Pages - Menu

Thursday 6 April 2017

எல்லாம் நிறைவேறிற்று, ( இயேசுவின் பாடுகளைக் காணும் உணர் வலைகள்)

எல்லாம் நிறைவேறிற்று  


         பேராசிரியர் ச. சாமிமுத்து
( இயேசுவின் பாடுகளைக் காணும் உணர் வலைகள்)

கள்வர்கள் மத்தியில் , சிலுவையிலே துடிதுடித்துக் தொங்குகின்ற செம்மறியே , அன்னையின் அரவனைப்பிலே நசரேத்து வீட்டிலே விழுந்து எழுந்து நடைப்பயின்ற  படைப்பாற்றலனே, கடையனையும் தேற்ற வந்த  மாற்றறியாப் பசும் பொன்னே, பூமானே விண்ணக்கும் , மண்ணக்கும் இடையே உறவைப் புதுப்பிக்க வந்த புத்துயிரே,  பூபாளமே , பூங்கா வனத்திலே அழுது அங்கலாய்த்த துடிதுடிப்பின் இறுதிக்கட்டம்  நிறைவேறுவதற்கு முன்பு , இந்த பாவிகான பொய்யான கோலமே மெய்யயனக் கொண்டலையும் இந்த புல்லனுக்காக ‡ உண்ணுவதிலே, உடுத்துவதிலே , அதிகாரம் செலுத்துவதிலே நாயினும் கேடுகெட்டு ஆசை வலைப்பட்டலையும் இந்த அறிவிலிக்காக ‡ மனிதர்களை மட்டும் அல்லாமல் உன்னையே ஏமாற்றிவிட்டதாக  எண்ணி, கொண்ட கொள்கையைக் குழிக்குள் தள்ளிவிட்டு குறுக்கு வழிநடக்கும்  இந்த  குறுமதியாளனுக்காக விண்ணகத் தந்தையிடத்திலே என்னை மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகின்றாயே! ஐயோ தலை சாய்கிறதே எல்லாம் நிறைவேறிற்று ! ஆம் அவர்  உயிர் பிரிகிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post