Pages - Menu

Monday 17 April 2017

சிறுவனின் கோபம், பாட்டியும் வாலிபமும்

சிறுவனின் கோபம்



ஹைதராபாத்தில் சஞ்சீலி ரெட்டி நகரிலுள்ள காவல் நிலையத்திற்கு இரண்டாவது  படிக்கும் சிறுவன் வெகுகோபத்துடன் நுழைந்தான். “சார் எங்க பாட்டிய உடனே கைது செய்யுங்க” என்றான். காவலர்கள் அசந்து போனார்கள். என்னப்பா வி­யம்? உங்க பாட்டி யாரையும் கொலை செய்திட்டாங்களா? என்று கேட்டார். இல்லை சார். என்னால தாங்க முடியல சார். எத்தனை நாளுக்குதான் பொறுத்துகிறது? என்னை விளையாடவே விடமாட்டேங்ராங்க சார். காவலர்கள் அதிர்ச்சியுடன் சிறுவனை நைசாக சமாதானபடுத்தினர்.  நைசாக பைவ்  ஸ்டார் சாக்லெட்டை கொடுத்தனர்.கோபம் குறைந்து வீடு திரும்பினான் பையன்.


பாட்டியும் வாலிபமும்

தியேட்டரில் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது.

          நம்மாள் பக்கத்தில், ஒரு வயதான மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த குளிர் பானத்தை 20 நிமிடத்திற்கு ஒரு தடவை என சிறிது சிறிதாக குடிப்பத்தைப் பார்த்து எரிச்சலடைந்தார்.    

நம்மாள் பாட்டியிடமிருந்து  குளிர் பானத்தை  பிடுங்கி மடக்...மடக் என ஒரே மூச்சில் குடித்து விட்டு   நம்மாள், பாட்டி கூல்டிரிங்சுன்னா இப்படி குடிக்கனும்..... தெரியுதுங்களா

பாட்டி       : அடப்பாவி மவனே அவசர பட்டியேடா....
 நம் மாற : ஏன்? என்ன?

பாட்டி       : அதுலதான் நான் வெத்தலைய துப்பிக்கிட்டு இருந்தேன் இவ்ளோநேரம்

No comments:

Post a Comment

Ads Inside Post