Pages - Menu

Tuesday, 26 December 2017

கந்து வட்டி மோசடிகள்

கந்து வட்டி மோசடிகள்

கந்து வட்டி மோசடிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துக் கொண்டிருக் கிருக்கின்றன. நாள் வட்டி, மீட்டர் வட்டி, குதிரை வட்டி என்று அநியாயமாக ஏழை மக்களின் பணத்தை சுரண்டி பணக்காரர் ஆகின்றனர். கடன் வாங்கியவர் பணம் கட்ட முடியாமல் தீக்குளிப்பதும், தற்கொலை செய்துக் கொள்வதும் நடைபெறுகின்றன. எல்லாம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பால் நடை பெறுகின்றன.
நான் கோவையில் இருந்த போது ஒரு கிராமத்தில் ஓர் அம்மையார் காய்கறி வியாபாரம் செய்தார். 50 ரூபாயை கடனாக வாங்கி காய்கறி வாங்கி வீதிகளில் சுற்றித் திரிந்து காய் கறி விற்று, அன்றைய தினம் வாங்கிய கடனுக்கு 50 ரூபாய் வட்டியும், 50 ரூபாய் முதலும் கட்டுவார். இந்த அநியாயத்தை கேள்விபட்டு பேங்க் முதல்வரிடம் அப்பெண்ணுக்கு சிபாரிசு செய்தேன். 500 ரூபாய் கடனாக அப்பெண்ணுக்கு குறைந்த வட்டியில் கொடுத்தார். அந்த பெண் அந்த 500 ரூபாயை தம் மகளின் காதணிவிழாவிற்கு செலவழித்த பிறகு மீண்டும் 50 ரூபாய் கந்து வட்டிக்கு

No comments:

Post a Comment

Ads Inside Post