Pages - Menu

Friday 10 February 2017

தூய இருதய மருத்துவமனை நூற்றாண்டு விழா

பேராயரின் மறைவு

மதுரை உயர் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் மேதகு.பீட்டர் பெர்னாண்டோ 31‡12‡2016 அன்று இறைவனில் துயில் கொண்டார். இவருக்கு வயது 77. தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பிறந்த அவர் புனாவில் அகில இந்திய இறைஅழைத்தல் நிலையத்தின் இயக்குனராகவும், திருச்சி ‡ தூய பவுல் குருமடத்தின் அதிபராகவும், தூத்துக்குடியில் வாரிசு ஆயராகவும், திருச்சி  மறைமாவட்ட பரிபாலகராகவும் இறுதியாக 2014 வரை மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராகவும் பணியாற்றினார். இவர் ஓர் உளவியலார். 02‡01‡2017 அன்று தூத்துக்குடியில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


தூய இருதய மருத்துவமனை
நூற்றாண்டு விழா

29-12-2016 வியாழன் மாலை 5 மணிக்கு குடந்தை, முத்துப்பிள்ளை மண்டபத்திலுள்ள தூய இருதய  மருத்துவமனையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 1916இல் தொழுநோயாளர்களுக்காக ஒரு சிறு குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை இப்போது, தொழுநோய்ப் பிரிவோடு, பொது மருத்துவமனையாகவும் விளங்குகிறது. அருள்பணி.விச்சாட்டோ, றீனினிணூ அருள்சகோதரிகள், பிரிட்டோ, கரோலின் ஆகிய மூவரால் இந்த மருத்துவமனை தொடங்கப்பெற்றது. இதில் கரோலின் தொழுநோயாளர்களுக்காக பணி செய்ததால் தொழுநோய் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். அருள்பணி. ராயலு அவர்கள் 50 ஆண்டுகள் (1936 ‡ 1986) இம்மருத்துவமனை வளர பணி செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களும், குடந்தை ஆயர் எஃப்.அந்தோனிசாமி அவர்களும் தலைமை தாங்கினர். திருப்பலிக்குப் பின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இம்மருத்துவமனை தன் பணியில் சிறந்து வளர வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post