Pages - Menu

Friday 26 February 2016

அமெரிக்கக் கடிதம், இ. சவேரியார், M.Sc, கேரி, அமெரிக்கா.

அமெரிக்கக் கடிதம்
இ. சவேரியார், M.Sc, 
கேரி, அமெரிக்கா. 

     நமது கிராமம் ஒன்றில், ஒரு குடிமகன் வாதிட்டார். அமெரிக்கா சூப்பர் பவராக மாறினதற்குக் காரணம், அங்கு மக்கள் நிறைய மது அருந்துவதுதான் என்றார். ஆனால், இந்தியா முன்னேறாததற்குக் காரணம், இந்தியாவில் மக்கள் அதிகமாக மது அருந்துவதில்லை. அதுதான் காரணம் என்றார். குடிமகன் போட்ட நல்ல நகைச்சுவை. அமெரிக்காவில் வட கரலோனினா மாவட்டத்தில் கெரி என்ற நகரில் கணிணி துறையில் பணிசெய்துவரும் திரு.இ.சவேரியார் அவர்கள் மேல்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணத்தை தன் அனுபவத்திலிருந்து காட்டுகிறார்.

அன்புள்ள என் இனிய தமிழ் மக்களே, நான் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்க நாட்டில் வாழ்கிறேன். இங்குள்ள நல்ல பழக்க வழக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பகிர்வு உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

அமெரிக்கர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் நல்லப் பழக்கம், ‘காலம் தவறாமை’. அவர்கள் தாமதமாக வந்து அடுத்தவர்களின் நேரத்தை வீணடிப்பதை ஒரு துளியும் விரும்புவது இல்லை.

எல்லாக் கூட்டங்களும், விழாக்களும், சந்திப்புகளும் இங்கு குறித்த நேரத்தில் தொடங்கி விடும். குறித்த நேரத்தில் தொடங்குவதால் வரும் நன்மைகள் பல. எடுத்துக்காட்டாக ஒரு கூட்டம் அரை மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அரை மணி நேரம் அதிகமா செலவிட வேண்டியுள்ளது. அந்தக் கூட்டத்தில் 1000 பேர் கலந்து கொள்வதாக வைத்துக் கொண்டால் அரை மணி நேர கால தாமதம், 500 மனித மணி நேரத்தை வீணடித்து விட்டது எல்லோரும் 500 மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக செலவழித்திருக்கலாம். ஆனால் நமது நாட்டில் கூட்டத்திற்கு சரியான நேரத்தில் வருபவர்கள் முட்டாள்களாகவும், தாமதமாக வருபவர்கள் அறிவாளிகளாகவும் கருதப்படுகிறார்கள். முக்கியமாக நம் அரசியல்வாதிகள் இந்த கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாம் தாமதமாக வரும்போது, சரியான நேரத்தை கடை பிடிப்பவர்களையும் தாமதமாக வரத் தூண்டுவதாக அமைந்துவிடும்.

என்னுடன் வேலை பார்க்கும் நண்பர் காலை 6.30 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்து விடுவார். அவர் வரும் நேரத்தை வைத்து உங்கள் கடிகாரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். சரியாக மாலை 3.00 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விடுவார். அவரிடம் ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறீர்கள் என்று காரணம் கேட்டேன். அவர் நான் அலுவலகத்திற்கு காலை 8 மணிக்கு வந்தால் எல்லா traffic  நெருச்சலில் சிக்கி, traffic light  ல் நின்று வருவதற்கு 45 நிமிடம் ஆகிறது. அதுவே காலை 6 மணிக்கு கிளம்பினால் 25 நிமிடம் ஆகிறது. அதுவே மாலை நேரத்திலும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு கிளம்பினால் traffic அதிகம். 3 மணிக்கு கிளம்பினால் மிrழிக்ஷூக்ஷூஷ்உ இல்லை. இவ்வாறு நான் தினமும் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து 40 நிமிடம் சேமிக்கிறேன். இந்த 40 நிமிடத்தை என் குடும்ப வேலைக்குப் பயன்படுத்துகிறேன். தினமும் 40 நிமிடம், வாரத்திற்கு 3 மணி நேரம், மாதத்திற்கு 20 மணி நேரம், வருடத்திற்கு 173 மணி நேரம் (21 வேலை நாள்) சேமிக்கிறார். எனக்கு உண்மை அப்போது புரிந்தது.

எனவே, நேரம் பணத்தை விட மேலானது. கால தாமதமாக வந்து அடுத்தவர்கள் நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்போம். சரியான நேரத்தில் எங்கும் சென்று நமது நேரத்தையும், அடுத்தவர்கள் நேரத்தையும் காப்போம். அப்போது நாமும் முன்னேறுவோம், நமது நாடும் முன்னேறும். நம் நாடு வல்லரசாக மாற வேண்டுமென்றால், இந்த நல்லப் பழக்கம் வலிமையான ஆயுதம்.

3 comments:

Ads Inside Post