Pages - Menu

Monday 16 May 2016

ஆண்டவரின் விண்ணேற்றம்

ஆண்டவரின் விண்ணேற்றம்                              
 8 - 5 - 2016

தி ப 1 : 1 - 11  , எபி 9 : 24 - 28; 10 : 19 - 23,  லூக் 24 : 26 - 53

நமக்கெல்லாம் ஒரு கேள்வி எழலாம். ஏன் இயேசு கிறிஸ்து தான் உயிர்த்தெழந்த நாற்பது நாட்களுக்கு பிறகு தன்னுடைய சீடர்களை விட்டு செல்கிறார்? நாற்பது என்ற எண் விவிலியத்தில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாக இருக்கிறது. மோசே இறைவனின் திருமுக தரிசனம் காண மலைக்கு சென்று நாற்பது நாட்கள் செபத்திலும், தபத்திலும் செலவழித்தார் என்பதை விவிலியத்தில் பார்க்கிறோம். இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்வதற்கு முன்தயாரிப்பாக நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்திலே இருந்தனர். இறைவாக்கினர் எலியா இறைவனின் மலைக்கு பயணித்த போது, நாற்பது நாட்கள் நோன்பிருந்தார். தான் உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு நாற்பது நாட்கள் சீடர்களுக்கு பலமுறை தோன்றி, தான் உயிர்த்தெழுந்ததை உறுதிபடுத் தவும், தன்னுடைய  உலக வாழ்வின் போது,  கூறிய சொற்களை உறுதிபடுத்தவும் தான் நாற்பது நாள்கள் உலகிலிருந்து, சீடர்களுக்கு காட்சியளித்தார் எனலாம்.


இயேசுவின் பிரிவும், விண்ணேற்றமும் இந்த இரண்டுமே  சீடர்களுக்கு தொடக்கமும், முடிவுமாக இருந்தது. உடல் ரீதியாக இயேசுவின் உடனிருப்பு சீடர்களுக்கு முடிவாக தோன்றினாலும், புதிய முறையிலே இயேசுவின் பிரசன்னத்தின் தொடக்கமாக அமைகிறது. உலகம் முடியும் வரை அவர்களோடு இருப்பதாக இயேசு தன்னுடைய சீடர்களிடம் வாக்களித்தார். இயேசு விண்ணேற்பு அடைந்த பின் தந்தையின் வலது பக்கத்தில் தன் முழு வல்லமையோடும் வீற்றிருக்கிறார் என்ற கருத்தும் விவிலியத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இதுவும் இயேசுவின் மாட்சிமைக்கும், வல்லமைக்கும் ஓர் அடையாளம் (தி. பா 111 : 1; திப 2 : 34; உரோ 8 : 34, 1 பேதுரு 3 : 22, எபி 1 : 3, 8 : 1, 10 : 12). அவர் மகத்துவ மிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார் (எபி 8 : 1) என்ற சொற்கள் பரமதந்தை அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்து அனைத்திற்கும் மேலாக அவரைத் திருச்சபைக்குத் தலைவராய் ஏற்படுத்தினார் என்ற உண்மையை உணர்த்துகின்றன.

இயேசு விண்ணேறிச் சென்ற போது, சீடர்கள் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது வானதூதர் விண்ணகம் சென்ற இயேசு மீண்டும் வருவார் என்று ஆறுதல் கூறியதாகவும் வாசிக்கிறோம் (தி பா 1 : 11). இயேசுவின் விண்ணேற்றத்தையும், அவரது இரண்டாம் வருகையையும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இயேசு விண்ணகம் சென்றார். அவருடைய  சீடர்களும்  உலகெங்கும் செல்ல வேண்டும்  என்று கட்டளை கொடுத்து விட்டே சென்றார். இயேசுவின் பணி முடிந்தது. திருச்சபையின் பணி துவங்கி விட்டது (மத் 28 : 17, மாற் 16 : 5, யோவா 20 : 17, லூக் 24 : 47, தி பா 1 : 8). சீடர்கள் சென்று போதிக்க வேண்டும். நற்செய்தி அறிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் இயேசு வருவார். இயேசுவின் வருகைக்காக தயாரிக்க வேண்டுமென்றால் நற்செய்தியை போதிக்க வேண்டும், அதை வாழவேண்டும்.

பணக்காரன், அவன் தன் தற்புகழ்ச்சிக்காக தினமும் அன்னதானம் செய்வான். ஆனால் பழைய மக்கிப்போன அரிசியில்தான் சோறு சமைப்பாள். அவனது  மகனுக்குத்  திருமணமானது. மருமகள் இந்த  தகாத செயலை கவனித்தாள். ஒருநாள் மக்கிய அரிசியில் சமையல் செய்து பணக்கார மாமனாருக்கு உணவு படைத்தாள். அதை  சாப்பிட்ட மாமனார், சோறை பணக்காரன், அவன் தன் தற்புகழ்ச்சிக்காக தினமும் அன்னதானம் செய்வான். ஆனால் பழைய மக்கிப்போன அரிசியில்தான் சோறு சமைப்பாள். அவனது  மகனுக்குத்  திருமணமானது. மருமகள் இந்த  தகாத செயலை கவனித்தாள். ஒருநாள் மக்கிய அரிசியில் சமையல் செய்து பணக்கார மாமனாருக்கு உணவு படைத்தாள். அதை  சாப்பிட்ட மாமனார், சோறை வாயில் வைத்ததும் துப்பினார். “ஏன் இப்படி செய்தாய்?” என்று கோபமாகக் கேட்டான் பணக்காரன். “ஏழைகளுக்கு நாம் கொடுப்பதுதான் மோட்சத்தில் நமக்குக் கிடைக்கும். அதற்கு நீங்கள் பழகிக் கொள்வதற்காகத் தான் இப்படி செய்தேன்” என்றாள். 

நற்செய்தியை நாம் வாழ்ந்தால்
விண்ணகம் நம்மில் இறங்கிவரும்

No comments:

Post a Comment

Ads Inside Post