Pages - Menu

Monday 17 July 2017

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு 23-07-2017

பொதுக்காலம் 16 ஆம் ஞாயிறு
 23-07-2017 
 சாஞா 12:13,16-19;   உரோ 8: 26-27; மத் 13: 24-43 

விடை காண மிகக்கடினமான கேள்வி  ஒன்று உண்டு. கடவுள் எல்லாம் வல்லவர். அப்படியிருக்க தீமைகள் ஏன் உலகில் நிலவுகின்றன? என்பதுதான் அந்தக் கேள்வி. இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு கூறிய உவமையில், ஊழியர்கள், நிலக்கிழாரிடம் சென்று ஏன் களைகள், வயலில் தோன்றியுள்ளன? நாம் நல்ல கோதுமையை மட்டும் தானே தெளித்தோம் என்கின்றனர். களைகளை உடனே அழிக்கலாமா? என்கின்றனர். நிலக்கிழார், பொறுமையாக இருங்கள். களைகளைக் கடைசியில் சேர்த்து எரிக்கலாம் என்கின்றார். உலகில் நிறைய தீமைகளைச் சந்திக்கின்றோம். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்று, ஊழல் என்று எண்ணற்ற ஊழல்கள். 

ஒருவர் கூறினாராம், ‘இரண்டு உலகப் போர்கள் ஏற்பட்டு பெரிய அழிவுகளை ஏற்படுத்தின. இப்போதுதான் உலகம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது’ என்றாராம். விபரம் தெரிந்த ஒருவர் கூறினாராம். இது அமைதியின் காலம் அல்ல. மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தன்னை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும், இர´யாவும் இரண்டாம் உலகப் போரில் தயாரித்த ஆயுதங்களை, ஏழை நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. ஏழை நாடுகள் தங்களுக்குள் சண்டையிட அமெரிக்காவும் இர´யாவும் துVண்டி விடுகின்றன.

    இந்தியாவில் இந்த ஆண்டு 2017- 2018இல் பாதுகாப்புப் படைகளுக்கு 3.59 லட்சத்துக் கோடி. நமது வருமானத்தில் 2.9 சதவிகிதம் செலவழிக்கப்படுகிறது. நம் நாட்டில் நடக்கும் ஊழலினால் 36400 கோடி இழப்பாகியிருக்கிறது என கணக்கிடப்பட்டிருக்கிறது. 
    உலகில் நிலவும் தீமைகளால் மனிதர் பாதிக்கப்படுகின்றனர். தீமைகளை எதிர்த்து நிற்க வேண்டும். தீமைகளை வன்முறையால் அழிக்க வேண்டும் என்பது சிலரின் கருத்து. இயேசு சகிப்புத் தன்மையுடன் வாழ வேண்டும் என்கிறார்.

         நமக்கு ஏற்பில்லாதவைகளை தீமைகள் என்கிறோம். எல்லோரிடமும் மற்றவருக்கு ஏற்பில்லாதவை நிறையவே உண்டு. குடும்பங்களில் ஏற்பில்லாத நிலையில்தான், கசப்புகள் வன்முறைகள் உண்டாகின்றன.

    முதல் வாசகத்தில், இறைவன் பொறுமை உள்ளவராகவும், சகிப்புத்தன்மை உள்ளவராகவும் விளக்கப்படுகிறார். ‘நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு  வழங்குகிறீர். மிகுந்த பொறுமையோடு ஆள்கின்றீர்’ என்று சாலமோனின் ஞானநுVல் கூறுகிறது. இரண்டாம் வாசகத்தில், ‘துய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார்’ என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

        நமக்குத் தீமை செய்தவரை பழிக்குப்பழி வாங்கும் உணர்வுதான் நம்மிடையே பொதிந்து நிற்கிறது. அதனைத் தாண்டி மற்றவர்களைப் புரிந்துக் கொண்டு, சகிப்புத்தன்மையுடன் வாழ்வது கடினமானது. 

வள்ளுவர், பொறுமை பெரிய வல்லமையுடைத்து  என்கிறார்.

இன்மையுள் இன்மை விருந்தொரால்
வன்மையுள் வன்மை மடவார் பொறை.

பொறுமை என்பது பொறுத்திருத்தல் மடடுமல்ல
பொறுத்திருக்கிற நேரத்தில் எப்படி

செயல்படுகிறீர்கள் என்பதுதான் பொறுமை என்கிறார் -ஜாய்ஸ் மேயர்.
 பொறுமை கசக்கும் ஆனால் அதன்  கனி இனிக்கும் - ஸீன் ஸாக்ருசோ.

பொறுமை எல்லா நிலையிலும் அவசியம்,  முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.  அவசரப்பட்டு முட்டையை உடைப்பதால் முட்டையின் குஞ்சினைப் பெற முடியாது.   - அர்னால்டு - கிளாசோ. 

No comments:

Post a Comment

Ads Inside Post