Pages - Menu

Tuesday 3 October 2017

ஜெயம் தரும் ஜெபமாலை

ஜெயம் தரும் ஜெபமாலை

திருமதி. க. சந்தோசம் லியோ, M.A.; B.Ed.,
விரகாலூர்.
வானதூதர்  மரியாளின் சந்திப்பு
 என்னை வாழ அழைத்தது !
 ஜெயம் தரும் ஜெபமாலையால்....

மரியாள்  எலிசபெத்தின் சந்திப்பு
  பிறரை நேசிக்கச் செய்தது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

 மன்னவன் இயேசுவின் பிறப்பு
 என்னை எளிய வாழ்விற்குள்
 அழைத்துச் சென்றது !
 ஜெயம் தரும் ஜெபமாலையால்....

யோர்தான் ஆற்றின் அனுபவங்கள் !
என்னில் விடுதலையை கொண்டு வந்தது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

காணாவூர் திருமணம்
என் வாழ்வை  அதிசயமாக்கியது
ஜெயம் தரும் ஜெபமாலையால்....
.
நற்கருணையின் தியாகம்
  என்னை பிறனிடத்தில்
  அன்பு கூறச் செய்தது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

இயேசுவின்இரத்த வியர்வை
என் பாவங்களை கழுவிச் சென்றது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

கற்றூனில் கட்டி  அடிக்கப்பட்டதும்
என் ஆணவம் அழிக்கப்பட்டது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

இயேசுவின்  முள்மூடி கண்டதும்
என் குற்றம் என்னுள்  நொறுக்கப்பட்டது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

  சிலுவையின் துயரம்
  என்னில் மன்னிப்பை வளர்த்தது !
  ஜெயம் தரும் ஜெபமாலையால்....

 சிலுவையில் பிரிந்த உயிர்
 என்னில் மீட்பை சேர்த்தது !
 ஜெயம் தரும் ஜெபமாலையால்....

  உயிர் மீண்டும் எழும்போது
  விசுவாசம் என்னை
மனிதனாக மாறச் செய்தது !
ஜெயம் தரும் ஜெபமாலையால்....

 ஆம்
 ஜெயம் வேண்டும் உள்ளத்துக்கு
 ஜெபமாலை அனுதினம் செய்யும்
 அதிசயம் பல !

No comments:

Post a Comment

Ads Inside Post