Pages - Menu

Tuesday 2 February 2016

இது கோயம்புத்தூரில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ......

இது கோயம்புத்தூரில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ......

ஒரு பெரிய வணிக அங்காடியில், ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான். பணம் பெறுபவர் உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்குத் தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா? என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு, ‘இல்லடா செல்லம் குறைவாக உள்ளது’ என்றார். அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.
நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மையை யாருக்கு தரப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன், அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும், அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்றுவிட்டது போல உணர்ந்தேன். அவன் கூறியது இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள். என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார்.
நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டுவந்தேன். எனக்கு என் தங்கையும், அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினான்.
மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான். அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள். அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.
நான், என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியமால் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். இவனும் இசைந்தான். நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது. அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.
நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன். பின்னர் உள்ளூர் தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என்நினைவிற்கு வந்தது. மகிழ்வுந்தில் பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி மோதி விபத்துக்குள்ளானது என்றும், அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த செய்தி, மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் சாகும் நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா? என்ற சந்தேகத்தை அளித்தது.
இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி, விபத்துக்குள்ளான பெண் இறந்து விட்டாள் என்று, நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன். அச்சிறுவனின் அம்மா சடலமாக கிடந்தாள். கையில் சிறுவனின் புகைப்படமும், அந்த பொம்மையும் இருந்தன. அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினேன். அந்த சிறுவன் தன் அம்மாவிடமும், தங்கையிடமும் வைத்திருந்த அன்பும், பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.
ஆதாரம் : இணையதளம்

No comments:

Post a Comment

Ads Inside Post