Pages - Menu

Wednesday 3 May 2017

மூலிகை ஊமத்தை

மூலிகை  ஊமத்தை

ஆடுதுறை இயற்கை மருத்துவம் - ம. இராச ரெத்தினம்

இதை வெளிப்பூச்சு மருந்தாகவும், மேல் பற்று போடுவதற்கும் மற்றும் பலவித வெளிக்கு தடவும் மருந்தாகவே பயன்  படுத்திக் கொள்ள நமக்கு பெரிதும் உதவுகிறது.

உபயோக முறைகளில் சில 
ஊமத்தை  இலையை நல்லெண்னை விட்டு வதக்கி இளஞ் சூட்டுடன் வீக்கமுள்ள இடங்கள், வாதவலிகள், கைகால் மூட்டுகளில், வீக்கமுள்ள இடங்கள் ( நரித்தலை வாதம்) கால், கை, சேருமிடங்களில் உண்டாகும் நரிக்கட்டுகள், வாய்வு கட்டிகள், அண்ட வாய்வு,  வீக்கங்களில் வலி, தாய்ப்பால் கட்டி கொண்டதால் வலி ஆகிய நோய்களில் ஒற்றடம் கொடுத்துவர அவை தணியும். காலை, மாலை இருவேளைகள் செய்தால் போதும். இது குறிப்பாக வீக்கங்களை கரைப்பதிலும், வாய்வு வலிகளை போக்குவதிலும், பெல்லடோனா என்னும் நவீன மருந்துக்கும் மேலனதாகும். சிலவில்லாமல் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. சீதள சம்மந்தமான  காது வலிகள் திடீரென்று  வந்து  உபாதை தாளாமல்  துடிப்பவர்கள் ஒர் இரும்புக் கரண்டியில் இதன் இலைச்சாறும் நல்லெண்ணெயும் சமமாக விட்டு காய்ச்சி, கை பொறுக்கும் அளவு சூட்டுடன் 4 துளி காதில் விட வலி பறந்து ஓடி விடும். செய்து பாருங்கள்.

நாய் கடி வி­ம் தீர
  நாய்கடிக்கு, ஊமத்தன் இலை, நாயுருவி இலையைப் போலவே உபயோகமாகிறது.  நாய்கடித்த ரணங்கள் சலித்துக் கொண்டு ஆறாமல் இருப்பதற்கு ஊமத்தன் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி வைத்து கட்டிவர அவை ஆறும்.
 உடம்பில் ஏறிய நாய்கடி வி­ம் முறிய, இலையின் சாற்றை 2 முதல் 4 துளிக்கு அதிகமாகாமால் நல்ல வெல்லம் கலந்து தினம் இரண்டு  வேளை கொடுக்க தீரும். ஆனால் மூன்று நாளைக்கு மேல் கொடுக்க வேண்டாம். இந்த மூன்று நாளும் கடும் பத்தியம் அதாவது பகலில் தயிர்சாதம் இரவில் பால்சாதம் உப்பு போடாமல்  சாப்பிட்டு  வர வேண்டும்.

ரணங்கள்  ஆற  பச்சை எண்ணை
                    ஊமத்தன்  இலையை இடித்து சாறு பிழிந்து கொண்டு 1/ 2  படி சாறு , 1/2 படி தேங்காய் எண்ணெய் கலந்து  1/ 2 பலம் மயில்
 துத்தம்  தூள் செய்து  கலக்கி அடுப்பில் வைத்து சிறு தீயாக வைத்து காய்ச்ச வேண்டும். சாறு சுண்டியபின்  எண்ணெய் முறியாதபடி பதமாக  காய்ச்சி இறக்கி ஆறியபின், ஒரு புட்டியில் பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெய்  பச்சை பசலேன்று இருக்கும். ஆகவே இதற்கு  பச்சை எண்ணெய் என்றே பெயர் வைத்து விடுங்கள். இது சகலவிதமான ரணங்கள், அடி, காயம், சிறு புண்கள், ஆறாத  நாள்பட்ட ரணம்,  சதை வளரும் புண், புரைகள் ஆகியவைகளுக்கு புண்களை வேப்பம்பட்டை கஷாயத்தால் சுத்தம் செய்து, பின் பஞ்சு எடுத்து  பச்சை எண்ணை நனைத்து ரணத்தின் மேல் வைத்து கட்டி வர யாவும் ஆறிப்போகும். இதை  உள்ளுக்கு உபயோகிக்கக்  கூடாது.
மூலிகை  ஊமத்தை

 புழுஆடுதுறை இயற்கை மருத்துவம் ‡ ம. இராச ரெத்தினம் வெட்டு நீங்கி ரோமம் முளைக்க

            ஊமத்தான் காய்:  பிஞ்சாக இருக்கும் போது ஒன்று கொண்டு வந்து  அதை ( எச்சில்) உமிழ்நீருடன் சேர்த்து நன்றாக மைபோல்  அரைத்து, புழு வெட்டு  என்ற மயிர் விழந்து சொட்டையாகி மழ மழ என்ற இடங்களில் தடவி வர மீண்டும் அந்தந்த இடத்தில் முளைக்க ஆரம்பிக்கும். இதன் காயை கண்டால் கடின சித்தமுடையவர்களின்  மனம் துணுக்குனும். இளகிய மனம் படைத்தவர்கள் அச்சம்  கொள்வார்கள். இந்த காயின் மேல்  பட்டு வரும் காற்றை சுவாசிக்க பேய், பில்லியம், சூனியம் வைப்பு ஆகியவைகள் விட்டு விலகிப் போகும். மாந்தரீகர்களுக்கும் பார்வை சேஷ்டை விலக, திருஷ்டி கழிப்பு சுற்றி எடுக்க, இதன் காய் மிக முக்கியமாக உபயோகமாகின்றது.

ஆஸ்மா புகைத்தூள்
                   ஊமத்தன் இலை, பூ, விதை மூன்றையும் 5 பலம் எடுத்து  ஒரு வாய் அகன்ற ( சட்டி) மண் பாத்திரத்தில் அரைக்கால் படி   பசும்பால் விட்டு  அதன் வாயை ஒரு மெல்லிய துணிடியக் கட்டி அதன்மேலே ஒரு  சட்டியை மூடி அடுப்பில்  வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இது பிட்டவியல் எனப்படும். பின்பு வெயிலில் நன்றாக காய வைத்து, ஒன்றிரண்டாக இடித்து தூள் செய்து , ஒரு புட்டியில்  அடைத்து வைத்துக் கொள்ளவும். சுவாச காச (ஆஸ்துமா) நோயாளிக்கு எதிலும் தீராமல் எந்தவிதமான இன்சக்­ன் மருந்துகளும் பயனற்றுபோய், சுவாச இறைப்பினால் மரணவஸ்தை பட்டுக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு பீடியை எடுத்து  அதில் உள்ள புகையிலை  யாவும் கீழே கொட்டி விட்டு புட்டியில் எடுத்து வைத்த இந்த தூளை  அதற்குள் நிரப்பி   பற்றவைத்து புகையை பீடிபோல பிடிக்க செய்ய, எமனுடன் வாதாபிக் கொண்டிருக்கும், ஆஸ்துமா நோயாளியின் பிராணன் பூலோகத்துக்கு திரும்பும் என்பதில் ஐயமில்லை.
.

No comments:

Post a Comment

Ads Inside Post