Pages - Menu

Wednesday 3 May 2017

விவிலிய விடுகதைகள்

 விவிலிய விடுகதைகள்

 மாற்கு நற்செய்தி  1 முதல் 8 முடிய

 1.   கடவுளுக்கு காணிக்கையாயிற்று
      அவை கொ வில் துவங்கி  ன்னில்  முடியும்
      உறவும் முறிந்தது. அதன் பெயர் என்ன?
                 
2.   ஆஸ்பத்திரி சென்றேன்,
      ஆஸ்தியை தொலைத்தேன்
      ஆறீராண்டு பாடுபட்டேன்
      அவரின் உடையைத் தொட்டேன்
      ஆனந்தமாய் குணமடைந்தேன்,  நான் யார்?
                       
3.   குரலொன்றுக் கேட்டது, தண்ணீரில் நின்றது
      பறந்து ஒன்று வந்தது, அவை என்ன?
 
4.   நாங்கள் பலர்
      என் பெயர் ஐந்தெழுத்தில் உள்ளது.
      கூட்டமாக வந்தோம் ‡ அந்தக்
      கூட்டத்திற்குள் போகவிடும் என்று
5. தூய்மை நேர்மை கொண்ட, புறா சிறையில்
      அதற்கு  அஞ்சிய அண்டக் காக்கா
விழா கொண்டாடுது,      அது , இது எது?
                         
6. எட்டுக்கால்கள் நடக்க ,
  வழியை மக்கள்  அடைக்க
  ஒட்டைப் பிரித்து இறக்க
    பரமன் வார்த்தைக் கேட்டு
    பட்டென்று படுக்கையை எடுத்து
    பணிவோடு போனான்,  இவன் யார்?

 7. சுங்கத் துறையில் இருப்பன்
      என் தந்தையின் பெயர் நாலெழுத்து
      எனது பெயர் இரண்டெழுத்து
      என்னை அழைத்தவர்க்கு
      விருந்து வைத்தேன். நான் யார்?
      தந்தை, அழைத்தவர் பெயர் கூறு.    
                 
8. தலையில்லாதவன், தூங்கிய தலைவரின்
      தலையை சுமந்தவன். யார் அவன்? தலைவர்?
                 
 9. அதிசயக் குளத்திலே அற்புதக் குருவி
        வாலினால் நீரை வற்றக் குடிக்குது
        வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை
        வெளியாகாமல் ஒளிந்திருப்பது  ஒன்றுமில்லை
        அது  எந்த   உவமை?
                     
 10.   உலகெங்கும் சுற்றுவேன்
என்னைக் கண்களால் காண இயலாது
அவர் என்னை அடக்கினார்
நான் அடங்கிப் போய் அமைதியானேன்
நான் யார்? அவர் யார்?
             
11. அவளோ அறியாப் பிள்ளை
      வயதோ பன்னிரண்டு
      கை கொடுத்து தெய்வம்
      உயிர் கொடுத்தது,   அது? இது? எது?
                       
12.   நான் ஒரு கிரேக்கப் பெண்
        பெனிசிய இனத்தை சார்ந்தவள்
        வேண்டினேன் அவரிடம், நீங்கியது  அது? எது?
                 
13.   எச்சரிக்கை :  எச்சரிக்கை
        அந்தப் புளிப்பு மாவை குறித்து
      அவர்கள் இருவகையினர், யார் அவர்கள்?

14. விதையோ விதை    சிறியதான விதை
        இறையாட்சியின் விதை
        மடிந்து முளைத்து வளர்ந்து விரிந்து
       பறவைகட்கு புகலிடம்,  அது என்ன விதை ?
15.   முழந்தாள் படியிட்டவனிடம்
        இரு கரங்கள் நீட்டி
        இரக்கத்தை செயலில் காட்டி
        தொட்டு அவரிடம்  நான் விரும்புகிறேன்
        நோய் நீங்குக என்று யார் யாரிடம் கூறினார்?
         
  16. இவர் தலைமைக்குருவாய் இருந்தபோது
        தைரியசாமி ஒருவர்
        இறை இல்லத்திற்குச்  சென்று
        குருக்கள் உண்ணும் அர்ப்பண அப்பங்களை
      எடுத்து வந்து தன் பசியையும்
      பிறர்   பசியையும் போக்கிய உத்தமரு யாரு
  தலைமைக் குரு யார்?
           
 17. அவருக்கு கடுங்காய்ச்சல்
        படுத்தப் படுக்கை
        துன்பத்தைக் கண்டனர் சீடர்கள்
        இயேசுவிடம் சொல்லினர்
        கைபிடித்து தூக்கினார்
காய்ச்சலோ பறந்துப் போனது,
      பணிவிடை செய்தார். யார் உறவினர் இவர்?
                     
18. நான்காம் காவல் வேளை
        கடல்மீது ஒரு உருவம் நடந்தது
      அவர்களோ பேய் என்று அலறினர். அவரோ
        துணிவோடிருங்கள். அஞ்சாதீர் என்றார்
        அவர்கள் யார்? இவர் யார்?
                   
 19. அடிகாட்டில் வந்தனர்
        நடுமாட்டில் சென்றனர்
        நுனி சீடர்கள் கையில் மணிக்கொத்துகள்
        குறை கூறினர் அவர்களைப் பார்த்து
        யார் இவர்கள்?
       
20. பூவில் பிறக்கும், நாவில் இனிக்கும்
        அது அன்னவர்க்கும் அன்றாட உணவு
        பாலை நிலத்தின் ஒரு குரலுக்கு இனிமை
        வழங்கும் குரல் வலிமை அது எது? அவர் யார்?

No comments:

Post a Comment

Ads Inside Post