Pages - Menu

Wednesday 5 April 2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 2-4-2017

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு        2-4-2017

  தி.ப  2 : 42-47;   1 பேதுரு 1 : 3-9 ;  யோவா 20 : 19 - 31  
  
 மார்ட்டின் லுVத்தர் கிங் என்பவர்,  நம்பிக்கை  என்பதை  கீழ்க்காணுமாறு விளக்குகிறார், “நம்பிக்கை  என்பது மாடிபடிகள்        அனைத்தையும் நாம் காணாவிட்டாலும், அதன் முதல்படியில் அடி எடுத்து வைக்கிறோம். அதுதான் நம்பிக்கை” என்கிறார். இன்றை வாசங்களில் நம்பிக்கை  என்பது  மையக் கருத்தாக விளங்குகிறது.
                    
  முதல் வாசகத்தில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும்  ஒன்றாயிருந்தனர் (தி.ப 4:32)  என்று பார்க்கிறோம். இரண்டாம் வாசகத்தில், “நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காக கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்” (1 பேது 1 :5)  உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள் (1 பேதுரு 1 :7)   இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும்  மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்  (1 பேதுரு 1 :7) . இப்பொழுதும் நீங்கள்   அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கைக் கொண்டு  சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து  பேருவகைக் கொள்கிறீர்கள் (1 பேதுரு 1 : 8).  “நீ என்னை கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” ( யோவா 20 : 29)  நம்பிக்கையினால் பகிர்வு ஒற்றுமை ஏற்படுகிறது. நம்பிக்கை பாதுகாப்பைத் தருகிறது. நம்பிக்கை பெருமையையும் மாண்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இவ்வாறு வாழ்வின் போது செழுமையாக விளங்குகிறது நம்பிக்கை.  புனித  அகுஸ்தினார் கூறுவார், “நம்பிக்கை என்பது நாம் காணமுடியாததை ஏற்றுக் கொள்வது. ஆனால் நம்பிக்கையின் கைமாறு என்னவென்றால் காணமுடியாததைக்  காண்பதாகும்” என்கிறார் . ய்ழிஷ்மிஜு ஷ்வி மிலி ணுeயிஷ்ஸe ழஜுழிமி தீலிற் dலி ஐலிமி விee, மிஜுe reழழிrd லிக்ஷூ க்ஷூழிஷ்மிஜு ஷ்வி மிலி விee ழஜுழிமி தீலிற் ணுeயிஷ்eஸe?  உயிர்த்த இயேசு தம் சீடர்களை சந்திக்கிறார். சீடர்கள் என்பவர்கள் தேர்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். சீடர்கள் இயேசுவை கண்டதும் மகிழ்ச்சியடைகிறார்கள். அமைதி உரித்தாகுக என்று இயேசு சீடர்களை வாழ்த்துகிறார். பிறகு  சீடர்களுக்கு துVய ஆவியை அளித்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் அளித்து அனுப்புகிறார். இயேசு தோன்றியதும் சீடர்கள் நம்பினார்கள். தோமா, அவர்களோடு இல்லாததால் அவர்கள் கூறியதை ஏற்க மறுக்கிறார். இயேசுவே மறுமுறை தோன்றி தோமாவின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். இயேசு, ஒரு விதத்தில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். இதுதான் இயேசு தன் சீடர்களுக்கு அளித்த காட்சியின் பொருள். அதே நேரத்தில் நம் வாழ்வினால்  நாம் பெற்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. இதனைத்தான் முதல்வாசகம் விளக்குகிறது. திருவருட்சாதனங்களிலும் அன்பு செயல்களிலும் இறைவன் வெளிப்படுகிறார்.

                      அண்மையில் ஒரு சகோதரிக்கு சிறந்த சமூக  சேவையாளர் விருதினைத் தந்தார்கள். மருத்துவமனைச் சந்திப்பு, சிறை சாலை சந்திப்பு, வீடு சந்திப்பு, செபக்  கூட்டங்கள் நடத்துதல் என தன் உடல் நலத்தையயல்லாம் பாராமல் பணியாற்றுகிறார். எப்படி இத்தகைய ஆர்வம் உங்களுக்கு கிடைத்தது என்றால்,  “எல்லாம் எனது கடவுள் நம்பிக்கை  தந்த பலம்”  என்றார்.  

நம்பிக்கையின்றி எதனையும் சாதிக்க முடியாது. நம்பிக்கையிருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இருக்க முடியாது -  மேரி மேக்லேயோட் பெத்துVன்.  
                                                                                                                                         
 Without Faith nothing is possible; With Faith Nothing is impossible

No comments:

Post a Comment

Ads Inside Post