Pages - Menu

Sunday 30 October 2016

இயற்கை மருத்துவம், - ம. இராஜரெத்தினம், இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

இயற்கை மருத்துவம்

- ம. இராஜரெத்தினம், 
இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

உணவில் சேரும் இரசாயன நச்சுக்கள்

அன்றாட நமது வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது நமக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஏன்? எதற்காக நோய் வருகிறது? என்ற நமது கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. காரணம் உண்மை தெரிந்தவர்கள் (மருத்துவர்கள்) சொல்வதில்லை. சொல்வதற்கு நேரமும் இல்லை. அவர்கள் கூற நாம் அனுமதிப்பதும் இல்லை. மேலும் அவர்கள் சொல்ல விரும்பும் வி­யங்கள் அவர்களுக்கு முழுமையாகத் தெரிவதில்லை. இக்காரணங்களால் ஆரோக்கியம் என்பது புரியாத புதிராக உள்ளது. அந்த புதிரை அவிழ்க்கும் சிறிய முயற்சி இந்தக் கட்டுரை. முதலில் நமது உணவுகளில் நாம் அறியாமலேயே எவ்வாறு நச்சுக்களால் பாதிக்கப்படுகிறோம் என்பதை அறிவோம்.

சீனி : 

நிலத்தில் இருந்து கிடைக்கும் கரும்புச்சாறில் 75லிருந்து 80 சதவீதம் நீர்ச்சத்தும், 8லிருந்து 15 சதவீதம் சுக்ரோசும் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ், மெழுகு, ரெசின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், சிலிகா, குளோரைட் பாஸ்பேட் போன்ற நமது உடம்பிற்கு தேவையான கனிமச் சத்துக்கள் உள்ளன. சீனி தயாரிப்பில் கரும்புச்சாறு பிழியப்படும் முதல் நிலையில் பால்மாலின் அல்லது பிளிச்சிங்பவுடர் அல்லது குளோரின் அல்லது அம்மோனியா பை புளுயீடு பேக்டீரியா கன்ட்ரோலாக உபயோகப்படுத்தப்படுகிறது.

2வது நிலையில், பிழிந்த சாறு 60 - 70 டிகிரி செல்சியஸில் பாஸ்போரிக் ஆசிட் 200 மில்லிகிராம் / லிட்டர் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கி அல்லது கிளினிங் ஏஜெண்டாக பயன்படுகிறது.

3வது நிலையில் வினைபுரிகலனில் சுண்ணாம்பு நீர் (0.2% ) அளவு சேர்த்து, பின் சல்பர்டை ஆக்ஸைடு வாயுவை செலுத்துகிறார்கள். வெண்மைநிறம் சுண்ணாம்பால் பெறப்படுகிறது.

4வது நிலையில் 102 டிகிரி செல்சியஸ் ஹீட்டரில் (கொதிகலனில்) கொதிநிலை அளவிற்கு சூடுபடுத்தப்படுகிறது. இப்போது நாம் நல்ல விட்டமின்களை இழக்கிறோம். செயற்கை சுண்ணாம்பு அளவுக்குமீறி சேர்ந்துவிடுகிறது.

5வது நிலையில் சாறு தெளிவடைய பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை சேர்ந்த பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, தெளிந்த சாறு கிடைக்கிறது.

6வது நிலையில், சுண்டுகலனில் காஸ்டிக்சோடா, வா´ங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த சாறு தயாராகிறது.

7வது நிலையில் மறுபடியும் சல்பர் டை ஆக்ஸைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்ந்து படிகநிலைக்கு வருகிறது. சல்பர் டை ஆக்ஸைடு (கந்தக அமிலத்தின் பகுதி பொருள்) நஞ்சு மறுபடியும் சீனியில் சேருகிறது.

8வது நிலையில் சென்டரி பியூசிங் அல்லது சுழற்சி முறையில் சீனி தனியாகவும் மொலாசஸ் (சாராயச் சர்க்கரை) தனியாகவும் பிரித்து எடுக்கப்படுகிறது. மொலாசஸில் நமக்குத் தேவையான சத்துக்கள் சென்றுவிடுகின்றன. இறுதியில் வெள்ளைநிறச் சீனியாக எஞ்சியிருப்பது கார்பன் எனும் கரியே ஆகும். இதனுடன் மாட்டின் எலும்புச் சாம்பல் சேர்த்து நாம் பயன்படுத்தும் சீனி விற்பனைக்கு வருகிறது. மேலும் சீனி 6 மாதங்களுக்கு உபயோகப்படுத்தாமல் இருந்தால் சல்பர் டை ஆக்ஸைடால் மஞ்சள் நிறமாகி வீரிய நஞ்சாகி விடுகிறது.

தீமைகள் : 

1. சீனி சீரணத்தின் போது, அதில் கரி மட்டுமே எஞ்சியிருப்பதால் நமது உடலில் உள்ள நல்ல வைட்டமின்கள், தாது  உப்புக்கள் மற்றும் பி காம்பளக்ஸ் சத்துக்களை திருடிவிடுகிறது. இதனால் கல்லீரல், கணையம், இதயம் ஆகியவற்றின் செயல்திறன் வீரியம் குறைகிறது. இதன் காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்பட்டு மனிதன் மிகுந்த பலவீனத்திற்கு உள்ளாகிறான்.

2. உடல் உழைப்பு இல்லாமல் வெள்ளைச்சீனி கலந்த பண்டங்களை அதிகம் சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடை கூடி, உடல் பருமன் ஆகி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சுவாசக்கோளாறு, சளித்தொல்லை, மூக்கடைப்பு வருகிறது.
3. ஆஸ்துமா நோயாளிகளுக்கு, வெள்ளைச்சீனி பிராண சக்தியை குறைத்து விட்டமின்களையும் திருடிவிடுவதால், இதயநோய், மாரடைப்பு, சிறுநீரக நோய்களுக்கு வித்திடுகிறது.
4. சீரணத்தின் போது பாஸ்பரஸ், இரும்புச் சத்து, தியமின் போன்ற பொருட்கள் குறைவதால், குடல்புண், இரத்தசோகை ஏற்படுகிறது. இளமை திசுக்கள் விரைந்து அழிய ஆரம்பிக்கின்றன. முகம் பொலிவிழந்து கட்டிகள், முகப்பரு ஏற்பட இதுவே காரணமாய் அமைகிறது.
5. காபி, டீ அதிகம் அருந்துவதால், வெள்ளைச்சீனி அதிகம் சேர்ந்து பலருக்கு பசி என்பதே என்னவென்று தெரிவதில்லை. வயிற்று  உபாதைகள் ஏற்படுகின்றன; நரம்புகள் தளர்ந்து விடுகின்றன. மேலும், கடையில் விற்கும் நாட்டுவெல்லத்தில் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஊறு ஏற்படும். எனவே, இனிப்பிற்கு பனைவெல்லம் (கருப்பட்டி), தேன், இரசாயனம் கலக்காத நாட்டுவெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

டீ :
இதில் தியோ புரோமின் என்ற இரசாயனம் கலந்துள்ளது. டீ தயாரித்த பாத்திரத்தின் உள்ளே கருப்பாக இருப்பது தியோ புரோமின்தான். மேலும் நாம் இங்கு குடிப்பது Dust Tea. வெளிநாட்டில் தியோ புரோமின் நீக்கப்பட்ட சுத்தமான டீ‡ஐ பயன்படுத்துகின்றனர். தியோ புரோமின், குடல் பகுதியில் ஒரு லேயர் உண்டாக்குகிறது. இது மலச்சிக்கலை உண்டாக்கி, உள்ளுறுப்புகளை சூடாக்குகிறது. இதனால் இரத்தச்சோகை ஏற்பட்டு, உடலின் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. ஆவாரம்பூ, தாமரை கலந்த இயற்கை மூலிகை டீ‡ஐ பயன்படுத்த வேண்டும்.

காபி :

இதில் கஃபின் என்னும் கொடிய நஞ்சு கலந்துள்ளது. 
இதன் தீமைகள் : 
குழந்தைகளின் உறக்கத்தை தடுத்து வளர்ச்சியை தடைப்படுத்துகிறது. பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், தலைசுற்றல், அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள கால்சியத்தை திருடி விடுகிறது. மேலும், உடல் எலும்புகளிலுள்ள தாதுக்களின் (Bone Mineral Density) அடர்த்தியைக் குறைத்து, அவற்றை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும். இரைப்பையில் அமிலத்தை அதிகப்படுத்தி புண்களை ஏற்படுத்தும். இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது. மன பதட்டம், மன இறுக்கம் போன்ற நரம்பியல் வியாதிகளை ஏற்படுத்துகிறது. சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதயத்தை வலுவிழக்கச் செய்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படுகின்ற வலி மற்றும் மார்பக வலிக்கு கஃபினே முழுக்காரணம்.

No comments:

Post a Comment

Ads Inside Post