Pages - Menu

Monday 2 October 2017

இன்றைய தமிழில் வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்

இன்றைய தமிழில் 
வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்

-அருள்பணி.ச. லூர்துசாமி, பவனமங்களம்.   

பேரின்பம்  ஈட்ட
கலி விருத்தம்:
 தங்கடேக மதங்கடீர மறக்கடேயுக தாழ்வெலா
மங்கவேத வறங்கடேற மனங்கடேர வழங்கிவா
னங்கிலாப மடைந்துவாழ வடங்கலேதிருக் காவலூர்
நங்கைசேவடி நம்பிநாளு நயந்துசூடுக நாடியே.   (பாடல் எண் 11)

ஓங்கு உடல் நலம்
           உயர்ந்து வாழ
 வீங்கு பாவம்
             வீழ்ந்து மடிய
 தேங்கு தாழ்வு
               தினமும் போக
 மங்கா அறங்கள்
              மலையாய் உயர
 குன்றா புகழுடை
               மனிதர் சேர
 தேடிய செல்வம்
             வாடிய மனிதர்க்கு
 நாடியே நல்கி
             பேரின்பம் ஈட்ட
 பாடியே வருவீர்
             பாருலகோரே
 திருகாவலூர் அன்னை
           திருவடி மலரை
 மலரடி சூடி
           மகிழ்திடுவீரே...!   

No comments:

Post a Comment

Ads Inside Post