Pages - Menu

Monday 11 January 2016

சென்ற ஜனவரி 10, 2016 ஆம் நாள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமாமுனிவர் தங்கியிருந்த ஏலாக்குறிச்சி என்ற ஊருக்கு சென்றிருந்தேன். அதற்கு திருமானூர் என்ற ஊர் வழியாக செல்ல வேண்டும். திருமானூரில் சோழ அரசன் தஞ்சைக்கு கொண்டு செல்ல வடநாட்டிலிருந்து கொண்டுவந்த முழுமையும் செதுக்கபடாத கல் அங்கு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கொள்ளிட நதியில் கரையில் உள்ளது திருமானூர். கொள்ளிடத்தில் வெள்ளம் வந்ததால் கல்லை எடுத்துசெல்ல முடியாமல் அக் கற்களை அங்கு விட்டு சென்றதாக மரபு வழி செய்தி கூறுகிறது அதன் படமும், பேருந்து நிலையம் அருகில் வாழை பழம் விற்கும் எளிய வியாபாரியையும், பிறகு ஏலாக்குரிச்சியில் அமைந்துள்ள ஆலயம், மாதா பீடம், அங்கு உள்ள அடைக்கல மாதா சுருபத்தின் பிரதியை வெங்களத்தில் 53 அடி உயரத்தில் செய்து வருகிறார்கள். அதன் முக பகுதி மட்டும் நிறைவு பெற்றுள்ளது, ஆகியவற்றையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post