Pages - Menu

Saturday 4 February 2017

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

நறுக்கு வார்த்தைகளில் இறைவார்த்தை

உன் பெயர் பேதுரு, இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் (மத் 16 : 13 - 19)

மணல் துளிகள்
சேர்ந்தது பாறை.
உணர்வுகளின்
ஒன்றித்த உறுதிப்பாடு
நம்பிக்கை.

ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியயடுத்து வைக்க நான் தகுதியற்றவன் (மத் 8 : 15 - 17)

மற்றவரை
வலிமை பெற்றவராக
உற்று நோக்குவதே
நம்பிக்கை.

கலப்பையில் கை வைத்தப்பின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்பட தகுதியுள்ளவர் அல்ல (லூக் 9 : 62).

பின்நோக்கிப்
பார்த்தல்
பலகீனத்தின் பண்பு.

நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு (மத் 8 : 20)

வீடில்லா பாதை
தொண்டர்களின் நாடு.
கரையில்லா உறவு
பணியாளரின் மரபு.

No comments:

Post a Comment

Ads Inside Post