் மனம்மாறி இறைவன் பக்கம் திரும்புவதும் விவிலியத்தில் பரவலாகக் காண்கின்ற நிகழ்வாகும். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன (காண் யோவே 1 : 13 ‡ 15; நீதி 10 : 10 - 15).

இறைவனோடு ஒப்புரவாக இது இன்றியமையாதத் தேவை. எனவே பலி தொடங்குமுன் சிறிது மெளனமாகயிருந்து நாம் பாவிகள் என அவர் திருமுன் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். இதுவே மனமாற்றத்துக்கு முதற்படி; மன்னிப்பு கோருவதற்கும் அடிப்படை; நட்புறவை உருவாக்கி வளர்ப்பதற்கு அடித்தளம்.

எப்பொழுது இம்மனத்துயர் சடங்கு நடைபெறவேண்டும் என்பதைப் பற்பல வழக்கங்களையும், கருத்துக்களையும் ஆராய்ந்து, திருப்பலியின் தொடக்கத்திலேயே இடம் பெறுவது நல்லது என முடிவு செய்யப்பட்டது. பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவன்பால் உள்ளத்தைத் திருப்பி, அவரோடும், அயலாரோடும் ஒப்புரவான நிலையில் இறைவார்த்தையைக் கேட்கவும், காணிக்கை செலத்தவும், திருவிருந்து அருந்தவும் இது நம்மை தகுதியுடையவராக்குகிறது.

நம்பிக்கையாளர்களை பாவங்களுக்கு மனம் வருந்த அழைத்து சிறிது மெளனத்திற்குப் பின் பாவ அறிக்கைக்க மூன்று வித பாடங்களை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வகை “எல்லாம் வல்ல இறைவனிடமும்” என்று தொடங்கும் பாவ அறிக்கையாகும். இது முடிந்தது அருள்பணியாளர் எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக என்று சொல்கிறார். இது “ஒப்புரவு அருள் அடையாளத்தில் சொல்லப்படும் வாய்ப்பாட்டுக்கு சமமானதல்ல; இந்த செபத்திற்கு ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றல் கிடையாது” (எண் 51) என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் கூறப்பட்டிருப்பது கவனிக்க வேண்டியது. எனவே மக்கள்மீது கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு இதை சொல்வது நல்லதல்ல. இது எதிர்விளைவை நாளடைவில் கொண்டுவரும். இந்த செபம் மூன்று வகை பாவ அறிக்கைக்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வகை பாவ அறிக்கை மிகச் சுருக்கமானது.

அ. ப : ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பதில் : ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ. ப : ஆண்டவரே எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில் : உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும்.
பலருக்கு இது புதிதாகத் தோன்றலாம். ஏனெனில் இதுபற்றி கேள்விப்படவில்லை. திருப்பலியில் பயன்படுத்தியதுமில்லை. அவ்வப்போது இந்த முறையையும் அருள்பணியாளர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாவது வகை பாவ அறிக்கை பின்வருவாறு :
அ. ப : உள்ளம் நொருங்கி வருந்துவோரை நலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே இரக்கமாயிரும்.
பதில் :  ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ. ப : பாவிகளை தேடிவந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் :  கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அ. ப : தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து, எங்களுக்காகப் பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

குறிப்பு: இதே போன்று மற்றும் நான்கு வகை பாவ அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கலாம். இவை இலத்தீன் மாதிரி படிவத்தில் காணப்படவில்லை. எனவே புதிதாக வெளிவர இருக்கும் திருப்பலி நூலிலும் இவை விடப்பட்டிருக்கும்.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ (Kyrie):

“பாவத்துயர்ச் சடங்கில் ஏற்கனவே இடம் பெறாவிடில், “ஆண்டவரே, இரக்கமாயிரும்” என்னும் இறைவேண்டல் இப்பொழுது சொல்லப்படும்” (திருப்பலி நூல் எண் 7).

‘ஏற்கனவே இடம் பெறாவிடில்’ என்பது முதல், இரண்டாவது வகை பாவ அறிக்கைகளைக் குறிக்கின்றது. எனவே அருள்பணியாளர் பாவ மன்னிப்பு செபத்தைச் சொல்லிய பின் இதைச் சொல்ல வேண்டும்.

ஒருசில அருள்பணியாளர் பாவ அறிக்கைக்குப் பின் மன்னிப்பு மன்றாட்டு சொன்னபின் ஏன் மீண்டும் ஆண்டவரின் இரக்கத்தை கேட்கவேண்டும் என்று கேட்பதோடில்லாமல் இதைவிட்டு விடவும் செய்கிறார்கள். இது சரியல்ல.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ என்னும் பாடல் இரு வகையாக திருப்பலியில் இடம் பெறுகிறது. ஒன்று மனம் மாற்ற முயற்சியின் இறுதியில் அதன் மலர்ச்சியாக இப்பாடல் எழலாம்; அல்லது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே அதை அமைத்துக் கொள்ளலாம். இங்கு இது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே இடம் பெறுகிறது.

மேலும் இது இறைவனின் இரக்கத்தைக் கோரும் மன்றாட்டு மட்டுமல்ல, அவரைப் போற்றலும் ஆர்ப்பரித்தலுமாகும். முற்காலத்தில் திருப்பலியின் தொடக்கத்திலிருந்த  தொடர் பிரார்த்தனையின் தொடக்கமே இது. இதுபற்றி திருப்பலி நூலின் பொது படிப்பினை சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. “இப்பாடல் இறைவனைப் புகழ்வதாகவும் அவருடைய இரக்கத்தை இறைஞ்சி மன்றாடுவதாகவும் இருப்பதால், இது வழக்கமாக எல்லாராலும் பாடப்படும்” (எண் 52). இறைவனைப் புகழ்வது என்றமுறையில் இது வானவர் கீதத்துக்கு முன்னோடியாகவும் அமைந்திருக்கிறது எனலாம்.

முடிவுரை:

மனத்துயர் முயற்சியின் பயனாக அற்ப பாவங்கள் மற்றும் குறைபாடுகள் (imperfections) நீங்குகின்றன;  உள்ளம் இறைவழிபாட்டிற்குப் பக்குவமடைகிறது. கூடியிருக்கும் நம்பிக்கையாளர் அனைவரோடும் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றித்து திருப்பலியை ஒப்புக் கொடுக்க தயாராகிறார்கள். 
(தொடரும்).

Monday 25 July 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

5. அன்பின் வடிவம் பணிவு
 அருள்பணி. மகுழன்
பூண்டி மாதா தியான மையம்

அரசர் ஒருவர் இருந்தார். அவர் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தார். மக்களை வீணாக சிறையில் அடைப்பதும் அவர்களை துன்புறுத்துவதும் அவர் பொழுதுபோக்கு. ஒருமுறை அவர் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். ஒரு புள்ளிமானைக் கண்ட அவர் அதனைத்  துரத்திச் சென்றார். ஆனால் அந்த மான் அவரைவிட வேகமாக ஓடிவிட்டது. வழிதவறிய அவர் காடடுவாசிகளிடம் மாட்டிக்கொண்டார். காட்டுவாசிகளின் மொழி அவருக்குப் புரியவில்லை. தான் அரசர், அதிகாரம் மிகுந்தவர் என்பதைச் சுட்டிக் காட்ட அவர்களிடம் கோபமாகப் பேசினார். அவர்களை அடிக்க முற்பட்டார். காட்டுவாசிகளுக்கு கோபம் வந்துவிட்டது. அவரை அடித்துத் துவைத்தனர். ஒருவாரம் அவருக்கு உணவு கொடுக்கவில்லை. பசியால் வாடிய அவர் குரலைத் தாழ்த்தினார். அன்பாகப் பேச ஆரம்பித்தார். காட்டுவாசிகளின் கோபம் தணிந்தது. அவருக்கு வேண்டிய உணவைக் கொடுத்தனர்.

ஒரு முறை காட்டுவாசிகள் மத்தியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. தன் ஆடையில் இருந்த விலை உயர்ந்த மாணிக்கக் கற்களை மாலையாகக் கோர்த்து அந்த தம்பதியினருக்கு அணிவித்தார். அதைக் கண்ட காட்டுவாசிகளின் மனம் மாறியது. காட்டுக்குதிரை ஒன்றை பிடித்து நன்கு பழக்கப்படுத்தி அரசரிடம் கொடுத்தனர். அவரும் மனமாற அவர்களை வாழ்த்திவிட்டு அரண்மனைக்குச் சென்றார்.

அரசரிடம் இருந்த ஆணவம் மறைந்ததால் மக்களைக் கொடுமைப்படுத்துவதற்குப் பதிலாக மக்களுக்கு நற்பண்புகளால் பணியாற்றினார். அரசரின் மனமாற்றத்தைக் கண்ட மக்களும் அரசரை அன்பு செய்ய ஆரம்பித்தனர்.

பணிவு என்பது ஓர் அன்பின் பண்பு. அன்பு செய்வதில் பல வடிவங்கள் இருக்கின்றன. நாம் ஒருவரை அன்பு செய்யும் போது அவருக்கு நன்மை செய்கிறோம். அவரைப் பாராட்டுகிறோம். அவரிடம் பொறுமை காக்கிறோம். அவரை மன்னிக்கிறோம். அவருக்கு ஆறுதல் கூறுகிறோம். அதைவிட அவரிடம் பணிவாக நடந்து கொள்கிறோம். நாம் எல்லாரிடமும் பணிவையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தி பிறரை அன்பு செய்கிறோம் என்பதை தெளிவுபடுத்துவோம்.

அன்பைப் பற்றிய சில சிந்தனைகள் :

1. உலகில் சிலர் பணத்தைத் தேடுகிறார்கள்.
சிலர் நேரத்தைத் தேடுகிறார்கள்
சிலர் அமைதியைத் தேடுகிறார்கள்
சிலர் இன்பத்தைத் தேடுகிறார்கள்
சிலர் நண்பர்களைத் தேடுகிறார்கள்
சிலர் உறவுகளைத் தேடுகிறார்கள்
ஆனால் உண்மை என்னவென்றால் அடிப்படையில் அனைவரும் அன்பைத் தேடுகிறார்கள்.

2. நாம் சில நேரங்களில் அன்பு செய்வதை அன்பு செய்கிறோம். சில நேரங்களில் அன்பு செய்யப்படுவதை அன்பு செய்கிறோம். எல்லாரும் உங்களை அன்பு செய்ய வேண்டுமா? அதற்கு ஒரே வழிதான் இருக்கு. பிறரை அன்பு செய்யுங்கள்.

3. எப்போதும் அன்பு செய்யுங்கள். எல்லாரையும் அன்பு செய்யுங்கள். காரணம், அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக அல்ல, நீங்கள் நல்லவர்கள் என்பதற்காக.

4. கவலையைக் கைவிடுங்கள். புன்னகையை அதிகரியுங்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறருக்கு செவி கொடுங்கள். மன்னிப்பை வழங்குங்கள். சுருக்கமாகச் சொன்னால் வெறுப்பை அகற்றுங்கள். அன்பை அணிந்து  கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியைக் கைகொள்வீர்கள்.

5. நீங்கள் ஒரு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உறங்கச் செல்லுங்கள். நீங்கள் ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உல்லாசப்பயணம் செல்லுங்கள். நீங்கள் ஒரு மாதம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? திருமணம் செய்யுங்கள். நீங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? பிறரை அன்பு செய்யுங்கள்.

6. சில அழகான விட யங்கள் :

பூக்கள் : குழந்தையின் சிரிப்பு.
வானவில் : மழையின் போது மண் வாசனை
காலைப்பனி : அருவி
இனியச் சொற்கள்: இவை எல்லாவற்றையும்விட மிகவும் அழகானது எல்லோரிடத்திலும் அன்பு.அன்பு செய்ய எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் அன்பு செய்யுங்கள். ஆனால் அன்பு செய்ய எப்பொழுதும் முடியும் என்பதையும் மனதில் வையுங்கள் - தலாய் லாமா. (தொடரும்)

காந்திஜியையும் தொட்ட இறை இரக்கம்

காந்திஜியையும் தொட்ட இறை இரக்கம்

இந்தியா என்றால் காந்தி. காந்தி என்றால் இந்தியா. இந்தியாவும், காந்தியும் நாணயத்தின் இருபக்கங்கள். ஆகஸ்ட் 15 அன்று நாம் கொண்டாடும் பாரதத் திருநாட்டின் விடுதலை நாள் விழாவில் மகாத்மா காந்தியிடம் நாம் காணும் இறை இரக்கச் செயல்பாட்டினை சிந்தித்துப் பார்ப்பது மிகவும் இனிய காரியமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியின் இரயில் பயணம்: 

நிகழாண்டு ஜீலை 07 முதல் 11 வரை பாரதப் பிரதமர் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, டன்சானியா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். ஜீலை 09 அன்று பீட்டர்மாரிட்ஸ் ‡ பார்க்கிலிருந்து ஜோகன்ஸ்பர்க் வரை வரலாற்றுச் சிறப்பு மிக்க இரயில் பயணம் மேற்கொண்டார். அது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1893ஆம் ஆண்டு முதல் வகுப்பில் பயணிக்கக் கூடிய கட்டணச் சீட்டுப் பெற்றிருந்தாலும் இனவெறியின் காரணமாக ஓடும் இரயிலிலிருந்து வெள்ளையர்களால் கீழே தள்ளி விடப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தது.

இந்த மனிதாபிமானமற்ற நிறவெறிச் செயல்பாடுதான் உலக வரலாற்றையே புரட்டிப் போடும் புதிய வாழ்க்கைத் தத்துவம் மலரக் காரணமாக அமைந்தது. இவரைப் பின்பற்றி 30 ஆண்டு இறைக் கொடுமைகள் அனுபவித்த நெல்சன் மண்டேலா அவர்கள் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க காரணமாக அமைந்தது. பிறரைத் துன்புறுத்தாது, மனவலிமையோடு எதேச்சதிகாரமாகச் செயல்பட்ட பிரிட்டிஷாரின் ஆட்சியினைத் தூக்கி எறிந்த வாழ்க்கைத் தத்துவம். அதுவே அகிம்சை என்னும் வாழ்க்கை நெறி.

கிறிஸ்துவைப் பற்றிய காந்திஜியின் புரிதல்:

காந்தியும், கிறிஸ்தவமும் (றூழிஐdஜுஷ் ழிஐd ளீஜுrஷ்விமிஷ்ழிஐஷ்மிதீ) என்னும் புத்தகம் இராபர்ட் (யூலிணுerமி சியியிவிணுerஆ) எல்ஸ்பர்க் என்பவரால் பதிப்பிக்கப் பெற்றது. இந்த நூலில் கீழ்க்காணும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1. காந்தி பைபிள் முழுவதையும் படித்தறிந்தவர்.

2. பழைய ஏற்பாட்டு நூல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிலும் எண்ணிக்கை நூலினை அவர் விரும்பவே இல்லை.

3.  புதிய ஏற்பாட்டின் நூல்களை நன்கு புரிந்து கொண்டார்.

4. மத்தேயு நற்செய்தி பிரிவு 5இல் காணப்படும் மலைப்பொழிவு அவரின் மனம் கவர்ந்த பகுதியாகும். இவண் காணப்படும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழிவாங்கும் நிலை மாறி வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் காட்டு (மத் 5 : 38 - 42) என்னும் அறிவுறுத்தல் காந்தியின் மனதில் மாற்றுச் சிந்தனையினை விதைத்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை போன்ற வாழ்வின் தத்துவங்களுக்கு இப்போதனையே அடித்தளமாய் அமைந்தது.

5. இதனை ஆழ்ந்து தியானித்த வேளையில் தான் ஏன் கிறிஸ்தவத்தினை தழுவக் கூடாது? என்ற கேள்வி தம்முள் உதயமானதாக தமது நண்பர் மில்லி போலக் என்பவரிடம் ஒருமுறை கூறியுள்ளார்.

6. மாற்கு 10 : 17 - 22 செல்வந்த வாலிபரோடு இயேசு நடத்திய உரையாடல். இதில் இயேசுவின் ஆளுமையும், உலகியல், பொருளியல் மற்றும் உளவியல் தெளிவும் நன்கு புலப்படுகிறது. செல்வத்தின் மீதுள்ள அதிகப் பற்றுதல் காரணமாக நிறைவாழ்வினைக் குறைவாக்கும் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கின்றார் இந்த வாலிபர்.

7. ஏழ்மைக் கோலம், அவமானத்தின் சிலுவை மரணம், சாத்வீகப் போக்கு, விளிம்பு நிலை மக்கள் மீது கொண்டிருந்த கரிசனம் போன்றவை இயேசுவின் சிறப்புப் பண்புகள். மேலும் பகைவரிடம் அன்பு, சபிக்கிறவருக்கு ஆசி, வெறுப்பவருக்கு நன்மை, தூற்றுவோர் மற்றும் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுதல் ஆகிய படிப்பினைகள் காந்தியை இயேசுவுக்கு அருகில் வாழச் செய்தன.

8. தனது இந்து சமயத் தோழர்களுக்கு ஓர் அறிவுரையாக காந்தி என்ன கூறினார் தெரியுமா? நீங்கள் பக்தியோடு இயேசுவின் போதனைகளைத் தெரிந்து கொள்ளவில்லையயன்றால் நீங்கள் நிறைவைக் காண முடியாது என்பதுதான்.

9. உலகின் பல தலைவர்களுள் எனது இதயத்தினை அதிகம் ஆக்கிரமித்துள்ளவர் இயேசு ஒருவரே. இவரின் போதனைகளே என்னுள் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

10. உண்மைக்காக உயிர்நீத்த இயேசுவே அகிம்சையின் வழிகாட்டி. இவர் மனிதகுலம் கண்டிட்ட மாபெரும் போதகர். சத்தியாக்கிரகிகளின் தலைவரும், முன்னோடியும் இயேசு ஒருவரே.
இரக்கம் என்பது இறைவனின் திருப்பெயர்:

தட்டு நிறைய தங்கமும், வைரமும் தந்தால்கூட நான் எடுக்க நினைப்பதை எடுப்பேன் என்றாராம் ஹிட்லர். வரலாறு என்பது வெற்றி பெற்றோரின் சாசனம். அங்கே புகழ், வெற்றி ஆகிய இவைகளால் வெற்றி பெற்ற மக்களுக்கு மணி மகுடம் சூட்டப்படுகிறது. ஆனால் விவிலியம் காட்டும் வரலாறு மாறுபட்டது.

நாம் துன்பத்தையும், அநீதியையும் கண்டு கூக்குரலிட்டு போர் புரிய மல்லுக்கு நிற்போம். ஆனால் ஏழைகளையும், எளியவரையும் நேசிக்கும் இறைவனோ ஆயுதம் ஏந்திப் போராடும் போர்க்கடவுளாகவே செயல்படுகின்றார் என்று ஆபிரகாம் எச்.எஸ்ஸல் என்னும் யூத விவிலிய ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

மன்னிப்பே வரலாற்று இறைவனின் வள்ளல் குணம் என்பது சிம்சோன், தாவீது, விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஆகியோரின் வரலாறு மூலம் அறிந்து கொள்கிறோம்.

எளியோரும், வறியோரும், கடைநிலையில் இருப்போரும் வரலாற்றின் அங்கம், அவர்கள் மறக்கப்படக்கூடாது. நீதியில்லா இரக்கம் வலுவற்றது. என்பது கர்தினால் வால்டேர்காஸ்பர் என்பரின் கூற்று. இறைநீதி என்பது இறை இரக்கத்தின் மறுபக்கம். நீதிக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு கூக்குரலிலும் இறை இரக்கம் இழையோடுகின்றது.

இறை இரக்கத்தினை வாழ்வாக்கிய மகான்:

‘தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்’ (லூக் 6 : 36) என்ற இயேசுவின் வார்த்தையினை வாழ்வில் செயல்படுத்திய மகான் இவர். தென்னாப்பிரிக்காவில் 1906, 1908, 1913 ஆகிய ஆண்டுகளில் வெள்ளையருக்கெதிராக இவர் புரிந்த போராட்டங்கள் இந்திய விடுதலைப்போருக்கு முன்னோட்டமாக அமைந்தன.

தாய்நாடு திரும்பியதும் 18.03.1919 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சிட்னி ரவ்லட் சட்டத்தினைக் கடுமையாக எதிர்த்தார். கருப்புச் சட்டம் எனப்பட்ட இச்சட்டத்தின் மூலம் போலீஸ், தான் சந்தேகப்படும் எவரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைது செய்யலாம். கைதியின் கருத்து கேட்கப்படாது தண்டனை அளிக்கப்படும். சத்தியாக்கிரகம் மூலம் இந்தியா முழுவதும் இதற்குக் கடும் எதிர்ப்பும், ஒத்துழையாமையும் நடைபெற்றது. இதன் விளைவாக 1919இல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது.

1924இல் தீண்டாமையினை ஒழிக்க காந்தியடிகள் வைக்கம் போராட்டத்தினைத் தலைமையேற்று வழிநடத்தினார். 1930, மார்ச் 12இல் தண்டியாத்திரை மூலம் உப்புக்காய்ச்சப்பட்டது. 1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் இந்தியா போர்க்கோலம் பூணாது அகிம்சை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக 1942ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் இயக்கம் நாடு முழுவதும் பரவி வெள்ளையரை விரட்டியடித்தது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரிட்டிஷாரின் கொடி இறக்கப்பட்டு மூவர்ணக் கொடி வானில் பட்டொளி வீசிப் பறந்தது.

இயேசுவின் உண்மைச் சீடன் & இறை இரக்கத்தின் மகான்:

மகாத்மா காந்தி திருமுழுக்குப் பெறாத ஓர் உண்மைக் கிறிஸ்தவர். சிலுவையணியாத இயேசுவின் சீடர். இறை இரக்கத்தின் ஆன்மீகக் கடமைகளாகிய அவநம்பிக்கையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குதல், அறியாமையில் இருப்போருக்கு அறிவொளியூட்டுதல், பாவிகளை மனம் மாற அறிவுறுத்தல், துன்புறுவோரைத் தேற்றுதல், பிறர் இழைத்த தீமைகளை மன்னித்தல், தீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மரித்தோர் வாழ்வோருக்காகச் செபித்தல் போன்ற பண்புகள் இவரின் வாழ்வில் மிளிர்கின்றன.

மேலும் இரக்கத்தின் சமூகக் கடமைகளாகிய பசித்தோருக்கு உணவளித்தல், தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல், ஆடையின்றி இருப்போருக்கு ஆடை அணிவித்தல், அன்னியரை ஏற்றுக்கொள்ளுதல், நோயாளிகளைக் குணப்படுத்துதல், சிறையிலிருப்போரைச் சந்தித்தல் மற்றும் இறந்தோரை நல்லடக்கம் செய்தல் போன்ற காரியங்களிலும் ஈடுபாட்டோடு செயல்பட்டார்.


இன்றும் ஒலிக்கும் விடுதலைக் குரல்கள்:

69ஆவது விடுதலை விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒலிக்கும் விடுதலைக் குரல்கள் நாம் இன்னும் முழுவிடுதலை பெறவில்லை என்பதையே காட்டுகின்றது. குறுகி வரும் விவசாய நிலமும், கண்ணீர் சிந்தும் விவசாயிகளின் வறுமையும், மொழி, இனப் பாகுபாடுகளும், ஏழைகளின் வளர்ச்சிப் பெருக்கமும், இன்னொரு போர் இந்நாட்டுக்குத் தேவை என்பதை உணர்த்துகின்றன. இறை இரக்கத்தின் அருளினால் காந்தியப் பாதையில் நடந்து முழு உரிமை பெற்ற பாரத நாடு மலரட்டும்.


Ads Inside Post