Pages - Menu

Sunday 31 January 2016

ஆத்தாவும், தாத்தாவும்

ஆத்தாவும்,  தாத்தாவும்

 என்னடியம்மா இந்த வேசம்? நீ ஒரு பொம்பளை, வயசானவ, இரண்டு பிள்ளைகளுக்கு தாயானவ, இப்படி கால்சட்டையும், பனியனும் போட்டுக்கிட்டு வந்திருக்க. என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?
‡ தமிழ் நாட்டுக்கே பிடிச்சிருக்க பைத்தியம்தான் எனக்கும் பிடிச்சிருக்கு. உங்களுக்கு புரியல?
‡ என்னடி எல்லாத்தையும் புதிரா பேசுற? வயசான காலத்தில புரிஞ்சிக்கிறதும் குறைஞ்சு போச்சு.
இப்ப காட்டுரேன் பாருங்க (தாத்தா நெஞ்சில பாட்டி தலையால முட்டுகிறாள்)
‡ புரிஞ்சுதடி, ஜல்லிகட்டு பிரச்சயைத்தான் இப்படி கால்சட்டை, பனியனுடன் காட்டுறியா? பயங்கரமான ஆளுடிநீ.
‡ அரசியல் கட்சிகள் போட்ட சீனெல்லாம் பியூசா போயிடுச்சு. மக்கள் மேலே உண்மையில அக்கறையிருந்தா, இந்த அரசியல் கட்சிகள் இப்படி நாடகமாடியிருக்க மாட்டாங்க.
‡ அரசியல் கட்சிகளெல்லாம் ஏமாத்திர கம்பெனிகள் என்று தெரியாதா?
‡ அடி, உனக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாட்டில மாடு வளர்க்கிறதே குறைஞ்சு போச்சு. கிராமத்திலகூட அப்படித்தான். டவுன்ல, சாணி பவுடர் வாங்கி வீட்டுக்கு முன்னால தெளிக்கிறாங்க தெரியுமா?
‡ நம்ப பாரம்பரிய ஜல்லிக்கட்ட அப்படியே விட்டிருக்கலாம், என்ன சொல்றீங்க?
‡ ஜல்லிகட்டு, மிருகங்கள் வதை என்று சொல்றாங்க. மனிதர்கள் அரசாங்கத்தாலேயே வதைக்கப்படுகிறாங்களே.
‡ ஆமாங்க, குழியும் குட்டையுமா இருக்கிற நம் ரோட்டில பயணம் செய்யும் பல பேருக்கு முதுகுவலி வந்திருக்கும், தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கும். நம்ப அரசு மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்களில் இருக்கும் அசுத்த சூழ்நிலைகள், மக்களுக்கு வியாதியை வாரி வழங்கி வதைத்துக் கொண்டிருக்கு. தமிழ்நாட்டு சாலைகள், அரசு பேருந்துகளை பார்ககும்போது வாந்தியயடுக்கத்தான் வருது. கர்நாடகா பஸ் தேர் மாதிரி பளிச்சினு வருது. அதுல டிக்கட் கிடைக்க மாட்டேங்குது.
‡ இது இப்படி இருக்கும்போது, பி. ஜே. பி.காரங்க அயோத்தி ராமர் கோவில கட்ட அங்கு கட்டிட பொருள்களையயல்லாம் சேர்த்து வராங்களாம்.
‡ 1992ல நடந்தது மாதிரி மீண்டும் ரத்த கலரிய கொண்டுவர பார்க்கிறாங்க. வன்முறைக்கு அவங்க கை அரிச்சிட்டு இருக்கும் போல இருக்கு. வரலாற்று அறிஞர்கள், 1992ல செய்தது பெரிய தப்பு. இப்ப மீண்டும் ராமர் கோவில கட்டனுங்கிறது பெரிய தப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. இந்த பகீர் செய்திய படிச்சீங்களா?
‡ பஞ்சாபில பதான்கோட் இடத்தில பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறாங்க. தீவிரவாதிகளை தாக்க வேண்டியவர்களையே திவிரவாதிகள் தாக்கியிருக்கிVர்கள். சுடவேண்டிய துப்பாக்கியையே சுட்டிருக்கிறாங்க.
‡ ஆமாடியம்மா, இதெல்லாம் நம்ம கையாலாகாத தனம். தீவிரவாதிகளுக்கு நம்ம படைவீரர்கள் விளக்கு புடிச்சிருக்காங்கன்னு சந்தேகப்படுறாங்க.
‡ இந்தியாகாரங்கனா, பொய் புரட்டு பித்தலாட்டக்காரங்க, காட்டி கொடுக்கிறவங்கன்னு பெயராயிடுச்சு.
‡ சரிடியம்மா, இதெல்லாம் பார்த்து நம்ம பிறரிடம் ஏமாறாம பார்த்துக்குவோம்.
‡ ஆனா ஆறுதலான, நெகிழ்ச்சியான நிகழ்ச்சியும் தமிழ்நாட்டில நடந்திருக்கே, கவனிச்சிங்களா?
‡ சென்னை வெள்ளத்திலே மக்கள் உதவியதை தானே சொல்ற. ஆமான்டியம்மா, உண்மையான தமிழ் மணம் இப்பத்தான் வீசுச்சு. சரி நேரமாயிடுச்சு, நம்வயித்த கொஞ்சம் கவனிப்போம், வா!

No comments:

Post a Comment

Ads Inside Post