Pages - Menu

Friday 2 March 2018

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

 ( இலக்கியம்  என்பதை  இரத்தின  சுருக்கமாக  விளக்கும்  கட்டுரை )

சகோ. விமலிFIHM. இதயா கல்லுVரி, குடந்தை

இலக்கியம் என்பது ஒரு சமுதாயப் படைப்பு. இலக்கியம்
சமுதாயத்திலிருந்து தோன்றுகிறது. அதுவும் சமுதாயத்திற்காகவே தோன்றுகிறது. சமுதாயப் பிரதிபலிப்பாக மட்டுமின்று அதனை மேம்படுத்துவ தாகவும் இலக்கியம் அமைகின்றது. உயர்ந்த எண்ணங்கள்தான் சிறந்த இலக்கியமாக உருக்கொள்கின்றன. சிறப்பானப் பண்புடையது. ஆழமானது. அழகுடையது. இவற்றின் முழுவடிவம்தான் இலக்கியம் “ஸிஷ்மிerழிமிற்re ஷ்வி மிஜுe reஉலிrd லிக்ஷூ ணுeவிமி மிஜுலிற்ஆஜுமிவி”   என்கிறார் எமர்சன். இன வேறுபாட்டாலும், கால வேறுபாட்டாலும் அழியக் கூடாத நிலைத்த இலக்கியமே உயர்ந்த இலக்கியம். எல்லாக் காலத்திலும் படித்து ரசிக்கக்கூடிய கூறுகள் அதில் இருக்க வேண்டும். இலக்கியத்தின் தன்மை நிலைபேறுடையதாக இருக்க வேண்டும்.

இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு

வாழ்க்கையில் நம்மால் காணமுடியாத, காணாமல் விட்ட, கண்டும் காண இயலாத, காண விரும்பாத, காண மறுத்த உண்மைகளை விளக்குபவன் கலைஞன். மறைந்த, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உணர்ச்சிகள் கவிஞனால் வெளிக் கொணரப்படுகின்றன. வாழ்க்கையின் விளக்கம் கவிஞனால் நமக்கு இலக்கியத்தின் வாயிலாக  கிடைக்கிறது.

இலக்கியம் வாழ்க்கையின் விமர்சனம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களையும் அதன் காரணங் களையும் இலக்கியம் விமர்சனம் செய்கிறது. அந்த விமர்சனங்களை திறந்த மனதுடன் சந்திக்கும் சமூகம் இன்று உலகுக்குத் தேவையாக உள்ளது.

இலக்கியம் வாழ்க்கைக்கு வழிகாட்டி

மனிதன் வாழ்க்கையில் கவனிக்கப்படாத சிறு நிகழ்ச்சியையும் இலக்கியம் தனதாக்கிக் காட்டுகிறது. இலக்கியம் உணர்வைத் தொட்டு உள்ளத்தைத் தன்வயப்படுத்திப் பண்படுத்தும் இயல்புடையது. இயற்கையான வாழ்க்கையும், உணர்வுகளும் மனித உள்ளத்தை விரிவுப்படுத்துவதைவிடக் கற்பனை உணர்ச்சிகள் மனித உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. வாழ்க்கையின் கூறுபாடுகளில் இலக்கியத்தில் பளிச்சிடுவதால் இலக்கியம் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

 இலக்கியம் சமுதாய ஆவணம்

மனிதன் படைக்கும் இலக்கியம் சமுதாயத்தைத் தவிர்த்த ஒன்றில்லை. மனிதர்கள், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்கின்ற இச்சமுதாயத்தை எந்நிலையிலும் விட்டு விலகி இலக்கியம் படைத்திட இயலாது. ஒரு கலைஞன் படைக்கும் இலக்கியங்கள் சமுதாயத்தில் காலந்தோறும் நடைபெறும் பல நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகள் படைப்பாளியிடம் ஏற்படுத்திய தாக்கங்களையும் வெளிப்படுத்தும் சாதனங்களாகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையே யான உறவுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கும் சமுதாய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை அறிய உதவும் ஒரு சமுதாய ஆவணமாக இலக்கியம் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் பொதிந்துள்ள கருத்துக்கள் காலம் கடந்தும்  மக்களுக்குப் பயன்படும் அளவிற்கு அதன் வாழ்நாள் வளர்கிறது. இலக்கியம் என்பது கவிதை, நாடகம், காவியம், புதினம், சிறுகதை, மடல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பலவுமாகும். இலக்கியத்திற்குக் கலைத் தன்மையை அளிப்பன  அழகியல், கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்பனவாகும்.
 முடிவாக
ஒருவர் தான் அனுபவித்த ஒன்றை மற்றவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற மனிதப் பண்பே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகின்றது. ஒருவர் ஒரு பொருளிலோ, நிகழ்ச்சியிலோ கண்ட உண்மையைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று இயல்பாக எழும் ஆசையே இலக்கியம் தோன்றியதற்கானக் காரணம் எனலாம். ஆழ்ந்த அனுபவித்த உண்மையைக் கூறுவதே இலக்கியம். வாழ்க்கையில் எங்கோ, எப்போதோ தோன்றிய ஒரு நினைவு, ஒரு நிகழ்ச்சி இலக்கியம் பிறக்கக் காரணமாகியுள்ளது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இலக்கியம் தோன்றுவதற்கான வித்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. அதை புரிந்து கொள்வோம். நாமும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகிடுவோம். இனிமையான, ஏற்றமிகு இலக்கியம் படைத்தளிப்போம். அதுவே இன்றைய சமூகத்திற்கான உயரிய வாழ்க்கை சாதனமாகட்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post