Pages - Menu

Monday 16 May 2016

மாதாவின் வணக்கம்

ஆசிரியர் பேனா

ஒருவர் சொற்பொழிவாளர் கூறினார். ஒரு தாயைப் பார்த்து ‘ஏன் உன் பிள்ளைகள் மீது இவ்வளவு அன்பு செய்கிறாய்?’ என்று கேட்டால், ‘அவன் பிற்காலத்தில் எனக்கு பெருமைதரும் விதத்தில் வாழ்வான்’ என்றோ, ‘பிற்காலத்தில் என்னை வைத்து காப்பான்’ என்றோ கூறமாட்டாள். மாறாக, ‘அவன் / அவள் எனது பிள்ளை அதுதான் ஒரே காரணம்’ என்பாள். எனவேதான் பாசம், பற்று, அன்பு ஆகியவை இயல்பாக தாயிடம் எழுந்து வருகிறது. ஒரு புதுக்கவிதையில், ‘வயோதிகர் இல்லத்திலிருந்து, தன் மகனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினாள்’ என்று எழுதியிருந்தார்கள்.

இயேசு உலகில் புதிய ஒளியையும், வழியையும் காண்பித்தவர். அவர் காட்டிய வழி 2000 ஆண்டுகளாக உலகிற்கு வாழ்வு தந்திருக்கிறது. அவரின் தாய் மரியா. இயேசுவை உலகிற்கு தந்தவர். அவரது பணியில் பங்குபெற்றவர். இறைவனின் தனி அருளைப் பெற்றவர். எனவேதான், வானத்தூதர், ‘அருள் மிகப் பெற்றவரே’ என்றும், ‘கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்’ என்றும் மரியாவை வாழ்த்துகிறார் (லூக் 1 : 28, 30). வானதூதர் என்பவர் இறைவனின் மறுபெயர் எனலாம்.

மாதாவின் வணக்கம், திருச்சபை வரலாற்றில் தொடக்கத்திலிருந்தே இடம் பெற்றிருக்கிறது. மாதாவின் திருத்தலங்கள் இறைவனின் அருளை பெற்றுதரும் சாட்சியங்களாக விளங்குகின்றன. கிறிஸ்துவ மதத்தை சாராத மற்ற சமயத்தாரும், மாதாவின் திருத்தலங்களுக்கு திரண்டு செல்வதை பார்க்கிறோம்.

குடந்தை மறைமாவட்டத்தில் 92 பங்குகளில் 34 பங்குகள், மாதாவின் பாதுகாவலில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் 6 பங்குகள் ‘அடைக்கல அன்னை’ பாதுகாவலை பெற்றிருக்கின்றன.

ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னைக்கு பல வரலாறுகள் உண்டு. 1716 முதல் 1739 வரை வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் தங்கி பணியாற்றியிருக்கிறார். ஏலாக்குறிச்சியில் மாதாவின் பெயர் பெரிய நாயகி என்றுதான் இருந்திருக்கிறது. 1739 ஆண்டு மயிலை ஆயரின் உத்தரவு பெற்று அடைக்கல அன்னை என்று வீரமாமுனிவர் மாற்றியிருக்கிறார். அக்காலத்தில் லூத்தரன் சபையினர் திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அச்சூழலில் மாதாவின் துணைவேண்டி அடைக்கலமாதா என்று மாதாவிற்கு பெயர் சூட்டியிருக்கிறார்.

அண்மையில் ஏமனில், நான்கு, அன்னை தெரசா சகோதரிகளைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் இன்றைய மறைசாட்சிகள் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார். அவர்கள் போன்று, திருச்சபை வரலாறு முழுவதும் கோடிக்கணக்கான புனிதர்களும், மறைசாட்சியரும் வாழ்ந்துள்ளனர்.

மாதாவின் வணக்கம், இருவிதங்களில் நமக்குப் பயனளிக்கிறது. ஒன்று மாதாவின் வல்லமையுள்ள பரிந்துரை, இரண்டு, நமக்கு சிறந்த கிறிஸ்துவின் முன்னோடி. மரியா இரக்கத்தின் அரசி என்ற கட்டுரையும், திருச்சபை வரலாற்றில் , மாதாவின் வணக்கம் எப்படி பதிலாயிருக்கிறது என்ற கட்டுரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. மாதா வணக்கத்தை பொருளுள்ள முறையில் செயல்படுத்துவோம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, அதன் முடிவுகளும் இம்மாதத்தில் வெளிவந்துவிடும். தமிழர்கள் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். சினிமா மோகம் அழிய வேண்டும். மக்களுக்காக பாசம், பற்று, அன்பு ஆகியவை இயல்பாக தாயிடம் எழுந்து வருகிறது. ஒரு புதுக்கவிதையில், ‘வயோதிகர் இல்லத்திலிருந்து, தன் மகனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினாள்’ என்று எழுதியிருந்தார்கள்.

 இம்மாதத்தில் வெளிவந்துவிடும். தமிழர்கள் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். சினிமா மோகம் அழிய வேண்டும். மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் உருவாக வேண்டும். மரியன்னை நம் தமிழகம் சிறந்து வளர, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவாராக. மரியே வாழ்க!

No comments:

Post a Comment

Ads Inside Post