Pages - Menu

Friday 10 February 2017

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம், ஆடுதுறை

முகப் பருவைத் தவிர்க்கலாமே!

முக அழகைக் கெடுக்கும் முகப்பருவைத்  தடுப்பதே  சிறந்த வழி. வந்த பின் தீர்ந்தது  என்றால் அது குறைபாடானதாகும். எனவே முகப்பருக்களைத் தடுக்க சில வழிமுறைகளைக் காண்போம்.

13 வயது தாண்டும்போதுதான் முகப்பரு தோன்றும். அந்த வயதில் தினசரி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் இளம் சூடான நீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியைக் கலந்து அதனை பஞ்சினால் நனைத்து முகத்தில் அழுத்தத் துடைத்து வர முகப்பருக்கள் தோன்றும் காரணங்கள் விலகும்.

கொழுப்புப் பதார்த்தங்களான முட்டை, இறைச்சி, மீன், மசாலா பொருட்களை மிதமான அளவில் உண்பது நல்லது.

கொள்ளு ரசம், பூண்டு ரசம், தினசரி உணவில் சாப்பிடுவது நல்லது. இளநீர், மோர் பருகுவது நல்லது.

பப்பாளிப் பழம், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை வெட்டினால் மேற்புறம் உறைந்து கிடக்கும் மெல்லிய சோற்றினால் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெந்நீரில் கழுவி வர முகப்பரு வராது
.
கீரைகளையும், இங்கிலீஷ் காய்கறிகளையும் சாப்பிடலாம். நொறுக்குத் தீனிகளை கைவிடுவது, காபி பருகுவதை நிறுத்துவது நல்லது.

இராசாயன களிம்பு, முகப்பூச்சுகளை பூசாமல், மேற்கண்டவற்றை மட்டும் பின்பற்றி வர முகப்பரு வராது தடுக்கலாம்.

புற்றுநோய் எதிர்ப்புணவு பட்டியல்

இந்தியாவைப் பொறுத்தவரை ‘புற்றுநோய்’ பாதிப்பு தவறான உணவுப் பழக்கம், போதை  மருந்துகளால் மட்டுமே ஏற்படுகின்றது. புகையிலை நஞ்சினால் நுரையீரல்புற்று, கன்னப்புற்று, அதிக காரம், அதிக புளிப்பு உண்பதால் வயிறு மற்றும் மலவாய் புற்றுநோய்கள் உண்டாகின்றன.

மகளிரைப் பொறுத்தவரை சுகாதார உணர்வின்றி அசுத்தமாக கருப்பையை வைத்திருப்பதால் மிகுதியாக புற்றுநோய்  ஏற்படுகின்றது. அத்துடன் ‘தாய்ப்பால்’ தரும் வழக்கம் குறைந்து வருவதால் மார்பகப் புற்றுநோயும் வருகின்றது. இவற்றை, வருவதற்கு முன் தடுக்கும் முறையே சிறந்ததாகும். அதற்கு “புற்றுநோய் எதிர்ப்புணவு”  உறுதுணையாகும்.

சார்கோமா மற்றும் கார்சினோஜின் ஆகிய வகை சார்ந்த புற்றுநோய்களை வராமல் தடுக்கக் கீழ்க்கண்ட அன்றாட உணவிலோ அல்லது அடிக்கடியோ உண்டுவர அந்த வகைப் புற்றுநோய்களிலிருந்து முற்றிலும்  உடம்பைப் பாதுகாக்கலாம்.

காரட் :

தினசரி காரட் 1 எடுத்து அத்துடன் வெங்காயம் 1 வெட்டி மோருடன் கலந்து உப்பின்றி பச்சடிபோல் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள ‘பீடா கரோட்டின்’ சத்து, புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை ஊக்குவிக்கின்றது. இவ்வாறு கல்லீரல் இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும்.

தூதுவளை துவையல் :

தூதுவளை இலைகளை வாரம் 3 நாட்கள் நெய்யில் வதக்கி (புதினாவுடன்) புளி சேர்க்காமல் துவையல் செய்து 1 பிடி சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வர புகையிலை காரணமாக புண்ணாகிவிடும் நுரையீரலை சீர்படுத்தி நுரையீரல் புற்றுநோய் வராமல் செய்யலாம்.

மாங்காய் பச்சடி :

மாங்காய் பச்சடி பெருங்குடலில் வரக்கூடிய புற்றுநோயை, வராமல் தடுக்கும். சுண்டைக்காய், வற்றல், மாதுளை சர்பத் 

No comments:

Post a Comment

Ads Inside Post