Pages - Menu

Saturday, 2 July 2016

16 ஆம் ஞாயிறு (16 - 07 - 2016 )

16 ஆம் ஞாயிறு      (16 - 07 - 2016 ) 

 தொ. நூ. 18 : 1 - 10;  கொலோ 1 : 24 - 28;  லூக் 10 : 38 - 42

செவி கொடு

23 வயது இளம்பெண் ஒருவரின் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “‘வாழப் பிடிக்கவில்லை, தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன். எவரையும் காரணமாக குறிப்பிட விரும்பவில்லை. எனக்கென்று யாருமில்லை. என்னில் புதைந்துள்ள எத்தனையோ ஏக்கங்கள், மன அழுத்தங்கள், யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாமை... எனக்கு செவிமடுக்க யாருமில்லை. நேரத்தை ஒதுக்க, எனது பிரச்சனைகளுக்கு காது கொடுத்து கேட்க யாருமில்லை. எனவேதான் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன்’
.
இன்று மனித வாழ்வு சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. மன அழுத்தமும், மன உளைச்சலும் அதிகரிப்பு, பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், இடியாப்ப சிக்கலாகி வரும் குடும்ப வாழ்க்கை, சிதைந்து போகின்ற குடும்ப உறவுகள், பெருகி வருகின்ற மண முறிவுகள் இவை அனைத்தையும் உள்ளத்தில் அழுத்தி வைத்துக்கொண்டு வெறுமனே நாட்களை நகர்த்தும் மனிதர்கள் ஏராளம்.

இதற்கு தீர்வு என்ன?  ஆற்றுப்படுத்துதல் என்பது இன்று அதிகம் பேசப்படுகிறது. இதன் அடிப்படையில் செவி மடுத்தல், நெறிப்படுத்துதல், வழிகாட்டுதல், ஆலோசனை கூறுதல், அறிவுரை வழங்குதல் - இவைகளையயல்லாம் தாண்டி ஒரு மனிதனுடைய உள்ள குமுறல்களை யாராவது உட்கார்ந்து கேட்டாலே போதுமானது. 

நடைமுறை வழியில்  ‘என்ன வேண்டும் உனக்கு, சீக்கிரமாக சொல், எனக்கு நேரமில்லை ... நீ சொல்வதையயல்லாம் கேட்க எனக்கு பொறுமை இல்லை, சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்’. இந்த அவசர செய்திகள் தான் மனித பிரச்சனைகளுக்குக் காரணம்.

இன்றைய நற்செய்தியில் சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத ஒரு சூழ்நிலையில் வரப்போகும் பாடுகளை மனதில் வைத்து எருசலேமுக்கு இயேசு பயணம் செய்கிறார். அப்போது பெத்தானியாவிலுள்ள மார்த்தா ‡ மரியா வீட்டிற்கு செல்கிறார். இருவரும் இயேசுவின் நலனில் அக்கறையுடையவர்கள்.

மார்த்தா விருந்தோம்பலில் கவனம் செலுத்துகிறார். மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதை  கேட்கிறார். 
உணவு உண்பதைக் காட்டிலும், மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இயேசு அவ்வீட்டிற்கு செல்கிறார். அவருடைய மன உணர்வுகளை புரிந்து கொண்டு, செவிமடுக்கின்ற பணியை செய்த மரியாவை இயேசு பாராட்டுகிறார். இயேசுவுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரை கூறுகின்ற அளவுக்கு மரியா பெரிய ஆள் இல்லைதான். ஆனால் உணர்வுகளை புரிந்து கொண்டு, இயேசுவுக்கு செவிமடுத்த மரியா உண்மையிலேயே நல்ல பங்கை தேர்ந்து கொண்டாள்.

மார்த்தா பணியில் மூழ்கி, இறைவார்த்தையைக் கேட்டு மகிழ்ந்திருக்க முன் வரவில்லை. அன்றாட நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளில் ஒரேயடியாக மூழ்கி, ஆன்மீக காரியங்களை முற்றிலும் மறந்து விடுவது நல்லதல்ல என்றும்,  உடலைவிட ஆன்ம வாழ்வு முக்கியமானது என்றும் மார்த்தாளுக்கும், நமக்கும் இயேசு உணர்த்துகிறார்.

பரப்பான உலகில் நாம் நேரத்தை ஒதுக்கி, பொறுமையோடும், பரிவோடும் மற்றவர்களின் எண்ணங்களை, ஏக்கங்களை புரிந்துக் கொண்டு, செவிமடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

15 ஆம் ஞாயிறு (10 - 07 - 2016)

15 ஆம் ஞாயிறு (10 - 07 - 2016) 
                       
இச 30 : 10 - 14, கொலோ 1 : 15 - 20, லூக் 10 : 25 - 37

துளிர்க்கும் மனித நேயம் 

“மனித நேயம், இரக்க குணம், உதவி செய்யும் மனநிலை உடையவர்கள் மட்டும்தான் காயத்திற்கு கட்டு போடுவார்கள்”. நற்செய்தியில் வரும் பல கதாபாத்திரங்களை அலசிப் பார்க்கும்போதுதான் உண்மையான அயலான் யார்? அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற பதில் கிடைக்கிறது.

பயணம் செய்பவர்கள்: எருசலேமிலிருந்து எரிக்கோ வரை பயணிக்க வேண்டும். திருடர்கள் நடமாடும் ஆள் அரவம் இல்லா, நவீன காலத்திலுள்ள சாலைகள் போன்றல்லாமல் கரடு, முரடான பாதை அது. தனி நபர் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
பாதையில் பயணித்தவர்கள்

1. கள்வர்கள்:  மற்றவர்களுடைய பொருட்களை சந்தர்ப்பம் பார்த்து கவரக் கூடியவர்கள்; இதற்காக உயிரையும் துட்சம் என கருதி, எதையும் செய்ய துணிந்தவர்கள்; தவறு செய்கிறோம் என உணராதவர்கள்.

2. தெரிந்தோ, தெரியாமலோ பயணம் செய்த எளிய யூதர். கள்வர் கையில் அகப்பட்டு, உடைமைகளை இழந்து, காயப்பட்டு நடக்க முடியாமல் முடங்கியிருப்பவர். மற்றவரின் உதவியை நாடியிருப்பவர்.

3. குரு: உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனைப் பார்க்கிறார். ஆனால் ஒதுங்கிப் போகிறார். இறந்த உடலை தொட்டுவிட்டால் 7 நாட்களுக்குத் தீட்டுபட்டவனாக இருப்பான் (எண் 19 : 11). இதுவே ஆலயத்தில் வழிபாடு நடத்தத் தடையாகும் என்ற உணர்வு. அவரைத் தடுத்தது இவருக்கு மனிதனை விட ஆலய வழிபாடு முக்கியமாக தெரிந்தது.

4. லேவியர்: துடிதுடிக்கும் வழிபோக்கன் அருகிலே சென்று பார்த்துவிட்டு ஒதுங்கி செல்கிறான். தன்னை தற்காத்துக் கொள்ள அவ்விடத்திலிருந்து சென்றுவிடுகிறான். குருவிற்கு உதவி செய்பவர். இவரும் தீட்டு அடிப்படையில் ஒதுங்கி செல்கிறார்.

5. சமாரியன்: ஒதுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். தன்னை ஒதுக்கும் யூதருக்கு உதவ அவன் இதயத்தில் இரக்கம் சுரக்கிறது. மருந்திட்டு, கட்டுப்போட்டு, சாவடிக்கு கொண்டு வந்து, மருத்துவச் செலவு செய்து, மீண்டும் தேவையான பணம் கொடுத்து, தனது பணிக்கு திரும்பும் இந்த மனிதன் ஒரு மாமனிதன். ஒரு மனிதன் மீது உண்மையான அக்கறையும், அவனது துன்பத்தில் பங்கெடுத்தலும், எதையும் எதிர்பாராமல் தன்னிடம் இருப்பதை கொடுத்து உதவி புரிதலும்தான் இந்த மனிதர், சட்டத்தை வாழ்வாக்குபவர் என்று இயேசு விவரிக்கிறார்.

அறிவியல் முன்னேற்றமடைந்த இக்காலத்தில் நகரங்களிலும்,கிராமங்களிலும் வாழக்கூடிய மனிதர்கள் மத்தியில் - “கண்டு கொள்ளாமை”, “இரக்கமற்ற உணர்வு”, “தெரிந்தும் தெரியாதவர்களைப் போல வாழும் மனநிலை” போன்ற மாறுபட்ட குணாதிசயங்கள் அதிகமாக முளைத்துள்ளன. இவைகளை வேறுஅறுத்தால்தான் நல்ல சமாரியர்களை இந்த சமூகத்தில் காண முடியும். மனித நேயம், மனிதாபிமானம் என்ற உணர்வு நிலைக்கு வந்து, வாழ்வில் இவைகளை செயலாக்கத்திற்கு கொண்டு வருவோம். சீனிவாசன் என்பவர் மருத்துவப்படிப்பு படித்துவிடடு, கானகத்தில் வாழும் பழங்குடியினருக்கு அங்கே தங்கி மருத்துவ உதவி செய்கிறார். இவர் இன்றைய நல்ல சமாரியர்  எனலாம். முதல் வாசகத்தில், ‘ஆண்டவரின் குரலுக்கு செவி கொடு, அவர்தம் கட்டளைகளை கடைபிடி’ என்று கூறப்பட்டுள்ளது. இயலாதவற்கு உதவி செய்தல் இறைவனை காண்கின்ற செயலாகும், இறை கட்டளைகளின் நிறைவாகும்.

14 ஆம் ஞாயிறு, 03 - 07 - 2016

14 ஆம் ஞாயிறு, 03 - 07 - 2016

எசா 66 : 10 - 14, கலா 6 : 14 - 18  லூக் 10 : 1 - 12, 17 - 20

தடயமான தழும்பு

‘இந்திய கிறிஸ்தவர்களின் தந்தை’ எனப் போற்றப்படும் புனித தோமையாரின் திருவிழாவை இன்று திருச்சபைக் கொண்டாடி மகிழ்கிறது. இவர் இயேசுகிறிஸ்து மீது அளவற்ற பற்று கொண்டிருந்தார். விசுவாசத்தில் வளர்ந்த இவர், முரடர்களான யூதர்களைப் பார்த்து அஞ்சவில்லை. யூதர்கள் இயேசுவுக்கு பல தொல்லைகளைக் கொடுத்து வந்தவர்கள். மற்ற சீடர்கள் இவர்களுக்கு அஞ்சினார்கள். ஆனால் தோமா, ‘இயேசுவோடு நாமும் யூதேயாவுக்கு போவோம், அவரோடு இறப்போம்’ என்றார். இது தோமாவின் வீரம் கலந்த உற்சாகப் பணியை காட்டுகிறது. இன்றைய சமூக பின்னனியில் நாம் சந்திக்கும் சவால்கள் பல கோணங்களில் கிறிஸ்தவர்களுக்கு வருகின்றது. இதில் நமது இறைப்பண்பு என்னவாக உள்ளது என்று சிந்திக்க வேண்டும். புனித தோமாவின் வாழ்வே மிகப் பெரிய சவாலாக நம் ஒவ்வொருவருக்கும் அமைய ¼ வண்டும். சவால் நிறைந்த புனித தோமாவின் வாழ்வில், கிறிஸ்துவிற்கு உண்மையுள்ள சாட்சியாக அவர் தொடர்ந்து வாழ, ஒரு மிகப் பெரிய தடயம் ஒன்று அவருக்கு கிடைத்தது. அதுதான் இயேசுவின் விலா தழும்புகள். இவை அவரது விசுவாச வாழ்வுக்கு விருட்சமாக கிடைத்த தடயம்.

சங்க இலக்கியத்தில் தாய் தனது மகனை போருக்கு அனுப்பும்போது, அவன் புறமுதுகு காண்பித்து போரில் பின்வாங்க கூடாது என்றும், நெஞ்சில் புண்களை அல்லது காயங்களைப் பெற்று, வீரனாக திரும்ப வேண்டும் என்றும் சொல்வாள். அந்த வீரத்தழும்பு போற்றுதற்குரியது என்பார்கள். அன்று மாடுகளையும், ஆடுகளையும் வளர்த்தவர்கள், அவைகளுக்கு சூடு போட்டு, தழும்புகளை ஏற்படுத்தி தங்களுடைய மாடுகள் அல்லது ஆடுகள் என இனம் கண்டார்கள்.

‘உயிர்த்த  ஆண்டவரைக் கண்டோம்’ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, தோமா இக்கருத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ‘இயேசுவின் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்’ (யோவான் 20 : 25) என்று கூறுகிறார். இயேசு மீண்டும் தோன்றிய போது, ‘நீரே என் ஆண்டவர், நீரே என்கடவுள்’ என விசுவாச அறிக்கையிடுகிறார். இது இயேசுவின் தழும்பைப் பார்த்து புனித தோமாவின் உள்ளத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள். இந்த விசுவாசத் தழும்பின் தடயம்தான் புனித தோமாவின் ஐயத்தையும், சந்தேகத்தையும் சரி செய்தது.

இன்றைய சமூக சூழலில் மகாத்மா காந்தியடிகள் சொன்னதைப் போன்று, கொள்ளையில்லாத அரசியல், மனசாட்சியில்லாத இன்பம், உழைப்பில்லாத செல்வம், பண்பில்லாத அறிவு, அறநெறியில்லாத தொழில் வளர்ச்சி, மனிதாபிமானமில்லாத அறிவியல் ‡ போன்ற அனைத்துமே நமது நம்பிக்கை தடயங்களை சேதமாக்கும் தழும்புகள். மனிதனோடு உள்ள நம்பிக்கையும், இறைவனோடு கூடிய நம்பிக்கையும்தான் நமது சாட்சிய வாழ்வுக்கு தழும்பாக, தடயமாக மாற வழிவகுக்கும்.

நம்பிக்கை உள்ளவனுக்கு தடைகற்களும் படிகற்களே
இறைவன்மீது கொண்டுள்ள நமது நம்பிக்கையே தழும்பாகி தடயமாகட்டும்

Friday, 1 July 2016

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்...

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்


ஏழாவது படித்தவர் ... 510 வாகனங்களுக்கு முதலாளி . என்ன ஷாக் ஆயிட்டிங்களா?
படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதில்லை. பள்ளி கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழில் அதிபர்.

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுசுப் பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். இந்த பேருந்துகளை இயக்கும் லு.P.ஹி டிராவல்ஸ் அதிபர் லு.P. நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசுப் பேருந்துகளுக்கு சொந்தக்காரர். அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடு முழுவதும் சுமைகளை ஏற்றி, இறக்கி வலம் வந்துகொண்டு இருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்தி வரும் லு.P. நடராஜன், பெரிய பிஸினஸ் படிப்பு படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும் தான். ஆனால் அடைந்த வெற்றிகள் ஏராளம். தனது வெற்றிக் கதையை சொல்கிறார் நடராஜன் ...

“நான் பிறந்து வளர்ந்தது, சேலம் பெரிய புத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர். நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளைச் செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 

1968 ஆம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதற்கு “வெங்கடேஷ்வரா பஸ் சர்வீஸ்” என்று பெயர் வைத்து கோவை முதல் பெங்களூர் வரை டிரிப் அடித்தேன். அந்த பஸ்ஸின் ஓட்டுநரும் நானே, நடத்துனரும் நானே.

அதன்பிறகு மதுரையிலிருந்து பெங்களூர் ரூட்டில் பேருந்தை இயக்கி அந்த பஸ்கம்பெனியை மூன்று வருடங்களாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில் தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ண கவுண்டர் பெயரின் முதல் எழுத்தான K யையும், எனது தகப்பனார் பொன்மலை கவுண்டர் பெயரில் இருந்து P என்ற எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து N என்ற ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து 1972இல்  K.P.N. என்கிற பெயரை வைத்து டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

1974ஆம் வருடத்தில் டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது. 1976இல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின. பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரைச் சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம்  உள்ளிட்ட வி­யங்களில் எங்கள் கம்பெனி டாப் கியரில் போகத்தொடங்கியது. படிப்படியாக கம்பெனி வளர்ந்து ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்த போதும், அதில் ஒரு வண்டியில் டிரைவராகவும் நான் இருந்தேன். அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக குளுகுளு வசதி செய்யப்பட்ட பஸ்களை அறிமுகம் செய்தேன்.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான், 17 வயதில் கிளீனர், 18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் லு.P.ஹி டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி 
வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தளவுக்கு போக்குவரத்தை நடத்தி வரும் நான் பள்ளி படிப்பைவிட வாழ்க்கையில் தெரிந்துக் கொண்ட அனுபவக்கல்வி தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது” என சொல்லி முடித்தார்.

கல்வி அறிவால் மட்டுமே ஒருவர் வெற்றி காண முடியும் என்பதல்ல. மாறாக  உண்மை, உழைப்பு, ஈடுபாடு ஆகிய மதிப்பீடுகள் மூலம் ஒருவர் வெற்றி அடையலாம். ஆகவே நான் வேலை கிடைக்கவில்லையே என்று எண்ணி சோர்ந்து விடாமல், உழைப்பால் உயர்வோம். உண்மையாக வாழ்வோம், உயர்வு பெறுவோம். வெற்றிக்கனியை தட்டிப்பறிப்போம்.

“பத்தாவது முறையாக எழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது ஒன்பது முறை விழுந்தவன் அல்லவா

திருப்பலி விளக்கம், 6. தொடக்கச் சடங்கு

திருப்பலி விளக்கம்

- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானி இல்லம், கும்பகோணம்

        6. தொடக்கச் சடங்கு

முன்னுரை :

திருப்பலி இருபெரும் பகுதிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வார்த்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு ஆகிய ஆக்க கூறுகளாலானது திருப்பலி. இன்னும் சற்று விரிவாக பார்த்தோமானால் திருப்பலி தொடக்க வழிபாடு, வார்த்தை வழிபாடு, நற்கருணை வழிபாடு, முடிவு வழிபாடு ஆகியவற்றைக் கொண்டிருப்பது எனலாம்.
இருபெரும் பகுதிகளை எடுத்துக் கொள்வோமானால் அவை ஒவ்வொன்றுக்கும் தயாரிப்பும், முடிவும் உண்டு என்றும் சொல்லலாம்.
இதுவரை திருப்பலிப் பற்றிய அடிப்படை கோட்பாடுகளுக்கு விளக்கம் கொடுத்தோம். (பிப்ரவரி ‡ ஜீன்). இனித் திருப்பலியில் இடம்பெறும் ஒவ்வொரு செயல், செபம் போன்றவைகளுக்கு விளக்கம் கொடுக்க முற்படுவோம்.
தொடக்கச் சடங்கு :
தொடக்கச் சடங்கு திருப்பலி முழுவதிற்கும் நுழைவாயிலைப் போன்று அமைந்திருக்கிறது. இந்த தொடக்கச் சடங்கு, வருகைப் பவனியில் தொடங்கி திருக்குழும மன்றாட்டோடு முடிவடைகிறது. திருப்பலியில் நமது பங்கேற்பு முழுமையாக அமையவும், அதன் விளைவாகப் பலன்களை நாம் நிறைவாகப் பெறவும், இச்சடங்கு நம்மைத் தயாரிக்கிறது. திருப்பலியின் இறுதி பயனாகிய இறை ‡ மனித உறவின் சிகரத்திற்கு அச்சாரமாகவும், அடித்தளமாகவும் அமைந்திருக்கிறது இத்தொடக்கச் சடங்கு. எனவே இத்தொடக்கச் சடங்கில் இடம்பெறும் ஒவ்வொரு செபமும், செயலும் இத்தயாரிப்புக்கு எப்படி உறுதுணையாக விளங்குகிறது என இங்கு பார்ப்போம்.

வருகைப் பவனி :

பொதுவாகத் திருப்பலி கொண்டாட்டம் வருகைப் பவனியுடன் தொடங்கும். பீடப்பணியாளர்கள் முன்செல்ல (பாடல் திருப்பலியாக இருந்தால் சிலுவை, தூபத்துடன்) திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் திருவுடை அணிந்து பின்செல்கிறார். இந்தப் பவனி கோவிலின் முன் நடுவாயிலிருந்து தொடங்கும். இப்பவனி கொண்டாடப்படும் விழாவில் தரத்திற்கேற்ப நீண்டதாகவோ, சுருங்கிய அளவுடையதாகவோ இருக்கலாம். பீடப்பணியாளர்களைத் தவிர்த்து, திருத்தொண்டர், வாசகர், விளக்கவுரையாளர் இப்பவனியில் இடம் பெறலாம். திருத்தொண்டரோ அல்லது வாசகரோ, வாச நூலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அருள்பணியாளர் முன்செல்வர்.

வருகைப்பாடல் :

“கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பை வளர்க்கவும், வழிபாட்டுக் காலத்தின் அல்லது திருநாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனி இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாடலின் நோக்கமாகும்”  (பொது படிப்பினை எண் 47). 
ஒவ்வொரு நாளின் கொண்டாட்டத்தின் உணர்வுகளில் நுழைய இந்த வருகைப்பாடல் நம்பிக்கையாளர்கள், அருள்பணியாளர் மற்ற பணியாளர்களின் மனதைத் திறக்கிறது.  அன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியை அதற்கேற்ற திருப்பாடலுடன் பாடுவது அன்றைய கொண்டாட்டத்தின் மையக்கருத்தையும், உணர்வையும் பிரதிபலிக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பாடலை பாடலாம் என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் (எண் 48) குறிப்பிட்டிருந்தாலும் இன்று பாடப்படுகின்ற பாடல்கள் எல்லாம் இத்தகைய தகுதியைப் பெற்றிருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகிறது. மேலும் உரோமை படிக்கீத நூலில் அல்லது சாதாரணப் படிக்கீத நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் வருகை பல்லவியையும், திருப்பாடலையும் பாடுவதுதான் சாலச்சிறந்தது என்று சொல்லிவிட்டு, ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட இதற்கிணையான பாடலையும் பாடலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பிந்திய அனுமதியே வழக்கமாக மாறியிருப்பது விந்தையாகவுள்ளது. இதைச் சமநிலைக்குக் கொண்டுவர ஒவ்வொரு மறைமாவட்ட திருவழிபாட்டு பணிகுழுவும், ஆயரும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். இது நடைபெறுமா?
வருகைப்பாடலைப் பாடவில்லை என்றால், நம்பிக்கையாளர் அனைவரும் அல்லது அவர்களுள் ஒருசிலர் திருப்பலி நூலில் கண்டுள்ள வருகைப் பல்லவியை வாசிப்பார்; இல்லையயனில் அருள்பணியாளரே அதைத் தொடக்க அறிவுரை போன்று தழுவி அமைப்பார் (பொது பாடம் எண் : 48). இதை அவர் நம்பிக்கையாளர்களுக்கு வாழ்த்துக் கூறியபின் வாசிப்பார் (பொது பாடம் எண் : 48)

பீடவணக்கமும், குழுமியுள்ள மக்களுக்கு வாழ்த்தும்:

பலிபீடம் கிறிஸ்துவுக்கு அடையாளம்; நற்கருணை குழுமத்திற்கு மையம். இதைச் சுற்றிதான் கிறிஸ்தவ குடும்பம் நற்கருணை பலி உணவு கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்கிறது.
திருப்பலி பீடத்தை அனுகியதும், அருள்பணியாளரும், திருத்தொண்டர் மற்றும் கூட்டுபலி அருள்பணியாளர்கள் இருந்தால், அவர்களும் பீடத்துக்கு முன் பணிந்து வணக்கம் செலுத்துவர். அதன்பின் இவ்வணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பீடத்தை முத்தமிடுவர் அல்லது இந்திய முறைப்படி பீடத்தை இருகைகளாலும் தொட்டு நெற்றியில் வைத்து மரியாதையை வெளிப்படுத்துவர். பின் பீடத்திற்கும், சிலுவைக்கும் தூபம் காட்டுவார்.
பீடத்தை முத்தமிடுவதும், அதற்குத் தூபம் காட்டுவதும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் மதிப்பு, மரியாதையை வெளிப்படுத்துகிறது. இச்செயல் குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு செப சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.
பீடத்திற்கு வணக்கம் செலுத்தியபின், அருள்பணியாளர் தமது இருக்கைக்குச் செல்கிறார். வருகைப்பாடல் முடிந்ததும் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் தம்மீது சிலுவையடையாளம் வரைந்து, “தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே” என்று சொல்லுவார். குழுமி இருக்கும் நம்பிக்கையாளர்களும் தங்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து “ஆமென்” என்று பதில் கூறுவர். இந்த சிலுவை அடையாளம் நமது மீட்பின் உன்னத சின்னம். மூவொரு கடவுளின் மூவா மறைபொருள். கிறிஸ்தவ சமயத்தின் தனியயாரு முத்திரை. நாம் எதிர்பார்த்திருக்கும் பேரின்ப காட்சியின் முன் சுவை.
அதன்பின் ஆண்டவரின் உடனிருப்பை வாழ்த்துரை வழியாகத் திருக்குழுமத்திற்கு உணர்த்துவார். மக்கள் கூடிவரும்போது ஒருவர் ஒருவரை வாழ்த்துவது பொதுவான ஒரு பழக்கம். திருப்பலி கொண்டாட்டத்திற்குக் கூடிவரும் மக்களுக்கு வாழ்த்துக்கூறுவது முறையானதாகும். தொடக்கச் சடங்கில் இது ஒரு முக்கிய செயலாகும். இந்த வாழ்த்துரை வழியாக அருள்பணியாளருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே உறவு உருவாக்கப்படுகிறது.
திருப்பலி நூலில் மூன்று வாய்ப்பாடுகள் இந்த வாழ்த்துதலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்:

1. ‘நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக’  (2 கொரி 13 : 13).

2. ‘நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும், அருளும், சமாதானமும் உங்களோடு இருப்பதாக ‘ (உரோ 1 : 7).

3.  ‘ஆண்டவர் உங்களோடு இருப்பாராக’ (லூக் 1 : 28
மறை ஆயர் பலியில் : அமைதி உங்களோடு இருப்பதாக  (லூக் 24 : 36)

இந்த மூன்று வாழ்த்துக்களிலும் வார்த்தைகள் பலவாறாயினும் கருத்துப் பொருத்தம் கொண்டிருப்பதைக் காணலாம்.

“நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருள்:

அருள்” என்பது இறைவனுடைய அன்பிலிருந்து புறப்படுவது. அருளும், அன்பும் இறைவனையே குறிக்கும். இந்த அன்பும், அருளும் இயேசுகிறிஸ்துவில் ஆள் உருபெற்றன. “மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமானார்” (தீத்து 2 : 11) என்று பவுல் குறிப்பிடுகிறார். எனவே ஆண்டவரை அணுகுவது அருளைப் பெறுவதற்குச் சமம். இவராலன்றி நாம் அருளைப் பெறமுடியாது. அருளோடிப்பவர்கள்தாம் இந்தத் திருப்பலியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள். எனவேதான் அருள்பணியாளர் இவ்வாறு வாழ்த்துகிறார்.

கடவுளின் அன்பும்:

இறைவன் அன்பு மயமானவர். “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1 யோவா 4 : 16) என்று யோவான் குறிப்பிடுகிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர், கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுளுடைய இந்த அன்பை வழிபாட்டில் உணரமுடிகிறது.

தூய ஆவியாரின் நட்பும்:

நட்புறவு என்பது புதிய ஏற்பாட்டில் ஒப்புரவைக் குறிக்கும். இந்த சொல் ஆழ்ந்த பொருளுடையது. இது இருவரிடையே உண்டாகும் ஒன்றிப்பையும், அவர்கள் தங்களுக்குப் பொதுவான செல்வத்தை பகிரும் செயலையும் குறிக்கும்.

இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரு இனமாக்கப்படுகின்றார்கள். இவர்களிடையே இருக்கும் ஒற்றுமை உயர்வானது. இத்தகைய ஒன்றிப்பை இன்று செயலாக்கி காத்து வருகின்றவர் தூய ஆவியார் ஆவார். எனவே தூய ஆவியாருக்கும் நட்புறவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த நட்புறவானது வேண்டுமென்று அருள்பணியாளர் வாழ்த்துகிறார்.

முதல் வாழ்த்து வாய்ப்பாட்டில் சிலர் ‘நட்புறவும்’ என்பதற்ககுப் பதிலாக ‘தோழமையும்’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.  கிரேக்கத்தில் இருக்கும்  ‘கோயினோனியா’ என்ற சொல் ‘நட்புறவு’ என்றுதான் 2கொரி 13:13 இல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதை மாற்றுவது ஏற்புடையதல்ல.

இவ்வாறாக, இயேசுகிறிஸ்துவின் அருளைப் பெற்று, இறைதந்தையின் அன்புக்கு இலக்காகி, மூவொரு கடவுளின் திருசமூகத்தோடு உறவுகொண்டு வாழ்கிறவர்கள்தான் கிறிஸ்தவ திருசமூகம். இத்திருப்பலியில் பங்குபெற வந்திருக்கும் கிறிஸ்தவ திருசமூகத்திற்கு இந்த வாழ்த்துதல் வழியாக இவ்வுண்மை நினைவூட்டப்படுகிறது.

சகோதர அன்புறவுக்கும், சமாதானத்திற்கும் காரணர் இயேசுகிறிஸ்து. அவரில்தான் ஒப்புரவு உருவாகிறது. அவரே நம் சமாதானம். அவர் நம்மோடிருந்தால் அருளும். சமாதானமும் நம்மோடிருக்கும் என்பது திண்ணம். “அருள் மிகப் பெற்றவரே” என்று வாழ்த்திய வானதூதர் அதற்குக் காரணம் காட்டுவது போல் “ஆண்டவர் உம்மோடிருக்கிறார்” என்கிறார்.

இறை அருளின் ஆள் உருவாகிய ஆண்டவர் உங்களோடு இருந்து இறையன்பை உருவாக்கி வளர்த்து, இது பிறர் அன்பாகவும், சமாதானமான நட்புறவாகவும் மலர செய்வார் என்று திருச்சமூகம் இரண்டாவது வாய்ப்பாட்டில் வாழ்த்தப் பெறுகிறது.

முதல் இரண்டு வாழ்த்துரை பாடங்கள் கீழ்த்திருச்சபையில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்பொழுது இலத்தின் திருஅவை இவற்றை வாழ்த்துரைக்குப் பயன்படுத்துகிறது.
வரவேற்பிற்குப் பொருத்தமான வேறு வாழ்த்துரைகள் புனித பவுலின் மடல்களில் நிறைய உள்ளன (காண் உரோ 16 : 20; கலா 6 : 18;1 கொரி 16 : 23; எபே 6 : 23, 24). இவற்றில் ஏதாவது ஒன்றை மூன்றாவது வாழ்த்து பாடமாகப் பயன்படுத்தலாம்.

இந்த வாழ்த்துரைகளின் ஆழ்ந்த கருத்துகளை அடிக்கடி சிந்திப்போம். மேலே கொடுக்கப்பட்ட விளக்கவுரை இதற்குத் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.                                           (தொடரும்)

ஒற்றுமை உயர்வின் ஏணிப்படி

ஒற்றுமை உயர்வின் ஏணிப்படி

மனிதரின் உடல் வலிமை, மனித உறுப்புகளின் ஒன்றித்த நிலையால் வருகிறது. மனிதரின் மனவலிமை, மனம் சிதறாமல் ஒன்றித்த நிலையால் தோன்றுகிறது. உலகம் வளர்வது மனிதரின் ஒன்றிப்பினால்தான். மனிதர் பிரிவினையை மேற்கொண்டால் அழிவின் சுழற்சியில் அகப்பட்டுக் கொள்வர். இரண்டு உலகப் போர்களால், ஐரோப்பிய நாடுகள் அழிவுகளை சந்தித்தன. ஐரோப்பாவில், உலகப் போர் நடந்தபோது வாழ்ந்த மக்கள், அவர்கள் சந்தித்த அவலங்களை கண்ணீர் மல்க கூறுவார்கள். ஆனால் இப்போது ஐரோப்பிய நாடுகள் ஒன்றியமாக இணைந்திருக்கின்றன. இந்த நாடுகளில் ஈரோ என்ற ஒரே நாணயம், எளிதான வர்த்தகம், அறிவியல், விவசாயம், தொழில் துறைகளில் கூட்டு முயற்சி என்று வளர்ச்சியின் கருவிகளை கையில் எடுத்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவில் வளர்கின்றன.

1947இல் இந்தியா சுதந்திரம் அடையும்முன் 565 சிற்றரசுகள் இருந்தன. அவைகளையயல்லாம் ஒன்றிணைத்து உலகின் பெரிய மக்களாட்சியை நம் தலைவர்கள் உருவாக்கினார்கள். இந்தியாவில் 179 மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன. சென்ற 60 ஆண்டுகளில் 29 மாநிலங்களும், 7 மத்திய அரசின் ஒன்றிப்புகளும் இணைந்து நிற்பது ஒரு புதுமையாகும். மொழிகளிலும், கலாச்சாரங்களிலும் வேறுபட்டவர்கள், ஒன்றிணைந்து நிற்பதால் இந்தியா ஒரு வல்லரசாக வளரும் நாடாக உள்ளது.

ஒன்றிப்பு, நாட்டில் மட்டுமல்ல, அது வீட்டில் துவங்குகிறது. ஒற்றுமையின் அடிப்படை தத்துவத்தை அலெக்சாண்டர் டுமஸ் என்பவர் கீழ்கண்டவாறு விளக்குகிறார். ‘எல்லா மனிதரும் ஒரு மனிதருக்காக வாழவேண்டும், ஒரு மனிதர் எல்லோருக்குமாக வாழவேண்டும்’ என்கிறார்.

ஒற்றுமை மனித வாழ்வில் அடிப்படை நாதம். அமிர்ராய் என்பவர், ‘யாரும் தனியாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர் மற்ற எல்லோரோடும் ஏதாவது ஒருவிதத்தில் பிரிக்க முடியாத முறையில் இணைந்திருக்கிறார்’ என்கிறார். இந்த ஒன்றிணைப்பால்தான் மனிதர் வல்லமையுடையவனாகிறார். அஸ்காரி ஜான்சன் ஹோடேர் என்பவர் கூறுவார், ’வானத்தை எல்லோரும் தாங்கி பிடித்தால், தனிபட்ட ஒருவருக்கு எந்த வித சோர்வும், பாரமும் உண்டாகாது’ என்கிறார்.

ஒற்றுமை, நம் கிராமங்களிலும், குடும்பங்களிலும் துளிர்க்க வேண்டும். மாதம் ஒருமுறை கிராம மக்கள் ஒன்றுகூடி, அரசு, அவர்கள் கிராமத்திற்கு செய்ய போகும் திட்டங்கள் யாவை? அத்திட்டங்கள் சரியான முறையில் நடைபெறுகின்றனவா? கிராமத்திற்கு அவசியமான திட்டங்கள் யாவை? என்று விவாதிக்க வேண்டும். அரசாங்கத்தில் போடும் சாலைகள், கட்டும் கட்டிடங்கள், சாலைகள் அனைத்தும் அவலங்களாக செய்யப்படுகின்றன. மக்களின் ஒற்றுமையின்மையும், விழிப்புணர்வு இல்லாமையில்தான் அரசியல் தலைவர்கள், அலுவலர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை  உருவாக நல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தோன்ற வேண்டும். எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியர், மக்களை ஒன்றிணைக்க பைத்தியம் பிடித்தவர் போல் செயல்படுவார். ஒற்றுமையால் தீமைகளை, தீய சக்திகளை விரட்டியடிக்கலாம். சுசிகாசம் என்பவர் கூறுவார், ‘ஒரு காட்டில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அதே காட்டில் மற்றொரு பக்கத்தில் முரட்டு ஆள் ஒருவர் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். ஓநாய் ஒன்று இச்சூழ்நிலையில் நுழைகிறது  என்றால், அது தனித்து நிற்கும் முரடரைத்தான் சென்று தாக்கும். இரண்டு பேராக நிற்கும் சிறுவர்களிடம் அது செல்லாது’ என்று கூறுவார். ஆக ஒற்றுமையினால் தீமைகள் நம்மை அணுகத் தயங்கும்.

ஊர் திருவிழாவிற்காக மக்கள் ஒன்றுபடுகிறார்கள். ஆனால் ஊர் முன்னேற்றத்திற்காக மக்கள் ஒன்றுபடுவதில்லை. குஜராத் மாநிலத்தில் பன்சாரி என்ற கிராமத்தை, சர்பன்ச் என்ற இளைஞர் உருமாற்றியிருக்கிறார். அவர் பி. ஏ. பட்டதாரி. வயது 31, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்களை ஒன்றிணைத்து அரசு தருகின்ற உதவிகளை மட்டும் வைத்து, ஏ.சி. வைக்கப்பட்ட பள்ளி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஊரெங்கும் கண்காணிப்பு கேமராக்கள், இன்டர்நெட் வசதிகள் என்று ஊரை உருமாற்றியிருக்கிறார். தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு மின்சாரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை இவைகளை அரசு உதவியுடன் செய்திருக்கிறார்.

விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. நல்ல தலைவர்களை அடையாளம் காண்போம். ஒன்றிணைவோம். எல்லோரும் ஒருவரின் நலனுக்காக, ஒருவர் எல்லோரின் நலனுக்காக என்ற முறையில் ஒன்றுபடுவோம். ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வதை பாரதியார் இப்படி பாடுகிறார்:
எப்பதம் வாய்த்திடு மேனும் ‡ நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்படி கோடி முழுமையும் வீழ்வோம்

இம்மாத இதழின் மையக் கருத்தாக, ஒற்றுமை என்பது அமைந்திருக்கிறது. சில கட்டுரைகளும், கதைகளும் ஒற்றுமை என்ற கருத்தை மையமாக கொண்டு அமைந்திருக்கின்றன. வீட்டிலும், நாட்டிலும் ஒற்றுமை என்ற பயிர் வளர்த்து பயன்பெறுவோம்.   
- அருள்பணி. ச. இ. அருள்சாமி, ஆசிரியர்

அன்பின் மகிழ்வு

அன்பின் மகிழ்வு

AMORIS LAETITIA. The Joy & Love

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது மடலில் காணப்படும் கல்வியியல் கூறுகள் :
(சென்ற இதழ் தொடர்ச்சி)

- அருட்பணி. பிரான்சிஸ், பாபநாசம்

7. மேய்ப்புப்பணி செயல்பாடுகள் (199 - 258) :

இறைத்திட்டத்தின்படி உறுதியான பலனளிக்கும் குடும்பங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இந்த ஆறாம் அதிகாரம் குடும்பம் பற்றிய இரு பேரவை அமர்வுகளின் கருத்துக்கள், திருத்தந்தையர் பிரான்சிஸ் மற்றும் ஜான் பால் ஆகியோரின் மறைக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். குடும்பம் ஒவ்வொன்றும் தன்னையே நற்செய்தியாக்கிப் பிறருக்கும், நற்செய்திப் பணியாற்ற வேண்டும். எண் 202இல் அருள் பணியாளர்கள் குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பயிற்சியில் குறைந்து காணப்படுகின்றனர் என்று வருத்தத்தோடு திருத்தந்தை குறிப்பிடுகின்றார். ‘குருமாணவர்களின் பயிற்சி மனங்களை தீர்வு காணும் முறையிலும், தேர்ச்சி பெறும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்’ (எண் : 203) என்று குறிப்பிடுகிறார்.
இல்லற வாழ்வின் ஓட்டத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கின்றோம். இத்தகு பின்னிணியில் குடும்பத்தில் உறவுப் பாலங்கள் உருவாகாது கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் மனங்கள் ஒருங்கிணைந்து வாழவேண்டும். எனவே திருமணத் தயாரிப்பு மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பெருகி வரும் திருமண முறிவுகள் பற்றி கவலை கொண்டுள்ள திருத்தந்தை, சிறுகுழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படாதிருத்தலின் நிமித்தமாக திருமண முறிவு பற்றிய ஒரு சில நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.
மணமுறிவு மாபெரும் தீமை. இது எண்ணிக்கையில் பெருகுவது வருத்தம் தரக்கூடியது. எனவே தம்பதியரிடையே அன்பின் பிணைப்பினை வலுவாக்குவதும், இவர்களின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதுமே மேய்ப்புப்பணியின் மேன்மையான அலுவல் ஆகும் (எண் : 246). கத்தோலிக்கர் மற்றும் கத்தோலிக்கரல்லாதோர், கத்தோலிக்கர் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர் மத்தியில் உருவாகும் திருமண உறவு நீடித்திருக்கவும் ஆவண செய்திடல் வேண்டும்.

8. குழந்தைகளுக்கான மேம்பாட்டுக் கல்வி நோக்கி (எண் 259 - 290) :

அறநெறிப் பயிற்சி, கட்டுப்பாடு, பொறுமைமிகு காத்திருப்பு, பாலினக் கல்வி, ஒருபாலினத்தோரிடையே திருமணம் போன்றவற்றில் தற்காலக் கல்வி முக்கிய பங்காற்றிட வேண்டும். சிறு குழந்தைகளின் மனதில் பாலியல் வல்லுறவு, வன்முறை, ஆகிய தீயன கண்டு அஞ்சிடும் மனப்பாங்கு என்ற, ஒரே திசை காட்டும் கருவியாக இன்றைய கல்வி அமைந்திருத்தல் அவசியமானதாகும். செக்ஸ் பற்றிய குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. எனவே செக்ஸ் கல்வி, கல்விக் கூடங்களில் மிகவும் அவசியமாகக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அன்பிற்கான கல்வி மற்றும் பரஸ்பர தற்கையளிப்பு போன்ற பண்புகள் பரந்து விரிந்த மனப்பாங்கினை உருவாக்கும். இதுவே உன்னதக் கல்வியாகும் (எண் : 280). பாதுகாப்பான பாலுறவு இயற்கையான மக்கட்பேற்றினுக்கெதிரான சிந்தனை உருவாகிட வழிவகுக்கும். இது தொடர்ந்தால் சுய இன்பம் மற்றும் அடக்கி ஆளும் சக்தி போன்றவை ஏற்புடையினுக்கெதிராக மாற்றம் பெறும் (எண் : 283).

9. வழிகாட்டுதல், தேர்ந்தளித்தல் மற்றும் பலவீன ஒருங்கிணைப்பு (எண் : 291 - 312) :


இந்தப் பகுதியில் மேய்ப்புப்பணி புரிவோர் மேற்கொள்ள வேண்டிய இரக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது. இதனை விளக்குவதற்கு வழிகாட்டுதல், தேர்ந்து தெளிதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவை செயலாக்கம் பெற திருச்சபை ஒரு நடமாடும் மருத்துவமனை போல் செயல்பட வேண்டும் (எண் : 291). இல்லற வாழ்வு பற்றி திருச்சபை போதிக்காத நல்ல கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் திருச்சபை அதனை ஒதுக்கித்தள்ளிவிடலாகாது (எண் : 292). இறைவன் இரக்கம் மிக்கவர். நிபந்தனையற்ற விதத்தில் தகுதியற்ற நிலையிலிருந்தாலும் எல்லையில்லா அளவுக்கு நாம் இரக்கம் காட்ட வேண்டும் (எண் : 291).
மணமுறிவு அளித்து மறுமண வாழ்வினைத் தேர்ந்து வாழும் திருமுழுக்குப் பெற்றோர் முழுமையுமாகக் கிறிஸ்துவ குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பிறருக்குத் தவறான முன்னுதாரணவாதிகளாகிய இவர்கள், தங்களின் செயல்பாடு தவறு எனப் புரிந்து, கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்து வாழத் துடிக்கும் இவர்கள் மீது, குழந்தைக்குரிய கரிசனையினை வெளிப்படுத்தி, கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்க, அருள்பணியாளர்கள்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (எண் : 299). மேலும் திருமண உறவில் இணைந்திருப்போர், மணமுறிவு நிலைக்குத் தள்ளப்படாதவாறு அவர்களை அன்புக்கயிற்றால் பிணைத்து வாழச் செய்ய ஆவண செய்திடல் வேண்டும்.

10. இல்லற ஆன்மீகத்தில் வேரூன்றுதல் :

இல்லற வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், விழாக்கள், மனமகிழ்வு நேரங்கள் ஏன் உடலின்ப அனுபவங்கள் கூட இயேசுவின் உயிர்ப்பில் முழுமையுமாகப் பங்கேற்க கூடியதாகத் திகழ்ந்திடல் வேண்டும் (எண் : 317). இறைவனின் பிரமாணிக்கத்திலும், நம்பிக்கையிலும் வேரூன்றி, உயிர்ப்பின் ஒளியில் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து அனுபவங்களும் ஆன்மீகத்தில் திளைத்திடும் வாய்ப்புக்களாகத் கருதி மூவொரு இறைவனில் இணைந்திருக்க வேண்டும். குடும்பங்களில் அன்பு புரிவதில் வளர்ச்சியும், முதிர்ச்சியும் நிறைந்திருத்தல் அவசியம். இதனால் விண்ணருளால் ஒன்றிணைந்த குடும்ப உறுப்பினர்கள் எந்த நிலையிலும் பிரிந்திடாதிருக்க முடியும். நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விலகி, பக்கத்து வீட்டாரையும் அன்பால் பிணைத்து உயரிய உன்னதமான நிலையினை அடைய வேண்டும் என்பதனைச் சிந்தையில் இருத்தி, ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும். நமது மனித பலவீனங்களைப் புறந்தள்ளி, அன்பின் முழுமையும் நிறைவுமான ஒரே பரம்பொருள்மீது முழுக்கவனத்தையும் இருத்தி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம் (எண் : 325). உண்மை அன்பில் ஊறித் திளைக்கும் குடும்பமே நம்பிக்கையில் எழும் அனுபவ மொழியாகத் திகழும்.
இறுதியாக ... இன்பம் அளிப்பது அன்பு. அன்புள்ளம் கொண்ட மக்களாக நாளைய சமுதாயத்தினைப் படைக்கும் பொறுப்பில் உள்ளோர் கீழ்க்காணும் கருத்துக்களை கல்விக் கொள்கையாகப் பெற்றிருத்தல் பாராட்டினுக்குரியது.

1. மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்க வைக்கும் கல்வி.

2. குடும்பத்தின் மாண்பினைக் கட்டிக் காக்கச் செய்வது கல்வி.

3. மனித மாண்பினையும், பாலின நிகர் நிலையினை முன்னிறுத்தும் கல்வி.

4. செக்ஸ் பற்றிய முதிர்ச்சியும், நல்புரிதலும் கொண்டது கல்வி.

Ads Inside Post