Pages - Menu

Saturday 29 April 2017

அன்பு எல்லையில்லா சுவையானது

அன்பு எல்லையில்லா சுவையானது

ஒரு இளைஞன் வெளியூர்  சென்று திரும்பும் போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரைக் கண்டான். ஆவலுடன் ஓடி சென்று நீரை பருக்கியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த   முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரைக் கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல்பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பண முடிவில் தன்னுடைய ஊரை  சென்றடைந்தவன். அரண்மனைக்குச் சென்று அந்த நீரின் அருமை பெருமைகளைக் கூறி, உலகிலேயே இதுபோல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

          இதை அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பட்டத்துராணி, எனக்கும் கொஞ்சம் அந்த நீரைக் கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாயிருக்கிறது என்று கூறி, அவர் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்து விட்டான் மன்னன். பிரமாதம் உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இதுவரை என் வாழ்க்கையில் அருந்தியதே இல்லை உனக்கு எவ்வாறு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார். இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோ­த்தில் விடைபெற்று சென்றான். அவன் சென்ற பிறகு, ராணி இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்குக் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடுவீர்கள்? என்றாள்.

              இல்லை ராணி........... நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்து பாரேன்.

             அரசன் சொல்ல, ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்......... சே......சே...... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது? என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள். தேவி நீ நீரைதான் சுவைத்தாய்.  ஆனால் நான் அவன் என்மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கருதி தனது தோல்பையில் நிரப்பிக் கொண்டு வந்தான். எனவே, தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது.  நீரின்  சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்குக் கொடுக்காத்திருந்தால் நீ இப்போது செய்ததை போலவே அவன்முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப் பட்டிருக்கும், அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.

No comments:

Post a Comment

Ads Inside Post