Pages - Menu

Saturday 30 September 2017

அக்டோபர் மாத புனிதர்கள்

அக்டோபர் மாத புனிதர்கள்
 அருட்சகோதரி.G.  பவுலின்மேரி, FSAG

அக். 4  அசிசி நகர் புனித பிரான்சிஸ், (கி.பி. 1181 - 1226)

பிறப்பு    : இத்தாலி நாட்டில் அசிசி நகர் 1881.
இளமை : செல்வந்தர் குடும்பத்தல் பிறந்து வளர்ந்து பிறகு செல்வங்களைத் துறந்து துறவு பூண்டார்.
தனிவரம்: இயற்கையில் இறைவனைக் கண்டு போற்றினார். விலங்கினங்கள் தன் நண்பர்கள் என்று   அவைகளுடன் பழகினார். ஏழ்மையை தன் காதலி என்றார். மனிதரின் மாண்பினை உணர்த்த தொமுநோயாளைரை கட்டி அரவணைத்தார். தற்போதையை திருத்தந்தை இவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு இவரின் ஏழ்மையையும், எளிமையையும் பின்பற்றுகிறார். கிளாரம்மாளும் இவரின் வழியைப் பின்பற்றி தனி சபையை ஏற்படுத்தினார். இவரின் ஏழ்மை, எளிமை ஆயிரக்கணக்காக இளைஞர்களை ஈர்த்தது. அவர்கள் இவரின் சபையில் சேர்ந்தனர். மூன்றாம் சபை என்ற பிரிவிலும் மக்கள் சேர்ந்து இவரின் வழியைப் பின்பற்றினர்.
இறப்பு: தன் 44வது வயதில் இறந்தார். இயேசுவின் ஐந்து காயம் வரம் பெற்றவர்.

 அக். 7 - புனித ஜெபமாலை அன்னை

மக்களும், துறவிகளும் பக்தியோடு மாதாவின் ஜெபமாலையை செபிப்பத்ததன் பயனாக 1571 இல் கிறிஸ்தவர்கள் துருக்கியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதற்கு நன்றியாக வெற்றிகளின் அரசி என்னும் விழா கொண்டாடும்படி திருத்தந்தை 5 ஆம் பியுஸ் கி.பி. 1573 இல் ஏற்படுத்தினார். ஜெபமாலையை சொல்லும்போது ஆண்டவரது வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றைப் பற்றி சிந்திக்கும் நாம் இயேசு, மாதாவை போல வாழ முயல வேண்டும். ஜெபமாலை நம்மை மரியாளுடன் ஒன்றிக்கிறது.

 அக். 9 புனித யோவான் லெயோனார்ட் 1541-1609

இவர் இத்தாலியில் தஸ்கனிப் பகுதியில் கி.பி. 1541இல் பிறந்தார். மருந்து செய்யும் கலையைக் கற்றார். ஆனால் அதைக் கைவிட்டுக் குருவாக விரும்பினார். போதிக்கும் திருப்பணி, சிறப்பாக சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். 1547இல் இறை அன்னையின் பெயரால் துறவற மறைப்பணியாளர்கள் சபை ஒன்றை நிறுவினார். இதனால் திருமறையை பரப்ப மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை நிறுவினார். திருத்தந்தையர்கள் பலரின் தீவிர முயற்சியால் இன்று அது வளர்ச்சி கண்டு, உரோமை நிறுவனத்திற்கு அடித்தளம் இட்டவர் என்று கருதப்பட்டார். திருச்சபையின் பற்பல சபைகள் மீண்டும் தங்கள் ஒழுங்கு முறைப்படி செயலாற்ற பரிவன்புடனும், முன்மதியுடனும் பாடுபட்டார். உரோமையில் 1609 இல் இறந்தார்.

 அக். 13 - புனித எட்வர்ட் (1004 - 1066)

இவர் இங்கிலாந்து நாட்டில் 40 வயதில் அரசராக முடி சூட்டப்பட்டார். செபித்து, பிறரன்பு செயல்கள் செய்து மக்களைச் சார்ந்து நீதி, விவேகத்துடன் ஆண்டு வந்தார். எனவே மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தார்கள். 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. மக்கள் இவரைத் தெய்வமாகக் கருதினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். பின்னர் அது நிறைவேறிற்று, திருச்சபையின் நாட்டின் தலைவர்களுக்கும் சாந்தகுணம். நீதி, விவேகம் ஆகிய தேவையான புண்ணியங்களை அருளும்படி மன்றாடுவோம்.

அக். 15 புனித அவிலா தெரசாள் (1515 - 1582)

இப்புனிதை ஸ்பெயினில் அவிலா நகரில் கி.பி. 1515 இல் பிறந்தார். கார்மேல் கன்னியர் சபையில் சேர்ந்து நிறைவுப் பாதையில் விரைந்து முன்னேறினார். தம் சொந்த சபையைச் சீர்த்திருத்த முற்பட்டுத் துன்பங்கள் பலவற்றைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இதில் புனித சிலுவை அருளப்பர் உதவியினால் ஆண்களின் கார்மேல் சபையையும் சீர்திருத்தினாள். இடைஞ்சல்கள் அனைத்தையும் வீரத்துணிவோடு மேற்கொண்டார். மிக ஆழ்ந்த போதனை நிறைந்த  நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் பயனுள்ளவை என தம் சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்தார். இவர் ஆல்பா நகரில் 1582 இல் இறைவனடி சேர்ந்தார்.

அக். 24 ‡ புனித அந்தோணி மரிய கிளாரட் 1807-1870

இவர் ஸ்பெயின் நாட்டில் சாலந்தில் கி.பி. 1807இல் பிறந்தார். திருநிலைப்பாடு அடைந்து பல ஆண்டுகள் கத்லோனியப் பகுதி எங்கும் சென்று மக்களுக்குப் போதித்தார். மறைபரப்பும் பணிக்கென்று சபை ஒன்று நிறுவினார். பின்பு கியுபா தீவின் ஆயரானார். மக்களின் மீட்புக்காக மிகத் திறம்பட உழைத்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். செபமாலை பக்தியையும், மரியாவின் மாசற்ற இருதய பக்தியையும் இவர் பரப்பினார். ஸ்பெயினுக்கு திரும்பி வந்து தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றார். பிரான்சிஸ் ஃபான்ப்ராய்ட் என்னுமிடத்தில் 1770இல் இறந்தார்.

அக் 26 புனித சிலுவை சின்னப்பர் (1694 - 1775)

இவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீது, சிறு வயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வேதத்திற்காக உயிரை விட விரும்பிய இவர், துருக்கியரை எதிர்த்து போரிட இருந்த இராணுவத்தை விட்டு விலகி, ஒரு புதுசபையைத் தொடங்கினார். சபை உடையை ஒரு காட்சியில் கண்டார். சிலுவையில் உயிர்விட்ட இயேசு மீது பக்தியை எங்கும் பரப்புவதே சபையின் நோக்கம். 50 ஆண்டுகளாக இவர் கஷ்டங்களை பாராமல் இத்தாலிய நாடெங்கும் சென்று போதித்தார். கடவுள் இவருக்கு பல வரங்களை கொடுத்தார். எனினும் இவர் தம்மீது வெகு கண்டிப்பாக இருப்பார். ‘நான் பயனற்ற ஊழியன் நான் பாவி’ என்பார்.

அக் 28 புனித சீமோன், யூதா திருத்தூதர்கள்

சீமோனின் பெயர், திருத்தூதர் பட்டியலில் 11 ஆம் இடத்தில் உள்ளது. இவர் கானாவூரில் பிறந்தவர். தீவிரவாதி என்றழைக்கப்பட்டவர். கடவுளின் சட்டங்களை அனுசரிப்பதும், பாவத்தை எதிர்த்து போராடுவதிலும், கிறிஸ்துவிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் இவர் ஆர்வத்துடன் உழைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் பாரசீக நாட்டில் வேதம் போதித்து, வேதத்திற்காக உயிரைக் கொடுத்தார். புனித யூதாவுக்கு ‘ததேயுஸ்’ என்ற வேறு பெயரும் உண்டு. ‘ததேயுஸ்’ என்றால் ‘தைரியசாலி’ என்று பொருள். இவர் புனித சின்ன யாகப்பருடைய சகோதரர். இயேசுவின் உறவினர். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சீரியா, மெசபத்தோமியா, லீபியா ஆகிய இடங்களில் வேதம் போதித்து ஆர்மேனியா நாட்டில் வேதத்துக்காக கொல்லப்பட்டார் என்பது பாரம்பரியம்.

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
01 - 10 - 2017  ச.இ.அ. 
எசே 18: 25-28; பிலி 2: 1 -11; மத் 21: 28 32;

‘நடித்தவன் நாட்டை ஆள்கிறான். படித்தவன் மாடு மேய்க்கிறான்’ என்று நகைச் சுவையாகக் கூறுவதிலும் ஓர் உண்மை இருக்கிறது. உண்மையில்லாததை உண்மையயன்று, அதன் வெளிபகட்டினால் நம்புகிற இயல்பு மனிதரிடத்தில் புதைந்திருக்கிறது. அந்த இயல்பிற்கு உரம்போட்டு பலர் பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பெயர் பெற்ற நடிகைக்கு ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம். முன்னணியில் நிற்கும் நடிகருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம். கனவு உலகத்தை நனவு உலகமென்று குறிப்பாக நம் தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.

இயேசுவுக்குப் பிடிக்காத மிகவும் கசப்பான ஒன்று, வெளிவேடம் போடுவது. முக்கியமாக, சமய சமுதாயத் தலைவர்கள் தாங்கள் போதிப்பதை வாழாமல் வெளி ஆடம்பரத்தின் வழியாக மக்களின் மதிப்பினைப் பெற்று வாழ்ந்தார்கள். அவர்கள் சமுதாயத்தில் முக்கியமானவர்கள். அதையயல்லாம் பொருட்படுத்தாது துணிந்து, இயேசு அவர்களின் செயல்பாடுகளைக் கண்டித்தார். எனவே பரிசேயர் மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியவர்களுக்கும் இயேசுவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மணமுறிவு (மத் 19: 3 -9), அரசுக்கு வரிகட்டுதல், பாவ மன்னிப்பு (மத் 9: 3-6), நோன்பு இருத்தல்  (மத் 9:14 -17),  பாவிகளை வரவேற்றல், ஓய்வுநாளை அனுசரித்தல் (மத் 12:1 -14), உயிர்த்தெழுதல் (மத் 22: 23-33)  ஆகியவைகளில் அவர்கள் கருத்து  வேறுபட்டு, அவர்மீது குற்றம் காணமுற்பட்டார்கள். அத்தோடு நில்லாமல் இயேசுவை அழிக்கவும் படிப்படியாக திட்டமிட்டனர். பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர் (மத் 12:14; 22:15), (யோவா 5:18; 7: 1 - 19,25,30; 8: 37 - 40; 11: 53).

இன்றைய நற்செய்திப் பகுதியில், ஒருவர் மூத்தமகனிடம், ‘திராட்சைத் தோட்டத்திற்குச்  சென்று வேலை செய்’ என்கிறார்.  ‘நான் போக விரும்பவில்லை’ என்று முதலில் கூறிவிட்டு பிறகு மனமாறி வேலைக்கு செல்கிறான். அடுத்த மகனிடம் சென்று ‘திராட்சை தோட்டத்திற்கு செல்’ என்கிறார். அவன், ‘வாயினிக்க போகிறேன் ஐயா’ என்கிறான். கிரேக்க மூலத்தில் ஐயா என்பது கூரியே, ஆண்டவரே என்று கூறப்பட்டுள்ளது. மலைப் பொழிவில் இயேசு ஓரிடத்தில் கூறும், ‘ஆண்டவரே, ஆண்டவரே என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே செல்வர்’ (மத் 7:21) என்ற வாக்கியம் இங்கு பொறுத்தமாக நிற்கிறது எனலாம். மனந்திரும்பி தந்தையிடம் திரும்பிய ஊதாரி மகனையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

விலைமாதரும், வரி தண்டுவோரும் பாவிகளாக, கடவுளின் எதிரிகளாகக் கருதப்பட்டவர்கள் மனமாறினார்கள். இறையாட்சியில் இடம் பெற்றார்கள். இயேசுவுக்காக தயார் செய்ய வந்த யோவானின் போதனையைக் கேட்டு விலைமகளிரும் வரிதண்டுவோரும் மனந்திரும்பினர். ஆனால் நீங்கள் மனந்திரும்பவுமில்லை, நம்பவுமில்லை என்கிறார் இயேசு.

  வாயினிக்க பேசிய மகன் தந்தையை மகிழ்ச்சிப்படுத்தியதாக நினைத்து கபடு எண்ணத்துடன் நடந்துக் கொண்டான். ஆனால் தந்தையின் இதயத்தில் அவன் இடம் பெறவில்லை. வெளி ஆடம்பரங்களால் மக்களிடம் பெருமையை வாங்கலாம், நாம் கடவுளின் மக்கள் என்று அவர்களை நம்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சி வாட்ஸ் அப்பில் வந்தது. அர்னால்டு ஷ்வார்ஸ்நேகர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பதவியிலிருந்த போது அவர் நினைவாக ஒரு வெங்கலச் சிலையை ஒரு பெரிய  ஓட்டல் நிறுவியது. அத்துடன் அவரிடம் உங்களுக்காக ஓர் அறை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டு மானாலும் நீங்கள் இங்கு வந்து தங்கலாம் என்றது. அவரின் பதவிக்காலம்  முடிந்து அண்மையில்  அங்குசென்று அறை கேட்டபோது, ‘உங்களுக்காக ஒன்றும் தனியாக அறையில்லை. அறைகள் நிரம்பி விட்டன. உங்களுக்கு இடமில்லை’ என்று கூறிவிட்டார்கள். எனவே அர்னால்டு அந்த ஓட்டலின் முன் அமைக்கப்பட்டிருந்த  தன் சிலைக்குக் கீழ் படுக்கை விரித்து படுத்துக் கொண்டார். 

பதவி என்பது சோளக் காட்டு பொம்மை போல சில பறவைகள் பார்த்துப் பயப்படும் ‡ மனிதருக்கு அவை  வேடிக்கை பொம்மைகள்.
புகழ்ச்சி பைத்தியகாரர்களின் கவர்ச்சி    - எல்டன் ஜான்.

வீண்பெருமைகளுக்கு பைத்தியமாக வேண்டாம்
வீண்பெருமைகள் பொய்மையின் கருவிகள். 

Friday 29 September 2017

விவிலிய விடுகதைகள்

விவிலிய விடுகதைகள் 

யோவான் நற்செய்தி அதிகாரம் 1 முதல் 11 முடிய 


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
      சடக்கென்று திண்டாட்டம்
    அம்மா சொன்னாங்க
    அண்டாக்களை நிரப்பினாங்க
    அண்ணாந்து ஜெபித்தாரு
    அள்ளிச் செல்லும் என்றாரு?
    அது என்ன? எங்கே?

 2. வானத்து மனிதர் வந்தார்
      தண்ணீரை சில வேளை கலக்குவார்
    முந்திக் கொண்டோர் இறங்குவர்
      நோயகளின்றி நலம் பெறுவர் ‡ அது எங்கே?

 3. ஆறுமாடி கொண்ட வீட்டில
      ஐந்து வீடு இடிஞ்சிப் போச்சு
      இருந்த வீடும் இருட்டாச்சு
      என்றுக் கேட்டதும்
      உண்மை தான் என்று
      ஏற்ற அம்மணி யார்?
      ஆறுமாடி என்ன?

 4. மனித இயல்பினர் இப்படி பிறப்பர்
      ஆவியின் இயல்பினர் அப்படி பிறப்பர். எப்படி?

 5. வேதனை தீரவில்லை
      சொல்லி அழ யாருமில்ல
      படுக்கையை விட்டு எழமுடியல்ல
      பரமன் வந்தாரு
      பரிவுடனே கேட்டாரு
      படுக்கையுடன் நட என்றாரு
      யார்? யாரை?

 6. நான்கு நாள்கள் இருட்டிலே
      ஐந்தாம் நாள் ஒளியிலே
      அவன் யார்?

 7. பார்வையற்றோர் பார்வை பெறுவர்
      கண் தெரிகிறதே என்கிறீர்கள்
      எனவே பாவிகளாய் இருக்கிறீர்கள்
      என்று கூறியவர் யார்? யாரிடம்?   
இவர் யார்? யாரிடம்?

 8. ஐந்து முத்துக்கள் கூடையிலே
      ஐயாயிரம் பேர் தரையிலே
      மீந்த முத்துக்கள் எத்தனை கூடையிலே
    அவை என்ன?

 9. அன்னையும் நோக்கினார்
      அன்பு மகனும் நோக்கினார்
      தாய் சொல்லைத் தட்டாதப்பிள்ளை
      செய்த முதல் அருங்குறி எது? யார்?

 10. ஆறெழுத்து உடையவர்
        அத்திமரத்தின் கீழ் இருந்த இவரை
      மூன்றெழுத்து உள்ளவர் கண்டுக்கொண்டார்
        இவர் யார்?

 11. யாக்கோபு தந்த பரிசு, காசில்லாத பரிசு.
      இது இல்லை சமாரியர்க்கு தரிசு. அந்த பரிசுப்பொருள்  எப்போதும் திறந்திருக்கும் அதன் ஓரமாய்      அமர்ந்தவர் யார்?
எதன் மேல்

 12. அவன் ஒரு பொய்யன்
        பொய்மையின் இருப்பிடம்
        உண்மையைச் சார்ந்து நிற்பதில்லை
        எனவே அவனே உங்களுக்குத் தந்தை
        இவன் யார்? கூறியது யார்? யாரை?

 13. நான் இரண்டெழுத்து உடையவன்
      எனது குரல் ஒரு மாதத்தினுடையது
      என் அவர் என் முன்னே செல்வார்
      நான் பின் தொடர்வேன்
      என்னை வழி நடத்துபவர். மூன்றெழுத்தில்
      வரும் சொல்லுங்கள்.

 14. வலதுக்கை ஒன்று
      அதில் ஐந்து விரல்கள் உண்டு
      அதன் நடுவே ஒரு குழி
      அதுதான் உள்ளங்கை
      இதை  யோவான் 5 ஆம்
      அதிகாரத்தில் கண்டு பிடியுங்கள்.

 15. பரிசேயருள் ஒருவர் இவர்
      ஐந்தெழுத்து பெயருடையவர்
        ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர்
      இயேசுவுக்காகப் பரிந்துப் பேசி
      வாங்கிக் கட்டிக் கொண்டவர்

அமெரிக்கக் கடிதம், - சவரி - கேரி

அமெரிக்கக் கடிதம் 
- சவரி - கேரி

உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரம் உங்களுடன் பெண்கள் சுதந்திரத்தையும், பெண்களின் ஆளுமையைப் பற்றியும் பேச விரும்புகிறேன். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த பெண்களுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், நமது இந்திய பெண்கள் அணியினர் அபாரமாக விளையாடி நம்மையும், உலகத்தினர் அனைவரையும் மூக்கு மேல் விரல் வைக்க வைத்தார்கள். இறுதி ஆட்டத்தில் தோற்றாலும், இறுதி வரை போராடி, பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து, அனைவர் பாராட்டுகளையும் பெற்றார்கள். அணியின் தலைவர் மித்தாலி ராஜ் ஆந்திராவில் குடியிருந்தாலும், அவர் ஒரு தமிழ் பெண் என்பது குறிப்பிட தக்கது. பெப்சி நிறுவனத்தின் தலைமை பதவி வகிக்கும் இந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒரு தமிழ் பெண் என்பதும் குறிப்பிட தக்கது. இவர் சென்னையில் பிறந்து, படித்து உலகில் தலை சிறந்த நிறுவனத்தின் தலைமையை பிடித்து, பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், வழிக்காட்டியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்குகிறார். ‘அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?’ என்ற காலம் மாறி, தங்கள் கைகள் கரண்டியை மட்டும் பிடிக்க அல்ல, கணிணியையும், ராக்கெட்டையும் இயக்க தெரியும், கிரிக்கெட் மட்டையையும் பிடிக்க தெரியும் என்று உலகுக்கு நிரூபித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் நுழைந்து  வெற்றி வாகை சூடி வருகிறார்கள். வேலை வாய்ப்புகளில் தகுதியானவர் யாராக இருந்தாலும் ஆண்/ பெண் வேறுபாடின்றி வேலை தரவேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் அரசு நிறுவனங்களுக்கு மட்டுடல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனால் நல்ல வேலை வாய்ப்பை பெற்று ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் தலை சிறந்து விளங்குகிறார்கள். சமீப காலத்தில் ராணுவத்தில் தரையில் இறங்கி சண்டை போடும் கடின பணியிலும், அரசாங்கத்துடன் சண்டையிட்டு அனுமதி வாங்கி விட்டார்கள்.
திறமை உள்ள பெண்களின் திறமைகளை, பெண் என்ற காரணத்தால் புறக்கணிக்காமல், திறமைகளை வளர்த்துக் கொள்ள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நம்மிடையே பல இந்திராக்களும், மித்தாலிகளும் உள்ளார்கள். அவர்களை சாதனை படைக்க வழி வகுக்க வேண்டியது நம் கடமை. பெண்கள் இன்னும் பல சாதனைகளை படைத்து உயர வாழ்த்துகிறேன்.

பட்டங்கள் ஆள்வதும் 
சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்.     
                                         -பாரதியார்.

செப்டம்பர் மாத புனிதர்கள் அருட்சகோதரி. G. பவுலின்மேரி,FSAG

செப்டம்பர் மாத புனிதர்கள்
 அருட்சகோதரி. G.  பவுலின்மேரி,FSAG

செப். 3 புனித பெரிய கிரகோரியார்

இவர்  உரோமையில் கி.பி 540 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கல்வியறிவைக் கண்ட ஜஸ்டின் பேரரசர் உரோமை நகரின் பிரதம நீதிபதி ஆக்கினார். இவருடைய தந்தை இறந்தப்பின் சிசிலி நாட்டில் ஆறு துறவற மடங்களை அமைத்து, உரோமையில் உள்ள தமது வீட்டை ஏழாவது மடமாகக் கட்டி இவரும் அங்கு துறவியானார். 590ஆம் ஆண்டு செப் ‡ 3 ஆம் நாள் திருத்தந்தையாக உயர்த்தப்பெற்றார். ஏழை எளியவர்களுக்கு உதவினார். திருமறையை பரவச்செய்து அதனை உறுதிப்படுத்தினார். ஒழுக்க நெறி, இறையியல் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். 604இல் இறைவனடி சேர்ந்தார்.

 செப்.  8 புனித கன்னிமரியாவின் பிறப்பு

கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் சிற்றூரில் சுவக்கின் ‡ அன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதியருக்கு மரியா பிறந்தார். உலகிற்கு புதுவாழ்வு தந்தவர் இயேசு.அவரின் தாய் பிறந்த நாளின் விழா இது. மரியன்னைக்கு நாம் செய்யும் சிறந்த  அன்பளிப்பு அன்பு, தாழ்ச்சி, பொறுமை, கற்பு, கீழ்படிதல் முதலிய புண்ணியங்களை கடைப்பிடிப்பதே  7 ஆம் நூற்றாண்டு முதல் இவ்விழா சிறப்பிக்கப்படுகிறது. இன்று பெண் குழந்தைகள் தினம் என்றும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளைகளை வரமாகப் பார்க்காமல், பாரமாக பார்க்கிறார்கள். இந்த தவறான வழக்கு அழிய வேண்டும்.

 செப்.  13 புனித கிறிசோஸ்தம் அருளப்பர் (344- 407)

அந்தியோக்கியாவில் கி.பி 349 இல் பிறந்தார். கல்வியை மிகச் சிறப்பாக கற்றுத் தேர்ந்தார். தவ வாழ்வை மேற்கொண்டு, மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். 397 இல் கொன்ஸ்தாந்தி நோபிளுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று மிகச் சிறப்புடன் பணியாற்றினார். மறைப்பணியாளர்களின் பணிகளை அறநெறிப்படுத்த முயன்றார் ஆயர். மற்ற அனைவரின் வெறுப்புக்கு ஆளாகி செயலாற்ற முடியாதவரானார். இருமுறை நாட்டை விட்டுச் செல்ல வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்தவ வாழ்வை நெறிப்படுத்த நிறைய மறையுரையாற்றினார். புத்தகங்கள் எழுதினார். எனவே பொன் வாய் அருளப்பர் என அழைக்கப்பெற்றார். 407 இல் இப்புனிதர் இறந்தார்.

 செப். 15 புனித வியாகுல அன்னை 

              மரியாவின் ஏழு வியாகுலங்கள்:
 1. சிமியோன் இறைவாக்கு.  2.எகிப்துக்கு தப்பிச் சென்றது.   
3. காணாமற்போன இயேசுவை மூன்று  நாட்களாய் தேடியது.  4. கல்வாரிக்கு சிலுவை சுமந்து போன இயேசுவை வழியில் சந்தித்தது. 5. மரியாள் சிலுவையடியில் நின்றது. 6. இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி  மடியில் வைத்திருந்தது. 7. இயேசுவை அடக்கம் செய்தது. இத்திருவிழா செப்டம்பர் 3 ஆம்  ஞாயிறு கொண்டாடப்பட வேண்டும் என உரோமை பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் 1913 ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 15 ஆம் நாளுக்கென்று குறிக்கப்பட்டு அதனை சிறப்பித்து வருகிறோம்.

 செப்.  17 புனித இராபர்ட் பெல்லார்மின் (1542 - 1621)

  இவர் தஸ்கனி பகுதியில் மோன்தே புல்சியானோ நகரில் கி.பி 1542 இல்  பிறந்தார். உரோமையில் இயேசு சபையில் சேர்ந்து மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க மறையைப் பாதுகாக்கும்  வகையில்  எதிர்ப்பாளர்களுடன் தீவிரமாக விவாதங்கள் செய்து, உரோமைக் கல்லூரியில் இறையியல் கற்றுத்தந்தார். பிறகு, கர்தினாவாக உயர்வு பெற்று, காப்புவா மறைமாவட்ட ஆயரானார். அக்காலத்தில் எழுந்த ஐயப்பாடுகள் பலவற்றையும்  தெளிவுபடுத்த துணையாயிருந்தார். புனித கொன்சாகா ஞானப்பிரகாசியார் இவரின் ஆன்ம குரு. இவர் துறவிகளுக்கு பெரும் முன்மாதிரிகை. தூய்மை, தாழ்ச்சி, கீழ்படிதல் ஆகிய பண்புகளின் முன்னோடியாக விளங்கினார். ஆயரான இவர் தம் மந்தையை எல்லையற்ற அன்புடன் பராமரித்தார். 1621, செப்டம்பர் 17 இல் உரோமையில் இறந்தார். 

செப்.  21 புனித மத்தேயு

முதல் நற்செய்தி நூலை எழுதியவர். பன்னிரெண்டு திருத்தூதர்களில் ஒருவர். இவர் பாலஸ்தீனாவில் உள்ள கப்பர்நாகூமில் பிறந்தார். இயேசுவால் அழைக்கப்பெற்ற காலத்தில் சுங்கத் துறை பணியில் இருந்தார். எபிரேய மொழியில் நற்செய்தி நூலை எழுதினார் என்றும் இவர் கீழைநாடுகளில் திருமறையைப் போதித்தார் என்றும் பாரம்பரியம் கூறுகிறது. யூப்ரட்டீஸ் நதியின் அருகில் மரபு என்னுமிடத்தில் இவர் இறந்தார்.

 செப்.  27 புனித வின்சென்ட் தெ பால்

இவர் பிரான்சில் லாந்த் பகுதியில் பூயி என்னும் கிராமத்தில் 1581இல் பிறந்தார். பிரான்சிஸ்கன் குருக்களிடம் கல்வி பயின்று மறைப்பணியாளர் பட்டம் பெற்று பாரீஸ் நகரில் பணியாற்றினார். மறைப்பணியாளர்களைப் புனிதராக உருவாக்குவதற்கும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு மறைபோதகச் சபையையும் ஏற்படுத்தினார். இளம் பெண்களை கெடுக்கத் தேடிய இராணுவத்தினர் கையிலிருந்து காக்கும்படி, பலநூறு பெண்களுக்கு கன்னியர் மடங்களில் புகலிடம் கொடுத்தார். 1660 செப்டம்பர் 27 இல் பாரீஸ் நகரில் இவர் இறந்தார்.

 செப் . 30 புனித எரோணிமுஸ்

இவர் கி.பி 340 இல்  தால்மேசியாப் பகுதியில் ஸ்திரிதோ என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையில் இலக்கியக் கலைகள் கற்றுத் தேர்ந்தார். அங்கேயே திருமுழுக்குப் பெற்றார். தவ வாழ்வை மேற்கொண்டு கீழைநாடுகளுக்கு வந்து தமாசுஸ் என்னும் திருத்தந்தைக்குக் செயலராகப் பணியாற்றினார். அப்போது திருவிவிலிய நூல்களை இலத்தினீல் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். துறவு வாழ்வை ஊக்குவித்து வளர்த்தார். பின்பு பெத்லகேமில் வாழ்ந்து கொண்டு திருச்சபையின் தேவைகளில் வியப்புக்குரிய முறையில் உதவிடலானார். பல நூல்கள், முக்கியமாக திருவிவிலிய விளக்கவுரை நூல்கள் எழுதினார். பெத்லகேமில் 420 இல் செப்டம்பர் 30 ஆம் நாள் இறந்தார்.

இதுக்கென்ன சொல்றது ? - ச. இ . அருள்சாமி

இதுக்கென்ன சொல்றது ?
  - ச. இ . அருள்சாமி

 இப்படியும் மனிதர் இருப்பாங்களா?
 என்ற எண்ணம் அந்நிகழ்ச்சியில் எனக்குப் பளிச்சிட்டது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாடம்  எனக்குக் கிடைத்தது. குடந்தையிலிருந்து கோவைக்கு நேரடியான பேருந்துகள் ஒரு சிலவே இருந்தன. ஒரு சில பேருந்துகள் வசதியான நேரத்தில் செல்பவை.  உதாரணமாக, இரவு 8 மணிக்கு குடந்தையில் புறப்பட்டால் காலை 6 மணிக்கு கோவைக்கு அப்பேருந்து செல்லும். எனவே இரவில் பயணம் செய்து, பகலில் வழக்கமான வேலைகளை செய்யலாம். எனவே அந்த பேருந்துக்கு நிறையபேர் காத்திருப்பர். அப்பேருந்திற்கு முன் பதிவு செய்யலாம். நான் குடந்தையிலிருந்து கோவைக்கு முன் பதிவு செய்தேன். ஜன்னல் ஓரமான ஒரு இருக்கையை கேட்டு பதிவு செய்திருந்தேன். ஒருவர் 30,40 வயதுடையவர் என்னை அணுகி, எனக்கு உடல்நிலை சரியில்லை. அடிக்கடி வாந்திவரும். எனவே உங்கள் இடத்தைக் கொடுங்கள். எனக்கு உதவியாக இருக்கும் என்றார். நானும், இரக்கப்பட்டு  நான் கேட்டு வாங்கியிருந்த இடத்தை அவருக்குக் கொடுத்தது விட்டு, அவரின் இடத்தில் அமர்ந்தேன். விடியற்காலையில் 3 மணிக்கு காங்கேயத்திற்கு வண்டிவந்து சேர்ந்தது. தேநீர் அருந்த பயணிகள் கீழே இறங்கினர். நானும் இறங்கி தேனீர் அருந்தி பேருந்திற்குள் வந்தேன்.  அப்போது நான் இடம் கொடுத்த அந்த பயணி, அவரின் இடத்தில் அமர்ந்திருந்தார். நான் கொடுத்த இடத்தை விட்டு அவரிடத்திற்கு சென்று விட்டார். ஜன்னல் ஓரமான அந்த இடம் குளிராக இருப்பதாகவும், அதனால் தன் சொந்த இடத்திற்கு வந்து விட்டதாகவும் கூறினார். நான் கூறினேன், நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் என் இடத்தை உங்களுக்குக் கொடுத்தேன். இப்போது திடீரென்று இப்படி பல்டி அடிக்கிறீர்கள் என்றேன். ‘சார், உங்க நம்பர் என்ன? அதில் போய் உட்காருங்கள்.  அதிகமாய் பேசாதீர்கள்’ என்றார். பேய் அடித்தது போல் என் இடத்தில் அமர்ந்தேன். நல்லது செய்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான். ‘இப்படியும் மனிதர்கள் உண்டு’ என்று புரிந்துக் கொண்டேன்.
அரசு பேருந்துகளில் இருக்கைகள் சிறுவர்களுக்குரியதை போல் அமைந்திருக்கின்றன. நாளுக்குநாள் மக்கள் குண்டாகிறார்கள். ஆனால் இருக்ககைகளை குறுகியதாக செய்கிறார்கள். நான் சற்று ‘குண்டு’ வகையை சேர்ந்தவன். 75 கிலோ. எனவே பேருந்துகளில் பயணம் செய்வது எனக்கு சற்று சவாலான காரியம். என்னைப் போன்று ‘குண்டு’  மனிதர்கள் என் வரிசையில் அமர்ந்து விட்டால், அன்று அறவை இயந்திரத்தில் அகப்பட்டு  போனது போலதான். எனவே நான் சில தந்திரங்களை விளையாடுவேன். எனக்கு இருக்கைக் கிடைத்ததும், ஒல்லியானவர் யாராவது வருகிறார்களா? என்று பார்த்து அவரை நானே கூப்பிட்டு அருகில் அமர செய்வேன். இதனால் குண்டு உருவமும், மெலிந்த உருவமும் இணைந்து சகிப்புத் தன்மையுடன் செல்லும். அந்த முறை திருச்சியிலிருந்து கோவை வரையில் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தேன். வழக்கம் போல மெலிந்த உருவம் உடையவரை கண்டுபிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டேன். வந்தவர் ஜெயங்கொண்டம் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். கிராமத்து மனோநிலையோடு பேசி பழகினார். மனந்திறந்து பேசினார். பயணம் அழகாய் சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து கோவையை நெருங்கி விட்டது. அப்போது அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘என்ன சார்? உங்களை சமாளிக்கவே முடியல சார்?’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியல. ‘என்ன சார் சொல்லிறிங்க?’ என்றேன். ‘சார் திருச்சியிலிருந்து இங்கு வரவரயிலும், நீங்க தூங்கி தூங்கி என்மீது விழுந்திங்க. எவ்வளவோ தள்ளி பார்த்தேன், முடியல. உங்களோடு போராடுனதே என் பயணம் ஆச்சு’ என்றார். அப்போது, தான் நான் செய்த திருவிளையாடல் புரிந்தது. ‘மன்னிச்சுங்க சார்’. தவறா நடந்திடுச்சு சார். மனசில எதும் வைச்சிக்காதிங்க சார். வாங்க சார், காப்பி சாப்பிட்டு போகலாம் என்று காப்பி வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தினேன். ‘ஏழையர் உள்ளத்தோர்’ எப்படி சகிப்புத்தன்மைப்புடன் நடந்து கொள்கின்றனர் என்று புரிந்துக் கொண்டேன்.  

புரிதல் தரும் பணிதல் சிறுகதை திருமதி. க. சந்தோசம் லியோ, விரகாலுVர்

புரிதல் தரும் பணிதல் 
 சிறுகதை

 திருமதி. க. சந்தோசம் லியோ, விரகாலுVர் 

‘தேவி எழுந்திரும்மா காலேஜ்க்கு நேரமாகி விட்டது. கிளம்பி சாப்பிடவாம்மா’ என்ற படி சமையலறையில் உற்சாகமாக அன்பையும் பாசத்தையும் சேர்த்து சமைத்துக் கொண்டிருந்தாள் அம்மா வேணி.

தூக்கம் தேவியின் கண்கள் திறக்க ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாய் கஷ்டப்பட்டு எழுந்து வந்தாள். ‘தூங்கும் பொழுது ஏன் கத்திக்கொண்டே இருக்க’ என்று கோபத்தோடு தாய் வேணியை எதிர்த்து பேசினாள்.

வேணிக்கு முழு உலகமும் தன் மகள் தேவிதான். எப்பொழுதும் கடவுளிடம் பிராத்தனை செய்யும் பொழுது மகளுக்கு நல்ல ஞானத்தை கொடு என்றுதான் கேட்பாள்.

ஆனாலும் என் கணவர் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு மகளை படிக்கவைக்கிறேன். என் கஷ்டத்தை உணராமல் பொறுப்பின்றி இருக்கிறாளே என்று வேணியின் மனதுக்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டேதான் இருந்தது. 

காலம் கடந்து போனது. தேவியின் கல்லூரியின் மூன்றாமாண்டு நிறைவு வந்தது. அப்பொழுது கல்லூரியிலிருந்து சுற்றுலா செல்வதாக தாய் வேணியிடம் தேவி கூறினாள். அதற்கான கட்டணம் ரூ.2,000 எனவும் சொன்னாள். அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது தேவி ரூ. 2000 மட்டும் இல்லாம இன்னும் செலவுக்கும் பணம் தேவைப்படும் அல்லவா என்றபடி தனது நிலையை நினைத்து வருந்தினாள் தாய் வேணி. ஆனால் தேவியோ முடியவே முடியாது நான் சுற்றுலா போய்தான் தீருவேன் என்று அடம்பிடித்தாள். வேறு வழியின்றி பக்கத்து வீட்டில் ரூ.3000 கடன் வாங்கி அனுப்பி வைக்கிறாள். தாயின் கஷ்டத்தை உணராமல் தேவி சந்தோ­மாக சுற்றுலா செல்ல முடிவு செய்து கல்லூரிக்கு சென்று தனது பெயரை பதிவு செய்கிறாள். அப்பொழுது கல்லூரி பேராசிரியர் மாணவிகளைப் பார்த்து...
.
‘மாணவிகளே சுற்றுலாவில் அதிகமாக நாம் காணப்போவது மாதா கோவில்கள்தான். எனவே நாம் செல்வதற்கு முன் மாதாவைப்பற்றிய ஒரு சில வி­யங்களை உங்களுக்கு சொல்கிறேன்’ என்றபடி பேராசிரியர் ஆரம்பித்தார்...

யோசேப்பும் அன்னை மரியாவும் மண ஒப்பந்தம் ஆனவர்கள். திருமணத்திற்கு முன்பு அன்னை மரியாள் கருவுற்றிருப்பதை தெரிந்து யோசேப்பு மரியாளை ஒதுக்கிவிட நினைத்தார். அப்பொழுது தூதரானவர் தோன்றி

 “ யோசேப்பே தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்” (மத்தேயு 1:20) என்று சொன்னார். ஆனால் யோசேப்பு மனைவி மரியாளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல மாணவிகளே வானதூதர் மரியாளுக்கு தோன்றி “அருள்மிகப் பெற்றவரே வாழ்க !  ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” : அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். என்று வானதூதர் கூறியவுடன் “ஆகட்டும்”  என்ற ஒரே வார்த்தையில் தமது சம்மதத்தை தெரிவித்தார் அன்னை மரியாள். மாணவிகளே இங்குதான் நீங்கள் சிந்திக்க வேண்டும் ஒரு பெண் பேசும்பொழுதும், செயல்படும்பொழுதும் எவ்வளவு நிதானமாக பதில் பேச வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்தான் அன்னை மரியாள். திருமணமாகாத ஒரு பெண் கருவுற்றால் அந்த சமுதாயம் அவரை எவ்வளவு ஏளனம் செய்திருக்கும். அப்படியயாரு கஷ்டத்திலும் இறைமகன் இயேசுவை பெற்றெடுத்தார் என்றால், அவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார் என்பது தான் உண்மை. மாணவிகளே அன்னை மரியாவைப் போல் இதுவரை எந்த ஒரு பெண்ணும் பிறந்ததில்லை, இனி இவ்வுலகில் பிறக்கப்போவதும் இல்லை. எனவேதான் பெண்கள் பணிவுடனும், தன்னம்பிக்கையுடன் வாழ அன்னை மரியாளைப் பின்பற்றுகின்றனர். அவர் வழியாக இறைவனிடம் பிராத்தனை செய்கின்றனர் என்று பேராசிரியர் கூறியவுடன் தேவியின் உள்ளத்தில் ஒரு தெளிவு  கிடைத்தது. என் அம்மா, என்னை, அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாள். அதை உணராமல் கடன் வாங்கி சுற்றுலா செல்வதற்கு ஆசைப்பட்டுள்ளேனே என்று தன் தவற்றை உணர்ந்தாள். தாய் மரியாளின் பொறுமையும், நிதானமும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே ! கடவுளுக்கு அவர் கீழ்படிந்ததால் தான் இன்று உலகமே அவரை பின்பற்றி வாழ ஆசைப்படுகிறது. இனி என் தாய்க்கும், பெரியோருக்கும் கீழ்படிந்து பெருமை சேர்ப்பேன்.      சுற்றுலா சென்று கிடைக்கும் மகிழ்ச்சியைவிட என் தாய்க்கு கீழ்ப்படிந்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே நிலையானது என நினைத்து தாயிடம் செல்கிறாள். 

அம்மா ! என்று ஆசையோடும் பணிவோடும் அழைக்கிறாள். நான் சுற்றுலா செல்லவில்லை. வாங்கிய கடனை திருப்பி கொடுத்து விடுங்கள். நாம் பணம் சேர்த்து வைத்து இருவரும் சேர்ந்து சென்று வரலாம் என்று தன் தாயின் மடியில் தலைசாய்த்து அன்னை மரியாவின் தியாக வாழ்வை தனது தாய் வேணிக்கும் எடுத்துச் சொல்கிறாள். அம்மா அன்னை மரியாவைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை ! ஆனால் அவளைப் போல் கீழ்படிந்து, பணிவுடன் வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் ! அவளைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால் அவள்.......
தாழ்ச்சியின் மணிமகுடம்
தியாகத்தின் உயிர் வடிவம்
கருணையின் பிறப்பிடம்
தூய்மையின் வாழ்விடம்
ஞானத்தின் ஆழ்கடல்
வெற்றியின் சிகரம்
வாழ்க்கைக்கு உதாரணமானவர் !
அனைவருக்கும் தாயானவள் !
நம்மை தாங்கி நடத்தும் இறைவனின் தாயானவள் !
என்று தேவி வருணிக்கும் பொழுதே ! அன்னை மரியாளிடம் வேணி நன்றி கூறினாள் !.
தன் பிள்ளைக்கு கொடுத்த ஞானத்திற்காக !
        வளர்வோம் ! வாழ்வோம் ! அன்னையின் வழி தொடர்வோம்.

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்...

- லெயோ ஜோசப்,  திருச்சி

 Fr. சார்லஸ் ஒவ்வொரு பாடலுக்கும் பல்லவி எப்படி இருக்க வேண்டும்;  அனுபல்லவி எப்படி இருக்க வேண்டும்; சரணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாகச் சொன்னார். அவர் சொன்னத்தில் ஒரு கருத்து எனக்குப் பிடித்திருந்தது.
சீமோனைக்  கட்டாயப்படுத்தித்தானே இயேசுவுக்கு உதவி செய்ய வைத்தார்கள்? ‘அவன் வேண்டா வெறுப்பாகச் சிலுவையைத் தொட்டான், இயேசு அவனைத் தொட்டார்’ என்று அவர் சொன்னார். நான் இப்படி எழுதினேன்;

சிலுவையை சீமோன் மெல்லத் தொட்டான்
இறைவா அவனை நீர் தொட்டீர்
உதவிட மனமின்றி முன் வந்தான்
பிரிந்திட இயலா பேறு பெற்றான் !

            பாடல்களுக்கு இசையமைத்தவர் சென்னை வில்லியம்ஸ். அவருக்கு ட்ராக் பாட வந்தவர், திருச்சி லோகநாதன் மகன் தியாகராஜன். ஏற்கனவே இரண்டு மகன்கள் திரை இசைப்பாட, மூன்றாவது மகன் ட்ராக் பாட வந்தார். ட்ராக் என்பது, இசையமைத்தவுடன் ஒருவரை வைத்துப் பாட வைப்பது. பின்னர் பின்னணிப் பாடகரை வைத்து பாட வைத்து, அதே ட்ராக்கில் ஏற்றுவது.

‘ஒரு பாட்டுப்பாட வாய்ப்புக் குடுங்க ஃபாதர்’ என்று கேட்டார் தியாகராஜன் ‘நீ ட்ராக் பாடு. நல்லா இருந்தா அதையே வச்சுக்கிறேன்’ என்றார் Fr.ஜார்ஜ், அப்படி இடம்பிடித்த பாடல்தான், 

கருணை வள்ளலே இறைமகனே  - நீர்
காட்டிய கருணைக்கு அளவேது
கல்வாரிப் பயணம் முடிகின்றவரையில் - நீர்
காட்டிய பொறுமைக்கு ஈடேது !

கல்வாரி மலைமீது செல்கின்ற ஊர்வலம்
காண்கின்ற முகங்களிலே கண்ணீரின் தோரணம் !  என்றொரு பாடல்.

அதற்கு திருச்சி, வானொலி நிலையத்தில் பணியாற்றும் S.N.  இராமசந்திரன் இசையமைத்தார். அதை பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடினார். சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு நடந்தது. வாணி ஜெயராம் மிக உருக்கத்தோடு அந்தப் பாடலைப் பாடினாராம். பாடல்  முடிந்தபின், ‘ரொம்ப நல்லாப் பாடினாங்கன்னு போய்ச் சொல்லு’ என்று உடன் வந்திருந்த வித்யாவிடம் Fr.ஜார்ஜ் கூறியிருக்கிறார். வித்யா போனபோது, வாணி ஜெயராம் அழுதுக் கொண்டு உட்கார்ந்திருந்தாராம்.  ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று வித்யா கேட்டபோது ‘இல்ல, வார்த்தைகள் எல்லாம் ரொம்ப உருக்கமா இருந்தது. அழுகைய அடக்க முடியல’ என்றாராம் அவர்.

ஆடியோ கேசட்டின் பெயர் ‘சுகமாக்கும் சிலுவை’. இதில் விசே­ம் என்னவென்றால், திருச்சி மறைமாவட்டத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கின் போது,
பாதங்களைக் கழுவினார் ‡ இயேசு
பாதங்களைக் கழுவினார்  என்ற பாடலைத்தான் பாடற்குழுவினர் பாடுகிறார்கள் என்பதே !

  எனக்கு வயது 85 ஆகிறது. கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பலர் தங்கள் பேனாவை வைத்து விட்டார்கள். நான் வைக்கவில்லை.
இதுவரை 43 தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன். இதில் 6 கதைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.  6 விருதுகள் பெற்றிருக்கிறேன். சாந்தோம் விருது, கலைக்காவிரி விருது, நம்வாழ்வு விருது, மதுரை, கத்தோலிக்க கிறிஸ்தவ கலை இலக்கிய மன்றம் விருது, திரு இருதய தூதன் 125 ‡ வது ஆண்டு விருது, ஜோய் ஆலுக்காஸ் விருது ஆகியன ஆகும்.

(எமது வேண்டுகோளிற்கு இணங்க, தன் வாழ்க்கை அனுபவத்தை உருகத்துடன் நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட உயர்திரு லெயோ ஜோசப் அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. வாழ்க்கை ஓட்டத்தின் மேடுபள்ளங்களி லெல்லாம் உறுதியாக நின்று பயணித்திருக்கிறார் லெயோ ஜோசப். இளம் உள்ளங்களுக்கு இவரின் வாழ்க்கை அனுபவம் சிறந்த முன்னோட்ட பாதையாகும். இந்த கட்டுரை அச்சாகும் நேரத்தில் இவரின் இறப்பு செய்தி இடியைப்போல் வந்து சேர்ந்தது. அவருடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்)

19. நற்கருணை விளக்கம் (VII), S- அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானியா இல்லம், கும்பகோணம்

19. நற்கருணை விளக்கம் (VII)
S- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

2. நற்கருணை விருந்து


நற்கருணை விருந்தில் பின்வரும் பகுதிகள் இடம் பெறுகின்றன:
1. அருள்பணியாளர் தம்மை தயாரிக்கும் செபம்.
2.. நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணையைக்காட்டி அவர்களை திருவிருந்துக்கு அழைத்தல். 
3. திருவிருந்து பாடல்.
4. நற்கருணையை உட்கொள்ளுதலும் வழங்குதலும்.

2.1. அருள்பணியாளர் தம்மைத் தயாரிக்கும் செபம்

அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இரு செபங்களில் ஒன்றைச் சொல்லி தம்மைத் தயாரிக்கிறார். அவர் சொல்லும் செபமாவது:
“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் உம் உடலும் இரத்தமும் என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டணைக்கு உள்ளாக்காமல் உமது இரக்கத்தினால் என் உள்ளத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பதாக.”

2.2. திருவிருந்துக்கு அழைப்பு

அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தை திருத்தட்டின் மேல் அல்லது திருக்கிண்ணத்தில் மேல் பிடித்துக் கொண்டு நம்பிக்கையாளர்களுக்குக் காண்பித்து அவர்களைக் கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கு கொள்ள பின்வரும் வார்த்தைகளில் அழைக்கிறார். “இதோ, இறைவனின் செம்மறி, இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்; செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.”  பழைய ஏற்பாட்டு பாஸ்காவில் உண்ணப்பட்டது ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி. ஆனால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி ஆடு ஆகிறார். எனவேதான் இவ்விருந்து “செம்மறியின் விருந்து” என்று அழைக்கிறோம்.

  அருள்பணியாளரின் அழைப்பிற்குப் பதிலாக நம்பிக்கையாளர் “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலமடையும்” எனச் சொல்கின்றனர்.
இங்கு ஒரு கேள்வி எழுப்பலாம் எனத் தோன்றுகிறது. திருப்பலியின் தொடக்கத்தில் மனத்துயர் செபம் “எல்லாம் வல்ல இறைவனிடமும்.....”என்று சொல்லப்பட்டபின், ஏன் மறுபடியும் அது போன்ற ஒரு செபத்தைச் சொல்ல வேண்டும்?
வரலாற்றை சற்று நோக்கினால் விடை கிடைக்கும். அதாவது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடையே நற்கருணை உட்கொள்ளும் பழக்கம் மிகமிக அரிதாகியது. நோயாளிகள் மட்டுமே நற்கருணையை உட்கொள்ளும் பழக்கம் வழக்கில் இருந்தது. எனவே இச்சடங்கில் நோயாளிகளை நற்கருணை உட்கொள்ள ஆயத்தம் செய்யும் வகையில் இச்செபம் சொல்லப்பட்டது. இதுவே பிற்காலத்தில் நற்கருணையை உட்கொள்ள அனைவரையும் தயார் செய்யும் ஒரு செபமாக திருப்பலியிலும் அறிமுகப் படுத்தப்பட்டது. ஏற்கனவே நம்பிக்கையாளர் மனத்துயர் சடங்கில் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் நற்கருணையை உட்கொள்ளும் மீண்டும் ஒருமுறை கேட்பதில் தவறில்லை.

2.3. திருவிருந்து பாடல்

அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது; உள்ளத்து மகிழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது; நற்கருணை உட்கொள்வதற்காகப் பவனியாகச் செல்பவரின் குழும இயல்பையும் தெளிவாகக் காட்டுகின்றது.  நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணை வழங்கப்படும் போது பாடல் தொடரும் (GIRM 86). இந்த பாடலை எங்கிருந்து தேர்வு செய்வது? இது உரோமை படிகீத ஏட்டிலிருந்து எடுக்கப்படலாம். அதில் பல்லவியும் அதற்குரிய திருப்பாடலும் இருக்கும். அல்லது ஆயர் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட பாடல் நூலிலிருந்து ஒரு பாடலைப் பாடலாம். ஆனால் இப்பாடல் நற்கருணையின் பொருளையும் அதுக்குறித்துக் காட்டும் உண்மையையும் கொண்டதாக அமைய வேண்டும். நற்கருணையோடு எந்த முறையிலும் தொடர்பற்ற, வெறும் சமூக, விடுதலை சிந்தனையுடைய பாடல்கள் இங்கு ஏற்புடையவை அன்று. இத்தகைய பாடல் எல்லாராலும் சுலபமாகப் புரிந்துக் கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும்.
திருவிருந்துபாடல் இடபெறவில்லை என்றால் திருப்பலில் நூலில் உள்ள பல்லவியை வாசிக்க வேண்டும். இது நம்பிக்கையாளர்களாலும், அல்லது அவர்களில் ஒருவராலும் வாசிக்கப்படலாம். யாரும் இதைச் செய்யாவிட்டால் அருள்பணியாளரே தான் நற்கருணையை உட்கொண்டபின், மக்களுக்கு நற்கருணை வழங்கும் முன் வாசிக்க வேண்டும்.

2.4. நற்கருணை வழங்குதல்

அருள்பணியாளர் நற்கருணையை உட்கொண்டபின் பீடபணியாளர்களுக்கும், நம்பிக்கை யாளர்களுக்கும்  நற்கருணையை வழங்குவார். அவ்வாறு வழங்கும் போது, நற்கருணைத் துண்டை கையில் எடுத்துக் காட்டி “கிறிஸ்துவின் திருவுடல்” என்று  நம்பிக்கையாள் கேட்கக் கூடிய அளவில் சப்தமாகச் சொல்வார். நம்பிக்கையாளரோ அதே தொனியில் “ஆமென்”  என்று சொல்லி விட்டு நாக்கை நீட்டி நற்கருணையை வாங்குவார் இந்த ஆமனுக்கு ‘ஆம், நான் கிறிஸ்துவின் உடல் என்று நம்புகிறேன்’ என்று பொருள். 

அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை அருள்பணியாளர் உட்கொள்வது மிக அவசியமானது. அப்பொழுதுதான் அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலியை நிறைவு செய்கிறார். அதேபோல் அவர் அப்ப  இரசகுணங்களில் நற்கருணை உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில அருள்பணியாளர் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை மட்டும் உட்கொண்டு நற்கருணையை மக்களுக்கு வழங்கச் செல்வதைப் பார்க்கிறோம். இது சரியல்ல.

கூடிய வரையில் நம்பிக்கையாளர்களுக்கும் அதே திருப்பலியில் வசீகரம் செய்ய அப்பங்களை வழங்குவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. 

அடுத்து யார் யார் நற்கருணையை வழங்கலாம்? கைகளில் நற்கருணையை வாங்கலாமா? அப்படி யானால் அதை  எப்படி வாங்கி உட்கொள்வது? போன்ற கேள்விகள் எழுகின்றன. 

சாதாரணமாக திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளரும், மற்ற அருள்பணியாளர்களும், திருத்தொண்டரும்(களும்) திவ்விய நற்கருணையை மக்களுக்கு வழங்குவார்கள். மற்ற அருள்பணியாளர் களோ, திருத்தொண்டரோ இல்லாதபோது இதற்காக நியமிக்கப்பட்ட அருள்சகோதரிகளும், இருபால் பொது நிலையினரும் நற்கருணையை மக்களுக்கு வழங்கலாம். இவர்கள் (அசாதாரன) சிறப்பு பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் (Extra - Ordinary Ministers of Holy Communion). மறைமாவட்ட  ஆயர் மட்டுமே (பங்கு பணியாளர் அல்ல) ஒரு குறிப்பிட்ட தருணத்திற்குத் தனித்தனியாக இவர்களுக்கு அங்கிகாரம் கொடுப்பார். அவசியமானபோது நிரந்தரமாகவும் நற்கருணை  வழங்க அனுமதிக்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து பங்கு அருள்பணியாளர் இவர்களின் பெயருடைய பட்டியலை ஆயரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு  அனுமதிக்கப்பட்டவர்கள் திருப்பலியில் மட்டுமல்ல, நோயாளிகளுக்கும் நற்கருணையை எடுத்துச் சென்று வழங்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து அனுமதிக்க சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். அவையாவன :

1. வேறு அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ, பீடத்துணைவரோ (ழிஉலியிதீமிe)  இல்லாத சூழ்நிலை,
2. இவர்கள் மற்றொரு மேய்ப்பு பணியின் காரணத்தால் அல்ல உடல் நலக்குறைவு காரணத்தினால் திருப்பலி
யில் நற்கருணை வழங்க முடியாத நிலை.
3. நற்கருணையை உட்கொள்வோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் திருப்பலியை நிறைவேற்றும்
அருள்பணியாளர் நற்கருணை வழங்கினால் நீண்ட நேரம் கெடுக்கும் என்ற நிலை.
  சில சமயங்களில் மறைமாவட்ட ஆயர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் நற்கருணை வழங்க மற்றவர்களைத்  தேர்வு செய்து அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தனிப்பட்ட அருள்பணியாளருக்கு வழங்கலாம். மற்றவர்கள் நற்கருணையை வழங்க அனுமதியளிக்கும் போது பின்வரும் வரிசைக் கிரமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வாசகர் (Lector), பெரிய குருமட மாணவர், ஆண்பால் துறவி, பெண்பால் துறவி, வேதியர், இருபால் பொது நிலையினர். மறைமாவட்ட ஆயர் சூழ்நிலைக்கேற்ப இந்த வரிசைக் கிரமத்தை மாற்றலாம்.

இவ்வாறு நற்கருணை வழங்கும் அசாதாரண பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சியும், நற்கருணை பற்றிய அறிவுரையும் வழங்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட விதிவிலக்கு நம்பிக்கையாளர்களுடைய ஆன்ம நலன்களுக்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவும் மட்டுமே வழங்கப்படுகிறது. (காண் Immensae Caritatis ஜனவரி 25, 1973).
இந்த அசாதாரண நற்கருணை பணியாளர் தங்களுக்குத் தாங்களே நற்கருணையை வழங்கக் கூடாது. அருள்பணியாளரிடமிருந்து நற்கருணையை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

உரோமை திருவழிபாட்டு பேராலயத்தினால் அனுமதிக்கப்பட்ட மறைமாவட்டங்களில் நம்பிக்கையாளர் கைகளில் நற்கருணையை வாங்கி உட்கொள்ளலாம். அவர் தமது வலது கையால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ள தமது  இடது கையின் மேல் நற்கருணையை வாங்க வேண்டும்.  பிறகு தமக்கு அடுத்து வருகிறவருக்கு இடம் கொடுத்து சற்று விலகி அங்கேயே தமது வலது கையால் எடுத்து உட்கொள்ள வேண்டும். எக்காரணத்திற்கும் நற்கருணையை தம் அமரும் இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

நற்கருணையை நாக்கில் வாங்கும்போது ஒருவர் நின்று கொண்டோ முழங்காலிலிருந்தோ வாங்கலாம். நின்று கொண்டு வாங்குவோர் அதற்குமுன் தலைவணங்கி வாங்க வேண்டும். முழங்காலில் இருந்துக்கொண்டு நாக்கில் நற்கருணை வாங்குவோர் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் முழங்காலில் இருப்பதே வணக்கத்தின் அடையாள மாகிறது.

 2.5. திருவிருந்துக்குப் பின் அமைதி

மக்கள் அனைவரும் நற்கருணை உட்கொண்ட பின் திருபாத்திரங்களை அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ சுத்தம் செய்யும் போது, திருவிருந்து பாடல், நிறுத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து  மக்கள் அமைதியான முறையில் தங்கள் உள்ளத்தில் உரையாடுவர். இந்த அமைதி, வழிபாட்டைத் தன்மயமாக்க அவசியம்.

 3. இறுதி  நன்றி கூறுதல்

திருவிருந்து பாடலையும், அதன் முடிவில் இடம் பெறும் அமைதியான தனிச் செபத்தையும் தொடர்வது
‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு.’ இந்த மன்றாட்டை ‘மன்றாடுவோமாக’ என்று அருள்பணியாளர் கூறிவிட்டு தந்தையாகிய இறைவனுக்கு நன்றி கூறிச் செபிக்கிறார். அதாவது வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் கிறிஸ்துவின் திரு உடலுக்கும், திரு இரத்தத்திற்கும் நன்றி கூறி செபிக்கிறார். மேலும் திருப்பலிக்காகவும், அதன் வழியாகக் கிடைக்கும் அருள் அடையாளக் கொடைகளுக்காகவும் நன்றி கூறுகின்றார். இதன் பயனாகக் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழத் தேவையான வரங்களுக்காகவும் செபிக்கிறார். இதன் முடிவில் மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி நன்றி மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.

இறுதி சடங்குகள்

திருப்பலிக்குத் தொடக்கச் சடங்குகள் போல் இறுதிசடங்குகளும் உண்டு. ஆனால் இவை மிகச் சுருக்கமாக அமைகிறது. இதில் அறிவிப்புகள், வாழ்த்தும் ஆசியும் அனுப்பி வைத்தலும் ஆகிய கூறுகள் அமைந்துள்ளன.     
1.அறிவிப்புகள்
இறுதி நன்றி மன்றாட்டுக்கு பின் அருள்பணியாளரோ அல்லது வேறோருவரோ முக்கியமான தகவல்களை மக்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தால் அவற்றை சுருக்கமாக அறிவிப்பார். திருமண அறிவிப்புகளும் இங்கு இடபெறும்.
இந்த அறிவிப்புகளை திருபீடத்திலிருந்தோ, வாசக மேடையில் இருந்தோ கொடுக்கக் கூடாது.  மாறாக “திருபீடமுற்றமும் அதன் அமைப்பும்” என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்டது போல் ‘அறிக்கை மேடையில்’ இருந்து அல்லது வேறோரு ஏற்புடைய இடத்திலிருந்து கொடுக்க வேண்டும். வெள்ளி பொன்விழா கொண்டாடும் அருள்பணியாளர்களுக்கும் அருள்சகோதரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நேரம் இதுவல்ல. திருப்பலி முடிந்தபின் இதை செய்ய வேண்டும்.

 2. இறுதி வாழ்த்தும் ஆசியும்
இறைவாழ்த்தோடு திருப்பலியைத் தொடங்கியது போல் திருப்பலியின் முடிவிலும் “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக”  என்று சொல்லி மக்களை வாழ்த்துகிறார். அவர்களுடைய பதிலுக்குப் பின் அருள்பணியாளர் தமது இறுதி ஆசிரை “எல்லா வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவராக”  என்று சொல்லி வழங்குகிறார். மக்கள் பதிலாக “ஆமென்”  என்று சொல்லி ஏற்றுக்கொள்கிறார்கள். பற்பல ஆண்டின் சிறப்புக்காலாம் விழாக்களுக்கு ஏற்றாற்போல் சிறப்பு ஆசீரும் இங்கு வழங்கலாம்.

 3. அனுப்புதல்

திருப்பலி முடிந்ததும் தங்கள் பணிவாழ்வுக்குத் திரும்பி செல்லுமுன்“சென்று வாருங்கள் (வாழுங்கள்) திருப்பலி நிறைவேறிற்று”  என்றோ  “ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்க சென்று வாருங்கள்”  என்றோ,
“ உங்களது வாழ்வால் ஆண்டவரை மாட்சிப்படுத்த அமைதியுடன் சென்று வாருங்கள்”  என்றோ சொல்லி அனுப்பிவைக்கிறார். மக்கள் “இறைவனுக்கு நன்றி”  என்று சொல்லி பதில் கூறுகிறார்கள்.

 முடிவுரை

திருப்பலி வேறு, வாழ்க்கை வேறு அன்று. இரண்டுக்குமிடையே நெருங்கியத் தொடர்புண்டு. வாழ்வில் எதை நாம் விசுவசிக்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ அதையே திருப்பலியில் கொண்டாடுகிறோம். எனவே நாம் வாழ்விலிருந்து வளர்வதே வழிபாடு என உணர்வோமாக.

குறிப்பு : திருப்பலியில் மூன்று இடங்களில் ஆர்ப்பரிப்புகள் (Proclamations)  உண்டு.  இவை பாடபட வேண்டுமே தவிர, வாசிக்கப்படக் கூடாது.

அவையாவன.
1. நற்செய்தி பறைசாற்றும் முன் “அல்லேலூயாவும்”,
2.  வசீகரத்துக்குப் பின் “நம்பிக்கையின் மறைபொருள்” என்பதும்
3. “இவர் வழியாக, இவரோடு, இவரில்..... ”என்ற இறுதி புகழுரையும்.




பிக் பாஸ் ( BIG BOSS)

பிக் பாஸ்   ( BIG BOSS)



- திருமதி.கேத்ரின் ஆசா,  திருச்சி

இன்று தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டுக்இன்று தமிழ்நாட்டையேபுரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

பிக் பிரதர் லண்டனில் ஒலி பரப்பான போது நம் நாட்டு பிரபல நடிகை ´ல்பா ய­ட்டி பங்கேற்ற போது இன வெறியுடன் நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சை நடிகையை பிரபலமாக்கியது. இந்தியாவில் இந்த ஷோ பிரபலமாக இந்தியில்  பிக் பாஸ் ஆனது.  இந்தியிலிருந்து இப்போது தமிழில் பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களது வீடு, புல்வெளி, நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், டாய்லெட், பாத்ரூம், பெரிய ஹால், பரிட்ஜ், இரண்டு பெட்ரூம் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று  தனித்தனியாக இருக்கிறது. மொத்தம் 51 கேமராக்கள். ஆங்கர் போட்டியாளருடன் பேசும் அறை என்று விஸ்தாரமாக இருக்கிறது. வீட்டுக்குள் செல்போன், டிவி, நியூஸ் பேப்பர், வார, மாத பத்திரிக்கை எதுவும் கிடையாது. படிக்கவோ, எழுதவோ பகலில் தூங்கவோ கூடாது. சமையல் வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்.

100 நாட்கள் எப்படித்தான் கடக்கப் போகிறார்கள் என்பது திரில், 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ள இவர்கள் தவறு செய்யும் போது, விதிகளை மீறும்போது எலிமினேட் என்று  வெளியேற்றப்படுகிறார்கள். வேலைகளை பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. கலந்து கொள்பவர்கள் எல்லோரும் பிரபலம் என்பதால் ஈகோ தலைதூக்குகிறது. வீட்டு நினைப்பு, மன அழுத்தம் பங்காளர்களை படபடக்க செய்யலாம்.

மற்றவர்களின் தனிப்பட்ட வி­யத்தில் தலையிடுவது நமக்கு பிடித்த ஒன்று. குறிப்பாக பெண்கள் சீரியல் பார்ப்பதையே மறந்துவிட்டு இந்நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் இந்நிகழ்ச்சியின் தாக்கத்தைப் புரிந்துக் கொள்ளலாம்.  தொகுப்பாளர் கமலஹாசன் என்பதால் நிகழ்ச்சியைப்  பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டது. பார்வையாளர்கள்,  பங்காளர்களின் உளவியல், மனநிலை பழக்கவழக்கம் எல்லாவற்றையும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டார்கள்.

பல்வேறு தரப்பு மக்களை நிகழ்ச்சி கவர்ந்தாலும்,  பெரும்பாலான மக்களால் நிராகரிக்கப்பட்ட வசைவுக்குள்ளான நிகழ்ச்சியாகவும் இது  இருக்கிறது. சமுதாய, கலாசார சீர்கேடுகள் என்று வர்ணிக்கப்படுகிறது. ஒரே கூரையில் 52 கேமராக்களுடன் வாழ்ந்தாலும் நம் நாட்டு மக்களின் மதிப்பை பெறுவது கஷ்டம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின்  பேச்சு, நடவடிக்கை எல்லாம் எழுதி கொடுத்து நடிக்கச் சொல்வதுபோல் செயற்கையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி,  தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் விவசாய பிரச்சனை, எரிவாயு பிரச்சனை, ஆட்சியாளர்களின் நாடகங்கள் போன்ற வாழ்வாதார பிரச்சனைகளை திரைமறைப்பு செய்கிறது என்று சொல்லலாம்.

யாரோ சம்பாதிக்க, யாரோ பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள பிக் பாஸ் மூலம் நாம் அனைவரும் பாடுபடுகிறோம் என்பது தான் உண்மை, என்றாலும் ஒரு நிகழ்ச்சி சமூகத்தில் இவ்வளவு பெரிய நேர்மறையான ஆன மாற்றத்தை கொண்டு வந்திருப்பது, இதுவே முதல் முறை என்பதையும்  மறுக்க முடியாது.

கடமையும் மடமையும் கடமையில் விழித்தெழு !

கடமையும் மடமையும்
கடமையில் விழித்தெழு !

அகிலத்தை படைத்த
ஆண்டவனையும்
ஆழ்ந்து அறிவது
அவரவர் கடமை.

இறைவன் தந்த
இதயத்தை  கொண்டு
இறுமாப்பை அழிப்பது
இன்னொரு கடமை.

அறியாமல் வாழும்
அவனியர் பலரை
அறிவாளி ஆக்குவது
ஆன்றோர் கடமை.

அறிவை வளர்த்த
ஆசானை நாளும்
மறவாமல் வாழ்வது
மாணவர் கடமை.

நீதியை காக்க
வீதிக்கும் கூட
போராட வருவது
பாரினர் கடமை.

சாதியயனும் பேதியை
செவிதனில் புகுத்தினோரை
அவனியில் அழிப்பது
அனைவரின் கடமை.

நோகாமல் பெறுவது
நெடுங்காலம் நிற்காது
என்பதை எண்ணுவது
பெறுவோரின் கடமை.
கொடுத்த வாக்கை
குழப்பாமல்  காப்பது
தலைவணங்கி கேட்போரின்
தலையாய கடமை.

தன் மக்கள் வாழ
தன்னலமே இல்லாமல்
தர்மத்தை காப்பது
தலைவரின் கடமை

சேற்றினில் பிறந்து
சோபாவில் தவழ்ந்தாலும்
வந்த பாதையை
வருடி பார்ப்பது
உயர்ந்தவரின் கடமை.


 மடமையை புதைத்திடு...


இச்சையின் உச்சத்தால்
கருவினில் உருண்டதை
குப்பையில் துப்புவது
பெற்றவளின் மடமை.

உரிமையைக் காக்க
வெறியோடு வருவோனை
உறிகொண்டு அடிப்பது
வலியவரின் மடமை.

அந்தஸ்தை காக்க
அவனியை கவர்வது
அதிகாரம் கொண்ட
ஆட்சியர் மடமை.

தன் குறையை
தரணிக்கு மறைக்க
மற்றவர் குறையை
முன்வைப்பது தீயவர் மடமை.


அதிக அளவில்
ஆதரவு கொடுத்தால்
பொய்யும் பாரினில்
புதுமையாவது இன்றைய மடமை.

Saturday 23 September 2017

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

     15. பயன் தருவோம்

Dear Friends, உங்கள் அறையை சற்று சுற்றிப் பாருங்கள். உங்கள் அறையில் உள்ள சில பொருட்கள் உங்களுக்கு வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் பணிவை கற்றுத் தந்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்தீர்களா? ஆமாங்க, உங்கள் அறையை நீங்கள் சற்று உற்றுப் பாருங்கள். நீங்கள் அதை உணர்ந்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, நாம் சாதாரணமாக நினைக்கும் தொடப்பத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவைப்பட்ட போதெல்லாம் எழுந்து வந்து அறையை சுத்தம் செய்து விட்டு  அவ்வாறு சுத்தம் செய்யும் போதெல்லாம் தன்னையே கொஞ்சம்  தியாகம் செய்து தேய்ந்து கொண்டு, ஏன் கொஞ்சம் அசுத்தத்தையும் சுமந்து கொண்டு எதுவுமே புரியாதது போல மூலையில் போய் அமர்ந்து கொள்கிறது. அதற்கு பெறுவதில் அல்ல தருவதில் தான் மகிழ்ச்சி.

பேனாவை எடுத்துக்கொள்வோம். நீங்கள் சிந்திப்பதை எழுத்தாக தந்துவிட்டு அதுபோல எழுதப்படும்போது நம்மையே கரைத்துக் கொண்டு எழுதி முடித்த பின் எதுவுமே நடவாதது போல மேஜையில் போய் அமர்ந்து கொள்கிறது. அதற்கு பயன் பெறுவதைவிட பயன் தருவதான் வாழ்க்கை.

இன்னுமொரு உதாரணமாக  டார்ச் லைட்டை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் இல்லை என்றால் உடனே எழுந்து நமக்கு அச்சத்தைப் போக்கி நாம் நடப்பதற்கு, பணிகளை செய்வதற்கு வழிகாட்டி பிறகு கரண்ட் வந்தவுடன் என் பணி முடிந்து விட்டது என சென்று விடுகிறதே அதன் நோக்கம் பயன் பெற வேண்டும் என்பதல்ல, மாறாக பயன் அளிக்க வேண்டும் என்பதே.

நம் தலைவர் இயேசு,  மானிட மகன் பணிவிடை பெறுவதற்கு அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்கிறார். இந்த உலகம் இலாப நோக்கோடு செயல்படுகிறது என்றால் அது மிகையாகாது. இதனை நான் உங்களுக்குச் செய்தால் எனக்கு என்ன இலாபம்? என்றுதான் பல சமயங்களில் நம் மூளை கணக்குப் போடுகிறது. அதனை நாம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் வேண்டினால் கடைபிடிக்க நேரிடலாம். ஆனால் அதனையே வாழ்க்கையின் கொள்கையாகக் கொண்டால் வாழ்க்கை இனிக்காது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமே ஒன்றுக்கு ஒன்று துணைபுரியும் வண்ணம்தான் கடவுள் நம்மை படைத்துள்ளார். விலங்குகளின் வேஸ்ட் தாவரத்திற்கு உரம். தாவரங்கள் பல விலங்குகளின் உணவு. நாம் வெளியே விடும் கார்பன் - டை - ஆக்ஸைடு தாவரங்களின் உயிர்காற்று. தாவரங்கள் வெளியே விடும் ஆக்சிஜன் நம் உயிர் காற்று. தருவதும், பெறுவதும் இயற்கை. ஒன்றை மட்டும் கொள்வோம் என்றால் அது செயற்கை. 

சரிங்க, நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. நான் பங்குத்தந்தை, அல்லது நான் ஒரு நிறுவனத்தின் தலைவர். எனக்குக் கீழே பலர் பணிபுரிகின்றனர். அவர்கள் தானே எனக்கு பணிபுரிய வேண்டும், நானா அவர்களுக்கு பணிபுரிய வேண்டும்?    பாஸ் என்ற வார்த்தைக்கும் லீடர் என்ற வார்த்தைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதை பார்த்தீர்களா? பாஸ் என்பவர் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கட்டளைகளை பிறப்பிப்பவர். தான் சொன்ன அனைத்தும் செய்யப்பட்டு விட்டனவா என்று அறிந்து அதற்கேற்ப தமக்கு கீழே இருப்பவர்களுடன் நடத்துபவர். ஆனால் லீடர் என்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதை  தமக்குக் கீழே இருப்பவர்களுடன் உரையாடுபவர். அவர்களோடு சேர்ந்து பணிபுரிபவர். பணியாளர்களின் இன்ப, துன்பங்களை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துபவர். அவ்வப்பொழுது பணியாளருக்குத் தேவையான ஆறுதலையும், அரவணைப்பையும், பாராட்டையும் வழங்குபவர்.

நான் அமெரிக்கா சென்றபோது என்னிடம் லேப்டாப் இல்லை. ஒருநாள்  பிடைரிக்  என்பவர் என் அறைக்கு  வந்தார். என்னிடம் லேப்டாப் இல்லை என்பதை கவனித்து விட்டார். உடனே வீட்டிற்குச் சென்று ஒரு பயன்படுத்திய லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்து, பாதர், என்னிடம் இரண்டு  லேப்டாப் உள்ளது. எனக்கு பயன்படாத அனைத்தும் தேவைப்படுவோருக்குத் தானே சொந்தம். எனவே என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார். அமெரிக்காவில் தனக்குத் தேவைப்படாத Furniture மற்றும்   Electronic Things ஐ வீட்டிற்கு முன்பு வைத்து விடுகிறார்கள். தேவைப்படுவோர் அதனை இலவசமாக எடுத்துச் செல்லலாம். 

அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் Salvation Army மற்றும்   Good Will Store  போன்ற சமூகப் பணி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அதாவது வீட்டில் உள்ள ஆடைகள், ஆபரணங்கள், Furniture, புராதனப் பொருட்களை இந்த நிறுவனங்களுக்கு இலவசமாக மக்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது கொடுத்து விடுவார்கள். அதனை குறைந்த விலைக்கு விற்று அந்த வருவாய் மூலம் அவர்கள் சமூகப்பணி செய்கிறார்கள். அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் பெயர் ரொன்ல்ட். அவர் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கம்பெனிக்கு செல்லும்போது கோட், சூட், போட்டுக்கொண்டு  செல்வது வழக்கம். அவர் ஓய்வு பெற்றுவிட்டதால்   Salvation Army  நிறுவனத்திற்கு எல்லா கோட், சூட்டையும் கொடுத்துவிட்டார். பிறகு 2 மாதம் கழித்து அவர் ஒரு சுபநிகழ்ச்சிக்குப் போக வேண்டியிருந்தது. ஆகவே Salvation Army   கடைக்குச் சென்று 50 டாலர் கொடுத்து  ஒரு கோட், சூட் வாங்கி வந்தார். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர் உணர்ந்து கொண்டார் அந்த கோட், சூட் அவர் நன்கொடையாகக் கொடுத்தவைகளில் ஒன்று.
நாம் வாழும் பூமி (குறிப்பாக இந்திய அரசியல்வாதிகள், இந்திய அரசுப் பணியாளர்கள்) எனக்கு என்னப் பயன் என்றுதான் எல்லா செயல்பாடுகளுக்கும் கேட்கிறார்கள். ஆனால் நான் வாழும் ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு,ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் என்னால் இயன்ற பயனைத் தருவேன் என்று வித்தியாசமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டலாம் வாருங்கள்.
     -  (தொடரும்...)

அலைபேசியும் கொஞ்சம் ஆன்மீகமும்

அலைபேசியும் கொஞ்சம் ஆன்மீகமும்

- நல்லை ஆனந்தன்

அப்பா, எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வேணும். எட்டாவதுதான் முடிச்சிருக்க அருண். பத்தாவது  முடிச்சதும் கண்டிப்பாக வாங்கித் தருவன். சுரேஷ், கோபி, சுந்தர், மாலதி, ரோசரி, அமலா எல்லாரும் போன் வச்சிருக்காங்கப்பா...... உங்கப்பாம்மா வாத்தியாருத்தான. நீயும் கேட்டு வாங்குடானு கேவலமாகப் பேசுறாங்கப்பா.

இப்போ உனக்கு அது தேவையில்லை அருண். அதில் படிக்கக் கூடாததைப் படிப்பீங்க. பார்க்ககூடாததைப் பார்ப்பீங்க. அதனால படிக்கிற வேலையை மட்டும் பாரு.  அப்ப..... அம்மாவும் நீங்களும் போன் வச்சீருக்கீக........ அது எதுக்கு?

இதற்குபின் அந்த வீட்டில் நடந்ததை உங்கள் உலகத்திற்கு விட்டுவிடுகிறேன். அடுத்த நாள் மாலை பெற்றோர்கள்  வீடு வந்து பார்த்த போது அவர்களது செல்ல மகன் அருண் பிணமாக தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தான். 
இதைப் படிக்கும் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கலாமா?

1.  அருணின் பெற்றோர் செய்தது சரியா? தவறா?
2. அருண் இறந்ததற்கு காரணம் என்ன?
3. ஏன் இந்தக்காலப் பிள்ளைகள் செல்‡வராசுகளாகவும், செல்வராணிகளாகவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்?

கொடைக்கானலில் மலைவிளிம்பில் நின்று செல்பி எடுத்த இளைஞர் கால் வழுக்கி, பாதாளத்தில் விழுந்து நொறுங்கிப் போனார்.காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்த  மல்லிகா எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சுக்கு நூறானார். இதே போல ஆயிரம் உதாரணங்களை நீங்கள் படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள்.

அலைபேசியால் நன்மைகளும் உண்டு. ஜனவரியில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் புரட்சி முழுக்க அலைபேசியின் ஒத்துழைப்பிலே சாத்தியமாயிற்று. மாதா பிதா குரு தெய்வம் என்ற நிலைமாறி மாதா பிதா கூகுள் தெய்வம் என்றாகிவிட்டது. குரு கற்று தராததை, குருவிடம் கற்க முடியாததை, கூகுள் இன்று விரல் தடவலில் கற்றுத் தருகிறது. 

கத்தி கொண்டு காயை வெட்டலாம். கையையும் வெட்டலாம்? எது அறிவுடைமை? காயை வெட்டுவதா? கையை வெட்டுவதா? அருண் விசயத்திற்கு வருவோம். அருணின் பெற்றோர் மகனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்திருக்க வேண்டும். அத்தோடு அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். தங்களிடம் போன் இருப்பதை மறந்து, அருணுக்கு மறுத்து, ஒரு பதிமூன்று வயது இளைஞன் வாழ்வை பாழடித்து விட்டார்கள்.

கணினி உலகில் சுந்தர் பிச்சைபற்றி நான் கூறத் தேவையில்லை. உலக அரங்கிலே அருண் என்ற தமிழனும், சுந்தர் பிச்சையாக வந்து உயர்ந்திருக்கலாம். கெடுத்து விட்டார்கள் பாவிகள். தண்ணீர் பற்றியும், தண்ணீர் ஈஈஈ பற்றியும் பலர் பலவிதமாக எழுதலாம். ஆனால் வேதியராக இருப்பவர் தமது கட்டுரையில் கொஞ்சம் ஆன்மீகமும் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய திருச்சி தமிழரசியின் கருத்துக்கு மதிப்பளித்து ஒரு நாலுவரி ஆன்மீகம். 
அலைபேசியில் யாராவது கூப்பிட்டால் அவர் பெயர் போட்டு  காலிங் என்று காட்டும். நாம் அக்செப்ட் பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது கேன்சல் பட்டனை அழுத்தி அழைப்பவரை புறக்கணிக்கலாம்.

ஆண்டவரும் நம்மை அனுதினமும் அழைக்கிறார். மரியா முதல் திருத்தூதர்கள் வரை அக்செப்ட் பட்டனை அழுத்தினார்கள். பணக்கார இளைஞனும், பண ஆசை பிடித்த யூதாசும் கேன்சல் பட்டனை அழுத்தி விட்டார்கள்.

அலைபேசி சிறப்பாகச் செயல்பட அது பேட்டரி சார்ஜ் செய்யப்பட வேண்டும். செல்போன் டவர்க்கு அருகில் இருந்தால் கவரேஜ் சிறப்பாகக் கிடைக்கும்.

திருப்பலியில் நற்கருனை வழியாக நமது ஆன்மா சார்ஜ் ஆகிறது. செல்போன் டவர்போல ஆலய டவருக்கு அருகில் சென்றாலே கவரேஜ் சிறப்பாகக் கிடைக்கும். கடவுளோடு தெளிவாகப் பேச முடியும்.

சில நேரங்களில் நாம் தொடர்பு கொள்ளும்போது இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து எண்களும் உபயோகத்தில் உள்ளன. தயவுசெய்து காத்திருக்கவும் என்ற குரல் கேட்கும். சில நேரங்களில் கடவுளிடம் நாம் விண்ணப்பிக்கும் போது, காத்திருந்துதான் அவரோடு பேசமுடியும். அவரிடம் வாங்க முடியும். (என்ன ஏதாவது புரிகிறதா?).

மத்தேயு நற்செய்தியில் இயேசு, உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் வலக்கை உங்களை பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி எறியுங்கள் என்கிறார் (காண்.மத் 5: 27-32) கண்ணையும் காலையும் இழந்தாவது விண்ணகம் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தவே இப்படிச் சொன்னார். அலைபேசி விசயத்திலும் எனது கருத்தும் அதுவே. கண்ணும் கையும் பாவத்தில் விழச் செய்தால் அதை பிடுங்கி எறியுங்கள் அல்லது வெட்டி எறியுங்கள். அலைபேசியை நிறுத்தி வையுங்கள்.

ஆலயத்திற்குள் வந்தவுடன் அலைபேசியை நிறுத்துங்கள். அடுத்தவர்களோடு அல்ல, ஆண்டவரோடு மட்டுமே ஆலயத்தில் தொடர்பில் இருக்கவும். படைத்தவரோடு தொடர்புகொள்ள ஆலயம் வரும்போது படைப்புகளோடு நமக்குத் தொடர்பு தேவையில்லை. 
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள். தோளில் செல்போனை வைத்துக் கொண்டு, தலைசாய்த்து காதை அதில் வைத்து கழுத்து சுளுக்கு வந்தவர்போல வாகனம் ஓட்டுபவர் ஒன்று காயம் படுவர் அல்லது மற்றவரை காயப்படுத்துவர். வாகனம் ஓட்டும்போது அழைப்பு வந்தால் ஓரமாக சென்று வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேச வேண்டும். சிலநேரங்களில் வண்டி ஓட்டும்போது நமக்கு வரும் அழைப்பு எமனிடமிருந்து வந்ததாகக் கூட இருக்கும்.

அன்புப் பெற்றோரே ! வயலும் வாழ்வும் காலத்திலே இருக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். அன்பு இளையோரே! உங்கள் பெற்றோர் உங்களை உருவாக்க உழைக்கிறார்கள். அவர்களோடு ஒத்துழையுங்கள். பெற்றோரும் பிள்ளைகளும் மனந்திறந்து உரையாட வேண்டிய அவசரமான அவசியமான நேரம் இது. தவறினால் விபரீத விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

  வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த கொடை. அதை அழகுபடுத்தாவிட்டாலும் சரி. அசிங்கப்படுத்திவிடாதீர்கள்  என்று கேட்டுக் கொள்வதன்றி வேறொன்றறியேன் பராபரமே!

முதியோரே... இளையோரே இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 

உலகை உயர்த்தும் பெண்மை

உலகை உயர்த்தும் பெண்மை

சகோ. விமலி FIHMஇதயா கல்லுVரி, குடந்தை

பெண்மை வாழ்கென்று
கூத்திடு வோடா !
பெண்மை வெல்கென்று
கூத்திடு வோடா !  
 - மகாகவி பாரதி

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? மூன்று, மூன்றும் பொட்டைகள். எனக்கு தூக்கமே வரல. எப்படி இவைகளை கர சேர்க்கிறது? திருமணம், வரதட்சனை. எப்படி சமாளிக்க போகிறேனோ தெரியவில்லை. இது போன்ற சோகக்குரல்கள் நம்மிடையே ஒலித்துக் கொண்டுதான் உள்ளன.  
பெண்கள் ஆண்களோடு சமநிலையில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் பெண்களைப் பற்றி தனித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஆண்-பெண் இருவருமே இவ்வுலகிற்கு இன்றியமையாத வர்கள் ஒருவரிலிருந்து மற்றவர் தனித்து வாழ முடியாது. ஆனால் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமாக மாறி வருகிறது. ஒரு புறம் ய பண்கள் இன்றைய அறிவியல் சூழலுக்கு ஏற்ப ஆண்களைவிட பெண்கள் முன்னேற்றம் அதிகமாக உள்ளது. ஆனால் மறுபுறம் சமுதாயத்தில் பெண் குழந்தைகள் தன் இருப்புக்காகவும், உயிர்வாழ்வதற்காகவும் மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

குடும்ப வன்முறை

குடும்பம் பெண் குழந்தைகளின் யாதார்த்தமான  உலகத்தைக் களவாடிவிடுகிறது. பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் வளர்ப்பு முறையே அவளை ஓர் ஆணுக்கான பொருளாக தயாரிப்பதாகவே தொடர்கிறது. ஐந்து வயதிலேயே பலவிதமான பண்பாட்டு கட்டுப்பாடுகளை பெண் குழந்தைகள் மேல் சுமத்தப்படுகிறது.  ஏய் நீ விழுந்து கையை காலை உடைச்சுக்கிட்டா பிறகு எவண்டி உன்னைக் கட்ட வருவான்? என்ற இந்தக் குரலை கேட்டு வளராதவர்கள் எத்தனை  பேர்? கால் உடைந்து விடக் கூடாது  என்ற அக்கறை தேவையாகக் கூட இருக்கலாம். ஆனால் உன்னை கட்டிக்கொள்ள ஓர் ஆண் வாரவிட்டால் உன் கதி  என்ன என்ற கேள்வி பெண் குழந்தைகளின் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது. பால்ய விவாகம் என்ற சடங்கைதான் ஒழித்திருக்கிறோம். அந்தத் தத்துவத்தை இன்னும் வாழவைத்தக் கொண்டே இருக்கின்றோம்.

சமூக வன்முறை

சமூக அறமானது பெண் குழந்தைக்கு ஒன்றாகவும் ஆண் குழந்தைக்கு ஒன்றாகவும் அமைகின்றது. பெண்களைப் பொறுத்தவரை சமுதாயத்தின் அளவுகோல் வேறு. சட்டத்தின் அளவுகோல் வேறு. சமூக வன்முறையும் குடும்ப வன்முறையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்றுவதற்கு பாலியல் முரன்பாடுகளே முதன்மையானதாக உள்ளது. சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தத்துவ அறிஞர் சிமோன்திபவார் என்பவர் கூறுவது, ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண்களின் ஆளுமையும் மனநிலையும் உடைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு வருகிறது. ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதை நாளிதழ்களில் அன்றாட செய்தியாக பார்க்கின்றோம். மாணவியை ஆபாச வீடியோ எடுக்கும் அளவிற்கு நம் நாடு சீரழிந்துவிட்டது.

சட்டத்தின் வன்முறை

பெண்களுக்கென்றே பிரத்யேகச் சட்டங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும் ஏன் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறையவில்லை? இறைச்சிக்காகப் பசுவைக் கொல்வதைச் தேச விரோத செயலாகக் கருதுகிறார்கள், பெண் குழந்தைகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிச் சிதைக்கப்படுகிறபோது எங்கே போகிறார்கள்? ஏனென்றால் சட்டங்களைவிட அவற்றில் மலிந்திருக்கிற ஓட்டைகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும், பெண்களுக்குப் பாதகமாகவும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

வலியே வலிமையே தேவை
Feel the pain, Don't suffer என்று சொல்லும்போது,வலி என்பது வேறு, வல்லமை என்பது வேறு. ஒரு மரம் நன்றாக வளர்த்து  செழிப்பாக இருக்கும். ஆனால், வேகமாகக் காற்றடித்தாலும் அதற்கேற்ப வளைந்து கொடுத்துக்கொள்ளும். அதைப்போன்றுதான் பெண்களும் சூழ்நிலைக்கேற்பச் வலியையே வல்லமையாக மாற்றிச் செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றார்கள்.    அதேநேரம் தங்களின் சுயத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களால், அவர்கள் தாழ்ந்து போவதில்லை. அவர்களின் சுயமரியாதையை மேலும் விரிவடையச் செய்வதற்காக ஆழமாகப் பயணிக்கிறார்கள்.

பெண்கள் யானையைப் போன்றவர்கள். ஒரு யானையை அதற்கான எல்லை எது என்பதை அந்த யானைதான் முடிவு செய்யும். அதுபோல் பெண்களும் தங்களுக்கான எல்லைகளை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு வி­யத்தை தாங்கிக்கொள்ள முடியாது என்றால், பெண்கள் துணிந்து அதிலிருந்து வெளிவர வேண்டும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், தான் கண்டதை, கேட்டதை, நினைத்ததை அச்சமின்றிப் பகிர்ந்து கொள்ளவும், மனத்திண்மையுடன் விவேகமுள்ளவர்களாகச் செயல்பட பெண் குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்தத் தேசத்தின் சுவாசமாக உள்ள பெண் குழந்தைகளின் சுதந்திரத்தை இவ்வுலகின் சுவாசக்காற்றாக மாற்றுவோம். வீட்டிலும் பள்ளியிலும் குழந்தைகளை முக்கியமாகப் பெண் குழந்தைகளை அச்சமற்றவர் களாக, ஆற்றல் மிக்கவர்களாக, உறுதியுள்ளவர்களாக வளர ஊக்கப்படுத்துதல் என்பதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.

முடிவாக

  சமுதாயத்தில் நிலவும் பெண் குழந்தைகளின் வன்கொடுமைகளுக்கு காரணமாக அமைவது எது என்று ஆராயும்போது பாலினச் சமத்துவமின்மையே காரணமாக அமைகிறது. எனவே சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பாலினம் தொடர்பான நீதியையும், சமத்துவப் பார்வையின் இன்றியமையாமையும் தெளிவாக விளக்க வேண்டும். பெண்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு நிகழ்வுகளும் பெண்மையைப் போற்றுவதாக அமைய வேண்டும். பால் அடையாளத்தின் பொருட்டு பெண் குழந்தைகள் இழந்துவிட்ட எண்ணற்றவைகளை அவளுக்கானதாக்க, கை மாற்றும் காலமாக இனி வரும் காலம் உண்டென ஓங்கி உரைத்திடுவோம். பெண்களுக்கு முன்னுரிமைக் கொடுத்த இறைமகன் இயேசுவைப்போன்று, ஆண், பெண் இருவருமே சுகமாக, மகிழ்வாக வாழ்வதுதான் நீதியானது என்பதைத் தற்போது சில நல்லூள்ளங்கள் உணர்ந்து செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. அந்த எண்ணிக்கை அதிகரிப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது.

பெண்மையே மனிதரை காக்கும் தெய்வம்
பெண்மையே மனிதரில் வாழும் தெய்வம்
பெண்மையே மனிதரை பேணும் தெய்வம்
பெண்மையே போற்றுவோம் !
        உண்மையை ஏற்ப்போம் !

Saturday 9 September 2017

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு
17-09-2017
சீஞா 27:30, 28:7;   உரோ 14: 7-9;  மத் 18: 21-35

அண்மையில் மாடுகள் பிளாஸ்டிக் பேப்பரை சாப்பிட்டுவதை நேராகப்  பார்த்தேன். ஒருவர் கட்டி சோர் சாப்பிட்டு விட்டு கட்டி சோர் கட்டி வந்த பிளாஸ்டிக் பேப்பரை வெளியே போட்டார். அப்போது அங்கு வந்த பசுமாடு, பிளாஸ்டிக் பேப்பரிலுள்ள சாப்பாட்டையும், பிளாஸ்டிக் பேப்பரையும் சேர்த்து சாப்பிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி. பிளாஸ்டிக் பேப்பரை சாப்பிடும் விலங்குகள் விரைவில் இறந்து விடும் என்பதுத் தின்னம். சிறுபிள்ளைகள் சிலர் மண்ணை அள்ளி தின்று விடுகின்றனர்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
  தீயினும் அஞ்சப் படும்.
என்கிறார் வள்ளுவர். 
இறைவன் இனிமையானவர். மன்னிப்பவர். ஆனால் அவரின் பண்புகளைப் பின்பற்றாதவர்.  அவரின் பண்புகளைப் பின்பற்றாதவர். அவர் அவர்களின் தீயப்பண்புகளின் விளைவினை சந்திக்க வேண்டும். அந்தக் கருத்தினைத்தான் இன்றைய நற்செய்தி பகுதி எடுத்துக் கூறுகிறது.

  ஓர் அரசன், அவரின் பணியாளருக்கு 10 ஆயிரம் தாலந்து கடன் கொடுத்திருக்கிறான். ஒரு வெள்ளி தாலந்து என்பது 10 ஆயிரம் டாலருக்கு சமம்.(சுமார் 7.5 லட்ச ரூபாய்). பத்தாயிரம் தாலந்து என்பது,  ஒரு பெரும் தொகை என்பதைத் தான் குறிப்பிடும். அந்த பணியாளரிடம் அரசன் கடனைத் திருப்பி தர கேட்கிறான். பணியாளருக்கு உள்ளதையயல்லாம் விற்று கடனை அடைக்க ஆணையிடுகிறான் அரசன். ஆனால் பணியாளர், தன்னால் இயலாத நிலையைத் தெரிவிக்கிறான். அரசன் அவன் மேல் பரிவு கொண்டு, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கிறான். ஆனால் பெருந்தொகையிலிருந்து விடுபட்ட அந்த பணியாளர், தன்னிடம் 100 தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளரிடம் கடிந்து கடனைக் கேட்கிறார். ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி. (தற்போதைய மதிப்பிற்கு ரூ500/‡ என்று சொல்லலாம்) பல கோடி கடனை தள்ளுபடி வாங்கிக் கொண்டு, சில ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறான் அந்த  பணியாள். தன் தலைவரின் பரிவு பண்பினை உள்வாங்க மறந்து விட்டான். அதனால் அரசனின் சினத்திற்கு ஆளாகி, வாழ்வையே இழந்து விடுகிறான்.

இந்த உவமையின் பொருள் கடைசியாக தரப்பட்டுள்ளது. ‘உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் மன்னிக்கமாட்டார்’. இயேசு கற்று கொடுத்த செபத்தில் எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை, நாங்கள் மன்னிப்பது போல என்று சொல்கிறோம். ஆனால் கிரேக்க மூலத்தில், எங்கள் கடன்காரர்களை நாங்கள் மன்னிப்பதுபோல் என்றுதான் உள்ளது.

முதல் வாசகத்தில் சீராக்கின் முதுமொழி, ‘பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்கு பழியே பெறுவர்’ என்று கூறுகிறது. மீண்டும், ‘உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்ற வாக்கியத்தையும் கேட்கிறோம்.

  இத்தகைய பரந்த மனநிலை எப்படி சாத்தியமாகும்? இன்றைய இரண்டாம் வாசகத்தில் காணப்படும் பவுல் அடிகளாரின் மனநிலையை நாமும் பெற்றால் இந்தப் பண்பு நம்மில் குடியேறும். ‘வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்’. (உரோ 14 : 8)

பரிவு, நம்மை விட உயரச் செய்கிறது. -மேசன் கூலி.

பரிவு, பாவ காயங்களை குணப்படுத்தும்
பழிவாங்குதல் காயங்களை ஆழப்படுத்தும். - யஹன்றி வார்ட் பீச்சர்.

பரிவு ஒரு கலையைப் போன்றது. அதனை தினமும் பயிற்சி செய்தால்தான் அது வளரும்.  - காரன் ஆம்ஸ்ட்ராங்.

பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு
 10 - 09 - 2017
 எசே 33: 7-9;  உரோ 13: 8-10; மத் 18: 15-20

  உறவில் வாழ வேண்டியவர் மனிதர். உறவில்தான் மனிதர் நிறைவைக் காண்கின்றார். மன ஒன்றிப்பில் வருவதுதான் உறவு. ஆனால் மன ஒன்றிப்பு பல நேரங்களில் உடைகிறது. சிதைக்கிறது. பொருள்கள், வீண்பெருமைகள் அடிப்படையில்தான் இந்த உறவு உடைகிறது. இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் என்ற உறவின் கூட்டில் வாழ்கிறார் என்று இயேசு தன் வாழ்வின் இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே உறவின் தாக்கம்தான் மனிதரில் புதைந்திருக்கிறது. மனிதரின் ஒற்றுமையில்தான் இருப்பதாகவும் இயேசு கூறியுள்ளார் (மத் 18:20)

உடைந்தப் பானையை ஒட்ட வைப்பது அரிது. கரந்தப் பாலை மீண்டும் மடியில் ஏற்றுவதும் இயலாதது. ஆனால் அறுந்த உறவு மீண்டும் இணைந்திட முடியும். உறவில் ஏற்படும் முடிச்சுக்களை எப்படி அவிழ்க்க முடியும் என்று இயேசு வழி சொல்கிறார். மூன்று வழிகள்: முதலில் தனியாக சென்று, உறவு பிறழ்ந்தவருடன் உரையாடுங்கள். இதில் உறவு சீரடைந்தால், நீங்கள் உங்கள் சகோதரை மீண்டும் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள். அவரை மனமாற்றி விட்டீர்கள். சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். ஒரு நீதிபதி, குற்றவாளியைக் கேட்டாராம். உண்மையாகவே அவரை கொலை செய்தாயா? என்றாராம். அதற்கு குற்றவாளி, சற்று இருங்கள் சார். என் சாட்சியைக் கேட்டு சொல்கிறேன் என்றாராம். தனித்து சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் வெற்றி பெறா விட்டால், இரண்டு அல்லது மூன்று பேருடன் சென்று உறவுக்கு அழைப்புக் கொடுங்கள். நம் நாட்டில் கட்டை பஞ்சாயத்துக்கள் உண்டு. சிலருக்கு போலீஸ் ஸ்டேசன், கோர்ட் இவற்றிற்கு சென்று பணத்தை இரைத்த பிறகுதான் புத்தி வரும். இதற்கும் இணக்கம் இல்லையயனில் திருச்சபையிடம் கூறுங்கள். அதாவது நம்பிக்கையாளர் களின் திருக்கூட்டம். அங்கும் உறவுக்கு வழி  ஏற்படவில்லையயனில் விட்டுவிடுங்கள். இனி அவர் தன்னையே தனித்துக் கொண்டார் என்று விளக்கம் அளிக்கிறார் இயேசு.   ஆனால் இறுதியில் பெரிய உண்மையை இயேசு நினைவுப்படுத்துகிறார். எங்கு ஒற்றுமை உண்டோ அங்கு என் உறவு உண்டு என்கிறார்.   
  
நமது நாட்டில் 2 கோடியே 81 லட்சம் கேஸ்கள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படாமல் உள்ளன என்கிறது ஒரு கணக்கெடுப்பு. விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் 48 சதவிகித திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன என்கிறது ஒரு கணக்கெடுப்பு. ஆனால் இந்தியாவில் அத்தகைய பாதாளநிலை இல்லை யயன்றாலும், மேல் நாட்டு நாகரீக மோகம் வேகமாக நம் நாட்டில் படையயடுத்து வருகிறது.

  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லை தகராறு முற்றி வருகிறது. அண்மையில் நியூலீடர் என்ற பத்திரிக்கையில் மோனம்பரம்பில் என்ற பேராயர், இந்த போர் மூட்டத்தை சுட்டிகாட்டி, முதல் இரண்டு உலக போர்கள். எப்படி முரட்டுத்தனமான தலைவர்களால் ஏற்பட்டன என்று சுட்டிகாட்டியுள்ளார்.   வளர்ந்துவரும் இந்தியாவில் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொள்ளவே தலைவர்களாகிய வீராப்பு பேச்சுக்கள் மிதந்து வருகின்றன என்கிறார்.

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.              (குறள் 214).   

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு
 03 - 09 - 2017
எரே 20 : 7 - 9; உரோ 12 : 1-2; மத் 16 :  21 - 27
ச.இ.அ.
இளைஞர்களுக்கான ஒரு பட்டிமன்றத்தில், சொற்பொழிவாளர், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியும் விதத்தில் வளருங்கள். பணத்திற்குப் பின்னால் உழைப்பு இருப்பதை அவர்கள் உணரும் விதமாக வளருங்கள் என்று கூறினார். வியர்வை இல்லாமல் வளர்ச்சியில்லை. உழைப்பில்லாமல் பிழைப்பில்லை என்பதுதான் எதார்த்தம்.

முட்கள் நடுவில் விழுந்த விதை முட்களால் முடக்கி விடப்படுகிறது. ஆனால் முட்களையும் தாண்டி நாம் வாழ வேண்டும். தன்னலம் துறக்க வேண்டும். தம் சிலுவையை சுமக்க வேண்டும். அதன் வழியாகத்தான் இயேசுவைப் பின் செல்ல முடியும். இயேசு சந்தித்த அதே அனுபவத்தை சீடர்களும் சந்திக்க வேண்டும். இயேசு மூப்பர்கள் தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் வேண்டும். ஆனால் துன்பத்திலிருந்து வெற்றி கிடைத்தது. ஒருவர் வாழ்வின் பயனைப் பெற எதிர்மறையான வழியைக் கூறுகிறார். இழந்தால் பெறுவீர்கள், ‘உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் என்றால் உலக செல்வங்களை நிறையவே பெற்றிருந்தாலும்’ என்பதுதான் பொருள்.

இயேசுவின் தியாக வழி, பேதுருவுக்கே ஏற்புடையதாக இல்லை. எனவே அதனை விட்டுவிட கேட்கிறார் பேதுரு. இயேசுவின் தியாக வழிதான் இறைவனின் வழி. தன்னல வழி. சாத்தானின் வழி. இறைவனுக்கு எதிரான வழி. ‘கடினமான உழைப்பினால் தான் வளர்ச்சி உண்டாகும் தியாகம் இல்லாத வாழ்க்கையில் வெறும் களைகள்தான் நம் வாழ்க்கையில் வளரும்’ என்கிறார் கோர்டன் ஹின்க்லி.

‘கடினமான உழைப்புத்தான் அறிவினில் ஏற்படும் முதுமைக் கோடுகளை அகற்றும்’ என்கிறார் யஹலினா ரூபின் ஸ்டெலின் என்பவர்.

முதல்வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர். தனது அர்ப்பண வாழ்வு மற்றவர்களின் நகைப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ஆனால் இறைவனுக்கு தனது அர்ப்பணத்தை மறுக்க முடியாது என்று போராடுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், உலக போக்கின்படி ஒழுகாதீர்கள். தியாக வாழ்விற்கு உங்களை அர்ப்பணிக்க தயங்க வேண்டாம். அப்போதுதான், கடவுளின் திருவுளத்தை நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
தியாக ஒளிதான் உலகின் தீய இருளை நீக்கும்.
பொன்னை மாதரை பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
  உன்னை நாடுவேன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவேன் தன்னந் தனியனே
‡ தாயுமானவர் பாடல்.

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

“உன்னால் முடியும் தம்பி, தம்பி. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி”  என்ற திரைப்படப்பாடல் வரிகளை கேட்டு ரசித்து இருப்பீர்கள். இவ்வரிகள் நம் சிந்தனையைத் தூண்டி சரித்திரம் படைக்கவும் உதவுகிறது.‘I think I can’ என்ற ஆங்கில சொற்றொடரின் தமிழ் அர்த்தம் “நான் நினைக்கிறேன், என்னால் முடியும்”  என்று நான் நினைத்தால் அது நன்றாக முடியும். என்னால் முடியாது என்ற மந்திரச் சொல்லால்தான். திரு.உதயமூர்த்தி அவர்கள் தனது புத்தகத்தில் ‘உன்னால் முடியும்’ என்ற சக்தி வாய்ந்த வார்த்தைகளை மையமாக வைத்து எழுதி இளைஞர்கள் வெற்றிகளை குவிக்க வழிவகுத்தார்.

அன்பு வாசகர்களே ! வரலாற்றில் நடந்த நிகழ்வினை உங்கள் முன் படைக்க விழைகிறேன். உலக அளவில் நடைபெறும் ஒரு மைல் தூர ஓட்டப்பந்தயத்தில் 4 நிமிடங்களுக்குக் குறைவாக யாராலும் ஓடமுடியாது என்ற எண்ணம் அனைத்து வீரர்களின் மத்தியில் இருந்தது. 1945ம் ஆண்டு 4 நிமிடங்களுக்குக் குறைவாக ஒரு மைல் தூரத்தை கடக்க முடியாது என்ற குறியீட்டை (Record) அனைத்து வீரர்களும் நம்பினர். சுவீடன் நாட்டைச் சார்ந்த  Guder Hagg  என்பவர் 1945 இல் 4 நிமிடங்கள் 1.4 விநாடியில் ஒரு மைல் தூரத்தை கடந்து வெற்றி பெற்ற குறியீடே இறுதியாக இருந்தது. அதை யாரும் முறியடிக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லோர் மனதிலும் 4 நிமிடங்களுக்கு குறைவாக யாராலும் கடக்க முடியாது என்ற எண்ண ஓட்டம் இருந்தது. இந்த சமயத்தில் தான் 1950 இல் ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்கள் ஒரு நொடியில் ஓடி முடிக்கிறார். அதன்பிறகு ரோஜர் 1954 ஆம் ஆண்டு மே 6இல் அந்தத் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் ஓடிச்சென்று புதிய சாதனையைப் படைக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் வந்த சார்லஸ் லேண்டி என்பவர் 4 நிமிடங்கள் 2 விநாடியில் கடந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இதனை சற்று ஆழமாக சிந்தனை செய்வோம். கடந்த பல ஆண்டுகளாக ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடக்க முடியாது என்ற  Mind set  வீரர்களிடையே இருந்தது. ஆனால் ரோஜர் அந்த இறுக்கமான எண்ணத்தை, அபிப்பிராயத்தை உடைத்தெறிந்தார். ‘என்னால் முடியும்’ என்ற மந்திரச்சொல்லால் தகர்ந்தெறிந்தார். புதிய குறியீட்டை  (Record) படைத்தார். இன்னும் பல முக்கிய சாதனைகளையும் நீங்க படிக்க போறீங்க. 2ஆம் இடத்தை பிடித்த சார்லஸ்  லேண்டி 56 நாட்களுக்குப் பிறகு 3 நிமிடங்கள் 57 விநாடிகளில் அந்தத் தூரத்தைக் கடந்தார். இவருக்கு யார் Special Training கொடுத்தாங்க? இல்லை; யாரும் கொடுக்கவேயில்லை. 4 நிமிடங்களுக்குள் ஓட முடியும் என்ற எண்ணத் தடை ரோஜரால் உடைத்தெறியப்பட்டதால் சார்லஸீக்கு தன்னால் முடியும் என்ற எண்ணம் எழுந்தது; முடியாது என்ற எண்ணத் தடை வீழ்ந்தது; சாதனையும் படைக்கப்பட்டது; வெற்றியும் பெற முடிந்தது. மற்றொரு செய்தியையும் சொல்கிறேன், படியுங்கள். 1957இல் உலகம் முழுவதும் 16 வீரர்கள் 1 மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி சாதனைப்புரிந்தார்கள். இதுவரை 18 முறை ரோஜர் பெனிஸ்டரின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. 1999இல் மொரோக்கோ நாட்டைச் சார்ந்த   Hichan el Guerrou என்பவர் 3 நிமிடங்கள் 43:13 விநாடிகளில் ஒரு மைல் தூரத்தை கடந்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். என்னால் முடியும் என்று ரோஜர் பெனிஸ்டர் சாதனைப்புரிந்தவுடன் மற்ற வீரர்களும் அவர்களால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு சாதனை படைத்தார்கள் ! வெற்றியும் கண்டார்கள்.

அன்பர்களே! எது தடை? நம் எண்ணமே நமக்கு தடை. என்னால் முடியாது என்ற எண்ணம் வெற்றிபெற தடையாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் பலர் “எனக்கு கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் வராது”  என்ற எண்ணத்தில் படிப்பர். அது அவர்களுக்கு வரவே வராது.ஆனால் அந்தப் பாடங்கள் எனக்குப் பிடிக்கும் என்ற எண்ணத்தில் படித்தால் நன்றாக படிக்க முடியும். அது போல இளைஞர்கள், இளம் பெண்கள் கூட என்னால் முடியாது என்ற எண்ணத் தடையை வளர்த்துக்கொண்டு வாழ்வதனால் வெற்றிக்கனி எட்டாக்கனியாக மாறிவிட்டது. ஆகவே அன்பு மாணவச்செல்வங்களே !  இனிமைமிகு இளையோரே ! பெருமைமிகு பெரியோரே ! என்னால் முடியாது என்ற எண்ணத்தடையை எடுத்தெறிந்து, என்னால் முடியும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றிகளை அறுவடை செய்யுங்கள்.

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு  காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயேஅறிவும்,   ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.              - Goethe                                                                                                                                               

Ads Inside Post