Pages - Menu

Monday 22 February 2016

விவிலிய விடுகதைகள், எண்ணிக்கை புத்தகம்

 விவிலிய விடுகதைகள்
எண்ணிக்கை புத்தகம்

எட்டப்பகை என்ற மொழியின்படி இக்கும்பல் துரத்திவிடும் என்று கூறியது யார்? யாரை?
14. வாயில்லா ஜீவனது ; வாகனத்திற்கு பயன்படுத்துவது ; அதுவோ வானத் தூதருக்கு வழிவிட்டது.அது எது? வாகனமாய் பயன்படுத்தியது யார்?
15. நன்மையைத்தான் செய்தேனப்பா ; நாளெல்லாம் உழைத்தேனப்பா; நன்றியில்லையா உமக்கு; மூன்று முறை என்னை அடித்து வாட்டுவது ஏனப்பா ; என வாய்விட்டு கதறி பேசியது எது என்று நீ சொல்லப்பா, யாரை நோக்கியப்பா? கூறுங்கப்பா?
16. வருங்காலத்தைக் கேட்க ;நிகழ்காலத்தில் நடத்த ; சபிக்கும்படி சொல்ல ;நான்கெழுத்துக்காரர்கள் ;இரு எழுத்து சொல்வதற்கு ; கட்டணத்தைக் கையில் எடுத்துப் போயினர்; யார் நான்கெழுத்துக்காரர்கள். எதற்கு?
17. அபயத்திற்கு ஆறிடங்கள், ஆபத்திற்கு உதவும்; தஞ்சம் என வந்தோர்க்கு; தயவுக் காட்டும். தப்பிக்க வைக்கும்.தலையையும் காக்கும். அது என்ன? எத்தனை இடம்?
18. சிந்தனை, வந்தனை, நிபந்தனை, தந்தனை, இருந்தனை, பொருத்தனை ஆக இவற்றில் ஒன்றை இறைவனுக்கு செய்வது, நேர்ந்துக் கொள்வது எது?
19. ஒரு கொடியில் இருப்போம். ஒன்றாய் இருப்போம். இணைந்த கரங்களோடு இணைந்திருப்போம். எங்களை பெண்களின் கண்களுக்கு ஒப்பிடுவர்; இனிப்பாய் இருப்போம் சுவைத்தருவோம்; எங்கள் செழிப்பினைக் கண்டு; ஒற்றர்கள் எங்கள் கிளைகளை அறுத்து, தடியில் கட்டி;இருவர் சுமந்தனர்.
நாங்கள் யார்? எங்கே?
20. பார்த்தா பனைமரம் பார்வைக்கு பயங்கரம்; ஆனாக்கின் அரக்கப் புதல்வர்கள் அவர்கள் ;நாங்களோ அவர்களுக்கு முன்பு வெட்டுக்கிளி போல் ;காணப்பட்டோம். நாங்கள் யார்? கொஞ்சம், அளவுக்கு மீறி டூப் விட்டோம்.சொல்லுங்கள் பார்க்கலாம்.
21. அவர்கள் அன்னப் பறவைக்கு ஒப்பானவர்கள்.என் பணிக்கே உரியவர்கள், உரிமையுடையவர்கள். திருவுறைவிடத்தின் பணி இவர்களதே; குருத்துவப் பொறுப்பும் இவர்களதே; இவர்களுக்கு கொடுத்தப் பெயர் நான்கெழுத்தில் உள்ளது.யார் இவர்கள்?
22. உரிமை சொத்தைப் பெற; உடைமை நாட்டை ஆள;குலுக்கி எடுத்துப் பெற்றது.சண்டையின்றி, விவாதமின்றி பெற்றது எவை? எப்படி?1. என் தங்கையின் பெயர் இரண்டெழுத்து. என் இயற்பெயர் மூன்றெழுத்து. எனக்குப் பெயர் வைத்தவர் இரண்டெழுத்து ‡ இவர் வைத்தப் பெயர் மூன்றெழுத்து
சொல்லுங்கப் பார்ப்போம்.
2. தேனாறு ஓடுகிறது; பாலாறு ஓடுகிறது ; செல்வம் செழித்துள்ளது; கண்டோம், கேட்டோம், சுவைத்தோம். வெற்றிக்கிட்டும் நமக்கு அங்கே அருள்பவர் ஆண்டவரே. வெஞ்சினம் படைக்காதீர், அஞ்சாதீர் எனக் கூறும் ஒற்றர்கள் யார்?
3. எகிப்திலும் கண்டனர், பாலையிலும் கண்டனர், அருஞ்செயலைக் கண்டனர். என்னை பத்துத் தடவை சோதித்தனர். பொறுத்தது போதுமடா, புயல் போல் எழுவேனடா. வாக்களித்த நாட்டை இவர்களில் எவனும் காணமாட்டாண்டா; என்று தன் சோகக் கதையை யாரிடம் முறையிட்டு சொன்ன சீமான் யார்?
4. என் நண்பேண்டா, என் வீடு அவனுக்கு சொந்தம் ; என் உருவைக் காண்பவன்; என் நம்பிக்கைக்குரியவன்;
நான் நேர்முகமாக பேசுவேன் ; அவனும் என்னுடன் சுதந்திரமாய் பேசுவான்; சொன்னவர் யார்? யாரை? யாரிடம்?
5. பொல்லாங்குப் பேசி;  பொல்லாங்கை விலைக்கு வாங்கிய மங்கை யார்? பெற்ற தண்டனை யாது? யார், யாரை, பெற்றது?
6. கெஞ்சினார் இரண்டெழுத்துக்காரர்; இரகுவேலின் மகன் இரண்டெழுத்துக்காரர் ; பிகு பண்ணிக் கொண்டு பேசினார். கெஞ்சி பேசியவர் வாக்களிப்பேன் என்றார்.
யார்? யார்? எப்படி? எதற்கு?
7. சந்தனப் பேழைக்குள்ளே வைத்தது பன்னிரு கோல்கள். ; அதில் ஒன்று மட்டும் துளிர்த்தது, பூவும் பூத்தது, பழமும் பழுத்தது.யாருடைய கோல்? என்னப் பழம்?
8. உயிருக்குயிரானத் தோழன் ; தோளோடு தோள் கொடுத்தவன் ; தோழனை விட்டுப் பிரிந்தான், மூன்றெழுத்துக்காரன்; அவரின் கட்டளையை மீறினான் மெரிபாவின் தண்ணீர் அருகில். விளைவு, பெரு வாய்ப்பை நழுவ விட்டான். யார்? எப்படி?
9. உயிருள்ள பாம்பு உடம்புக்கு வி­ம் கொடுத்து கொன்றது. உயிரற்ற பாம்போ உடம்புக்கு வி­ம் நீக்கி உயிர் பிழைக்க வைத்தது. எது? எது? எப்படி?
10. படையலிலே இரண்டுப் படையல். அது என்ன படையல்?
11. அவர்கள் கண்களைக் குத்தும் கூராணிகள். விலாவைக் கீரும் முட்கள். அவர்களை விட்டு வைத்தால் நஷ்டப்படுவீர்கள், கஷ்டப்படுவீர்கள். யார் அவர்கள்? சொன்னது யார்? எப்படி?
12. சீட்டிலேயே சீட்டு பெருஞ்சீட்டு. அது என்ன சீட்டு?
13. மாடு வயல் வெளிப்புல்லை வேரற மேய்ந்து விடும்.
கிடுக்கிப் பிடியுள் மாட்டிக் கொண்டோம். கிட்டப் போனால் 

No comments:

Post a Comment

Ads Inside Post