Pages - Menu

Tuesday, 13 February 2018

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர் கலம்பகம்
இன்றைய தமிழில்
அருட்பணி. சலுசா
 பாடல் எண்: 18  தினம் வந்தாலும்

அருளளித்து - பாவ
இருளழித்து
மயக்கம் நீக்கி - மனித
மாசு போக்கி
ஒளிதரும் உதயமாய்
உயிருக்கு உயிரான
உன்னதத் தாயே!

அணி அணியாய் அழகு சேர்க்கும்
மணி ஒளிர் திருக்கோயில்
திருவடி வணங்கி புகழாது போனால் - உன்
திருமகன் சொற்படி வாழாது போனால்

தெய்வீகத் திருக்காவலுரானாலும்
மகிழ்ச்சியில்லை மானிடர்க்கு
மறு உலக வாழ்வு மில்லை.
துயரில் வாடி துவண்டு போவர்
இன்னுயிர் காக்க இரங்கிடும் தாயே.

எண்சீர் ஆசிரிய விருத்தம்:
மகிழா ருலகி னணுகார் கதியின்
மடிவார் துயரி லருளா ருன்றாட்
புகழா தவரே பணியா தவரே
புடைநீ காவா துய்யா வுயிரே
திகழார் மணிபோ லணிபூஞ் சினைக்காத்
திருக்கா வனநல் லூரூர்ந் தவரே
நிகழா வருளு மருளு
நிசியற் றுயிரே விளங்கும் பானே. 

No comments:

Post a Comment

Ads Inside Post