Pages - Menu

Friday 10 February 2017

நம் மாதா தொலைக்காட்சி

நம் மாதா தொலைக்காட்சி

( திருமதி. ஆசா, )

நம் இல்லங்கள் தோறும் இறையாட்சியை பரப்ப வந்திருக்கும் மாதா தொலைக்காட்சியை தினந்தோறும் பார்க்கும் நேயர் என்ற முறையில் மாதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்வது எனது கடமை.

திருப்பலியுடன் துவங்கும் காலை நிகழ்ச்சி. ஆலயம் சென்று திருப்பலி ஒப்புக்கொடுக்க முடியாத பலருக்கு, இது அருங்கொடை. திருப்பலி மதியம், மாலை மற்றும் நற்கருணை ஆராதனை பலவுமே இல்லத்தரசிகளுக்கும்,நோயுற்றோருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.

திருப்பலியை தொடர்ந்து வருவது கடவுள் வணக்கம். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு. விவேக் மற்றும் கல்பனா, அருமையாக நிகழ்ச்சியை வழங்குகிறார்கள். அடுத்ததாக, அழகான ஆலய தரிசனம் . நாம் காணாத பல ஆலயங்களை அழகாக இனிமையான பாடலுடன் பார்க்கும்போது, இறையருள் நம் இல்லத்தில் இறங்குவது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. தொடர்ந்து தினம் ஒரு திருப்பாடல். இன்றைய புனிதர் பற்றிய வரலாற்றை அருள்தந்தை ரவி வழங்குகிறார்கள். புனிதர்களைப் பற்றி பல வரலாற்றை, இதன் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. பிறகு டாக்டர். மகாதேவன் அலோபதி மருத்துவம் பற்றியும், நம்ப ஊறு வைத்தியம் பற்றி டாக்டர்.மதுரம் சேகர் அவர்களும் அருமையான மருத்துவக் குறிப்புகளைத் தருகிறார்கள். நல்வழி காட்டும் திரு. இளசை சுந்தரம், மதுக்கூர் இராமலிங்கமும் அருமையான மனிதர்கள்.

தினம் ஒரு குட்டிக்கதைகளை சொல்லிச் கதைகேளு நிகழ்ச்சியில் குடந்தை ஆயர் சிறுவர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். விழாக்கோலம் நிகழ்ச்சியில் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காணும் நேயர்களின் மனதை மகிழ்விக்கிறார்கள்.

‘கடவுள் வணக்கம்’ அந்த நாளின் சிறப்புகளோடு ஆரம்பித்து நிகழ்ச்சி முழுவதும் அதைப்பற்றிய கருத்துக்களை சொல்வது வெகு சிறப்பு.

ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘வத்திக்கான் டாப் 10’ உண்மையில் “டாப் தான்”.

9 மணிக்கு ஒலிபரப்பாகும் நலமா? நீங்கள் நலமா? நேயர்களோடு  உள்ளன்போடு  உறவாடும்  உயிர் நிகழ்ச்சி.

திரு .மதுரை இளங்கவினும், திரு. கனகராஜும் நடத்தும் நிலா முற்றத்தின் மூலம் பல எழுத்தாளர்களைப்பற்றி அலசி ஆராயும் நிகழ்ச்சி படைப்பாளர்களுக்கு ஒரு உந்துதலை கொடுக்கும் என்பது உண்மை.

‘வந்ததும் தந்ததும்’ நிகழ்ச்சியில், நிகழ்ச்சிகளைப்பற்றி ஆய்வு விவரிக்கப்படுகிறது. குறைகளையும் குறிப்பிட்டு, அதை களையும் வழிகளையும் குறிப்பிட்டு, மேற்கொண்டால் மாதா தொலைக்காட்சி பொலிவுறும் என்பதில் ஐயமில்லை.

ஜெபதேவைக்கு நேயர்களிடமிருந்து விபரம் கேட்டு அவர்களுக்காக ஜெபிப்பதும் மாதாவுக்கு மகிமை சேர்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

Ads Inside Post