Pages - Menu

Saturday 25 February 2017

இறை வார்த்தையின் இன்றைய புரிதல்



இறை வார்த்தையின் இன்றைய புரிதல்


26-2-17 ‘எதை உண்போம்? எதை குடிப்போம? எதை அணிவோம்? ஏன கவலைக் கொள்ளாதீர்கள்’; (மத் 6:32)

இறைவனை விட்டு பிரிந்த அபலைகளுக்குத்தான் கவலை உண்டாகும்

27-2-17; ‘செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகக் கடினம். அவர்கள் இழறளாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ (மாற் 10: 24)

இருட்டில் பொருள்கள் தெரிவதில்லை.
செல்வ செழிப்பில் உண்மைகள் புரிவதில்லை

28-2-17 ‘முதன்மையானோர் பலர் கடைசி ஆவர். கடைசியானோர் முதன்மை ஆவர்’ (மாற் 10: 31)

உயர்வு என்பது பண்பிலே பதிந்தது.
தாழ்வு என்பது பண்பில் சிதைந்தது

1-3-17 ‘மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் அறசெயல்களை செய்யாதீர்;’ (மத் 6:1)

அகந்தையின் வெளிப்பாடான ஆடம்ரத்தை அகற்றுவதும்
அன்பின் வெளிப்பாடான பணிவை ஏற்பதும்தான்
நோன்பான தபசு செயல்

No comments:

Post a Comment

Ads Inside Post