Pages - Menu

Monday 4 December 2017

ஒரு தாயின் தியாகப் பயணம் (நடந்த நிகழ்வு)

ஒரு தாயின் தியாகப் பயணம் (நடந்த நிகழ்வு)

- ஆரோக்கியமேரி , கல்லக்குடி.

பல ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பங்கள் பல குழந்தைகளுடன் எதிரொலிக்கும். அத்தகைய பெரிய குடும்பம் ஒன்றில் மூன்று ஆண்பிள்ளைகள், ஐந்து பெண்பிள்ளைகள்.  பெற்றோர்  மூன்று பையன்களுக்கும் நான்கு பெண்களுக்கும் திருமணம் முடித்தார்கள். கடைசி பெண்ணையாவது  படிக்க வைக்கலாம் என்று, அவளை  எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். அப்பெண்ணுக்கும், பெற்றோருக்கும் அவள் ஓர் அருள்சகோதரி ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. மற்ற  சகோதர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே இரகசியமாக திருவையாறு மடத்தில் அவரைச் சேர்த்து வைத்து படிக்க வைத்தார்கள். ஆனால் அவளின் மூத்த சகோதரன் ஊர் நாட்டாண்மைக்காரர். தங்கையை கண்டுபிடித்து அழைத்து வந்து அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

இங்குதான் ஆரம்பமானது,  இந்த பெண்ணின் தியாகப் பயணம். திருமணமானவுடன் முதலில் ஆண் குழந்தைப் பிறந்தது.  அடுத்து பெண் குழந்தை. இந்நேரத்தில்,  வளர்ந்து வந்த ஆண்குழந்தை மூளைக் காய்ச்சலால் இறந்து போக, சோகத்திலும் சோகமாக குடும்பம் நின்றது. அடுத்து கர்ப்பமாகி இரண்டாவது பெண் குழந்தையை ஈன்றாள். இந்நேரத்தில் கணவன் அடுத்து ஆண் குழந்தை வேண்டுமென்று பெரும் வேட்கைக் கொண்டான். ஆண்வாரிசிற்காக அவ்வளவு ஏக்கம். மனைவி கருவுற்றார். ஆண் குழந்தை பிறக்கும் என்று வேண்டுதல் வைத்து செபித்தார்கள். ஆனால் மீண்டும் பெண் குழந்தை. இதைப் பார்த்த கணவன் கவலைகளால்  எப்படி இந்த பெண் குழந்தைகளை வளர்ப்பது?  எப்படி மாப்பிள்ளை கண்டு பிடித்து வாழ்க்கையில் சேர்ப்பது?  என்ற நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இப்போது அந்த  சோகத்தில் விதவைத் தாய் மூன்று குழந்தையுடன் வாழ்க்கையில் போராடினாள். கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தாள். இதற்குமுன் கூலி வேலைக்கு சென்றதில்லை. பல நேரங்களில் பிள்ளைகள் பசியோடு உறங்க சென்று விடுவார்கள். அவர்களை எழுப்பி சோறு ஊட்டி விட்டு மீண்டும் படுக்க வைப்பாள். மூன்று பெண் பிள்ளைகளில் இரண்டு பேருக்கு எப்படியோ  திருமணம் செய்து வைத்து விட்டாள். அப்போது வரதட்சணைக் கொடுமை இப்போது இருப்பது போல் இல்லை. இந்நிலையில் கஷ்டப்பட்டு மூன்றாவது பெண்ணை ஆசிரியை வேலைக்கு படிக்க வைத்து விட்டாள். ஆனால் 12 ஆண்டுகளாக மகளுக்கு ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. இந்நேரத்தில் பலவிதமாக பக்தி முயற்சிகளை மேற்கொண்டு மகளுக்கு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டுமென்று மன்றாடினார். விரதம் இருத்தல்,  மண்சோறு சாப்பிடுதல் போன்று மகளுக்காக மன்றாடினாள். அற்புதமாக திருச்சிலுவை சகோதரிகள் வீடு தேடி வந்து அவளின்  மகளை ஆசிரியை வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து  அந்த தாயின்  சோக வாழ்க்கை  களைந்தது. ஆசிரியையான  மகள்,  திருமணம் செய்து கொள்ளாமல்  தன்  தாய் பட்ட துன்பங்களுக்கு எதிராக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து பாதுகாத்தாள். தாய் இறந்த பிறகும், தாய், தங்களுக்காகப்பட்ட தியாகங்களை தினமும் நினைந்து நினைந்து உருகிப் போனாள் ஆசிரியையான மகள்.
ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா?


No comments:

Post a Comment

Ads Inside Post