Pages - Menu

Wednesday 27 July 2016

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்
 ம. இராசரெத்தினம், 
இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை


சித்தர் பாடல் : தேரையர் கூறும் தேர்ந்த மருந்து
ஒற்றைத் தலைவலிக்குத் தைலம்

பார்த்துமே தலை நோய்க்கு தைலம் கேள்
ஆர்த்து வெள்ளுள்ளி உரிய வலம்புரி
கோத்து மாசிக்காய் குறிக்கும் லவங்கமும்
தீர்த்து சமனெடை தீர வெடுத்திடே
எடுத்துக் கொம்பரக் கெழியாக வல்லிடை
உடுத்துமே பசும்பாலில் அரைத்துமே
தொடுத்துமே வெண்ணெய் தோன்றக் கலக்கியே
காடுத்து முத்தியும் கூற யயறக்கிட
எறக்கி மாய னெழிலடி போற்றியே
உறக்க மண்டல முற்று முழுகிட
திறக்கக் கபால சூலை வலியுறும்
பறக்கு மென்றால் லோ பாடினான் தேறனே

ஒற்றைத் தலைவலி வந்து அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்ட தைலத்தை தயாரித்து வாரம் இருநாள் தலைமுழுகி வர கபால குத்தல், கபால சூலை காரணமாக வரும் ஒருபக்க தலைவலி ஒரு மண்டலத்திற்குள் விலகும் பூசணிக்காய், புடலங்காய், முள்ளங்கி, தக்காளி, இளநீர், எலுமிச்சம் பழம் ஆகியன சாப்பிடக் கூடாது.

செய்முறை :
வெள்ளைப்பூண்டு - 50 கிராம்
வலம்புரிக் காய் - 50 கிராம்
மாசிக்காய் - 50 கிராம்
லவங்கம் - 50 கிராம்
கொம்பாக்கு - 50 கிராம்
இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இவற்றை பசும்பாலில் அரைத்து 1 கிலோ நல்லெண்ணெய் கலக்கி காய்ச்சி முறுகுபதத்தில் இறக்கி ஆற வைத்து எண்ணெய் தேய்த்து குளிக்கவும். பெண்கள் வெள்ளிக்கிழமையும், செவ்வாய் கிழமையும், ஆண்கள் புதன் கிழமையும், சனிக்கிழமையும் குளிக்கவும் (ஒரு மண்டலம் = 48 நாட்கள்)
குழந்தைகள் பிணியின்றி இருக்க வேண்டுமா?
கிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்கள் கட்டாயமாக தாய்ப்பால் அளிக்கவும், மஞ்சள் நிறமாக கசியும் தாய்ப்பால் மிகவும் நோய் எதிர்ப்பாற்றலைக் குழந்தைகளுக்குத் தரக்கூடியதாகும். கொலஸ்ட்ரால் எனப்படும் இந்த சத்துப்பொருள் தாய்ப்Vலைத் தவிர மிகச்சிறப்பாக எதிலும் கிடைப்பதில்லை. இது குழந்தையின் நோய் 
எதிர்ப்பாற்றலை ஊக்குவித்து தீவிரமான நோய்கள் வராமல் காக்க உதவுகின்றன.

தொப்பையை கரைக்கும் அன்னாசி :

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்யவும், பலத்தை தரவும் செய்கிறது. பல வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக இருக்கிறது. தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசி பழம் சிறந்த டானிக் ஆகும்.

நன்றாக பழுத்த அன்னாசியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை அரைமணி ஊறவைத்து படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அனைத்து விதமான உடல் உபாதைகளும் நீங்கும். அன்னாசிப் பழச்சாற்றை தொடர்ந்து குடித்து வர முகம் பொலிவு பெறும். இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஒரு அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 4 தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாக கிளறி ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அதை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கவும். அப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பைக் கரையத் தொடங்கும்.
இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். ஊற வைத்த அவலை காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். 300 கிராம் கருணைக் கிழங்கை தினமும் மதிய உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக் குறையும். காசிணிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

No comments:

Post a Comment

Ads Inside Post