Pages - Menu

Wednesday 6 April 2016

அமெரிக்கக் கடிதம் - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்
- சவரி,
கேரி, வடகரோலினா
இந்த வாரம் உங்களுடன் அமெரிக்கர்களின் கடின உழைப்பைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை கடுமையாக உழைக்கிறார்கள். சனி, ஞாயிறு நன்றாக ஓய்வு எடுக்கிறார்கள். அவர்கள் உழைப்பிற்கு ஓர் உதாரணம் சொல்லி விளக்க விரும்புகிறேன்.

அப்போது, என்னுடைய மகன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். துவக்க பள்ளிகளில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆசிரியர் - பெற்றோர் கூடி பேசுவார்கள். அப்போது குழந்தைகளின் வளர்ச்சி பற்றியும், எதில் பின்வாங்கி இருக்கிறார்கள் என்பது பற்றியும் கலந்து பேசுவார்கள். அந்த கூட்டத்திற்கு முன்பே ஆசிரியரிடம் பேசி நேரம் ஒதுக்க வேண்டும். “நான் ஆசிரியரிடம் நான் அலுவலகத்துக்கு போகும் முன் சந்திக்க விரும்புகிறேன்” என்றேன். அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்த வைத்தது. அவர் “நான் காலை 5 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துவிடுவேன். பள்ளி காலை 7. 45 க்கு ஆரம்பிக்கிறது. இந்த 2. 45 மணி நேரத்தில் இன்றைக்கு நடத்த வேண்டிய பாடங்கள், Prலிளூeஉமி இவைகளுக்காக தயார் செய்வேன். காலை 5 முதல் 7. 30 வரையுள்ள நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், பேசுவோம்” என்றார்கள். இவர் மூன்றாம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்.

அமெரிக்கர்கள் வளரும் அறிவியலுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்து கொள்கிறார்கள். என்னுடன் வேலை செய்யும் நண்பருக்கு 68 வயது. அவரிடம் “எப்படி கணணி கற்று கொண்டீர்கள்?” என்று கேட்டேன். அவர் சொன்னார், “நான் பதினெட்டு வயதில் இராணுவத்தில் ஹிழிஸதீ பிரிவில் சேர்ந்தேன். 5 வருடங்கள் வேலை செய்தேன். நான் ஆங்கிலத்தில் கல்லூரியில் பட்டம் பெற்றவன். அதனால் கல்லூரியில் இருக்கும் போது கணணி கற்று கொண்டேன். என் ஆங்கில அறிவையும், கணணி அறிவையும் வைத்து, கணணி துறையில் துழிஐற்ழியி தயார் செய்யும் வேலை கிடைத்தது. அதற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது. அப்போதே கணணியில் ஸ்ரீrலிஆrழிது செய்வது என்பதையும் கற்று கொண்டேன். அதற்கு இன்னும் அதிகம் சம்பளம் கிடைத்தது. என் 69 வயதில் ஓய்வு பெற்று மாலை நேரங்களில் கல்லூரியில் மாணவர்களுக்கு மீண்டும் ஆங்கிலம் கற்று கொடுக்க போகின்றேன்” என்றார்.

இப்படி அமெரிக்கர்கள் கொடுத்த வேலையை கண்ணும், கருத்துடனும், விருப்பத்துடனும் செய்கின்றனர்.

இது அவர்களின் உயர்வுக்கு காரணம். நாமும் கடினமாக உழைத்து, புதியவைகளை கற்று புது உலகம் படைப்போம்.

கடின உழைப்பை பற்றிய டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வரிகளை கூறி முடிக்கிறேன்.
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும்
தோல்வி என்னும் நோயை கொல்லும் மருந்துகள்
                                                                                        - டாக்டர். அப்துல் கலாம்

No comments:

Post a Comment

Ads Inside Post