Pages - Menu

Saturday 25 February 2017

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

- ச.இ.அ

 நீ என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்  (யோவா 20 : 29).

உடல் பார்வைக்கு தூரம் உண்டு.
உணர்வு பார்வைக்கு உறவு உண்டு.

 நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும் (மத் 8 : 28 - 34).

தீமைகள் நாற்றத்தின் கடல்.
தீயவர் இழிவினில் எழில் காண்பர்.

 உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் (லூக் 6 : 27)

பகைக் கோடுகள் தருவது சுகக் கேடுகள்

 ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் (யோவா 13 : 15)

பணிவு  தலைமையின் முதல் எழுத்து

No comments:

Post a Comment

Ads Inside Post