Pages - Menu

Friday 11 May 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

22. தொண்டர்களுக்கும்  வேண்டும் பணிவு...
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

கடந்த இரண்டு மாதங்களாக தலைவருக்குத் தேவையான பணிவையும் தாழ்ச்சியையும் சிந்தித்தோம். தலைவருக்கு மட்டுமல்ல தலைவருக்குக் கீழே இருக்கின்ற உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் பணிவு அடிப்படையானது என்று சிந்திக்க அன்புடன் அழைக்கின்றேன். 

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டும் வரை அமெரிக்காவில் பார்லின் என்ற பங்கில் பணியாற்றினேன். நான் உதவிப் பங்குத்தந்தை. பங்குத் தந்தை மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 93 வயதாகும் அவருடைய தாய், அருகிலிருக்கும் தன் இடத்திலிருந்து விருந்துண்ணுவதற்காக வருவார். பாதர் என்னையும் அழைப்பார். பாதர்தான் சமைப்பார். நன்றாகவே சமைப்பார். ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பாதரின் தாய்  பாதரிடம் ‘ஜேம்ஸ் அந்த கரண்டியை எடு’ என்றார். பாதர்க்கு கோபம் வந்துவிட்டது. ‘தயவு செய்து’ என்று சொல்லுங்கள்  என்றார். அவரும் அவ்வாறு சொல்ல பின்னர்தான் கரண்டியை எடுத்துக் கொடுத்தார். அந்த அம்மா அதைப்பற்றி கொஞ்சமும் வருத்தப்படவில்லை. தமக்கு வயதாகிவிட்டது. அதனால் மறந்து விடுகிறது. என் மகன் அதனை நினைவுப்படுத்துகிறான். என்னிடம் தவறு இருக்கும்போது நான் அதைத்திருத்திக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையே அவரிடம் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

தலைவர்களுக்கு நிச்சயம் தேவை பணிவு. பணிவு இல்லாமல் ஒரு தலைவர் புரியும் அனைத்து நல்லக் காரியங்களுக்கும் முகவரி இருக்காது. ஒரு தலைவருக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பணிவுத் தேவை. தொண்டர்களுக்குத் தேவையான பணிவை பின்வரும் விவிலிய வரிகள் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கலாம்.

(1 தெச 5.12-13) ‘சகோதர சகோதரிகளே உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பணியின் பொருட்டு அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.’  (எபிரே 13.17) ‘உங்கள் தலைவர்களுக்குக் கீழ்படியுங்கள். அவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பா யிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியு ள்ளதாய் இருக்கும்படி நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.’ சரிங்க உங்கள் தலைவர்களுக்கு எப்படி உங்கள் பணிவைக் காட்டுவது என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.உங்கள் தலைவருக்கு மதிப்பளியுங்கள்.

நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆசரியர் ஒரு மாணவனை மாணவர் தலைவனுக்காக நியமிக்கிறார். அப்பொழுது உங்கள் இயல்பான நடவடிக்கை அவருக்கு எதிராக பேசுவதும் இருப்பதும் ஆகும். ஒரு சில நேரங்களில் மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பது எளிதானக் காரியமாக இருக்கலாம். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது. (குருமடங்களில் குருக்களுக்கு குருமாணவர்கள் பயந்து நடப்பது). சிலர் வேலை போய்விடக் கூடாது அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். உண்மையான தாழ்ச்சி நிறைந்தவர்கள் எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பதவியில் உள்ளவர்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தலைவர்கள் குறைகளே இல்லாமல் இருந்ததால்தான் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றில்லை. இந்த உலகில் குற்றம் குறைகள் இல்லாதவர்கள் யார்? தலைவர்களின் குறைகளோடு அவர்களுக்கு மதிப்பளிக்கும்போது நம் பணிவு முழுமை பெறுகிறது.

2. உங்கள் தலைவரை பின்பற்றுங்கள். 

பொதுவாக சொல்லுவார்கள் ‘நாம் நாமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து நாம் மாறத் தேவையில்லை.’  ஒரு விதத்தில் பார்த்தால் அது உண்மைதான். ஆனால் இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் தலைவர்களிடத்தில் இருக்கின்ற நற்பண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற முன்வர வேண்டும். ஒருவரை தலைவராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் அவருடைய உயர்ந்த பண்புகள் திறமைகள் அடிப்படையில் தான் நியமித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொருவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வி­யங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குருவானவர் நன்றாக திருப்பலி வைப்பதை பின்பற்றலாம். (சில குருவானவர்கள் எப்படி திருப்பலி வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்). எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதற்கு  உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பொறுமை காக்க வேண்டும் என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம். காலம் தவறாமையை கடைபிடித்து சிலர் நமக்கு உதாரணமாக இருக்கலாம். நமக்கு மேலே இருப்பவர்களிடம் மட்டுமல்ல. நமக்கு கீழே இருப்பவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள ஆயிரம் வி­யங்கள் உண்டு என்பதையும் மனதில் கொள்வோம்.

3. உங்கள் தலைவருக்குக் கீழ்ப்படியுங்கள்  

அண்மைக் காலமாக திருச்சபைத் தலைவர்களிடத்தில் ஓர் அருமையான மாற்றத்தைப் பார்க்கிறேன். அவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குருக்களையும் கன்னியர்களையும் பொதுநிலையினரையும் கலந்தா லோசிக்கிறார்கள்.  முன்னொரு காலத்தில் எந்த விபரமும் சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டும் என்று திருச்சபைத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். நம்  மூளையின் பலம் அபாரமானது. ஆனால் அது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. இந்த உலகில் உள்ள அனைத்தும் குறையுள்ளது. எனவே நம் மூளையும் குறையுள்ளது. நம் தலைவர்களின் சூழ்நிலைகள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. 

கீழ்ப்படிதல் என்று சொல்லும் போது இரண்டு விதத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒன்று தலைவர் விரும்புவதைச் செய்வது. இரண்டு தலைவர் எடுக்கும் காரியங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது. ஒரு தலைவர் குறிப்பிட்ட கருத்தோடு குறிப்பிட்ட திட்டத்தையும் முன்மொழிந்தால் அந்த தலைவரின் மனப்பான்மையோடு ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். 

அது சரிங்க ஒரு தலைவர் தவறு செய்ய சொன்னால் செய்யலாமா? என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் தலைவர்க்கு தகுந்த விதத்தில் தகுந்த மரியாதையோடு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். கீழ்ப்படிவதில் மட்டுமல்ல உண்மை நிலையை எல்லோருக்கும் எடுத்துரைப்பதிலும் நம் பணிவையும் தாழ்ச்சியையும் எடுத்தியம்ப முடியும்.            (தொடரும்...)

Friday 4 May 2018

மரியாளும் மகளிரும்

மரியாளும் மகளிரும்
சகோ. விமலி FIHM. இதயா கல்லுVரி, குடந்தை

(அன்னை மரியாவிற்கு அற்பணிக்கப்பட்டுள்ள மே மாதத்தில் மாதாவின் சீரிய பண்புகளை விளக்குகிறார் சகோதரி)

காட்டிய தாய்அன் பையே ஊன்றிக் கொண்டும்
ஊட்டிய நல்லு ணர்வே ஒளிஎனப் போற்றிக் கொண்டும்
பூட்டிய துறவு வாழ்வே பொன்னென வாழ்த்திக் கொண்டும்
ஈட்டிய செல்வ மாக இயேசுவை எண்ணி வாழ்ந்தார் ‡ (மரியம்மை காவியம்)

அன்னை மரியாள்
மாபெரும் புரட்சிகளிலும், மகத்தான செயல்களிலும் மிகப்பெரிய அறிகுறிகளைத் தேடிக்கொண்டு, நம் கண்முண்னே இருக்கின்ற இறையன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் மறந்து விடுகின்றோம். பாதுகாப்பற்ற பெண்கள் பாதுகாப்பாகிட, மாண்பிழந்த, பெண்கள் மதிப்பீடுகளாகிட, அறமிழந்த குடும்பங்கள் அறநெறியாகிட, இறையிழந்த மக்கள் நிறைவழியாகிட அன்னை மரியாள் தந்திட்டாள் தன்வாழ்வையே தரணிக்கு. மரபுகளை உடைத்து மனிதம் காத்திட தன்னை கையளித்தவர்களில் முதலிடம் பெற்றவள் அன்னை மரியா! மரபுகள் உடைபடும் போதுதான் மாற்றம் மண்ணில் பிறப்பெடுக்கும். மரபுத் தளைகளில் மரியாள் என்ற மலர் நசுங்கி விடாமல் இறைவன் தடுத்து நிறுத்தி உறுதிப்படுத்தினார்.

கல்வி தாயானது அன்றைய காலகட்டத்தில் யூத சமுதாயத்தில் நினைந்து பார்த்திட முடியாத மரபுகளை மீறிய புரட்சி செயல்! மக்கள் மீது ஈடுபாடு மிக்கவள் அன்னை மரியாள்(லூக் 1:47‡55). தேடிச் சென்று உதவும் நற்குணமும், இலக்கணமும் அன்னை மரியாளுக்குண்டு(லூக் 1:39). சிலுவைப் பாதையில் தாய் மகனைச் சந்திக்கிறாள் என்றாலும் மீட்புத் திட்டம் நிறைவேற தன் மகனை தொடர்ந்து கல்வாரி செல்ல அனுமதிக்கிறாள். ஆண்களெல்லாம் விட்டு ஓடிப் போன பின்னும் சிலுவையடியில் நிற்கிறாள். இயேசு, தன்னுயிர் பிரியும் இறுதி வேளையில் தாயிடம்தான் தன் இலட்சியக் கனவை ஒப்படைக்கிறார். அஞ்சி நடுங்கி  இருட்டறையில் ஒளிந்திருந்த திருத்தூதர்களுக்கு அருகிலிருந்து தைரியம் தந்தவள் அன்னை மரியா (திப 1:74). அதனால்தான், இறைவனின் திட்டம் வழுவாமல் நிறைவேறியது.

மாமரி நிலவைப்போல் அழகுள்ளவள் (திபா 69) என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆம், நிலவு பூமியில் உள்ள மிகத் தாழ்ந்த படைப்புக்கும் ஒளியூட்டி பயனுறச் செய்வது போல, மரியாளும் தகுதியற்ற பாவிகளையும் இறைஒளியைப் பெறச் செய்து உதவுகிறார்கள். தாயின் அன்பு தெய்வீகத்துக்கு நம்மை இட்டு செல்லும் மகத்தான வழி. மாதா தினமும் அருங்செயல்கள் மூலம் புதுமைகள் செய்து நம்மை மகிழ்வுப்படுத்துகிறார். இந்த மாதம் அன்னை மரியாவின் அன்புச் செயல்களுக்கு நன்றி சொல்லும் மாதம். மரியின் உறவில்,  இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு வாழ்வில் தொடர்ந்து இனிதாய் பயணிப்போம். அதோடு இந்த மாதத்தில் இவ்வுலகில் மகளிருக்குரிய மரியாதையினை மனமகிழ்ச்சியோடு நோக்குவோம்.

 அன்னை - மகளிர்

‘உங்கள் இலக்குக்கான எதிர்கால திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், நம்பிக்கை இருந்தால், சிறுபடை கூட புரட்சிக்கு வித்திடும்.’ - பிடல் காஸ்ட்ரோ.

உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். உடலால் வாழும் ஆணை விட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

அன்று சமூகத்தில் வேரோட்டமான வாழ்வைக் கொண்டிருந்த உயிரோட்டமுள்ள எத்தனையோ பெண்களின் வரலாறு மறைக்கப்பட்டு,  அனுபவங்கள் நிராகரிக்கப்பட்டு, சாதனைகள் புறம்பே தள்ளப்பட்டு, அவர்களின் இருப்பையேக் கண்டு கொள்ளாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
 ‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் - 
புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்றார் பாரதியார். 

இன்று பெண்களின் வீரமும், விவேகமும், ஆற்றலும் அளவிட முடியாதவையாக உள்ளது என்பது உண்மை. ‘வாழ்வில் நிறைவு என்ற ஒன்று கிடையாது. நிறைவடைந்த மனங்கள் மட்டுமே உண்டு.’ வாழ்வில் தேக்க நிலை என்ற ஒன்று கிடையாது தேக்கமடைந்த மக்கள் மட்டுமே உண்டு. ‘வாழ்க்கை என்பது வேலியில்லாத் திறந்த வெளி, வாய்ப்புகள் கிடைக்கும்போது வேண்டியமட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று வாழ்பவர் பெண் மட்டுமே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்.

Wind Shield Wiper இதைக் கண்டுபிடித்தவர் மேரி ஆண்டர்சன். இவர் பனி பெய்துக் கொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியைத் துடைத்தார். இதனை கவனித்த மேரி இதற்காக ஒர் உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார். அவ்வுபகரணத்தைப் பேருந்தின் உள்ளே இருந்து இயக்க முடியும். மக்கள் இதை வாகனங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

Colored Flare System

பல ஆங்கிலப் படங்களில் குகைகள், இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும். அதன் பெயர்தான் Colored Flare System. இதைக் கண்டுபிடித்தவர். னிழிrமிஜுழி ளீலிவிமிலிஐ இவர் 1847 இல்  தனது 21 வது வயதில் விதவையாக்கப்பட்டார். ஆனால் விடுதலை போராளியாக போராடினார். 

நீரில் கார்பன் ‡ டை ‡ ஆக்ஸைடுடின் அளவை அறியும் கருவியைக் கண்டுபிடித்தவர், கார்பன் பெண்மணி என்று அழைக்கப்பட்ட சாரஹரி காட்ஜீக்கோ. கீது அன்னா ஜோஸ் இந்திய கூடைப்பந்தில் நட்சத்திர வீராங்கனை. இவ்வாறு இன்றைய அநேக பெண் சாதனையாளர்களைக் குறிப்பிடலாம். தன் உரிமையை நிராகரித்து, தன்னை நிர்க்கதியாய் விட்ட சமூகத்திற்காக தன்னைத் தருவதில் பெண்ணைவிட தாராளம் உள்ளவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்நிலைதனை உணர்தல் இன்றைய தேவையாகும்.

பயன்படுத்தப்படாத திறமை மங்கிப் போகிறது. பயன்படுத்தப்படாத ஆற்றல் குறைந்துவிடுகிறது. பயன்படுத்தப்படாத கருவிகள் துருப்பிடித்து விடுகின்றன. பயன்படுத்தப்படாத நேரம் காணாமல் போய்விடுகிறது. பயன்படுத்தப்படாத அறிவு ஒரு சுமையாகிவிடுகிறது என்பதை உணர்ந்தவர்களாக பெண்களாகிய நாம், உயர்வதற்காக வீழ்கிறோம். ஒவ்வொரு முறையும் முன்பைவிட உயரே செல்கிறோம். இத்தாரகமந்திரத்தை தரணியில் வாழ் மகளிருக்கு உணர்த்திடுவோம்.

தனக்கான நியாயமான அனுமதி மறுக்கப்படும் போது போராடுபவர்களாகவும், அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர்களாகவும், உடலால், மனதால், பொருளாதாரத்தால் தங்களை வலிமையானவர்களாக மாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தவர்களாகவும், பிறரின் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் செவிசாய்க்காத நேர்மையாளர்களாக பெண்கள் திகழ்ந்து, வாழ்வில் ஒளிர்ந்து முன்னேற முழுமையாய் முன்வர முயல்வோம். மரியாளின் ஆன்மீக ஊற்றை உந்து சக்தியாகக் கொண்டு இன்றைய சமூக வாழ்வைத் தெளிவான, துடிப்பான சவாலாக்குவோம். அப்பொழுது மரியாளின் மாண்புலகில் மகளிர் மகத்துவம் பெற்றிடுவர்.        

காவிரி நீரா? கானல் நீரா?

காவிரி நீரா?  கானல் நீரா?

பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ ., M.A.; B.L.; M.Phil.; Ph.D.

இந்தியாவையே காவிரிமயமாக்க கார்ப்பரேட்டுகளின் அனைத்து நிதியுதவியோடு அசுர முயற்சிகளில் இறங்கியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 81.18 விழுக்காடு அளவாக, அதாவது ரூ.1034.27 கோடியாக உயர்ந்திருப்பதுதான் அக்கட்சியின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா சரித்திர சாதனை! அதே நேரத்தில் விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட அடித்தள பாட்டாளிகள், வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்கும் வறியோர், ஆதரவற்றோர், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காகவும், மத நல்லிணக்கம், மதச்சார்ப்பின்மை, இந்தியாவின் பன்முகத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க  பாடுபடும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வருவாய் 14 விழுக்காடு. அதாவது ரூ.225.36 கோடியாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பல்வேறு முட்டுக்கட்டைகளை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி வருகின்றது.

“வான் பொய்ப்பினும் தான் பொய்யாத” பொன்னி நதி என்றழைக்கப்படும் நமது காவிரி நீர் நமது கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கும் கானல் நீராகி போய்க்கொண்டிருக்கும் அவலநிலை நம்மை உறைய வைக்கும் உண்மைக் காட்சியாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் சூதாட்டம் என்ற அரக்கக் குரங்கின் கைப்பட்ட, பூமாலையாக, காவிரிப் பிரச்சினை இன்று சின்னாபின்னமாக்கப் பட்டு வருகின்றது. மக்கள் தொகையில் 55 விழுக்காடு மக்கள் தம் வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு ள்ள விவசாயத்துறையைச் சார்ந்த தமிழக விவசாயி களின், பொதுமக்களின், பொக்கி­மாக, வாழ்வாதார மாக விளங்கிவரும் காவிரி அன்னை. இன்று சுயலாபம், ஓட்டுவங்கி, லாபம், மொழிவெறி, ஏழைகளைச் சுரண்டும் முதலாளித்துவம், வட்டார அரசியல், மனிதநேயமற்ற அதிகார ஆணவம், வடக்கு, தெற்கு என்று இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் காவிரி மதவெறி ஆகிய சமூக விரோத சக்திகள் அனைத்தும் கைகோர்த்து, காவிரி அன்னையை கர்நாடகத்துக்குள்ளேயே சிறை வைக்கத் திட்டமிட்டு, நீதியின் குரலையும் அறவே மதிக்காமல்,  சதிராட்டம் ஆடுவது, “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது”, என்ற பேரறிஞர் அண்ணாவின் எச்சரிக்கை சங்கநாதத்தை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து விவசாய அமைப்புகளும், எதிர்கட்சிகளும், இளையோர் அமைப்புகள், திரைப்படத் துறையினர் மற்றும் தமிழகப் பொது மக்களும் கனன்றெழுந்து, அறவழிப்போராட்டங்களையும், கடையடைப்பையும், காவிரி நதிநீர் உரிமைப் பயணம். ஐபிஎல் போட்டியை தடைசெய்ய ஆர்ப்பாட்டம், சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது என்று மத்திய அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து ஒட்டுமொத்த எதிர்ப்பை தமிழகம் காட்டி வருகின்றது. கர்நாடகத்தில் சட்டப்பேரவை நடப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் தேவைப்படுகின்றது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, “செயல்திட்டம்” விஉஜுeதுe ஒன்றை, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்ட 6 வார கால அவகாசம் நிறைவடைந்தது. கடைசி நாளில் மத்திய அரசின் நீர்வளத்துறை, மத்திய சட்ட அமைச்சகத்திடம் செயல்திட்டம்” (Scheme) என்பதற்கு நிறைய விளக்கங் கள் இருக்கின்றன என்றார். எனவே, “செயல்திட்டம்” (Scheme)  என்றால் என்ன என்று விளக்கமளிக்க மத்திய அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்தார். சட்ட ஒழுங்கையும் இரு மாநில நட்புறவையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா? அப்படி அமைக்கபட வேண்டுமென்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தின் பணிகள் என்ன, அதன் அதிகாரங்கள் என்ன? எவ்வாறு செயல்பட வேண்டும்? காவிரி மேலாண்மை வாரியத்தின் நிர்வாக, தொழில்நுட்ப அம்சங்களை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டுமெனவும், மத்திய அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விளக்க மனுவின் கேள்விகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் முட்டுகட்டையாகி விடுமோ என தமிழக மக்களின் மனங்களில், நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து வாரியம் அமைக்க வலியுறுத்த நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. மார்ச் 9 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் சார்பில் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு மூன்று கடிதங்களும் அனுப்பப்பட்டன. தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை வேண்டுமென்றே மார்ச் 29 ஆம் தேதிக் கெடுவுக்குள் மத்திய அரசு நிறைவேற்றாமல் அவமதித்து விட்டதாகவும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு தொடுத்துள்ளது.

177.25 டி.எம்.சி. காவிரி நதிநீரை உடனடியாக தமிழகத்துக்கு வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீட்டுள்ளது. 2007 இல் காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி. என்பதை  177.25 டி.எம்.சி ஆகக் குறைந்தது உச்சநீதிமன்றம். பெங்களூரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொண்டும் தமிழகத்தின் நீர்ப்பங்கீட்டிலிருந்து 15 டி.எம்.சி. தண்ணீரை ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக உச்சநீதிமன்றம் கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிட்ட உச்சநீதிமன்றம் ஏன் கர்நாடகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. பெங்களூர் நகரின் நீர்த்தேவை யைக் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் ஏன் தமிழக நகரங்களின் நீர்த்தேவைகளை அதே அக்கறையுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் மர்மமாக உள்ளது. 2007 ஆம் ஆண்டில் தனது இறுதித் தீர்ப்பை முறையாக அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரண்டும் மிகவும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இதே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, விரிவாக யாரெல்லாம் காவிரி மேலாண்மை வாரியத்தில் அங்கம் வகிக்க வேண்டும். அவர்களை நியமிக்க, அடிப்படையான அவர்களது துறைசார் தகுதிகள், அனுபவம் மற்றும் அந்தஸ்து தகுதிகள் பற்றி எடுத்துரைத்துள்ளது. ஆக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்படவில்லை எனில் 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பு வெற்றுக் காகிதமாகவே நிலைத்துவிடும் என்ற எச்சரிக்கையையும் இறுதித் தீர்ப்பு வெளியிட்டிருந்தது. “செயல்திட்டம்” விஉஜுeதுe என்ற சொல்லின் விளக்கம் “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற பாணியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாதகமாக அமைந்துவிட்டால், தமிழக விவசாயம், குடிநீர்த் தேவைகளுக்குப் பயன் தரவேண்டிய காவிரி நீர், கானல் நீராக மாறிவிட வாய்ப்புகள் அதிகரித்துவிடும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விட்டால் கர்நாடகச் சட்டமன்றத்  தேர்தலில் பாரதிய ஜனநாய கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துவிடும் என்று அஞ்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு இத்தகைய நயவஞ்சகமான குள்ளநரித்தன தயக்கத்தையும், இழுத்தடிப்பையும், காலங்கடத்தும் அரசியல் கபட நாடகத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்திவருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

மனித நேயத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கும் அப்பாற்பட்டு மத்திய அரசு சென்றுவிடாமல், இனியாவது உச்சநீதிமன்றம்  ‘விஉஜுeதுe’    அல்லது “செயல்திட்டம்” என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று வலுவாகத் தன் தீர்ப்பில் தெளிவுபடுத்தினால் தமிழகமே நன்றியுடன் அத்தீர்ப்பை உளமாற வணங்கி வரவேற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்பபை, “மத்திய அரசு நடைமுறைப் படுத்தாத பட்சத்தில், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசு தலைவருக்கு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான உத்தரவை அளிப்பதற்கான அதிகாரமும் உச்சநீதிமன்ற த்துக்கு உண்டு” , என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியிருப்பதையும், தமிழக அரசு தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், இந்திய ஜனநாயக அமைப்பையும், கூட்டாச்சி முறையின் மாண்பையும் காக்க வேண்டிய தலையாய கடமையாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

மூவொரு கடவுளின் பெருவிழா

மூவொரு கடவுளின் பெருவிழா

27-05-2018                            
இச 4:32-34,39‡40, உரோ 8:14-17, யோவா 15: 26-27, 16:12-15
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இன்று நாம் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மூவொரு கடவுள் என்ற உண்மை கிறிஸ்தவ சமய கோட்பாடுகளுக்கு அடிப்படையான தொன்று. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார் என்பதுதான் இதன் பொருளாகும். அதாவது, கடவுள் தந்தை என்றும், மகன் என்றும், தூய ஆவியார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இது எப்படியாகும்? என்று கேள்வியை எழுப்புவது இயல்புதான். ஒரு மனிதர் ஒரே சமயத்தில் தம் பெற்றோருக்கு மகனாகவும், தம் பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், தன் மனைவிக்கு கணவராகவும் இருக்கின்றாரோ, அதே போலதான் கடவுளும் ஒரே சமயத்தில் தந்தையாகவும், மகனாகவும், தூய ஆவியாராகவும் இருக்கிறார். எப்படி மகனும், கணவனும், தந்தையுமான ஒருவர் ஒரே ஆளோ, அதேபோல்தான் தந்தையும், மகனும், தூய ஆவியுமானவர் ஒரே கடவுளாவார். இங்கே ஆள் ஒன்றுதான். அவர் தந்தையாக, கணவராக, பிள்ளையாக ஆற்றுகின்ற பணி வேறுபட்டது.  இதே போல்தான் கடவுளும் விளங்குகிறார்.

இந்த மூவொரு கடவுள் கோட்பாட்டை இருவிதங்களில் விளக்கலாம்.

கடவுள் நிறைவுள்ளவர். அவர் அன்பில் நிறைவுள்ளவர், ஏனெனில் கடவுள் அன்பாக இருக்கிறார். அவர் அறிவில் நிறைவுள்ளவர். ஏனெனில் அவர் முற்றறிவுடையவர். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் அனைத்தையும் அறிந்தவர். முற்றறிவுடைய அவர் சிந்திக்கிறார். ஆனால் தொடக்கத்தில் கடவுளைத் தவிர வேறேதுவும் இல்லை. கடவுளின் ஆறு சிறப்புப் பண்புகளில் முதலாவதாகக் குறிப்பிடுவது கடவுள் தாமாகவே இருக்கிறார் என்பது. தாமாகவே இருக்கும் கடவுள் ஒரு சிந்தனையாளராகவும் இருக்கிறார். அவர் எதைப்பற்றி சிந்திக்க முடியும்? தம்மைப் பற்றியேதான் சிந்திக்க முடியும். ஏனெனில் தொடக்கத்தில் தம்மை தவிர்த்து வேறொன்றும் இருந்ததில்லை. அவருடைய சிந்தனைக்கு இலக்காக (Object) இருப்பது அவரே தான்.
அவர் சிந்திக்கும்போது உள்ளத்தில் உருவெடுக்கும் கருத்தை  உச்சரிக்கும் போது வார்த்தைப் பிறக்கிறது. உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தையின் இயல்பும், அதை உச்சரித்தவருடைய இயல்பும் ஒன்றேதான். சிந்தித்தவர் தந்தையாகிய கடவுள், உச்சரிக்கப்பட்டவர் வார்த்தையாகிய மகன். இவருடைய இயல்பு இறைவனுடைய இயல்பே. “அவ்வாக்கு கடவுளாயும் இருந்தார்” (யோவா 1:1). இவருடைய இயல்பைப் பற்றி விவரிக்கும் போது இவர் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளி என்றும், அவருடைய ‘இயல்பின் அச்சுபதிவு’ என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் வாசிக்கிறோம். இந்த பொருளில்தான் ஒருவனைப் பார்த்து “அவன் தன் அப்பனை உரிச்சு வைத்தாற்போல் உள்ளான்”, என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். “இவ்வாறு இறைமகன் வானத்தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப் பேறாகப் பெற்றார்” என்றும் வாசிக்கிறோம் (எபி 2:4).

தந்தை, மகன் ஆகிய இருவருடைய பரஸ்பர சிந்தனையிலிருந்தும், அன்பிலிருந்தும் புறப்படுகிறவர் தூய ஆவியாரானார். எனவேதான் தந்தையிடமிருந்தும், மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன் என நம்பிக்கை அறிக்கையில் சொல்லுகிறோம். “இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்” என்கிறோம்.

இவ்வாறாக தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஒரே இறை இயல்பை உடையவர்கள். இவர்கள் ஆள்வகையில் மூவரானாலும், இயல்பு முறையில் ஒருவரே, அதாவது ஒரே கடவுள்தான். இந்த மூவொரு கடவுளைத் தான் கட்புலனாக மூவொரு கடவுள்  (Transcendent Trnity)  என்பர். மீட்பின் வரலாற்று பின்புலத்தில் மூவொரு கடவுள்  எக்கோனமிக், மூவொரு கடவுள் (Economic Trinity)  என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது மீட்பின் திட்டத்தில் இவர்களின் ஈடுபாட்டின் அடிப்படையில் இவர்களைப் பற்றி புரிவதாகும். தந்தையாகிய கடவுளின் பேரன்பு செயல் உலக படைப்பு, மீட்பின் திட்டமாகும். மகனாகிய இயேசு கிறிஸ்துவின் செயல் மீட்பின் திட்டத்தைச் செயல்படுத்துவதாகும். தூய ஆவியாரின் செயல் உலகமனைத்தையும் பாதுகாத்து, நேர்வழியில் நெறிபடுத்துவதாகும்.

இந்த மூவொரு கடவுளின் செயல்பாடுகள் நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில் இடம் பெற வேண்டும். தந்தையின் அன்பு, கிறிஸ்துவின் கீழ்படிதல், தூய ஆவியின் வழிநடத்துதல் ஆகிய மூன்றும் நம்மை இயக்குகின்றன. இதை நாம் ஒவ்வொருவரும் உள்ளூர உணர வேண்டும்.

மூவொரு கடவுள் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் கற்பனைக் கடவுள் அல்ல, இருக்கிறவர் நாமே என்று தம்மை வெளிப்படுத்தியவர் (விப 3:14) இறைவாக்கினர்கள் வழியாக பேசிய கடவுள், இறுதிவரையில் உலகை அன்பு செய்த கடவுள், தமது ஒரே மகனை உலகிற்கு அனுபப்பியவர் ஆவார்.

இயேசு ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, அவர் இறைவனுமாவார். நமது மீட்பிற்காக இரத்தம் சிந்திய வரலாற்று கடவுள். 

இவர்கள் இருவரிடமிருந்து புறப்படுகிறவரே தூய ஆவியார். நமக்கு துணையாளர், வழிகாட்டி, நம்மோடு தங்கியிருப்பவர், நமக்குள் உறைபவர். “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடிக்கொண்டியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியதா?” (1 கொரி 3:16) என்றும், “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?” (1 கொரி 6:19) என்றும் பவுலடியார் கேட்பது நமக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

எனவே மூவொரு கடவுளில் விளங்கிய நல்லிணக்கம் நம் வாழ்விலும் தென்பட வேண்டும். “தந்தை மகனை மாட்சிப்படுத்தினார். மகன் தந்தையை மாட்சிப்படுத்தினார்.தந்தையின் விருப்பத்திற்கு மீட்பின் திட்டத்திற்கு தம்மையே கையளித்தார். எனவேதான் ‘அப்பா, தந்தையே’ எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பபடி அல்ல. உம் விருப்பபடியே நிகழட்டும்” என்ற மன நிலையோடு (மாற் 14:6) தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் (லூக் 23:46) என்று தந்தைக்குத் தம்மையே ஈந்தார். இருவருள்ளும் உறவு நல்லிணக்கம், ஒற்றுமை ஆழமாக வேரூன்றியிருந்தது. நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் (யோவா 10:30; 14:11) என்ற ஆண்டவரின் வெளிப்படுத்துதல் எவ்வளவு ஆழமான பேருன்மை.

தூய ஆவியும் உறவில் நல்லிணக்கத்தில் ஒன்றித்திருந்தார். தந்தையிடமிருந்து கிறிஸ்து அனுப்பிய தூயஆவி (யோவா 15:26) திருஅவையை ஒருங்கிணைத்தார். இறைவனை ‘அப்பா, தந்தையே’ என்று அழைக்க வைத்து பிள்ளைகளாகிய நாம் உறவில் வளர உறுதுணையாக இருக்கிறார் (கலா4:6). அனைவருக்குள்ளும் நல்லிணக்கத்தை, ஒற்றுமையை உருவாக்குகிறார். கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையளித்து (யோவா 1:12) இதற்குச் சான்று பகர்கிறார் (உரோ 8:16), நாளும் நம்மை வழிநடத்துகிறார்.

மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடும் நம்மிடையே அவரில் விளங்கிய நல்லிணக்கம் செயலாக்கப்பட வேண்டும். நம்மிடையே ஒற்றுமை உருவாகிட வேண்டும். ஒருவரொருவருக்காக தியாகம் செய்யும் மனநிலை வேண்டும். விட்டுக் கொடுக்கும் நிலை நம் குடும்பங்களில் உருவாகிட வேண்டும். அன்பினாலும்,தியாகத்தாலும் மெருவூக்கப்பட்டு வளர வேண்டும். மூவொரு கடவுளின் விழா இதற்கு தூண்டுதலாகவும், துணையாகவும் அமைந்திட மன்றாடுவோம்.

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியார் பெருவிழா

திப 2:1‡11, கலா 5: 16-25, யோவா 15:26-27, 16:12-15
20-05-2018
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்

  உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடி முடித்த பிறகு ஐம்பதாவது நாளை பெந்தகோஸ்தே பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். அதாவது தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். மூவொரு இறைவனில், மூன்றாம் ஆளாகிய தூய ஆவியாரின் விழா. 

திருவிவிலியம் நான்கு முக்கியமான பிறப்புக்களைக் கொண்டது. அவை:
 1. உலகின் பிறப்பு (படைப்பு) (தொநூ 1,2)
 2. தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு  (விப 19)
 3. இயேசுவின் பிறப்பு ( மத் 1: 18-25)
 4. திருச்சபையின் பிறப்பு (திப 2:1-11)

இந்த நான்கு பிறப்புகளும் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த நான்கு பிறப்புகளுக்கும், ஓர் ஒற்றுமை உண்டு. பிறப்புக்கெல்லாம் மூல காரணமாய் இருந்தவர் தூய ஆவியார் என்பதே அந்த ஒற்றுமை.

 1. தூய ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்த வேளையில்தான், வெறுமையிலிருந்து ஒவ்வொன்றாக படைத்தார் இறைவன் என்கிறது திருவிவிலியம்.

2. யாக்கோபு முதலே - இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் தொடர்பு இருந்தாலும், இவர்களுக்கிடையில் ஒப்பந்தம், உடன்படிக்கை நிகழ்ந்தது சீனாய் மலையில்தான். அங்கே ஆவியாரின் பிரசன்னம் இருந்ததை பேரிடி முழங்கியது (விப 19:6). ஆண்டவர் நெருப்பாக இறங்கி வந்தார் (விப 19:18) என்ற சொற்றொடர்கள் என்பிக்கின்றன.

 3. இயேசுவின் பிறப்பில், அன்னை மரியாள் கருவுற்றிருப்பது தூய ஆவியாரின் வல்லமையால் என்பதை நன்கறிவோம் (லூக் 1:35).

இறுதியாக திருச்சபையின் பிறப்பு, அதாவது இன்றைய நாளில் நாம் நினைவு கூறும் தூய ஆவியாரின் வருகை சிதறுண்டவர்களை, ஒரே திருஅவையாக இணைத்தது. தூய ஆவியானவர் நெருப்புப் பிளவு வழியாக இறங்கினார் என்று திப2:1-11 இல் வாசிக்கின்றோம்.

இந்த நான்கு பிறப்புகளும் நமக்கு வலியுறுத்துவது ஒன்றுதான். தூய ஆவியார் எங்கு இருக்கின்றாரோ, அங்கே புதுப்பிறப்பு உண்டு என்பதுதான் அந்த உண்மை.

அதோடு தூய ஆவியார் உடலளவிலும், உள்ளத்தளவிலும், செயலளவிலும், கொள்கையளவிலும் நம்மை ஒன்றிணைக்கும் பணிகளையும் செய்கின்றார். இதுவே அன்று திருத்தூதர்கள் வாழ்விலும் நடந்தது.

அது வரையிலும் யார் பெரியவர் என்று தங்களுக்குள், போட்டியிட்டவர்களும், இயேசுவின் அரியணையின் இடப் புறமும், வலப்புறமும் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களும், உயிருக்குப் பயந்து அவரை மறுதலித்தவரையும், அஞ்சி நடுங்கி கதவை தாழிட்டு கொண்டவர்களையும் இன்று தூய ஆவியார் ஒருங்கிணைக்கின்றார்.

இதுவரையில் சுபாவம், பதவிஆசை, உயிர்மேல் பயம் போன்ற கதவுகளால் பூட்டப்பட்டிருந்தவர்கள், தூய ஆவியாரை பெற்றுக் கொண்டபின் கதவுகளை உடைத்தெறிந்து விட்டு வெளியே வந்தார்கள். அந்த இயேசுவிற்கு சான்று பகர்ந்தார்கள். உயிர்ப்புக்கு சாட்சிகளானார்கள். இதுதான் பெந்தகோஸ்தே அனுபவம்.

இதே அனுபவத்தைப் பெறத்தான் நாமும் அழைக்கப்படுகின்றோம். நமக்குள் இருக்கின்ற அல்லது நம்மை பூட்டியிருக்கின்ற சாதி, இன, நிற, மொழி, பொருளாதார, பண்பாட்டு வேறுபாடுகளை, உடைத்தெறிந்துவிட்டு, உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் வாழ, அழைக்கப்படுகின்றோம். இதற்கு உந்துசக்தியாக, ஊக்குவிக்கும் சக்தியாக இருப்பது, திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதலில் நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியார்தான். அவரை நாம் நம்மில் செயலாற்ற அனுமதிப்போமா?
‘திரு அவையில் துVய ஆவியாரின் பிரசன்னத்தின் முக்கிய வெளிப்பாடு துணிவு’. - ஏ.பி. சிம்சன்

‘பணிவுதான் துVயஆவியார் நம்மை வழிநடத்த உதவுகிறது.’ - ஜான் ஹகி 

‘துVய ஆவியார் உன்னில் உறைவதை  உணரும் போது என்னால் முடியாது என்று உன்னால் சொல்ல முடியாது.’ - ஓஸ்வால்டு சாமபர்ஸ்

Tuesday 1 May 2018

ஆண்டவரின் விண்ணேற்றம்

ஆண்டவரின் விண்ணேற்றம்
13-05-2018
 திப 1: 1-11;    எபே 4:1-13;   மாற் 16:15-20
ச.இ.அ.

ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது பணிக்காக, படிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது, எப்போது நம் வீட்டிற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம், நமக்கு உண்டாகும். பணிகள் முடிந்து திரும்புகிற வேளையில், தனிப்பட்ட நன்றி செபம் சொல்வேன். நாம் துவங்கிய பணி நிறைவாக நடந்தது. இடையில் எவ்வித தடங்கள், இடையூறுகள் இன்றி நிறைவுகண்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்ற வேளையில், அந்நிகழ்ச்சி முழுமையான தன் அடிப்படையில் ஒருமன நிறைவு ஏற்படும்.

இயேசு விண்ணகம் சென்ற விழாவை கொண்டாடுகிறோம். இன்றைய முதல் வாசகம் இயேசு விண்ணகம் சென்ற நிகழ்ச்சியை விளக்குகிறது.  இறைவாக்கினர் எலியா, எலிசா கண்முன்பாக, நெருப்புப் தேரும், நெருப்புக் குதிரைகளும் தோன்ற, சுழற்காற்றில் விண்ணகத்துச் சென்றார் என்று வாசிக்கிறோம் (2 அரச 2:11). இயேசு உயிர்த்த பின்பு நாற்பது நாள்கள் திருத்தூதர்களுக்கு காட்சியளித்து, அவர்களை உலகெங்கும் தனது சாட்சிகளாக விளங்கக் கூறின பிறகு, விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது (திப 1:8). 

இயேசு பிறந்தபோது, அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிட்டார்கள். எம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள். இயேசு இவ்வுலகை விட்டுப் பிரிந்து விண்ணகம் செல்லும்போது சீடர்களுக்கு அவர்தந்த வாக்குறுதி உலகமுடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் (மத் 28:20) என்பதாகும். எனவே அவரது பிரசன்னம் என்றுமுள்ளதாகிறது.

இயேசு இவ்வுலகில் இருக்கும் போது தன் விண்ணகத் தந்தையுடன் ஒன்றித்திருந்தார் (யோவா 17:22). அதே போல இயேசு விண்ணகம் சென்ற பிறகு தன் சீடர்களுடன் ஒன்றித்திருக்கிறார். அவ்வாறு அவர் தன் சீடர்களுடன் ஒன்றித்திருப்பதற்கு தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்புகிறார் (யோ14:26). இவ்வாறு தொடர்ந்து சீடர்களுடன் ஒன்றித்திருந்து செயல்படுகிறார். அவர்கள் அரும்அடையாளங்கள்  செய்ய வேண்டிய வல்லமையைத் தருகிறார் (மாற் 16:20). 

நமது பணி விண்ணகத்தைப் பார்த்து நிற்பதல்ல. இயேசு செய்தது போல, தீமைகளை அகற்றுவதும், நோய்களை குணமாக்குவதும், எல்லோரோடும் ஒன்றித்து வாழ்வதுமாகும்.

ஒரு முனிவர், தான் இறப்பதற்கு முன் தன் சீடர்களை அருகில் அழைத்தார். ‘என்னுடைய சிறிய துன்ப வாழக்கை நிறைவுறப் போகிறது. நான் ஒரு சந்தைக்குச் செல்கிறேன். என்னிடம் கொஞ்சம் பணம்தான் இருக்கிறது. ஆனால் அதைக்கொண்டு அளவில்லாமல் நிறைய வாங்குவேன். உலகில் சிறிதுதான் துன்புற்றேன். ஆனால் பெரிய ஒப்பற்ற செல்வத்தைப் பெறப் போகிறேன். அதுதான் விண்ணகம்’ என்றார்.

ஒருவர் விண்ணகத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிரு ந்தார். கேள்வி நேரத்தில் ஒருவர், ‘நான் விண்ணகம் செல்லும்போது துதர்களுக்கு உள்ளதுபோல இறக்கைகள் இருக்கும். அதில் எப்படி என்சட்டையை மாட்டுவது என்பது பிரச்சனையாய் இருக்காதா’ என்றார். பேச்சாளர், ‘உங்களுக்கு இறக்கைகள் இருக்காது. வால்தான் இருக்கும். வாலில் எப்படி உங்களின் கால் சட்டையை பொருத்துவது என்பதுதான் பிரச்சனையாக இருக்கும்’ என்றார். 

‘எலியாவின் விண்ணேற்றம் ஒரு பறவை பறந்து செல்வது போன்றது. நாம் அதனை பின்பற்ற முடியாது. இயேசுவின் விண்ணேற்றம் விண்ணையும் உலகையும் இணைக்கும் பாலம் போன்றது. இதனால் அவரின் சீடர்கள் அவரை சென்றடைய முடியும்’. - பாம் கார்ட்டன்

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

திப 10: 25,26,34,35,44-48; 1யோவான் 4:7-10;   யோவான் 15: 9-17
06-05-2018
பாளை ஜெமி
அன்பா? அறிவா?
உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்லின்! அவர் உண்மையான நண்பர் யாரென்பதற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார். ‘எவனொருவன் மழையிலே நனைந்தவாறு அழுகின்ற நண்பனின் கண்ணீரை மழை நீரிலிருந்து வித்தியாசப்படுத்தி, அத்துன்ப வேளையில் துணை நிற்பாரோ அவரே உண்மையான நண்பன்’ என்கிறார். நண்பகர்ளுக்கு மத்தியில் அன்பு இருத்தல் வேண்டும். அந்த அன்பு உள்ள இடத்தில் துன்பம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த அன்பு உண்மையானது எது என நீருபனமாகும். அத்தகைய உண்மை அன்பை வெளிப்படுத்திய உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய இன்றைய  இறைச்சிந்தனை, ‘இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்’ என்பதாகும்.

அன்பிற்கு இலக்கணமாய் பெற்றத்தாயை விட வேறு யாரையும் ஒப்புமைப்படுத்த இயலாது. ஆனாலும் அத்தாயினும் மேலாக (எசாயா 49:15) நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று தன் உயிரை நமக்காக கொடுத்து வாழ்ந்துக் காட்டியவர் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. யோவான் 4:16இல் கடவுள் அன்பே உருவானவர் என்றுள்ளது. அதாவது இறைவன் அனைத்து விதமான அன்பின் வெளிப்பாடாக இருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது. இறைவன் ஒரு தந்தையின் நிலையில், ஒரு தாயின் நிலையில், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலையில் பொருத்திக் காட்டினாலும் இன்றைய நற்செய்தியில், ஒரு நண்பனின் அன்பிற்கு தன் அன்பை இணைத்துக் காட்டுகிறார் இயேசு.

தத்துவவியல் அறிஞர் ஹராலிக்டஸ் என்பவர், ‘மாற்றம் என்பது உண்மையே, ஒவ்வொரு நொடிபொழுதும் மாறிக் கொண்டேயிருக்கின்றன’ என்ற கருத்தினை, ‘யாரும் ஓடுகின்ற ஒரே தண்ணீரில் கால் வைக்க இயலாது’ என்கிறார், (No one can step into the same water). மாற்றமும் என்பது நியதியாயினும் ஆண்டவர் இயேசு நம்மில் வைத்திருக்கின்ற அன்பிலே எந்த விதமான மாற்றம் இல்லை. ஆகவே தான் யோவா 15:9 இல் எனது அன்பில் நிலைத்திருங்கள் என்று அன்போடு கூறுகிறார். 
உண்மையான அன்பு விலை போகாது. 
போலியான அன்புக்கோ   சாயம் பொய்த்துப் போகும். 
அன்பு உள்ள இடத்தில் தியாகம் இரட்டைக்கிழவி. 
அத்தியாகம் இல்லா அன்பு முற்றும்  (ஒற்றை) பிழை ‡ இத்தகைய அன்பினை வெளிப்படுத்தவே இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘நான் உங்களைப் பணியாளன் என்று சொல்லமாட்டேன். காரணம் தலைவன் செய்வது இன்னதென்று பணியாளனுக்கு தெரியாது? அவர்கள் இருவருக்குமிடையே அன்பு என்ற பிணைப்பு இடம் பெறாத நிலை. நானோ உங்களை என் நண்பர்கள் என்றேன். இரு நண்பர்களுக்கிடையே அன்பு இருப்பது போல, நான் உங்கள் மீது கொண்ட அன்பினை என் உயிரை ஈந்து உறுதிப்படுத்தியுள்ளேன்.’ அதனைத்தான் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக யாரிடம் எப்படி பேசுவது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. 
‘தாயிடம் அன்பாகவும், தந்தையிடம் பண்பாகவும், சகோதரியிடம் பாசத்தோடும், சகோதரனிடம் அளவோடும், குழந்தைகளிடம் செல்லமாகவும், கடவுளிடம் மெளனமாகவும், நண்பர்களிடம் மனம் விட்டும் பேச வேண்டும்’ என்று கூறுவார்கள். அவருடைய நண்பர்களாகிய நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, அவர் நம்மை அன்பு செய்வதுபோல, பிறரை நாம் அன்பு செய்ய வேண்டுமென்பதே. இதனையே புனித அன்னை தெரஸா, ‘கண்ணுக்கு தெரிந்த மனிதரை அன்பு செய்யாவிட்டால், ஊனக் கண்களுக்குத் தெரியாத கடவுளை அன்பு செய்தும் பயனில்லை’ என்று கூறுகிறார். 
இரண்டாம் வாசகமும் (1யோவா 4:7‡10) ‘அன்பு செய்பவர்கள் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என்று குறிப்பிடுகிறது. இயேசுவும் நம்மிடத்தில் கூறுவது இதுதான். நீங்கள் என்னை அன்பு செய்கிறீர்கள் என்றால், என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் இதிலேதான் அன்பிற்கும், அறிவிற்கும் இடையே உள்ள வேறுபாடு விளக்கம் பெறுகிறது. என் தாய் தந்தையை நான் அறிவேன் என்பது எனக்குள்ள அறிவு. ஆனால் அவர்களின் நிலையறிந்து, வயது முதிர்ந்த காலத்திலே அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அவர்களை காப்பாற்றுதல் என்பது எனது கடமையும், அதனினும் மேலான அன்புமாகும். அதுபோன்று, இயேசுவை நான் அறிந்திருப்பது மற்றவர்களைப் போல நானும் பெற்றிருக்கின்ற அறிவு அது. ஆனால் அவர் சொல்கின்றவாறு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பது அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பு.
  ஆக, இந்த அன்பு எங்கே ஆரம்பிக்கிறது? எப்படி தொடங்குகிறது என்ற கேள்விக்கு, புனித அன்னை தெரஸாவின் பதிலே, பொருத்தமாக அமையும்.அன்பானது நமது வீட்டிலே, குடும்பத்திலே ஆரம்பிக்கின்றது. நாம் ஒன்றாக கூடி செபிப்பதிலேதான் அன்பு வலுப்பெறுகின்றது என்று கூறுகிறார். மேலும் ‘அன்பு செலுத்து என்று யாரோ கட்டளை இட்டது போல் குரல் கேட்கிறது’ என்று 17 வயதான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல், தனது குடும்பத்தால் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டபோது, ‘என் மனதில் ஒரு விதை விழுந்திருக்கிறது, அதற்கு விடை கிடைத்தப் பின்னரே, திருமணம்,  என்று கூறி செபத்தின் வழியாக, ‘அன்பு செலுத்துங்கள்... காலம் குறைவாகவே இருக்கிறது’, என்று தேவாலய சுவரில் இருந்த வாசகம் அவரை சிந்திக்க வைத்தது. 
வாழ்க்கையில் அன்பான உறவு கிடைப்பது முக்கியமல்ல, வாழ்நாள் முழுவதும் அன்பாக இருக்கிறதே முக்கியம். ஆக, நம்மில் அன்போடு நிலைத்துள்ள ஆண்டவர் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க ஒருவரையயாருவர் அன்பு செய்வோம். 

‘ஒருவரிடம் உள்ள சிறந்த பண்புகளை வெளிக்கொணர உதவுபவனே சிறந்த நண்பன்’ ‡ யஹன்றி போர்டு

‘நீ நீயாகவே வாழ அதற்குறிய சுதந்திரத்தை தருபவரே உற்ற நண்பர்’ ‡ ஜிம்மோரின்

‘உன் தோல்விகளை பொருட்படுத்தாது உன் வெற்றிகளை தாங்கி நிற்பவர்தான் உயர்ந்த நண்பர்’ ‡ கடக் லார்சன்

Ads Inside Post