Pages - Menu

Wednesday 3 May 2017

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

 நற்கருணை என்னும் திருவிருந்து

- திரு.குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., விரகாலூர்

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் உயிர் மூச்சாய் திகழும் ஒப்பற்ற அருள் அடையாளம்  நற்கருணை. மனித இனத்தைக் கிறிஸ்துவோடு இணைப்பதுவும் நற்கருணையின் நோக்கம். நற்கருணையின் தியாகப் பலியிலே நாம் பங்கு பெறும் போது, மீட்பு  அனைவர்க்கும் கிடைக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவை  மையமாகக் கொண்டுதான் திருச்சபையானது ஒரே மக்கள் குலமாக, ஒரே ஆலயமாக, கடவுளின் ஒரே குடும்பமாக, அதாவது தூய, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையாக வளர்கிறது.  வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்குப் பசியே இராது (யோவான் 6:35)  உணவும், தண்ணீரும் நமது  உடலின் பசியையும் தாகத்தையும் தணிக்க வல்லவர் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆவார்.
கிறிஸ்து மனிதர்களை மீட்பதற்காகப்பட்ட வாதைகள் பெரியவை. மனுக்குலத்தின் மீட்பு நிறைவேற வேண்டிதான் அடையப் போகின்ற துன்பங்களைப்  பொருட்படுத்தாது முன்னிரவுப் (பெரிய வியாழன்)  பொழுதில் தம் பன்னிரண்டு சீடர்களுடன் ஒரு வீட்டில் திருவிருந்து செய்தார். அப்பொழுது சீடர்கள் மனத்தில் பதியுமாறு பல நல்லுரைகளை அருளினார். அதன் பின் திருச்சபையின்  திருச்சாதனங்களில் ஒன்றான புதிய உடன்படிக்கைச் சின்னமாக திருவிருந்தை அளித்தார். பேரின்ப பெருவீட்டை அருள, மனித  குமாரனாகப் பிறந்த இயேசு, தமது கையினால் அப்பத்தை எடுத்து, அதைப்பிட்டு, நன்றி செலுத்தி, தன் சீடர்களுக்குக் கொடுத்து அது அவர்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படும் தமது உடல். தம்மை நினைவு கூறும்படி உண்ணுங்கள் எனக் கூறி மீண்டும் சுவையுள்ள திராட்சை இரசத்தை எடுத்து அதை ஆசீர்வதித்து அனைவரும் குடியுங்கள் என்று கூறி அது தமது புதிய உடன்படிக்கைக்காகச்
சிந்தப்படும் தம்முடைய இரத்தமென்றும், பாவமன்னிப்பு அதனால் உண்டாகுமென்றும் தமது தந்தையாகிய  இறைவனுடைய  வீட்டில்  
அனைவரும் வந்து சேரும்வரைத் தாம் அதைப் பானம் பண்ணுவதில்லை என்று கூறினார்.  இப்பொருள் அமைந்த  பாடல்கள் 
இதோ,பொங்கு பரமானந்த நமக்கருள வந்த மனுப்புதல்வர் தாமே

 செங்கரத்தா லப்பமெடுத்ததைப் பிட்டுத் தோத்தரித்துச் சீடரிக் கிந்
துங்களுக்காய் 
மரணத்துக் கொப்பி விக்குமெனதுடல்  தென்னையுன்ணித் தங்கிட 

நீரிந்த வகையியற் றியயனக் கருணையோடு சாற்றிப்  பின்னும்  
 ( இரட்சணிய யாத்திரிகம் - 8)

இனிமைதரு பழரசபாத் திரமேந்தி  ஸ்துதி செலுத்தியிதிலே 

நீங்கள்அனைவரும் பருகுமின் மற்றிது புதிய உடன்படிக்கை 

சுமையச் சிந்திப் எனதிரத்தம் பாவமன்னிப் பிதனாலே யுண்டாகு 

மிதியப்பாண்டுதனை நுகரேஎன பரம தந்தை யிராஜ்ஜியந் தனினீர் சாருமட்டும்.
( இரட்சணிய யாத்திரிகம் - 38)

என  நற்கருணை  திருவிருந்து  பற்றி  இரட்சணிய யாத்திரிகம் குறித்துள்ளது. இத்திருவிருந்தினைக் கிறிஸ்துவத் திருச்சபை தூய கூட்டுறவு, நற்கருணை என வழங்குகின்றது.

இதனைக் குறித்து மேலும் திருச்சபையின் உறுதியாக வழங்கி வரும் ஞானவரம் நிறைந்த அருள் சதானங்கள் இரண்டு. அதில் ஒன்று திருமுழுக்கு, மற்றொன்று  நற்கருணை என்னும் திருவிருந்தாகும். திருமுழுக்கு  பெறுகின்றவர்கள் கிறிஸ்துவின் மந்தையாகிய திருச்சபையில் முதலாவதாக சேருகின்றார்கள். பாவம் அற்றவராகிய இயேசு பெருமான், தம்முடைய இரத்தத்தைச் சிந்தி  தமதுயிரையும் விட்டார். இதை மனத்தில் தியானித்து   உருகி விசுவாசத்தில் ஊன்றி நிற்க நற்கருணையைப் பயபக்தியுடன் உட்கொள்ள வேண்டும்.

முந்துறை ஞானஸ்நானமடைவீர் திருச்சபை புகுவோர் 

முறையினின்றுபந்தமனு காதபரா பரன்மதலை எம்முடை 

பாவந்தாங்கினு சிந்தினர் செங்குருதியுயிர் விருத்தன ரென்றுள 

நினைந்து சிந்தையன் பால்நைந்துருகி 

விசுவாசத் துன்றி நிற்பச் நற்கருணை நயந்துட் கொள்ளில்  
 ( இரட்சணிய யாத்திரிகம் - 39)

 கிறிஸ்து இத்திரு விருந்தளித்த பின்னர் தமது தந்தையை நோக்கில் செபம் செய்வதற்காகச் சீடர்களுடன் ஒலிவ மலையிலுள்ள கெத்சமனே என்னும் சோலைக்குச் சென்றார். இரட்சணிய யாத்திரிகம் தருக்க ரீதியில் இச்செயலை இணைத்து நினைத்துப் பார்க்கின்றது. ஆதிமனிதனாகிய ஆதாம், ஏதேன் என்னும் சோலையில்  கீழ்ப்படியாமையாகிய பாவத்தினைச் செய்து மனுக்குலம், முழுமையும் பாவக்கறை படியுமாறு செய்தான். அவன் அச்சோலையில் விளைத்த பாவத்தை மற்றொரு சோலையாம் கெத்சமனேயில் தந்தையின் சித்தத்திற்குக் கீழ்ப்படிதல்  என்ற செயலைச் செய்து இரண்டாம் மனிதனாகிய இறைவன் இயேசு மனுக்குலத்தின்  பாவக்கறையை நீக்கினார். முதல் மனிதனின் கீழ்ப்படியாமையில் விளைந்த பாவம் இரண்டாம் மனிதன் இயேசுவுடன் கீழ்ப்படிதலால் அகன்றது. ஏனெனில் தோன்றிய பாவம் கெத்சமனேயில் நீங்கிற்று. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்குத் தம்மை ஒப்புக்கொடுத்ததே பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததாகும். பாவமற்றவராகிய கிறிஸ்து உலகத்தின் பாவத்தை தம்மேல் ஏற்றுக்கொண்டு  பாவமானார். கெத்சமனே தோட்டத்தில் அவர் அடைந்த ஆன்ம வேதனையையும் பிற நிகழ்ச்சிகளும் புனித விவிலியத்தில் கூறியுள்ளவாறே இரட்சணிய யாத்திரிகம் விவரிக்கின்றது.
  

No comments:

Post a Comment

Ads Inside Post